குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிலம் தொடர். Show all posts
Showing posts with label நிலம் தொடர். Show all posts

Tuesday, May 3, 2016

நிலம் (18) - அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 20.02.2015ம் வருடம் வெளியான ஒரு தீர்ப்பு பல்வேறு மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் வீடில்லா ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் முழுமையான தீர்வு என்பது எப்போது கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது. அரசு அறிவிக்கும் வீட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் தகுதியில் உள்ளவர்களின் சுய நலப் போக்கால் பலருக்கும் வீடு கட்டுவது பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போருக்கு வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட கடனும் அளிக்கிறது. இத்தனை வசதி வாய்ப்பும் இருந்தும் அதைச் செயல்படுத்திட பெரும் பிரயத்தனங்களை மக்கள் செய்ய வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் இவ்வகைத் திட்டத்தினை செயல்படுத்திட முடிவதில்லை. பல்வேறு ஆவணங்கள், அலைச்சல்கள் என்று அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோருக்கு சாத்தியமில்லாத திட்டங்களாகத்தான் இவ்வகைத் திட்டங்கள் இருந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஏதோ ஒரு அரசு புறம்போக்கில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால்,  அதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசின் சட்டத்தில் இடமுண்டு என்று வழக்கு எண். எம்.பி(எம்.டி) 1 / 2015 மற்றும் மேல்முறையீட்டு வழக்கு எண்.டபிள்யூ.பி(எம்.டி)1649/2015 மனுதாரர் வள்ளியம்மாள் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.பி.ராஜேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யப்பட்டு, வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு 2015ம் வருடம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டது. அது பற்றிய அரசாணையை நீங்கள் கீழே படிக்கலாம். ஆகவே அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏறும் அரசு ஏதாவது பட்டா வழங்க கால நீட்டிப்புச் செய்தால் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் அந்த அரசாணையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை அணுகவும். உதவ முயற்சிக்கிறேன். 








Sunday, May 1, 2016

நிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்

சமீபத்தில் கொடைக்கானலுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நண்பருக்கு வேண்டிய குடும்பத்தாரின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தினசரி வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

நண்பர் அவர்களிடமிருந்து சில ஆவணங்களை என்னிடம் கொடுத்து பார்வையிடச் சொன்னார். அனைத்தும் ஒரிஜினல் சொத்துப் பத்திரங்கள். அனைத்தையும் படித்துப் பார்த்தேன். அந்தக் குடும்பத்தின் தாத்தாவால் சுய சம்பாத்தியத்தால் கிரையம் பெற்று, வாங்கப்பட்ட பூமிகள் ஏக்கர் கணக்கில் இருந்தன. பட்டாவும் அவரின் தாத்தா பெயரில் இருந்தன. அந்தப் பூமிகளின் தற்போதைய நிலைமை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எனது லேப்டாப்பை உயிர்ப்பித்தேன். அந்தச் சொத்துக்கள் அனைத்தும் கோடிகள் மதிப்புக் கொண்டவை.

நிறைய பொருட்செலவுகள் செய்து பல மாவட்டங்களின் நில தொடர்புடைய ஆவணங்களை கணிணியில் வைத்திருப்பதால், இருக்குமிடத்திலிருந்தே எளிதில் அந்த பூமிகளின் தற்போதைய நிலையை அறிய நேர்ந்தது.

தற்போதைய சொத்துப் பத்திரம் வேறொரு பெயரில் இருந்தது. பட்டாவோ மற்றொருவர் பெயரில் இருக்கிறது. ஏன் இந்தப் பிரச்சினை என்று கண்டுபிடிப்பதற்காக அந்த ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

1986ம் வருடம் நில அளவையின் போது புதிய சர்வே எண்கள், பட்டா எண்கள் வழங்கிய போது பல்வேறு முறைகேடுகளும், தவறுகளும் ஏற்பட்டன. உரிமையாளர் பெயர்களும் மாற்றப்பட்டன. அந்த நேரத்தில் நடந்த பல்வேறு குளறுபடிகளால் நில உரிமையாளர்களின் பல சொத்துக்களின் பட்டாக்கள் மாற்றப்பட்டன. போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பல சொத்துக்களை பலர் பறித்துக் கொண்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு மாத காலம் ஆயிற்று. 1986ம் ஆண்டு கால கட்டத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதை அறிந்தேன். மூலப் பத்திரங்கள் இல்லாமல் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். அனைத்து ஆவணங்களையும் தகுந்த முறையில் சேர்த்து அவர்கள் தான் உரிமையாளர்கள் என்பதை ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து அவர்களிடம் கொடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித்தேன். 

அந்தக் குடும்பமே கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களே தகுந்த இடத்தில் முறையிட்டு சொத்தினைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அவர்கள் இனி கோடீஸ்வரர்கள். 

எனக்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பினேன். அன்று மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் பாட்டனார் சொத்து ஆனால் எவரோ உரிமை கொண்டாடி வருகின்றார்களா? கவலையே பட வேண்டாம். அனைத்து ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வாருங்கள். சரியான தீர்வினைத் தருகிறேன்.

கோர்ட்டில் தீர்ப்பு பெற்று உங்கள் சொத்தினைப் பறித்துக் கொண்டார்களா? கவலை வேண்டாம். அந்தச் சொத்தினை மீண்டும் பெற்று விடலாம். அனைத்துக்கும் சட்டப்படியான தீர்வுகள் உண்டு.

அது மட்டுமல்ல உங்கள் சொத்தில் எந்த வித பிரச்சினை இருந்தாலும் சரி, ஆவணத்தின் நகல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். சரியான தீர்வினைக் கண்டுபிடித்து சரி செய்து விடலாம்.

உங்கள் சொத்தினை யாரோ ஒருவர் ஆக்கிரமித்து இருக்கின்றாரா? கவலை வேண்டாம். அவரை சட்டப்படி வெளியேற்றி விடலாம். உங்கள் சொத்தினை மீட்டு விடலாம். அதற்குரிய ஆவணங்களின் பிரதிகளுடன் என்னைச் சந்தியுங்கள்.

பிரியங்களுடன் கோவை எம் தங்கவேல்