குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 13, 2021

டிரஸ்ட் கம்பெனி பணப்பரிமாற்றம் மோசடிகள் - விரிவான விளக்கம்

இராணுவத் தளபதி விவின் ராபத் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது ஊட்டியில் ஒரு நிலத்தில் நில அளவைக்கான சர்வே செய்து கொண்டிருந்தேன். ஆட்கள் சர்வேக்கான விபரங்களைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, பாப் அப் செய்தி கிடைத்தது. 

எத்தனை கடுமையான உழைப்பினை அவர் நாட்டுக்காகச் செய்திருப்பார்? முதன் முதலாக இந்திய வரலாற்றில் முப்படைக்குமான ஒரே தளபதியாக பாரதப் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பெருமைக்குடையவர் ஒரு சாதாரண விபத்தில் மரணமடைந்திருக்கிறார் என்கிற போது விதி மீது நம்பிக்கை கூடத்தான் செய்தது. 

அவர் எவ்வளவு அதிகாரமிக்கவர் என்ற போதிலும் இயற்கைக்கு முன்னால் எல்லாம் சாதாரணமாக போய் விடுகிறதே என்ற ஆற்றாமை எழுந்தது. 

மரணத்தின் தேதியினை யார் அறிவர்? 

அப்படி தன் முடிவினை அறிந்து விட்டால் என்னென்ன அக்கிரமங்களை மனிதன் செய்வான் என்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. சாதாரணன் இறுதிக்கு தயாராவான். அதே ஒரு ரவுடியாக ஒரு அரசியல்வியாதியாக இருந்து விட்டான் என்றால் அவன் என்ன செய்வான் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு செயல்களைச் செய்து விடுவான் அல்லவா?

ஆகவே தான் இயற்கை ஒவ்வொரு உயிரின் இறுதிக் காலத்தின் முடிவினை மறைவாக வைத்திருக்கிறது.

ஆஸ்சிடெண்ட் என்றால் அது ஆக்ஸிடெண்ட் தான். காரில் ஒரு முறை சந்துக்குள் சென்ற போது கார் தன் இயக்கத்தையே நிறுத்தி விட்டது. அதன் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டிருக்கிறது. ஏர் பேக் மட்டும் வெளி வரவில்லை. இயந்திரம் எப்போது என்ன செய்யும் என்று எவருக்கும் புரியாது. 

நேற்று கீழே உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அப்டேட்டினேன். உடனடியாக இந்தப் போஸ்ட் நியூட்டிட்டி கேட்டகரியில் வருகிறது என்று பப்ளிஷ் ஆகவில்லை. நியூடிட்டி படமாம். 

சிறுவனின் நிர்வாணம் நியூட்டிட்டியிலா வருகிறது? அதுவும் குஞ்சு தானே என்று நினைக்கலாம். கீழே இருக்கும் இன்னொரு குஞ்சுப் பறவையின் பசி தான் எனக்குத் தெரிந்தது. பின்னர் தான் புரிந்து கொண்டேன் மேலே இருக்கும் அதுவை.


நடிகை இலியானாவின் இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் இருக்கும் படம் கீழே. மேலே இருக்கும் படத்துக்கும் கீழே இருக்கும் படத்துக்குமான நியூடிட்டி கேட்டகரியை ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எப்படி வகை பிரித்திருக்கிறது என்று பாருங்கள். அது தவறல்ல. அதற்கு கொடுக்கப்பட்ட ஆணையை அது செயல்படுத்துகிறது. 
ஊட்டிக்குக் காலையில் செல்லும் போது காட்டேரி பகுதி மட்டுமல்ல அன்றைக்கு மேகமூட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டேன். ஊட்டியின் கிளைமேட் அப்படித்தான். ஊட்டி - பெண் மனது போல. படக் படக்கென்று மாறிக் கொள்ளும். கண்களைக் கட்டி விடும். இயற்கையும் பெண்களும் எப்போதுமே ஆபத்தானவர்கள் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் துடைத்து எரிந்து விடுங்கள். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சிக்கிக் கொள்வோம். 

விபத்து நடந்த செய்தி கேட்டவுடனே பிஜேபி -ஆர் எஸ் எஸ் வகையறாக்கள் என்னெவெல்லாம் சோஷியல் மீடியாக்களில் எழுதப் போகின்றார்கள் என்ற சிந்தனை வந்தது. அதுவே நடந்தது. நடந்து கொண்டு வருகிறது.

பிஜேபி - அதிமுக மக்கள் பிரச்சினையைப் பற்றி கொஞ்சம் கூட பேசியதே இல்லை. இனி பேசப்போவதும் இல்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் மதம் - ஊழல் மட்டுமே. 

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. அவர்களிடம் மக்களுக்கு கிடைத்திடா வசதிகள் பற்றி பேசலாம். அதைப் பெற்றுக் கொடுக்கலாம். ஒரு சினிமா அதைச் செய்திருக்கிறது.

ஆனால் பாருங்கள். இங்கே என்ன நடக்கிறது என்று? ஆட்சிக்கு எதிராக வன்முறையை எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். சமூகத்தில் ஒரு விதமான வெறுப்பு வன்முறையை விதைக்கின்றார்கள். இவர்கள் வெகு வெகு ஆபத்தானவர்கள் என்பதில் எனக்கு மட்டுமல்ல எவருக்கும் சந்தேகமே வேண்டியதில்லை. தன்னைப் போன்ற ஒரு கூட்டத்தினை உருவாக்கி நாட்டுக்கே தீமை செய்வார்கள். ஆயுதம் வைத்திருப்பவர்களை விட இவர்கள் வெகு கேடானவர்கள்.  தன் சுய நலத்தின் காரணமாக என்ன வேண்டுமானாலும் செய்யும் பயங்கரமானவர்கள். அவர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படல் அவசியம். 

அவர்களின் வெகு துல்லியமான இந்த விதமான உள் குத்துகள் பெரும்பாலான பொது மக்களுக்கு தெரியாது. தெரிந்து கொள்ளும் பக்குவமும் அனுபவமும் கிடையாது.

அரசியல் என்பது மக்கள் நன்மை தொடர்பானது. அதை எந்தக் கட்சி புரிந்து கொள்கிறதோ அக்கட்சி மக்கள் ஆட்சியை நடத்தும். 

புரிந்து கொள்ளாதவர்கள் 13 பேரைத் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லச் சொல்வார்கள். அதுமட்டுமின்றி 700 பேர் செத்துப் போக காரணமாய் இருப்பார்கள். அவர்கள் அப்படியானவர்கள் தான். அதுதான் நிதர்சனம் கூட. 

நாங்கள் உங்களுக்கு நன்மை செய்யப் போகிறோம் என்று பொய் உரைப்பார்கள். உள்ளே நன்மை என்று எதுவுமே இல்லை. 

இருப்பதாக பாவனி மன்னிக்கவும் பாவனை காட்டுவார்கள். காட்டிக் காட்டியே வெளியே வராமல் தப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் மக்களின் மனதை பாவனை எனும் லூப்புக்குள் தள்ளி விடுவார்கள். மக்கள் தெளிவாகும்  முன்பே, அவர்கள் நினைத்ததை அடைந்து விடுவார்கள். அவர்களை நம்புவது நம் பிரச்சினை மட்டுமே. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அது அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. ஏனென்றால் ஏமாற்றிப் பிழைப்பதே அவர்களின் டிசைன். ஒரு நரி எப்போதும் யானை ஆகிட முடியாது.

ஆக்சிடெண்டுகளுக்கு வரைமுறை தெளிவுரை எல்லாம் எழுத முடியாது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தின் சேர்மனின் மகன் ஒரு சாதாரண கார் விபத்தில் செத்தார். கோடிக்கணக்கான மதிப்புள்ள கார்தான் அது. அந்தக் கார் அவரைக் காப்பாற்றவில்லை. எவ்வளவு பாதுகாப்பானது அந்தக் கார்? எப்படி அவர் இறந்தார் என்று கேள்வி கேட்பது சரிதான் என்றாலும் அதன் உண்மைத் தன்மை வேறு விதமானது அல்லவா? அது தெரியாத நிலையில் ஆக்சிடெண்டுகளுக்குப் பொழிப்புரை எழுதுவதற்கும் சதி என்று சொல்வதற்கும், ஒரு பகுதியில் தீவிரவாதம் பெருகி வருகிறது என்று பொய் உரைப்பதற்கும் ஒரு அதீத தடித்தனம் வேண்டும். 

அதை அவர்கள் எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள். அது சரி செய்யப்படல் அவசியம்.

முப்படைத்தளபதியின் இந்த இழப்பு இந்தியாவிற்கு மட்டுமல்ல நமக்கும் பேரிழப்பு. அவர் நம்மை உண்மையில் பாதுகாத்து வரும் இராணுவத்தின் தளபதி. அவருக்கு எனது வீர வணக்கம்.

இடையில் ஒரு சிறிய விஷயம். நாம் செய்தி தாள்களில் படிக்கும் செய்திகள் உண்மையானதுதானா என்ற ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின்னர் நம்புங்கள். ஏனென்றால் கடந்த 09.12.2021ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் நடத்திய ஒரு கூட்டம் பத்திரிக்கையாளர்கள் மீதான அவ நம்பிக்கையை அதிகரித்து விட்டிருக்கிறது. இதோ அந்தச் செய்தி. (நன்றி தி ஹிந்து பத்திரிக்கை)

The danger to journalism is not that journalists meet political actors; it is that they don’t meet them enough

A recent meeting of Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat with a select group of journalists in Delhi raised a few eyebrows. What should be the desirable terms of engagement between journalists and their interlocutors is a rather complicated question. The fall of journalistic standards is a reality of our times, and too much proximity between journalists and the people they write on — politicians, businessmen, bureaucrats, etc. — is one reason for this. But the increasing tendency to look for sinister conspiracies in such meetings is silly. It is like looking for a scam in every government decision. True, if the invitees at a select briefing are vetted based on their willingness to be pliable in the past, then the meeting is no longer a credible exercise. That said, my complaint about Mr. Bhagwat’s meeting with journalists is not that some people participated in it, but that I was not invited! Let me explain.

இணைப்பு :  Not a compromising position - The Hindu

மீண்டும் குஜராத் வளர்ச்சி கதை போல பல கதைகள் வரக்கூடும். வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். 

ஜாதீயக்கட்டுக்குள் இருக்கும் பத்திரிக்கைகளை மக்கள் தான் நிராகரிக்க வேண்டும். இல்லையெனில் மாயா உலகிற்குள் அதாவது டைம் லூப்புக்குள் சிக்கிக் கொள்வோம். 

ஹீரோ எவரோ அவரே தனக்கேற்றவாறு நம்மை மாற்றுவார். இதனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்பினால் தமிழ் வெர்சன் - இன்செப்சன் படம் அமேசான் பிரைமில் கிடைக்கிறது. அவசியம் பாருங்கள். நாமெல்லாம் எப்படியான ஒரு லூப்புக்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரியும்.

காலம் அவ்வப்போது மக்களுக்கு சில சமிக்கைகளைக் கொடுக்கும். நாம் தான் புரிந்து கொள்ளல் வேண்டும். 

சரி இனி கதைக்கு வருவோம்.

அடியேன் லீகல் அட்வைசிங்க் வேலை செய்வதால் என்னிடம் ஆலோசனைக்கு வந்த பல பேர்களின் மூலம் கிடைத்த அனுபவத்தைத்தான் இங்கு பதிவு செய்கிறேன்.

கதைக்குப் போகும் முன்பாக ஒரு சாட்சியத்தைப் படித்து விடுங்கள். ஏனென்றால் சாட்சிகள் இன்றி எழுதுவதால் பயனில்லை.


மேலே இருக்கும் செய்தியைப் படித்து விட்டீர்களா? உடனே ஆஹா பிஜேபி அரசு மிகச் சரியாகத்தான் வேலை செய்கிறது என்று ஒப்பீட்டுக்கு கிளம்பி விடாதீர்கள். அந்தக் கச்சேரியை எழுத ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் திகிலில் ஆழ்வீர்கள். 

அது வேற கதை. அதென்னது என்கிறீர்களா?

மதமாற்றத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பு உண்டா இல்லையா? மதமாற்றத்துக்கும் கீழ் சாதி மேல் சாதிக்கும் தொடர்பு உண்டா இல்லையா? என்பதைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அது வேற கதை என்றேன் அல்லவா அந்தக் கதை இப்போது புரிந்து இருக்கும் என நம்புகிறேன். பின்னொரு நாளில் அதை விரிவாக பார்க்கலாம்.

சரி மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

கோவை டி.பி சாலையில் இருக்கும் ஒரு வெகு முக்கியமான பிரபலமான ஹோட்டலில் தங்கி இருப்பவர்களைப் பார்க்க வருபவர்கள் ஏழைகளாக இருப்பர். அவர்கள் முகங்களைப் பார்க்கும் போது கனவுகளில் மிதக்கும் கண்களுடன் பரபரப்பாய் தெரிவார்கள்.  அவர்களெல்லாம் யார்? அங்கே என்ன வேலை என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? 

இனி அதுதான் வருகிறது. 

ஒரு சம்பவத்தினை விவரிக்கிறேன். 

திருப்பூர் அதிபரிடமிருந்து அவசியமான தட்ட முடியா ஆலோசனை வேண்டி, அழைப்பு வர சென்றிருந்தேன். ஒரு மணி நேரம் அதிபரின் வரப்போகும் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். 

வந்தது கோடிக்கணக்கான மதிப்புள்ள கார். அக்காருக்கும் முன்பே நான்கைந்து கார்கள். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து பேர் வந்தனர்.

மீட்டிங்க் ஆரம்பித்தது. 

அதிபர் என்னருகில் அமர்ந்திருந்தார். காஃபி முடிந்தது. வந்தவர் தன்னை ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி என்றுச் சொன்னார். 18000 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர் ஃபண்ட் இருப்பதாகவும், அதனை டிரஸ்ட்டுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், அவ்வாறு அனுப்பினால் டொனேசன் பெரும் டிரஸ்ட்டுகள் தனக்கு 40 சதவீதம் பங்கினை தான் சொல்லும் அக்கவுண்டுகளுக்கு மாற்றி விட வேண்டுமென்றும், அவ்வாறு டொனேசன் பெறக்கூடிய டிரஸ்ட்டுகள் வைத்திருக்க வேண்டிய அனுமதிகள் இன்னென்னெ என்றும் பட்டியலிட்டார். அதிபர் அவர் கோரிய ஆவணங்களைக் கொடுத்தால் 1000 கோடி ரூபாய் டொனேசன் தருவதாகச் சொன்னார். அதில் 40 சதவீதம்  அதாவது 400 கோடி ரூபாயை அவர் சொல்லக்கூடிய அக்கவுண்டுகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ் செய்து விட வேண்டுமென்றும், இது அத்தனையும் லீகலாகச் செய்யும் வேலை என்றும் விவரித்தார்.

சி.எஸ்.ஆர் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவும் அதன் பரிமாற்றங்கள் பற்றிய இந்திய அரசின் விதிகள் பற்றியும், டிரஸ்ட்டுகள் அதன் டோனேஷன்கள் பற்றிய அனுபவ அறிவும் உண்டென்பதால் தெளிவாகப் புரிந்து விட்டது அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று.

ஆனால் அதிபதியோ அவரை நம்பினார். நம்பிக்கெடுவது ஒன்றும் புதிதில்லையே நமக்கு. அது அவரவர் பிரச்சினை.

எங்கு தங்கி இருக்கிறார் எனவும், எந்த ஊர் எனவும் விசாரித்தால், கோவையின் பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் அவருக்கான பிளைட் டிக்கெட்ஸ், கோவை லீ மெரிடியனில் சூட் ரூம் செலவு செய்து, அவரை அதிபதியிடம் அழைத்து வந்திருக்கிறார்.

அந்த நாற்பது பர்செண்டேஜ்ஜில் இவருக்கு 10 சதவீதம் தருவதாக பிரதிநிதி வாக்கு கொடுத்திருக்கிறார். 1000 கோடியில் 10 சதவீதம் எவ்வளவு? 100 கோடி அல்லவா? ஒரே வேலை - ஒரு டிரஸ்ட்டை கொடுத்து விட்டால் போதும். எளிதில் 100 கோடி கிடைத்து விடும். 

எவ்வளவு எளிதான திட்டமிடல்? 

கொஞ்சமே கொஞ்சம் செலவு செய்தால் போதும் 100 கோடி லாபம் வந்து விடும். பிளைட் டிக்கெட், ஹோட்டல் செலவுக்கு ஒரு லட்சம் ஆகும். பரவாயில்லை 100 கோடி வேண்டுமென்றால் ஒரு லட்சம் செலவு செய்வதைப் பற்றி யோசிக்கலாமா என்றெல்லாம் சிந்தித்து தெளிவாகத்தான் முடிவெடுத்திருக்கிறார் அந்தப் பையன்.

அதிபதியின் காதுக்குள் சொன்னேன், இவன் ஒரு டுபாக்கூர் என்று. அவரின் முகம் மாறி விட்டது. 

எதிரில் உட்கார்ந்திருந்தவரிடம் எந்தக் கம்பெனி என்றுச் சொல்லுங்கள் என்றேன். அதைச் சொல்ல முடியாது என்றார். நீங்கள் அந்தக் கம்பெனியின் பிரதிநிதி என்றீர்களே பின் ஏன் சொல்ல மாட்டேன் என்கின்றீர்கள் என்ற கேள்வியைக் கேட்ட நொடியில் ஆத்திரம் தாளவில்லை அவருக்கு.

நான் போட்டிருக்கும் டிரஸ்ஸின் மதிப்பு தெரியுமா? நான் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாடகை என்ன தெரியுமா? என்று பிக்பாஸில் பிரியங்கா பிறரிடம் பேச வந்ததை வேறு எங்கே கொண்டு செல்ல பொங்குவது போல என்னிடம் பொங்க ஆரம்பித்தார். (பிரியங்கா ஏன் விஜய் டிவியில் டிடி, ரம்யா, பாவனா ஆகியோரை வளர விடாமல் செய்தார் என்று இப்போதுதான் புரிகிறது) 

அவரின் கோபம் கண்டு, எங்கே 1000 கோடி கிடைக்காமல் போய் விடப்போகிறதே இந்த ஆளால் என்று பதைபதைத்து, அதிபதி அவரை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு சென்று விட்டார். 

அதிபதிக்கு பாடம் எடுக்க என்னால் முடியாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் மேதாவித்தனத்துடனே இருப்பர். ஆகவே அவரிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். கொஞ்சம் வருத்தமே என்னிடம் அவருக்கு. 

கிளம்பும் போது அதிபதியிடம் அவர் தரபோகும் 1000 கோடியில் எனக்கு இன்றைக்கு வந்து போன செலவுக்காக 10000 மட்டும் கொடுத்து விடுங்கள் ஏனென்றால் 1000 கோடியை அவர் தரப்போகிறார் அல்லவா? அவர் தந்ததும் எனக்குக் கொடுத்தால் போதும் என்றுச் சொல்லி விட்டு வந்து விட்டேன். இது நடந்து ஆறு வருடங்கள் ஆயிற்று. இன்னும் எனக்கு அதிபதி கட்டணத்தை தரவில்லை.

இப்போது நீங்கள் மேலே இருக்கும் படத்தில் படித்து உள்ளதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

சி.எஸ்.ஆர் ஃபண்ட் என்பது சமூகக் செயற்பாட்டுக்காக ஒரு நிறுவனத்தின் லாபத்தில் இரண்டு சதவீதம் ஆகும். இதை அந்த நிறுவனம் அரசுக்கோ அல்லது அரசு தொடர்பான மக்கள் சேவை செய்யும் நிறுவனங்களுக்கோ அல்லது மக்கள் சேவையில் உண்மையில் பங்கெடுத்திருக்கும் தனியார் சேவை நிறுவனங்களுக்கோ கொடுக்க வேண்டும். சமீபத்தில் தான் இந்த தொகையினை இரண்டு மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்தது. 

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 922 கோடி ரூபாயை அரசுக்கு சி.எஸ்.ஆர். பங்களிப்பாக கொடுத்தது. இதில் ரிலையன்ஸ் ஃபவுண்டேசனுக்கும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனமே அதன் என்.ஜி.ஓவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. 

அதுமட்டுமல்ல இந்த சி.எஸ்.ஆர் ஃபண்டுகள் அரசு நிறுவனங்களிலும் உண்டு. அரசு சி.எஸ்.ஆர். ஃபண்டுகள் முறைகேடாகப் பயன்படுத்தப் படுகின்றன என்று செய்திகள் வந்தன.

இவ்வாறான நிலையில் ஒரு நிறுவனம் 18000 கோடி சி.எஸ்.ஆர் ஃபண்ட் வைத்திருப்பதாகச் சொன்னால் அதன் மொத்த லாபம் என்னவென்று யோசித்துப் பாருங்கள். அப்படியான நிகர லாபம் உள்ள கம்பெனி இங்கே எங்கே உள்ளது?

அந்த ஆசாமி சொன்னது முற்றிலும் பொய் என்று எளிதில் உங்களுக்கு புரிந்திருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென தனி என்.ஜி.ஓக்களை வைத்திருக்கிறது. மைக்ரோசாஃப்டின் மெலிசா பவுண்டேஷனும் அதே வகைதான்.

இப்படி இருக்கும் சூழலில் ஒரு நிறுவனம் சி.எஸ்.ஆர் ஃபண்டுக்கு ஒரு பிரதிநிதியை வேலைக்கு வைப்பார்களா? அவர்கள் ஏன் என்.ஜி.ஓக்களைத் தேட வேண்டும். இருந்த இடத்தில் இருந்தே சரியான என்.ஜி.ஓக்களை எளிதில் கண்டு கொண்டு டொனேசன் அனுப்பலாம் அல்லவா?

அது மட்டுமல்ல 1000 கோடி ரூபாய ஒரு டிரஸ்ட் டொனேசன் என்று நிலையில் பெற்றுக் கொண்டால் அதற்கான செலவு கணக்கினை துல்லியமாக கொடுத்திட வேண்டும். வேறு அக்கவுண்டுகளுக்கு பணமெல்லாம் அனுப்ப முடியாது? அவ்வாறு அனுப்பினால் எது எதற்காக அனுப்பப்பட்டது என்று கேள்வி எழும் போது என்ன ஆவணங்களைச் சாட்சியப்படுத்த முடியும்? இன்ன காரியத்துக்காக டொனேசன் பெறப்பட்டது என்றால் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றால் அது முறைகேடு என்று அரசு கணக்கிடும்.

இப்போது புதிதாக ஷேர் டிரேட் ஃபண்ட் என ஆரம்பித்திருக்கிறார்கள். ஷேர் டிரேட் ஃபண்ட் என்றால் டிரஸ்ட்டுக்கு அனுப்பி விடலாம் என்று நினைக்கின்றார்கள். அப்படியெல்லாம் முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அதற்கான வரைமுறைகள் வேறு வேறு என்பது எவருக்கும் தெரியாது. ஏனென்றால் ஈசி மணிக்காக ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்னும் விரிவாக எழுத இருக்கிறது. எல்லாவற்றையும் எழுதி விடவும் முடியாது. இப்பதிவே நீளமாகி விட்டது.  ஆகவே டிரஸ்ட்டுக்கு ஃபண்ட், டிரேட் பிராபிட் ஃப்ண்ட். சி.எஸ்.ஆர் ஃபண்ட் என்று எவராவது நம்பினால் அது நேர விரயம் மட்டுமல்ல முடிவில் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் வசதியைப் பார்த்தால் பொறாமைப்படும் காலத்தில் இருந்து கொண்டு எவனோ ஒருவன் 100 கோடி தருவான் என்று நீங்கள் நம்புவது உங்களின் மனப்பிறழ்வு நோய் என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்....!

அக்னிராமா என்ற பெயரில் முகவரி இல்லாத ஒருவர் கமெண்ட் போட்டிருந்திருந்தார். எனது ”பொய் பிரச்சாரம் தமிழர்கள் ஜாக்கிரதை” என்ற பதிவிற்காக தமிழ்நாடு எது முதலில் என்றுச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.  அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதி என்று அடையாளம் காட்டுகிறது. அக்னி ராமா தன்னை ஒரு சங்கி திராவிட விமர்சகர் என்று அடையாளப்படுத்தி இருந்தார்.  

தமிழ்நாடு எது முதலில் என்று அவருக்குச் சொல்வதானால் கருத்துரிமையைச் சொல்லலாம். கோர்ட்டை மயிர் என்றுச் சொல்லிய ஒருவர் இன்னும் வெளியில் இருக்கிறார். 

அமெரிக்க அக்னி ராமா - அமெரிக்கர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. எங்கே போனாலும் கடைசியில் இந்தியா தான் உமக்கு. 

1 comments:

Timepass said...

Excellent post

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.