குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 10, 2013

வெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை



நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்லும் போதெல்லாம் அகண்ட காவிரியில் சுழித்து ஓடும் தண்ணீர்ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளியல் போட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்து விட்டு, பகல் பனிரெண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அவரைத் தரிசித்து விட்டு வருவேன்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஓடி விட்டன. 

நேற்று நானும் என் குழந்தைகள் இருவரும் முள்ளங்காட்டில் இருக்கும் வெள்ளிங்கிரி சித்தர் ஜீவ சமாதிக்குப் பின்புறம் வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஆற்றில் குளித்து விட்டு வந்தோம்.

குளிர் தண்ணீர், மலையில் இருந்து வருகிறது. உடம்புச் சூடெல்லாம் வடிய கண்கள் சிவக்க குளித்தேன். காவிரியில் குளித்த அன்று இருந்த சந்தோஷம் நேற்று எனக்கு கிடைத்தது.

ஜோதி சுவாமி மாங்காய் சாம்பாரும், அருமையான ரசமும், முட்டைக்கோசு பொறியலும், பொங்கலும் தந்து உபசரித்தார்.

நெஞ்சம் நிறைந்து வீடு திரும்பினேன். பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் குளியல் போடுங்கள். மூலிகைத் தண்ணீர். உடலுக்கு நல்லது அல்லவா?



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... வாழ்த்துக்கள்...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல் தகவல்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.