குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, February 19, 2009

கண்களுக்குள் மோதல்

அஹிம்சையின் மூலம் நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்த மஹாத்மா காந்தியை தேசத்தலைவராகக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டத்துறையின் இரு கண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்ட வேதனையினை என்னவென்று சொல்வது. அறப்போராட்டத்தின் மூலமாக மட்டும்தான் எதையும் சாதிக்க இயலும் என்று நிரூபணம் செய்த நாட்டின் பிரஜைகள் வருந்தக் கூடிய அளவில் சட்டத்தின் பாதுகாவலர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் சட்டத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் செயலாகும். நாளைய நீதிபதிகள் வன்முறையினை தேர்ந்தெடுக்கலாமா? சட்டத்தின் பாதுகாவலர்களுடன் வன்முறை தேவையா ? அஹிம்சை வழிப் போராட்டத்தினை மறந்து விட்டார்களா இருவரும் ? வேதனை தரும் இச்சம்பவம் மீண்டும் நடக்கலாமா? வக்கீல்கள் உணருவார்களா ? காவல்துறையும் தனது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா? சட்டத்துறையும் காவல்துறையும் தான் இந்தியாவின் ஆன்மா. ஆன்மாக்களுக்குள் மோதல் போக்குத் தேவையா ? அவரவர் தத்தமது கடமையினை உணர்ந்து செயல்படுவார்களா ? அன்பு சகோதரர்களே வேண்டாம் வன்முறை. வாழ்க்கை என்பது எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைப்பது தானே. ஏன் இந்த சண்டை? யாருக்காக இந்த சண்டை. இதனால் மக்களுக்கு என்ன பயன் ? உங்களையே நம்பி இருக்கும் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்வது ? எங்களைப் பாதுகாக்க தங்களது வாழ்வினையே அர்ப்பணித்த இருவரும் சமாதானமாகி விடுங்கள். அரசியல் சித்து விளையாட்டில் எல்லோரையும் பழி வாங்கி விடாதீர்கள். ஒவ்வொரு இந்திய மக்களின் வேதனையினை நான் ஒரு பிரஜை என்ற முறையில் இங்கு பதிவு செய்கிறேன் வேதனையுடன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.