குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, February 28, 2016

எம்.ஜி.ஆரின் அபூர்வ பாலிசி

எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவரின் ஒரு பிரதான பாலிசியைப் பற்றி நானும் எனது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, எனது நண்பர் (கேள்வியின் நாயகன்) சிலாகித்து சொன்ன விஷயம் கீழே.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிலாடலாம். அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் பிறர் அறிவுரை சொல்வது போல காட்சிகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவரின் மனசாட்சி தான் அவருடன் பேசும். பின்னர் அந்த மனசாட்சி அவரின் உடலோடு இணைந்து விடும்.

தன்னை உணர்ந்த காரணத்தால் தரணியினை உணர்ந்தவர் அவர். தனக்குரியதையும், தன் குறைகளைச் சரிசெய்யும் நிலையிலும் அவர் இருந்தார். தனக்கென வகுத்த பாதையில் தானே நடந்து சென்றார். அப்பாதையில் அவரைப் பின் தொடர்ந்தவர்கள் ஓடுவதற்கு வழி செய்து கொடுத்தார். நாற்பது வயதுக்குள் மேலே உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும் என்பது புரியும். திரைப்படப்பாடல்கள் ஒவ்வொன்றும் அவருக்காக எழுதப்பட்டன. அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார். அவரின் ஒவ்வொரு படமும் மகிழ்ச்சியானதாகவும், கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாகவும், வெற்றியைத் தருபவையாகவும் இருந்தன. காலம் அவருக்காகப் பலரை உருவாக்கி அவரைச் செதுக்க உதவியது. நாற்பதாண்டுகாலம் வரை அவர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு ஜென் துறவியைப் போன்ற வாழ்க்கையில் சமூகப் பிரக்ஞை கொண்டவராக வாழ்ந்தவர்.

இப்படிப்பட்ட அபூர்வ பாலிசியை இந்த உலகில் பின்பற்றியதில்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஒரு தனித்துவமானவர்.

எம்.ஜி.ஆரின் தனித்துவத்துக்கும் நன்றியுணர்ச்சிக்கும் மற்றொரு சம்பவம் நினைவில் வருகிறது. அதை பிறிதொரு நாளில் எழுதுகிறேன்.


Friday, February 5, 2016

சற்குரு ஞானி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் - குருபூஜை அழைப்பிதழ்