குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 11, 2009

இரவில் சில படகுகள்

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எங்கோ ஓரிடத்தில் தண்ணீருக்குள் குடும்பத்துடன் தங்கும் போது. எங்கள் படகும் மற்றொரு படகும் அருகருகே நின்றிருந்தன. வலதுபக்கமாக நீண்ட நூறு அடி அகலமிருக்கும் நிலமும் அதன் மீது கட்டப்பட்ட வீடுகளும் தெரிந்தன. நாம் இங்கு தான் இரவில் தங்கப்போகின்றோமா என்று ராஜுவிடம் கேட்டேன். ராஜு படகில் எங்களுக்கு உதவியாய் வருகிறவர். ஆம் என்றார். இரவில் டின்னர். நாங்கள் வாங்கிக் கொடுத்த ப்ரானுடன், மீன் வறுவல், பருப்பு, ரசம், தயிர், பொறியல், ஊறுகாய் என்று மெனு. முதலில் ப்ரானை முடித்து விட்டு காய்கறிகளையும், கொஞ்சம் ரசத்தையும் சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டேன். பத்து மணி அளவில் தூங்கச் சென்றோம். ஏசி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. சன்னலைச் சாத்தி விட்டு பெட்டில் படுத்து விட்டேன். குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென விழிப்பு வர, செல்போனில் மணி பார்த்தேன். பனிரெண்டு. தூக்கம் வராத காரணத்தால் சன்னலோரம் சென்று அமர்ந்தேன். ஆங்காங்கே வெளிச்சப்பொட்டுகளுடன் படகுகள் தண்ணீரில் சென்று கொண்டிருந்தன. மீன் பிடிக்க செல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் படகை சிறிய மிதவைப் படகு ஒன்று கடந்து செல்ல இருட்டில் கண்களைப் பழகிக் கொண்டு உற்றுப் பார்த்தேன்.

அதேதான். அடப்பாவிகளா ? இங்கேயுமா ???

பாவம் என்று எண்ணியபடி மீண்டும் உறங்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் விடிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடும் பழக்கத்தால் எழுந்து சன்னலோரம் அமர்ந்தேன். அப்போதும் சில படகுகள் சென்று கொண்டிருந்தன. அதில் அதேதான். அதாவது இரவு பதினோறு மணிக்கு வேலைக்கு வந்து விட்டு, விடிகாலையில் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். இது பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமேற்பட,படகில் எங்களுடன் வந்தவரிடம் விசாரித்தேன்.

”சார், இங்கெல்லாம் குடும்பத்தோடு வரலாமா? தனியாக அல்லவா வரவேண்டும் “ என்று சொன்னார்.

”தனியாக வந்தால் என்ன ஸ்பெஷல்” என்று கேட்டேன்.

”எல்லாம் கிடைக்கும் சார்” என்று எல்லாமில் மிக அழுத்தம் கொடுத்தார்.

ஆமாம், எல்லாமும் (ஹி..ஹீ...) கிடைக்கும் என்று நினைத்தபடி அசடாக சிரித்து வைத்து விட்டு அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்.

குறிப்பு : அதே தான் என்பது அதே தான். மேலும் சொல்ல விரும்பவில்லை. பெரும்பாலானா டூரிஸ்ட் ஸ்தலங்களில் நடக்கும் கூத்து தான் இது. ”ஜெய் ஹோ”... போங்கய்யா, நீங்களும் உங்க .....

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.