குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, August 25, 2008

Osho Speach - Strange consequence

Rajneesh - Called as Osho. My favorite philosopher.

See his speach about Strange consequence

சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ உரை

சுவாமி விவேகானந்தரின் முதல் சிக்காகோ உரையின் எழுத்து வடிவ தொகுப்பு. கிடைக்காத பொக்கிஷம்.

Saturday, August 23, 2008

தங்கத்தைக் காதலிக்கும் உலகம்

தங்கம்! உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகம். அரசாங்கங்கள் தங்கத்தை சேகரித்து வைத்திருக்கின்றன. தங்க நகைக் கடைகளை காணும் போதெல்லாம் சொர்க்கலோகம் போல இருக்கும். உலகப் பெண்கள் பெரும்பாலோராலும் விரும்பப்படும் பொருள் தங்கம். ஆண்களும் விரும்புவார்கள்.

இந்தப் பாடலைக் பார்த்து வையுங்கள். எதுக்கும் இருக்கட்டும்.

பின்குறிப்பு : இந்தப் பாடலுக்கும் எனது பெயருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாடலைக் கேட்ட பின்னர் உங்களுக்கு தங்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வந்தால் நான் என்ன செய்ய.

Friday, August 22, 2008

நான் என்ன செய்ய பகுதி 2 இன் இறுதிப் பகுதி

டாக்டர் வந்தார். சோதித்து விட்டு

”யார் சார் தங்கம் “ என்றார்.

என் நண்பர் என்னைக் காட்டினார். ஒரு முறை முறைத்தார். எனக்கு வெலவெலத்துப் போய் விட்டது. அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியாக இருந்த எனது தோழியின் நண்பர் அவர்.

முடிந்தது கதை என்று எண்ணி வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது. சட்டை வியர்வையில் நனைந்து விட்டது. லாரா என்னையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருந்தாள்.

என் நண்பர் நமுட்டுச் சிரிப்புடன் இருந்தார். லாராவின் அக்காவின் பார்வையில் எரிமலை வெடித்தது.

”இரண்டு நாட்கள் இருக்கணும். குளுகோஸ் ஏத்தனும் தொடர்ந்து. அடிக்கடி புலம்பறாங்க. தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதனால் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதமாக இவர் சாப்பிடவே இல்லை” என்றார்.

நான் லாராவைப் பார்த்தேன். தலையைக் குனிந்து கொண்டாள்.

மீண்டும் என்னை கொலைகாரனைப் பார்ப்பது போல பார்த்து விட்டுச் சென்றார். கதவருகே சென்றவர் என்னைப் பார்த்தார்.

”நீங்க இங்கேயே இருங்க” என்றார்.

தலையாட்டினேன்.

நர்ஸ் வந்தாள். ஏதோ மருந்தைச் குளுக்கோஸ் பாட்டிலில் ஏற்றினாள். கையில் குளுக்கோஸ் போடப்பட்டது.

லாரா என்னை பெட்டின் மீது அமரும்படி சொன்னாள். அமர்ந்தேன். லாரா தனது வலது கையால் என் வலது கையினைப் பிடித்துக் கொண்டாள். அவள் அருகில் அப்படியே அமர்ந்து இருந்தேன்.

என் நண்பர் விடை பெற்றார். லாராவின் அக்காவும் விடை பெற்றார். விடிய விடிய நான்கு குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டன. லாராவின் கை எனது கையை விடவில்லை. நல்ல தூக்கத்திலும் இறுகப் பிடித்தபடியே தூங்கினாள். கையை மெதுவாக விலக்கினால் முனக ஆரம்பித்தாள்.

நர்ஸ் வந்து நான் கையை எடுக்க முயற்சிப்பதைப் பார்த்துவிட்டு முறைத்தாள். இரவு முழுவதும் விழித்தபடி லாராவின் அருகிலேயே இருந்தேன்.

விடிகாலையில் கண் விழித்தாள் லாரா. என்னைப் பார்த்துச் சிரித்தாள். எழுந்து அறைக் கதவைச் சாத்தினாள். என் அருகில் வந்தாள். தோளில் சாய்ந்து கொண்டாள்.

” லாரா.. நர்ஸ் வரப்போகிறாள் பார். தப்பா நினைக்கப் போறாங்க ” என்றேன்.

“ நினைக்கட்டும். இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன் “ என்றாள்.

” என்ன லாரா. இரண்டு மாசமா சாப்பிடாமல் இருந்தாயாமே. ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் ? “

” உங்களுக்காகத்தான் தங்கம் “ என்றாள்.

இரண்டு நாட்கள் அவளுடன் ஆஸ்பிட்டல் வாசம். அவளுடனே சாப்பிட்டு தூங்கி விழித்தேன்(!!!). என்னை விட்டு ஒரு நிமிடம் கூட விலக மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

ஒரு வழியாக வீட்டில் கொண்டு சென்று சேர்த்து விட்டு இருப்பிடம் சேர்ந்தேன்.

இப்போது லாரா எங்கே ?

எங்கோ இருக்கிறாள் நலமாக. அவளைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. இந்தக் கதை எழுத ஆரம்பித்த போது ஏதோ ஒரு வகையில் நான் அவள் மனதினைக் காயப்படுத்தி இருக்கிறேன் என்று தெரிந்தது. அதற்கு நான் என்ன செய்ய ?????

லாராவின் அக்கா என்னுடன் அவள் பேசுவதை தடை செய்ய, லாரா என்னை விட்டு நீங்கினாள். ஆனால் அவள் நினைவுகளோ எழுத்து வடிவத்தில் என்னுடனும் உங்களுடன் பயனிக்கிறது.

அப்படியே இந்தப் பாட்டையும் கேட்டு வையுங்கள். சுகமாக இருக்கும்.

Thursday, August 21, 2008

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 4

அவள் உயிர் பெற்று வந்த பிரம்மனின் படைப்புகளின் உன்னதம். அவள் சிரித்தால் பார்ப்பவனுக்குள் பூகம்பம் உண்டாகும். சில்லென்று ஒரு குளிர்ச்சி உடல் முழுதும் பரவும். சடக்கென்று மனசு அமைதி பெறும். அழகு என்பது இவளா. இல்லை இவள் தான் அழகா. இரண்டுக்கும் வேறுபாடு சொல்ல இயலாது மனிதனால். அப்படி ஒரு தேவதை. அவளுக்கு ஒரு தங்கை.

ஆண்மகன் அவன். அழகு திருமகன். இவனுக்கு ஒரு அண்ணன். இருவரும் பெண்பார்க்கச் செல்வார்கள். அக்கா தம்பியை நோக்குவாள். தம்பியும் அப்படியே. அந்தப் பார்வையின் அர்த்தம் காதல். இதைத் தான் கம்பனும் கவி பாடியிருப்பானோ ? பார்வையில் காதலைப் பறிமாறும் அந்த உள்ளங்கள் தவித்துப் போகின்றன. ஏன்... அது தான் விதி என்பார்கள் மனிதர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் பாதையில் அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் மணக்க நேரிடுகிறது.

அண்ணன் இறந்து விடுகிறான். அக்கா விதவையாகிறாள். ஒரு குளிர்காலப் பொழுதில் மழை கொட்டுகிறது. இவனும் அவளும் தனிமையில் சந்திக்கும்படி நேர்கிறது. அவள் மனதில் விளையும் உணர்வுகளின் தொகுப்பு இது...

பாடலா இது... வாழ்க்கையின் கோரங்களைச் சொல்லும் பாடல் இது. விதவைப் பெண்ணின் தவிப்பை கொட்டி எழுதப்பட்ட பாடல். கேட்கும் என் மனதை உள்ளுக்குள் அழவைக்கும் இந்தப் பாடல். சோகத்திலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது.


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ -3

சத்ரியன் படத்தில் பானுபிரியா நடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு லேசாகி விடும். மிகவும் அருமையான பாடல் இது.

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 2

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனசு துள்ளி விளையாடும். என்றும் இனிமை தரும் பாடல்


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 1

ஆகாய கங்கை - இளையராஜாவின் இன்னிசையில் எப்போது வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் இது.

Wednesday, August 20, 2008

நான் என்ன செய்ய பகுதி 2ல் முதற்பகுதி

இரவு நேரம். மணி பத்து இருக்கும். அப்போது ” சார் உங்களுக்கு போன் வந்திருக்கிறது “ என்றான் கார்த்தி. போனில் என் நண்பர்..

“சார். லாராவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறேன். அவள் உங்களைப் பார்க்கனும்” என்று சொல்கிறாள்.

அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றேன். அங்குள்ள நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.



என் நண்பர் வந்து லாரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். கொடி போல துவண்டு கிடந்தாள் லாரா. லாராவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டிருந்தாள். அவள் அக்கா அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னை சோகத்துடன் பார்த்தாள். எனக்கு மயக்கம் வரும் போல இருந்தது. லாரா நன்றாகத்தானே இருந்தாள். ஏன் திடீரென்று இப்படி ஆனாள்.அருகில் நாற்காலியினை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.

நான் ஆபீஸ் வந்து வண்டியை நிறுத்தும் முன்பு அருகில் வருவாள்.
“சார் வாங்க..” என்று சொல்லிச் சிரிப்பாள்.

மாடர்ன் டிரஸ்ஸில் தேவதை போல வந்து நிற்பாள். பக்கத்துக் கடைக்காரன்கள் எல்லாரின் வயிற்றிலும் புகை வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு கதவை திறந்து பிடித்த படி நிற்பாள்.

”லாரா.. சாப்பாடு ஆயிடுச்சா” என்று கேட்டபடி சேரில் அமர்வேன்.

“ம்.. நீங்க சாப்பிட்டீங்களா ? “ என்பாள். என் அம்மாவை அவள் ரூபத்தில் பார்ப்பேன். அப்படி ஒரு அன்பு என் மீது.

அப்படி சுறுசுறுப்பாய் இருந்தவளா இப்படி மயங்கிக் கிடக்கிறாள். என் நெஞ்சில் பாராங்கல்லை வைத்தது போல வலித்தது.

”தங்கம்..தங்கம்..தங்கம்....தங்கம்...” மந்திரம் போல ஜெபித்துக் கொண்டிருந்தாள். எனக்கு தலை கிறுகிறுத்தது.

என் நண்பர் அருகில் வந்து ” லாரா..லாரா.. இங்கே பாரு தங்கம் வந்திருக்கிறார் “ என்று இரு முறை சொன்னார். லேசாக கண் விழித்தாள். என்னைப் பார்த்தாள்.

நான் லாரா என்றேன் மெதுவாக. கண்ணில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் படக்கென்று எழ முற்பட்டாள். அவள் அக்கா வந்து எழ விடாமல் தடுத்தாள்.

”சார். எனக்கு ஒன்றுமில்லை. அழாதீங்க...” என்று சொல்லி சிரித்தாள். முகத்தில் களைப்பு தெரிந்தது.

அடுத்து அவள் செய்தது என்ன ??? ( தொடரும் )

Sunday, August 17, 2008

நான் என்ன செய்ய ? பகுதி 1

என் நண்பரின் ஆபீஸுக்குள் நுழைந்த போது கம்ப்யூட்டரில் ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. அலைபாயுதே படத்தில் வரும் அந்தப் பாடல். எனக்கு அந்தப் பாடல் பிடிக்காது.

கம்ப்யூட்டரின் முன்பு நண்பரின் ஆபீஸில் வேலை செய்யும் ஃப்ரான்சிஸ்கா அமர்ந்திருந்தாள்.

“என்ன ஃப்ரான்சிஸ்கா ? பாட்டெல்லாம் சோகமாக இருக்கிறதே ? என்ன விஷயம்” என்று கேட்டேன்.

”ஒன்றுமில்லை சார்..”

சிரித்தேன்.

”ஃப்ரான்சிஸ்கா என்னை என்ன மடையன் என்றா நினைக்கிறாய் ? “

“இல்லை சார். “ இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருக்கிறது என்று எனக்குள் தோன்றியது. இதற்குமேல் கேட்க எனக்கு சங்கோஜமாக இருந்ததால் விட்டு விட்டேன்.

காலை நேரம். மதியம் சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.

“சார் மதியம் எங்கே சாப்பிடுவீங்க?”

“ஆஸ்ரமத்தில் சாம்பாரா சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு ஃப்ரான்சிஸ்கா, அதனாலே இன்றைக்கு மட்டன் சாப்பிடனும் என்று ஆசை”

“சார்.. எங்க வீட்டில மட்டன் குழம்பும் வறுவலும் செய்கிறார்கள். எடுத்துட்டு வரட்டுமா ? சாப்பிடுவீர்களா ?“

மட்டன் குழம்பு, வறுவல் என்றவுடன் எனக்கு நாக்கில் ஜொள்ளு ஒழுகியது. அதை வெளிக்காட்டாமல்,

“உங்களுக்கு எதுக்கு சிரமம் “ என்றேன்.

“ சிரமம் என்றெல்லாம் இல்லை சார். சாப்பிடுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். எடுத்து வருகிறேன்.”

“ சரி. கொஞ்சமா எடுத்துட்டு வாங்க. கொஞ்சம் ரசம் மறக்காமல் எடுத்து வாருங்கள்” என்றேன்.

ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு எடுத்து வர கிளம்பி விட்டாள். நான் கணிணியில் சீரியஸாகி விட்டேன். அதுவரை எனது நண்பர் வரவில்லை. செல்லுக்கு கூப்பிட்டால் தொடர்பில் இல்லை என்று வருகிறது.

ஒரு மணி இருக்கும். கையில் பெரிய பையுடன் வந்தாள்.

தட்டில் சோறு போட்டு மட்டன் குழம்பும் வறுவலுடன் ஆம்லெட்டையும் எடுத்து வைத்தாள். கண்ணில் நீர் வழிய சாப்பிட்டேன். அம்மா கையில் சாப்பிட்டது போல இருந்தது. எனக்குள் சொல்லொண்ணா இன்பம்.

சந்தோஷத்தில் “ ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு அருமை. உங்க கைக்கு ஒரு முத்தம் தரலாம் போல இருக்கு” என்றேன்.

“ம்.. ஆசையைப் பாருங்க” என்று பளிப்புக் காட்டினாள் ஃப்ரான்சிஸ்கா.

என் முகம் சுருங்கியதைப் பார்த்தவள், “சரி போகட்டும். இந்தாருங்கள்” என்று கை நீட்ட ஒரு முத்தத்தை பதித்தேன் அவள் கையில்.

சிரித்தாள். நானும் அசடாக சிரித்து வைத்தேன்.

”அவ்வளவுதானா? ரசம் எப்படி இருக்குன்னு சொல்லவில்லையே“ என்றாள்.

“உண்மையை சொல்லனுமா. பொய் சொல்லனுமா“ என்று கேட்க

“உண்மையைச் சொல்லுங்க” என்றாள்.

“சுமார் தான் ஃப்ரான்சிஸ்கா“

“நான் தான் வைத்தேன். எனக்கு ரசம் வைக்கத் தெரியாது. மட்டன் குழம்பு, வறுவல் என் அம்மா செய்தார்கள்“ என்றாள்.

எனக்கு சுறுக்கென்றது. ”சாரி ஃப்ரான்சிஸ்கா. ரசம் கூட பரவாயில்லை” என்று சொல்லி வைத்தேன். சிரித்தாள்.

சில நாட்கள் கடந்தன. ஃப்ரான்சிஸ்கா தனியாக இருக்கும் போது ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக என் நண்பர் சொன்னார்.

ஃப்ரான்சிஸ்கா எவரையாவது காதலிக்கும் போல என்றும் சொன்னார். நானும் ஆமோதித்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது நண்பரும் ஃப்ரான்சிஸ்காவும் மதுரைக்கு சென்று வந்தனர். நான் மாலையில் வந்தேன் என் நண்பரைப் பார்க்க. என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னார். பாருக்கு சென்றோம்.

“சார். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

”“ஃப்ரான்சிஸ்கா உங்களைக் காதலிக்கிறாள்“ என்றாள்.

“என்ன ??? “ எனக்குள் அதிர்ச்சி.

“ஆமாம் சார். பஸ்ஸில் இருவரும் செல்லும் போது அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன ஃப்ரான்சிஸ்கா என்று கேட்ட போது அவள் உங்களைப் பற்றி தான் பேசினாள். சாப்பிட அழைத்தபோது மறுத்து விட்டாள். இன்று பாஸ்டிங் இருப்பதாக சொன்னாள். அவள் வாரத்தில் நான்கு நாட்கள் பாஸ்டிங் (பட்டினி) இருப்பாள். என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறாள். ஏன் என்று கேட்க வில்லை. இன்று தான் எனக்கு விடை கிடைத்தது சார். நீங்கள் நடக்க வேண்டுமென அவள் பாஸ்டிங் இருப்பதாக இன்று சொன்னாள் சார். எனக்கு கண்ணீரே வந்து விட்டது சார்.”

மனதுக்குள் பூகம்பம் அடித்தது. மனசு வேற பாரமாகிவிட்டது. என் நண்பர் சொல்லி விட்டு கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

”ஆனால் என்னால் அவளைக் காதலிக்க முடியவில்லையே சார். நான் என்ன செய்ய ?“

”சார் ப்ளீஸ் சார். பாவம் சார் ஃப்ரான்சிஸ்கா. உங்களையே வாழ்வாக எண்ணி இருக்கிறாள். என்று சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரான்சிஸ்காவுக்கு மேல் படிப்புக்கு ஆர்டர் வர சென்று விட்டாள் வேலைக்கு வரவில்லை. நான் அவளுக்கு அளித்த பரிசில் எங்களது ஆத்மாவுக்கு என்று எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அழுதாள்.

என்றோ ஒரு நாள் ஃப்ரான்சிஸ்காவின் நினைவு வர அந்தப் பாடலை கேட்டேன். இப்பொழுது நான் நான் மட்டும் அந்தப் பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் தனியாக. பாடல் வரிகள் கீழே...


எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதலுக்காகவோ அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குயிலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


நன்றி :
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிரத்னம்,
பாடலாசிரியர் : வைரமுத்து.
__________________