குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label குருவாயூர் கோவில். Show all posts
Showing posts with label குருவாயூர் கோவில். Show all posts

Tuesday, August 26, 2025

பெண்களே உங்களுக்கு இந்த அவமானம் தேவையா?

ஒரு கடவுள் மொழி, சாதி, மதம், பேதம் பார்பாரா? அப்படி அவர் இருந்தால் அவர் கடவுளா? 

கடவுள் எவரிடமும் வந்து எனக்கு இதைச் செய், அதைச் செய் என்று கேட்கவில்லை. மனித ரூபத்தில் இருக்கும் பலருக்கு மனப்பிராந்தி நோய் ஏற்பட்டதால், கடவுளின் பெயரால் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டு, அதைப் புனிதம் என பொய்யையும், புரட்டையும் திணிக்கிறார்கள்.

பெண்களின் உதிரத்தில் உதித்தவர்கள் பெண்களை இழிவு செய்வதை தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இன்றைய தினகரனில் வெளியான இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.

பூமியைத் தாய் என்கிறோம். ஆனால் கோவில்களின் நிலையோ கொடூரங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

முலைக்கு வரிப் போட்ட கேரளாவில், அம்மன் வழிபாடு அதிகமிருக்கும் கேரளாவில், கடவுளின் இருப்பிடமென சொல்லப்படும் கேரளாவில், இப்படி ஒரு நிகழ்வு.

குருவாயூரில் கடவுள் இருந்தால் இந்த நிகழ்வுக்கான விளைவை அவரே செயல்படுத்தட்டும்.

பெண் இன்றி இந்த உலகம் ஒரு நொடியும் இயங்காது என்பதுதான் மாற்றவே முடியாத உண்மை. மதிகெட்ட கெடுமதியாளர்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதோ தெரியவில்லை. 

இதோ அந்தச் செய்தி...!



நன்றி : தினகரன் 26.08.2025 செய்தி