குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஆரோக்கிய வீடுகள். Show all posts
Showing posts with label ஆரோக்கிய வீடுகள். Show all posts

Friday, January 24, 2020

நிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க

அளவான ஒரு குடும்பத்தலைவரின் கனவு - வீடு, கார், ஓரளவு நிரந்தர வருமானம், பிள்ளைகள் படிப்பு, தனக்கும் பிள்ளைகளுக்கும் எதிர்கால பாதுகாப்புக்கு சேமிப்பு. இது இல்லாதவர் எவரேனும் உண்டா?

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்களுக்கு வசிக்க நல்ல வீடு இல்லை. பொருளை ஈட்டும் பொருட்டு, நகரங்களுக்குச் சென்றவர்களுக்கு, அங்கு சொத்து வாங்கவோ, வீடு கட்டவோ அவற்றின் விலை மிக அதிகம் என்பது முக்கிய காரணமாய் உள்ளது.

அபார்ட்மெண்ட்களில் வீடு கிடைத்தாலும், அந்த வாழ்க்கை உவப்பாக இருப்பதில்லை. தண்ணீர் பிரச்சினையிலிருந்து, இன்னும் பலப்பல பிரச்சினைகளை தினமும் சந்திக்க வேண்டி இருக்கும்.  நிர்வாகச் செலவுகள் வாடகை போல தொடரும். அபார்ட்மெண்ட் வீடுகள் விலையேற்றம் என்பது கிடையாது. 

நகரங்களை ஒட்டிய இடங்கள், வீடுகள் காலப்போக்கில் விலையேறலாம். நகரங்களை ஒட்டிய வீடுகளை விலைக்கு வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல.

கடன் பெற்று வீடு வாங்குவது மட்டுமே பெரும்பான்மை மக்களுக்கு இப்போதைய ஒரே வழி. வீடுகளின் விலைகள் உயர்ந்து உள்ளன. வாடகை கொடுக்கும் பணத்துக்கு, மாதா மாதம் டியூ கட்டி விடலாம் என்று நினைத்து கடன் வாங்கும் நபர்களுக்கு மாத வருமானம் சரியாக கிடைக்கவில்லை என்றால் கடன்காரர்களின் தொல்லைகள் பெரிய அவஸ்தையை உருவாக்கும். 

அரசு அலுவலர்கள் ஓரளவு சமாளிக்கலாம். பிள்ளைகள் படிப்பு, நோய், அவசரச் செலவுகள், விழாச் செலவுகள், உறவுகள் என்றெல்லாம் கண் முன்னே செலவுக்கான வழிகள் கைகட்டி நிற்கும் போது வீட்டுக்கடன் அடைக்க இயலாமல் போனால் வங்கி ஏலத்துக்கு கொண்டு வந்து விடும். நிம்மதியற்ற வாழ்க்கை கடன் பெற்று வீடு வாங்கியவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அமைந்து விடுகிறது.

நகர வாழ்க்கை முறை வருடம் தோறும் புதுப்புது வைரஸை, நோயை உருவாக்கி மக்களை மரண பீதியடைய வைக்கிறது. தன்னளவில் பொருளாதார மேம்பாடு அடைய, மனிதர்கள் தங்களின் உடல் நலத்தை பணயம் வைப்பது,  சம்பாதித்து சேர்த்து வைப்பதில் பாதி நோய்க்காக, உடல்நலத்துக்காக செலவழிக்கப்படுகிறது. 50, 60களில் இருப்போரிடம் பேசிப் பார்த்தால் சொல்வார்கள்.

அந்தக் காலத்தில் கூரை - ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் 80, 90 வயது வரை நோயின்றி வாழ்ந்தார்கள். உடல் உழைப்பு மட்டுமல்ல வீடு என்பது முழு ஓய்வுக்கான இடமாக இருந்தது. கவலையற்ற வாழ்வு, அவர்கள் சுயசார்பு வாழ்க்கை முறையில் வாழ்ந்ததால் நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தது. சுயசார்பு வாழ்க்கை என்றால் என்ன என கேட்கத் தோன்றும்

வீட்டில் இரண்டு தென்னை மரங்கள், ஒரு கொய்யா, கருவேப்பிலை, கொடத்தடிப் பக்கம் நான்கு கத்தரி, வெண்டைச் செடிகள், அவரை, பரங்கிச் செடி, புடலைச் செடி, பீர்க்குச் செடிகள், கீரைகள் இருந்ததால் உணவுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவைகள் முழுச் சுகாதாரமான, உரங்கள் அற்ற சுத்தமான காய்கறிகள். நல்ல வெளிச்சம், காற்றோட்டமாய் வீடுகள் என கொசுக்கள் இல்லாத வீடுகளில் அவர்கள் வசித்தார்கள். மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மட்டுமே அவர்கள் அரசை நாடினார்கள். நோய்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களையே மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். நல்ல செழிப்பும், வளமும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கும் நகரங்களை ஒட்டிய கிராமங்களில் அவ்வாறுதான் வாழ்கிறார்கள்.

இப்போதைய நவ நாகரீக வாழ்க்கை முறை, நோய் இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உள்ளார்கள் என தேட வைத்திருக்கிறது. சுகர், பிரஷர் எல்லாம் ஃபேஷன் நோய்கள். அதற்கும் மருந்துச் செலவுகள் ஆகிக் கொண்டிதான் இருக்கின்றது. மக்கள் அதையும் ஏற்று வாழப் பழகிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வேறு வழி இல்லை. 

இதையெல்லாம் யோசித்து, மிகக் குறைந்த விலையில் 30 வருட உத்தரவாதமளிக்கும் சுயச்சார்பு ஆரோக்கிய வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கு வழங்கி, கடனற்ற வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென்ற ஆவல் இதே ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 15 வருட அனுபவத்துடன் இருக்கும் எனக்கு ஏற்பட்டது.

இந்த ஆவலில் விளைந்ததுதான் ஆரோக்கிய வீடுகள் கட்டும் திட்டம். அதுவும் மிகவும் குறைந்த விலையில். மாதா மாதம் தவணைகள் இல்லா வாழ்க்கை முறை. சொர்க்கத்தை வழங்கும் இயற்கைசார் வீடுகள். வருமானமே வரவில்லை என்றாலும் மிகச் சொற்பமான செலவில் அமைதியாக வாழும் வீடுகள்.

விரைவில் வெளியிட இருக்கிறேன். எனது பிளாக்கிலும் எனது யூடியூப் சேனலான https://www.youtube.com/user/fortunebricksindia இணைந்திருங்கள். வெகு விரைவில் அவ்வகை வீடுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

ஊட்டியில் 25 செண்ட் ஃபார்ம் ஹவுஸ் வீடுகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. அதைப் பற்றியும் எனது பிளாக்கிலும், யூடியுப் சேனலிலும் தெரிந்து கொள்ளலாம்.