பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் தொடர்ந்து “பாரத்” என்றே குறிப்பிடுகிறார், “இந்தியா” என்பதை தவிர்க்கிறார். இந்திய அரசியலமைப்பு முதல் பத்தியில் “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் சங்கமாக இருக்கும்” என்று கூறுவதால், இரண்டு பெயர்களும் சட்டப்பூர்வமானவை.
ஆனால் “இந்தியா” என்பதை அவர் தனது பேச்சின் போது மறைக்க முயற்சிப்பது அரசியல் நோக்கமாக பேசப்படுகிறது.
சர்வதேச அளவில் “இந்தியா” என்பதே வழக்கமாகப் பயன்படுகிறது, ஆனால் “பாரத்” என்பது பாரம்பரியமான மரபை குறிக்கிறது. அவர் பாரத் என்றே சொல்கிறார்.
பிரதமர் “இந்தியா” என்பதற்குப் பதிலாக “பாரத்” பயன்படுத்தலாம் என்றால், தமிழ்நாடு முதல்வர் “௹” (தமிழ் நாணயச் சின்னம்) பயன்படுத்தும் உரிமை உண்டு. ரூபாய் சின்னம் பயன்படுத்துவது தமிழர்களின் மரபு. தமிழ் நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் - ரூபாயில் குறிக்கப்பட்டிருக்கும். அதற்காக அவர் ரூ எழுத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு தவறாகும்.
எதையாவது ஒன்றை எப்போதும் ஊதிப் பெரிதாக்குவது, அதன் பின் விட்டு விடுவது. பின்னர் வேறொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு பேசுவது என கடந்த 10 ஆண்டுகளாக பிஜேபியினர் செய்து வரும் தமிழர், தமிழ் துரோக அரசியலை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது.
இதைத் தவறு என்று சொல்வோர் தமிழ் இனத்தின் துரோகிகள்.
#இந்தியாVsபாரத் #அரசியல்சட்டவிவாதம் #கூட்டாட்சி #மோடி #தமிழ்அடையாளம் #அரசியல்நோக்கம் #BJP #IndiaOrBharat
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.