குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, February 10, 2024

மித்ரே சிவா - உனக்குள் ஒரு ரகசியம் - ஓர் அலசல்

ஆனந்த விகடன் அடுத்த சுவாமி ஜியை, தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தொடரை ஆரம்பித்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை தற்போது பிரபலமாக இருக்கும் பல சுவாமி ஜீக்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார்கள். பிரபல்யம் அடைகிறார்கள். ஏதேனும் டீல் இருக்குமோ?

மித்ரே சிவா அவர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவருடன் நேரில் பேசி இருக்கிறேன். அவரின் மனைவி கொடுத்த ஃப்ரூட் சாலட் அற்புதம். 

திடீரென்று விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தேன் மித்ரே சிவா எழுதிய உனக்குள் ஒரு ரகசியம் படித்தேன். 

அவரின் கருத்துக்கள் சில.

திட்டம் என்பது நம் அறிவுக்குள் உதிக்கிறது

அறிவு நிலையானது. ஆனால் வாழ்க்கை நிலையானதல்ல

முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அப்படிச் செயல்படுகிறபோது நிறைய விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியத் தொடங்கும். மனத்தைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்.

கோயம்புத்தூருக்குக் காரில் செல்வது திட்டம். அந்தப் பயணத்தில் மட்டுமே நம் கவனம் இருக்க வேண்டும். பயணத்தின் இடையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாகனம் பழுதாகலாம், பயணம் தடைப்படலாம், பாதையில் பிரச்னை ஏற்படலாம். எது நிகழ்ந்தாலும் அதற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றியபடி பயணத்தைத் தொடர வேண்டும். மாறாக, பயணத்தை ஆரம்பிக்கும்போதே கோயம்புத்தூரில் வாழ்வதுபோல் கற்பனை செய்யக் கூடாது. அங்கு தங்குமிடம், சாப்பிடும் உணவு என்று கற்பனை செய்து நிகழ்காலத்திலேயே அதை வாழ ஆரம்பித்துவிட்டால் செயல்பாட்டில் கவனம் சிதறிவிடும். இதுதான் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு.

இந்தக் கணத்தில் நிதர்சனத்துக்குள் நீங்கள் ஆழமாகச் செல்லச் செல்ல, நீங்கள் நினைப்பதெல்லாம் சுலபமாக முடியும்.

நிற்க..!

அறிவு நிலையானது. வாழ்க்கை நிலையற்றது - 

அறிவு நிலையானதாம். அறிவு என்பதே ஒரு குப்பை என்பார் ஓஷோ. எவராலோ எந்தக் காலத்திலோ கொடுத்த விஷயம் தான் அறிவு. அறிவு எப்படி நிலையாக இருக்கும்? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா? இது என்னவென்று?

மனதைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்? - எப்போது தெரியுமா திட்டத்தினைச் செயல்படுத்தும் போது. 

மனதை ஆளத் தெரிந்தவனுக்கு திட்டம் எதற்கு, காசு பணம் எதற்கு?  

கோவைக்கு காரில் செல்வது ஒரு செயல். செயலைச் செய்பவர்களின் மன நிலையைப் பொறுத்து ஒவ்வொன்றும் மாறும். 

கோவைக்குப் பயணம் செல்பவர்கள் எதற்கு கோவையில் வாழணும்? - இதென்ன ஒப்பீடு?

மனதுக்குள் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன். 

கனவு காணாமல், அக்கனவுக்குள் வாழாமல் எதுவும் சாத்தியப்படாது என்று பல அறிஞர்கள் சொல்லி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிகச் சரியானது எது என்பதை அறிந்து கொள்ள முயலுங்கள். பிசினஸ் எது? ஆன்மீகம் எது? அறிவுரை எது? என்று ஆராய்ந்து பாருங்கள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.