குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 2, 2010

தகப்பனுக்கும் தாய்மை உண்டு

என் மகள் நிவேதிதா நாப்தலீன் பால்ஸை சாப்பிட்டு விட்டு மயக்கமாகி விட்டாள். வாயில் நுரை தள்ளியது.

டாக்டர் காப்பாற்றுவது கடினம் என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது என்னை மீறி. கைகள் சோர்ந்து விட்டன. மனசு செத்துப் போய் நடை பிணம்போல ஆகி விட்டேன்.

வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த பல பெற்றோர் என் கண்களிலிருந்து தானாக வடிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு உள்ளம் துடித்து அவரவரும் வந்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

விடிகாலை இரண்டு மணி. லேப் டெஸ்ட்டில் நாப்தலீன் பால்ஸ் என்ற விபரம் தெரிய, டாக்டர் என்னிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு ”கவலைப் படாதீர்கள் தங்கம், சாதாரண பிரச்சினைதான், குழந்தைக்கு ஒன்றுமில்லை இப்போதாவது உங்கள் கண்ணீரை துடையுங்கள்” என்றார்.

தாய் தன் இரத்தத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறாள். தந்தை தன் ஆன்ம பலத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறான்.

தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லுகிறது இப்பாடல்.


">

தந்தைக்கும் தாய்மை உண்டு என்பதைச் சொல்லுகிறது கீழே வரும் பாடல்.

">