குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நம்பிக்கைகள். Show all posts
Showing posts with label நம்பிக்கைகள். Show all posts

Friday, September 24, 2010

பஞ்சலோகம் அணிய வேண்டுமா?

சிறு வயதில் காலில் தண்டை அணிவது வழக்கம். ஆனால் மக்கள் தங்களது ஈகோவினால் வெள்ளி, தங்கத்தில் தண்டை செய்து குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர். இதனால் எந்தவித பலனும் கிடையாது என்பதுடன், இக்காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு, கிலோ கணக்கில் தங்கம் அணிந்தவருக்கு உயிராபத்தும் ஏற்பட்டு விடக்கூடும்.

பஞ்சலோகமான தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட தண்டையை அணிவதால், மனித உடலைச் சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலின் உலோக சக்தியை அதிகரிக்கும். ஏனென்றால் பூமியின் ஒவ்வொரு இடத்திற்கும் உலோக அம்சம் கலந்த மண் வித்தியாசப்படும். இந்த வித்தியாசத்தை நிவர்த்தி செய்வது பஞ்சலோக தண்டை என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். கோவில்களில் சாமி சிலைகள் பஞ்சலோகத்தில் அமைக்கப்படுவதன் காரணமும் இது தான்.

தண்டை என்பது கொலுசு போன்றதாகும். கையிலோ அல்லது கழுத்திலோ அணியலாம்.

உதவிய நூல் : ஓலைச்சுவடி