கை கால்களில் கத்தியின் சுவடுகளால் வழிந்தோடும் குருதி. சுற்றிலும் பிணங்கள். வெட்டுண்டு குருதி கொப்பளிக்கும் உடல்களிலிருந்து வெளியேறும் வலி மிகுந்த குரல்கள் ஈன ஸ்வரத்தில். கொஞ்சம் கொஞ்சமாக உடலிருந்து பிரிந்து கொண்டிருக்கும் உயிர்.
இந்தப் போரில் வெற்றி பெற்றால் நீ கேட்பதைத் தருகிறேன் என்று சொல்லியிருந்தான் அரசன். ஆனால் அவனோ எதிரியின் கத்தியினால் வெட்டுண்டு கிடந்தான். அவனின் உடலிருந்து குருதி வெளியேறி சொட்டுச் சொட்டாய் உயிர் உதிர்ந்து கொண்டிருந்தது.
வலி மிகுந்த உடலை நகர்த்த முடியாத நிலையில், வேதனை தாளாமல் கண்களிலிருந்து வெளியேறும் கண்ணீர் நிறைந்த கண்களூடாக ஜல் ஜல் சத்தத்துடன் சுழலும் கத்தியினால் வெட்டுண்டு விழும் உடல்களைப் பார்த்தபடி கண்கள் மூடியவனின் நாசியினைத் தழுவியது அந்த வாசம்.
அந்த வாசத்தில் அவனது காதலி அவனுக்கு எழுதிய கடிதத்தில் வடித்திருந்த எழுத்துகள் உயிர்பெற்று மனதூடே உலாவியது.
On the absent and present one where are you
If you are not with me then where are you
My eyes are illuminated by you
My heart is acquainted by you
Come and invite my eyes and soul
Otherwise take a sword and end my life
அவனுக்கு கடிதம் எழுதிய அவளின் கைகள் கத்தியினை ஏந்தியிருந்தது. அவளின் முகத்தை துணி முகமூடியாய் மறைத்திருந்தது. அவள் கரங்களில் கத்தி சுழன்றது. அவள் ஒவ்வொரு எதிரியின் தலையைக் கொய்தாள். போர் முடிந்தது.
அவனை யாரோ நெஞ்சோடு தூக்கி அணைத்தபடி தலைமுடியை ஆதரவாய் கோதினார்கள். அவனுக்கு நினைவு கொஞ்சமே கொஞ்சமாய் திரும்பியது.
அவன் நெஞ்சிலிருந்து அக்கடிதத்திற்கு எழுதிய பதில் எழுத்துகள் தரையில் குருதியில் படிந்தன.
I don't have the sight to see you
I don't have patience and rest without you
What am I going to do with you now
How can I carry this pain without you
Your hair has pierced my veil
With your face I have fallen in love
From your hair I have become under over
Because from your hair my life has been destroyed
அவனிடம் யாரோ சொன்னார்கள். அவளின் இன்னொரு கடிதத்தை உன்னிடத்தில் தர முடியாது. ஏனெனில் அது காகிதத்தில் எழுதப்படவில்லை. அதைப் படிக்க வேண்டும் எனில் நீதான் செல்ல வேண்டும் என்றார்கள்.
அது சிறை. அரசன் அவளை - அவளின் காதல் தெரிந்து சிறையிட்டான்.
எந்தக் காதலைச் சிறையிட முடியும்?
அவள் தன் காதலுக்காக எழுதிய அந்த மகத்தான கவிதை அவளின் குருதியைக் கோரியது.
அந்த வாசனையை - அவனின் நாசியருகில் கொண்டு வந்தவளின் கடைசிக் கவிதை.
அந்தக் கவிதை குருதியினால் எழுதப்பட்டிருந்தது. அவளின் உடல் வடித்த குருதியை எழுத்தாக்கி காதலை சுவற்றில் எழுதி விட்டு, விஷத்தை அருந்தி தன் இன்னுயிரை உதிர்த்தாள்.
இதோ அந்தக் கல்லறைச் சுவரில் அவளின் உதிரத்திலிருந்து உதிர்ந்த காதல் கடிதத்தின் கடைசி வரிகள்.
I wish my body was aware of my heart
I wish my heart was aware of my body
I wish I could escape from you in peace
Where can I go regretfully
காதலனும் காதலியும் குருதியில் நனைந்த அந்தக் கவிதையின் வரிகளில்.
ஆஃப்கானிஸ்தான் கல்லறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவள் பெயர் ரபியா பால்கி (Rabia Balkie). அவளின் காதலன் துருக்கி நாட்டின் அடிமை பக்தாஷ் (Baktash)
காதலுக்காக உடலிருந்து குருதியெடுத்து கடைசிக் கடிதம் எழுதிய அந்த மகத்தான காதலியும், அவளின் காதலும் - அவளின் அந்தக் காதலின் வாசனையை இதோ இந்த நொடியில் என் மனம் நுகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக் காவியச் சுவரை எழுப்பியவன் எவனோ?
வளமுடன் வாழ்க.!
26.08.2025
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.