குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, February 5, 2012

தாம்பத்ய ரகசியம் என்பது என்ன?





”86 வயசு தம்பி” என்றார். இடமொன்றினைப் வாங்குவதற்காக பார்வையிடச் சென்றிருந்த போது, அருகிலிருந்த வீட்டில் வாயிலில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தன் பெரியவரிடம், தண்ணீர் கேட்க, கொடுத்த முதியவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது இப்படி.

”13 குழந்தைகள்” என்றார் தொடர்ந்து. விழிகள் விரிய அவரைப் பார்த்தேன். வீட்டுக்கார அம்மாள் சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்றார் மேலும் தொடர்ந்து. சுவாரசியமான மனிதராக இருப்பதை விட அனுபவசாலியாய் இருக்கின்றாரே, அவருடன் சற்றே உரையாடலாம் என்று நினைத்து, காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி, வீட்டு வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தேன்.

முதியவரின் மனைவி வீட்டினுள் இருந்து வந்து வரவேற்றார். பூமி வாங்கவா வந்தீர்கள் ? என்று விசாரணையை ஆரம்பித்து, கல்யாணம் ஆகிடுச்சா, எத்தனை குழந்தைகள் என்று தொடர, நானோ ”உங்க அளவுக்கு இல்லை பாட்டி, ஏதோ என்னால் முடிந்தது ஆணொன்று பெண்ணொன்று ”என்றேன். பாட்டி ரகளையான ஆள் போல. பேச்சில் எள்ளலும், துள்ளலும் விளையாடியது.

”இந்தக் கிழவனிருக்காரே, பெரிய ஆளு. மூனு மாசத்துக்கொருதடவை அணைச்சாருன்னா, இடுப்பொடுஞ்சி போகும். அடுத்து பத்து மாசத்துக்கு பக்கத்துலே விட மாட்டேன். போதும் போதும்னு சொன்னாக்கூட விடாமல், அதைச் சொல்லி, இதைச் சொல்லி 13 பேராக்கிட்டாரு தம்பி” ன்னாரு பாட்டி.

13 பெருக்கல் 10 - 130 மாதம் கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி பதினோறு வருடமாய் அலுக்காமல் சலிக்காமல் பிள்ளை பெற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும். அத்தனை பிள்ளைகளும் உயிரோடாதினிருக்கின்றார்களாம். திருமணமாகி பேரக்குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார்களாம். திருமணம் ஆன ஒரு மாதத்தில் தனிக்குடித்தனம் வைத்து விடுவாராம் பெரியவர். இப்படியே அனைவருக்கும். பெண்பிள்ளைகளுக்கு காலத்தே சொந்தத்தில் திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். வரதட்சிணைப் பிரச்சினையெல்லாம் இல்லை தம்பி, ஏன்னா சொந்தக்கார பசங்களுக்கே பொண்ணுங்களைக் கொடுத்து, பெண் எடுத்தேன் என்றார் பெரியவர்.

இரவில் நீண்ட நேரம் கழித்து பார்ட்டிக்குச் சென்று வீடு திரும்பிய மனைவியைப் பற்றி அவள் அம்மாவிடம் ரிப்போர்ட் சொன்ன ஒரே காரணத்திற்காக, மருமகன் மீது பாகிஸ்தான் தீவிரவாதி இல்லை இல்லை சைனாக்காரன் அளவுக்கு பகை கொண்டு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்த பெண்மணியைப் பார்த்திருக்கிறேன். அதை பெண் சுதந்திரம் என்றுச் சொல்லி சப்பைக்கட்டு கட்டிய கணவருக்கு இன்று ஒரு வாய் சோறு போடக்கூட நேரமில்லாமல் பார்ட்டி, மீட்டிங், பேச்சு, அரசியல் என்று அலைந்து கொண்டிருக்கும் பெண்மணியை சமூகத்தில் பெண்ணுரிமைவாதி என்று பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.

இப்படியான ஒரு காலகட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, தள்ளாத வயதில் தன் கணவனின் சளித் தொந்தரவிற்கு “தூதுவளை ரசம்” வைத்துக் கொண்டிருக்கும் முதிய பெண்மணியைப் பார்க்கின்ற போது மனதுக்குள் ஆயாசம் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

எனக்குத் தெரிந்த அரசியல்வாதிப் பெண்மணி ஒருவரைப் பற்றி இங்கே நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். கணவன் சம்பாதித்துக் கொடுக்கும் காசில் குடும்பம் நடத்த தெரியாதவள் பெண்ணே அல்ல என்பார்கள் கிராமப்புறத்தில். இந்தப் பெண்மணிக்கு கணவன் சம்பாதித்துக் கொண்டு வரும் காசு வாரம் ஒரு முறை சேலை வாங்கவே போதவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அருகாமை வீட்டிலிருந்த ஒரு கிளைச்செயலாளர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. கிளைச் செயலாளர் கட்சிக்குப் பணி செய்தாரோ இல்லையோ, இந்தப் பெண்மணிக்கு நன்றாக ஆயில் சர்வீஸ் செய்து, ஒருவழியாக பிரச்சாரத்திற்கு வந்த தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் தொடர்பாக தலைவருக்கு இவர் செய்த சர்வீஸ் காரணமாக, உயர்ந்த மாவட்டப் பிரதி நிதித்துவம் கிடைக்க காசு கொட்ட ஆரம்பித்தது. அதன் பிறகு அந்த தலைவருக்கு சப்ளை செய்யும் பிரதான வேலையைச் செய்ய ஆரம்பித்து என்னென்னவோ ஆகி விட்டது. இத்துடன் அரசியல் பெண்மணியைப் பற்றி முடித்து விடுகிறேன். மேலும் கிளறினால் “ நாறிப் போய்விடும்”.

மிடில் கிளாஸ் குடும்பங்களிடம் காணப்படும் ஜாதி வெறிகள் பணமுடையவர்களிடம் கிடையாது. பெரும் தனக்காரர்கள் பணம், பதவிகளை முன்வைத்து திருமணங்களை நடத்துகின்றனர். அவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. ஏனென்றால் பணத்திற்கு ஜாதி கிடையாது. ஏழ்மையான குடும்பத்திற்கும், மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் ஜாதி, ஜாதகம் போன்றவை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. இது ஒரு மாயவலை என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இதற்கிடையில் பெண்ணீயவாதிகள் பெண்களுடனான தனிமையை பெரிது படுத்தி, நீ இதற்காகவா பிறப்பெடுத்தாய் என்றெல்லாம் ஊதி ஊதி குடும்ப வாழ்க்கைக்கு வெடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனிமை மனிதர் அனைவருக்குமான பொதுவான ஒன்று. அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி. பெண்களின் வாழ்க்கையில் வெறுமை மட்டுமே மிச்சம் என்பதாயும், அவர்கள் ஆண்களின் ஆக்கிரமிப்பில் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதாயும் இல்லாததும், பொல்லாததுமான புரட்டுக்களை கட்டுக்கதைகளாக்கி, குடிப்பதையும் கண்டவனுடன் படுப்பதையும் பெண்ணுரிமை என்று பேசி வருபவர்களால் குடும்ப அமைப்பு சீரழிந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ செய்யும் தவறுகளை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தி, பெரும்பான்மை சமூகத்தில் இந்த வகையான கொடுமைகள் நடந்து கொண்டிருப்பதாய் கதை விட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, பெண்களைத் தனிமைப்படுத்தி தன் இச்சைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர். ஆணோ பெண்ணோ தனக்காக மட்டுமே வாழ முடியாது. மனிதர்கள் பிறரிடமிருந்து பெற்று கொண்டு, பெற்றுக் கொண்டதை பிறருக்கு வழங்கி வாழ வேண்டியவர்கள்.

திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கையில் சலிப்பு தட்டி விடக்கூடாது என்பதற்காகத்தான் காலத்தே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இல்லற இன்பத்தில் சலிப்புத் தட்டுமுன் குழந்தை உருவாக்கம் ஒரு நீண்ட இடைவெளியை தம்பதியினரிடையே உருவாக்கி விடும். தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த இல்லற இன்பம் வாரிசுக்காக தள்ளி வைக்கப்படும் போது, மனைவியின் மீதான ப்ரியம் கணவனுக்குக் குறைந்து விடாது. அவள் நல்ல முறையில் குழந்தை பெற்று வந்து மீண்டும் தனக்கு இல்லற இன்பத்தைத் தர வேண்டும் என்ற ஆவலில் கணவன் ஆசையாய் உழைத்துக் கொண்டிருப்பான். மனைவியைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, அவள் வேண்டுவன வாங்கிக் கொடுத்து அரவணைத்து வருவான். அந்தப் பாட்டியும் பெரியவரும் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் 13 குழந்தைகள் பெற முடிந்தது. இன்னும் அவர்களுக்கிடையேயான இல்லறம் இனிதே நடந்து கொண்டிருக்கிறது.

ஆணும் பெண்ணும் தனியாய் வாழலாம் என்று இயற்கை நினைக்கவில்லை. அதை சில செக்ஸ் வெறி பிடித்த மனித அரக்கர்கள் நினைக்கின்றார்கள். ஆகையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட இத்தகைய பெண்ணீயம் பேசும் வாதிகள், பத்திரிக்கைகளிடம் இருந்து தன் குடும்பத்தை மட்டுமல்லாது தன் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

5 comments:

Unknown said...

PeNNiyam pEsumiravarGal purinjuppaangaLaa?

Thangavel Manickam said...

பெண்ணியம் பேசுபவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது நாரதர் ! அவர்களுக்கு புரிய இது ஒன்றும் சூத்திரம் இல்லை. பெண்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தனிமையை தன் ஆசை நிறைவேற பயன்படுத்தும் காம வெறியர்களே அவர்கள். என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !

துரைடேனியல் said...

இதுதான் உண்மையான தாம்பத்ய ரகசியம். அந்த பெரியவரும் அந்த அம்மையாரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த தலைமுறை இவர்களிடம் பாடம் படிக்கவேண்டும் (அதற்காக 13 என்று அர்த்தமல்ல). பகிர்வுக்கு நன்றி. அருமையான பதிவு.

Thangavel Manickam said...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி !

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.