குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, April 26, 2010

மொழி

கனவுகளிடையே வழிந்தோடும்
எண்ணங்களின் நீட்சியாய்
இசையும் பேச்சுமற்ற
பெருவெளியில் நீயும் நானும்
ஏதும் பேசிக் கொள்ளாமலே
அமைதியாய் இருந்த போது
உன் அதரங்களில்
பாம்பு போல நெளிந்த
புன்னகை சொன்னது
மொழி என்பது
சத்தமல்ல என்பதை

*****

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.