குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, March 14, 2010

ராமேஷ்வரம்

எனது நெருங்கிய நண்பருடன் குடும்பத்தோடு ராமேஷ்வரம் சென்று வந்தேன். கோவையிலிருந்து ராமேஷ்வரம் சென்று வர கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் தூரம்.

மாலை நேரம் 6.10க்கு பாம்பன் பாலத்தில் காரை நிறுத்தி இறங்கினேன். கடற்காற்று பிசிபிசுப்புடன் உடலைத் தழுவ இறுக்கமான மன நிலையிலிருந்த மனசு சட்டென லேசாகியது.

சுற்றிலும் கடல். நடுவே வானவில்லைப் போன்ற பாலம். தனித்தீவாய்க் கிடந்தது ராமேஷ்வரம்.

குளு குளுவென காற்று உடலைத் தழுவ, மாலை நேரத்துச் சூரியன் தகதகவென ஜொலிக்க அந்தக் காட்சிகளைக் கண்ணுற்ற மனசு ஆரவாரித்தது. கடலுக்குள் எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைகள் சிறிது நேரத்தில் கடலுக்குள்ளேயே மரித்துப் போவதை பார்த்தேன். எல்லையற்ற பிரபஞ்சத்தில் தூசி அளவே இருக்கும் பூமியில் இரண்டடி அகலத்தில் இயற்கையின் கருணையின் காரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், அவர்களின் ஆசா பாசங்களையும், அதனால் உண்டாகும் பிரச்சினைகளையும், சக மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும், கோடி கோடியாய் பணக்கட்டுகளை பாதுகாப்பாய் வைக்க நினைத்து லாக்கர்களில் மறைத்து வைத்திருக்கும் மனிதர்களையும் நினைத்து சிரிப்புதான் வந்தது. கடலுக்குள் எழுந்து காணாமல் போகும் அலைகளைப் போலே சடுதியில் விதியென்னும் கயிற்றில் உயிரினை விட்டு அம்போவென போவும் மனிதர்களுக்குத் தான் எவ்வளவு ஆசைகள், கொலை வெறி.

தலையில் வெளிச்சப்பொட்டாய் விளக்கு ஒளிர அமைதியாய் சென்னை செல்லும் ரயில் வண்டியொன்று ரயில் பாலத்தில் ஊர்ந்து சென்றது.

ஹோட்டல் ஒன்றில் தஞ்சமடைந்தோம்.

18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த கோவில். கோவிலின் வரலாறு என்ன? ஏன் அங்கு செல்ல வேண்டும்? அதனால் என்ன பலன்? இப்படி இன்னும் பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம். படிப்பவருக்கு கொஞ்சமேனும் உதவிகரமாய் இருக்கும் இனி வரும் பதிவுகள்.


விரைவில் தொடரும்