குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, June 11, 2008

பாடப் புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம்

மத்திய அரசு சிலபஸ் சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்பில் நியூ லேர்னிங் டு கம்யூனிகேட் என்ற பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இருப்பதாக செய்தி படித்தேன். அதனால் உண்டான சர்ச்சைக்கு கேள்வி ஒன்றே ஒன்று தான். ஏன் ரஜினி பற்றி படிக்கக் கூடாது. ரஜினி ஒரு சாதனையாளர் தான். சினிமாவில் நடித்தவர்கள் தான் தமிழ் நாட்டினை ஆண்டிருக்கிறார்கள். ஆண்டும் வருகிறார்கள். அமெரிக்காவிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இதிலென்ன தவறு இருக்கிறது. ரஜினி ஒரு சரித்திர நாயகன் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது ?

Sunday, May 18, 2008

சினிமா சில கருத்துக்கள்

சினிமா சாக்கடை என்று பொதுவாக சொல்கிறோம். காரணம் கேட்டால் பெண்களைத் தான் கை காட்டுவோம். ஏனெனில் பெண்களை வீட்டுக்குள் வைத்து பொத்தி பொத்தி அவளை சொத்தாக்கி விட்ட சமூகத்தில் வளர்ந்து வந்ததால் அப்படித்தான் சொல்லுவோம்.

பெண்களை வீட்டுக்குள் வைத்து அவளை ஒரு சொத்தாக கருதி, முக்கியத்துவம் கொடுக்கும் நமது சமூகம், அந்தப் பெண் அவுத்துப் போட்டு ஆட வரும் போது ஏற்படும் மன அதிர்ச்சியில் கொழுப்பு பிடித்தவள், விபச்சாரி என்று எளிதாக சொல்கிறது.

விபச்சாரம் ! ஆண் இன்றி விபச்சாரம் இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்று. அதை விட்டு விடலாம். சில பெண்கள் இருக்கலாம். அவர்களை நிம்போமேனியாவாக கருதி விட்டு விடலாம்.

ஆணுக்கு தேவை பெண். கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட ஆணின் அந்தரங்க ஆசையினை நிறைவேற்ற வேண்டிய தருணத்தில் அங்கு பெண் தேவைப் படுகிறாள். அதற்கு அங்கு ஒரு பெண் விபச்சாரி ஆக்கப்படுகிறாள்.

சினிமாவில் பெண்கள் அவுத்து போட்டு ஆடுவதால் தான் தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. இல்லை எனில் தினமும் கற்பழிப்பு தான் நடக்கும்.

ஆணின் வக்கிரங்களுக்கு வடிகாலாய் பெண்ணின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியுமா ?

சினிமா கதாநாயகிகள் ஆண்களின் காமம் எனும் எரியும் நெருப்பில் எரிக்கப்படும் விறகுகள் ஆவார்கள். அவர்களின் சமூக சேவை எவராலும் செய்ய இயலாத மாபெரும் தியாகம் என்பேன். காரணமும் உண்டு. சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் ஆட்ரி ஹெர்பனைக் காதலித்த ஒருவரின் அனுபவமும் அதனால் அவரின் வாழ்க்கையில் நேர்ந்தவைகளையும் சுவையாக சொல்லி இருந்தார். ஒவ்வொரு மனிதனின் ரகசிய காதலியாக இருப்பவர்கள் நடிகைகள். அவர்கள் திரையில் வந்து சிரிக்கும் போதெல்லாம் அவளைக் காதலிக்கும் ஆணின் மனசுக்குள் ஏற்படும் உணர்வினை எழுத்தால் எழுதிவிட முடியாது. சிலரின் காம இச்சைகளை தீர்த்து வைப்பதும் நடிகைகளே.. இப்படி ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருக்கும் நடிகைகளை விபச்சாரி என்று சொல்லுவது எந்த வகையில் நியாயம் என்பது தான் எனக்கு புரியவில்லை.

பணம் கிடைக்கிறது. அதனால் தான் நடிக்கின்றார்கள் என்று விவாதம் செய்வது இங்கு பொருத்தமற்றது. ஏன் ஆண்கள் எவரும் விபச்சாரத்தை விட மிக மோசமான ஏமாற்று வித்தை, செப்படி வித்தைகள் ஏதும் செய்து பணம் சம்பாதிக்கவில்லையா ? ஏன் அரசியலை விட கொடுமையான தொழிலையா நடிகைகள் செய்து விட்டார்கள்.

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் புகழ், பெருமை அனைத்தும் பெண்களின் உடம்பின் மீது எழுப்பபடும் கோட்டை. இல்லை என்று எவராலும் மறுக்க முடியுமா ? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.. தற்போதைய ஹீரோக்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு என்று புகழ் பெற்று இருக்கும் நடிகர்கள், நடிகைகள் இன்றி படம் எடுப்பார்களா ? இல்லை அதில் தான் நடிப்பார்களா ? அப்படி எடுத்தால் எவனாவது சினிமாவுக்குத் தான் செல்வானா ?

விபச்சாரிகள் என்று சொல்லி நடிகைகளை அழைப்பதை விட்டு விட்டு அவர்களின் வாழ்க்கை எண்ணற்ற ஆண்களின் காம வடிகாலுக்காக அழிக்கப்படுகிறது என்ற உண்மையினை ஒரு கணமேனும் எண்ணிப் பார்த்தால் அது அவர்களுக்கு செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும்.

Saturday, April 26, 2008

எனக்குப் பிடித்த பாடல்கள் - 1

காந்தர்வ கன்னி ஒருத்தி இந்திரன் சபையிலே நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது அவளின் காதலன் அழைக்கின்றான். காதலன் நினைக்கும் போதெல்லாம் வருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தபடியால் காதலனின் அழைப்பை மறுக்கவும் முடியாமல் கடமையையும் மறுக்க இயலாமல் தனது தவிப்பை பாடலாக பாடுகின்றாள்.

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே.....

எழில்தரும் ஜோதி மறந்திடுவேனோ ?
இதமதில் நானே இருந்திடுவேனா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

காதலினாலே கானத்தினாலே
காதலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீயழைத்தாயே
சோதனையாகவே நீயழைத்தாயே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

அழைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே



படம் : மணாளனே மங்கையின் பாக்கியம்
தேமதுர குரலோசை : சுசீலா
பாடல் வரிகளில் காதலியின் தவிப்பை எழுதியவர் : ராமையா தாஸ்
காலத்தால் அழிக்கமுடியாத இசைவெள்ளத்தில் நீந்தவைத்தவர் : ஆதி நாரயண ராவ்

பாடல் என்றால் இது பாடல்.. புல்லாங்குழலில் ஒரு தொடக்கம் வரும் பாருங்கள். நம்மை வானில் மேயும் மேகங்களோடு பறக்கவைக்கும். பாடும் குரல், என்ன ஒரு இனிமை. தாலாட்டும், தாலாட்டும்..காதலிக்காதவருக்கும் காதலை வரவைக்கும். நமக்கும் இப்படி பட்ட ஒரு காதலி வேண்டுமென உள்ளத்தில் கையை விட்டு பிசையும். ஏங்கவைக்கும்.....

அந்த சுகானுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா ? உங்களது கணிப்பொறியில் மீடியா பிளேயர் அல்லது ரியல் பிளேயர் இருந்தால் சொடுக்குங்கள் கீழே. உள்ளத்தை உருக வைக்கும் ஒரு காதலி பாடுவாள்...