குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label எம்.எல்.ஏ. Show all posts
Showing posts with label எம்.எல்.ஏ. Show all posts

Friday, July 29, 2016

எம்.எல்.ஏ தொடர் (6) - பசி பட்டினி வீடில்லாதவர்கள் சரி செய்ய என்ன வழி?

சுதந்திரம் தன்னை யாரோ என்னவோ செய்து கொண்டிருப்பதாக மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். சுதந்திரம் எம்.எல்.ஏவிடம் அடிமையாக இருப்பதை அவர் இதுவரைக்கும் புரிந்து கொள்ளவில்ல. ஆனால் அவ்வப்போது அவரின் மனசாட்சி அவரை குத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் அவரால் எம்.எல்.ஏவை விட்டு சென்று விட முடியாது. அது தானே ஜனநாயகம்?

அனைவரும் இந்திய நாட்டில் அனைவரும் சமம், அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் ஜன நாயகம் என்று தெரிந்து கொள்வது மட்டும் தான் என்பது சுதந்திரத்திற்கு இன்னும் புரியவில்லை. ஜனநாயகம் என்றால் என்ன கேள்விக்குப் பதில் மட்டும் தான் தெரிய வேண்டும். உரிமை என நினைத்து விடக்கூடாது என்று எங்கோ படித்ததாக அவருக்கு அடிக்கடி நினைவு வந்து விடும். 

விடிகாலையில் நடைபயிற்சி செல்ல வேண்டும் என்று எம்.எல்.ஏ சொல்லி விட்டதால் அவருடன் சுதந்திரமும் நாய்க்குட்டி போல கூடச் சென்றார். வழியில் நடைபாதையில் ஆங்காங்கே மக்கள் அழுக்குப் போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சுதந்திரம் எம்.எல்.ஏவைப் பார்த்து “ஏண்ணா! இதையெல்லாம் சரி செய்யவே முடியாதா? வழியே இல்லையா?” என்றார்.

“யோவ், ரொம்ப யோசிக்காதே” என்று பொரிந்தவர், போனாப் போறான் இவனெல்லாம் யோசிச்சு என்னத்தைக் கிழிக்கப் போறான் என நினைத்துக் கொண்டு, ”யோவ் உனக்குப் புரியறா மாதிரி சொல்றேன் கேட்டுக்க! ஒருத்தன் பத்து ரூபாயை எடுத்துக்கிட்டு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனா ஓரளவு சாப்பிட்டு விடுவான். அதே பத்து ரூபாயை எடுத்துக்கிட்டு நாலு பேரு போனா சாப்பிட முடியுமாய்யா? நம்ம நாட்டுல மக்கள் தொகையும் பெருகுது வருமானமும் பெருகுது. ஆனா பெருகும் வருமானத்தில் முக்கால் வாசி காணாமப்போகுது. அந்தக் காணாமப் போவதைத் தடுத்தால் இந்தியாவில் இருப்பவன் ஒவ்வொருவரும் கோடீஸ்வரனாகத்தான்யா இருப்பான். ஆனா அந்தக் காணாமப்  போறது மட்டும் நிக்காதய்யா?  புரிஞ்சுதாய்யா?” என்றார் எம்.எல்.ஏ.

“ஒண்ணும் புரியலண்ணே!”

”உனக்குப் புரிஞ்சாலும் என்னய்யா செய்யப்போறே, பேசாம நட!” என்றார் எம்.எல்.ஏ.