குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, September 15, 2024

ஒடுக்கப்படும் மக்களின் குரல் - ஆணவத்தில் நிர்மலா சீதாராமன்

ஒன்றிய நிதி அமைச்சருடன், கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவையில் செப்டம்பர் 11, 2024ல் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவரும், கோவை ஓட்டல் உரிமையாளருமான சீனிவாசன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக, ”பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம் ஜாமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் பில் போடும் போது கம்ப்யூட்டரே திணறுகிறது. கிச்சனுக்கு வரும் இன்புட் அதிகாரிகளும் திணறுகிறார்கள். ஒரே மாதிரி ஜிஎஸ்டி வரியை  விதியுங்கள், வரியை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை” என கொங்கு தமிழில் பேசினார்.

நிர்மலா சீதாராமன் உடனடியாக, “இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்தார். அவர் விமர்சனமே வைக்கவில்லை. ஜி எஸ் டி வரிவிதிப்பில் இருக்கும் குழப்பங்களை எடுத்துச் சொன்னார். 

மறுநாள் அவரை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பான ஒரு வீடியோவை பாஜகவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டார்.

இணையத்தில் பரவிய இச்செய்தியினால் இணையதளவாசிகள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இணையதள உபயோகிப்பாளர்களிடையே மிகக் கடுமையான தொனியில் நிர்மலா சீதாராமனை பதவி விலக்க வேண்டுமெனவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

ஜி.எஸ்.டி வரி செலுத்துவது பொதுமக்கள். அன்னபூர்ணா ஹோட்டல் அல்ல. ஜி.எஸ்.டி வரியை விதிப்பது அரசு. அதனால் ஸ்ரீனிவாசன் ஒரே மாதிரியான வரியை விதியுங்கள் என்றார். அதற்காகத்தான் இந்தக் கூட்டமே கூட்டப்பட்டது. 

மக்களின் குரலை ஒரு தொழிலதிபர் எடுத்துச் சொன்னால் மன்னிப்புக் கேட்க வைப்பது, அது தொடர்பான வீடியோவை, வேண்டுமென்றே பிஜேபி கட்சியினர் வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, உலகளவில் நிதியமைச்சரை அசிங்கப்படுத்தியது எல்லாம் நடந்தது. இந்த நிகழ்வு அதிகார ஆணவத்துக்கு கிடைத்த அடி.

இந்தியாவின் நிதியமைச்சரிடம் கோரிக்கை வைக்க அத்தனை உரிமையும் ஸ்ரீனிவாசனுக்கு உண்டு. அதைக் கேட்கவும், அதற்கான பதிலைச் சொல்லவும், சரி செய்யவும் தான் நிதியமைச்சருக்கு சம்பளம் தருகிறார்கள்  குப்பனிலிருந்து திவாரி வரை தன் வரிப்பணத்தின் மூலமாக. பொறுப்பில் இருப்பவரிடம் கேள்வி கேட்காமல், நிர்மலா வீட்டு வேலைக்காரியிடமா கேள்வி கேட்க முடியும்?

இந்தியா ஒன்றும் நிர்மலா சீதாராமன் அவர்களின் குடும்பச் சொத்து அல்ல. கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள், கேள்வி கேட்டவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லியது ஆணவத்திலும் திமிரிலும் இருக்கும் ஒருவரால் தான் முடியும்.

நிர்மலா சீதாராமன் மக்களுடன் மக்களாக தேர்தலில் போட்டியிட்டு நிதியமைச்சர் ஆகவில்லை. அவருக்கு மக்களின் துன்பமும் துயரமும் தெரியாது. அவர் நிதியமைச்சராக இருப்பதற்கு ஒரே காரணம் பூநூல் தவிர வேறொன்றும் இல்லை என்று இந்தியர்களுக்கு தெரியும். இவரின் கணவரே இவரைப் பொதுவெளியில் கடுமையான முறையில் விமர்சிக்கிறார்.

வானதி சீனிவாசனுக்கு ஏதும் உள்குத்து இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. இந்தம்மாவே நிதியமைச்சராக இருக்கும் போது, நான் இருக்க கூடாதா என்ற ஆவல் கூட இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம். 

நிதியமைச்சரின் பதவி என்பது இந்தியர்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை - நல்லதாகவோ அல்லது எதுவாகவோ இருந்தாலும் - உண்டாக்கக் கூடியது. பொதுமக்களின் அன்றாட வரவு செலவுகளைப் பாதிக்கும் துறையில் அமைச்சராக இருக்கிறார். பொறுப்புணர்வு அதிகமாக இருக்க வேண்டிய பதவி.

இப்பதவிக்கு கண்ணியமும், பொறுமையும், அனுபவமும், பொதுமக்களுடன் தொடர்பும் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் தங்கள் செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மை செய்திடத்தான் வருகின்றனர். 

ஆனால் இந்த நிதியமைச்சர் செய்யும் செயலும், பொதுவெளியில் நடந்து கொள்ளும் போக்கும், பிறரிடம் பேசும் தன்மையும் முற்றிலும் ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது என பலச் செய்திகளை செய்திதாள்களிலும், இணையதளங்களிலும் காண நேரிடுகிறது.

பூமியை தாய் என்கிறோம். அந்த தாய்மைப் பண்பு, நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு மக்களின் மீது இருக்ககூடாதா?  மக்களின் வரிப்பணத்தில் தானே சுகபோகமாக வாழ்கிறார். பதவியில் உட்கார்ந்து கொண்டு, அதிகாரத்தின் அத்தனை சுகங்களை அனுபவித்து மகிழ்கிறார். 

ராம கதையில் வரும் சீதாவின் பொறுமையில் ஒரு துளி கூட இருக்க கூடாதா? தனக்கு  சம்பளம் தரும் ஸ்ரீனிவாசன் போன்ற மக்களின் கோரிக்கையை ஏற்காமல், கோரிக்கை விடுத்ததற்காக மன்னிப்பு கேள் என்று மிரட்டுவது என்ன விதமான பண்பு?

வரலாறு எத்தனையோ ஆணவத்தில் ஆடியவர்களையும், அகங்காரம் கொண்டலைந்தவர்களின் அழிவையும் பதிவு செய்து வைத்திருக்கிறது. காலம் எல்லாவற்றுக்குமான விடையைத் தரும்.

வானதி சீனிவாசனுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் காலம் தன் பதிலைச் சொல்லியே தீரும். அப்போது அகங்காரமும், ஆணவமும் கூட வந்து உதவி செய்யாது. சாமானியர்கள் தான் கூட நிற்பார்கள்.

மனிதாபிமானம் இல்லாதவர்கள் பதவியில் இருந்தால், மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும். அதைச் செய்யாமல் பல்லை இளித்துக் கொண்டு, பின்னால் நின்றால் அவமானம் தான் பரிசாக கிடைக்கும்.







கொசுறு செய்தி கீழே..!






0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.