குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, June 23, 2024

கடனில் சிக்கி உள்ளீர்களா? மீட்க என்ன செய்யலாம் - பொருளாதாரம்

2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் பல பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. பல மீடியம் சைஸ் நிறுவனங்களும், சிறிய நிறுவனங்களும் பல்வேறு காரணங்களால் கடனில் சிக்கி சிதைந்து வருகின்றன. மோடி அரசு கடனுக்காக மாதத் தொகை கட்டண நாட்களை 60 நாட்களாக குறைத்து விட்டது.

இதன் காரணமாக நல்ல முறையில் இயங்கி வந்து கொண்டிருந்த பல நிறுவனங்களை வங்கிகள் என்.பி.ஏ (NPA) கடனாளி என வரையறுத்து விடுகின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் பல திடீர் கடனில் சிக்கி தத்தளித்து வருகின்றன. 

இதற்கிடையில் நிறுவனங்களின் சொத்துக்கள் மீது கண் வைக்கும் ஒரு சில பேராசை பிடித்த வங்கி ஆட்களால் அந்த நிறுவனம் சூரையாடப்படுகிறது.

ஒரு வங்கியில் கடன் நிலுவையில் இருந்தால் பிற வங்கிகளில் உள்ள கடன்களும் சிக்கலுக்கு உள்ளாகின்றன. இந்தச் சூழலில் பலர் தங்கள் நிறுவனம் முடக்கப்பட்டு, அதன் சொத்துக்கள் ஏலத்தில் செல்வதை தடுக்க முடியாமல் வேதனையுடன் விரக்தியில் வாழ்கின்றனர். SARFASI  சட்டத்தினை பல புத்திசாலி கிரிமினல் வங்கி ஆட்கள் பயன்படுத்தி - ரியல் எஸ்டேட் ஆட்களுடன் கூட்டிணைந்து நிறுவனச் சொத்துக்களை விற்பனை செய்து, அதில் லாபம் ஈட்டி வருகின்றனர் எனப் பலர் சொல்வதைக் கேட்டு வருகிறோம்.

இதில் ஒரு சில நிறுவனங்கள் வங்கிக் கடன்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும், கடுமையான உழைப்பால் உயர்வடைந்த நிறுவனங்களில் உள்ளே நடக்கும் பல சதிச் செயல்களினால், பல நிறுவனங்கள் பல சிக்கல்களில் சிக்கி விடுகின்றன.

இவர்களுக்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பலரும் பல ஆலோசனைகளை வழங்கினாலும், தீர்வு கிடைத்தபாடில்லை. 

ஒரு நிறுவனத்தை நல்ல முறையில் நடத்திட பல வகையான நிர்வாக முறைகள் தேவைப்படுகின்றன. நிர்வாகம், நிதி, செயல்பாடுகள், விற்பனை, எதிர்கால திட்டமிடல், போட்டியாளர்களுடன் போட்டியிடுதல், விற்பனைப் பெருக்கம் என பல முறைகளை துல்லியமாகப் பயன்படுத்தினால் தான் நிறுவனத்தினை லாபகரமாக நடத்தி உயர்வடைய முடியும்.

ஆனால் பல நிறுவனங்களில் பல முறைகள் பல காரணிகளால், ரகசியமாக சிதைக்கப்பட்டு விடுவதை கண்டு வருகிறோம். அக்காரணிகள் எதுவென அறியும் திறனுள்ளவர்களுடன் தொடர்பில்லாத நிறுவனங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கும் ஏஜென்சிகள் உள்ளன என்று செய்திகள் படிக்க கிடைக்கிறது. 

நாங்கள் இது போன்ற சிக்கல்களுக்கு உட்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு மிகத் தெளிவான முறையில் கடனில் இருந்து மீண்டு, நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வழிகளை அளிக்கிறோம்.

எங்களது சேவைகளை கீழே பார்க்கவும்.

  • Growth Capital through Structured Lending (Private Credit, Invoice Financing, Revenue-based Financing, Lease Financing)
  • Distressed Assets & NCLT/IBC Handling
  • Sell-side advisory of firms with Assets & Future revenues
  • Bridge/Mezzanine Financing
கடனில் இருக்கிறோம் எனக் கவலைப்பட வேண்டாம். கவலையை விடுங்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு உண்டு என நம்புங்கள். நாங்கள் நிறுவனத்தின் கடன்களுக்கான சேவைகளை மட்டுமே தற்போது தருகிறோம்.  

எதிர்காலத்தில் தனி நபர்களின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வினையும் அளிக்கவிருக்கிறோம்.  

இதுபற்றிய மேலதிக தகவல்கள் தேவைப்படுபவர்கள் vsjinfra@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தங்களின் தேவை என்ன என்பது பற்றி எழுதவும்.  

சரியான துல்லியமான தீர்வினை எங்களால் தர இயலும் என உறுதியளிக்கிறேன்.

வளமுடன் வாழ்க...!

மோடி கா பரிவாரை நீக்குங்கள் - மோடி வேண்டுகோள்

இந்தியாவின் ஆன்மாவை தேர்தல் கமிஷன் கொன்று விட்டது என்று இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் கண்கூடாக காட்டியது. தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை ஒரு புதிய மசோதா (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) மூலம் நீக்கினார் மோடி. 

எதிர்கட்சித் தலைவர், பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய மந்திரி இவர்கள் மூவரும் தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கலாம் என விதியை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவே மாற்றினார். 

அப்போதே தெரிந்து விட்டது இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜன யகத்துக்கும், தேர்தல் கமிஷனர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் யுத்தம் என.

இந்த யுத்தத்தில் மக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிகாரத்தின் முன்னால் ஜனநாயகம் கொல்லப்படும் என்பது வரலாறு. ஆளும் கட்சிக்கு வசதியாக தேதிகள் அறிவித்தது கமிஷன். தேர்தல் சதித்திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பரப்புரைக்குச் சென்ற மோடி - மத வெறுப்புப் பேச்சுக்களைப் பேசினார். ஒரே ஒரு அறிக்கை மூலம் தேர்தல் கமிஷன் மெய் வாய் மூடிக் கொண்டது.

ஒருவர் பிஜேபிக்கு பல ஓட்டுக்களைப் போட்டதாக வீடியோ போட்டார். அவரைக் கைது செய்தார்கள். வீடியோ போடாத பலர்களின் ஓட்டுக்கள் பற்றி யாருக்குத் தெரியும். ஒரு எம்.பி வோட்டிங் மிஷினையே அடித்து நொறுக்கினார். முஸ்லீம்கள் ஓட்டுப் போட விடாமல் பெயர்களை நீக்கம் செய்தனர். அடித்து விரட்டப்பட்டனர்.

மார்ச் 16 முதல் மே 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிடிபட்டதைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கடந்த மக்களவைத் தேர்தலில் ரூ.392 கோடியாக இருந்தது. டெல்லியிலும் கர்நாடக மாநிலத்திலுமே அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிக்கத்தக்க ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சபதமெடுத்தவர்கள் வாய் மூடி நின்றனர். எல்லோரும் கள்ள மவுனம் காத்தனர்.

அரசு அமைப்புகள் மட்டுமின்றி காசுக்கு கூவும் மீடியாக்களும் பொய்களாகப் பேசிப் பேசி வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்டனர். எங்கும் பணம், எதிலும் பணம், பணம் இல்லை என்றால் அதிகார மிரட்டல், ஊழல்வாதிகளை மோடி வாஷிங்க் மெஷின் மூலம் துவைத்தல் ஆகியவை நடைபெற்றது.

உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்தது. 

ஒவ்வொரு நோடியும் லட்சக்கணக்கான போலிச் செய்திகளை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டனர். சோஷியல் மீடியா அதிபர்கள் எதைக் காட்ட வேண்டும், எதைக் காட்ட கூடாது என்பதில் கவனமாய் இருந்து கல்லாவை நிரப்பினர். 

ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை நேசிப்பவராக இருக்க வேண்டும் என்று வாய் கூசாமல் பேசுவார்கள். ஆனால் அரசியல் கட்சிக் குடிமகன்கள் அரசமைப்பையே கொன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்ததேர்தல் 2024 இந்தியாவின் ஜனநாயகம் கொல்லப்பட்ட நாள். மக்கள் தேர்தல் கமிஷனர்களிடம் தோற்றுப் போன நாள் ஜூன் 7,2024. 

நடத்திய நாடகம் வெற்றி பெற்றதற்காக மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இதோ !

மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதைச் சேர்த்துக்கொண்டனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.

இதுவும் சாதனைதான். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களின் பெயரிலிருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் பெயர் வேண்டுமானால் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே பரிவார் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இனி நாடகம் இனிதே தொடரும். 

வரிகள் உயரும், வரிப்பிடுங்கல் தொடரும், விலை வாசி உயரும், சட்டங்கள் திருத்தப்படும், உயர் சாதியினர் ஆட்டம் போடுவர், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படும், கீழ் சாதியினர் படிக்க முடியாது, படிக்க கடன் வாங்கவும் முடியாது, கல்வி படிக்க விடாமல் தடுக்கப்படுவர், இந்தியா மக்கள் கடனாளி ஆவர்.

எங்கெங்கும் உயிர்பலிகள் நடக்கும். இயற்கை மக்களைப் பலி வாங்கும். வேலை இருக்காது. வேலையும் கிடைக்காது. மோசடிகள் அதிகமாகும். இந்தியாவெங்கும் மக்கள் கடும் துயர்களை அனுபவிப்பர்.

இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் மக்கள் அற வழி நடக்க வேண்டும். அறத்தின் பாதையை தம் வாழ்க்கைப் பாதையாக கொள்ள வேண்டும். அறமற்றவர்களை அண்ட விடாமல் துரத்திட வேண்டும். எது அறம், எது உண்மை என கண்டறிய வேண்டும். இதெல்லாம் நடந்தால் இந்தியா மகிழும்.


மாணவர்களுக்கு மரணவலி தரும் மோடி

இந்தியர்கள் நோயில் சிக்கி சின்னாபின்னமாக போக வேண்டுமென்பதற்காக கொண்டு வரப்பட்ட சதித்திட்டத்தின் பெயர் நீட். நீட் மருத்துவக் கல்வியை கோடீஸ்வரர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் உரித்தாக்குகிறது. நீட் மூலம் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக் கனியாக்கி, ஏழைகளை பரம ஏழைகளாக, பஞ்சைப் பராரிகளாக வைத்திருக்க வேண்டுமென்பதில் எல்லையற்ற இன்பம் கொண்டிருக்கிறார்கள்.

ஏழைகள் இல்லாத இந்தியா உருவானால் உயர்ஜாதியினரைக் கேள்வி கேட்பார்கள் என்பதினால், நயவஞ்சகமாக கொண்டு வந்த நுழைவுத் தேர்வு தான் நீட். 

எந்த ஒரு ஏழையும் படிப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறி விடக்கூடாது. ஏழைகளுக்கு கல்வி எளிதாகக் கிடைத்தால் ஏழைகள் அற்றுப் போய் விடுவர் என்பதனால் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நயவஞ்சமாக திணித்து விட்டார்கள்.

பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மாணவர் நீட் தேர்வில் 720 முழு மதிப்பெண் பெற்றிருக்கிறான். எய்ம்ஸில் இலவசமாய் படிக்க காசைக் கொடுத்து 720 மார்க் வாங்கி விட்டால் படித்து விடலாம் என பேஜேபி ஆளும் மாநிலங்களில் நீட் வினாத்தாளை விற்பனைக்கு விட்டுள்ளனர். ஒரு சில நீட் தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளரே கேள்விகளுக்கான பதிலை டிக் அடிப்பதற்கு பணம் வாங்கி இருக்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றனர். நீட் தேர்வு அறைக்குள் தாலியைக் கூட பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்திருக்கிறார்கள் என்ற செய்திகளையும் படித்தோம்

மத்திய சென்னையின் எம்.பி. தயா நிதி மாறன் அவர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720 மார்க் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது போல இன்னும் என்னென்ன மோசடிகளை பாஜக ஆளும் மா நிலங்களில் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. வெளியில் தெரிந்தவை இந்த மோசடிகள். தெரியாத மோசடிகள் எத்தனையோ?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடே நடக்கவில்லை என்றார். பின்னர் ஒப்புக் கொண்டார். அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024 பிப்ரவரியில் நிறைவேற்றபட்டது. தற்போது கூடுதல் இணைப்பாக 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம் என்று இணைத்து சட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.  நீட் முறைகேட்டை ஒப்புக் கொண்டிருக்கிறது அரசாங்கம் என்பதற்கு சாட்சி இதுவே.

எவனோ ஒருவன் கசிந்த கேள்வித்தாள் மூலம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் - ரேங்க் பட்டியல் முறைகேடானது அல்லவா? ஆனால் உச்சநீதிமன்றம் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்திருக்கிறது. கண் முன்பு சாட்சி இருந்தும் குற்றத்தைப் பார்க்காமல் அரசின் கொள்கைக்கு சாதுர்யமாக ஒப்புதல் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தேசிய தேர்வாணையம் அக்கிரமமாக பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருக்கிறது. இதனை மட்டும் ரத்துச் செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மறுபடியும் அவர்களுக்குத் தேர்வாம். பின்னர் ரேங்க். இப்படி போகிறது நீட் தேர்வு முறைகேடு. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வளவு பெரிய விஷயத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு மூலம் மதிப்பெண் பெற்றவர்களை எங்கனம் கண்டுபிடிப்பார்கள் சிபிஐயினர்? அதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று தெரியாது. அதற்குள் மருத்துவக் கலந்தாய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது சரியல்ல என்று நீதிபதிக்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் நீதிமன்றம் வாய் மூடி மவுனமாக இருக்கிறது என்பது தான் வேதனை.

ஜார்கண்டில் ஐந்து பேரை நீட் முறைகேட்டுக்கென கைது செய்திருக்கிறார்கள். அதே போல ரவி அட்ரி கும்பல் உத்திரப் பிரதேசத்திலிருந்து ஜார்கண்ட் வழியாக பீகார் மாநிலத்திற்கும் கேள்வித்தாளை விற்பனை செய்திருக்கிறார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

பள்ளியில் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்றாலும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சிக்கான மதிப்பெண்ணாக இருப்பது மாணவர்களுக்கு இழைத்திருக்கும் கொடூரம். எத்தனை நுழைவுத் தேர்வுகளை எழுதுவது? நுழைவுத் தேர்வுக்கென எத்தனை ஆயிரங்களை கட்டணமாக கட்டுவது? தேசிய நுழைத்தேர்வு முகமை கோடிகளில் ஏழை மாணவர்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டிருக்கிறது. 

என்றைக்கு பிஜேபி அரசு பதவிக்கு வந்ததோ அன்றிலிருந்து சாமானியனுக்கு எளிதில் கிடைக்க வேண்டிய - ஒரு அரசு செய்ய வேண்டிய கட்டாயப் பணியைச் செய்யாமல் - எதிர்கால இந்தியாவின் சந்திதகளை - அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி அழிக்கும் திட்டத்தினை வெகு நாசூக்காக - பதவிக்காக கூக்குரலிடும் நயவஞ்சகப் பேராசை பிடித்த நரிகளின் உதவியினாலும் - காசுக்காக சட்டத்தை விற்கும் - குரைக்கும் பல எச்சைகளின் உதவியாலும் மாணவர்களுக்கு மரணவலியைக் கொடுக்கிறார்கள்.

கல்வி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய அரசாங்கம் மாணவர்களைப் படிக்க விடாமல் செய்யும் கொடுமையை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியாவில் மட்டுமே இப்பேர்பட்ட எமர்ஜென்சி போன்ற சட்டங்களைப் பார்க்கலாம். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அரசியல் தொடர்பானது. ஆனால் இதுவோ இந்தியர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எதிரான கல்வி எமர்ஜென்சி.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக நீட் மோசடிகள் தொடர்கின்றன. நயவஞ்சகர்களின் நரித்தனத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நரிகள் பல்வேறு வழிகளில் நுழைவுத் தேர்வுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள். 

இந்தியாவெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவ போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதைத்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆரம்பகாலத்திலிருந்து சொல்லி வந்தார், போராட்டம் செய்தார், சட்ட மசோதா நிறைவேற்றினார். ஆனால் ஆளுநர் ரவி - பாஜகவின் சேவகராக நம் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, பாஜகவின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அப்போதெல்லாம் வாய் மூடி கிடந்தவர்கள்,  ஒன்றிய அரசின் நரித்தனத்தை தற்போது உணர்ந்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

மாணவர்களின் கல்விக்குத் தடை போடும் அரசைக் கேள்வி கேளுங்கள். மணிப்பூரில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போதும், வாய் மூடி மவுனியாக இருப்பவர்களால், மக்கள் கேட்கும் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு 9000 கோடி விமானம் இருக்கிறது. செலவழிக்க மக்களின் வரிப்பணம் இருக்கிறது. கேள்விக்கு பதில் தர வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.

இ.வி.எம் இருக்கும் வரையில் - ஆட்சித் திருடர்களால் மக்களிடமிருந்து பறிக்கப்படும் மக்கள் உரிமைகள் இனி கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஆட்சிகளைப் பறித்தார்கள் பாஜகவினர். அதை ஆளு நர் அங்கீகரித்திருக்கிறார்கள். மக்கள் போட்ட ஓட்டு எங்கள் கால் தூசுக்குச் சமம் என பாஜகவினரும், ஆளுநர்களும் கொக்கரிக்கின்றார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எமர்ஜென்சியை ஏவி விட்டிருக்கின்றார்கள்.

மருத்துவக் கல்வியும், உயர் கல்வியும் ஏழைகளுக்கு கிடைக்கவே கிடைக்காது. எந்தப் போராட்டமும் ஆட்சித் திருடர்களை ஒன்றும் செய்யாது. அவர்கள் அறம் அற்றவர்கள். ஆட்சியும் அதிகாரமும் வேண்டுமென்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். நீதிமன்றத்திலும் நுழைந்து விட்டார்கள். இனி இந்தியர்கள் இன்னொரு 500 வருடம் அடிமைகளாக வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பது கொடுமை.

தற்போதைய செய்தி என்னவென்றால், சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்து பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஜூன் 23 காலை நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” ஒத்திவைப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. 

நீட்-யுஜி தேர்வு மற்றும் அது நடத்தும் பிற தேர்வுகளில் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விமர்சனத்திற்கு உள்ளான தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டடார். 

கேபினட் நியமனக் குழு, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலாவுக்கு, வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை, என்.டி.ஏ-வின் கூடுதல் பொறுப்பை அளித்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய DG திரு. சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் "கட்டாயக் காத்திருப்பில்" வைக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடு மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கடந்த ஒரு மாதமாக, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதித்த இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான NEET-UG-யில் முறைகேடுகள் தொடர்பான வரிசை தொடங்கி, ஏஜென்சி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.  ஒரு லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கு 23 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முறைகேட்டினை உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.

கூடுதல் செய்தி : அயோத்தியில் ராமர் கோவிலில் ராமரைப் பிரதிஸ்டை செய்த அர்ச்சகர் ஆச்சார்ய லட்சுமிகாந்த் தீட்சிதர் செத்துப் போய் விட்டார். அது மட்டுமல்ல 1800 கோடி ரூபாய் செலவழித்த ராமர் கோவில் கூரை ஒரே ஒரு மழையில் ஒழுகிக் கொண்டிருக்கிறது என அர்ச்சகர் கூறியிருக்கிறார்.





நன்றி : தீக்கதிர்

Monday, June 17, 2024

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் கண்ணீர் வரலாறு


தாமிரபரணியில் நடந்த கொலைகள் - மாஞ்சோலை தொழிலாளர்கள்

1927ஆம் ஆண்டில் முதன் முதலாக இப்பகுதிக்கு வந்தபோது காட்டு மாமரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், “மாஞ்சோலை” என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. அங்கிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டினை கடந்து சுமார் 16 கிலோ மீட்டர் மலையேறினால் மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம். 

மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பட்டியலின மக்களும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும் தொழிலாளர்களாக, முதலாளிகளின் தரகர்களால் இங்கு அழைத்துவரப்பட்டனர். 

குறைந்த ஊதியம், அதிக வேலை என இருந்த எஸ்டேட்டில் அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்கிறது மாஞ்சோலையின் தொழிலாளர்கள் வரலாறு.

1999ம் வருடம் சூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 கூலியாக வழங்க வேண்டுமென போராடினர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் 17 பேர்  கொலை செய்யப்பட்டனர். 

மாஞ்சோலை வரலாறு என்ன?

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா சிறுபிள்ளையாக இருக்கும் போது, அவரது தாயார் உமையம்மை ஆகிய இருவரும் உறவினர்களிடமிருந்து உயிர் தப்பிக்க மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் மறைந்து வாழ்ந்தனர். அங்கு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் வாழ்ந்த சிங்கம்பட்டியார் என்பவரைச் சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதன் பிறகு சிங்கம்பட்டியார் மார்த்தாண்ட வர்மாவுக்கு பல பயிற்சிகள் பயிற்று வித்து, அவர் வாலிப வயது அடைந்தவுடன் தன்னுடைய மகனுடன், படை ஆட்களை அனுப்பி, மார்த்தாண்ட வர்மனின் உறவினர்களை விரட்டி விட்டு, மீண்டும் திருவிதாங்கூர் அரியணை ஏற உதவி செய்தார். போரில் சிங்கப்பட்டியாரின் மகன் இறந்ததால் அதற்காக 18ம் நூற்றாண்ட்டில் 1706 மற்றும் 1758 ஆண்டுகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியையும், 5 கிராமங்களையும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உட்பட 8 கோவில்களையும், 5 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் தானமாக வழங்கினார் மார்த்தாண்ட வர்மா. இந்த நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்தனர்.

சிங்கம்பட்டி ஜமீன் இளவரசர் சிவசுப்ரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது கொலை வழக்கில் சிக்கினார். வழக்குச் செலவுகளுக்காக் 1929ம் ஆண்டில் சுமார் 8500 ஏக்கர் நிலத்தினை பி.பி.டி.சி நிறுனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கினார். 


பி.பி.டி.சி நிறுவனம் செய்த அபகரிப்பு செயல்கள் என்ன?

இந்த இடத்தினை பி.பி.டி.சி நிறுவனம் அபகரிக்கச் செய்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம். 

BBTC நிறுவனம் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட நிறுவனமாகும். குத்தகைக்கு நிலத்தை எடுத்த BBTC நிறுவனம் குறிப்பிட்ட வனப்பகுதிகளை செம்மைப்படுத்தி தேயிலையைப் பயிரிட்டது. குத்தகை காலம் 2028 வரை அமலில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை காலத்தில் BBTC நிறுவனம் மாஞ்சோலை நிலத்தில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறது. 

1952 ஆம் வருடம்  குத்தகைக்கு விடப்பட்ட டீ எஸ்டேட் உட்பட அனைத்து சிங்கம்பட்டி 22000 ஹெக்டேர் ஜமீன் காடுகளை  ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்தின் மூலம் அரசு தன் வசம் எடுத்தது. ஆனால், பிபிடிசி நிறுவனம் தனது 99 வருடக் குத்தகையைத் தொடரலாம் என அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசு அனுமதித்தது. 1977 ஆம் வருடம் அரசு மேற்கண்ட 22000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி காட்டை காப்புக் காடாக மாற்றத் தமிழ் நாடு வனச்சட்டம் மூலம் அறிவிக்கை செய்தது. ஆனால் பிபிடிசி நிறுவனம் தன்னுடைய குத்தகை நிலத்தைக் காப்புக்காடாக மாற்றக் கூடாது எனவும் தனக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என்றும் பல்வேறு வகையில் கடிதங்கள் மூலமும், நீதிமன்றம் மூலமும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்த வனப்பகுதியைக் காப்புக்காடாக மாற்ற முடியாமல் வன நிர்ணய அலுவலர், வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டார்கள். 

ரயத்வாரி பட்டா என்றால் என்ன?

ஜமீன்தார் யாருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்திருக்கிறாரோ அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது  அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் அந்த நிலங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டாவின் பெயர் ரயத்வாரி. 

இந்தப் பட்டாவை கேட்டுத்தான் வனத்துறைக்கு எதிராக BBTC நிறுவனம் வழக்குத் தொடுத்தது.  

2010 ஆம் வருடம் (6.1.2010) வன நிர்ணய அலுவலர் மேற்கண்ட 22000 எக்டர் (பிபிடிசி குத்தகை நிலம் உட்பட) காட்டைக் காப்புக்காடாக மாற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார். பிபிடிசி நிறுவனம் இந்த உத்தரவுக்குத் தடை ஆணை பெறாமல் கேவியட் மனுவை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது வனத்துறை. ஆகவே அப்போது பிபிடிசி நிறுவனத்தால் தடை ஆணை ஏதும் பெறமுடியவில்லை. ஆனால், வன நிர்ணய அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிபிடிசி நிறுவனம் 2010 இல் மாவட்ட நீதிமன்றம் , திருநெல்வேலியில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2015ம் வருடம் மாவட்ட நீதிமன்றம் பிபிடிசி நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து  உத்தரவு பிறப்பித்தது. பிபிடிசி நிறுவனம் மதுரை உயர் நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு செய்தது. 01.09.2017ம் தேதியன்று அந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவில்  'குத்தகை  ஒப்பந்த காலம் முடியும்வரை, நிலத்தை நிறுவனம் அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை மனுதாரருக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. மனுதாரர் தற்போது அனுபவித்துவரும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சாகுபடி செய்யலாம். அதைத் தவிர்த்து, பரப்பளவை விரிவாக்கம் செய்யக் கூடாது. குத்தகை ஒப்பந்த விதிகளை மீறினால், அதை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மேற்கண்ட இந்த நிகழ்வு நடைபெற 40 வருடங்கள் ஆகியுள்ளது.

சமீபத்தில் பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை எஸ்டேட்டை மூடுவதற்கு முடிவு செய்து, எஸ்டேட்டில் இருந்து மக்களை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். இந்த எஸ்டேட்டின் குத்தகை 2028ம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு வர உள்ளது. 

மாஞ்சோலை எஸ்டேட்டில் 1959ல் “மீண்ட சொர்க்கம்”, 1974ல் “மன்னவன் வந்தானடி”, 1990ல் “நிலா பெண்ணே”, 1991ல் “சார் ஐ லவ் யூ”, 1996ல் “பூமணி”, “சுந்தர புருஷன்”, 2008ல் “பேராண்மை”, 2009ல் “ஆனந்த தாண்டவம்” போன்ற  திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

இந்த எஸ்டேட்டில் பிபிடிசி கம்பெனியின் மாஞ்சோலை குருப் ஆபீஸ், தேயிலைத் தொழிற்சாலை,  பெரிய மருத்துவமனை, மருத்துவர் இல்லம், கம்பெனியின் கண்காணிப்பாளர் இல்லம், தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாணவர் விடுதி, காவல் நிலையம், வாக்கி டாக்கி நிலையம், தபால் நிலையம், சிறந்த சுவையான டீ ரஸ்க் தயாரிக்கும் எஸ்டேட் பேக்கரி, இந்து, கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் எனப் பலவும் மாஞ்சோலையில் அமைந்துள்ளன. 

எஸ்டேட் மூடப்பட்டு அப்பகுதிகள் காப்புக்காடாக மாற உள்ளது. இதனால் அங்கு பல தலைமுறைகளாக தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து வந்த மக்கள் கனத்த இதயத்துடன் தங்கள் குடியிருப்புகள், கோயில்கள், வாழ்வாதாரங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு எந்த உலகத்திலும் நிரந்தரமான இடமுமில்லை, அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் இல்லை. இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேட்பார் யாருமில்லை. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக கொல்லப்பட்டனர். வரலாறு முழுக்க தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக உள்ளது. அதிகாரத்துக்கும் பணத்திற்கும் பேராசைக்கும் இடையில் சாமானிய தொழிலாளர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருப்பது காலம் காலமாக தொடரும் அவலம். மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதன் இன்னொரு வரலாறு தான் மாஞ்சோலை எஸ்டேட்டும் அதன் தொழிலாளர்கள். உழைப்பவனுக்கு இந்த உலகில் வாழ இடமில்லை என்பதே உண்மை. 

* * *