குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, July 26, 2008

சமரசம் உலாவும் இடமே

அன்பு நண்பர்களே,

வாழ்க்கை ஒரு போராட்டம். வலிமை உள்ளவன் வசதியாய் வாழ்கிறான். மற்றவன் ஏங்கிச் சாகிறான். காசுதான் மனிதனின் அளக்கும் அளவுகோலாய் மாறிய இந்த உலகில் மதமும், மண்ணாங்கட்டியும் மிருகமாய் வாழ மனிதனைப் பணிக்கிறது. ஆடுகிறான். பாடுகிறான். அழிக்கிறான். அழிந்து போகிறான். ஆனால் இந்த இடத்தில் காசும் பகட்டும் பொன்னும் பொருளும் மதிப்பின்றி போய் விடும். நீங்களும், நானும் ஏன் பிரதமரும் கூட ஒன்று தான்..... பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

படம் : ரம்பையின் காதல்
வெளிவந்த வருடம் : 1956
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் : மருதகாசி
இசையமைத்தவர் : தெரியவில்லை



சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே


சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலேயே
இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே