குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, July 6, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 6 ( 06.07.2008)

ரித்தி,

அம்முவுக்கு காய்ச்சல் வந்து விட்டது தான் உனக்கு தெரியும். ஆனால் அந்தக் காய்ச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று உனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீ குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் என்ற நுண்ணிய நோய்க் கிருமிகள் இருப்பதும் ஒரு காரணம். பின்னர் சாப்பிடும் சாப்பாட்டிலும் இருக்கும். அதனால் அம்மாவிடம் சொல்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தரச் சொல்லி பின்னர் தான் தண்ணீர் குடிக்கனும்.

எதுக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கனும் என்று கேள்வி கேட்பாய் . காரணம் என்னவென்றால், தண்ணீர் கொதிக்கும் போது காய்ச்சலுக்கான நோய் கிருமியும், அதன் பின்னர் தொடர்ந்து கொதிக்க வைக்கும் போது மஞ்சள் காமாலை நோயினை உருவாக்கும் நோய்க் கிருமியும் செத்து விடும்.

வீட்டில் தயாராகும் உணவினைத் தவிர ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய ரெடிமேட் உணவுகளும், பரோட்டா போன்ற உணவுகளில் நோய் கிருமிகள் இருக்கும் என்று டாக்டர் சொன்னதாக அம்மா சொல்லியது உனக்கு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆதலால் வெளியிடங்களில் சாப்பிடுவதையும், மிட்டாய், சிப்ஸ், வடை போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடு.

மேலும் சாப்பாட்டினை எப்போதும் சூடாகவே சாப்பிட்டு பழகிகொள். அம்மாவிடம் சொல்லி சூடு செய்து தரச்சொல்லி சாப்பிடு.

மனிதனுக்கு சொத்து என்பது அவனது உடல் நலம் தான். உடலை நன்கு பேணி வரவேண்டும். நோயில்லா வாழ்வே சிறந்தது.


அன்பு அப்பா...................