குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஆட்சி திருட்டு. Show all posts
Showing posts with label ஆட்சி திருட்டு. Show all posts

Sunday, June 23, 2024

மோடி கா பரிவாரை நீக்குங்கள் - மோடி வேண்டுகோள்

இந்தியாவின் ஆன்மாவை தேர்தல் கமிஷன் கொன்று விட்டது என்று இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் கண்கூடாக காட்டியது. தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை ஒரு புதிய மசோதா (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) மூலம் நீக்கினார் மோடி. 

எதிர்கட்சித் தலைவர், பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய மந்திரி இவர்கள் மூவரும் தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கலாம் என விதியை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவே மாற்றினார். 

அப்போதே தெரிந்து விட்டது இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜன யகத்துக்கும், தேர்தல் கமிஷனர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் யுத்தம் என.

இந்த யுத்தத்தில் மக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிகாரத்தின் முன்னால் ஜனநாயகம் கொல்லப்படும் என்பது வரலாறு. ஆளும் கட்சிக்கு வசதியாக தேதிகள் அறிவித்தது கமிஷன். தேர்தல் சதித்திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பரப்புரைக்குச் சென்ற மோடி - மத வெறுப்புப் பேச்சுக்களைப் பேசினார். ஒரே ஒரு அறிக்கை மூலம் தேர்தல் கமிஷன் மெய் வாய் மூடிக் கொண்டது.

ஒருவர் பிஜேபிக்கு பல ஓட்டுக்களைப் போட்டதாக வீடியோ போட்டார். அவரைக் கைது செய்தார்கள். வீடியோ போடாத பலர்களின் ஓட்டுக்கள் பற்றி யாருக்குத் தெரியும். ஒரு எம்.பி வோட்டிங் மிஷினையே அடித்து நொறுக்கினார். முஸ்லீம்கள் ஓட்டுப் போட விடாமல் பெயர்களை நீக்கம் செய்தனர். அடித்து விரட்டப்பட்டனர்.

மார்ச் 16 முதல் மே 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிடிபட்டதைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கடந்த மக்களவைத் தேர்தலில் ரூ.392 கோடியாக இருந்தது. டெல்லியிலும் கர்நாடக மாநிலத்திலுமே அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிக்கத்தக்க ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சபதமெடுத்தவர்கள் வாய் மூடி நின்றனர். எல்லோரும் கள்ள மவுனம் காத்தனர்.

அரசு அமைப்புகள் மட்டுமின்றி காசுக்கு கூவும் மீடியாக்களும் பொய்களாகப் பேசிப் பேசி வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்டனர். எங்கும் பணம், எதிலும் பணம், பணம் இல்லை என்றால் அதிகார மிரட்டல், ஊழல்வாதிகளை மோடி வாஷிங்க் மெஷின் மூலம் துவைத்தல் ஆகியவை நடைபெற்றது.

உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்தது. 

ஒவ்வொரு நோடியும் லட்சக்கணக்கான போலிச் செய்திகளை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டனர். சோஷியல் மீடியா அதிபர்கள் எதைக் காட்ட வேண்டும், எதைக் காட்ட கூடாது என்பதில் கவனமாய் இருந்து கல்லாவை நிரப்பினர். 

ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை நேசிப்பவராக இருக்க வேண்டும் என்று வாய் கூசாமல் பேசுவார்கள். ஆனால் அரசியல் கட்சிக் குடிமகன்கள் அரசமைப்பையே கொன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்ததேர்தல் 2024 இந்தியாவின் ஜனநாயகம் கொல்லப்பட்ட நாள். மக்கள் தேர்தல் கமிஷனர்களிடம் தோற்றுப் போன நாள் ஜூன் 7,2024. 

நடத்திய நாடகம் வெற்றி பெற்றதற்காக மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இதோ !

மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதைச் சேர்த்துக்கொண்டனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.

இதுவும் சாதனைதான். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களின் பெயரிலிருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் பெயர் வேண்டுமானால் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே பரிவார் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இனி நாடகம் இனிதே தொடரும். 

வரிகள் உயரும், வரிப்பிடுங்கல் தொடரும், விலை வாசி உயரும், சட்டங்கள் திருத்தப்படும், உயர் சாதியினர் ஆட்டம் போடுவர், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படும், கீழ் சாதியினர் படிக்க முடியாது, படிக்க கடன் வாங்கவும் முடியாது, கல்வி படிக்க விடாமல் தடுக்கப்படுவர், இந்தியா மக்கள் கடனாளி ஆவர்.

எங்கெங்கும் உயிர்பலிகள் நடக்கும். இயற்கை மக்களைப் பலி வாங்கும். வேலை இருக்காது. வேலையும் கிடைக்காது. மோசடிகள் அதிகமாகும். இந்தியாவெங்கும் மக்கள் கடும் துயர்களை அனுபவிப்பர்.

இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் மக்கள் அற வழி நடக்க வேண்டும். அறத்தின் பாதையை தம் வாழ்க்கைப் பாதையாக கொள்ள வேண்டும். அறமற்றவர்களை அண்ட விடாமல் துரத்திட வேண்டும். எது அறம், எது உண்மை என கண்டறிய வேண்டும். இதெல்லாம் நடந்தால் இந்தியா மகிழும்.