குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 24, 2023

சூரைக்காற்றாய் டி.ராஜேந்தர் எனும் அஷ்டாவதானி

தன்னம்பிக்கையின் முகவரி, சினிமா உலகில் புடம் போட்ட தூய தங்கம், உண்மை பேசும் உற்சாகவாதி என பல தளங்களில் தடம் பதித்த பெருமை மிகு தமிழர் டி.ராஜேந்தர் அவர்கள்.

சுய ஒழுங்கும், சுய கட்டுப்பாடும் மிக்க மிகச் சிறந்த மனிதர். கை நீட்டி அவரை எவராலும் குற்றம் சுமத்தி விட முடியாது. சினிமா எனும் சகலலோப சல்லாபச் சந்தையின் விளைந்த தூய முத்துப் போன்ற தூய்மையான மனிதர்.

அவரின் படங்களும், பாடல்களும் இன்றைக்கும் அழிக்கவியலா காவியங்களாய் மிளிருபவை. காலத்துக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்தும் அப்டேட் ஆண்ட்ராய்டு வெர்சன் போல டி.ஆர் தன்னை வெளிப்படுத்திய தருணம் 2023 ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாய் தவமிருந்த காற்று கடந்த ஜனவரி 20ம் தேதியன்று சூரைக்காற்றாய் இசை உலகை சுழன்று அடித்தது. மீண்டும் இந்தியா முழுவதும் தன் படைப்பால் கவனம் பெற்ற அஷ்டாவதானி என நிருப்பித்திருக்கிறார்

முருகப் பெருமானின் அருளாலே, மீண்டும் டி.ஆர் இந்தியாவைத் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியை நானறிவேன். 

என்னுடன் பேசும் போது, சட்டென்று முருகன் மீது பாட்டெடுத்து, பாட ஆரம்பிப்பார். கேட்கும் எனக்கோ நெக்குருகி விடும் மனது.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியின் பாவம் பாடலாக பரவி, கேட்போர் மனதை உலுக்கிக, உருக்கி விடும். இசை உலகின் மறைபொருளாய் இருந்தார். அவரின் குரலுக்கு தமிழ் நாடே ஆடியதை நாமெல்லாம் கண்டோம். இசை மேடையெங்கும் ஒலித்தது அவரின் பாடல்கள். கேட்போர் நரம்புகளைச் சுண்டி இழுத்தன அவைகள்.

அவற்றை எல்லாம் வென்று சரித்திரம் படைத்தது அவரின் வந்தே வந்தே மாதரம். இந்திய தாய்க்கு அவர் செலுத்திய வணக்கம் இது.

“வந்தே வந்தே மாதரம்” பாட்டு கேட்கையில் அது சுனாமி போல மனதுக்குள் சுழலும். 

பாட்டைக் கேட்க கேட்க உங்கள் மனதுக்குள்ளும் அது நிகழும்.

இனிய நண்பர் டி.ஆர் அவர்கள், விரைவில் சினிமாவில் புதுக்களத்தில் புதிய தொரு கோணத்தில் தன் படைப்பினை ரசிகர்களுக்கு விருந்து வைக்கப் போகிறார் என்ற செய்தியை அவர் பேட்டியில் கண்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி உண்டானது.

அவர் நலமுடனும் வளமுடனும் வாழ எம் குருவிடம் பிரார்த்திக்கிறேன்.


வந்தே வந்தே மாதரம் - தமிழ்


வந்தே வந்தே மாதரம் - இந்தி


பேட்டிகள்





Thursday, January 19, 2023

விதி எப்படி வேலை செய்யும் தெரியுமா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சைகள் மனிதர்கள் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றி இப்போது பார்க்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கதை தான். யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து விவரித்த கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் விதி அல்லது தர்மம் அதன் பலன்கள் பற்றிய சம்பவங்கள் பலதும் என்னை வசீகரிப்படுத்திக் கொண்டிருப்பவை. அப்படி என்னை வசீகரித்த ஒரு சில சம்பவங்கள் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ராமர் கோவில் கட்ட ரதயாத்திரை தொடங்கிய அத்வானிக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. ஏன்?  ராமர் கைவிட்டு விட்டாரா? 

முஸ்லிம்களின் மசூதியை இடித்ததற்கு காரணமாய் இருந்தவர் அத்வானி. கொடுமை என்னவென்றால் அத்வானியின் உறவினர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். 

ஆகமம், நியமம் என்று மூச்சுக்கு மூச்சு இந்து, பார்ப்பனியம் பேசும் சுப்ரமணிய சாமியின் மகளின் கணவர் பெயர் நசீம் ஹைதர். இது தான் தர்மத்தின் பலன்.

2011ல் காங்கிரசைத் தோற்கடிக்க, பாஜகவின் மறைமுக  பகடையாகப் பயன்பட்டவர் அண்ணா ஹசாரே. விதி என்னவென்றால் டெல்லியில் எந்தக் கட்சித் தொடர்பு இல்லாத அரவிந்த் கேஜரிவால் முதலமைச்சர். பஞ்சாபிலும் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

ஆளுநரை வைத்துக் கொண்டு இரண்டு மா நிலங்களிலும், அரசியல் சட்டத்துக்குப் புறம்பான வேலை செய்ய தூண்டிக் கொண்டிருக்கிறது பிஜேபியும் மோடி அரசும். பிரதமர் மோடியின் கண்ணுக்குள் கத்தியை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதே ஆயுதத்தால் பலன். 

செய்யும் செயலுக்கு ஒப்பான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்று அரசியலில் மட்டுமல்ல பிசினஸிலும் உண்டு. அதை பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்.

இதை விட மற்றொரு ஆகச் சிறந்த உதாரணம் என்ன தெரியுமா?

ஐ.டி ஊழியர்களின் அலப்பறை. இவர்களால் நிலத்தின் விலை உயர்ந்தது. வீட்டு வாடகை உயர்ந்தது. நான் சம்பாதிக்கிறேன், எனக்கு தேவைப்படுகிறது, வாடகை அதிகம் கொடுக்கிறேன். உனக்கு எதுக்கு எரியுது? என்று கேட்டார்கள். ஏழைகள் இவர்களின் அட்டகாசத்தால், திமிறினால் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் வாடகைக்குச் செலவழிக்க நேரிட்டது. இன்னும் குறைந்த பாடில்லை.

நான் சம்பாதிக்கிறேன், நிலம் வாங்கிப் போடுகிறேன். எனக்குத் தேவை, அதிக விலை கொடுக்கிறேன் என்று எகத்தாளம் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய சைட்டுகளை வாங்க ஆளில்லை இப்போது.

நான் சம்பாதிக்கிறேன், தென்னை தோப்பு வாங்குகிறேன். எனக்குத் தேவை, ஆகையால் அதிக விலை கொடுக்கிறேன், உங்களுக்கு என்ன? என்று லொள்ளுப் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய தென்னைத் தோப்புகளை விற்கவும் முடியாமல், மெயிண்டெனன்ஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் யாரோ ஒருவருக்கு மாதம் தோறும் தண்டம் அழுதுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

கொரானா வந்தது. ஐ.டி ஊழியர்களின் வாயில் வெள்ளத்தை ஊற்றி நிரப்பியது. வீடுகள் ஏலம், கார்கள் ஏலம், கடனாளி, லே ஆஃப், அரைச் சம்பளம், ஆட்குறைப்புகள் என ஐ.டி செக்டார் ஊழியர்களின் நிலை ஆப்பசைத்த குரங்கானது. மாட்டிக் கொண்டார்கள்.

இன்னும் இருக்கிறது சம்பவங்கள்.

விரைவில் பார்க்கலாம்.

Wednesday, January 18, 2023

தனியார் டிரஸ்டுகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் வராது

செய்தியை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். தனியார் டிரஸ்டுகளின் வருமான வரி, செலவு, வரி விலக்கு விபரங்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. 

Income Tax Act 1961 - Section 138 Amendment

Amendment of section 138.

28. In section 138 of the Income-tax Act, for sub-section (1), the following sub-section shall be substituted, namely:—

"(1) (a) The Board or any other Income-tax authority specified by it by a general or special order in this behalf may furnish or cause to be furnished to—

(i) any officer, authority or body performing any functions under any law relating to the imposition of any tax, duty or cess, or to dealings in foreign exchange as defined in section 2 (d) of the Foreign Exchange Regulation Act, 1947 (7 of 1947.); or

(ii) such officer, authority or body performing functions under any other law as the Central Government may, if in its opinion it is necessary so to do in the public interest, specify by notification in the Official Gazette in this behalf, any such information relating to any assessee in respect of any assessment made under this Act or the Indian Income-tax Act 1922 (11 of 1922) as may. in the opinion of the Board or other Income-tax authority, be necessary for the purpose of enabling the officer, authority or body to perform his or its functions under that law.

(b) Where a person makes an application to the Commissioner in the prescribed form for any information relating to any assessee in respect of any assessment made under this Act or the Indian Income-tax Act. 1922 (11 of 1922). on or after the 1st day of April, 1960, the Commissioner may, if he is satisfied that it is in the public interest so to do, furnish or cause to be furnished the information asked for in respect of that assessment only and his decision in this behalf shall be final and shall not be called in question in any court of law.".

[Finance (No. 2) Act, 1967]

செய்தி கீழே!


இந்தச் செய்திக்கும் கீழே இருக்கும் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 நன்றி : தினமணி

வக்கீல் நீதிபதி நீதிமன்றம் என்பவை என்ன?

அன்பு நண்பர்களே!

ஜனநாயகத்தின் வேர்களில் ஒன்றான நீதிமன்றம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் சாட்சியத்துடன்.

நீதிமன்றங்கள் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நீதி வழங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்காதீர்கள். விலகிச் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களால் பலர் முன்னேற்றமடைந்தார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து படிக்காதீர்கள், விலகிக் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை புத்தகங்கள் எப்போதும் வெற்றியைத் தந்து விடாது நண்பர்களே.  புத்தகம் எழுதியவருக்கு வருமானம் மட்டுமே தரும். படிப்பவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும். தன்னம்பிக்கையை விட இன்னொரு விஷயம், வெற்றி அடைய மிகவும் முக்கியமானது.

PERSEVERENCE

இதைப் பற்றி ஏதாவதொரு சூழலில் எழுதுகிறேன். வெற்றி என்பது பணத்தில் உள்ளது என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு PERSEVERANCE முக்கியம்.

அறத்தின் வழி நின்று உண்மை என்னவென்று எழுதும் போது, உண்மைகள் வெளியாகும். அது அதிர்ச்சியை உங்களுக்குத் தரும். 

மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இப்பதிவு சினிமா மார்க்கெட்டிங்க் இல்லை. 

உண்மை. 

அந்தப் படத்தின் பெயர்,”முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ்”.

இது ஹாட்ஸ் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் அவசியம் பாருங்கள். நீதிதுறையில் இது ஒரு சிறு துளி. படத்தை அவசியம் பாருங்கள். அதிர்வீர்கள் என்பது உண்மையிலும் உண்மை.

வக்கீல்களுக்கு ஆக்சிடெண்ட் வழக்குகளில் கொட்டும் பணமழை பற்றிய மிகத் தெளிவான விரிவுரை முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ். 

இரத்தத்தின் பணம். 



தொழில் தர்மம் என்பார்கள் வக்கீல்கள். நீதிபதிகளோ வாய் திறக்க மாட்டார்கள்.  நீதிமன்றங்களோ வழக்கம் போல சாட்சியாய் இருக்கும். அரசோ எனக்கென்ன என்பது போல இருக்கும். மக்களோ நெருப்பில் நெளியும் புழுக்கள் போல கிடப்பார்கள்.

அறம் - தர்மம் - நீதி இவைகளில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பின், நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமெனில் நீதித்துறையில் கால்பதியுங்கள். பெரிய அகலமான பைப்பில் கொட்டும் நீரைப் போல உங்களின் கல்லாவுக்குள் அருவியென பணமழை கொட்டும் என்பதை  என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல துறைகள் இருக்கின்றன. தேவை கொஞ்சம் புத்திசாலித்தனமும், எப்படி என்கிற வழிமுறையும் தான்.

இந்தப் படத்தை பார்த்து முடிக்கும் போது, வக்கீல் - நீதிபதி - நீதிமன்றம் என்பவை என்ன என உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன். 

மறந்து விடாதீர்கள். முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்.

Monday, January 16, 2023

நிலம் (106) - 3.25 லட்சம் நிலங்கள் தவறான பதிவு

இரண்டு மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். நேரில் சந்தித்தேன். 1.75 ஏக்கர் நிலம் கிரையம் வாங்கி இருப்பது செல்லாது என்று வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது.

பிரச்சினை என்னவென்றால், கோசணம் கிராமம் 1973ம் ஆண்டில் நிர்வாக வசதிக்காக கோசனம் அ மற்றும் கோசனம் ஆ என இரண்டு ரெவின்யூ கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய சர்வே எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வே எண்கள் குழப்பத்தில் உண்டான வழக்கு இது. இந்தச் சொத்தின் உரிமையைச் சட்டப்படி உரித்தாக்க இனி பல வேலைகள் செய்ய வேண்டி இருக்கும். இந்த வழக்கில் தாசில்தார் வழங்கிய உரிமைச்சான்று போலி என தற்போது டி.ஆர்.ஓ ஆர்டர் போட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு வழங்கிய உரிமைச் சான்றின் நிலை? என்னவோ? அதனை வழங்கிய தாசில்தார், ஆர்.இ, வி.ஏ.ஓ மீது என்ன நடவடிக்கை எடுக்கும் அரசு? 

இதெல்லாம் நடக்ககூடிய காரியமா? நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து ரெவின்யூ அதிகாரிகள் எவரும் ஆவணங்களைப் படித்துப் பார்ப்பதே இல்லை. அது வி.ஏ.ஓவாக இருந்தாலும் சரி, தாசில்தாராக இருந்தாலும் சரி. என் அனுபவத்தில் கண்ட விஷயம்.

லீகல் ஒப்பீனியன் பார்க்கும் போது நான்கு, ஐந்து தடவையாவது ஆவணங்களைப் படிப்பதுண்டு. கண்களைக் கட்டும் போலி மாய வித்தைகளால்  ஏமாந்து விடக்கூடாது அல்லவா?

எங்கே ஆதாரம் என்பீர்கள்? இதோ ஆதாரம் கீழே. கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பல தனியார் நிலங்கள் கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு நிலத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறேன். 




Friday, January 13, 2023

நிலம் (105) - நீதிமன்ற தடை உத்தரவின் கால வரையறை என்ன?

சமீபத்தில் நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தடையால் நீண்டகாலம் கிடப்பில் கிடப்பதாகவும், இதன் காரணமாக பெரிய நஷ்டத்தையும், துன்பத்தையும் அடைவதாகச் சொல்லி வருந்தினார்.

வக்கீல் என்ன சொல்கிறார்? என்று கேட்ட போது, தடையை நீக்க மனு போட்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று புலம்பினார். வக்கீல் ஃபீஸ் வேறு. வருமானமே முடங்கிப் போய் கிடக்கிறது. என்ன செய்வது என்றுப் புரியவில்லை எனப் புலம்பினார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். நீதிமன்றத் தடை ஆணைகளுக்கு கால வரம்பு இருப்பதாக படித்த நினைவு வந்தது. அனைவருக்கும் உபயோகப்படுமே என்பதால் இந்த வழக்கு பற்றிய விபரங்கள் கீழே. நீதிமன்றத் தடை உத்தரவு ஆறு மாத காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவனமாகப் படித்து, நீதிமன்ற தடையாணையால் சிக்கலுக்கு உள்ளாகி இருப்போர் பயன்படுத்திக் கொள்ளவும்.

டெல்லி முனிசிபாலிட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான (கிரிமினல்  அப்பீல் வழக்கு எண் CRIMINAL APPEAL 1375-1376/2013) வழக்கு இது. வழக்கு விபரம் தேவையில்லை. தேவை ஏற்பட்டால் ஒழிய தொடர்புடைய நீதிமன்றங்களின் ஆணைகளின் அடிப்படையில் தடை ஆணைக்கான காலத்தை நீட்டிப்புச் செய்யலாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பு மொத்தம் 72 பக்கங்கள். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு இது. கவனமாகப் படித்துக் கொள்ளவும். 

கீழே இருக்கும் படங்களைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அடியேனின் உதவியால் நண்பரின் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்ட உதவி, வழக்கின் போக்கு, வழக்குகள் போடும் முன்பு ஆலோசனை போன்றவைகள் தேவைப்படின் என்னை அழைக்கவும். வி.எஸ்.ஜே சட்ட ஆலோசனைக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் ஆகும். ஃபைனான்ஸ் தொடர்பான ஆலோசனைகளும், கடன்கள், கடன் உதவி, கடனை மீட்டு மீள் கடன் ஆகியவைகளைச் செய்து வருகிறது. 

இந்த வழக்கின் தீர்ப்பினைப் பெற இதைக் கிளிக் செய்யவும்.

JUDGEMENT OF CRIMINAL APPEAL NOS : 1375-1376 OF 2013 - SUPREME COURT






Friday, December 23, 2022

100 ரூ கடன் கடனாளி பிரச்சினை 100000 கடன் வங்கிப் பிரச்சினை - வங்கி ஊழல்கள்

நீங்கள் வங்கிக்கு $100 கடன்பட்டால் அது உங்கள் பிரச்சனை, நீங்கள் வங்கிக்கு $100 மில்லியன் கடன்பட்டிருந்தால், அது வங்கியின் பிரச்சனை என்கிற பழமொழி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஒரு லட்ச ரூபாய் வங்கிக் கடனைக் கட்டாதவன் நிலை என்னவென்று நினைத்துப் பாருங்கள். இதே போல 10000 கோடி கடன் வாங்கியன் எவ்வளவு சொகுசாய் இருக்கிறான் என்பதையும் கவனியுங்கள்.

சில்லறைக் கடன் வாங்குபவர்கள் கார் அல்லது வாகனக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற வங்கிகள் கடனாளியின் கதவைத் தட்டும். மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்தி கடனை வசூலிக்க அவமானப்படுத்தும் தந்திரங்களைக் கூடச் செய்கிறார்கள். வங்கிகளின் இந்த செயல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலை செய்கின்றன மற்றும் கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்துகிறார். கடன் வாங்கினால் கட்டு, இல்லையெனில் இப்படித்தான் செய்வோம் என்று மிரட்டுவார்கள்.

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் என வரும்போது இது முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாகும். சக்தி வாய்ந்த கடன் பெற்றவர்களிடம் மேலே சொன்ன வழிகளை வங்கிகள் கையாளுவதில்லை. இந்தக் கடனாளிகளைக் காப்பாற்ற கோர்ட், கோர்ட் என வழக்குகள் போடும் வக்கீல்கள் திருட்டு வேலை செய்கிறார்கள். இவர்களிடம் வங்கிகள் அடங்கிப் போய், இறுதியில் பல ஆண்டுகால கடனுக்காக சிறிய அளவில் கடனை மீட்கின்றன. கோவையில் 420 கோடி கடன் கொடுத்த கனரா வங்கி, சுமார் 52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ஐந்து கோடிக்கு ஏலம் விட்டது. கனரா வங்கி ஏன் 51 கோடி ரூபாய் சொத்துக்களை ஐந்து கோடிக்கு ஏலம் விட்டது? யாருக்கேனும் தெரியுமா? ஊழல் ஊழல் ஊழல்.

கடன் வாங்கி விட்டு, திருப்பிக் கட்டாமல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியான மெஹுல் சோக்சியால் விளம்பரப்படுத்தப்பட்ட கீதாஞ்சலி ஜெம்ஸ் ரூ.7,848 கோடியுடன் முதலிடத்திலும், ரூ.5,879 கோடி அம்பலப்படுத்திய எரா இன்ஃப்ரா இரண்டாவது இடத்திலும், ரூ.4,803 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தாத ரெய் அக்ரோ நிறுவனமும் உள்ளன.

இப்போது ஆன்டிகுவான் குடிமகனாகக் கூறப்படும் சோக்ஸி, இந்தியச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். அரசாங்கமும் அதன் பல சட்ட அமலாக்க அமைப்புகளும் இதுவரை, வங்கியில் கடன் செலுத்தாத முன்னாள் மதுபான வியாபாரி விஜய் மல்லையா, வின்சம் டயமண்ட்ஸ் & ஜூவல்லரி விளம்பரதாரர் ஜதின் மேத்தா மற்றும் சோக்சியின் மருமகன் நீரவ் மோடி உட்பட பலர் மீது பாராமுகவே இருக்கின்றன. 

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த ரூ.10 லட்சம் கோடி கடனில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானது.

மொத்தக் கடன் தள்ளுபடியில், வங்கிகளால் திரும்பப் பெற முடிந்தது - சுமார் ஒரு லட்சம் கோடி. மீதமுள்ள ரூ.9 லட்சம் கோடி போனது போலவே உள்ளது, இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக மீட்பு செயல்முறை எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

https://www.moneycontrol.com/news/business/new-rbi-data-shows-wilful-defaulters-are-laughing-all-the-way-away-from-banks-9731631.html


The numbers game

Ugly numbers are already popping up. The Reserve Bank of India data, shared with Parliament, on December 19 shows that the country’s top 50 "wilful defaulters" owed Rs 92,570 crore to Indian banks as of March 31, 2022.

It’s our money

Every rupee that a bank writes off has to be provided for—called provisioning in the bankspeak.

Banks' profitability thus takes a hit. Who are the real losers? Common shareholders and depositors. Banks are supposed to be the guardians of public money. They raise deposits from small and big depositors and use these to lend to businesses.

So whenever a loan is not repaid, it’s the shareholder of the banks (value erosion) and the depositors (as the bank turns weaker in terms of capital and profitability) who suffer.

The government has, time and again, reiterated its intent to clamp down on wilful defaulters.

Coordinated action by the government, RBI and other sector regulators is critical to tackling wilful defaulters as seen in the Kingfisher case.

Banks are sitting ducks for cronies and crooks. In most cases, banks haven’t made meaningful progress in the recovery from deep-pocketed and well-connected promoters. At the end of a long legal process, the value of underlying assets deteriorates and banks are left empty-handed.

The government’s intervention to speed up the recovery process is equally critical since each penny it feeds to state-run banks from the exchequer is public money.

A lot of ground needs to be covered and quickly, as the loan write-off and wilful defaulter numbers show. Do the government and the RBI have the will to clamp down on wilful defaulters?

Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










Tuesday, December 13, 2022

நிலம் (103) - புதுச்சேரி மாமல்லபுரம் விரைவுசாலைக்காக 22 கிராமங்களின் நிலமெடுப்பு விபரம்

அன்பு நண்பர்களே,

சென்னை அருகில் புதுச்சேரி - மாமல்லபுரம் விரைவுச்சாலை அகலப்படுத்துதலுக்காக இருபத்திரண்டு கிராமங்களில் நிலமெடுக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. நில உரிமையாளர்களுக்கும், அப்பகுதியில் நிலம் வாங்க விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற நினைப்பில் செய்திதாளில் வந்த நிலமெடுப்பு விவரங்களைப் பதிவிட்டு இருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு அதிக அளவில் இழப்பீட்டு தொகை வழங்குகிறது. அதுபற்றிய விபரங்களையும், சட்டங்களையும் நன்கு படித்து விட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கீட்டின் போது துல்லியமாக கணக்கிட்டு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்தக் கிராமங்களில் இருக்கும் சர்வே நம்பர்களில் உள்ள நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அரசு பழைய பட்டாக்களின் படி நிலமெடுப்பதற்கான அறிவிப்பாணையை அனுப்பும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்.





Monday, December 12, 2022

நிலம் (102) - வெளிநாட்டு மக்களின் சொத்துக்கள் நூதன திருட்டு

யாரோ ஒருவர் தன் நலத்துக்காகச் செய்யும் செயல், ஏதோ ஒரு குடும்பத்தையே சீரழித்து விடுகிறது. ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு சரியில்லை எனில் ஒரு நபர் மட்டும் பாதிப்பதில்லை - குடும்பமே பாதிப்படைந்து சீரழிந்து விடும். கோர்ட்டை நன்கு பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு சாமானியன் ஒருவனின் சொத்தினை எளிதில் திருடி விடலாம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் - சொத்துரிமை சட்டங்கள் அவ்வளவு குழப்பமானவை. அதுமட்டுமின்றி நயவஞ்சக முறையில், நரித்தனமான வக்கீல் ஒருவரின் வாதத்தால் சட்டம் கேள்விக்குறி ஆக்கப்படும் பல்வேறு சம்பவங்களை நாமெல்லாம் பார்த்து வந்திருக்கிறோம்.

அனுபோகப் பாத்தியம் என்றொரு விதி உள்ளது அல்லவா? இது சட்டம் எனில் அதுவே அறமாகும் அல்லவா? 

உங்கள் மனசாட்சியைத் தொட்டு, எனது இந்தக் கேள்விக்குப் பதிலை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். 

இன்றைக்கு உத்திரப்பிரதேசத்தில் ராமருக்கு கோவில் கட்டும் இடத்தின் 800 ஆண்டுகால உரிமை மசூதிக்கு இருக்கிறது அல்லவா? 800 ஆண்டுகால மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது. இது சரியா? அவ்வளவுதான் என் கேள்வி. இந்தக் கேள்விக்கு சார்பற்ற நிலையில் இருந்து சட்டமே மேல் என்ற அறிவின் மூலம் பதிலைத் தேடிப்பாருங்கள்.

எனக்கு மதம், மொழி, இனம் ஆகியவற்றில் அதீத ஈடுபாடு இல்லை. ஏனென்றால் என் பிறப்புக்கு முன்பே மனிதர்கள் இவைகளுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். அந்த வகையில் நானொரு அடிமை வம்சத்தில் பிறந்தவனே. மதமும், மொழியும், இனமும் மனிதர்களை அடிமைப்படுத்தும் மாய வலை என்பதை புரிதல் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்போது திருட்டுக்கு வரலாம்.

சமீபத்தில் என்னிடம் சொத்துரிமை ஆய்வுக்கு வந்த ஆவணங்களில் இருந்த அட்ஜுடிகேசன் ஆவணத்தைப் பார்த்த போது - அதன் தன்மை எனக்கு சரியாகப்படவில்லை. வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தன் சொத்தினை விற்பதற்கு எழுதிக் கொடுக்கும் பொது அதிகார முகவர் பத்திரத்தினை, பதிவு அலுவலகத்தின் அட்ஜுடிகேசன் செய்து பதிவு செய்வர். 

சந்தேகம் வந்து விட்டால் எனக்குத் தூக்கம் வராது. இந்த நிலத்தை வாங்குபவரிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இடத்தின் லொகேசன் கேட்டேன். அனுப்பி வைத்தார். மறுநாள் சென்று விட்டேன்.  எனது வழியில் விசாரித்து அந்த நில உரிமையாளரைப் பிடித்தேன். 

நிலம் விற்பனை செய்வதாகக் கேள்விப்பட்டேன் என்று ஆரம்பித்த போது, அவர் விற்பனை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்தேன். புரபைலில் அவரின் போட்டோ பார்த்து அதிர்ந்தேன். இந்தப் போட்டோவில் இருந்ததும், புரபைல் போட்டோவும் வேறு. 

முற்றிலும் போகசாக தயாரிக்கப்பட்ட அட்ஜுடிகேசன் பத்திரம் அது. அதுமட்டுமல்ல இரண்டு பத்திரங்கள் ஆனவுடன், அந்த இடத்தில் வெளி நாட்டு நபரின் பெயரும், போலிப்பத்திரங்கள் செய்தவர்களின் பெயரும் கூட்டாக இருக்கின்றன. ஆன்லைனில் பார்க்கும் போது நம் பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

சம்பவத்தை எழுதி விட்டேன். 

இந்தச் சொத்தினை வாங்க வேண்டாமென்று சொல்லி விட்டேன். ஏன் என்று கேட்டார் வாடிக்கையாளர் - மோசடிப்பத்திரங்கள் என்று மட்டும் சொல்லி விட்டேன். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

ஆகவே, வெளி நாடு வாழ் தமிழர்களே, உங்கள் சொத்துக்கள் மீது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

* * *

உங்கள் மனதில் சஞ்சலமா? துன்பத்தில் இருக்கின்றீர்களா? எதைச் செய்தாலும் முடிவு தவறாகவே இருக்கிறதா? 

எனது வாழ்க்கையில் நான் பெற்ற துன்பங்கள் - அதில் நான் பெற்ற வெற்றிகள் பற்றிய அனுபங்களைச் சுவாரசியமாக எழுதி அமேசான் கிண்டிலிலும், டிஜிட்டல் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். உங்களுக்கு வழிகாட்டும் தோழனாக இருக்கும் என நம்பிக்கை உண்டு.

. டிஜிட்டல் புத்தகம் விலை ரூ.120/- விருப்பமுள்ளவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.