குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, September 9, 2022

பெண்களும் - சாதி வெறியர்களும் - இஸ்லாம் மார்க்கமும்


(பெண்கள் படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது)

மனுஸ்மிருதியில் மனு என்ற மகான் பெண்களும், அவர்களைக் கையாளும் விதம் பற்றி எழுதி இருக்கிறார். பார்ப்பனிய இனம் தான் உயர் சாதி என்றுத் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது. 

மனுவின் தர்மத்தைப் பற்றிக் கீழே படியுங்கள். இந்த உயர் சாதி என்று உளறிக் கொண்டிருக்கும், இவர்களைத் தான் ஆகமம எனச் சொல்லி கோவில் கருவறைக்குள் பூசை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியது. மனிதாபிமானம் அற்ற விதிகள் ஆகமம். மனிதனுக்குள் உயர்வு தாழ்வு உண்டாக்கும் விதிகள் தான் உயர்ந்ததாம்.

எவனோ ஒரு பரதேசி எழுதிய விதிகளை மெய் வாய் பொத்தி கேட்க தமிழர்கள் என்ன கேனயர்களா?

இன்னும் எத்தனை நாள் தான் ஏமாறுவீர்கள் இளிச்சவாய் தமிழர்களே...! வெட்கமில்லையா? மானமில்லையா? நெஞ்சுக்குள் ஈட்டி நுழைந்ததை வீரமெனக் கருதிய தமிழன் செத்துப் போனானா? இப்படியா ஒரு பிழைப்பு பிழைப்பது?

நம் சொத்துக்களைப் பிறரை அனுபவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பதா?விழுந்து கும்பிடுவதா? இதுவா வாழ்க்கை? இதுவா ஆன்மீகம்? கொடுமை.

உயர் சாதியில் பிறந்த மனு பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் எனப் படியுங்கள்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறது, இந்து தர்மம்.

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்" ( நன்றி : பதிவுத் தொகுப்புகள்)

மேலும் மனு எழுதிய பெண்கள் பற்றி மிக மோசமான விதிகளைப் படிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்.


போதுமா? இன்னும் இருக்கிறது எழுத நான் என் அம்மாவின் கருவறையில் இருந்தவன். அவளிடமிருந்து உயிர் பெற்று வாழ்ந்தவன். எவன் பெண்களைப் பற்றி இழிவாகவும், விதிகள் அதுகள் என்று பேசினாலும் அவனொரு மன நோயாளி. ஒரு மன நோயாளி எழுதியதைத் தான் இந்து தர்மம் என்றுச் சொல்லித் திரிகிறது ஒரு கூட்டம். 

* * *

இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். ஊருக்குச் செல்லும் போது பஸ் எந்த மார்க்கமாகப் போகிறது என்று கேட்பார்கள். அது போல ஒன்றே கடவுள் என்று சொல்லும் உன்னதமான ஆன்மீக பாதை இஸ்லாம். நபிகள் நாயகம் இஸ்லாத்தின் முதல் மனிதர். நபிகள் பெருமானார் எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவர் கடவுளின் மகிமையைப் பற்றி மட்டுமே பேசினார்.

இஸ்லாம் மார்க்கத்தில் கடவுள் மட்டுமே. பூசாரி இல்லை, குருமார்கள் இல்லை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரோக்கர்கள் இல்லை. சடங்குகள் இல்லை, சாதி இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. கீழ், மேல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அதனால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவுகிறது.

இஸ்லாத்தில் கொலை செய்தவனுக்குத் தண்டனை கொலையே. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தான் கொலையாளியை மன்னித்து, பகர் பெற்றுக் கொண்டால் மன்னிப்பு உண்டு என்கிறது.

இதுதான் மார்க்கத்துக்கும் சாதி வெறிக்கும் உள்ள வித்தியாசம்.

* * * 
தமிழர்கள் உலகிற்கு இஸ்லாம் மார்க்கம் சொல்வதை முன்பே அறிவித்தவர்கள்.

’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று எழுதியது தமிழன் தான். உலகில் மனிதன் தோன்றிய பிறகு மனிதன் பேசிய மொழி தமிழ் தான் என்கிறது வரலாற்று ஆராய்ச்சி நூல்கள்.

உலகிற்கே முன்னுதாரனமாய் விளங்கிய தமிழர்களின் நாகரீகமும், அறிவும், செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்ல, மடைமாற்றியது யாரென்று இனியும் உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

தமிழர்களின் கோவில்களில் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும். அந்த நாளே தமிழர்கள் வீறு கொண்ட நாளாக இருக்கும். 

நாம் வீட்டைக் கட்டி விட்டு, வேறொவனுக்கு அனுபவிக்க கொடுப்பதா ஆகமம்? நியமம்? தர்மம்?

வாழ்க வளமுடன்...!

Thursday, September 8, 2022

தமிழர்களின் சதிராட்டம் பிராமணர்களின் பரதநாட்டியமானதன் நயவஞ்சக வரலாறு (1)

சதியால் சதிராட்டம் எப்படி பரத நாட்டியமாக மாற்றப்பட்டது என பார்க்கலாம். தமிழர்களின் நாட்டியக்கலையை வந்தேறி பார்ப்பனர்கள் தங்களின் சொத்தாக மாற்றி வெற்றி கண்ட அவலம் இது. சூடு, சுரணையற்ற தமிழர்களின் நிலையை எடுத்துக் காட்டும் வரலாற்று உண்மை இது. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை செய்த சண்முக ஷர்மா ஜெயபிரகாஷ் என்பவர் (கவனிக்க ஷர்மா என்பது பிராமண இனத்தின் ஒரு பெயர்) நவரசம் - நடனத்தின் அழகிய அனுபவம் என்ற கட்டுரையினை இலங்கையிலிருந்து வெளி வரும் கலைக்கேசரி என்ற பத்திரிக்கையில் எழுதி இருந்தார். அதில் வரும் ஒரு பத்தி கீழே.


மேற்கண்ட பத்தியில், இந்திய சாஸ்திரீய நடனங்கள் பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், கதக், குச்சுப்புடி போன்ற நடனங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆண்ட போது, அரசவையில் நடன மகளிர் ஆடிய நாட்டியத்தின் பெயர் சதிராட்டம். 

அதை ஏன் இந்த ஷர்மா குறிப்பிடவில்லை?  என்ன காரணம் தெரியுமா?

டி.ராஜேந்தர் அவர்களின் மனைவி உஷா அவர்களின் சகோதரி சுவர்ணமுகி. எலும்பே இல்லாத பெண்மணி என்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டப்பட்டவர். சதிராட்டத்தில் நூறு கர்ணங்கள் உண்டு. அந்த நூறு கர்ணங்களையும் ஆடியவர் சுவர்ணமுகி. இவரின் தந்தை தான் இவருக்கு குரு. தந்தை பெயர் நினைவில் இல்லை.

சுவர்ணமுகியைக் கவுரவிக்க முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், சுவர்ணமுகியை அரசு நர்த்தகி என்ற பட்டம் கொடுத்து சதிராட்டத்தை அங்கீகரித்தார்.

சுவர்ணமுகி ஆடிய தமிழர் நடனத்தின் பெயர்.”சதிராட்டம்”. அதிலொன்று பாம்பு, மயில் நடனம். இவ்வாறு பிரபலமாக இருந்த சதிராட்டத்தை ஒரு பெண்மணி பிராமணர்களின் சொத்து என்பது போல மாற்றினார்.

அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒரே காரணத்தால் படிப்பறிவு பெற்ற பார்ப்பனர்கள், தமிழர்களின் வரலாற்றை தமிழை வைத்தே மாற்றி எழுதினர்.

தமிழர்களின் வாழ்வியலை, ஒவ்வொருவரும் திட்டமிட்டு மறைத்து எழுதினர். எந்த வகையிலும் தமிழர் பூமியில் தொடர்பு இல்லாதவர்கள் தங்களை, தமிழர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய ஆதாரங்களை நூல் வடிவில் கொண்டு வந்தனர். 

அந்தக் கால பட்டயங்களில் அக்ரஹாரம் என்பது அவர்கள் பகுதியாக இருந்தது. அதில் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்து கொண்டு வேதம், மந்திரம் போன்ற அடாத செயல்களைச் செய்து வந்தனர். காலப் போக்கில் தமிழர்களை ஊருக்கு ஒதுக்குப் புறமாய் மாற்றி விட்டனர்.

சரி, சதிராட்டம் என்கிறாயே, உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்பீர்கள். 

இலங்கையில் இருந்து வெளிவரும் கலைக்கேசரி ஜனவரி 2020 பத்திரிக்கையில் கார்த்திகா கணேசர் என்ற நாட்டியப் பெண்மணி எழுதிய கட்டுரையினை கீழே படியுங்கள். இக்கட்டுரையில் கூட சதிராட்டம் என்பதை வசதியாக மறைத்து எழுதி இருக்கின்றார் கார்த்திகா கணேசர். அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனாலும் அவர் எழுதவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

தமிழகத்திலிருந்து வெளி நாடுகள் சென்ற நாட்டிய பெண்களைப் பற்றிப் படியுங்கள்.  நன்றி : கலாக்கேசரி இதழ் மற்றும் நாட்டிய கலா நிதி கார்த்திகா கணேசர்.








தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு அரசுகள் சதிராட்டத்தைப் பாதுகாக்கவில்லை என்பதோடு கடந்து விடுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 

ருக்மணி தேவி அருண்டேல் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட சதியின் தொடர்ச்சியாக சதிராட்டம் அழிக்கப்பட்டது.  

தமிழனின் அற்புதமான நடனத்தை அழித்து, அதை தமிழர்களின் பூமியிலேயே வேறொரு பெயரில் மாற்றி, அதற்கொரு கலாசேத்ரத்தை உருவாக்கி, இன்னும் அகங்காரத்தோடு பரத நாட்டியம் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

முட்டாள் தமிழர்களும், மூளைகெட்ட இன துரோகிகளும் தன்னை நானொரு கன்னெடிகா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் எட்டப்பன்களும் இருக்கும் தமிழ் நாட்டின் சாபக்கேடு இதுதான்.

எழுபது ஆண்டுகாலமாக ஒரு கோவிலுக்குள் சென்று இறைவனைப் பிரார்த்தனை செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வீரத்தை என்ன சொல்லி மெச்ச? மானம் கெட்டுப் போனவர்களாய் தமிழர்கள் கிடப்பதை எண்ணி வேதனை தான் விஞ்சுகிறது.

விரைவில் தொடரும் 

லலித மன்றம் நாடக காட்சிகள் - காட்சி இரண்டு

லலித மன்றத்தில் கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்த  வழக்கு விசாரணை தொடங்கியது.

சாமி கேட்டர் ”வக்கீல்கள் யாரப்பா?”

இருவர் வந்து நின்றனர்.

”உங்களில் யார் வஸ்துவணிவர்? ”

அதில் ஒருவர் முன்னால் வந்தார்.

”அவருக்கு இருக்கை கொடுங்கள்”

இருக்கை கொடுக்கப்பட்டது.

”நீங்கள்?”

”நான் காலில் இருந்து பிறந்தவன்”

“சரி, கைகட்டி பத்தடி தூரத்தில் நிற்க”

“வஸ்துவணிபரே! உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்”

”என் வாதத்தை துவங்குவதற்கு முன்பு, நம்ஸ்கார்ம். மை லார்டு, நான் ஏன் நம்ஸ்காரம் என்று துவங்கினேன் என்றால் இது கடவுள் மொழி என்பதால். நானும் உங்களைக் கடவுளாகத்தான் பார்க்கிறேன்”

சாமி புன்னகைத்துக் கொண்டார். தலையை ஆட்டி ஆட்டி ஆமோதித்தார். வக்கீல் மீண்டும் வாதத்தைத் தொடங்கினார்.

”எனது கட்சிக்காரர்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்றுச் சொல்ல முடியாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்களை விட குற்றச்செயலைச் செய்ய ஊக்குவிக்குபவர்களுக்கு தான் அதிக தண்டனை என்று, ...... எழுதிய (இந்த இடத்தில் சட்டமியற்றவரின் பெயருக்குப் பதிலாக நாக்கை வெளியில் நீட்டி விட்டு தொடர்கிறார் வக்கீல்) சட்டத்தில் இருக்கிறது. 

இந்தக் குற்றம் செய்யக் காரணமாய் இருந்தது ஒரு துணி. ஆம் லார்டு, அது ஒரு கருப்புத் துணி. சாலையில் சென்று கொண்டிருக்கிற போது, அங்கு ஒரு துணியால் ஒரு வஸ்து மூடப்பட்டு இருக்கிறதென்றால், மனிதர்களுக்கு இயற்கையாகவே அது என்னவென்று பார்க்கத் தோன்றுவது இயல்பு அல்லவா? 

அதைப் போலத்தான் எம் கட்சிக்காரர்கள் பதினோரு பேரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் கருப்பு துணி அணிந்த உருவம் வந்து கொண்டிருந்தது. அது பேயாக இருக்குமோ என்ற பயத்தில் என் கட்சிக்காரர்கள், எதிரில் வந்தவரை விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்தது அது ஒரு பெண் என்று.

அதுமட்டுமல்ல மை லார்டு. அந்தப் பெண்ணின் வயிறு பெருத்து இருந்தது. அது ஏதோ மதக் கலவரத்திற்காக, வயிற்றில் கட்டப்பட்ட வெடிகுண்டாக இருக்குமோ என்ற நினைப்பில் அது என்னவென்று பார்க்கத்தான், என் கட்சிக்காரர்கள் முயன்றனர். 

தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் அவர்கள் அக்காரியத்தைச் செய்தனர் என்பதை மை லார்டு குறித்துக் கொள்ள வேண்டும்.”

அப்போது ஆலரமத்தினடியில் காற்றுப் பலமாக வீசியது.

சாமிக்கு கண்ணில் தூசி பட்டு விட்டதால், வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடரும்.

இந்தச் செய்தி உங்களுக்காக.


நன்றி : மணி கண்ட்ரோல்.காம்

சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி என்பவர் மக்கள் தொகை பெருக்கம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், மக்கள் தொகையினக் கட்டுப்படுத்துதல் அவசியம் என்றும் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டுக்கு மேல் வேண்டாமென்று பிரச்சாரமும் நடந்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிள்ளையே பிறப்பதில்லை. அதற்கும் ஹாஸ்பிட்டல்கள் வந்து விட்டன. ஒன்றை பெற்று வளர்ப்பதற்குள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர் மக்கள்.

இப்படியான சூழல் இருக்கும் போது இந்த ஜிதேந்திரனாந்த் வழக்கு என்ன விளைவினை ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுக்கும் என்பதும் தெரியவில்லை. 

இந்த வழக்கை கவனத்தில் வாசகர்கள் குறித்துக் கொள்ளவும்.

ஸ்டாலினிசம் (2) - நான் முதல்வன்


ஆட்சிக்குப் பொறுப்பேற்றதும் அவர் தன்னை மக்களுக்கான ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்யும் ஊழியன் நான் என்று பெருமைப்பட்டார்.

அவர் தன் அமைச்சரவையை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தகுதியானவர்களுடன் உருவாக்கினார். ஒவ்வொரு அமைச்சர்களையும் மதியூகிகளாக தேர்ந்தெடுத்தார்.

தன் புதிய அரசியல் பயணத்தை, தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் தொடங்கினார்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனப் பேசுகிறார். 

கண்ணிய அரசியல். 

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலால் காட்டுகிறார்.

கல்வி கரையில, கற்பவர் நாற் சில. கரையிலாக் கல்வியை எல்லோருக்கும் கிடைத்திட ஆவலாய் பணி செய்கிறார். 

மாணவர்களிடையே, உங்கள் தகப்பன் இடத்தில் இருந்து சொல்கிறேன், “நன்றாய் படியுங்கள்” என்று கேட்கிறார்.

நான் முதல்வன் என்பது அனைவருக்குமானது. 

ஒவ்வொருவரும் முதல்வன், எல்லாவற்றிலும் என்று மாணவர்களிடையே மன ஊக்கத்தை ஊக்குவிக்கிறார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றதை பொய்யாக்க முனைகிறார். 

நானிருக்கிறேன் நீங்கள் கல்வி கற்க, கற்க பிச்சை எதற்கு என்று கேட்கிறார்.

தமிழர்களின் பிள்ளைகள் கல்வியில் முதல்வனாக வேண்டுமெனத் திட்டமிடுகிறார். 

அதற்கு சான்று, “ நான் முதல்வன்” திட்டம்.

உயர்கல்வி ஒவ்வொரு தமிழர்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்திட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

இதோ அதற்கான முன்னோட்டமாக தமிழக அரசின் இணையதளம்.

https://naanmudhalvan.tnschools.gov.in/home

இதோ இப்படித் தொடங்குகிறது இணையதளத்தின் ஆரம்பம்.

”9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. “

தகவல்களின் சுரங்கமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையத்தில். மாணாக்கர்கள் தங்களின் ஐ.டி வழியாக உள் நுழைந்து தேவையான தகவல்களைப் பெற்றுப் பயனடைதல் அவசியம். பலர் இத்தகவல்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். ஏழைகளால் இயலாதே. அவர்களுக்காக துல்லியமான தகவல்களுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் முதல்வர் மாணவர்களை முதல்வர்களாக்க உருவாக்கிய திட்டமிது. தமிழர்களின் குழந்தைகள் முதல்வன் என்ற தகுதியை அடைவதே, நம் முதல்வருக்கு மாணவர்கள் செலுத்தும் நன்றி.

ஸ்டாலின்ஷத்தின் இரண்டாம் பகுதி நான் முதல்வன்.



ஊழலை ஒழிப்போம் - எப்படி என விளக்கம்

கிழட்டு நரி இந்தியர்களை ஏமாற்றி லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சகம் தூங்கியதால் 70 ஆண்டுகால சதியின் வேரை கண்டு பிடிக்கவில்லை. இந்தியர்கள் கிழட்டு நரியின் நயவஞ்சக வலையில் சிக்கினார்கள். இன்று மீளாத் துயரில் ஆழ்ந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்த நரி, ஊருக்குப் போய் உட்கார்ந்து கொண்டது. 

இந்திய ஒன்றியங்களின் பிரதமர், ஊழலை ஒழிப்போம் என்கிறார். 

எப்படி?

இதோ இப்படி தான். செய்தியைப் படித்துப் பாருங்கள். புல்லரிக்கும்.

ஊருக்கே தெரியுமாம் விபச்சாரி யார் என? ஆனால்..... !

அம்புட்டுதான்..

நன்றி : தினமணி (08.09.2022)




Wednesday, September 7, 2022

ஸ்டாலினிசம் (1) - புதுமைப்பெண் - தமிழர்களின் தந்தை


துரோகி எட்டப்பனின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, ஆட்சிக்கு ஏன் இவர் வரவில்லை என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கு நோக்கினும் ஊழல் மயம். தமிழக மக்கள் துன்பப்பட்டு, துயரப்பட்டு கட்டிய வரிப்பணத்தை ஸ்ட்ரா போட்டு, வித விதமான கமிஷன் வழியாக உறிஞ்சினார்கள் எட்டப்பன்களும் அவனுடைய கூட்டாளிகளும்.

கலைஞர் இருந்திருந்தால், ஊழல்வாதி ஜெ மறைவுக்கு பின்பு தமிழக அரசியல் தலைகீழாக மாறி இருக்கும் என்று வாய் இருக்கு, யூடியூப் இருக்கு, டிவிட்டர் இருக்கு, ஃபேஸ்புக் இருக்குவென பலரும் ஆலோசனைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர். 

ஆனால் எனக்கோ அவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கமாட்டார் எனத் தோன்றியது. 

அவர் அப்படித்தான் இருந்தார். கண்ணியம்.

பூணூல் பத்திரிக்கைகள், பத்திரிக்கை விபச்சாரகர்கள் தேர்தலின் முதன் நாளில் கூட பத்திரிக்கைகளில் இதுவரை எவரும் வெளியிடாத வகையில் நூதனமாக அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். 

அவ்வளவு வன்மம் அவர் மீது. இருப்பினும் அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.

அவர் திராவிட இனத்தின் வளர்ச்சிக்காக புதிய அத்தியாயத்தை உருவாக்கி விட்டால், சாதி, மத, வெறி பிடித்த மிருகங்களின் நயவஞ்சக எண்ணங்கள் தவிடு பொடியாகிடுமே என்ற கோப வெறியில் பல முனையிகளிலிருந்தும் தாக்குதல்களை  அவர் மீது தொடுத்ததை உலகமே கண்டது.

மனிதனாக வாழவே தகுதியில்லாத துரோகி எட்டப்பன், அவரை இழித்தும் பழித்தும் பேசினான். அழுதான், அரற்றினான், புரண்டான், ஊழலில் ஊறிய பெருச்சாளி, நாற்றம் பிடித்த நயவஞ்சகனான அவனால் இன்று தமிழர் குழந்தைகள் இன்று மருத்துவம் படிக்க முடியாமல் வழி இன்றி தடுமாறி நிற்கச் செய்த சுய நலப்பேயன், இனத்துரோகி எப்படியெல்லாமோ சதிகளைச் செய்து பார்த்தான். துரோகம் எப்போதும் அழியும், நம்பியவரையும் அழிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.  அவரின் கடமை.

எனக்கு அறத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் ஜெயிப்பார் என நம்பினேன். ஜெயித்தார்.

அவர் துரோகிகளால், துரோகத்தால் வளர்க்கப்பட்டவர். கலைஞருக்கு பிள்ளையாகப் பிறந்தினாலே அவர் பெற்றது வலிகள் மட்டுமே. 

ஆனால் அவர் அவராகவே இருந்தார். 

ஆட்சிக்கு வந்தார். 

தூற்றியவர்கள் துயருற்று விம்மினார்கள். துன்பத்தினால் உளறினார்கள். இட்டுக்கட்டி ஏசினார்கள். இன்றும் செய்கிறார்கள்.

பாப்பனிய ஜன கட்சி நடத்தும் ஒன்றிய அரசின் மூலமாக நரித்தனத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

தினமும் அவர் மீதும், தமிழக மக்கள் மீதும் எந்தெந்த வகையினில் எல்லாம் தாக்குதல்களை நிகழ்த்த முடியுமோ அவ்வகையிலிலெல்லாம் தாக்குகின்றார்கள். 

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றார்கள். 

தமிழர்களுக்கு நன்மை கிடைத்து விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருக்கிறது. ஏழைகள் இருக்கும் பகுதியாக, சாதி வெறி பிடித்தவர்களாக, மதவெறி பிடித்தவர்களாக மக்களை மாற்ற ஒரு தற்குறியை வைத்து முயன்று கொண்டிருக்கிறார்.

திராவிடத்தால் படித்தவர்கள், பலனடைந்த தமிழர்கள், சுயநலத்திற்காக, பேராசையினால் தமிழர் இன துரோகிகள் ஆனார்கள். இவர்களை வைத்து அரசியல் என்கிற போர்வையில் மதவெறி, சாதி வெறியை பாப்பனிய ஜன கட்சி மத அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.

போலிச் செய்திகளைப் பேசுகின்றார்கள். பொய்யை உண்மை என்கிறார்கள். இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தாலும் அவர் இன்னும் அவர்கள் மீது கண்ணியம் காட்டுகிறார். 

துரோகிகளாலும், துரோகத்தினாலும் வளர்ந்தவருக்கு இதெல்லாம் சாதாரணம்.

அவர், 06.09.2022ம் தேதியன்று ஒரு சிறப்பான நிகழ்வினை நிகழ்த்தினார்.  தமிழர்களின் தந்தையாக உயர்ந்தார்.  புதுமைப் பெண் திட்டம் - அவரின் கனவு. 

அக்கனவு நனவாகும், பெண்கள் 100 சதவீதம் கல்வி பெறுவார்கள். தமிழர்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயரும். ஏழைப் பெண் பிள்ளைகள் படித்தால் சமூகம் அவர்கள் வழியாக மேன்மை அடையும் என்ற உன்னத நோக்கினை அவர் உணர்ந்துள்ளார். 

கல்வி மட்டுமே தமிழர்கள் உயர வகை செய்யும் என்று அவர் நினைக்கிறார். பெண்களுக்கு இலவசப் பயணம், கல்விக்கு உதவி என அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடக் கடமை.

அவர் கடமையைச் செய்கிறார்

கண்ணியமாக நடந்து கொள்கிறார்.

கட்டுப்பாடுடன் கட்சியினையும் தமிழர்களையும் வளர்க்கிறார்.

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களுக்கானது, அது திராவிட நாட்டின் மேன்மைக்கானது.

அவரின் ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்கானது என்பதே ஸ்டாலினிசம்.


லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று

லலித மன்றம் என்று அழைக்கக் கூடிய, ஆலமரத்தினடியில் சாமிகள் உட்கார்ந்திருந்தனர். இடுப்பில், தொடையில், காலில் பிறந்தவர்கள் மெய் வாய் பொத்தி நின்று கொண்டிருந்தனர். ஆகமத்தில் விதிகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு உட்கார சபையில் அனுமதி இல்லை. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டவை. சாமிகள் யாரும் அதற்கு காரணமில்லை. வேதமே காரணம். 

குற்ற விபரம் : கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம்

விசாரணை விரைவில்...!

வாசகர்களுக்கு இன்றையச் செய்தி. நன்றி தினமணி



மேற்கண்ட செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே ஸ்டார்ட் ஆகி, வேகமாக வந்த கார் விவசாயிகள் மீது மோதியதாக இரண்டாம் பத்தியில் செய்தி இருக்கிறது. கார் இடித்ததால் வன்முறை உண்டானது என்பது கூடுதல் செய்தி. காரினால் தான் வன்முறை என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்காக ராகுல்காந்தியின் நடைபயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.

ஒன்பது வருடங்கள் நேரு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். தங்களது குடும்பச் சொத்தான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு கொடுத்தார். 

அந்தப் பரம்பரையில் வரும் ராகுல் காந்தி அவர்களுக்கு அவரது தந்தை இந்தியர்களை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். 

இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த, மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்று தனது வாழ்க்கையை இந்தியர்களுக்குக் கொடுத்த மகாத்மா காந்தி விரும்பினார்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசும், நேரு குடும்பத்தார் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. சூரியனை பொய்களும், புராணங்களும் மறைக்க முடியாது.

காங்கிரஸ் ரயிலைக் கொளுத்தவில்லை, கொலைகள் செய்யவில்லை, எந்த மதத்தினருக்கும் வந்தேறிகளுக்கும் அடிமையாக இல்லை. நாட்டை விற்கவில்லை, இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விழுங்கவில்லை, எந்த அமைப்புக்கும் சார்பாக இல்லை. 

இந்திய மக்களை நேசித்தார்கள். இந்தியாவுக்கு உழைத்தார்கள். இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. காலம் இந்தியர்களுக்கு இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய நாளில், ஒவ்வொரு இந்தியனும் பொய்களால் ஏமாற்றப்படுகிறான். வந்தேறிகளால் நாசமாக்கப்படும் இந்தியாவை, மீண்டும் மதவெறிக்கு எதிரான ஒரு சுதந்திரப் போரினால் தான் மீட்க முடியும். 

கடந்த 70 ஆண்டுகளாக துல்லியமான நோக்குடன் திட்டமிடப்பட்டு, இன்று இந்தியா மத வெறி எனும் போர்வையில் வந்தேறிக் கும்பலொன்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடிமைகள் கலவரம் செய்கிறார்கள். வெடிகுண்டுகள் வீசுகின்றார்கள். கார்கள் ஏற்றி கொலைகள் செய்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கின்றார்கள்.

பஞ்சைப்பராரிகளாய் இந்தியர்கள் நயவஞ்சமாக மாற்றப்படுகின்றார்கள். படிக்க அனுமதிக்க மறுக்கின்றார்கள். இந்தியர்கள் கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இந்தியர்களை இந்த மதவெறி வந்தேறிக் கும்பலிடமிருந்து மீட்க, இந்தியாவை நேசிப்பவர்களால், உண்மை இந்தியர்களால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் பொய்கள் எனும் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்தியர்களுக்கு ராகுல் காந்தியின் பயணம் விழிப்புணர்வைத் தரும். இந்தியா மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என்று நம்புவோம்.

ராகுல் காந்தி அவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். அதனால் இந்தியா மேன்மையடையட்டும்.

Monday, September 5, 2022

லலிதமன்றம் நாடகக் காட்சிகள்


உலகின் ஒப்பற்ற சக்தி படைத்தது மேலே இருக்கும் வஸ்து. அணுகுண்டு எல்லாம் இந்த வஸ்தின் முன்னே தூசு. ஹைட்ரஜன் பாம் சும்மா சும்மா. இதன் ஆற்றலை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது. அந்தளவுக்கு வலிமையான வஸ்து இது.

இந்த வஸ்துவினை அணிந்தவர்களுக்கு உலக மக்கள் யாவரும் சேவகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தப் பெருமித எண்ணத்தோடு, எஜமான அடிமைகளான நாம் இனி தொடர்ந்து லலித மன்றத்தில் நடத்தப்படும் நாடகக் காட்சிகளைத் தினம் தோறும் படித்து இன்புறலாம். 

இன்புற விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். லலிதமன்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள் சுவாரசியமானவையாக இருக்குமா? என்பது படிக்கும் உங்களுக்கு வெளிச்சம்.

நாடகக் காட்சிக்கு முன்பு முன்னுரை:

இந்த மன்றத்திற்கு சுமார் இருபத்தெட்டு ஊர்களும், எட்டு உப ஊர்களில் இருந்தும் நாடகம் பார்க்க ஆட்கள் வருவதுண்டு. சாமிகள் தான் நடிப்பார்கள். நல்ல நடிப்பாக இருக்கும். நாடகத்தில் பல பாத்திரங்கள் உண்டு. அந்தப் பாத்திரங்களில் பலர் எங்கிருப்பர் என்று தெரியாது கடவுளைப் போல. ஆனாலும் பாத்திரங்களாய் இருப்பர்.

இந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆக்கிர மங்கள் எனும் புத்தகமே வழிகாட்டியாக இருக்கிறது. நாடகத்துக்கும் விதிகள் உண்டு அல்லவா?

இனி விரைவில் திரைக்காட்சிகள் தொடரும் ... 


யாருக்கு வரும் இந்த புத்திசாலித்தனம்?

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஜி.வி. பிலிம்ஸ், ஜி.வெங்கடேசன். இவரது சகோதர பிரபல இயக்குனர் மணிரத்னம். இவரது மனைவி கமல்ஹாசனின் அண்ணன் மகள்  சுகாசினி.  இந்தக் குடும்பமே சினிமாக்குடும்பம். உலகளாவிய தொடர்புகள், இணைப்புகள், வரவுகள், செலவுகள் என்று எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் தனிப்பட்டவர்களின் ரகசியங்கள் என்பதால் அரசுக்கு ஒன்றும் இழப்பில்லை.

ஜிவி பிலிம்ஸின் பிரபலமான படம் கார்த்திக் நடித்த மெளனராகம். அதைத் தொடர்ந்து ரஜினி காந்தின் தளபதி.

கடனோ அல்லது ஏதாவது பிரச்சினையோ, காரணம் சரியாகத் தெரியவில்லை. வெங்கடேசன் தூக்கில் பரகதி அடைந்தார். ஆனால் அவர் வாங்கிய கடனுக்கு பரகதி கிடைக்கவில்லை. 

குடும்பத்தாரின் முயற்சியில் ஜி.வி பிலிம்ஸ் மீண்டும் படங்களைத் தயாரித்தது. ஆனால் நிர்கதி பிராப்தி அடையாத கடனுக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த, கவனிக்க போர்ச்சுகல் நாடு, அங்கிருக்கும் ஒரு கம்பெனி நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிலிம்ஸ் லிமிட்டெட்டை வாங்குகிறது.

ஊரான் காசு இலவசமாய் கொட்டிக் கிடக்கும் வங்கியில் அந்த போர்ச்சுகல் கம்பெனி லோன் வாங்குகிறது. 

கவனிக்க, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனியை போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி, வங்கியில் கடன் பெற்று, ஜி.வி.பிலிம்ஸின் பங்குகளை வாங்குகிறது.

ஒரு வெளி நாட்டுக் கம்பெனி, இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டுமெனில் அன்னியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் படி, அதற்கான அனுமதி பெற்று வாங்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லையாம்.

போர்ச்சுகல் அரசுக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் ஒன்றும் தெரியாது இதைப் பற்றி என்று நம்பிக் கொள்வோம்.

இப்போதுதான் ஒன்றிய அரசின் ஒப்பற்ற அமலாக்கத்துறையின் கவனத்துக்கு இந்த பரிமாற்றம் தெரிய வந்து, ஜி.வி.பிலிம்ஸுக்கு சொந்தமான தஞ்சாவூர் தியேட்டரை பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.

தற்போது ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட்டின் இயக்குனர்கள் ஆறு பேர்கள். அதில் ஒரு சிலர் பத்துக்கு மேற்பட்ட கம்பெனிகளின் நிறுவனர்கள்.

இவர்கள் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையோ அல்லது சோதனையோ இட்டதாகச் செய்திகள் ஒன்றுமில்லை. கிட்டே போகமுடியுமா? 

அமலாக்கத்துறையில் குற்றம் நடைபெற்று இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்தால் தான் தியேட்டரை சீல் வைக்க முடியும். ஆனால் இதன் காரண கர்த்தாக்களை யாரால் என்ன செய்ய முடியும்? 

ஏன்? என்று காரண காரியம் தெரிந்த மகானுபாவர்கள் கமெண்டில் கருத்துக்களைப் பதிவிடவும். நூலிபான்கள் என்றும், பிராமணர்கள் என்று கமெண்டில் எழுதிவிட வேண்டாம் என்பது வேண்டுகோள்.

அவாளுக்கும் அவாளுக்கும் சண்டை - தினமணியில் செய்தி.

கமல்ஹாசன் உறவினர்கள் தொடர்பானது என்பதால் அரசியல் ஸ்பெஷல் நகர்வுகளாக இருக்குமோ என்று சிந்தித்து விடாதீர்கள். தேசத்துரோகம்.

நன்றி : தினமணி (02.09.2022 செய்தி)