Friday, September 9, 2022
பெண்களும் - சாதி வெறியர்களும் - இஸ்லாம் மார்க்கமும்
Thursday, September 8, 2022
தமிழர்களின் சதிராட்டம் பிராமணர்களின் பரதநாட்டியமானதன் நயவஞ்சக வரலாறு (1)
லலித மன்றம் நாடக காட்சிகள் - காட்சி இரண்டு
லலித மன்றத்தில் கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்த வழக்கு விசாரணை தொடங்கியது.
சாமி கேட்டர் ”வக்கீல்கள் யாரப்பா?”
இருவர் வந்து நின்றனர்.
”உங்களில் யார் வஸ்துவணிவர்? ”
அதில் ஒருவர் முன்னால் வந்தார்.
”அவருக்கு இருக்கை கொடுங்கள்”
இருக்கை கொடுக்கப்பட்டது.
”நீங்கள்?”
”நான் காலில் இருந்து பிறந்தவன்”
“சரி, கைகட்டி பத்தடி தூரத்தில் நிற்க”
“வஸ்துவணிபரே! உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்”
”என் வாதத்தை துவங்குவதற்கு முன்பு, நம்ஸ்கார்ம். மை லார்டு, நான் ஏன் நம்ஸ்காரம் என்று துவங்கினேன் என்றால் இது கடவுள் மொழி என்பதால். நானும் உங்களைக் கடவுளாகத்தான் பார்க்கிறேன்”
சாமி புன்னகைத்துக் கொண்டார். தலையை ஆட்டி ஆட்டி ஆமோதித்தார். வக்கீல் மீண்டும் வாதத்தைத் தொடங்கினார்.
”எனது கட்சிக்காரர்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்றுச் சொல்ல முடியாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்களை விட குற்றச்செயலைச் செய்ய ஊக்குவிக்குபவர்களுக்கு தான் அதிக தண்டனை என்று, ...... எழுதிய (இந்த இடத்தில் சட்டமியற்றவரின் பெயருக்குப் பதிலாக நாக்கை வெளியில் நீட்டி விட்டு தொடர்கிறார் வக்கீல்) சட்டத்தில் இருக்கிறது.
இந்தக் குற்றம் செய்யக் காரணமாய் இருந்தது ஒரு துணி. ஆம் லார்டு, அது ஒரு கருப்புத் துணி. சாலையில் சென்று கொண்டிருக்கிற போது, அங்கு ஒரு துணியால் ஒரு வஸ்து மூடப்பட்டு இருக்கிறதென்றால், மனிதர்களுக்கு இயற்கையாகவே அது என்னவென்று பார்க்கத் தோன்றுவது இயல்பு அல்லவா?
அதைப் போலத்தான் எம் கட்சிக்காரர்கள் பதினோரு பேரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் கருப்பு துணி அணிந்த உருவம் வந்து கொண்டிருந்தது. அது பேயாக இருக்குமோ என்ற பயத்தில் என் கட்சிக்காரர்கள், எதிரில் வந்தவரை விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்தது அது ஒரு பெண் என்று.
அதுமட்டுமல்ல மை லார்டு. அந்தப் பெண்ணின் வயிறு பெருத்து இருந்தது. அது ஏதோ மதக் கலவரத்திற்காக, வயிற்றில் கட்டப்பட்ட வெடிகுண்டாக இருக்குமோ என்ற நினைப்பில் அது என்னவென்று பார்க்கத்தான், என் கட்சிக்காரர்கள் முயன்றனர்.
தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் அவர்கள் அக்காரியத்தைச் செய்தனர் என்பதை மை லார்டு குறித்துக் கொள்ள வேண்டும்.”
அப்போது ஆலரமத்தினடியில் காற்றுப் பலமாக வீசியது.
சாமிக்கு கண்ணில் தூசி பட்டு விட்டதால், வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடரும்.
இந்தச் செய்தி உங்களுக்காக.
ஸ்டாலினிசம் (2) - நான் முதல்வன்
ஆட்சிக்குப் பொறுப்பேற்றதும் அவர் தன்னை மக்களுக்கான ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்யும் ஊழியன் நான் என்று பெருமைப்பட்டார்.
அவர் தன் அமைச்சரவையை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தகுதியானவர்களுடன் உருவாக்கினார். ஒவ்வொரு அமைச்சர்களையும் மதியூகிகளாக தேர்ந்தெடுத்தார்.
தன் புதிய அரசியல் பயணத்தை, தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் தொடங்கினார்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனப் பேசுகிறார்.
கண்ணிய அரசியல்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலால் காட்டுகிறார்.
கல்வி கரையில, கற்பவர் நாற் சில. கரையிலாக் கல்வியை எல்லோருக்கும் கிடைத்திட ஆவலாய் பணி செய்கிறார்.
மாணவர்களிடையே, உங்கள் தகப்பன் இடத்தில் இருந்து சொல்கிறேன், “நன்றாய் படியுங்கள்” என்று கேட்கிறார்.
நான் முதல்வன் என்பது அனைவருக்குமானது.
ஒவ்வொருவரும் முதல்வன், எல்லாவற்றிலும் என்று மாணவர்களிடையே மன ஊக்கத்தை ஊக்குவிக்கிறார்.
கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றதை பொய்யாக்க முனைகிறார்.
நானிருக்கிறேன் நீங்கள் கல்வி கற்க, கற்க பிச்சை எதற்கு என்று கேட்கிறார்.
தமிழர்களின் பிள்ளைகள் கல்வியில் முதல்வனாக வேண்டுமெனத் திட்டமிடுகிறார்.
அதற்கு சான்று, “ நான் முதல்வன்” திட்டம்.
உயர்கல்வி ஒவ்வொரு தமிழர்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்திட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
இதோ அதற்கான முன்னோட்டமாக தமிழக அரசின் இணையதளம்.
https://naanmudhalvan.tnschools.gov.in/home
இதோ இப்படித் தொடங்குகிறது இணையதளத்தின் ஆரம்பம்.
”9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.
நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. “
தகவல்களின் சுரங்கமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையத்தில். மாணாக்கர்கள் தங்களின் ஐ.டி வழியாக உள் நுழைந்து தேவையான தகவல்களைப் பெற்றுப் பயனடைதல் அவசியம். பலர் இத்தகவல்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். ஏழைகளால் இயலாதே. அவர்களுக்காக துல்லியமான தகவல்களுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நம் முதல்வர் மாணவர்களை முதல்வர்களாக்க உருவாக்கிய திட்டமிது. தமிழர்களின் குழந்தைகள் முதல்வன் என்ற தகுதியை அடைவதே, நம் முதல்வருக்கு மாணவர்கள் செலுத்தும் நன்றி.
ஸ்டாலின்ஷத்தின் இரண்டாம் பகுதி நான் முதல்வன்.
ஊழலை ஒழிப்போம் - எப்படி என விளக்கம்
கிழட்டு நரி இந்தியர்களை ஏமாற்றி லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சகம் தூங்கியதால் 70 ஆண்டுகால சதியின் வேரை கண்டு பிடிக்கவில்லை. இந்தியர்கள் கிழட்டு நரியின் நயவஞ்சக வலையில் சிக்கினார்கள். இன்று மீளாத் துயரில் ஆழ்ந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்த நரி, ஊருக்குப் போய் உட்கார்ந்து கொண்டது.
இந்திய ஒன்றியங்களின் பிரதமர், ஊழலை ஒழிப்போம் என்கிறார்.
எப்படி?
இதோ இப்படி தான். செய்தியைப் படித்துப் பாருங்கள். புல்லரிக்கும்.
ஊருக்கே தெரியுமாம் விபச்சாரி யார் என? ஆனால்..... !
அம்புட்டுதான்..
நன்றி : தினமணி (08.09.2022)
Wednesday, September 7, 2022
ஸ்டாலினிசம் (1) - புதுமைப்பெண் - தமிழர்களின் தந்தை
துரோகி எட்டப்பனின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, ஆட்சிக்கு ஏன் இவர் வரவில்லை என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கு நோக்கினும் ஊழல் மயம். தமிழக மக்கள் துன்பப்பட்டு, துயரப்பட்டு கட்டிய வரிப்பணத்தை ஸ்ட்ரா போட்டு, வித விதமான கமிஷன் வழியாக உறிஞ்சினார்கள் எட்டப்பன்களும் அவனுடைய கூட்டாளிகளும்.
கலைஞர் இருந்திருந்தால், ஊழல்வாதி ஜெ மறைவுக்கு பின்பு தமிழக அரசியல் தலைகீழாக மாறி இருக்கும் என்று வாய் இருக்கு, யூடியூப் இருக்கு, டிவிட்டர் இருக்கு, ஃபேஸ்புக் இருக்குவென பலரும் ஆலோசனைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால் எனக்கோ அவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கமாட்டார் எனத் தோன்றியது.
அவர் அப்படித்தான் இருந்தார். கண்ணியம்.
பூணூல் பத்திரிக்கைகள், பத்திரிக்கை விபச்சாரகர்கள் தேர்தலின் முதன் நாளில் கூட பத்திரிக்கைகளில் இதுவரை எவரும் வெளியிடாத வகையில் நூதனமாக அவர் மீது தாக்குதல் தொடுத்தனர்.
அவ்வளவு வன்மம் அவர் மீது. இருப்பினும் அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.
அவர் திராவிட இனத்தின் வளர்ச்சிக்காக புதிய அத்தியாயத்தை உருவாக்கி விட்டால், சாதி, மத, வெறி பிடித்த மிருகங்களின் நயவஞ்சக எண்ணங்கள் தவிடு பொடியாகிடுமே என்ற கோப வெறியில் பல முனையிகளிலிருந்தும் தாக்குதல்களை அவர் மீது தொடுத்ததை உலகமே கண்டது.
மனிதனாக வாழவே தகுதியில்லாத துரோகி எட்டப்பன், அவரை இழித்தும் பழித்தும் பேசினான். அழுதான், அரற்றினான், புரண்டான், ஊழலில் ஊறிய பெருச்சாளி, நாற்றம் பிடித்த நயவஞ்சகனான அவனால் இன்று தமிழர் குழந்தைகள் இன்று மருத்துவம் படிக்க முடியாமல் வழி இன்றி தடுமாறி நிற்கச் செய்த சுய நலப்பேயன், இனத்துரோகி எப்படியெல்லாமோ சதிகளைச் செய்து பார்த்தான். துரோகம் எப்போதும் அழியும், நம்பியவரையும் அழிக்கும்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவரின் கடமை.
எனக்கு அறத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் ஜெயிப்பார் என நம்பினேன். ஜெயித்தார்.
அவர் துரோகிகளால், துரோகத்தால் வளர்க்கப்பட்டவர். கலைஞருக்கு பிள்ளையாகப் பிறந்தினாலே அவர் பெற்றது வலிகள் மட்டுமே.
ஆனால் அவர் அவராகவே இருந்தார்.
ஆட்சிக்கு வந்தார்.
தூற்றியவர்கள் துயருற்று விம்மினார்கள். துன்பத்தினால் உளறினார்கள். இட்டுக்கட்டி ஏசினார்கள். இன்றும் செய்கிறார்கள்.
பாப்பனிய ஜன கட்சி நடத்தும் ஒன்றிய அரசின் மூலமாக நரித்தனத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தினமும் அவர் மீதும், தமிழக மக்கள் மீதும் எந்தெந்த வகையினில் எல்லாம் தாக்குதல்களை நிகழ்த்த முடியுமோ அவ்வகையிலிலெல்லாம் தாக்குகின்றார்கள்.
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றார்கள்.
தமிழர்களுக்கு நன்மை கிடைத்து விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருக்கிறது. ஏழைகள் இருக்கும் பகுதியாக, சாதி வெறி பிடித்தவர்களாக, மதவெறி பிடித்தவர்களாக மக்களை மாற்ற ஒரு தற்குறியை வைத்து முயன்று கொண்டிருக்கிறார்.
திராவிடத்தால் படித்தவர்கள், பலனடைந்த தமிழர்கள், சுயநலத்திற்காக, பேராசையினால் தமிழர் இன துரோகிகள் ஆனார்கள். இவர்களை வைத்து அரசியல் என்கிற போர்வையில் மதவெறி, சாதி வெறியை பாப்பனிய ஜன கட்சி மத அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.
போலிச் செய்திகளைப் பேசுகின்றார்கள். பொய்யை உண்மை என்கிறார்கள். இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தாலும் அவர் இன்னும் அவர்கள் மீது கண்ணியம் காட்டுகிறார்.
துரோகிகளாலும், துரோகத்தினாலும் வளர்ந்தவருக்கு இதெல்லாம் சாதாரணம்.
அவர், 06.09.2022ம் தேதியன்று ஒரு சிறப்பான நிகழ்வினை நிகழ்த்தினார். தமிழர்களின் தந்தையாக உயர்ந்தார். புதுமைப் பெண் திட்டம் - அவரின் கனவு.
அக்கனவு நனவாகும், பெண்கள் 100 சதவீதம் கல்வி பெறுவார்கள். தமிழர்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயரும். ஏழைப் பெண் பிள்ளைகள் படித்தால் சமூகம் அவர்கள் வழியாக மேன்மை அடையும் என்ற உன்னத நோக்கினை அவர் உணர்ந்துள்ளார்.
கல்வி மட்டுமே தமிழர்கள் உயர வகை செய்யும் என்று அவர் நினைக்கிறார். பெண்களுக்கு இலவசப் பயணம், கல்விக்கு உதவி என அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடக் கடமை.
அவர் கடமையைச் செய்கிறார்
கண்ணியமாக நடந்து கொள்கிறார்.
கட்டுப்பாடுடன் கட்சியினையும் தமிழர்களையும் வளர்க்கிறார்.
கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பது ஸ்டாலினிசம்.
ஸ்டாலினிசம் தமிழர்களுக்கானது, அது திராவிட நாட்டின் மேன்மைக்கானது.
அவரின் ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்கானது என்பதே ஸ்டாலினிசம்.
லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று
இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்காக ராகுல்காந்தியின் நடைபயணம்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.
ஒன்பது வருடங்கள் நேரு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். தங்களது குடும்பச் சொத்தான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு கொடுத்தார்.
அந்தப் பரம்பரையில் வரும் ராகுல் காந்தி அவர்களுக்கு அவரது தந்தை இந்தியர்களை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்.
இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த, மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்று தனது வாழ்க்கையை இந்தியர்களுக்குக் கொடுத்த மகாத்மா காந்தி விரும்பினார்.
இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசும், நேரு குடும்பத்தார் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. சூரியனை பொய்களும், புராணங்களும் மறைக்க முடியாது.
காங்கிரஸ் ரயிலைக் கொளுத்தவில்லை, கொலைகள் செய்யவில்லை, எந்த மதத்தினருக்கும் வந்தேறிகளுக்கும் அடிமையாக இல்லை. நாட்டை விற்கவில்லை, இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விழுங்கவில்லை, எந்த அமைப்புக்கும் சார்பாக இல்லை.
இந்திய மக்களை நேசித்தார்கள். இந்தியாவுக்கு உழைத்தார்கள். இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. காலம் இந்தியர்களுக்கு இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இன்றைய நாளில், ஒவ்வொரு இந்தியனும் பொய்களால் ஏமாற்றப்படுகிறான். வந்தேறிகளால் நாசமாக்கப்படும் இந்தியாவை, மீண்டும் மதவெறிக்கு எதிரான ஒரு சுதந்திரப் போரினால் தான் மீட்க முடியும்.
கடந்த 70 ஆண்டுகளாக துல்லியமான நோக்குடன் திட்டமிடப்பட்டு, இன்று இந்தியா மத வெறி எனும் போர்வையில் வந்தேறிக் கும்பலொன்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடிமைகள் கலவரம் செய்கிறார்கள். வெடிகுண்டுகள் வீசுகின்றார்கள். கார்கள் ஏற்றி கொலைகள் செய்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கின்றார்கள்.
பஞ்சைப்பராரிகளாய் இந்தியர்கள் நயவஞ்சமாக மாற்றப்படுகின்றார்கள். படிக்க அனுமதிக்க மறுக்கின்றார்கள். இந்தியர்கள் கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள்.
இந்தியர்களை இந்த மதவெறி வந்தேறிக் கும்பலிடமிருந்து மீட்க, இந்தியாவை நேசிப்பவர்களால், உண்மை இந்தியர்களால் மட்டுமே முடியும்.
அந்த வகையில் பொய்கள் எனும் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்தியர்களுக்கு ராகுல் காந்தியின் பயணம் விழிப்புணர்வைத் தரும். இந்தியா மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என்று நம்புவோம்.
ராகுல் காந்தி அவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். அதனால் இந்தியா மேன்மையடையட்டும்.
Monday, September 5, 2022
லலிதமன்றம் நாடகக் காட்சிகள்
உலகின் ஒப்பற்ற சக்தி படைத்தது மேலே இருக்கும் வஸ்து. அணுகுண்டு எல்லாம் இந்த வஸ்தின் முன்னே தூசு. ஹைட்ரஜன் பாம் சும்மா சும்மா. இதன் ஆற்றலை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது. அந்தளவுக்கு வலிமையான வஸ்து இது.
இந்த வஸ்துவினை அணிந்தவர்களுக்கு உலக மக்கள் யாவரும் சேவகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தப் பெருமித எண்ணத்தோடு, எஜமான அடிமைகளான நாம் இனி தொடர்ந்து லலித மன்றத்தில் நடத்தப்படும் நாடகக் காட்சிகளைத் தினம் தோறும் படித்து இன்புறலாம்.
இன்புற விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். லலிதமன்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள் சுவாரசியமானவையாக இருக்குமா? என்பது படிக்கும் உங்களுக்கு வெளிச்சம்.
நாடகக் காட்சிக்கு முன்பு முன்னுரை:
இந்த மன்றத்திற்கு சுமார் இருபத்தெட்டு ஊர்களும், எட்டு உப ஊர்களில் இருந்தும் நாடகம் பார்க்க ஆட்கள் வருவதுண்டு. சாமிகள் தான் நடிப்பார்கள். நல்ல நடிப்பாக இருக்கும். நாடகத்தில் பல பாத்திரங்கள் உண்டு. அந்தப் பாத்திரங்களில் பலர் எங்கிருப்பர் என்று தெரியாது கடவுளைப் போல. ஆனாலும் பாத்திரங்களாய் இருப்பர்.
இந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆக்கிர மங்கள் எனும் புத்தகமே வழிகாட்டியாக இருக்கிறது. நாடகத்துக்கும் விதிகள் உண்டு அல்லவா?
இனி விரைவில் திரைக்காட்சிகள் தொடரும் ...