குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, April 29, 2022

நிலம் (97) - நில உச்ச வரம்புச் சட்டம் தமிழ் நாட்டில் உள்ளதா?

எவரும் நம்ப மாட்டார்கள். சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஜாக்கிரதையாக இருங்களேன் என்றால் கேட்கவே கேட்க மாட்டேன் என்கிறார்கள். 

தமிழகத்தில் நில உச்ச வரம்புச் சட்டமாவது ஒன்றாவது என்று என்னை நக்கலுடன் பார்ப்பார்கள்.

1962ம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டம் முன்பு (தமிழ் நாடு சட்டம் 58, 1861) அதாவது உச்ச வரம்புச் சட்டத்தின் 12 மற்றும் 14வது பிரிவின் கீழ் அரசு தானாகவே எவரிடமாவது உச்ச வரம்புக்கு மேல் நிலம் இருப்பின் அரசு நிலமாக மாற்றி விடும். 

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் பார்க்கலாம்.

நிலத்தைக் கிரையம் செய்து விட்டு லீகல் பார்க்க வந்தவர் தந்த ஆவணத்தைப் பார்த்த போது எங்கேயோ பார்த்த அரசு உத்தரவு போல இருக்கிறதே என்று நினைவில் வர ஆய்வு செய்து சொல்கிறேன் என்றுச் சொல்லி அனுப்பி விட்டேன். 

அவரின் நிலம் உச்சவரம்புச் சட்டத்துக்கு உட்பட்டதா? இல்லையா? அந்த இடம் கோவையில் எங்கே உள்ளது என்பது பற்றி விரைவில் பார்க்கலாம்.


நிலம் (96) - கோவை சென்னையில் புதிய பதிவு மாவட்டங்கள் - சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும்

வருவாய்துறையில் மிக அதிகமான வருவாயைத் தரக்கூடிய சென்னை பதிவு மாவட்டம் இனி சென்னை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். அதுமட்டுமின்றி தாம்பரம் பதிவு மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும்.

அதே போல கோவை பதிவு மாவட்டம் இனி கோவை தெற்கு மற்றும் வடக்கு பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.  மதுரையிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும் 1998ம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப்பதிவு துறையில் எழுத்தர் பணிக்கு புதிய அனுமதிகள் வழங்கப்படவில்லை. ஆகவே புதிய அனுமதி வழங்கப்படும்.

கட்டிட கள ஆய்வுப்பணிக்கு புதிய ஆட்கள் தேவைப்படுதால் எழுத்தர் பணிக்கு அனுமதி வழங்குவது போல கள ஆய்வுக்கும் பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

தட்கல் முறையில் ஆவணப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் (ஏப்ரல் 30, 2022) அலுவலகங்கள் செயல்படும் என்றும் மா நில அரசு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இனி அவைகள் ஒவ்வொன்றாக செயல்முறைப்படுத்துவார்கள். 

ஆவண எழுத்தர் உரிமை, கள ஆய்வுப் பணி அனுமதி ஆகிய இரண்டு புதிய வேலை வாய்ப்புகள் வர இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.




செய்தி உதவி : தினமணி 


Thursday, April 28, 2022

வாட் வரியைக் குறையுங்கள் - பிரதமர் மோடி - உண்மை என்ன?

இன்றைய செய்தி தாள்களில் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டுமென்று பிரதமர் சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதால் தான் விலை உயர்வு உண்டாகிறது. விலை உயர்வினைச் செய்வது ஒன்றிய அரசு. ஆனால் பிரதமர் மா நில அரசுகளை வரியைக் குறையுங்கள் என்றுச் சொல்கிறார்.

இது என்ன விதமானது என்பது அவருக்கே வெளிச்சம். நாங்கள் வரியை உயர்த்துவோம், விலையை உயர்த்துவோம், ஆனால் மாநிலங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது சரிதானா என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஒன்றிய அரசின் கலால் வரியையும், பிரதமரின் செய்தியையும் கீழே பாருங்கள். எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்குகின்றார்கள் என்று சிந்தியுங்கள். 

ஏற்கனவே தமிழக அரசு ஐந்து ரூபாய் அளவுக்கு பெட்ரோல் விலையை குறைத்து உள்ளது. இன்னும் குறைக்க வேண்டுமாம். 

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையில் இன்னும் 78,000 கோடி பாக்கி இருக்கிறது. வாங்கிய வரியைக் கூட கொடுப்பதில்லை. 

மாநில அரசுகள் எப்படி நிர்வாகம் செய்வார்கள்? நிதிக்கு எங்கே போவார்கள். 

வரி தாக்குதலை இந்திய மக்களின் மீது தொடுக்கும் கொடுமையான செயலை அறமற்றுச் செய்கிறது ஒன்றிய அரசு என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பிற கட்சியினரை அழிக்க வேண்டுமென்ற ஆவலில் ஒன்றிய அரசின் செயல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வரியைப் பிடுங்கிக் கொள்ளும். மாநில அரசுகள் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று எப்படியெல்லாம் திசைதிருப்புகிறார்கள் பாருங்கள். 

தினமணியில் முதல் பக்கத்தில் செய்தி. ஏதோ திமுக அரசு தான் விலை குறைக்காமல் இருக்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டுமாம். தினமணியின் ஆசையைப் பாருங்கள்.

மாநில அரசுகள் வரியை இழந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தா வண்ணம் முடங்க வேண்டுமென்ற மறைமுக எண்ணம் தான் இந்த செய்தியின் பின்னால் இருக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.

ஒன்றிய அரசு வரியை எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று கீழே இருக்கும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



பிரதமர் மோடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? கூட்டாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது ஒன்றிய அரசா இல்லை  மா நில அரசுகளா என்பதற்கு தமிழக ஆளும் திமுக அரசின் நிதியமைச்சரின் பதில் கீழே.




Thursday, April 21, 2022

நிலம் (95) - கோவில் நிலங்களை எப்படி ஆட்டையைப் போட்டு விற்கலாம்? விவரங்கள் அப்டேட்டட்

நண்பர் பழனியிலிருந்து ஒரு சொத்தினை விற்பனை செய்து தரும் பொருட்டு விபரங்கள் அனுப்பி இருந்தார். நேரில் சென்று இடத்தினைப் பார்வையிட்டு வந்தேன். மிக நல்ல இடம். 60 கோடி விலை சொன்னார்கள்.

நான் பரிந்துரைக்கும் நிலங்கள் வில்லங்க சுத்தியாய் இருக்க வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பேன்.

வில்லங்கங்கள் இருக்கும் சொத்துக்கள் வேறு இருக்கின்றன. அதன் விற்பனை வேறு. அது இங்கே வேண்டாம்.

தங்கத்திடமிருந்து ஒரு சொத்து வருகிறது என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவார்கள். விலை பேச மட்டுமே வருவார்கள், பிற காரியங்கள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன். 

ஆகவே சொத்தின் மீதான வில்லங்கங்களை 120 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். நிலம் விற்பனை என்றால் சர்வே எண் பெற்று ஆரம்ப கட்ட ஆய்வினை முடித்து விட்டுத்தான் பார்வையிடச் செல்வது வாடிக்கை.

நண்பரின் அழுத்தப் பரிந்துரையினால் அந்த நிலத்திற்குச் சென்று விட்டு திரும்பினேன்.

அந்தச் சொத்தின் சர்வே நம்பர் வைத்து ஆராய்ந்தேன்.

சொத்துக்களை ஒரு குடும்பம் தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்த போது ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் சுமார் இரண்டு ஏக்கர் சொத்தினை இனி வரக்கூடிய வாரிசுகள் விற்பனை செய்யாமல், அந்தச் சொத்தில் வரக்கூடிய வருமானத்தினை கோவையில் பிரபலமாக இருக்கும் ஒரு சிவன் கோவிலில் நடைபெறும் கட்டளைக்கு, நிலத்தின் வரி வகையறாக்கள் செலவுகள் போல மீதமுள்ள தொகையினை கொடுத்து வர வேண்டுமென்றும் பத்திரத்தினை பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். 

ஆக இந்தச் சொத்தினை விற்பனை செய்ய முடியாது, அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே நிர்வாகம் செய்ய வேண்டும், வருமானத்தை சிவன் கோவிலில் நடக்கும் கட்டளைக்குக் கொடுத்து வர வேண்டும் என்பது தெளிவாக பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி சொத்தின் பட்டாவும் கோவில் பெயரில் மாற்றப்பட்டு தர்மகர்த்தாக்களாக சொத்தினை எழுதி வைத்த நபர்களின் வாரிசுகள் நியமிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நடப்பு பட்டாவோ வேறு பெயரில் இருந்தது. 

என்ன நடந்தது? 

எப்படி பட்டாவில் பெயர் மாற்றினார்கள்?

முன்னுரை படித்து விட்டீர்களா? 

இனி ஸ்டெப் பை ஸ்டெப்பாக கோவில் நிலத்தின் பட்டாவை எப்படி உங்கள் பெயருக்கு மாற்றுவது எனப் பார்க்கலாம்.

வாரிசுதாரர்கள் அந்தக் கோவிலுக்கு பாத்தியமான சொத்துக்களுடன் இதர சொத்துக்களையும் சேர்த்து பாகப் பிரிவினைப் பத்திரம் ஒன்றினைத் தயார் செய்ய வேண்டும். பாகப் பிரிவினை சொத்துக்களில் பொதுச் சொத்து (கவனிக்க) என்ற பகுதியில் வாரிசுகளில் ஒருவரை உரிமையாளர் என்ற பெயரில் பதிவு செய்தல் வேண்டும். பாகப் பிரிவினைப் பத்திரத்தில் கோவிலுக்கு கட்டளைக்கு கொடுத்த பத்திரத்தினை குறிப்பிடாமல் அதற்கு முன்பு உள்ள பத்திரத்தினையும், வாரிசு சான்றுகளையும் இணைத்தல் அவசியம்.

மேற்படிப் பாகப்பிரிவினை பத்திரத்தை ஈடுகாட்டி வட்டிக்கு பணம் வாங்க வேண்டும். வட்டியும் அசலும் கட்டத் தேவையில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தவர் வாரிசுகளில் யாரோ ஒருவரின் நெருங்கிய உறவினராக இருத்தல் அவசியம். 

வட்டியும் அசலும் திரும்ப வரவில்லை என்பதால் வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மணி சூட் போடுவார். வழக்குகளில் ஆஜராக கூடாது. எக்ஸ்பார்ட்டியாய் தீர்ப்பு வட்டிக்குப் பணம் கொடுத்தவருக்கு கிடைத்து விடும். கோர்ட் மூலமாக மேற்படிச் சொத்தினை கிரையம் செய்து கொள்ளல் வேண்டும்.

இப்போது வட்டிக்குப் பணம் கொடுத்தவர் கோர்ட் மூலம் மேற்படிச் சொத்தின் உரிமையாளர் ஆகி விட்டார்.

இனி பட்டா மாற்றம் செய்ய வேண்டும். தமிழக வருவாய் துறையில் நல்ல காசுள்ளங்கள் உண்டு. ஆகவே அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைமேற்கொண்டு பட்டாவை வழங்கி விடுவார்கள். 

பட்டா கோவில் பெயரில் அல்லவா இருக்கிறது? பிரச்சினையை எப்படி நீக்குவது? இனி பார்க்கலாம்.

நிலத்தினை பராமரித்து வந்தவர் விவசாயம் செய்யும் பொருட்டு வாங்கிய கடனைக் கட்ட இயலாததால் கடன் கொடுத்தவருக்கு கோர்ட்டு நிலத்தினைக் கிரையம் செய்து கொடுத்து விட்டது. இது சட்டப்படி சரியானது. ஆகவே பட்டாவை கடன் கொடுத்தவர் பெயருக்கு மாற்றி விடலாம். இருப்பினும் கோவில் இணை ஆணையர் இதை உற்று நோக்கி ஒரு தடையின்மை சான்றிதழ் வழங்கி விட்டால் சொத்தின் முழு உரிமை கடன் கொடுத்தவருக்கே வந்து விடும் அல்லவா?

ஆகவே கோவிலின் இணை ஆணையரை அணுகி தர்மப்படி அதாவது தர்மப்படி கொடுத்து மேற்கண்ட விஷயங்களைக் குறிப்பிட்டு கடன் கொடுத்தவர் ஒரு அப்பாவி என்றும், கடன் கொடுக்கும் போது மேற்படி சங்கதிகள் ஏதும் தெரியாது என்றும், அந்த நிலத்திற்காக ஏகப்பட்ட செலவுகளைச் செய்து விட்டார் என்றும், தற்போது கோவிலில் கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட கட்டளை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆகவே கட்டளைக்கு நிதி கொடுக்க வேண்டுமென்ற ஷரத்து செல்லாததாகி விட்டது என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையினை இந்த விண்ணப்பதாரரிடம் சுமாராக ஐம்பது இலட்சம் பெற்றுக் கொண்டு அப்பாவியாய் ஏமாந்து போனவருக்கு நிலத்தினைக் கொடுத்து விடலாம் என்றும் ஒரு பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று தமிழக அற நிலையத்துறைக்கு அனுப்பி வைத்தால் அங்கும் கொஞ்சம் தர்மப்படி கொடுத்தால் சொத்து முழுமையாக கடன் கொடுத்தவரிடம் வந்து விடும்.  

நிலத்தின் விலை என்ன? அறுபது கோடி. 

கோவிலுக்கு கொடுக்க வேண்டியது என்ன? ஒரு அம்பது இலட்சம். 

கைப்படி, தர்மப்படி இவற்றுக்கு இருபது இலட்சம் என செலவானால் மொத்தம் ஒரு எழுபத்தைந்து இலட்சம் வரும். 

வருமானம் என்ன? 

கொஞ்சமே கொஞ்சம் தான் அதாவது ஒரு அம்பது கோடி. 

போதுமே? போதாதா? போதாது என்றால் அடுத்த நிலம் இருக்கிறதே?

ஒரு கோவில் பெயரில் இருக்கும் சொத்தினை உங்களது பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி என்றும் வரவு செலவு கணக்கினைத் தெளிவாக எழுதி இருக்கிறேன். 

அவ்ளோ தான்.

இப்படித்தான் நண்பர் பரிந்துரைத்த அந்தச் சொத்தின் பட்டா மாற்றப்பட்டது என்று விவரித்தேன் அவரிடம். அசந்து போனார். 

“அண்ணா...! என்ன கொடுமை இது?” என்று வருந்தினார். 

வருந்தி என்ன ஆகப் போகுது? எவன் போய் சிக்கப் போகின்றானோ அவனுக்குத்தான் வருத்தம் வர வேண்டும். நமக்கென்ன ஆகப் போகுது?

ஒரு விஏஓ, ஆர்.ஐ, தாசில்தார், ஆர்.டி.ஓ மற்றும் கோவில் இணை ஆணையர் இவர்கள் நினைத்தால் ஒரு கோவிலின் நிலத்தின் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை நினைவில் கொள்க. 

பத்திரங்கள், பட்டாக்கள், சட்டங்கள் எதுவும் இவர்களை ஒன்றும் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இவர்களுக்கு எதிரான சட்டப் போராடத்தின் முடிவில் ஒன்றும் நடக்காது. அவரவர்கள் ரிட்டயர்ட் ஆகி விடுவார்கள். வழக்குப் போட்டவனுக்கும் வயதாகி செத்துப் போவான். நீதிமன்றங்கள் வழக்கு கட்டுகளை வைத்துக் கொண்டு வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும். 

இதனை ஆய்வு செய்ய எனக்கு நேரமாகி விட்டதே என்று வருத்தமாக இருந்தாலும், உங்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்று எழுதி இருக்கிறேன். 

இன்னும் ஒரு அற்புதமான வழி அதாவது கோவில் நிலங்களை தங்கள் பெயரில் பட்டா போட வழி இருக்கிறது. அதை இங்கு எழுத இயலாது. அந்த வழி சூப்பர் ஸ்டார் வழி. கில்லி மாதிரி தட்டித் தூக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வழி முறை உள்ளது. ஆகவே ஆராய்ந்து தெளிந்து புரிந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி மாற்றிய சொத்துக்களை விற்பனைக்கு வைத்து, அதனை ஆய்வு செய்யும் வேலை என்னிடம் வந்தால் நான் உண்மையைக் கண்டுபிடித்து விடுவேன், என்னிடம் தர்மப்படி, கைப்படி எல்லாம் செல்லாது என்று வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். 

இதே போல அரசு புறம்போக்கு நிலங்களையும் பட்டா பெறலாம். ஏகப்பட்ட வழிகள் உண்டு. அதையும் போகப் போக எழுதுகிறேன். பயனடைந்து கொள்ளுங்கள்.

புத்திசாலிகள் புரிந்து கொள்ளுங்கள்.

தர்மம் நின்றும் கொல்லாது நிற்காமலும் கொல்லாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

தர்மம் நின்று கொல்லும் என்பது தத்துவப் பிழை.

வாழும் வழி என்ன தெரியுமா? பிறரை அழி என்பதுதான்.

நம் தலைவர்களும் அதைத்தானே செய்கிறார்கள் சட்டத்தின் வழியாக. தலைவன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் செல்வதே நல்லது.

முற்குறிப்பு பின்குறிப்பாய்:

கலிகாலமாம். நல்லவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதாயிருக்கிறது என்கிறார்கள்.  காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிட வேண்டும். இல்லையெனில் வாழ முடியாது.

திருடத் தெரிந்தவன் எவனோ அவனே சமூகத்தில் உயர்ந்தவனாய் மதிக்கப்படுகிறான். கொலைகாரன் எவனோ அவனே தலைவனாகிறான். மக்களை வதைப்பவன் எவனோ அவனே கொண்டாடப்படுகிறான். ஆகவே கலிகாலம் என்றுச் சொல்வது சரிதான்.

பணம் இருப்பவன் எவனோ அவனே வெற்றியாளன் என்கிறது உலகம். 

பணமில்லாதவனுக்கோ வாழ்க்கையே இல்லை. உயிரோடு ஏன் இருக்க வேண்டுமென்கிறது அரசுகள். 

1500 ரூபாய் உதவித் தொகையும், வருடம் 6000 ரூபாய் விவசாயி உதவித்தொகையும், நூறு நாட்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 120 ரூபாய் கூலி தருவோம், இதை வைத்துப் பிழைத்துக் கொள், இல்லையெனில் செத்துப் போ என்று கூறாமல் வழிகாட்டுகின்றன அரசுகள்.  

தலைவர்கள் ஏழைகளை முன்னேற்றுவோம் என்று உரையாற்றுகிறார்கள். விலைகளை இவர்களே ஏற்றுவார்கள், ஆனால் வேறொருவர் விலைகளைக் குறைக்கவில்லை எனப் போராட்டம் செய்வார்கள். 

விலை ஏற்றியதால் தான் விலை உயர்கிறது, நீங்கள் குறைக்கலாமே என்று எவருக்கும் கேள்வி கேட்க இங்கு முதுகெலும்பு இல்லை. முதுகெலும்பில்லா மனிதர்கள் மண்புழுவுக்குச் சமானம்.  ஆகவே உயிரோடு இருப்பதன் பயன் என்னவோ என்று கேட்காமல் கேட்கிறார்கள் அரசாளுபவர்கள்.

உணவுப் பொருட்களின் விலைகள் 200 மடங்கு ஏறி விட்டன. ஆனால் கூலியோ ஏறவே இல்லை. எப்படி உண்பது? எப்படி வாழ்வது? 

இந்தியாவில் இனி ஏழைகள் வாழ அனுமதி இல்லை என்று விரைவில் சட்டம் வரும். 140 பணக்காரர்களும், அவர்களுக்கு வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் இருந்தால் போதுமானது என்கிறார்கள். 

ஆகவே பணமே கலிகாலத்தில் பிரதானமாயிருப்பதால், அந்தப் பணத்தை எந்த வழியிலேனும் சம்பாதித்து விடுவது தான் வெற்றியான வாழ்க்கை.

நேர் பட வாழ்க்கை, அற வாழ்க்கை,  தர்ம வழி என்று இனிப் பேசுவதில் பயனில்லை என்பதால் இனி உங்களுக்கு எப்படி சட்டத்தின் வழியாக மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்று ஒரு உண்மைச் சம்பவத்தின் வாயிலாக வழி காட்டப் போகிறேன்

படித்து, புரிந்து, தெளிந்து வேலையை ஆரம்பியுங்கள். வெற்றி நேர்மையாய் வாழ்பவனுக்கு கிடைப்பதை விட நேர்மையற்றவர்களுக்கு எளிதாய் கிடைக்கும். வாழ்த்துகிறேன்.

நல்லவனாய் வாழ்வதை விட திருடனாய், கொலைகாரனாய்,  மதக்கலவரக்காரனாய், ஏமாற்றுக்காரனாய், முடிச்சவிக்கியாய், மொள்ளமாறியாய் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று சமூகம் பாடம் சொல்கிறது. சமூகத்தின் வழி எவ்வழியோ அவ்வழியில் பீடு நடை போடுங்கள். 

பணமிருந்தால் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். எப்படி என்கின்றீர்களா ஒரு நூறு கோடி எஸ்.பி.ஐ தேர்தல் பாண்ட் கொடுங்கள். ஓடோடி வருவார்கள் உணவு அருந்த உங்கள் வீட்டுக்கு. 

ஆகவே பணமே குறிக்கோள். அதை எளிதில் அடைவது எப்படி? 

மாப்பு தரு சாமி - துளிர்

புதிதாக படிப்பவர்கள் கீழே இருக்கும் இந்தப் பாகத்தின் முதற்பகுதியைப் படிக்கவும்.

மாப்பு தரு சாமி - விதை 

மேலே இருக்கும் முதற்பகுதியைப் படித்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

கேரளா சென்று வந்த சுவாமி என்னிடம் ”மாப்பு தரு சாமி’ என்ற வார்த்தைகளை ஏன் சொன்னார்? என்ற கேள்வியின் விடை காண ஆசிரமம் சென்று வரலாமென்று முடிவு செய்தேன்.

மதியம் போல பைக்கில் ஆசிரமம் சென்றேன். நல்ல வெயில். சூடு அதிகம். வழியெங்கும் காவடி, பால்குடங்கள் சுமந்தபடி மக்கள் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஏழாவது மலையில் அருள் பாலிக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசித்து திரும்பிச் செல்லும் மக்கள் சாரி சாரியாகச் சாலைகளில் சென்று கொண்டிருந்தனர். பலர் கைகளில் ஊன்றுகோல் கண்டேன். அன்றைக்கு என சுமார் ஐம்பதுக்கும் மேலான எண்ணிக்கையில் விதவிதமான கழுத்தில் சலங்கைகளுடன் மாடுகள் பூட்டிய மாட்டு வண்டிகள் ஜல் ஜல் என சென்று கொண்டிருந்தன. இளைஞர்கள் தான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. 

வெள்ளிங்கிரி பகுதி பக்தி கோலத்தில் மிளிர்கிறது. உண்மையான பக்தியை நான் சாலைகளில் நடந்து செல்லும் பக்தர்களின் வழி கண்டேன்.

நடந்து சென்ற ஒரு இளைஞனை நிறுத்திக் கேட்டேன். காங்கேயத்திலிருந்து பால்குடம் எடுத்து நடந்து வந்து பூண்டியில் அடியிலிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அபிஷேசம் செய்து விட்டு, மீண்டும் மலையேறி ஏழாவது மலையில் அருள் பாலிக்கும் ஆண்டவரைத் தரிசித்து விட்டு மீண்டும் நடை பயணத்திலேயே காங்கேயம் சென்று அங்கு தனது குலதெய்வத்துக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் எனச் சொன்னார். சின்னப் பையன். வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி மஞ்சள் துண்டினை இறுக கட்டி இருந்தான். விறுவிறுவென நடந்தான். அவன் சொல்லும் போது கண்கள் ஒளிர்ந்தன. இறைவன் மீது கொண்ட பக்தியா? இல்லை அவனது குடும்பத்தின் நலனுக்கான வேண்டுதலா? என்று தெரியவில்லை. கால்கள் வலிக்க நடக்கிறான். இறைவனைத் தரிசித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. நல்ல வளர்ப்பு. அவனின் அம்மாவும் அப்பாவும் அவனை பக்தியாய் வளர்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது. 

சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறான் அவன். 

ஏன்? 

யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒன்று அவனுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவை நிறைவேறவோ அல்லது நிறைவேற்றிய தேவையின் நன்றிக் கடனுக்காகவோ தன் உடல் வருத்தி தன் பக்தியை இறைவனிடம் சமர்ப்பிக்கிறான். 

என்ன ஒரு முரட்டு பக்தி?

இதற்கெல்லாம் ஈடு இணை என்று எதைச் சொல்வது? 

என் நண்பரின் மனைவி திருப்பூரிலிருந்து பழனி முருகனிடம் வேண்டுதலுக்காக நடைபயணம் செய்வார். அப்பக்தியை என்னவென்று சொல்வது? 

ஒரு வார்த்தை கோபமாகப் பேசி விட்டால் டைஓர்ஸ் என்று இருக்கும் காலகட்டம் இது. 

சரி இனி தொடரலாம்.

முள்ளங்காடு செக்போஸ்ட்டிலிருந்து தெற்கே செல்லும் தார்ச்சாலை வழியாகச் சென்று அங்கிருக்கும் சிறு கிராமச்சாலை கடந்து ஆசிரமம் சென்றேன். ஆசிரமத்தின் முன்பு இடது புறமாய் இருக்கும் மரங்களின் கீழே அமர்ந்து கொண்டேன். அன்று குருநாதரைச் சந்திக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. ஜோதி சுவாமிகள் பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 

எப்போதும் மாலை நேரத்தில் குளிர்காற்று ஆசிரமத்தினை தழுவும். வெயிலில் வந்த எனக்கு அந்த குளிர் அதனால் விளைந்த மகிழ்ச்சி குருநாதரின் அருள்.

பக்தர்களுடன் உரையாடிய சுவாமி  சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்து அமர்ந்தார். நானெதற்கு வந்திருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும். என்னிடம் பேச ஆரம்பித்தார்.

”ஆண்டவனே,கொடுங்களூர் பகவதி அம்மன் சன்னிதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று காதுக்குள் ஒரு குரல். இன்னும் சிறிது தூரம் தள்ளி வா என்றது”

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”அங்கு ஒரு குளத்தைப் பார்த்தேன் ஆண்டவனே! அவ்விடத்தில் நின்று கைகூப்பி வணங்கினேன். மீண்டும் அதே குரல், இன்னும் கொஞ்சம் தூரம் கிழக்கே வா என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆண்டவனே. குரல் சொன்னபடி பத்தடி தூரம் நடந்து சென்றேன். அங்கு ஒரு சிறு கோவில் போல ஷெட் இருந்தது. அதன் நடுவே ஒரு சிறு கல் இருந்தது. அவ்விடத்தில் நின்று வணங்கினேன். சிறிது நேரம் சென்ற பிறகு, மீண்டும் அதே குரல் இன்னும் கொஞ்ச தூரம் கிழக்கே வா என்றது. குரல் வழி காட்டியபடி கிழக்கே பத்தடி தூரம் நடந்து சென்றால் அங்கே சிறு கோவிலும் சிலைகளும் இருந்தன. கைகூப்பி வணங்கி நின்று கொண்டிருந்த போது மீண்டும் அதே குரல், நான் இங்கில்லை இன்னும் கொஞ்சம் தூரம் கிழக்கே வா என்றது. குரல் சொன்ன வழியில் நடந்து சென்றேன். சாலையிலிருந்து ஒரு குறுகிய பாதை. அதன் வழியாகச் சென்றேன். அங்கு ஒரு வீடு இருந்தது. அதைத் தாண்டி இடது புறம் சென்றேன். ஆஹா ஆண்டவனே, அங்கு கண்டேன் அம்மாவை” என்றார்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

”ஒரு சிறு கோவில், உள்ளே பகவதி அம்மன். கோவிலின் முன்னாலே வலது புறமாய் ஒரு சமாதி. கோவிலின் எதிரில் குளம். பகவதி தாயின் முன்னாலே நின்றேன் ஆண்டவனே. என் கால்கள் தானாகவே உயர்ந்தன. இரு கால்களின் கட்டை விரல்கள் மட்டும் பூமியில் ஊன்றி நின்றதைக் கண்டேன். என்னை அறியாமலே நடந்து கொண்டிருந்த விந்தை அது. பகவதி அம்மனின் அருளால், அவள் குடிகொண்டிருக்கும் இடத்தில் இப்படியான சம்பவம் நடந்தது. அம்மாவை நோக்கி கைகூப்பி நின்று கொண்டிருந்தேன் ஆண்டவனே. அப்போது ஒரு குரல் கேட்டது. ’மாப்பு தரு சாமி, மாப்பு தரு சாமி’ என்று வேண்டியது.”

”எங்கிருந்து குரல் வருகிறது என்று உற்று நோக்கினால், கோவிலின் முன்பு இருக்கும் சமாதியின் உள்ளிருந்து வந்ததைக் கண்டேன். என்னிடம் எதற்கு மாப்பு (மன்னிப்பு) கேட்கிறது அக்குரல் என்று எனக்குப் புரியவில்லை, ஆண்டவனே. புரியாமல் அங்கு நின்று கொண்டிருந்தேன்” என்றுச் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு கிறுகிறுத்தது. எனக்கோ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜென் தத்துவங்களில் மட்டுமே ஈடுபாடு அதிகம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் போல கடவுளைக் கழுவி ஊற்றியவர் எவரும் இல்லை. அதைப் போல ஓஷோ. அந்தளவுக்கு கடவுளையும், பூசாரிகளையும் அவர்களின் திருட்டுத் தனத்தையும் உரித்து தொங்க விட்டவர்கள். இவர்களாவது பரவாயில்லை. 

எம் குருநாதரின் குருவான கேரளா வடகரை சிவானந்த பரமஹம்சரின் வழிபாட்டு முறை கற்பு கண்றாவிகளை கேள்வி கேட்பவை. பிரம்மத்தை உடல் தாண்டி உணர வைப்பவை. சித்த வித்தை என்றொரு புத்தகம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். ஆசிரமம் சென்றால் நிச்சயம் அதிர்ந்து விடுவீர்கள். ஆசிரம நடைமுறைகள் திடுக்கிடச் செய்வன. சாதாரண நிலையில் இருப்போருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி உண்டாக்கும். என்னைப் பொறுத்தவரை அவரின் வழிபாட்டு முறை சரி.

இவர்களின் வழியில் அற வாழ்க்கையை நடத்தும் எனக்கு சுவாமி சொன்ன செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது.

திடீரென்று மனதுக்குள் ஒரு சம்பவம் நிழலாடியது. அதன் காரணமாய் எனக்குள் இருந்த மனமானது செய்வதறியாது திகைத்து நின்றது. அதுதான் காரணமா? பல விடை தெரியா கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதா? அறிவு ஏற்க மறுத்தது. அது என்ன? என்று பிறகு பார்க்கலாம்.

சுவாமி, என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர். உடனே அவரிடம் ”நான் அங்குச் செல்ல வேண்டுமென்று கேட்டேன். ஏற்பாடு செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆசிரமம் வரும் சுவாமியின் சீடர் திருச்சூர் சீனி ஏட்டனிடம் என்னை கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

மறுநாள் விடிகாலையில் கோவையிலிருந்து கிளம்பி சீனி ஏட்டன் வீட்டுக்குச் சென்றேன். 

அவர் வீட்டில் ஒரு அற்புதம். 

சீனி ஏட்டனின் அம்மாவைப் பார்த்தேன். தெய்வாம்சம் நிரம்பிய அருள் பொங்கும் அன்பு முகம். 

என் வாழ்நாளில் அப்படி ஒரு பெண்மணியைக் கண்டதே இல்லை. உள்ளத்தூய்மை கொண்ட அன்னை அவர். 

அண்ணணும் தங்கையும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அந்த அன்னை நற்குழந்தைகளைப் பெற்று இருக்கிறார். அன்னபூரணி அம்மாவைப் போன்ற தூய்மையான தோற்றம். எனக்கு திடீரென்று பகவான் ராமகிருஷ்ணரின் மனைவி சாரதா தேவியார் நினைவிலாடினார். 

ஒழுக்கமும், தெய்வ சிந்தனையும்,  அற வாழ்க்கையும் கொண்ட பெண்கள் தான் பூமியின் உண்மையான தெய்வங்கள். அவர்களின் படைப்புகள் தான் உலகை வழி நடத்தும் திறன் கொண்டவர்களாய் மிளிர்வார்கள். ஆரம்பகாலத்தில் ஜாதி மொழி பார்க்காத மனிதர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அவர்களின் படைப்புகள் உலகை வழி நடத்தினர். 

ஆனால் இப்போது ஒழுக்கம் தவறிய வாழ்க்கைதான் உயர்வானது என்ற கீழ் சிந்தனையில் பெண்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். பெண் விடுதலை என்பது தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பெண்களின் பொருளாதார விடுதலை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. விஜய் டிவி நீயா நானாவில் ஒரு பெண்மணி அறுனூறு சேலை வாங்கி வைத்திருக்கிறேன் என்றும் நான் சம்பாதிக்கிறேன் நான் வாங்குகிறேன் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? என்று பேசியதைக் கேட்டேன். இப்படியான பெண்களின் வாரிசுகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

சீனி ஏட்டன் இட்லி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் மிளகாய் பொடி காலை உணவு அளித்தார். அத்துடன் சாயா ஒன்று. 

வீடு என்பது அறம் வாழும் இல்லம். ஒரு சில வீடுகளுக்குள் நுழையவே முடியாது. உடலில் எரிச்சல் உண்டாகும். ஒரு சில வீடுகளுக்குள் சென்று வந்தால் தரித்திரம் நம்மையும் பீடித்து விடும். பெரும்பாலும் நான் எவரின் வீட்டுக்கும் செல்வது இல்லை. உள்ளே நுழைந்ததும் தெரிந்து விடும் அவர்களின் வாழ்க்கை. இதற்கெல்லாம் ஞானம் தேவை இல்லை. அனுபவத்தில் அறியலாம். வாய் சும்மா இருக்காது. உண்மை பேசுகிறேன் பேர்வழி என உளறி விடுவேன். அது தேவையற்ற மனச்சங்கடங்களை உருவாக்கி விடுவதால் தவிர்த்து விடுவேன். 

சீனி ஏட்டனின் வீட்டில் அன்றலர்ந்த மலர் போன்ற முகங்கள் கண்டேன். மனதும் வயிறும் நிறைந்தது. எல்லாம் குருநாதரின் ஆசீர்வாதம்.

சீனி ஏட்டன் வழிகாட்ட கொடுங்களூர் நோக்கிப் பயணித்தேன்.

சுவாமியிடம் ஏன் அந்தக் குரல் இன்னும் பத்தடி தூரம் வா என்று சொன்னது?  அந்த குரல் யாருடையது? மாப்பு தரு சாமி என்ற குரல் ஏன் சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டது? இன்னும் பல விடை தெரியாக் கேள்விகளுடன் கொடுங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

தொடரும்...!

Sunday, April 3, 2022

நிலம் (94) - சென்னை சி.எம்.டி.ஏ - சிங்கிள் விண்டோ அனுமதி

வீட்டுமனை அப்ரூவல், கட்டிட அப்ரூவல், மனை அப்ரூவல் செய்ய விரும்பினால் தலையில் இருக்கும் முடிகள் கொட்டி, அலையோ அலையென்று அலைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, இளிக்க வேண்டிய இடத்தில் இளித்து, இன்னும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தும் காலத்தில் கிடைத்து விடாது.

அதிமுக ஆட்சியின் போது பணம் வாங்கிக் கொண்டுதான் ஃபைலை வாங்குவார்கள். பணத்தையும் கொடுத்து விட்டு நாயாய் பேயாய் அலைந்து திரிய வேண்டும். அரசு அதிகாரிகள் ஊழல்வாதி ஜெயின் மரணத்திற்குப் பின் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தினார்கள். இப்போதும் ரெவின்யூ துறையில் நடக்கும் ஊழல்கள் எழுத்தில் எழுத முடியாது. அவ்வளவு ஊழல் புறையோடிக் கிடக்கிறது. 

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என கருங்காலி எட்டப்பன் ஆட்சி நடத்தி வந்தான். ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளும் கருங்காலி கயவனுடன் இணைந்து கொண்டு அட்டகாசம் செய்தார்கள். இனியும் அவர்கள் ஓய்வார்கள் என்று நம்பமுடியாது. அரசுகள் எத்தனை சிஸ்டம் கொண்டு வந்தாலும் ஊழல் செய்ய முடிவெடுத்தால் தடுக்கவே முடியாது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி காசு வாங்காமல் எதையும் இங்கு பெற்று விட முடியாது.

எத்தனை அரசுகள் வந்தாலும் ஊழலில் ஊறிப் போய் புழுத்துப் போன அரசு அலுவலர்கள் திருந்தமாட்டார்கள்.

ஊழல் செய்து பிடிபட்டால் மரண தண்டனை என்று சட்டம் இயற்றாதவரைக்கும், ஊழலில் தண்டிக்கப்பட்டால் சொத்துக்கள் நாட்டுடைமை என்று சட்டம் வராத வரைக்கும் திருந்த மாட்டார்கள். அரசியல்வியாதிகள் இருக்கும் வரை, வந்தேறிகள் ஆட்சியில் இருக்கும் வரை எதுவும் நடக்காது. 

நான் ஏன் அடிக்கடி வந்தேறிகள் பற்றி எழுதுகிறேன் என்றால் நக்கீரனில் தொடராக வந்து கொண்டிருக்கும் குற்றப் பரம்பரை சட்டம் எப்படி வந்தது என்று யூடியூப்பி பேசும் புரபசர் ரத்னகுமாரின் பேட்டியைப் பாருங்கள். சுய நலத்தின் ஒட்டு மொத்தம் வந்தேறிகளே. அவர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தச் சட்டம் இயற்ற பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் வந்தேறி. கூடவே இருந்து குழிபறிக்கும் செயல். எத்தனை ஆட்கள் ஜெயிலில் கிடந்து செத்தார்கள் தெரியுமா?  எத்தனை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் தெரியுமா?

வீடியோ கீழே இருக்கிறது. அனைத்தையும் பாருங்கள். சகித்துக் கொள்ள முடியாத அக்கிரமச் செயல்களுக்கு துணை போனது மட்டும் அல்லாமல் தங்களை வளர்த்துக் கொள்ள தமிழர்களை பலியிட்டார்கள் வந்தேறிகள்.


இத்தனை சிரமப்பட்டு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதில் யாருக்கும் முன்னறிவு இல்லாத காரணத்தால் அவரவருக்குத் தெரிந்த கதையெல்லாம் சொல்லிப் பாடாய்படுத்துவார்கள். 

சென்னையில் நேற்று இப்படி பல்வேறு சிக்கல்களை உருவாக்கி பெரும் ஊழல் நடந்து கொண்டிருந்த பில்டிங்க், லேயவுட், மனை, சப்டிவிஷன் அனுமதிகளை சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலம் எளிதில் அதுவும் உடனுக்குடன் பெற புதிய இணையதளம் ஒன்றினை ஆளும் திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது.

சென்னை கார்ப்பொரேஷனின் அதிரடியாக சென்னை பெரு நகர் வளர்ச்சிக் குழுமம் லேயவுட் அப்ரூவல், சி.எம்.டி.ஏவுக்கு உட்பட்ட நிலத்தின் உட்பிரிவுகள்,  வீட்டு மனை அப்ரூவல், பில்டிங்க் அப்ரூவல் போன்றவற்றை இனி எளிமையாக விண்ணப்பம் செய்து அனுமதி பெறலாம்.

https://onlineppacmda.tn.gov.in

முதலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு, அதன் பிறகு கார்ப்பொரேஷன் அனுமதி பெற்ற ஆர்க்கிடெக்டை/சர்வேயர் இன்வைட் செய்து கொள்ளுங்கள். தேவைப்படும் ஆவணங்களை அப்லோட் செய்து விட்டால் அதன் பிறகு அரசு வகுத்துள்ள கட்டணங்களை செலுத்தி விட்டால் போதுமானது. மேலதிக விபரங்களைப் படிக்க மேலே இருக்கும் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்

Sunday, March 27, 2022

காக்கை குருவி ஹிஜாப் முஸ்லிம்கள் இந்துக்கள் இந்தியா

கோவை பேரூரிலிருந்து சிறுவாணி வரை சாலையை இருபக்கமும் அகலப்படுத்திக் கொண்டிருகின்றார்கள். கனரக இயந்திரங்கள் சாலைகளின் இருமருங்கும் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து விட்டு ஜல்லி நிரப்பப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கூட்டம் கார்களிலும், பைக்குகளிலும் டான்ஸ் கிளப்பின் ஹெட் ஆஃபீசுக்கு வருகிறது. சாலையை அகலப்படுத்த வேண்டிய அவசியம் வந்து விட்டது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கிறது. யானை வழித்தடத்தில் அனுமதி கிடைத்தது எப்படி என்பதெல்லாம் மர்மத்தின் கதை. இந்த அபார்ட்மெண்ட் பற்றிய தகவல்கள் ரெராவில் கிடைக்கவில்லை. அந்த அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஈஷா டான்ஸ் கிளப் ஓனரின் நட்புவட்ட மந்திரி பிரதானிகளின் அன்பினால் அபார்ட்மெண்ட்டுக்கு செல்லும் சாலைகளை செப்பனிட்டும், சாலையோரம் சிமெண்டால் தடுப்புகள் கட்டி அகலப்படுத்திக் கொடுத்தார்கள். கொடுப்பினை வேண்டும்.


(ஈஷா டான்ஸ் கிளப் கட்டிக் கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட் வட்டத்தில் இருப்பது)

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் காருண்யா போலீஸ் நிலையத்தின் கேட்டை கடந்த வாரம் யானை ஒன்று கோபத்தில் உடைத்து எறிந்து விட்டது. பார்க்க புகைப்படம். ஆதாரம் இருக்கிறது. சும்மாச்சுக்கும் எழுதவில்லை.


கடந்த வாரத்தில் யானையால் உடைக்கப்பட்ட காருண்யா நகர் காவல்துறை அலுவலகத்தின் பிரதான கேட்

இப்படியெல்லாம் தொண்டாமுத்தூர் ஈஷா டான்ஸ் கிளப்பால் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்பது இயற்கையை அழித்தலில் தான் தொடங்குகிறது அல்லவா? அதை செவ்வனே செய்கிறார்கள் இந்தப் பகுதியில்.

கோடை காலத்தில் மலைகளில் தண்ணீர் இருக்காது. யானைகள் மலையிலிருந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் பல்லாண்டுகாலமாக இருக்கும் வழித்தடம் வழியாக கீழே வரும்.

அந்த வழித்தடத்தில் ஈஷா டான்ஸ் கிளப்பைக் கட்டி வைத்துக் கொண்டுள்ளது. சிவராத்ரி அன்றைக்கு மலைகளில் அமைதியாக இருக்கும் காக்கை குருவிகளில் இருந்து அனைத்து மிருகங்களையும் டான்ஸ் என்ற பெயரில் கடூர சத்தத்தினால் பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் புரிதலும் இன்றி அரிப்பு தாளாமல் கார்களில் குவியும் மனிதப் பிறவிகளை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஆன்மீகத்தின் முக்கியதன்மை அமைதியாக இருப்பது. ஆட்டம் பாட்டம் இல்லை. 

அது மட்டுமல்ல சாலையை அகலப்படுத்துகிறேன் பேர்வழி என ஆலந்துறை அரசுப் பள்ளியின் எதிரில் இருந்த பெரிய மரமொன்றை வெட்டி வீழ்த்தி விட்டார்கள். மிகப் பெரிய மரம் அது. அடுத்து காருண்யா நகரில் சிறுவாணி சூப்பர் மார்க்கெட் பகுதியில் இருந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள். 

காக்கைகளும், குருவிகளும் அடைந்திருந்த வாழ்விடமான அந்த மரங்களை மனிதப்பதர்களின் வசதிகளுக்காக வெட்டி விட்டார்கள். எத்தனை ஆண்டுகாலமாக அம்மரங்கள் அங்கிருந்தனவோ தெரியவில்லை. எத்தனையோ சின்னஞ் சிறு பறவைகளுக்கு அவைகள் புகலிடமாக இருந்தன. இனி அப்பறவைகள் வாழ்விடத்திற்கு  என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை.

மரங்களை வெட்டா வண்ணம் சாலைகள் அமைத்தால் ஒன்றும் குறையப்போவதில்லை. நாம் பிறக்கும் முன்பே உருவான மரத்தை வெட்ட வேண்டுமா என்று காண்ட்ராக்டர் கூட நினைக்கவில்லை. ஊர்க்காரர்கள் கூட தடுக்கவில்லை. என்ன தான் ஜென்மமோ தெரியவில்லை.

ஏற்கனவே ஈஷா டான்ஸ் கிளப் நூறு ஏக்கரில் இருந்த மரங்களை வெட்டி, பெரும் பாறைகளை வைத்து கிளப்பை சுற்றிலும் மதில் கட்டி விட்டது. இந்த இடத்தில் யானை வழித்தடமில்லை என்று சான்றிதழ் கொடுத்த அரசு மகானுபாவர்கள் ஏன் பெரும் பாறைகளை வைத்து மதில் கட்டினீர்கள் என்று கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கிளப்பின் கருணையில் வாழும் கிளப் டான்ஸ் சேவகர்கள் அவர்கள். சம்பளத்தை விட கிம்பளமும், அதிகாரமும் பெரிது அல்லவா? 

அறம், சட்டம், தர்மம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதுதான் பரிகாரம் இருக்கிறதே, நவீன குரு இருக்கின்றார்களே. அவர்கள் சிவபெருமானையே பூமிக்கு கொண்டு வந்து பதிய வைத்திருக்கிறார்கள். அவர் நம்மை கவனித்துக் கொள்ள மாட்டாரா? என்ற நிலையில் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

இப்படி மரங்களையும், வழித்தடங்களையும் அழித்து விட்டால் காக்கைகளும், குருவிகளும் வேறு எங்குதான் போகும்? யானைகளும், இதர விலங்குகளும் வேறு எங்குதான் செல்லும்?  அவைகள் எப்படித்தான் உயிர் வாழ்வது? எல்லாவற்றையும் ஆக்கிரமித்து அழித்து விட்டால், பறவைகள் குடியிருக்கும் பெரும் மரங்களை வெட்டி விட்டால் அவைகள் எப்படித்தான் வாழும்? ஏன் இவைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கேட்பதற்கு நாதி எவர் இருக்கிறார் இங்கே? உழவு மாட்டைக் கூட வயதானால் அறுப்புக்கு அனுப்பும் மனிதர்கள் தானே இவர்கள்.

பிரிட்டிஷாரிடம் அடிமையாக கிடந்த ஜீனில் பிறந்தவர்களுக்கு கேள்வி கேட்க கூட தைரியமில்லை.

காக்கைகளும் குருவிகளும் விலங்குகளும் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா? பசு மாட்டுக்கு மட்டும் தான் பேசுமா இந்த உலகம்? பசு மாடு பால் தரவில்லை என்றால் அதையும் அல்லவா அனாதை ஆக்கி இருக்கும் இந்த உலகம்? இத்தனை அக்கிரமங்களும் ஒரே ஒரு டான்ஸ் கிளப்புக்காக நடத்தப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இயற்கையை அழித்து அழித்து சுடுகாடாய் மாற்றித்தான் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டுமா? பிற உயிரை வதைத்துதான் ஆன்மீக வளர்ச்சி பெற வேண்டுமா? 

ஹிஜாப் போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது கர்நாடக ஆளும் பாஜக அரசு.

அடப் பதர்களே..!

இந்தியா என்ற நாடே இல்லாத நாளில் முஸ்லிம் மன்னர்கள் தான் இந்த நாட்டை ஆண்டார்கள். ஓளரங்க சீப் ஆங்கிலேயர்களைக் கட்டி வைத்து அடித்து துரத்தினார். பகதூர்ஷா காலத்தில் தான் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வாணிபம் செய்ய அனுமதி பெற்றார்கள். தென் பகுதியில் தமிழர்கள் ஆண்டார்கள். அன்றைக்கு பிரிட்டிஷ்காரனை எதிர்த்து நின்று போரிட்டுச் செத்துப் போனவர்கள் முஸ்லிம்கள். பல இனத்தவர்களும் போரிட்டு உயிரை விட்டார்கள். 

ஒருங்கிணைந்த அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வந்த உருவ வழிபாட்டினை கொண்டவர்களை பிரிட்டிஷ்காரன் தான் இந்து என்று அழைத்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட ஹிந்துஸ்தான் என்ற பகுதியை இந்தியா என்று கட்டமைத்தான். அதன் பின்னால் தான் இந்து மதம் உருவானது, இந்துக்கள் என்று உருவானது.

அதற்கு முன்னாலே இந்திய வடபகுதி முஸ்லிம் மன்னர்களால் ஆளப்பட்டது. இந்துக்கள் எவரும் இந்தியாவை உருவாக்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்தனர். அவரவர் பகுதிக்கு அவரவர் தலைமையில் ஆண்டு வந்தார்கள். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வெறுக்கும்படியும், அவர்களின் உடை கலாச்சாரத்தில் நுழைய பாஜகவிற்கு தகுதியே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற மமதையில் ஆடும் பதர்களுக்கு, ஆன்மீக பூமியான இந்தியா அழிவைத்தான் பரிசளிக்கும்.

உலகிலேயே இந்தியா மக்கள் தான் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள். கொன்றவன் பிரிட்டிஷ்காரன். அவனைக் கேட்க இங்கு எவனுக்கும் தைரியமில்லை. ஹிஜாப் போட்டால் தடுக்கிறார்கள்.

அன்றைக்கு எங்கே போனார்கள் இன்று இந்து மதம் என்று பேசுபவர்கள்? மக்களை மதத்தின் பெயரால் பிரித்து தங்களுக்குள் அடித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் ஷூவை நக்கிக் குடித்த வந்தேறிகளின் சூழ்ச்சி இது.

இந்துக்களை விட தற்போதைய இந்தியாவின் வட பகுதி முழுமையும் நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் அவர்கள். நன்றி மறந்து விடக்கூடாது.

வந்தேறிகள் துபாஷி என்ற பெயரில் மொழி பெயர்ப்பாளராய் இருந்து கொண்டு காட்டிக் கொடுத்தவர்கள். இதர இன மக்களை பிரிட்டிஷ் அடிமைப்படுத்த துணை சென்றவர்கள். அவர்கள் பிரிட்டிஷாருடன் உட்கார்ந்து கொண்டு அனைவரையும் அழித்தவர்கள். பிரிட்டிஷ்காரன் காலத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் இந்த வந்தேறிகள்தான். கூடவே இருந்த இனத்துரோகிகள் அவர்கள். மன்னிக்கவே கூடாத சூழ்ச்சிக்காரர்கள்.

செட்டியாரும், முதலியாரும், பள்ளர்களும், பறையர்களும், முஸ்லிம்களும் நிறைந்த நாட்டில் பிரிட்டிஷ்காரனால் வலிந்து திணிக்கப்பட்டவர்கள் இன்றைய கிறிஸ்துவர்கள். வரலாறு இதைத்தான் சொல்கிறது.

இந்தியா ஆன்மீக பூமி. பல கோடிக்கணக்கான உயிர்களை பலியிட்டு உருவானது இந்தியா. மஹாத்மா காந்தியின் புதிய ஆயுதமான அஹிம்சையை பிரிட்டிஷ்காரனால் வெற்றி கொள்ள முடியவில்லை. அன்றைய காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் செய்து பனிரெண்டு வருடம் ஜெயிலில் கிடந்த நேருவைப் பற்றிப் பேச இங்கு எவருக்கும் தகுதி இல்லை.

எல்லோரும் எல்லாவற்றையும் பேசி விட முடியாது. 

கர்ப்பினி பெண் ஒருத்தியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து, அதன் தலையை வெட்டி வீழ்த்திய காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த மனிதர்களை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்பது காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதை விட நல் வார்த்தை ஏதுமில்லை.

ஆன்மீக பூமியில் விரைவில் நல்லன நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பொய்க்கவில்லை. 

அசுரர்கள் அழிவது போல எல்லாமும் சுத்தப்படுத்தப்படும் காலமும் விரைவில் வரும். வந்தே தீரும். அறம் என்றும் உயிர்ப்போடு இருக்கும் பூமி நமது இந்தியா.

Saturday, March 26, 2022

புதிய கல்விக் கொள்கை - தமிழர் விரோத பத்திரிக்கையாக மாறுகிறதா தினமணி?

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்.

வேறு எந்த உதவியையும் மனிதன் மறக்கலாம் ஆனால் செய் நன்றியை மறந்த ஒருவனுக்கு வாழ்வில் உயர்வென்பதே இல்லை என்கிறார் தமிழ் புலவர் திருவள்ளுவர்.

இன்றைய 26.03.2022 தினமணி தலையங்கத்திலே ’அஸர் 2021’ அறிக்கை பற்றிய கவலையைத் தெரிவித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக பங்கு பெற்று மாணாக்கர்களின் கல்வியை உயர்த்திட வேண்டுமென்று அக்கறையுடன் முடித்திருக்கிறது.

தலையங்கத்தின் இறுதியில் ஒரு பத்தி இப்படி இருக்கிறது.”கரோனா இல்லாத சமயத்திலேயே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்பதால் 5ம் வகுப்பு மாணவர்களால் கூட 2ம் வகுப்பு பாடங்களைக் கூட சரியாகப் படிக்க முடியவில்லை என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 64.5 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை ’அஸர் 2021’ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” 

தினமணி ஆசிரியரே....!

மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்கான முக்கியமான காரணம் முதலில் ஆசிரியர் தான். அடுத்து அவனது சூழல் அல்லது அவனது உறவினர்களாக இருக்கும். எந்த மாணவன் எப்படி படிப்பான் என்பதை ஆசிரியர் கண்டுணர்ந்து கல்வி புகட்ட வேண்டியது அவர் பணி. அனைவரும் பாஸ் என்றால் மாணவர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். முற்றிலும் இது சால்சாப்பு. எந்தப் பெற்றோரும் தன் மகன் படிக்க கூடாது என்று விரும்ப மாட்டார்கள். 

ஆல் பாஸ் என்றால் கல்வி இடை நிற்றல் குறையும் என்றும், மாணவனுக்கு திடீரென்று நன்கு படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்து விட்டால் போதும் என்பதற்காகத்தான் அரசு அனைவரும் பாஸ் என்றுச் சொல்கிறது. ஆரம்ப காலங்களில் சரியாகப் படிக்காத பல மாணாக்கர்கள் ஒரு சில வருடங்களில் நன்கு படிப்பார்கள் என்பதை ஆறேழு வருடம் ஆசிரியப் பணி செய்து வந்த எனக்கு நன்கு தெரியும். புதிய கல்விக் கொள்கை தேர்வு வைக்கச் சொல்கிறது. 

தேர்வில் தோல்வி அடைந்தால் இன்றைய பாஜக ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இந்தியாவில் அடுத்த வேளை சோற்றுக்கு வேலை செய்யச் சென்று விடுவார்கள். 30 சதவீதம் விலைவாசி உயர்ந்து விட்டது. நல் உணவு என்பது எட்டாகனியாகப் போனது ஏழைகளுக்கு. விலை வாசி உயர்வால் ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகரிக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் இன்றைக்கு நான்காயிரம் ஆகிறது. அதே வருமானம், ஆனால் செலவினம் கூடுகிறது. இந்த நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு மாணாக்கன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பான் என எதிர்ப்பார்ப்பது அறிவீனம். பெற்றோர்களும் சடைந்து போவார்கள். மேற்படிப்புக்கு எவனும் வரக்கூடாது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் மறைமுக திட்டம் என்பதைக் கல்வியாளார்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மிக நன்றாக பாடம் நடத்தக் கூடிய அனுபவம் பெற்றவர்கள். தனியார் பள்ளி வரும் முன்பே அரசால் நடத்தப்பட்டப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் இன்றைக்கும் உலகை ஆள்கிறார்கள். அவர்களால் தான் உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அதை விடுத்து 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எழுதுவது கயமைத்தனம்.

ஆளும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதியக் கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. அதற்காக மக்களிடம் பொய்யை விதைக்க தங்களின் அறிவை கயமைத்தனமாகப் பயன்படுத்துவது கொடூரம்.

5ம் வகுப்பில் தேர்வு, 8ம் வகுப்பில் தேர்வு, 10ம் வகுப்பில் தேர்வு, 12ம் வகுப்பில் தேர்வு, கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலே தரத்தினை சோதிக்கும் படி மனிதர்களைச் சோதிப்பது என்பது மனித குல வரலாற்றில் இல்லாத கொடூரம்.

பாஜகவின் பிரதமர் மோடி எந்தக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு நாட்டை ஆளுகிறார்? ஆசிரியர் அவர்களே?

நீங்கள் என்ன கல்வித் தகுதியில் தினமணிக்கு ஆசிரியராக இருக்கின்றீர்கள்?

கல்வி என்பது அறிவு தேடலுக்கானது. அது மனிதனின் தரம் அல்ல.

உங்களின் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், தலையங்கமும் தமிழருக்கு விரோதமாக இருக்கிறது. 

கடவுள் என்பது கற்பிதம் என்ற பெரியாரின் சொற்களால் விளைந்தவை தான் பகுத்தறிவு. 

தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள், அறம் வாழ்வு வாழ்பவர்கள். அவர்களால் உணவு உண்ணும் நீங்களும் உங்கள் பத்திரிக்கையும் தொடர்ந்து தமிழர் விரோத செய்திகளை பொய்யாகப் புனைந்து மக்களை மாக்களாக மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்காதீர்கள்.

உங்களுடைய நோக்கம் புதிய கல்விக் கொள்கை மிக மிக நல்லது. அதை திமுக அரசு எதிர்க்கிறது என்று மக்களிடம் பொய்யைப் பரப்புவது மட்டுமே.

சமீபத்திய சட்டசபை நிகழ்வில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றும் உத்திரப் பிரதேசம் பீகாருடன் ஒப்பிடக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார். 

தமிழகத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றார். அதற்கு உடனே சங்கி மீடியாக்களும், சங்கி போலிகளும் செல்போன் வைத்திருப்பதால் தமிழகம் பணக்கார மா நிலம் என்றுச் சொல்வதாக திரித்து சங்கி தளம் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் போலிச் செய்தியை புரட்டுச் செய்தியைப் பரப்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையை போலிச் செய்திகளை அடையாளம் கண்டு, எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைப்பு ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.

தமிழர்கள் சீரழிய வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் நடத்தப்படும் பத்திரிக்கைகள் காலப் போக்கில் என்னவாகும் என்பதை அறம் வழி வாழ்வியல் கொண்ட தமிழகம் உங்களுக்கு புகட்டும்.

வாழ்க வளமுடன்...!


Monday, March 21, 2022

மாப்பு தரு சாமி - விதை

’மனமது செம்மையானால் மந்திரம்’ தேவையில்லை என்பதால் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினை படித்து அதன் வழி நடப்பவன். 

’நீயே கடவுள்’ என்ற திருமூலரின் வார்த்தையின் மீது பிடிப்புக் கொண்டவன். 

வள்ளலாரின் ‘ஜீவகாருண்யத்துக்கு’ மேலானது வேறில்லை என்று நினைப்பவன்.

’அன்பே கடவுள்’ என நம்புபவன். 

உருவ வழிபாடுகள், பூஜைகள், ஆரத்திகள், மந்திரங்கள் ஓதுவது போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு இருக்காது. 

கோவிலுக்குச் செல்வேன், வணங்குவேன். அவ்விடங்களில் என் மனமானது சலனமற்று இருக்கும். அமைதியாக இருப்பேன். உள்ளத்தில் வேறேதும் சிந்தனைகள் கிளம்பாது. மனம் இறந்த நிலையில் அமைதியாக அமர்ந்திருப்பேன். கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் கூட இங்கணம் அமர்ந்திருப்பேன். எந்த இடம் மன அமைதியைத் தருகிறதோ, மனதில் சலனமற்ற தன்மையை உருவாக்குகிறதோ அந்த இடத்தில் இருப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்.

சமீப காலமாக நானொரு செயலைச் செய்து வருகிறேன். எனக்கு அது நல்ல பலன்களைத் தருகிறது.

எம் குரு சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆலய வாசலில் ’பேச்சைக் குறைத்து மூச்சை கவனி” என்ற வாசகம் இருக்கும். 

அதன் அர்த்தம் எனக்கு தெரிந்தாலும் அதை நான் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. 

திடீரென்று ஒரு நாள் மூச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். மூச்சை நன்கு உள் இழுத்து வெளியில் விடுவேன்.அதைக் கவனிப்பேன். அப்போது வேறு எந்தச் சிந்தனையும் இறாது. அங்கணம் செய்யும் போது மனம் அதன் சிந்தனை அல்லாது போகும். இதனை வாடிக்கையாக செய்து வந்தேன். எப்போதெல்லாம் படுக்கையில் படுத்திருப்பேனோ அப்போதெல்லாம் மூச்சைக் கவனிப்பது எனக்கு வழக்கமாகியது.

இரவுகளில் தூக்கம் வராத நாளில் இங்கனம் செய்யும் போது சட்டென்று தூக்கம் வந்து விடும். 

இப்படியான ஒரு நாளில் ஒரு மாலை நேரம், சிதார் இசை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூச்சைக் கவனிக்க ஆரம்பித்த போது விழிப்பு நிலையில் உடலில் இருந்து எதுவோ வெளியேறியது போல தோன்றியது. அடுத்த நொடியில் நான் என் உடம்பைப் பார்ப்பது போல தோன்றியது. சட்டென்று பயமேற்பட உதறி எழுந்தேன். 

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

ஜோதி சுவாமிகளிடம் இது பற்றிக் கேட்ட போது, ’தொடர்ந்து அப்படியே செய்து வாருங்கள், சரியான வழியில் தான் செல்கின்றீர்கள்” என்றார்.

சென்ற நாட்களுள் ஒரு நாள் மாலையில் ஆசிரமத்தில் இருந்து வீட்டுக்கு வந்த கோதை படபடப்பாக அருகில் வந்து அறைக்கதவைச் சாத்தினார்.

முகம் பார்த்தேன்.

“ஏங்க, அன்னபூரணி அம்மாவைப் பார்த்தேன், போதுங்க, என் பிறப்பு முழுமையடைந்து விட்டது” என்று சொல்ல எனக்கு ‘ஞே’ என்று தோன்றியது. 

’என்ன சொல்றா?’ என்று குழம்பினேன்.

விபரம் கேட்டேன். சொல்ல ஆரம்பித்தாள்.

மாலை நேரம், மங்கிய பொழுதில், ஜோதி சுவாமி அறைக்குள் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது ’ஜல்,ஜல்’ என்ற ஒலியுடன் ஒரு அம்மா வந்திருக்கிறார். அவரின் முகம் மஞ்சள் வண்ணமாக தேஜஸுடன் ஜொலித்திருக்கிறது. 

அறை வாசலில் நின்று கொண்டு “ஜோதி, சவுக்கியமா?“ என்று கேட்டவுடன்,  அவரைப் பார்த்த சுவாமி அப்படியே பேச்சு மூச்சன்றி மயங்கி விழுந்து விட பதட்டத்துடன் கோதையும் அருகில் இருந்த இன்னும் சிலரும் முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையை தெளிவிக்க, சுவாமி ”அம்மா! அம்மா!” என்று கோதையிடம் சொல்ல விதிர்த்து நின்ற கோதை அந்த அம்மாவைப் பார்த்து வணக்கம் சொல்ல சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்த அம்மா காணாமல் போய் விட்டார் எனச் சொன்னார்.

இச்சம்பவம் நடந்தது ஆசிரமத்தில்.

சொல்பவர் மனைவி. 

சுட்டிக் காட்டியவர் ஜோதி சுவாமி. 

நம்பித்தான் ஆக வேண்டும். 

எனக்குள் ஒரு கேள்வி முளைத்து விட்டது. 

”என்னால் புரிந்து கொள்ள முடியாத, உணர்ந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது போலும். அது என்ன?”

மனமற்ற நிலைக்குச் செல்வதைத்தானே யோகிகள் சொல்லி இருக்கின்றார்கள். அந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் பிரபஞ்சத்துடன் இணைந்து விடலாம். ’நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்’ என்ற நிலையில் இயற்கையில் ஆழப் புதைந்து போய் விடலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் கோதை என்னிடம் சொல்லியது வேறொன்றாக இருக்கிறதே எனக் குழப்பமானது.

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் தெய்வமான காளியுடன் பேசுவார் என்று மகேந்திர நாத் குப்தா ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்” நூலில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்து விட்டது.

கேள்வி துளிர்த்து.

தளைந்தது.

செடியாகி நின்றது.

சுவாமி திடீரென்று அழைத்து, ”கேரளா போயிட்டு வர்றேன் ஆண்டவனே” என்றுச் சொல்லி விட்டு அக்கா ராஜேஸ்வரியுடன் சென்று விட்டார்.

மாலை நேரத்தில் அவரிடமிருந்து போன் வரவில்லை. 

எனக்குள் சிறு பதட்டம் வந்து விட்டது. 

ஏனென்றால் ரித்திக் முதன் நாள் காரில் சிட் லைட்டை அணைக்காமல் விட்டு விட்டான். காரின் பேட்டரி டவுன். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. விடிகாலையில் கார்கேர் மதன் வீட்டிற்கு வந்து வேறு பேட்டரியை வைத்து காரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டிருந்தார். 

பின்னர் மறுபடி கார் ஸ்டார்ட் ஆனது. பாட்டரியினால் சுவாமியின் பயணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டதோ என்று தோன்றியது.

மறுநாள் காலையில் அழைத்தேன். அழைப்பை எடுக்கவில்லை. அக்காவுக்கு அழைத்தேன் அக்காவும் எடுக்கவில்லை. 

சிறிது நேரம் சென்ற பின்னாலே, சுவாமி அழைத்தார்.

“ஆண்டவனே..! மாப்பு தரு சாமி” என்ற வார்த்தையினைச் சொன்னார்.

எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும் என்பதால் மாப்பு என்றால் மன்னிப்பு என்று தெரியும். 

அந்த வார்த்தையை ஏன் சுவாமி என்னிடம் சொன்னார்?

விரைவில்... 

Thursday, March 17, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல் தொடர்ச்சி

 16.,03.2022ம் தேதி எழுதிய பதிவினைக் கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

https://thangavelmanickadevar.blogspot.com/2022/03/blog-post_16.html

இன்றைய 17.03.2022 பிசினஸ் ஸ்டாண்டர் செய்திதாளில் வெளியான தலைப்புச் செய்தி கீழே இருக்கிறது. படத்தின் மீது சொடுக்கி படித்துக் கொள்ளவும். சட்டத்தின் ஓட்டைகளை எவ்வாறு தன் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று பாருங்கள். ரிலையன்ஸ் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்ட செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

(17.03.2022 - பிசினஸ் ஸ்டாண்டர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி மேலே)

உச்ச நீதிமன்றம் ஃபியூச்சர் குரூப்பிடமும், அமேசானிடமும் என்ன சொல்லி இருக்கிறது என்று கட்டமிட்ட செய்தியில் படித்துக் கொள்ளுங்கள். வழக்குதாரர்களின் ஒப்பீனியன் கேட்கிறது உச்ச நீதிமன்றம். எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ‘ரிலையன்சும் ஃபியூச்சர் குரூப்பும்’ அமேசானை ஏமாற்றுகிறது என. ஆனால் பாருங்கள் எந்தப் பத்திரிக்கையும் அதைப் பற்றி எழுதவில்லை. நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனால் என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

சும்மா கதை விடாதீர் என்று நினைத்தவர்களுக்கு மேலே இருக்கும் படமே என் பதிவுக்கு ஆதாரம்.

அடுத்து சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் வெளியான நியூஜெ நிறுவனம் பிஜேபிக்கும், ரிலையன்ஸ் மக்களை எப்படி முட்டாளாக்கி பிஜேபிக்கு நமோஸ்காரம் செய்து வருகிறது என்பதையும் படித்துக் கொள்ளுங்கள். மக்கள் கூட்டம் ஆட்டு மந்தைகள் என கருதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தினை தர்மமும் அறமும் - பிஜேபியின் தலையெழுத்தினை அயோத்தி ராமரும் முடிவு செய்வார்கள் என நம்புகிறேன்.


மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறார்கள் சமீபகாலமாக. அதிலொன்று சித்ரா -சுப்ரமணியம் கள்ளக்காதல் - ஷேர்மார்கெட் விவகாரம். 

மைலாப்பூர் மாமி சித்ராவின் கள்ளக்காதல் மர்மச் சாமியார் சுப்ரமணியம் கதை சாட்சியங்கள் இல்லாத சுமார் ஐந்து லட்சம் கோடி மோசடி ஊழல். இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் எல்லாம் பெரிய ஊழலை மைலாப்பூர் நிகழ்த்தி இருப்பதை வரலாற்றில் பதிவு செய்வோம்.

மைலாப்பூர் மாமி சித்ராவின் ஐந்து லட்சம் கோடி ஊழல் மூடி மறைக்கப்பட்டும் விடும். அதை செவ்வனே செய்வார் பத்திரிக்கை குள்ளநரி.