குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 26, 2021

நிலம் (87) - முறைகேடான பட்டா பத்திரப்பதிவினை நீக்குவது எப்படி?

அனைவருக்கும் இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிளாக்கைப் படித்து வரும் ஒரு வாசகி போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார்.

அவரொரு ஆசிரியை. சிவகாசி மாவட்டத்தில் கீழ திருத்தங்கல் கிராமத்தில் ஆசிரியையின் அப்பாவிற்கு பாக சாசனத்தின் மூலமும், சுயார்ஜித கிரைய வகையிலும் கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலம் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது. இவரின் அப்பா இந்தச் சொத்துக்களைக் குறித்து எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்யாமல் காலமாகி விடுகிறார். 

இந்த நிலையில் இவரின் சகோதரர் (இவர்கள் மொத்தம் ஐந்து பேர்) ஒருவர் தனது தாயின் பெயரில் பட்டாக்களை மாற்றி பாக சாசனத்தை வைத்துக் கொண்டு பெரும்பாலான இடங்களை விற்பனை செய்து விட்டார். அதுமட்டுமின்றி அம்மாவிடமிருந்து தனக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து பட்டாக்கள் மாற்றி அனுபவித்து வருகிறார்.

இதர நான்கு சகோதர சகோதரிகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டப்படி பாகம் இருக்கும் சொத்தின் உரிமையை மாற்றம் செய்து, விற்பனை செய்தது மட்டுமல்லாமல், தன் பெயரில் தான செட்டில்மெண்ட்டும் பெற்று வைத்திருக்கும் தம்பியின் சட்டமீறல்களை எங்கனம் சரி செய்வது என்று கேட்டார்.

வழக்கறிஞரிடம் சென்றால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, ஸ்டாம்ப் கட்டணம் கட்டி, வழக்காடினால் எத்தனை வருடமோ? 

அது மட்டுமின்றி வயதான அம்மா, கூடப்பிறந்த தம்பி மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்குமா? நீர் அடித்து நீர் விலகுவதில்லை. உறவுகளுக்குள் ஒன்றினைந்த மனம் இல்லையென்றால் அதை வைத்துக் கொண்டு சட்டமும், வக்கீலும் இன்ன பிற ஆட்களும் உறிஞ்சி விடுவார்கள். காலமும், பணமும் விரயமாகுமே தவிர பெரிதாக ஒன்றும் நடந்து விடாது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஆசிரியரை நேரில் பார்க்க வரும்படி அழைத்தேன்.

ஏகப்பட்ட கேள்விகள். ஏகப்பட்ட விசாரணைகள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் அளித்தேன். பின்னர் ஆவணங்களைப் பெற்று ஆராய்ந்தேன்.

ஒரு சில மூல ஆவணங்களைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. இதில் கீழத்திருத்தங்கல் கிராமத்தின் பதிவு ஆவணங்கள் வேறொரு பதிவு அலுவலகத்தில் பதிவாகி இருந்ததைக் கண்டுபிடித்தேன். ஆவணங்கள் அப்டேட் எரர். 

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் இவ்வகையிலான கணிணி தவறுகள் பலபேரின் வாழ்க்கையை அமைதியற்றதாக்கி விடும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. இது ஒரு பிரச்சினை. இருக்கட்டும் ஓரமாக.

பத்திர நகல்கள், வாரிசு, இறப்புச் சான்றிதழ்கள், வில்லங்கச் சான்றிதழ்கள் ஆகியவைகளை வைத்துக் கொண்டு முறையான புகார் மனுவை தயாரித்தேன்.

முதலில் பட்டாவை ரத்துச் செய்ய வேண்டும். பின்னர் இந்த சர்வே எண்களில் இருக்கும் நிலங்களின் தொடர்ச்சியான பத்திரப்பதிவினை நிறுத்த வேண்டும். அடுத்து, இதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கணும். அடுத்து பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டபோது பரிசீலித்த ஆவணங்களின் நகல்களைக் கோருதல் என்று திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை தயாரித்து அனுப்பி வைத்தேன். தினசரியில் ஒரு பொது அறிவிப்பும் கொடுத்தேன். 

பதிவு தபாலில் அனுப்பி வைத்த விண்ணப்பங்களுக்கு பதில் வரவே இல்லை என ஆசிரியை போனில் அழைக்க ஆரம்பித்தார். கொரனா நேரம். முழு லாக்டவுனில் இருந்தது அரசு. பொறுமையாக இருங்கள் வந்து விடும் என்றுச் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆசிரியையைக்கு நம்பிக்கையே இல்லை. எதுவும் நடக்காது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

இதற்கிடையில் அவரின் தம்பி தன் அம்மாவை வைத்து இதர சகோதர சகோதரிகளிடம் பேச்சு வார்த்தை ஆரம்பித்து விட்டார். இருப்பினும் அவர் தான் செய்த தவற்றினை ஒப்புக் கொள்ளாமல், தன் அம்மா மூலம் கிரையம் பெற்றவர்களை தான் ஏமாற்றி இருக்கிறோம் என்ற ஒரு சிறு சங்கடமும் இல்லாமல் பேசி வருவதாக ஆசிரியை என்னிடம் போனில் சொன்னார்.

நான் பொறுமையாக இருங்கள். ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் உங்கள் மனு மீதான நடவடிக்கை எடுத்ததற்கான அறிவிப்பு வரும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு மனுவுக்குமான பதில் வர ஆரம்பித்து இருக்கிறது என்றுச் சொன்னார். தம்பியையும், தன் அம்மாவையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகச் சொன்னார். அவ்வளவுதான் தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. இது  குடும்பப் பிரச்சினை. ஆசிரியையின் தம்பி சட்ட விரோதமாக தன் தாயுடன் கூட்டுச் சேர்ந்து,  நான்கு பேரின் சொத்துரிமையை சட்ட விரோதமாக நீக்கி சொத்துக்களை விற்பனை செய்திருக்கிறார். 

இது பற்றிய எந்த ஒரு தகவலும் இன்றி இந்தச் சொத்துக்களைக் கிரையம் பெற்றவர்கள் வாங்கி இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஆசிரியையின் அம்மா ஜெயிலுக்குப் போக வேண்டும். தம்பி தப்பித்துக் கொள்வார். 

அம்மா மீது நடவடிக்கை எடுக்க இதர மகன்களும் மகள்களும் விரும்பமாட்டார்கள். இனி அவர்களுக்குள் செட்டில்மெண்ட் ஆனாலும், முறைகேடான வகையில் கிரையம் வாங்கி ஏமாந்தவர்களின் கதி? அவர்கள் எப்படி இதைச் சரி செய்வார்கள்? தெரியவில்லை.

இதைத்தான் காலத்தின் கொடுமை என்பார்கள். ஒரு சொத்தினை வாங்கும் போது சரியான லீகல் அட்வசைரிடம் சென்று சொத்துரிமை ஆய்வு செய்யாமல் வாங்கினால் இப்படித்தான் நடக்கும்.

சொத்தில் ஒரு பிரச்சினை வந்து விட்டது என்றால் அதை எப்படி நீக்க வேண்டுமென்ற அனுபவ அறிவு இருக்கும் லீகல் அட்வசைரிடம் ஆலோசனை செய்தல் அவசியம். அது இல்லாமல் கோர்ட்டு வழக்கு என்றுச் சென்றால் எப்போது சரியாகும்?  நம் இந்திய கோர்ட்டுகளின் கதை தான் உங்களுக்குத் தெரியுமே? 

கீழே இருக்கும் ஆதாரங்களைப் பார்க்கவும். உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்தால் என்னை அணுகலாம். ஆலோசனைக் கட்டணம் உண்டு. 



 

மேற்கண்ட பொது அறிவிப்பினை தயார் செய்து கொடுத்தேன். மிகத் துல்லியமான புகார் விண்ணப்பத்தை சரியான ஆவணங்களுடன் சாட்சி இணைத்து ஒவ்வொரு துறையினருக்கும் அனுப்பி வைத்தேன். எந்த துறையினரும் புகார் மனுவைப் படித்தால் தெளிவான படம் போல முறைகேட்டினைக் கண்டுபிடிக்கும் வகையில் தயாரித்து இருந்தேன். இனி நான்கு பேரின் சொத்துரிமை சரி செய்யப்பட்டு விடும். 

ஆனால் இது பற்றி ஆராயாமல் கிரையம் பெற்றவர்களின் சொத்துரிமை ஆவணங்களின் கதி அதோகதியாகி விடும். யார் யார் என்னென்ன பிரச்சினைகளில் இருக்கின்றார்களோ தெரியவில்லை. அந்தச் சொத்துக்களில் பல வீட்டு மனைகளாக இருக்கின்றன. சுமார் 200 பத்திரங்களுக்கு மேல் உள்ளன. அந்த இரு நூறு பத்திரங்களின் கதி? அதன் லீகல்? எல்லாம் அவர்களாகச் சரி செய்து கொள்ள வேண்டும். என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.

வாழ்க வளமுடன்...!

Friday, August 6, 2021

ரெண்டு இட்லி

மனிதனின் முதல் உணவு தாய்ப்பால். அதன் காரணமாகத்தான் தாயின் மீதான அன்பு பிள்ளைகளுக்கு அதிகம். இறுதிவரை தாயை நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

உணவு உணர்வுகளோடு ஒன்றியவை.  மனிதன் உணவால் உருவானவன். உணவின் தன்மைக்கு ஏற்ப அவனின் வாழ்க்கை இருக்கும். நலமோ, நோயோ எல்லாவற்றுக்கும் காரணம் உணவு.

திருக்குறள் ஒன்று

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று

அதிக உணவும், குறைவான உணவும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் பாதிப்பினை உண்டாக்கி நோயாக மாறி விடும் என்கிறார் திருவள்ளுவர்.

உணவின்றி இவ்வுலகில் எவ்வுயிரும் இல்லை. ஆனால் மனிதனின் தற்போதைய நிலையோ பரிதாபம். என்றைக்கு உணவுப் பொருள் வணிகத்துறைக்குள் உட்புகுந்ததோ அன்றிலிருந்து நாம் எதைச் சாப்பிட வேண்டுமென்பதை செய்தி மீடியாக்களும், சினிமா டிவி பிரபலங்கள் என்றுச் சொல்லக்கூடிய ஃபிராடுகளும் முடிவு செய்கிறார்கள்.

சினிமாக்காரன் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை. நம் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி, நம்மை அவனின் பணத்தாசைக்குப் பலியாக்கி விடுகின்றான்கள். 

வெளி நாட்டு சொகுசுக்காருக்கு வரி விலக்குக் கேட்ட ஒரு குள்ள நரி ஹீரோ, கூல்டிரிங்க்ஸ் குடிக்கச் சொன்னான். பின்னர் அவனே கூல் டிரிங்க்ஸ் கம்பெனிக்கு எதிராய் படமும் நடித்தான். படம் கோடிக்கணக்கில் பிசினஸ் ஆச்சு. கோடி ரூபாய்க்கு கார் வாங்கி குஷியாய்ச் செல்கிறான். கூல்டிரிங்க்ஸ் குடித்தவர்களோ உடலைக் கெடுத்துக் கொண்டார்கள்.

ஸ்டைல் என்ற பெயரில் பெரிய புற்று நோய்க் கூட்டத்தையே உண்டாக்கினான் ஒரு கிழட்டு நரி ஹீரோ. வயதானாலும் மகள் வயதே கொண்ட சின்னஞ்சிறுப் பெண்களுடன் ஹீரோ வேஷம் கட்டுவான். அப்பெண்களின் காலை விரித்து காட்டுவான். 

இவனையெல்லாம் தலைவன் என்று அழைக்கும் முட்டாள் பயல்கள் கூட்டம் உண்டு. அதைப் படம் பிடித்துப் போட்டுக் காட்டும் மீடியா விபச்சாரக் கூட்டமும் ஒன்று இங்கே, நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றுச் சொல்லித் திரிகிறது. நாங்களெல்லாம் யோக்கியன்கள் என்று தர்மம் பேசுவான்கள். கேட்பதற்குக் கேணப்பயல்கள் இங்கு அனேகம் என்கிற போது வாயிலேயே வடையும் சுட்டு, ஊட்டியும் விடுகிறான்கள். ஒருத்தன் இன்னும் வாயில் வடைச் சுட்டுக் கொண்டே இருக்கிறான் இங்கே.

சோப்பிலிருந்து, உண்ணும் உணவிலிருந்து, பாத்ரூம் ஆசிட் வரையிலும் சினிமாக்காரன்கள் கூவிக் கூவி டிவியில் விற்றுக் கொண்டிருக்கின்றான்கள். நாமும் அவன்கள் சொல்வதைக் கேட்டு நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உணவு உண்பதைக் கூட சினிமாக்காரன் சொல்லித்தான் கேட்கும் அவல நிலையில் மனிதனின் ஆறாம் அறிவு உயர்ந்துள்ளது. நாகரீகமாம்.

* * *

 


இனி இட்லிக்கு வந்து விடுவோம்.

திருப்பூரின் மிகப் பெரிய நிறுவன இயக்குனரின் சகோதரர். வால்மார்ட்டின் பிசினஸ் பார்ட்னர். உலகெல்லாம் சுற்றிய பிசினஸ்மேன். உலகிற்கே அச்சுறுத்தலாய் (பீகாஸஸ் உளவு சாப்ட்வேரைச் சொன்னேன்) இருக்கும் இஸ்ரேல் ஜூயிகளுடன் பிசினஸ் செய்கிறவர். அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எனது இனிய நண்பர்.

என் வீட்டுக்கு வரும் போது பசி நேரமானால் இருவரும் சாப்பிடுவதுண்டு. ஒரு நாள் டிபன் சாப்பிடும் போது இரண்டு இட்லி போதுமென்றார். வற்புறுத்தினாலும் கேட்கவில்லை, வேண்டாமென்று மறுத்து விட்டார்.

* * *

ஒரு கதை சொல்லப் போகின்றேன்.

அந்த அம்மாவுக்கு ஆறு குழந்தைகள். கணவர் குமாஸ்தா. குறைவான வருமானம். சொந்த வீடு. 

வீட்டின் பின்னால் முருங்கை மரம், வாழை மரங்கள், கீரைகள், தக்காளிச் செடிகள், காய்கறிச் செடிகள் வளர்ப்பார். ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை வைத்து குழம்பு அத்துடன் ரசமும். 

முருங்கைக் கீரை, பூ, காய் சீசனுக்கு ஏற்றவாறு கிடைப்பவைகள் தான் குழம்பாகவோ, கூட்டாகவோ, பொறியலாகவோ செய்வார். கடைப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

வாழை மரத்தில் கிடைக்கும் அத்தனையும் உணவாக சமைத்து விடுவார். 

அந்த வீட்டில் என்றைக்கும் ரசம் இருந்து கொண்டே இருக்கும். அத்துடன் மோரும் கூட.

ரசம் எப்போதுமே குறையாது. ரசம் குறையக் குறைய சுடு நீர் மற்றும் உப்புச் சேர்த்து விட்டால் மீண்டும் ரசம்.

மோர் சாட்டின் துணி போல அவ்வளவு வெண்மை. உணவில் தூய்மை. அம்மாவின் கைங்கரியத்தில். உபயம் தண்ணீர். கொசுறாக தோட்டத்தில் இருக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி தாளிப்பு.

ஆறு குழந்தைகளுக்கு மூன்று நேரம் உணவு. பிற ஐந்து குழந்தைகளின் கனவைச் சிதைத்து முதல் குழந்தையின் கல்விப் படிப்புச் செலவு என கட்டுக் கோப்பாக  தன் குடும்பத்தை நடத்தினார் அந்த அம்மா.

முதல் பையனும் பெரியவனாகி படித்து வேலை கிடைத்து திருமணமும் ஆனது. கணக்குப் போடத் தெரிந்த அண்ணன், இதுகளுக்குச் சம்பாதித்துப் போட்டால் நடுத்தெருவென, வட்டிக் கணக்குப் பார்க்க தெரியாத அம்மாவுடன் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்றான்.

திடீரென அந்த அம்மாவுக்கு நோய் வந்து விட்டது. வைத்தியம் பார்த்தனர். கடைசிப் பையன் சிறு குழந்தை. அம்மாவின் அரவணைப்பும் அன்பும் கிடைக்கவில்லை. 

முதல் பண வசதி படைத்த அண்ணன் வீட்டுக்குச் சென்றான். அண்ணன் வீட்டின் சமையலறையின் அருகில் பத்து பேர் அமரும் உணவு மேஜை. 

காலையில் எட்டு மணிக்கு அண்ணன் அலுவலகம் செல்வார். இவனுக்கோ அரசுப் பள்ளிக்கூடம்.

இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.

கடைசித் தம்பி தட்டில் இரண்டு இட்லி மட்டுமே. அதை அண்ணனும் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுவார். அவரின் வாய் உணவுக்கு மட்டுமே திறக்கும்.

எப்போதும் தோசையானாலும் இரண்டு. சப்பாத்தி என்றாலும் இரண்டு மட்டுமே.

அண்ணி தன் கடைசிக் கொழுந்தனிடம் எப்போதும் சொல்வது ”இது போதும்”

* * *

பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அவரின் அண்ணாவோ கொரானா காலத்தில் செத்துப்  போனார். சுடுகாட்டுக்கு  செல்ல பத்து பேர் கூட இல்லை. கொரானா கட்டுப்பாடு. விதி.

”அண்ணி படுக்கையில் கிடக்கிறார். எழுந்து நடக்க கூட முடியவில்லை. பாவமாக இருக்கிறது” என்றார் நண்பர்.

”பரிதாபப்படுகின்றீர்கள் நீங்கள், தர்மமும் அறமும் மிச்சம் மீதி வைக்காமல் திருப்பிக் கொடுக்கும் இயல்பு கொண்டவை” என்றேன் அவரிடம்.

 * * *

நேற்று ஹோட்டலில் காலை உணவுக்காக பேரரிடம் “இரண்டு இட்லி” என்றேன்.

”போதுமா சார்” என்றான்.

நண்பரின் முகம் தெரியா அண்ணி நினைவிலாடினார்.

* * *

Thursday, July 29, 2021

நிலம் (86) - காக்கா நிலங்களும் அனுமதி பெறாத மனைப்பிரிவும்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு வெகு முக்கியமான காக்கா நிலங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம். 

அதென்ன காக்கா நிலங்கள்?

HILLS AREA CONSERVATION AUTHORITY (HACA) என்று குறிப்பிடப்படும் பகுதிகளை காக்கா நிலங்கள் என்று சொல்வார்கள்.

சமீபத்தில் என்னிடம் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். அவர் கொடுத்த நில ஆவணங்களை ஆய்வு செய்த போது அது காக்கா நிலப்பகுதியில் இருந்ததைக் கண்டுபிடித்தேன். முறைப்படி அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தேன்.

என்றைக்குமே அனுமதி வழங்கவே வழங்கப்படாத காக்கா நிலத்தின் சைட் அது. அந்த நிலத்தினை வாங்கினால் அதன் சாதக பாதகங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அவர் அந்த நிலத்தினை வாங்கவில்லை. வேறு இடம் வாங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்கள் காக்கா நிலங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் அனுமதி பெறாத (மக்களின் பார்வையில் அது பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள்) மனையிடங்களை வரன்முறைப்படுத்தி, அனுமதி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர புதிய சட்டத்தை அதிமுக அரசு வெளியிட்டது. 

என்னைப் பொறுத்தவரை அந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்து ரத்து செய்யலாம். ஏனென்றால் மாநில வரையறைக்குள் மட்டும் HACA சட்டம் இல்லை. ஒன்றிய அரசின் ஒப்புதலும் வேண்டும். அது நமக்குத் தேவையில்லை. அரசின் பிரச்சினை. (ஈஷாவுக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். யானை வழித்தடங்களில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தலாம் என்று இந்தச் சட்டம்  சொல்கிறது)

இந்தச் சட்டத்தின்படி அனுமதி வழங்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் அனுமதி பெறாத மனைகளை அனுமதி பெறவே இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திரு நெல்வேலி, விருது நகர், நீலகிரி, சேலம், வேலூர், விருது நகர் மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காக்களில் உள்ள கிராமங்கள் அனுமதி பெற இயலாதவை என்று சட்டம் சொல்கிறது.

உதாரணமாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டி, பூளுவம்பட்டி, ஆனமலை ஹில்ஸ், ஆனைகட்டி, தடாகம், ஓடந்துறை, கல்லார், ஜகனாரி, கலிக்கல், பில்லூர், நெல்லித்துறை, சுண்டப்பட்டி, கண்டியூர், நீலகிரி கிழக்கு, மேலூர், ஆனைகட்டி வடக்கு, மஞ்சம்பட்டி மற்றும் அமராவதி ஆகிய கிராமங்களில் இருக்கும் மனைப்பிரிவுகளை எப்போதும் வரைமுறைப்படுத்த இயலாது.

சமீபத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி தருவதாகச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அனுமதி பெறா மனைப்பிரிவு போலவே அதுவும் அரசின் அனுமதி இல்லாத ஆவணம் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த அனுமதி பைசாவுக்கும் பிரயோஜனப்படாது.

காக்கா பகுதியில் நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல அரசின் சட்டங்கள் இருக்கின்றன. 

காக்கா பகுதியில் தனிப்பட்ட முறையில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, அதற்குள் வீடு கட்டுவதற்காக அனுமதி பெறுவது என்பது வேறு. ஆனால் மனை இடமாக பிரித்து விற்பனை செய்யும் போது அதற்கான அனுமதி பெறுவது என்பது வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக கருதி விடக்கூடாது.

காக்கா பகுதிகள் எவை, அவைகளில் நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை என்ன? அவைகளை வாங்கலாமா இல்லையா? என்பது பற்றி தெரிந்து கொள்ள என்னைத் தொடர்பு கொள்ளவும். 

கட்டணம் உண்டு.

காக்கா பகுதி மனைகளை வாங்க நினைப்பவர்கள் லீகல் கன்சல்டேசனுக்கு என்னை அணுகலாம்.

குறிப்பு : சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெறா வீட்டு மனைப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. அவ்வாறு ரத்துச் செய்யப்பட்ட பத்திரங்கள் கொண்ட நிலத்தினை வாங்கி ஏமாற வேண்டாம். கடனும் கொடுக்க வேண்டாம்.




Monday, July 26, 2021

விடிகாலை இரண்டு மணியில் மணி

விடிகாலை இரண்டு மணி. விழித்துக் கொண்டேன்.

சன்னலைத் திறந்தேன்.

அமைதி தவழும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகள் இருளாய் தெரிந்தது.

மீண்டும் படுக்கையில் படுத்தேன். 

அருகில் கோதை  சுருண்டு சிறுபிள்ளையாய் முடிகலைந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

ஏகாந்தம் மண்டிய விடிகாலை நிசப்சத்தில் நினைவுகள் பின்னோக்கின.

அவன் வீட்டுக்கு வந்த போது அழுக்காய், சகதியில் புரண்டு, நாற்றமடித்துக் கொண்டிருந்தான். ஷாம்பூ போட்டு இரண்டு முறை குளிக்க வைத்தாள். அமைதியாக உட்கார்ந்திருந்தான். சேட்டை எதுவும் செய்யவில்லை. வெள்ளையும் செவலையும் கலந்த நிறத்தில் ஒல்லியாய் வீட்டுக்குள் சுத்தி வந்து கொண்டிருந்தான்.

ரூடோஸ் அவனைப் பார்த்து கர்ண கடூரமாய் குலைத்துக் கொண்டிருந்தான். இவளுக்காக தான் அவனைக் கொண்டு வந்திருந்தேன். ஜோதி சாமிதான் அவனை வீட்டுக்கு அனுப்பி வைந்திருந்தார்.

மணி என்று பெயர் வைத்தேன்.

மறுநாள் ரேபிட்ஸ் தடுப்பூசி மற்றும் இன்னொரு ஊசி போட்டுக் கொண்டு வந்தோம். அவனுக்கு என தனியாக உணவு தட்டு, சங்கிலி, கழுத்துப் பட்டை, பிஸ்கெட், எலும்பு மற்றும் இன்ன பிறவனவெல்லாம் வாங்கி வந்து கொடுத்தேன்.

நன்றாகச் சாப்பிட்டு விட்டு, காற்றாடியின் கீழே சுகமாய் படுத்து உறங்குவான். புதிய ஆட்கள் வந்தால் ஒரு சத்தம். ஈரக்குலை நடுங்கும் கர்ண கடூரமானது அவனது குரல்.

அவனது தலை பெரியது. சிங்கம் போல இருப்பான். அசைந்து அசைந்து நடந்து செல்லுகையில் பெண் நடப்பது போலவே இருப்பான். 

ரூடோசும் அவனும் ஒன்றாகவே இருந்தனர். ரூடோசுக்கு அவளது முழு உரிமையில் பங்குக்கு மணி வந்து விட்டான் என சில நாட்கள் சோகமாக இருந்தாள். பின்னர் பழகிக் கொண்டாள்.

(மணி - லேப்ராடர் வகை)

     



இப்படியான சூழலில் மணிக்கு ஒரு பிரச்சினை வந்தது.

ரூடோஸ் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மைக்கு வருவாள். பெண்கள் போலவே அவளது பிறப்புருப்பில் இரத்தம் வடியும். நான்கைந்து நாட்களில் அவள் மேட்டிங்க்குக்கு தயாராக ஆவாள். அவள் மணியை முற்றிலும் நிராகரித்து விட்டாள். அவனும் அவளுடன் சேர்வதற்காக என்னென்னவோ சேட்டைகள் செய்து பார்த்தான். ஊஹூம். விளைவு குரைக்க ஆரம்பித்து விட்டான். 

மிருக மனம். இயற்கையின் அழைப்பு. மணி சோர்வடைந்து விட்டான். தினமும் அவளைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தான்.

பிள்ளைகள் இருவரும் வளர்கின்றனர். ரித்திக் இருவரையும்  நன்கு கவனித்துக் கொள்வான். நிவேதிதா மணியின் அருகில் செல்வதில்லை. பதின்ம வயதில் இருக்கும் இருவருக்கும்மிருகங்களின் இனச்சேர்க்கை சேட்டைகள் தேவையற்ற பதிவுகளை உருவாக்கி விடும் என மனதின் ஊடே சிந்தனைகள். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விதமான சம்பவங்கள் ஏதேனும் மனதுக்குள் பதிந்து உணர்வுகளை கிளர்ச்சி அடைய வைத்து விடும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமே என்ற பயம் வேறு.

மணியை வேறு இடத்தில் விட்டு விடலாமென முடிவெடுத்து விட்டேன். மனசு கேட்கமாட்டேன் என்கிறது. நான்கைந்து நாட்களுக்கு குரைத்துக் கொண்டிருப்பான். சரியாகி விடுவான் என்றாலும் மணியின் இயற்கை உணர்வுகள் பாதிக்கப்படும் போது அவன் தன் கோபத்தினை அவன் முன்னால் இருக்கும் பொருட்கள் மீது காட்டுகிறான். கடித்து துவம்சம் செய்கிறான்.

விளாங்குறிச்சியில் மேட்டிங்குக்கு அடிக்கடி நாய்கள் வரும். ஆனால் இங்கே அதற்கான வாய்ப்பில்லை. 

தாராபுரத்தில் இருக்கும் நண்பரின் தோட்டத்தில் ஜூலி இருந்தாள். அவள் திடீரென இறந்து போனாள். பெரிய தென்னைத்தோட்டம் வைத்திருக்கிறார். தோட்டத்துக்குள் வீடு.

அவரை அழைத்தேன்.  ஏனென்றால் நாய் வளர்த்தவர்களுக்குத் தான் நாய்கள் மீதான அன்பு இருக்கும்.

“கொண்டு வந்து விடுங்கள் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

இவரின் நண்பரின் வீட்டில் சில்க்கி இருப்பதாகவும். அவளுக்கு மணி மேட்டிங்குக்கு சரியாக இருப்பான் எனவும் சொன்னார். 

அவனுக்கு இது எதுவும் தெரியாது. 

எனக்குதான் விடிகாலையில் விழிப்பு வந்து பதட்டத்தோடும், மன வருத்ததோடும் இருந்தேன். அவன் உணர்ந்து கொண்டானா எனத் தெரியவில்லை.

ஏழு மணிக்கு காரின் பின்னால் உட்கார்ந்து கொண்டான். அவனது தடுப்பூசி புத்தகம், அவனது உணவு தட்டு, சங்கிலிகளை எடுத்து காருக்குள் வைத்தான் ரித்திக். நிவேதிதா சோகமாக இருந்தாள். எனக்கோ மனமெல்லாம் டன் கணக்கில் கனத்தது.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நினைவுகள் வந்து சென்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். அதுவும் மணலில் வடித்த கல் போல அடிக்கடி உதிர்ந்து கொண்டே இருந்தது.

காரில் சமத்தாக உட்கார்ந்து கொண்டான். அவன் காரின் பின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், நேரம் செல்லச் செல்ல படுத்து விட்டான். பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் சாலையில் இருக்கும் நாயக்கர் ஹோட்டலில் இரண்டு இட்லி சாப்பிட்டேன். கோதை பொங்கல். பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தோம். அமைதியாகச் சாப்பிட்டான். அழைத்தேன். திரும்பிக் கூட பார்க்கவில்லை.

தோட்டத்துக்குள் காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கினான். கோதையால் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அங்கிருந்த ஒரு கருப்பு நாட்டு நாயிடம் சென்று முகர்ந்து பார்த்தான். ஒரு சில இடங்களில் ஒன்றுக்குச் சென்றான். நண்பர் அவனை கோதையிடமிருந்து வாங்கி, மரத்தில் கட்டினார்.

அவன் அவரைப் பார்த்து தன் அன்பினைத் தெரிவித்தான். 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினோம். அவன் காரில் இருக்கும் என்னைப் பார்த்துக் குரைத்தான். ஒரே ஒரு தடவைதான் குரைத்தான்.

அவனுக்குத் தெரிந்து விட்டது. 

இனி நான் அவனின் எஜமானன் அல்லவென.

நெஞ்சுக்குள் கத்தியைச் சொருகியது போல வலித்தது.

விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.

கோதை அறியாமல் துடைத்துக் கொண்டேன். நான் கலங்குவதை அவள் எப்போதும் பார்த்தது இல்லை. அது என் இயல்பும் இல்லை.

எங்கிருந்தோ வந்தான். இடையில் என்னோடு சில காலம் வாழ்ந்தான். இனி அவன் என்னோடு இல்லை. 150 கிலோ மீட்டர் தூரத்தில் வாழ்கிறான்.

இதோ இன்றைக்கு விடிகாலைப் பொழுதில் அவனின் நினைவுகளால் நிரம்பிக் கிடக்கிறது மனசு.

அன்பு வலிகள் நிறைந்தது. வேதனைப்படுத்துகிறது.

அவனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

கண்கள் கலங்கி மனதும் தளர்ச்சி அடைகிறது.

அவன் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியோடு வாழட்டும்.

Saturday, July 17, 2021

நிலம் (85) - ரத்து செய்யக்கூடிய பத்திரங்கள் எவை?

நல்ல குளிர். காலையில் சீரகத் தண்ணீர் ஒரு குவளை அருந்தினால் தான் மட்டுப்படுகிறது. சுற்றிலும் மலை. எங்கெங்கு நோக்கினும் பச்சை. இன்னும் சிறிது நேரத்தில் பட்சிகள் படபடப்பாய் குரல் எழுப்ப ஆரம்பித்து விடும். அமைதி தவழும் இயற்கைச் சூழல்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரவாகமெடுக்கும் சிறுவாணியின் சுவையான நீர், நல்ல காற்று, இயற்கை சூழல் வீட்டின் மேற்கே சலசலத்து ஓடும் சிற்றோடை -- பிள்ளைகள் படிப்புக்காக மாறிய இடம். நடக்கும் தூரத்தில் கல்விச் சாலை. 

ஹாஸ்டலில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விளாங்குறிச்சியில் பரபரவென ஓடும் வாழ்க்கைச் சூழல். இங்கோ அமைதி. பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

முதலில் ஒன்றியப் பிரச்சினையைப் பார்க்கலாம். 

இந்திய அரசமைப்பு மார்ச் மாதம் 31ம் தேதி 2008 - திருத்தி அமைக்கப்பட்டதன் தமிழ் வடிவத்தில் மாநிலங்கள் சேர்ந்த ஒன்றிய அரசு எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் ஒன்றியம் என தான் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதாரம் கீழே

இது இந்திய அரசுக்காக சட்ட (ஆட்சிமொழிப் பிரிவு) துறையினரால் மொழி பெயர்கப்பட்டு அது 2009 ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகவே ஒன்றிய அரசு என்பதே சரி. பேச்சு மொழிக்காக மத்திய அரசு என்று அழைக்கலாம். அல்லது பிஜேபி அரசு என்று அழைக்கலாம். அல்லது மோடி அரசு என்றும் அழைக்கலாம். அது அழைப்பவரின் வசதி.

ஆனால் மிகச் சரியானது இந்திய ஒன்றிய அரசு என்பதே. அது மட்டுமின்றி ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பிலும் யூனியன் ஆஃப் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடுத்து கொங்கு நாடு பிரச்சினை

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராய் பொறுப்பேற்ற போது கொங்கு நாடு என்று கையொப்பம் இட்டாராம். அப்படி எல்லாம் தன் விருப்பத்துக்கு எழுத அவருக்கு உரிமை இல்லை. அது தனி பிரச்சினை. 

ஒரு மாநிலத்தினை பிரிக்க குடியரசு தலைவரின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தின் வழியாக அந்த மாநிலத்தின் சட்டசபைக்கு பரிந்துரை கோரி அனுப்ப வேண்டும். அம்மாநில சட்டசபை அதை அங்கீகரிக்க வேண்டும். 

இது கடைசி நடைமுறை. 

இதற்கு முன்பு மாநிலத்தினை பிரிப்பதற்கான தேவை இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். மக்கள் விரும்பி அதை போராட்டத்தின் வழியாக அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். தமிழர்களைத் தனித்தனியாகப் பிரித்து விட்டால் எளிதில் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவது போல நுழைந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் சிற்றறிவு கொண்ட அதிகாரப் பசி கொண்டலையும் பாக்டீரியா தமிழர்களின் நயவஞ்சக எண்ணம் இது.

மொழி வழி  மாநிலங்களைப் பிரிப்பது என்பது இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும். இங்கு தமிழர்களாய் இருக்கும் நய வஞ்சக பதவி ஆசை பிடித்தலையும் நரிகளின் ஊளை இது.

ஆகவே கொங்கு நாடு என்பது கனவிலும் நடக்காத ஒன்று. தமிழர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் பேசும் மக்களை தனி மாநிலமாக பிரிப்பது என்பது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும் என்று ஒன்றிய பாரதீய ஜனதாவுக்குத் தெரியும். 



வெட்டிப் பேச்சு, ஒன்றுக்கும் உதவாத அரசியல் வார்த்தைகள் என பார தீய ஜனதா கட்சி கேவலமாக அரசியல் செய்கிறது. தமிழக மக்கள் இக்கட்சியையும், இக்கட்சியினை தமிழகத்தில் வேரூன்ற வைத்த லீச்சசுமான ஊழலுக்காகவே நான்கு  லட்சம் கோடியை கடனாக வைத்துச் சென்றிருக்கும் அதிமுகவின் துரோகிகளையும் அடையாளம் கண்டு கொண்டு அமைதியாக அதற்கான வேலையினைச் செய்ய வேண்டும்.

டிவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் மூலம் போலி அடையாளத்துடன் லட்சக்கணக்கான பதிவுகள் போடப்படுகின்றன. அதையும் தமிழர்கள் தான் செய்கிறார்கள். ஆகவே இவ்வகைப் போலிப் பதிவுகளையும் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

அடுத்து ரத்துச் செய்யக்கூடிய பத்திரங்கள் பற்றிப் பார்க்கலாம்.

சமீபத்தில் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். தான செட்டில்மெண்ட் ரத்துப் பத்திரம் ஒன்றின் மூலம் சொத்தின் உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நிராகரித்து விட்டேன். சொத்தானது கிரையம் ஆகவில்லை. மூன்று கோடி ரூபாய் தப்பித்தது.

தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது. அவ்வாறு செய்து சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது செல்லாது என்பதை அறிந்து கொள்க.

பதிவுத்துறை என்பது ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தின் மற்றொரு பகுதி. ஆரம்பகாலத்தில் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தான் பதிவு செய்யப்பட்டன. இப்போதும் வங்கிக்கடனுக்காக மீட்கப்படும் சொத்துக்களின் பத்திரங்கள் நீதிமன்றங்கள் மூலமாக பதிவு செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆவணங்களை எளிதாகக் கையாள பதிவுத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சொத்துரிமைப் பதிவுகளை நீக்கவோ அல்லது ரத்துச் செய்யவோ நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதை அறிந்து கொள்க. யார் எதைச் சொன்னாலும் நம்பி விடக்கூடாது.

இந்த நடைமுறையில் ஒரு சில ஆவணங்களை ரத்துச் செய்வதற்கு பதிவுத்துறைக்கு அனுமதி உண்டு.

உயில் பத்திரம்

பொது அதிகார ஆவணம்

கிரைய ஒப்பந்த பத்திரம்

மேலே கண்ட மூன்று பத்திரங்களை மட்டும் துணைப்பதிவாளர் அலுவலகம் மூலம் ரத்துச் செய்யலாம்.

உயிலை எழுதியவர் அதை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்து மறு உயில் எழுதலாம் அல்லது எழுதாமலும் இருக்கலாம். உயில் ரத்து, புதிய உயில் ஆகியவைகளை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளலாம்.

பொது அதிகார ஆவணத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்யலாம். இப்போது அதிகாரம் எழுதி வாங்கியவரும் பதிவு அலுவலகம் வர வேண்டும் என்கிறார்கள். இந்த ரத்துப் பத்திரம் பதிய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் பொது அதிகார ஆவண அதிகாரம் பெற்றவர் சொத்தின் உரிமையாளர் இல்லை என்பது. சொத்தின் விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளரின் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டு முகவரின் பெயருக்கு வழங்கக் கூடாது.

கிரைய ஒப்பந்த ஆவணத்தை - அதில் குறிப்பிட்டிருக்கும் சாராம்சங்களின் படி  துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரத்துச் செய்யலாம்.

சொத்துக்கள் வாங்கும் முன்பு இவைகளைக் கவனத்தில் கொள்க.

 ==================================

 #செட்டில்மெண்டுபத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம்
#இரத்துபத்திரம் #பாகபிரிவினை  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை #தாய்பத்திரம் #சார்பதிவகம்

Saturday, July 10, 2021

தமிழ்திசையின் மனம் குழப்பும் செய்தி - பொதுச் சொத்தினை மக்களுக்கு நிர்வகிக்க தெரியாதா?

இன்று காலை தினசரியில் கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். செய்தியின் தலைப்பில் ஏதோ உள் குத்து இருக்கிறது என்று புரிந்தது. கட்டுரை எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். புரிந்து போனது.

இதை நன்கு படித்துப் பாருங்கள். இதன் தாக்கம் மனதுக்குள் விரியும்.

கோவில் அடிமை நிறுத்து என ஆரம்பித்து வைத்த டான்சர் ஜக்கிவாசுதேவ்  அவர்களைத் தொடர்ந்து மனவிரோத மதக்கட்சிகளும் இணை, துணை, குறுக்குசாலை, ஆன்லைன், டிவி பொய்யர்கள் போர்டு ஜோலிக்காரர்கள் எல்லாம் பொங்கு பொங்குவென பொங்கினார்கள்.

கோவில் அடிமை நிறுத்து என்று யாருக்குச் சொல்ல வேண்டும்? 

இன்றும் கோவில்களில் தீண்டாமையைக் கொண்டு வரும் ஆகம விதிகளை செயல்படுத்துவர்களிடம் சொல்ல வேண்டும். 

ஒரு கால் கட்டை விரலை குருதி வழிந்த சிவலிங்கத்தின் கண்களில் வைத்துக் கொண்டு தன் இன்னொரு கண்ணைப் பிடிங்கி எடுத்த கண்ணப்பருக்கு ஆகம விதிகளின் படி சிவபெருமான் காட்சி தர முடியாது என்று சொல்லவில்லை. 

இல்லாத ஒரு விதியை வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இறைவனுக்கு பூஜை செய்யும்படி எந்த இறைவனும் அவதாரம் எடுத்து வந்து கருத்துத் தெரிவிக்கவில்லை. 

இறைவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். பக்திக்கும் கட்டுப்படுபவனல்ல.

இவர்கள் கோவிலை மக்களிடம் திருப்பிக் கொடு என்கிறார்கள். அப்படிச் சொன்னவர்களின் மூதாதையரோ அல்லது அப்பன், தாத்தாக்களோ கோவிலைக் கட்டிக் கொடுக்கவில்லை. 

கோவில்களில் இருக்கும் செங்கல்கள் ஒவ்வொன்றும் மக்களின் வரிப்பணம். மன்னர்கள் வரிப்பணத்தில் கோவில் கட்டினார்கள்.

அரசு நிர்வகிப்பது ஒன்றே சட்டப்பூர்வமானது. 

மசூதிகள், சர்ச்சுகளுக்கும் தமிழர்கள்  இனத்துக்கும் தொடர்பில்லை. அதை ஏன் தமிழ்நாடு அரசு நிர்வகிக்க வேண்டுமென்று தெரியவில்லை.

தமிழும், தமிழ் மதமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.  

மதத்தின் வழியாக பொய் புரட்டுகளையும் பேசிக் கொண்டு, செங்கல்களால் ஆட்சியைப் பிடித்தவர்களின் அல்லுசில்லுகளும், அயோக்கிய சிகாமணிகளும் கூப்பாடு போடுகின்றார்கள்.

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை வைத்திருக்கும்.

இங்கே தமிழகத்தில் பல சதிகாரர்களின் நயவஞ்சகத்தினால் மூளை குழம்பிப் போன மக்களிடம் ஒரே ஒரு செங்கலைக் காட்டி திமுகவை வெற்றி பெற வைக்க உதயநிதி உதவினார்.

செங்கல் என்பது சாதாரணமானது அல்ல.

கட்டுரையில் மேய்ச்சல் நிலம் என்ற வார்த்தையை நாராயணி பயன்படுத்துகிறார். நாராயணி அவர்களே, அது தமிழர்களின் வார்த்தை.

“சாதாரண மனிதர்களுக்கு  எதையும் சுயமாக நிர்வகிக்க தெரியாது என்ற கருத்தாங்கள் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றன” என குறுந்தலைப்பு வைத்திருக்கிறது தமிழ் திசை. (கட்டுரையின் விஷம் இதுதான். மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்குவது)

(நன்றி தமிழ் திசை)
 

சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது எங்கனம் சமத்துவ பரிபாலனம் நடக்கும்? ஜாதியின் வேர்கள் ஆழத்தில் கிடக்கின்றன. இவ்வகையான சூழலில் சமத்துவமான நிர்வாகம் நடக்காது. இன்றைக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கின்றன. தனித்தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 

நாங்கள் மிகத் தெளிவாக எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். ஆங்கிலேயர்கள் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி வைத்து விட்டார்கள். இல்லையெனில் தமிழ் இசை கர்நாடக சங்கீதமென மாற்றமெடுத்து நிற்பது போல, இல்லாத மொழியில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். சதிராட்டம் பரத நாட்டியம் என்று மாற்றியது போல மாற்றி இருப்பார்கள்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளிநிலம், கிராமக்காடுகள், இட்டேரி போன்றவை தமிழர் வாழ்வியலில் ஒன்றியவை.

அரசின் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்ய வேண்டுமெனில், கோவில்களையும் அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அரசின் அலுவலர்களும், மக்கள் பிரதி நிதிகளும் நன்றாகத்தான் நிர்வகிக்கின்றார்கள் இதுகாறும். இனிமேலும் அவ்வாறே. வம்பு வழக்குகள் வந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கும். ஏற்கனவே அதற்கான அமைப்புகள் இங்கே உள்ளன. 

ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான ஜாதிகள் உண்டு. பொருளில் ஏற்றத்தாழ்வு கொண்டோர் உண்டு. அன்றாட வேலைக்கு செல்வோரும், வீட்டில் உட்கார்ந்து வாழ்வு போக்கும் மனிதர்களும் உண்டு. இவர்கள் எல்லோரும் தான் கோவில்களுக்குச் செல்கிறார்கள். 

கோவில் நிர்வாகத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்றால் மீண்டும் அதே கதை. கோவில்களுக்குள் நின்று கொண்டு ஆகமத்தைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கொடுத்தல் தான் நல்லது ஏனென்றால் இவர்களால் நிர்வகிக்க வாய்ப்பில்லை என்பதுதானே அது?

கோவில்கள் என்பது மக்கள் சொத்து. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிர்வகிப்பதில் தெய்வ குற்றம் ஏதும் இல்லை.

அங்கே அப்படி, இங்கே இப்படி என செய்திகளை வெளியிட்டு ஒருவிதமான எதிர்ப்பு மன நிலையை தமிழ் திசையும், கட்டுரையாளரும் உருவாக்கி வருகிறார்கள்.

தமிழ் திசை தமிழர்களின் மன நிலையை குழப்பும் விதமாக சமீபகாலமாக அதுவும் திமுக அரசு பதவி ஏற்கும் முன்பே செய்திகளை வெளியிட்டு வருகிறது. 

பல தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழர் விரோத போக்கினையும், மூளைச்சலவை செய்யும் செய்திகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன. மக்கள் இவற்றை விலக்கி விட வேண்டும்.

கட்டுரை எழுதிய ஆசிரியரின் உள் நோக்கம் அதுவும் அழுகிப் போன ஜாதிய உள் நோக்கம் தமிழக மக்களின் மனதில் விஷத்தை விதைப்பது. இக்கட்டுரை அதைத்தான் சொல்லி இருக்கிறது. மீனவர்கள் போராட்டத்துடன் கோவில்களையும் இணைப்பது போல ஸ்லோ பாய்சனை எழுதி இருக்கிறார் அவர்.

கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் அதன் போராட்டங்கள் வேறு. கோவில்களின் நிர்வாகம் என்பது வேறு. ஒன்றுக்கும் ஒன்றுக்கும் தொடர்பில்லை. ஆனால் தொடர்பு படுத்தி இருக்கிறார் கட்டுரை எழுதியவர்.

கோவில்களில் இருக்கும் ஜாதி வெளியேற வேண்டும். அதை காலம் கொண்டு வரும். இனிமேலும் மக்களை இறைவன், ஆகமம், விதிகள் என்றுச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு சுகபோகத்தில் வாழ முடியாது. 

தமிழக கோவில்கள் தமிழர்களின் சொத்து. அதை அரசு மட்டுமே நிர்வகிக்கும். அது தனிப்பட்ட மக்களின் சுய நல ஜாதிய கீழ் நிலை மனம் கொண்டவர்களின் மக்களை நாளடைவில் விரட்டி அடிக்கும்.

தன் உடம்பில் ஜாதிய அடையாளங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் மனித குலத்தின் விரோதிகள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

குழந்தைகள்ம் மதச் சின்னங்கள் இல்லாமல் தான் பிறக்கின்றன. வாழ்வியல் நெறிமுறைகளுக்கான பாதையை மதங்கள் உருவாக்கி நெறிப்படுத்துகின்றன. அது வழிகாட்டி மட்டுமே. மனம் குருகிய மனிதர்களின் இரக்கமற்ற ஜாதிய சிந்தனைகள் தான் ஏற்ற தாழ்வுகளுக்கு காரணமாயிருக்கின்றன.

தமிழ் திசை தன் நிலை மாற்றாவிடில் காலம் மாற்றி விடும். வாழ வைத்திருக்கும் தமிழர்களுக்கு கொஞ்சமாவது நன்றிக் கடன் படல் வேண்டும். இல்லையெனில் கோபுரங்களும் குலைந்து போன வரலாற்றில் பதிந்து போய் விடும்.

#tamilthisai #tamilmagazine


Saturday, June 26, 2021

நிலம் (84) - மோசடிப்பத்திரங்கள் ரத்து செய்ய நீதிமன்றம் போக தேவையில்லை

அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த பிளாக்கில் 2008லிருந்து எழுதி வருகிறேன். எனக்குள் தோன்றிய எழுத்தார்வத்தால் தொடங்கிய பிளாக் இன்று 13வது வருடத்தினை தொட்டிருக்கிறது. இன்னும் எழுதி வருகிறேன்.

சென்ற காலங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கும் முன்பு பிளாக்குகள் பெரும் புகழடைந்து இருந்தன. இன்றைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதரவைகள் அனைத்திலும் ஹீரோ வில்லன் ரேஞ்சுக்கு சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள். மன நோய் அதிகரித்து விட்டது. 

அரசியல் சார்பு நிலை எடுப்பவர்கள், அதற்காக டிவிட், பதிவுகள் போடுபவர்கள் பலனுக்காக சார்ந்திருப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாது அவர்களின் ஒவ்வொரு கமெண்டுக்கும் பதில் அளிப்பது என்பது  மன நோய் ஆகி விடும். ஒதுக்கி விட வேண்டும். அழுக்குப் பிடித்த மன நோய் முற்றிய நிலையில் பொருள், பதவி, அதிகாரம் ஆகிய நோய் பீடித்தவர்களின் பதிவுகளுக்கு பதில் தரவே கூடாது. 

ஆனால் பிளாக்குகள் அப்படி இல்லை. இவை எழுதுபவர்களிம் மனதின் சிலேட். பதில் போடுபவர்களை நாம் சரியாக கையாளலாம். கோபம் வராது, கொந்தளிப்பு வராது. ஃபேஸ்புக், டிவிட்டர்கள் சந்தைக்குள் நடந்து செல்வது போல. ஆனால் பிளாக் சந்தைக்குள் இருக்கும் கடை போல. அழககாக அடுக்கப்பட்ட பதிவுத் தொகுப்புகள் மூலம் நாம் நம் எழுத்தை எடை போடலாம். ஒவ்வொரு காலத்திலும் இருந்த மனவோட்டத்தை அறியலாம். ஆனால் மேற்கண்டவைகளால் அப்படியெல்லாம் பயனடைய இயலாது. சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. அவர்களின் வருமானத்திற்கான வடிவமைப்பு. பிளாக் ஆக சிறந்தது எல்லாவற்றிலும் என்பது எனது எண்ணம்.

அந்த வகையில் அடியேன் நிரம்பவும் விரும்புவது பிளாக் தான். ஆனால் தொழில் நிமித்தம் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருக்கிறேன்.

இந்த பிளாக் ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் படிக்கப்பட்டது. தற்போதும் சுமார் 40 நாடுகளில் இருந்து வாசிக்கப்படுவதாக ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்கிறது. நாம் எழுதுவது எவருக்காவது பயன்பட வேண்டுமென்பதில் எனக்கு நிரம்ப ஆர்வமுண்டு. 

அந்த வகையில் நிலம் தொடர் பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சரி

இப்போது தலைப்புக்கு வந்து விடலாம்.

25.06.2021ம் தேதியன்று தமிழ் திசை தினசரியில் வெளியான ஒரு செய்தி கீழே இருக்கிறது.


மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்த தீர்ப்பின் மீது எனக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்திய பதிவுத்துறைச் சட்டம் 1908னை படித்துப் பார்த்தேன். இந்தச் சட்டத்தின் பதினோறாவது பகுதி, ஐந்தாம் பிரிவில் பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவரின் ஆளுகை அதிகாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் சூழலுக்கு ஏற்ப விதிகளை வகுக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் மோசடிப் பத்திரம் தயார் செய்தவர்களையும், பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரின் மீதான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகள் மீது நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடப்படல் அவசியம்..

பத்திரத்தினை ரத்து செய்து, அதனை பதிவுத்துறையிலும், வருவாய்துறையிலும் பதிவு செய்தாலும் கூட அந்த மோசடி பத்திரத்தின் அசலை வைத்து ஏமாந்தவர்களிடம் கடனோ, காப்புறுதியோ பெறும் பட்சத்தில் அந்த மோசடிப்பத்திரத்தின் மூலம் தொடரும் குற்றச் செயல்களை எப்படி அனுமதிக்க இயலும்? ஆகவே அப்பத்திரத்தின் நிலை குறித்து ஆவணங்களில் குறிப்பிட்டாலும் கூட அது பறிமுதல் செய்யப்படல் அவசியமாகிறது.

உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை என்றாலும் கூட, குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகளையும் நீதிமன்றம் வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் வழக்குதாரர் கோரிய பரிகாரத்துக்கான பதிலாகத்தான் தீர்ப்பினைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

இனிமேல் மோசடி பத்திரத்தின் பதிவுகள் வருவாய் துறை ஆவணங்களிலும், பதிவுத்துறை ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே சொத்தின் உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்லத்தேவையில்லை என்பது ஒரு சிறந்த தீர்ப்பு என்பதில் ஐயமில்லை.

ஆனால் வருவாய் துறையினர் அவ்வாறான தீர்ப்புகளையோ மோசடி ஆவங்களையோ பதிவு செய்தல் என்பது அவ்வளவு எளிதானதா? இந்த கேப்பில் கிடா வெட்டி விடுகின்றார்கள்.

நீதிதுறை, பதிவுத்துறை, வருவாய் துறை மூன்றும் நேர் அடுக்கில் இணைக்கப்பட்டால் ஒழிய இதற்கு தீர்வே இல்லை.




Sunday, June 20, 2021

சிவசங்கர் ராஜகோபாலன் ஆகியோர் பாலியல் அத்துமீறினார்களா? - உண்மை என்ன?

நானும் ஒரு ஆன்மீகவாதி என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு நான் யார்? எதற்குப் பிறந்தேன் என்று ஆராயவெல்லாம் தெரியாது. அதைத் தெரிந்து கொண்டு எனக்கொன்றும் ஆவப்போவதில்லை. என் முன்னால் நிகழ் காலம் இருக்கிறது. சமூகச் சூழலுக்குள் இருக்கும் நான் சமூகத்தின் ஒரு பிரதியாக இருக்கும் நான், அச்சூழலுக்கு ஏற்ற அறம் சார்ந்த, பிறருக்கு கேடு எழா வண்ணம் வாழ்க்கையை வாழ முயல்கிறேன். ஆகவே எனக்கு எந்த ஒரு சாயமும் இல்லை. எனக்கு வலது, இடது, நடு, முன்னால், பின்னால், இந்து, கிறிஸ்து, முஸ்லீம், பார்சி, சீக்கியம் போன்ற எந்தச் சார்பு நிலையும் இல்லை. ஆகவே இப்பதிவினை தொடர்கிறேன்.

சிக்மெண்ட் பிராய்டு கேள்விப் பட்டிருப்பீர்கள். பாலியல் உணர்வுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்தவர். அவரின் ஆராய்ச்சி மூலமாக அவர் சொன்னது தான் அடுத்து வருகிறது.

அம்மா மீது மகன் கொண்டிருக்கும் பிரியத்துக்குக் காரணம் மகனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சும் போது அவனின் பாலியல் உறுப்பின் மீதான தீண்டல்களினால் அவனடையும் உணர்வுகளினால், அப்பாலின உறுப்புகளின் தீண்டலை அவன் அம்மாவிடமிருந்து பெறுவதினால் தான் மகன்கள் அம்மாக்கள் மீது அதீத பிரியம் கொள்வார்கள். 

அம்மா போலவே மனைவி வேண்டும் எனச் சொல்வார்கள் பிள்ளைகள்.

அதே போலத்தான் அப்பா மகள்கள் மீதான் பிரியத்துக்கும் பாலியல் ரீதியான உணர்வுகளை கிளர்ச்சிகளை சிறுவயதிலிருந்து தன் தந்தையிடமிருந்தே பெறுகிறாள். இது ஒன்றும் தவறில்லை. இது இயற்கை. சமூகத்தின் ஒழுங்கமைவுகள் மகளை பருவ வயதில் ஆண்களிடம் நெருங்க கூடாது என்று சொல்லி வருவதும் இதன் காரணமாகத்தான்.

சிக்மெண்ட் பிராய்டு தன் ஆராய்ச்சியில் இதனை உணர்ந்தார்.

சினிமாக்களில் வயதான கிழட்டு நடிகன் நடிகைகளை தடவுவது, மார்பகங்களில் முகத்தினை இழைப்பது, தொப்புள்களில் விரலை விடுவது போன்ற காட்சிகள், திரைப்படத்தினைப் பார்க்கும் ரசிகனை கிளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்தக் கிளர்ச்சியினால் தான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரைப்படம் பார்க்க வருவார்கள். அதன் காரணமாகத்தான் சிலுக்கு, ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்றோர்கள் பிரபல்யம் அடைந்தார்கள். இவர்களால் தான் ரசிகன் சினிமாவுக்கு வருகின்றான். ஆனால் பலன் முழுவதும் ஹீரோக்களுக்குச் சென்று விடுவதுதான் இங்கு காலம் காலமாக நிகழ்த்தப்படும் அயோக்கியதனம். எம்,ஜி.ஆரின் காதல் டூயட்டுகளைப் பாருங்கள். நாமெல்லாம் எந்த அளவுக்கு ஏமாளிகள் என்று புரிந்து கொள்வீர்கள்.

ஹீரோயிசத்தின் பிம்பம் இப்படித்தான் ரசிகர்களின் மனதில் பதிக்கப்படுகிறது.

காலச்சுவடு பத்திரிக்கையில் தியோடர் பாஸ்கர் அவர்கள் எழுதிய ’மன்மத லீலையை வென்றார் உண்டோ? தமிழ் சினிமாவும் பெண்ணுடல் நோக்கலும்’ கட்டுரையினைப் படித்துப் பார்க்கவும். அதில் ஒரே ஒரு சொட்டு உங்களுக்காக. (நன்றி காலச்சுவடு மற்றும் தியோடர் பாஸ்கர்)

பாலியல் உணர்ச்சி தூண்டப்படுவதால் தான் இன்றைய சமூக ஊடகங்கள், இணையதளங்கள் இயங்குகின்றன. இல்லை என்று எவராலும் மறுக்க முடியாது. கள்ளக்காதலுக்கு என்று இணையதளங்கள் உள்ளன. சென்னையில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வருடத்திற்கு மூன்று கோடி கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தேன்.

அறிவை விட உணர்ச்சி தான் மேல். அறிவு பின்னால் தான் வேலை செய்யும். உணர்ச்சிதான் முதலாக வேலை செய்யும். பெரும்பாலான குற்றங்கள் நடக்க காரணம் அந்த நொடியில் உண்டாகும் உணர்ச்சியால் தான். 

இளம் பிராயத்தில் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள் அதிகமாயிருக்கும். அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும். காதல்கள் அதானால் தான் நடக்கின்றன. காதலின் பின்னால் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி காதலர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.

இந்த இடத்தில் தான் படுபாதகர்கள் தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள். இனி கீழே இருக்கும் யூடியுப் வீடியோக்களைப் பாருங்கள். பார்த்து விட்டுத் தொடருங்கள். அப்போதுதான் இந்த உலகத்தில் வலதுசாரி, ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்தலையும் அயோக்கிய சிகாமணிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

இந்த வீடியோவில் சிவசங்கர் “மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து, நாய் மேல ஆசை வச்சா லொள் லொள்’ என்று பாடுகிறார். கூடவே ஒரு பெண் குரல் லொள் லொள் என்று பாடுகிறது.

சத் சங்கத்தில் இவர் பேசியதை எல்லாம் கேளுங்கள். கேட்ட பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதன் பின்பு, உணர்வுகளால் உந்தப்பட்ட மாணவிகளை பஜனை (அந்த வார்த்தைக்கு சினானிம்ஸ் வார்த்தை இது. புரிஞ்சுக்கோங்க) செய்வதற்கு வலை வீசுகிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. 

அடுத்து கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். இவருக்கு ஆதரவாக பேட்டிக் கொடுக்கும் மூன்று பெண்கள். கூட ஒரு கிழட்டு நரி. இரண்டு பேரின் பேட்டியையும் முழுமையாகப் பாருங்கள்.


 



அந்த மூன்று ஆபாசிரியர்களையும் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்புவது படிக்கவா இல்லை சிவசங்கரிடம் கட்டிப் பிடித்து முத்தம் வாங்கவா? அவனவன் பிள்ளைகளைப் பெற்று படாதபாடு பட்டு வளர்த்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு கட்டிப் பிடிக்கிறது, கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது என்ற சேட்டையைச் செய்து, பிள்ளைகளின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பஜனைக்கு தயார் செய்யும் பாடத்தை இப் பள்ளி ஆபாசிரியர்கள் செய்து வந்திருக்கிறார்கள் என்று இப்பேட்டியைப் பார்க்கும் போது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

சுஷில்ஹரி பள்ளியின் ஃபவுண்டர் சிவசங்கராம். ஒரு பேங்க் அக்கவுண்ட், போன் கூட இல்லையாம். ஆபாசிரியர்கள் சொல்கிறார்கள். ஒரு டிரஸ்டின் ஃபவுண்டர் (நிறுவனர்) தான் டிரஸ்டின் உரிமையாளர். டிரஸ்ட் அக்கவுண்டண்டை  நிறுவனர் நியமிப்பார். எல்லோரும் முட்டாள்கள் என என்ணிக் கொண்டு பேசுவது இந்த ஆபாசிரியர்களின் முட்டாள்தனம்.

அடுத்த வீடியோவில் ஒரு கிழட்டு நரி ஊளையிடுகிறது. சிவசங்கர் ஆபாச பேச்சை குடும்பத்தோடு உட்கார்ந்து கேட்பார்களாம். மும்பை சோனாகாச்சி ஆட்கள் இப்படித்தான் சொல்வார்கள். 

வரலாறு சொல்கிறது. நான் சொல்லவில்லை. ஆங்கிலேயன் இந்தியாவில் ஆட்சி செய்யும் போது அப்போது படித்தவர்களாக இருந்தவர்களை பதவியில் உட்கார வைத்தான்கள். அப்படி பதவியில் இருந்து கொண்டு, சோறு சோறு சுகம் சுகம் பணம் பணம் என்று வாழ்ந்தவர்களை எளிதில் புரிந்து கொண்டான் ஆங்கிலேயன். அனுப்பி வை, இல்லேன்னா கைதுதான். ஒரு சொம்பு தானே. புரிந்ததா?

புரியாதவர்கள் ஓடிப் போய் விடுங்கள் இங்கிருந்து. நீங்க இதற்கு லாயக்கு இல்லை. தனுஷ் படம் பார்க்கத்தான் லாயக்கு.

அடுத்து உளறல் பிரபலம் மதுவந்தி, எழுபது வயதில் சைட் அடிக்கும் பிரபல்யமான மிஸ்டர் ரஜினியின் சகலபாடி ஒய்.ஜி.மகேந்திரவாள் ஆகியோர் டிரஸ்டிகளாக இருக்கும் பத்ம சேஷாத்திரி பாலர் பவன் பள்ளி ஆபாரிசியர் ராஜகோபாலன், அரை குறை ஆடையில் ஆன்லைன் கிளாஸ் எடுக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்? ஆன்லைனில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு அங்கிட்டு இங்கிட்டு செல்லும் போது தன் குஞ்சாமணியைக் கூட காட்டி இருப்பான். பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, உணர்வின் பிடியில் சிக்கும் பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்து பஜனை செய்வதற்கு தூண்டில் போடுவதை நன்றாகச் செய்து வந்திருக்கிறான் அவன். அவனுக்கு சப்போர்ட் செய்கிறது ஒரு கட்சி. அய்யோ அம்மா என்று கதறுகிறார்கள். ஒருவர் ஆட்சியைக் கலைப்பேன் என்கிறார். பி.எஸ்.பி.பி பள்ளி அரசின் சொத்து. அது அரசுடைமையாக்கப்படல் அவசியமானது.

முரசரங்கம் பகுதியில் நடந்த ஒரு விவாதத்தை கீழே இருக்கும் வீடியோவில் பாருங்கள்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற நவநீதன் சிவசங்கரின் புகைப்படத்தைப் போடக்கூடாது என்கிறான். அவனைச் சாமியார் என்று அழைக்கக் கூடாதாம். இவர்களின் மன நிலை என்னவாக இருக்கும்? இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கேடுகெட்ட ஈனப்புத்திகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இம்மாதிரியானவர்கள் மனித இனமாக இருக்க முடியாது. 

நவநீதன் சொல்கிறான், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு பதிவுக்காக கைது செய்திருக்கிறார்கள் என. அப்பா அம்மாவிடம் கூட பேச முடியதாதை அப்பெண்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்கள். அரசு மிகச் சரியாகத்தான் நடந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் மூலமாகத்தானடா வக்கிர ஆட்களின் தகிடுதத்தங்கள் வெளியாகின்றன. சாட்சிகளை வைத்துக் கொண்டா குற்றவாளிகள் குற்றம் செய்வார்கள்?

சமூகத்தினர் இம்மாதிரியான ஆட்களிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிவசங்கர் தன் வக்கிரமான பாலியல் தேவைகளுக்காக பள்ளி நடத்தி இருக்கின்றான் என்பது கண்கூடு.  அதற்கு அங்கு வேலை செய்யும் ஆபாசிரியர்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறான் என்பதை சாட்சிகளுடன் இங்கு பதிவு செய்திருக்கிறேன். 

ஒருவரின் வார்த்தைகள் மூலம் அவர்களின் மன ஓட்டத்தினையும், அவர்களின் டிசைன் என்னவென்பதையும் சற்றே உற்று நோக்கினால் கண்டுபிடித்து விடலாம். இக்கட்டுரையில் இருக்கும் வீடியோக்கள் ஆதாரமாய் இருக்கின்றன. 

முடிவாக ஒன்று. மேலே இருக்கும் சுஷில்ஹரி பள்ளியின் ஆபாசிரியர்களில் பேட்டி கொடுத்த நடுவில் அமர்ந்திருந்த ஊதா கலர் ஆபாசிரியரை பார்ப்பதற்கே முழு வீடியோவையும் பார்த்தேன். இந்த வீடியோ எடுத்த வீடியோகிராபர் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் அந்த ஆபாசிரியரையே படம் பிடித்திருக்கிறார். நம்ம இனம் அவர். அப்படியே கும்கி கும்தலக்கா லட்சுமி மேனன் போலவே இருக்கிறார் பாருங்கள். இதற்கு நானொன்றும் காரணம் இல்லை. அந்த ஆபாசிரியரும், வீடியோகிராபரும்தான் காரணம். 


மனிதனின் காம வக்கிரங்களுக்குப் பள்ளிக் கூடங்களும், ஆன்மீக ஸ்தலங்களும் காரணமாக இருப்பது காலத்தின் கொடுமை. 

தனது பாலியல் வக்கிரங்களை நிறைவேற்ற, இப்படியான குதர்க்கச் செயல்களைச் செய்து வருபவர்களும், இவர்களுக்கு நிறுவனத்தின் பெயரால் சப்போர்ட் செய்பவர்களும், ஆதரவு தெரிவிப்பவர்களும், இதர ஆதரவு ஆட்களும் குற்றவாளிகள் என்பது தெரிபு. 

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு ஒரே தீர்வு தூக்கு அல்லது ஜெயில் மட்டுமே சரியாக இருக்கும். இவர்கள் மன நிலை தவறியவர்கள். இவர்களை சமூகத்தில் உலவ விடுதல் கூடாது.

நற் சமூகம், நற் சிந்தனை, நற் செயல்கள் தான் உலகிற்கு நல்லன பயக்கும். ஆகவே தீயவர்களை சமூகத்தில் இருந்து நீக்கி ஜெயிலில் போடுவதுதான் வரும் கால சந்ததியினருக்கு நாம் செய்யும் உபகாரமாய் இருக்கும்.

அம்புட்டுதான்...!

Thanks to : Video Providers.

Saturday, June 19, 2021

நல்லி எலும்பு கறிக்கொழம்புக்குத்தான் லாயக்கு - ஜகமே தந்திரம் ஒரு பார்வை

 

கதையைப் பார்க்கலாம்.

இரயில் பாதை குறுக்கே ஒரு கார். ஹீரோ உட்கார்ந்திருக்கிறார். சிவப்பு கார்.

ஙொப்புறானே சத்தியமா நம்புங்க.

இரயில் சரியாக காரின் அருகில் பிரேக்கிடுகிறது. இரயிலின் டிரைவர் சீக்கிரம் காரியத்தை முடிங்கன்னு சொல்லுகிறார்.

அங்கு யாரோ ஒரு ஒரு வட நாட்டு சேட்டானின் தம்பியைச் சுட்டுக் கொன்னுட்டு கிளம்புகிறார் #தனுஷ்.

தனுஷின் ஹோட்டலில் தனுஷைக் கொல்ல சேட்டனின் ஆட்கள் முயல, நாட்டு வெடிகுண்டை போட்டு துரத்தி அடிப்பதைப் பார்க்கும் ஒரு ஆங்கிலேயன் (தனுஷ்)சுருளியை அவன் நாட்டில் இருக்கும் ஒரு தாதாவை போட்டுத்தள்ள அழைக்கிறான். ஆங்கிலம் தெரியாத சுருளி பிரிட்டன் கிளம்புகிறான்.

அங்கு பிரிட்டன் ஃபாசிஸ்ட் பீட்டரைப் பார்க்கிறான். அவன் தமிழன் சிவதாசுவைப் போட்டுத்தள்ளச் சொல்கிறான்.

ஐந்தாறு நாட்களில் சிவதாசை ஆராயும் சுருளி அவன் தங்கம் கடத்துகிறான் என்று கண்டுபிடிக்கின்றான். ஒரு லாட்டைப் பிடிக்கிறான். அவ்வளவு திறமை வாய்ந்த தமிழ் எலி (இப்படித்தாங்க தனுஷை சிவதாசு சொல்கிறான்) சுருளியைச் சந்திக்கிறான் சிவதாஸ்.

சுருளியின் ஏற்பாட்டால், சிவதாசும் பீட்டரும் சந்திக்கின்றார்கள். சிவதாசைப் போட்டுத்தள்ளுகிறான் பீட்டர். உதவி சுருளி.

சுருளிக்குப் பரிசாக ஒரு ஏரியா கிடைக்கிறது. லிட்டில் மதுரை எனப் பெயர் வைத்து ஊர் ஆட்களை அழைந்து வந்து வாழ்கிறான். 

சுருளி ஒரு இலங்கைப் பெண்ணைக் காதலிக்கின்றான். அவளுக்கு ஏழு வயதில் பையனுண்டு. (புரட்சிக் கதை இயக்குனரே. மாமிக்கள் மீது தனுஷுக்கு ஆர்வம் போல. ஒது ஒரு ட்ரிக் ஷாட். மாமிகள் முயலலாம் என க்ரீன் சிக்னல். இப்படித்தான் ஒருத்தன் வீணாய்ப் போனான்)

அவளுடன் சுருளி டேட்டிங்க் போகின்றான். அங்கு சுருளி சுடப்படுகின்றான் சிவதாஸ் ஆட்களால். பின்னர் காப்பாற்றப்படுகிறான். சுருளி சுடப்படக் காரணம் காதலி.

காதலி ஏன் சுருளியைக் கொல்ல முயல்கிறாள்? 

சிவதாஸ் உதவியதால் தான் அவள் பிரிட்டனில் இருக்கிறாள். அந்த நன்றிக் கடனுக்காக காதல் போர்வையில் கொலை முயற்சி.

அகதிகளுக்கு உதவிடத்தான் சிவதாஸ் தங்கம் கடத்துகிறான். பீட்டர் தன் நாட்டில் வேறு நாட்டவர் எவரும் இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஃபாசிஸ்ட் என அறிகிறான் சுருளி.

அகதிகளுக்கு ஆதரவாய் சட்டமியற்றப் போராடும் ஒரு ஆங்கிலேயனைப் போட்டுத்தள்ளு என்கிறான் பீட்டர்.

உண்மையை தெரிந்து கொண்ட சுருளி பீட்டரைக் கொல்லாமல் அகதி போல பாஸ்போர்ட் தயார் செய்து எங்கோ கொண்டு போய் விடுகிறான்.

கதையும் முடிந்தது. படமும் முடிந்தது.

* * *

படத்தினை வாங்கி வெளியிட்டிருக்கிறது சுருளி 2019 பிலிம் லிமிடெட் நிறுவனம், லண்டனில் முகவரி இருக்கிறது. அவர்களிடமிருந்து படத்தை வாங்கி நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. 

1949ல் பிறந்த மிஸ்டர் பிரைன் பிரேக் 48 கம்பெனிகளுக்கு இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார். அவரின் நிறுவனம் தமிழ் படத்தை வாங்கி வெளியிடுகிறது. இதன் பிசினஸ் கான்செப்ட் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.

மிஸ்டர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பிசினஸ் வலைப்பின்னல்கள் பற்றிய இந்த சிறு விபரமே தலை சுற்றுகிறது. இந்த நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒய் நாட் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தமிழ் நாட்டில் தயாரித்து இருக்கிறது. ஃபாரின் இன்வென்ஸ்ட்மெண்ட் இந்தியா உள்ளே வந்திருக்கிறது. நல்ல வேளை இந்த நிறுவனத்துக்கு முகவரி எல்லாம் இருக்கிறது.

நம்ம அதானி போல ALBULA INVESTMENT FUND, CRESTA FUND AND APMS INVESTMENT FUND - FOREIGN PORTFOLIO INVESTORS போல் இல்லை. ஒரு வெப் சைட் கூட இல்லாத வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்ம இந்திய ஒன்றியம் அனுமதி கொடுத்திருக்கிறது. நீண்ட நாள் கழித்து அதைச் செபி கண்டுபிடிக்கிறது. அல்புலா அதானி மட்டுமல்ல பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள். அதானி நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 கோடி. முகவரி இல்லா நிறுவனத்திடமிருந்து முதலீடு.

ஒரு வோட்டர் ஐடி மாற்ற நாமெல்லாம் என்ன பாடுபடுகிறோம் எனக் கவனியுங்கள்.

அக்கவுண்ட் எல்லாம் செக் செய்தார்களே இன்கம்டாக்ஸ்காரர்கள் என்று அவர்கள் தான் கவலைப்படனும். நமக்கேன் வம்பு.

* * *


கார்த்திக் சுப்புராஜ் காலி பெருங்காய டப்பா என பேட்ட படத்தைப் பார்த்த போதே தெரிந்து விட்டது. பப்புகளில் ஊத்தி விட்டு, தடவி, குடித்து கற்பை கற்பூரமாக்கும் அதி உன்னத வேலையைச் செவ்வனே செய்து வரும் தமிழ் உலகின் உன்னத ஒப்பற்ற நடிகரின் விதி வேலை செய்யத் துவங்கியது போலும்.

சுருளி என்ற பெயருக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கும். 80களில் சுருளிராஜன் லெஜெண்ட். அவரின் நகைச்சுவையை சந்தானம் நிரப்பினார். இப்போது ஹீரோ படுகுழியில் விழுந்து கிடக்கிறார். அட்டைக்கு மெத்தை ஆகாது அல்லவா?

நகைச்சுவைக்குப் பெயர் போன பெயரை ஹீரோவிற்கு வைத்து  இது நகைச்சுவைப் படம் என்றுச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல இயக்குனர். அதாவது கிரைம் திரில்லர் ஆக்சன் நகைச்சுவை.

தனுஷை விட பெரிதாக இருக்கும் மெஷின்கன்கள். அதை வைத்து ஆக்சன். துப்பாக்கி சைசுக்கு இருக்கும் ஹீரோ. நான்கு மடங்கு வெயிட்டாக இருக்கும் அடியாட்கள். வேஷ்டியில் வில்லனின் ஆட்களைச் சுடும் ஸ்லோமோஷன் காட்சிகள் என நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். கொய்யாலே..!

பிரிட்டன் தாதா மதுரை தாதாவை வைத்து தன் கொலைகளை நடத்தினால் எப்படி இருக்கும்? இதுதான் கதையின் வொன் லைன்.

அந்த மதுரை தாதாவே நீங்க தான் சார் என்று தனுஷிடம் சொல்லி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குனர் சுப்புராஜ் அவர்களே, 

கவட்டியைச் சொறிந்து விடும் கறி (ஹீரோயினின் சதைக்கறி) குழம்பு வைக்கத்தான் நல்லி எலும்புக்குச் சரிப்படும். அது மாதிரியான மல்லுப் படங்களை எடுத்துக் கல்லாவை நிரப்புங்கள்.

அதை விடுத்து. உலக அரசியல் பேசும் தகுதி எல்லாம் நல்லி எலும்புக்கு கிடையாது இயக்குனரே. நல்லி எலும்பு நாட்டை ஆளக் கேட்டால் அதற்கு கதை பண்ணிக் கொண்டு செல்லும் உம்மைப் போல ஆட்களை காலம் மன்னிக்காது.

ஒரு விஜயகாந்த் போதும் தமிழ் நாட்டுக்கு. விட்டு விடுங்கள் தமிழர்கள் பிழைத்துப் போகட்டும். இப்படத்தின் மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் நீங்கள்? சிவதாசுவை வைத்துக் கேலி செய்வது தான் நோக்கமா? அவ்வளவு இழிவானவர்களா இலங்கைத் தமிழர்கள்?

துரோகம் தமிழனின் கூடப் பிறந்தது என்ற வசனம் உங்களுக்கும் பொறுந்தும். 

நீங்கள் ரசிகர்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றீர்கள்.

எனது ஆகப்பெரும் கெட்ட வார்த்தை “போடா டேய்”. அந்த வார்த்தையால் கூட திட்ட முடியாத அளவுக்கு கேடுகெட்ட படம் ஜெகமே தந்திரம்.

சீனுக்குச் சீன் வைச்சு செய்யலாமா என்று பார்த்தேன். எரிச்சல்தான் மண்டியது. 

திரும்பக் கிடைக்கவே கிடைக்காத பலரின் நேரத்தை அழித்து விடும் உம்மைப் போன்ற ஆட்களை என்னவென்று வைவது?

தனுஷ்... ரசிர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் - ஜெகமே தந்திரம்.

அம்புட்டுதான்.


Monday, June 14, 2021

வேலை வேண்டுமா? இந்திய அரசின் வேலைவாய்ப்பு இணையதளம்

அனைவருக்கும் இனிய வணக்கம். கோவிட் நோய் தொற்றின் காரணமாக வேலை இழந்தவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இந்தியாவில் எங்கெங்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, சம்பளம் எவ்வளவும், ஆன்லைனில் வேலைக்குத் தேர்வு செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வேலை பெறுவது ஆகியவற்றை இந்திய அரசின் வேலைவாய்ப்புத் துறை செய்து வருகிறது.

அரசு வேலை மட்டுமல்ல தனியார் துறையினரின் பங்களிப்பில் மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை வழங்கி வரும் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துக் கொள்ள வேண்டுமென்று இப்பதிவினை எழுதுகிறேன்.

இந்தச் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள். பதிவை பகிருங்கள். யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்தச் செய்தி. அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்கலாம். அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை தெரிவித்து விட்டால், அவரவர் திறமைக்கு ஏற்ற வேலையினைப் பெற்று மகிழ்வார்கள்.

மத்திய அரசின் இணையதள முகவரி : https://www.ncs.gov.in

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்வது?

தேவையானவை : 

ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள் அட்டை,பாஸ்போர்ட், டிரைவிங்க் லைசென்ஸ் அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் இதில் ஏதாவது ஒன்று  இமெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பர்.

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்யலாம் என்ற வீடியோ இருக்கிறது. அதை ஒரு முறை பாருங்கள். இமெயில் முகவரி மற்றும் மொபைல்  

கீழே காட்டப்பட்டிருக்கும் படிவத்தை வேலை தேடுவோருக்கானது.


 

பதிவு செய்த பிறகு இணையதளத்தின் உள்ளே சென்று மாநிலம் வாரியாக, செக்டார் வாரியாக வெளியாகி இருக்கும் வேலை வாய்ப்பில் பொருத்தமான வேலையைத் தேர்வு செய்து அப்ளை செய்யுங்கள். 

அதுமட்டுமின்றி வேலை வாய்ப்பு முகாம்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அதிலும் கலந்து கொள்ளலாம்.

தனியார் ஏஜென்சியிடம் பலரும் ஏமாந்து வருகின்றார்கள். அதெல்லாம் தேவையில்லை

ஒன்றிய அரசின் இந்த அருமையான சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்றிய அரசு வழங்கும் இலவச படிப்புகளை www.swayam.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று பதிவு செய்து விருப்பமான படிப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி சான்றிதழ் பெருங்கள்.