குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 7, 2021

தளபதி முதலமைச்சர் - ஜோதிடம் பொய் - சாட்சிகளுடன் ஒரு ஆய்வு

வாக்கு எண்ணிக்கை அன்று நான் டிவி பார்க்கவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஞானக்கூத்தனின் கவிதைகள் சுவாரசியமாக இருந்தது. 

மாலையில் திமுக ஆட்சிக்கு வருகிறது என்று தெரிந்தது. மகிழ்ச்சி. ஏனென்றால் யாருக்கு ஓட்டுப் போடலாம் என்ற பதிவினை எழுதி இருந்தேன். அது நடக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளுக்குள் இருந்தது. வெற்றி.

எனக்கு ஏன் அதிமுகவை பிடிக்காமல் போனது?

மனித சமூகத்தில் பேரவலங்கள் நடக்கும் போதெல்லாம் அதற்கு யாரோ ஒரு துரோகிதான் காரணமாக இருப்பான்.

அதிமுகவிற்கு முதலில் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அடுத்த துரோகம் இ.பி.எஸ். 

துரோகிகள் எப்போதும் துரோகத்தைத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நன்மை செய்வது பற்றி தெரியாது. தான், தன் சுகம், தன் மக்கள் என்று தான் சிந்திப்பார்கள். அதைத்தான் இருவரும் செய்தார்கள். அதுமட்டும் காரணம் அல்ல.

சட்டசபைக்குள் ஓ.பி.எஸ் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இணைந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அது உச்ச நீதிமன்றத்தில் வழக்காக விசாரிக்கப்பட்டு இன்னும் தீர்ப்பு வழங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கேலிக்குரியதாக்கி தர்மத்தை அழித்த கயமைத் தனத்தை பிஜேபியும் அதிமுகவும் இணைந்து செய்தன. 

காரணம் என்ன? பதவி ஆசை. 

இதுமட்டுமின்றி வேறென்னவாக இருக்க முடியும்? 

பிஜேபிக்கு நன்கு தெரியும் இருவரும் துரோகம் செய்தவர்கள் என்று. நாளை இதை அவர்களுக்கே திரும்பவும் செய்வார்கள் இவர்கள். செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது. அம்மிக்கல் என்றைக்கும் கோவில் சிலை ஆக முடியாது. ஏனென்றால் துரோகிகளின் டிசைன் அது. 

அதுமட்டுமல்ல இன்றைக்கு இந்தியர்களின் நம்பிக்கையாக இருக்கும் ஒரே நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் இந்தச் செயலால் சீரழிக்கப்பட்டது. இனி பதினோரு பேரின் அக்கிரமத்திற்கு தீர்ப்பு வந்தால் தான் என்ன வரவிட்டால் தான் என்ன? இனிமேல் வரக்கூடிய அந்த தீர்ப்பினால் என்ன பயன்? கேலிகுரியதாகி நிற்கிறது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையினால். இதற்கும் இவர்களே காரணம் அல்லவா? உலகிற்கே தெரியும் பதினோறு பேரும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என்று. பல்வேறு சாட்சியங்கள் இந்திய நீதித்துறையிலே கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அவர்கள் பதவி நீக்கம் பெறவில்லை. அவர்கள் தன் பதவிக் காலம் வரை பதவியில் இருந்தார்கள். ஏனென்றால் துரோகத்தினை இந்த மக்களும் ஆட்சியும் அமைப்பும் ஏற்றுக் கொள்கின்றன. அதற்கான விலையைத்தான் இன்றைக்கு நாமெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் அல்லவா மக்களின் துயரமென்ன என்று அறிந்து அதற்கேற்ப ஆட்சி செய்வார்கள்? ஆனால் நாம் செய்வது என்ன? 

சுரைக்காய் விதை போட்டு விட்டு, அரிசி வருமென்று நினைப்பது நம் தவறு அல்லவா?

அறமும் தர்மமும் தண்டனை தருகின்றன என்பது வரலாறு.

உடனே அவங்க யோக்கியமா என்று ஆரம்பிக்க வேண்டாம். பத்தாண்டு காலம் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளைப் படித்துப் பாருங்கள் தெரியும்.

அறம் மீறிய எந்தச் செயலையும் என்னால் ஏற்கவே முடியாது. ஏனென்றால் அதுதான் நம்மை எப்போதும் காத்து வருகிறது. இல்லையென்றால் இந்த நேரம் ஹிட்லரின் ஆட்சி அல்லவா இங்கு நடந்து கொண்டிருக்கும்?

நேர்மையாக இருக்கும் எந்த ஒரு தலைவருக்காக உழைத்திட இந்த மானிடம் தயாராக இருக்கும் எப்போதும். உண்மையற்ற, போலித்தனமான, கயமை எண்ணம் கொண்டவர்களை மக்கள் மன்னித்தாலும் அறமும், தர்மமும் மன்னிக்காது.

புதிய முதலமைச்சராக வரக்கூடிய ஸ்டாலின் பக்குவம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்கு திமுகவில் நிரம்பவும் பிடித்தது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு. மக்களிடம் உரையாடுவது போல அவர்களையும் தன் பேச்சுக்குள் இழுத்து கொண்டு வந்து, அனைவரையும் தன் மீது கவனம் செலுத்த வைக்கும் எளிமையான பேச்சு. 

இனிவரும் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கான அரசியல் களமாகத்தான் தமிழகம் இருக்கும் என நினைக்கிறேன். நல்லன செய்தால் நல்லன நடக்கும்.

* * *

இந்தக் களேபரத்தில் ஒரு நாள் ஒரு புத்தகம் படிக்க கிடைத்தது. படித்து முடித்ததும் அதிர்ந்தே போனேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் சில கீழே காட்டப்பட்டிருகின்றன. படித்துப் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் என்னிடம் இருக்கும் பல்வேறு ஜோதிட புத்தகங்களுடன் இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை ஆராய்ந்து பார்த்தேன். எல்லாம் ஒன்றுதான். எதுவும் அட்சரமும் பிசகவில்லை. அப்படியே இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றவில்லை, சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்கிறார் இந்த வேதகால புராண ஆராய்ச்சியாளர். அதன் அடிப்படையில் இன்றைய ஜோதிடம் இருக்கிறது. ஆரம்பம் தவறு. ஆனால் விடை மட்டும் சரி என எவ்வாறு சொல்ல முடிகிறது என்று சிந்தித்தால் அறியாமை என்ற வார்த்தை தான் முன்னால் வருகிறது.

மனது கிடந்து அடித்துக் கொண்டது. கோவில்களில் இருந்து எல்லாவிதமான நம்பிக்கைகளும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டவை அல்லவா? ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் தவறான கணக்கு எப்படி மனித வாழ்க்கையில் தாக்கத்தை இத்தனை காலமும் ஏற்படுத்தி இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனென்றால் எதை ஆராய்ச்சி செய்ய இயலாதோ அதைப் பற்றி பேசினாலோ எழுதினாலோ எவராலும் பதில் சொல்ல முடியாது அல்லவா? தெளிவான கட்டமைப்பு. தெளிவான பாதை. மக்களை முட்டாளாக்கும் அற்புத திட்டம். ஜோதிடம் பொய் என்பதை நிரூபி என்றால் நம்மிடம் ஏதும் தரவுகள் இருக்காது. ஆகவே தான் அந்தக் காலகட்டத்தில் இந்த ஜோதிடம் பெருகி வளர்ந்து மனித வாழ்வியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே வருகிறது.

அவர் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு விட்டார், அதுவெல்லாம்  இந்த ஜோதிடத்தில் கணக்கில்லை என்று வாதாடுவீர்கள். வைத்தீஸ்வரன் கோவில் ஏடுகள் எல்லாம் பொய்யா? என்பீர்கள். 

இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு ராசிக் கட்டங்களுக்குள் அடைபடும் ஜாதகத்தில் ஒன்பது நவக்கிரங்களின் பெயர்ச்சியால், அவைகளின் சேர்க்கை, விலக்கு ஆகியவைகளால் தான் பலன்கள் சொல்லப்படுகின்றன அல்லவா? டும் 12 ராசிக் கட்டங்களில் ஒன்பது நவக்கிரங்களில் முதல் கிரகமான சூரியன் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அறிவியல் நம்மிடம் யாரும் மறுக்கவே முடியாத சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்று காட்டி இருக்கிறது. இப்படியான சூழலில் நகரவே நகராத சூரியன் எங்கனம் ராசிக்கட்டங்களுக்கு நகர்ந்து செல்லும்? இதைத்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன். ஜோதிடம் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்கிறது.

லீலாவதி சந்திர க்ரஹணம் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயமும் இப்போதைய ஜோதிட கணக்குகளும் ஒன்றாகவே இருப்பதை நீங்கள் மறுக்க முடியாது. நெட்டில் தேடுங்கள். இந்தப் புத்தகம் கிடைக்கிறது. அது போலியானது என்று சொல்வீர்கள். அதையெல்லாம் நான் நிராகரிக்கிறேன்.

ஏனென்றால் நம் மூளைக்குள் இருப்பது பிறரின் சிந்தனைகள், கருத்துக்கள், அவர்கள் காட்டிய வழிகள். நாம் நாமாக எப்போதும் இருந்ததே இல்லை.

வாழ்வியலுக்கு கல்வி பதிவு என்பது வேறு. வாழ்க்கையை நெறிப்படுத்தும் வாழ்வியல் கல்வி என்பது வேறு. பொருளாதார அறிவு என்பது வேறு. வாழ்க்கை அறிவு என்பது வேறு. உடனே கொடி பிடிக்கும் நம் மனதுக்குத்தான் இவ்வரிகள்.

ஆயிரக்கணக்கில் ஜோதிடர்கள் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்னிடம். இனி கோவில்களுக்குச் செல்லும் போது ராகு, கேது, கிரகங்களை என் மனது எப்படி பார்க்கும் என்று சிந்திக்கிறேன்.

என் முன்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்பின் போலித்தனத்தை என் மனது இனி எப்படி ஏற்கும்?

இனிமேல் குல தெய்வ வழிபாட்டினைத் தவிர வேறு எதையும் என்னால் ஏற்க இயலுமா என்றே தெரியவில்லை. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது சாட்சி. அம்மன் கோவில்களில் நவக்கிரகங்கள் இருப்பதில்லை என்பது இன்னொரு சாட்சி.

எனது மதிப்பிற்குரிய சுவாமி ஆத்மானந்தா அவர்கள் என்னிடம் அடிக்கடிச் சொல்வார். என்னை துறவி ஆக்கியது “வாழ்க்கையில் வெற்றி” என்ற அப்துற் றஹீம் எழுதிய புத்தகம் என. 

எனக்கு காசையும், நேரத்தையும் மிச்சமாக்கி செய்யும் தொழிலே தெய்வமென நம்பும்படி செய்தது 1961ம் வருடம் மறைந்த சுப்ரமணிய சாஸ்திரிகள் எழுதிய லீலாவதி சந்திர க்ரஹணம் என்ற புத்தகம் என்றால் அது மிகையாகாது.

இது எனக்கு நானே எழுதிக் கொண்ட பதிவு. ஆகவே நீங்கள் இப்பதிவினைப் படித்தாலும் என்னைப் போல சிந்திக்க வேண்டாம். உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் எது உண்மை, எது பொய் என்பதை உங்களின் அறிவு கொண்டு தெளிந்து கொள்ளுங்கள்.





 
கீழ்கண்ட படத்தில் இருப்பது இதே ஆசிரியர் எழுதிய தாரகா லீலாவதி வானசாஸ்திரம் புத்தகத்தில் 6வது பக்கம்



Friday, April 30, 2021

இயக்குனர் கேவி ஆனந்த் - ஒரு முற்றுப் பெறாத நாவல்

எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு மாலைமதி, ராணிமுத்து, குமுதம் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் ஆனது. ஐந்தாம் வகுப்பின் போது ராணிகாமிக்ஸ் படிக்க ஆரம்பித்து இருந்தேன்.

அடுத்த அடுத்த தொடர் நாட்களில் சுபா, ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பி.டி.சாமி போன்ற நாவல் ஆசிரியர்களின் நாவல்கள் படிக்க கிடைத்தன. குமுதத்தில் தொடராக வரும் சாண்டில்யன் நாவல்களின் தொகுப்புகள் கிடைத்தன.

கசாலி என்ற நண்பன் மூலமாக அம்புலிமாமா போன்ற பல காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இறந்து போன எனது நண்பன் ஜகாங்கீர் ஆலம் மூலமாக பலப்பல புத்தகங்கள் கிடைத்தன. 

பாடப்புத்தகங்கள் அதனுடன் இம்மாதிரியான புத்தகங்களுடன் பள்ளிகளில் இயங்கும் நூலகப் புத்தகங்களையும் அவ்வப்போது படிப்பதுண்டு.

இப்படியான நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) எழுதும் சுபா நாவல், சூப்பர் நாவல் ஆகிய நாவல்களில் வரக்கூடிய அட்டைப்படங்கள் படு டெரராக இருக்கும். அப்போதெல்லாம் இண்டெர்னெட் கிடையாது.

அந்த நாவல்களில் வரும் புகைப்படங்கள் நாவலில் வரக்கூடிய ஒரு சிறு சம்பவத்தைக் காட்டும். ஒவ்வொரு புகைப்படமும் அந்த வயதில் எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தரும்.




இப்படித்தான் எனக்கு கே.வி.ஆனந்த் புகைப்படக்கலைஞராக அறிமுகம் ஆனார். சுபாவுக்கு கடிதம் எழுதி பதில் கடிதம் கூட வந்தது. அப்போது கே.வி.ஆனந்த் பற்றியான முழு ஈடுபாடு எனக்கு இல்லை.

அவரின் முதல் படமான கனா கண்டேன் திரைப்படத்தினை இதுவரை பார்க்கவில்லை. ஏனோ அது என்னை ஈர்க்கவே இல்லை. அடுத்து அவர் இயக்கி வெளியான அயன், கோ, மாற்றான், அனேகன், கவன் மற்றும் காப்பான் ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன்.

ஃபேண்டசி படங்கள் அவரின் தேர்வாக இருந்தது. சுபாவின் உளவாளி நரேந்திரன் வைஜெயந்தியின் ஃபேண்டசி நாவல்களைப் போல படமும் அப்படியே வந்தன. அயன் மற்றும் கோ விறுவிறுப்பினை கூட்டும் பாலிவுட் படங்கள் போல இருந்தன. அனேகன் வேறு வகையானது. கவன் மற்றும் காப்பான் இரண்டும் புனைவுகளின் உச்சம். ரசிக்கலாம். ஆனால் அது பார்வையாளனுக்கு எந்த வித உணர்ச்சியையும் தரவில்லை. காப்பான் போன்ற ஒரு மொக்கைப்படத்தினை கே.வி.ஆனந்த் எப்படி இயக்கினார் என்று புரியவே இல்லை.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெறும் அனுபவங்களின் சாரம் அவனை கூர்மையாக்கும். பலருக்கு அது என்றைக்குமே தெரியாமலே போய் விடும். 

தமிழ் சினிமாவின் கேடுகெட்ட ரசனை உலகத்தில் அவர் தன் பெயர் சொல்லக்கூடிய ஒரு நல்ல படத்தையாவது இயக்கி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

பல்வேறு குடும்ப நாவல்களை எழுதிய சுபாவின் நண்பரான கே.வி.ஆனந்த் ஏன் குடும்பதளத்தில் படைப்புகளை உருவாக்க தவறினார் என்பதற்கு ஒரே ஒரு காரணமாய் தெரிவது, அவர் தன்னை இன்னொரு ஷங்கராக நினைத்து விட்டார் என்பதாக இருக்கலாம்.

இயக்குனர் ஷங்கரின் கதைகள் காப்பி அடிப்படையிலானவை. காட்சி பிரம்மாண்டங்களையும், நடிகர்களின் புகழையும் வைத்து அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவரின் படைப்புகள் ரசிகர்களின் பல்வேறு கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகிக் கிடக்கின்றன. விற்பனை அளவிலும் கூட அவை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதில்லை. நடிகருக்கும், இயக்குனருக்கும் சம்பளம் கிடைத்து விடுவதுதான் தான் இவ்வகை இயக்குனர்களின் முதல் நோக்கமாகும். அவர்கள் தங்களை நம்பி பணம் செலவழிப்பவர்களை நட்டாற்றில் விட்டு விடுவார்கள். அதுமட்டுமின்றி நல்ல படங்களைத் தர வேண்டுமென்ற ஆவல் இல்லாதவர்கள்.  இயக்குனர் கே.வி.ஆனந்த் தன் படங்களை இவரைப் போல உருவாக்கியதால் இவ்வாறு எண்ணத் தோன்றிற்று.

கே.வி.ஆனந்த் கொரானாவால் தன் இன்னுயிரை இழந்து விட்டார். அது ஃபேண்டசி கதை விரும்பிகளுக்கு மாபெரும் இழப்பு. அவரின் சூப்பர் நாவல் புகைப்படங்கள் இன்றைக்கும் என் கருத்தை விட்டு அகலா வண்ணம் என்னை அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. அவரின் மறைவு நம்பக்கூடியதாக இல்லை. 

அவர் சுபா அவர்களின் தொடரும் நாவல்களின் வரிசைகள் போல வரலாற்றில் தொடரும் என்று போட்டு விட்டுச் சென்று விட்டார்.  அவர் முற்றும் போடாத ஒரு நாவலாகிப் போனார்.

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 

Monday, April 5, 2021

மண்டேலா - திரைப்படம்

திரைப்படங்கள் மன மகிழ்ச்சிக்காக, கொண்டாட்டத்துக்காக, நல்ல படிப்பினைகளைக் கற்றுத் தருவதாக, நெகிழ வைப்பதாக இருந்தால் தான் அப்படம் மக்களின் மனதில் பதிந்து விடும். 

விசாரணை, அசுரன் ஆகிய படங்களை நான் பார்க்கவே இல்லை. அதே போல கமலின் மகா நதியை இன்றும் பார்க்கவில்லை. காசி படத்தில் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.

மன நிலையைப் பாதிக்கும் எந்த வித பதிவினையும் மனதுக்குள் பதிந்து விடக்கூடாது என்பதில் எனக்கு கொஞ்சம் பிரக்ஞை உண்டு.

என்னைப் பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் செய்யும் சக மனித குற்றங்கள் தான் கொடிதிலும் கொடிது என்பேன். பொறாமையால், ஆற்றாமையால் அவர்கள் செய்யும் செயல்கள் பாதிப்பதை விட வேறு எதுவும் பெரிய துன்பத்தைத் தந்து விடாது.

எனக்கு நடந்த ஒரு விஷயத்தை, இங்கு உங்களுக்கு புரிவதற்காக எழுதுகிறேன். எல்.பி.ஏ அதிகாரிகள் மனை அப்ரூவலுக்காக இடத்தினை பார்வையிட வந்திருந்தார்கள். நானும் நின்றிருந்தேன். இடத்தினை சுத்தம் செய்து, அளந்து அறுதியிட்டு நான்கெல்லை கற்களைப் பதித்து வைத்திருந்தேன். அவர்கள் அளந்து பார்த்தார்கள். 500 மீட்டர் ரேடியேஸ் வரை சுற்றிப் பார்த்தார்கள். இந்த இடத்திற்கு வரும் தார்ச்சாலைகள் பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுகிறதா, அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து விட்டு கிளம்பினார்கள். அப்போது பூமியை விற்றவரின் உறவினர் டிவிஎஸ்ஸில் வந்து ஜீப்பை மறித்தார். அதிகாரிகள் என்னவென்று விசாரித்தார்கள். 

”இது என் பூமி, எனக்கு உரிமை இருக்கிறது. இதற்குள் நீங்கள் எப்படி உள்ளே வரலாம்?” எனக் கேள்வி கேட்டார். உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

அதிகாரிகள் அவரிடம் ”எங்களிடம் அவர் சமர்பித்த ஆவணங்களின் உரிமை இந்தச் சொத்து அவருடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. உங்களுக்கு சொத்தில் உரிமை இருந்தால் கோர்ட் மூலம் நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள்” என்றுச் சொல்லி விட்டு சென்று விட்டனர்.

இதே கொஞ்சம் எடக்கு முடக்கான அதிகாரியாக இருந்தால், ”என்ன சார்? பிரச்சினை இருக்கும் போலவே?” என அதற்கு தனியாக பிட் போட்டிருப்பார்கள்.

இதைத்தான் பொறாமையினால், ஆற்றாமையினால் செய்யும் செயல் என்பேன். அது நாள் வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், அதிகாரிகளிடம் அவ்வாறு பேசிய பிறகு என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். அவர் அவ்வாறு பேசுவார் என்று எனக்கு அது நாள் வரை தெரியாது. அப்போதுதான் தெரிந்தது அவர் எவ்வளவு பொறாமையால் பீடிக்கப்பட்டு என் மீது வன்மம் கொண்டிருந்தார் என்பது.

புரிகிறதா எந்தக் குற்றம் பெரிய குற்றம் என்று.

மண்டேலா திரைப்படத்துக்கு வருகிறேன்.

தாய், தகப்பன் அற்ற ஒருவன் அந்த ஊரின் ஆலமரத்தடியில் சலூன் கடை வைத்திருப்பார். அவருக்கு ஒரு அனாதைச் சிறுவன் உதவியாள். அவர்களின் வேலை ஊருக்கு வேலை செய்வது. தீண்டத்தகாதவன். ஒவ்வொரு வீட்டுக்கும் ரேசன் வாங்கிக் கொடுப்பது, பாத்திரங்கள் கழுவி கொடுப்பது, அதற்கான சம்பளமாக கஞ்சி கிடைக்கும். ஒரு சிலர் காசு கொடுப்பார்கள். அவனின் ஒரே குறிக்கோள் அவனது அப்பா சாகும் போது ஒரு சலூன் கடை கட்டி விடு என்று சொன்ன வார்த்தைகள் தான். அதற்காக அவன் குருவி கூடு கட்ட தூசி தும்பைகள் சேர்ப்பது போல காசு சேர்த்துக் கொண்டிருப்பான். அவனுக்கு ஊரார் வைத்திருக்கும் பெயர் இளிச்சவாயன்.

எப்படி ஐடியில் வேலைச் செய்பவர்கள் அடிமையை விட கேவலமாக எப்போது எச்.ஆரால் வேலை பறிக்கப்படுமோ என்று தெரியாமல், பணிப்பாதுகாப்பின்றி எப்போதும் பதட்டத்திலேயே வேலை செய்கிறார்களோ அதைப் போலத்தான் இளிச்சவாயனும்.

என்ன ஒன்று இளிச்சவாயனுக்கு வேலை செய்து முடித்ததும் காசு கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் வேலை மட்டும் செய்ய வேண்டும்.

இப்படியான சூழலில் அந்த ஊரில் இருக்கும் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் சங்கிலி முருகனுக்கு இரண்டு மனைவிகள். ஆளுக்கு ஒரு மகன். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து கொண்டு அடிதடி அரசியலை இருவரும் தங்களுக்குள் ஊர் பெயரைக் காரணம் காட்டி செய்து வருபவர்கள்.

அண்ணன் அவன் ஊரின் தண்ணீர் தொட்டியினை செயல்படாமல் முடக்கி விட்டு, ஊருக்கு நல்ல தண்ணீர் எனச் சொல்லி போர் தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கிறான். தம்பி அவன் ஊரில் டாஸ்மார்க் பாரை ஏலம் எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.

அந்த ஊரின் பள்ளிக்கூடம் சண்டையால் மூடிக் கிடக்கிறது. நீர் தொட்டியும் மூடிக் கிடக்கிறது. நல்ல சாலை இல்லை. தெரு விளக்கு இல்லை. இப்படி எதுவுமே இல்லாத பட்டிக்காட்டு ஊரில் இளிச்சவாயனும், கிருதாவும் வசிக்கிறார்கள்.

தேர்தல் வருகிறது. அண்ணன் தம்பி இருவரும் போட்டி போடுகிறார்கள். அவரவர் ஊர்காரர்களில் வாக்கு சீட்டின் படி இருவருக்கும் சம பலம். ஒரே ஒரு ஓட்டுதான் வேண்டும். 

இதற்கிடையில் அந்த ஊருக்கு வரும் போஸ்ட்வுமன் இளிச்சவாயனுக்கு பெயர் வைத்து ஆதார், வோட்டர் ஐடி பெற்று போஸ்ட் ஆபீசில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுக்கிறாள். இளிச்சவாயன் மண்டேலா ஆம் நெல்சன் மண்டேலா ஆகிறான்.  வோட்டர் லிஸ்டில் மண்டேலாவுக்கு ஓட்டு போட வாய்ப்பு வருகிறது.

முப்பது கோடி பணம் கிடைப்பதற்காக வெறியுடன் இருவரும் மண்டேலாவை மிரட்டி யாருக்கு ஓட்டுப் போடுவாய் என அடாது செய்கிறார்கள். ஒரு வழியாக ஓட்டினை ஏலம் விடுகிறார்கள். ஒரு கோடிக்கு ஏலம் போகிறது. 

இப்படியான சூழலில் மண்டேலா இருவரிடமும் பள்ளிக்கூடம், தெருவிளக்கு, நீர் தொட்டி, சாலைகள் என அனைத்தையும் ஒரே ஒரு ஓட்டினைக் காட்டி செய்ய வைக்கிறான். ஊர்ப் பிள்ளைகள் கல்விச் சாலைக்குச் செல்கிறார்கள். வீட்டு வாசலில் நீர் கிடைக்கிறது. உடைத்து எறியப்பட்ட பொதுக் கழிவறை செயல்படுகிறது. சாலை வசதியின்மையால் ஊருக்குள் வராத மினிபஸ் ஊருக்குள் வந்து செல்கிறது. தெரு விளக்குகள் எரிகின்றது.

ஊர் மக்கள் ஓட்டுப் போட டோக்கன் பெறுகிறார்கள். ஓட்டுக்கு இரண்டாயிரம் பெறுகின்றார்கள். 

மண்டேலா தன் ஓட்டுக்காக இருவரையும் செய்ய வைக்கிறான். வாக்கு அளிக்கும் நாளும் வருகிறது.

தேர்தலின் போது ஓட்டுப் போட போகிறான் மண்டேலா. அவன் திரும்பி வந்ததும் அவனைக் கொன்று விட அண்ணனும் தம்பியும் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள்.

மண்டேலா ஓட்டினைப் போட்டு விட்டு ஆலமரத்தடியில் வந்து நின்று கொண்டிருக்கிறான். அவன் மீது அன்பு காட்டும் போஸ்ட்வுமன் அவனைக் கொல்லப்போகின்றார்கள் என்று தெரிந்து கொண்டு தப்புவிக்க சொல்கிறாள். மண்டேலா கேட்கவில்லை.

அதன் பிறகு ஒரு டிவிஸ்ட். கதை சுமூகமாக முடிகிறது. முடிவு மகிழ்ச்சியானது.

மனிதனுக்கு ஆறறிவு இருப்பதன் காரணம் அவனிடம் மிளிரும் மனிதாபிமானம்.

மனிதாபிமானம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் கடவுள் தன்மை கொண்டது. அதன் பரிணாமம் கொரானா காலத்தில் பசியால் வாடிக்கிடந்த மக்களுக்கு தெருவெங்கும் உணவு சமைத்துக் கொடுத்தது. அதை நாம் இணையதளங்களில் பார்த்தோம். ஆண்களும் பெண்களும்  போட்டி போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு கொடுத்தார்கள்.

அப்போதெல்லாம் மக்கள் செத்தால் தான் என்ன இருந்தால் தான் என்ன என சொகுசாக இருந்து விட்டு, கோடி கோடியாய் கொள்ளையும் அடித்து விட்டு பவனி வந்தவர்கள் இன்று தெருத்தெருவாய் ஓட்டுப் போடுங்கள் என பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு பத்திரிக்கையும் குறைந்த பட்ச நேர்மை இல்லாமல் ஒரு சார்பு நிலை எடுக்கிறார்கள். எந்தக் கட்சியும் சாராதவர்களும் நாளிதழ்கள் வாங்கிப் படிக்கின்றார்கள் என்ற எண்ணமும் இல்லாமல் தாங்கள் பெற்ற கோடிக்கணக்கான பணத்திற்காக எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முயற்சிக்கின்றார்கள். இவர்கள் அழிக்கப்பட வேண்டும். அல்லது ஒழிக்கப்படல் தமிழர் சமுதாயத்துக்கு அவசியம். இவர்கள் வெகு வெகு தீங்கானவர்கள். பணத்துக்கு தங்கள் வேலையை அடகு வைத்தவர்கள். தீவிரவாதிகளை விட மிகவும் மோசமானவர்கள் இந்தப் பத்திரிக்கைகள் என்னைப் பொறுத்தவரை. நடுநிலை இல்லாதவர்கள் நாட்டு மக்களை மோசம் செய்வார்கள். இவர்கள் செய்திருக்கிறார்கள். அரசியல் டிசைன் வேறு. அதற்காக தாங்கள் வெளியிடும் செய்திகளை விற்கலாமா? அக்கிரமம் இது. அயோக்கியத்தனம் இது. தர்மத்தின் வாசலில் அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படும் நாட்கள் விரைவில் வரும்.

குறைந்த பட்ச மனிதாபிமானத்தைக் கூட அரசு மக்கள் மீது காட்டவில்லை என்பதை பல பத்திரிக்கைச் செய்திகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் நாமெல்லாம் கண்டோம்.

ஏன் திடீரென மண்டேலாவுக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.

மண்டேலாவில் வரும் இரு காட்சிகள் தான் காரணம்.’

முதல் காட்சி : அந்த ஊரில் ஒரு டாய்லெட் கட்டி இருப்பார்கள். அதற்குள் நாயொன்று சென்று வந்து விடும். அதைச் சுத்தம் செய்ய மண்டேலாவை அழைத்து வரச் செல்வான் ஒருவன் காரில். மண்டேலாவும், கிருதாவும் காரில் உட்கார்ந்து விடுவார்கள். அவர்களை விரட்டி அடித்து காரின் பின்னால் ஓடி வரும்படி சொல்வான் கார் ஓட்டி வந்தவன்.

காரின் பின்னாலே ஓடி வரும் போது, கிருதா, “ஏண்ணே, கார் சும்மாதானே போகுது, நம்மைக் கூட்டிப் போனா என்ன?” என்று கேட்பான்.

அதற்கு மண்டேலா,”அவருக்கு காரில் டபுள்ஸ் அடிக்கத் தெரியாது போலடா” என்பான்.

இந்த வசனமானது நம் வாழ்க்கை மீது காறி உமிழ்கிறது. நாம் இப்படித்தான் சமரசம் செய்து கொள்கிறோம் எல்லாவற்றுக்கும். 

அடுத்த காட்சி: மண்டேலாவுக்கு அவனின் உண்மையான பேர் என்னவென்று தெரியாது. அதை அந்த ஊரில் இருக்கும் வயதான பெரியவர்களிடம் விசாரிக்கலாம் என்று விசாரிக்கின்றான். அப்படி ஒரு பெரியவரிடம் கேட்கும் போது, ”இதை என்னிடம் தானே விசாரிக்க வேண்டும் எனச் சொல்லி தொண்டைக்குள் இருக்கிறது. வெளிய வரமாட்டேன் என்கிறது, சுருட்டுக் கிடைக்குமா?” என்று கேட்பார். மண்டேலாவும் பல சுருட்டுகளை வாங்கிக் கொடுப்பான். பல சுருட்டுகளைப் புகைத்த பின்பும் பெயர் வெளியில் வராது. 

இதைத்தான் சக மனிதன் நம்மிடம் செய்யும் பாதகச் செயல். இதுதான் மிக மோசமான குற்றம்.

இந்த இரண்டு காட்சிகளும் காட்டும் வாழ்வியல் அபத்தங்கள் தான் இப்படத்தினை நீங்களும் பார்க்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன். நீங்களும் நானும் ஒரு வகையில் மண்டேலா வாழ்க்கைதான் வாழ்கிறோம். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம். அவ்வளவுதான்.

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகிறது. காசு செலவின்றி பாருங்கள்.

அடுத்து கீழே இருக்கும் செய்திகளைப் படித்து விடுங்கள். நாம் இப்போது வாழும் வாழ்க்கையிலிருந்து கீழ் நிலைக்குச் சென்று விடக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 365 ஜாதிகளில் ஒரு ஜாதியை விட அனைத்து ஜாதியினருக்கும் இது ஒன்றே போதுமானது. 

நாம் இனிமேல் எப்படி வாழ வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டும் அற்புதமான வரலாறு. வரலாறு நமக்கான பாடங்களைச் சொல்லும். மண்டேலா நமக்கான வழியினைக் காட்டும்.

வாழ்க வளமுடன்...! 


நன்றி : காக்கைச் சிறகினிலே இதழ் மற்றும் கட்டுரை ஆசிரியர் ஜோசப் குமார்.


Thursday, April 1, 2021

நிலம் (81) - நத்தம் நிலங்கள் உரிமை யாருக்கு? முழுமையான விளக்கம்

நத்தம் பூமி அரசுக்குச் சொந்தமா? என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் அரசுக்கு நத்தம் பூமியில் உரிமையில்லை என்று மட்டும் எழுதி இருந்தேன். விபரங்கள் எழுத வில்லை.

சமீபகாலமாக எனக்கு வரும் பல்வேறு அழைப்புகள் நத்தம் பூமி உரிமைத் தொடர்பாக இருக்கிறது. காலம் காலமாக குடியிருந்து வரும் இடங்களை வி.ஏ.ஓ மற்றும் உள்ளாட்சியினைச் சேர்ந்த தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆக்கிரமிப்புச் செய்வதும், அதில் முறைகேடுகள் செய்வதுமான பல்வேறு சம்பங்களை என்னைத் தொடர்பு கொள்ளும் நபர்களின் மூலமாக அறிய நேர்ந்தேன்.

இதை சட்டபூர்வமாக விரிவாக பார்க்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இரவிச்சந்திரபாபு அவர்களின் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. அவ்வழக்கின் மனுதாரர் இளங்கோவன் என்பவர் சுமார் 1.30 ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமியில் பரம்பரையாக குடியிருந்து வருகிறார். இந்த மனுதாரருக்கு பல்வேறு இடங்களில் நிலங்கள் இருக்கின்றன. ஆகவே அரசு வருவாய் துறையினர் இளங்கோவனிடம் இந்த இடத்தினை நிலம் இல்லா ஏழைகளுக்கு வழங்க இருப்பதாகவும், ஆகவே உடனே காலி செய்யும்படியும் சொல்லி இருக்கின்றார்கள். இதற்கு உள்ளாட்சி அமைப்பினரும் உடந்தை.

இந்த இடத்தில் ஒரு குறிப்பு : பல கிராம பஞ்சாயத்து தலைவர்களும், நகரப் பஞ்சாயத்து தலைவர்களும், பஞ்சாயத்துக் கூட்டத்தில் நத்தம் நிலங்களின் உரிமை பஞ்சாயத்தாருக்கு இருப்பது போலவும், அதை பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்பது போலவும் தீர்மானங்களை நிறைவேற்றி, அதை வி.ஏ.ஓ மூலம் ரெவின்யூ அதிகாரிகளின் வழியாக பட்டாக்களையும் மாற்றி இருக்கின்றார்கள். எனக்கு அழைத்த பலர் இந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார்கள்.

இனி தொடரலாம்.

இப்படியான சூழலில் வழக்கு மேல் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறது. 

இனி வழக்கில் என்ன சொல்லப்பட்டது எனப் பார்க்கலாம்.

நீதிமன்றத்தின் முன்னால் இரண்டு கேள்விகள் இருந்தன. 

ஒன்று -  கிராம நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட சொத்திற்கு அரசுக்கோ அல்லது கிராம / நகர பஞ்சாயத்து அமைப்புக்கோ உரிமை இருக்கிறதா?

இரண்டு - அவ்வாறு இருப்பின் குடியிருந்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலுமா?

இக்கேள்விகளின் பதிலை இனி பார்க்கலாம்.

சென்னைப் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் அகராதியில் கிராம நத்தம் என்றால் கிராமத்தின் வசிக்கும் பகுதி அல்லது பிராமணர் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதி அல்லது வீட்டு மனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, சென்னை சட்டம் 3/1905 (Tamilnadu Land Encroachment Act 1905) ன் படி கிராம நத்தத்திலிருக்கும் உரிமையானது அரசுக்கு மாறுதல் செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நத்தம் என்பது கிராமப்பகுதிகளாக வகை பிரிக்கப்பட்டன. அதில் குடியிருந்து வருபவர்கள் எவ்வளவு நிலத்தின் மீது அனுபோகத்தில் இருக்கிறார்களோ அதை அளந்து, தீர்வை விதித்து அவர்களுக்கு உரிமை உடையதாக்க வேண்டுமென்கிறது மூன்றாம் சட்டத்தின் ஏழாம் பிரிவு. அதை அரசு தன் உடமையாக கருதக்கூடாது.

பெரும் பணக்காரர்களாக இருந்தாலும், கிராம நத்தத்தில் குடியிருப்பவர்கள் பல நிலங்களை உடையவர்களாக இருந்தாலும், அரசு அதைக் கையகப்படுத்த முடியாது. அது குடியிருப்பவர்களுக்கு மட்டுமே உரிமையானதாகும்.

கிராம பஞ்சாயத்தார் ரெவின்யூ விவகாரங்களில் தலையிட்டு சொத்தின் உரிமை மாற்றம் செய்வதற்கு பஞ்சாயத்து தீர்மானங்கள் மூலம் ஏதும் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது சட்ட விரோதம்.

இந்த வழக்கின் ஆதாரமாக தில்லைவனம் எதிர் மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கை அண்ணா மாவட்டம் (வழக்கு எண்:1998-3-LW-603)  மற்றும் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் கடத்தூர் டவுன் பஞ்சாயத்து எதிர் பி.சுவாமிநாதன் (வழக்கு எண் 2004-3-LW- 278) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் நிலத்தின் உரிமையாளர் விவசாயம், குடோன் மற்றும் இதர வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றைச் செய்து கொள்ளலாம். இதற்கு அரசு எந்த வித தடங்கலும் ஏற்படுத்த முடியாது.

ஆகவே நண்பர்களே, இப்போது உங்களுக்கு கிராம நத்தம் என்றால் என்ன, அதன் உரிமையாளர் யார் என்ற விபரங்கள் தெரிந்து இருக்கும்.

இந்த விபரங்கள் தெரியாத அப்பாவிகளை ரெவின்யூ அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பினரும் மிரட்டி சட்ட விரோதமாக ஆக்கிரமிப்புகளை உருவாக்கி ஏமாற்றி வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு வி.ஏ.ஓ புதிதாக பொறுப்பேற்கும் கிராமத்தில் இருக்கும் பட்டா வழங்கப்படாத நத்தத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி ஊழல் செய்திருக்கிறார்.

மனுக்கள் போட்டால் எந்த வித காரியமும் நடக்காது. இப்படிச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் பிறரின் சொத்தின் உரிமையைத் திருடும் நோக்கில் செயல்படும் எவராக இருப்பினும் அவரைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி பணி நீக்க ஆணை பெறல் வேண்டும்.

மிகச் சரியான ஆவணங்களையும், வழக்கும் போட்டு நிவாரணம் பெற பாதிக்கப்பட்டவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைக் கட்டணம் உண்டு. ஏனென்றால் தினமும் உங்களைப் போல எனக்கும் பசி எடுக்கும் அல்லவா?

இப்பதிவினை பலருக்கும் பகிர்ந்து விடுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்

எனது யூடியூப் சானல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திருங்கள்.

https://www.facebook.com/goldonlineproperties

https://www.youtube.com/c/goldonline



Monday, March 29, 2021

யாருக்கு ஓட்டு போடலாம் - வரலாறு காட்டும் வழி

தேர்தல் களம். நெருப்பு போல தகிக்கும் வெப்பச் சூழல். ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதிகாரத்துக்கு வர நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் அதிகாரப் பசி எனும் கோர நெருப்பின் தாண்டவம். இந்த அதிகாரப்பசியில் எத்தனையோ பேரின் வாழ்க்கை நெருப்பில் இடப்படும். வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். பங்கு எடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள், ஒப்பீடுகள், திட்டங்கள், அவதானிப்புகள், ஈடுபாடுகள், கட்சி சார்புகள், நண்பர்கள், உறவினர்கள், நன்றி உணர்ச்சிகள் இப்படி பல்வேறு காரணிகளுக்குள் சிக்கி இருக்கும் மனதானது யாருக்கு ஓட்டுப் போடலாம் என முடிவு செய்திருக்கும்.

அதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு இப்போது இங்கு படிக்க இருக்கும் கருத்துக்களை கொஞ்சம் கவனத்தில் கொள்க.

இங்கு அறம் மட்டுமே பேசப்படும் அல்லது எழுதப்படும் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள். நான் எந்தக் கட்சியும் சாராதவன். ஆனால் அறத்தின் வழி நின்று வாழ்க்கையை நடத்திச் செல்பவன். ஆகவே எனக்கு எந்த முத்திரையும் இல்லை.

தமிழக அரசியல் வரலாற்றினைப் படித்தவன் என்கிற முறையில் இதை எழுதுகிறேன். 

அன்றைக்கு நாமும், இன்றைக்கு நம் குழந்தைகளும் பாடப்புத்தகங்களில் படிக்கும் தமிழ் தாய் வாழ்த்து, திருக்குறள் பாடல்கள் அந்தக் காலத்தில் படிக்கச் சொல்லித் தரப்படவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் காணக் கிடைக்கின்றன. 

கலைஞரைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசுவதைக் காணலாம். அதையெல்லாவற்றையும் விட அவரால் தமிழருக்கு விளைந்தது, எளிதில் கிடைத்தது கல்வி மட்டுமல்ல தமிழ் அதன் வளர்ச்சி. 

வள்ளுவர் கோட்டம், தென் குமரியில் வள்ளுவர் சிலை, பஸ்களில் திருக்குறள், அகநானூறு, புறநானூறு என தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழர் இனத்தின் நாகரீகமும், வரலாறும் படிக்கின்றோம் என்றால் அதற்கு அண்ணாவும், கலைஞரும் தான் காரணம் என்று சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வாழ்ந்த வழி தெரிந்தால் தான் வாழும் வழி தெரியும். அதைத் திறம்படச் செய்தவர் கலைஞர்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து படிக்கவே விடாமல், அதி தீவிர நுணுக்கமான முறையில் தடுக்கின்றார்கள். மேல் படிப்புகளுக்கும் அவ்வாறே திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் நடத்தி படிக்கவே விடாமல் செய்கிறார்கள். அதற்கு இங்கு இருக்கும் தலைமைப் பண்பு அறவே அற்றவர்களும் துணை போகின்றார்கள். 

கல்வி என்பது செல்வம். அழிக்கவே முடியாத செல்வம். அதை நம் சந்ததியினருக்கு கிடைக்க கூடாது என்று நயவஞ்கமாக திட்டமிடுபவருடன் கூட்டுச் சேர்பவர்கள் நீக்கப்பட வேண்டும்.

இன்றையச் சூழலில் யார் தமிழ் நாட்டின் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது என உங்களுக்குப் புரிந்து இருக்கும். ஆகவே வரலாறு காட்டிய வழியில் வரக்கூடிய சந்ததியினருக்கு  எது நல்லது என்று யோசித்து முடிவெடுங்கள்.

அவர் இதைச் செய்தார், இதைச் செய்தார், அவங்க இப்படி, இவங்க இப்படி என்றெல்லாம் யோசிக்க நேரிடும். 

பொருளாதார ஏற்றங்கள் அவரவர் தர்மத்தின் படி நிகழ்பவை. நிகழ்த்தப்படுபவை. 

வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெவின் இறுதிக்காலத்தை நிர்ணயித்தது அரசியல் சட்டம். அறம் இப்படித்தான் செய்யும். அது துரோகத்துக்கும் பொருந்தும். துரோகம் செய்தவர்களுக்கும் பொருந்தக்கூடியது. 

ஆகவே நண்பர்களே, யோசியுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய என்ன என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

என் தாத்தா மாணிக்க தேவர் கையில் துப்பாக்கி ஏந்தி வெள்ளைக்கார பறங்கிச் சிப்பாய்களுடன் சண்டையிட்டது, நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். அது நடந்து விட்டது.

ஆகவே அந்த வழியில் வந்த அடியேன் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன். 

வாழ்க்கை எப்போதும் மாற்றத்துக்கு உரியது.

தர்மம் மட்டுமே நிரந்தரம் அது மாறுவதில்லை எப்போதும். 

உண்மைக்கு எப்போது மாற்றுக் கருத்து இருந்ததில்லை அல்லவா?

சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, March 24, 2021

நிலம் (80) - செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்துச் செய்ய முடியுமா?

சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் நண்பருக்காக லீகல் பார்க்கும் போது செட்டில்மெண்ட் பத்திரம் ஒன்றினை எழுதிக் கொடுத்தவர் ரத்துச் செய்திருந்தார். அதன் நகலைப் படித்தேன்.

கொடுமையான செய்திகளைப் பதிவு செய்து, அதற்கான தான் எழுதிய செட்டில்மெண்ட் பத்திரத்தினை ரத்துச் செய்கிறேன் என்று பதிவு செய்திருந்தார்கள். பதிவாளரும் பதிவு செய்து கொடுத்திருந்தார். 

உயிலை ரத்துச் செய்யலாம் என்றுதான் சிவில் சட்டத்தில் இருக்கிறது. ஆனால் இந்தப் பத்திரமோ செட்டில்மெண்டினை ரத்து செய்திருக்கிறதே என்று தோன்றியது.

செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்ய இயலாது. ரத்து செய்து பின்னர் வேறொருவருக்கு அச்சொத்தினை விற்றால் அது செல்லாது. 

செட்டில்மெண்ட் எழுதி வாங்கியவருக்கு மட்டுமே அச்சொத்து உரிமையானது.

ஆனால் தற்போது பெற்றோர் பாதுகாப்பு என்கிற வகையில் தமிழக அரசு சொத்தினை எழுதி வாங்கிக் கொண்டு பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனிக்கவில்லை என்றால் செட்டில்மெண்ட் பத்திரத்தினை டி.ஆர்.ஓ அல்லது கலெக்டர் மூலம் ரத்துச் செய்து கொடுத்திருக்கும் செய்திகளைப் படித்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை செட்டில்மெண்ட் ரத்து செய்ய டி.ஆர்.ஓவுக்கோ அல்லது கலெக்டருக்கோ உரிமை இல்லை. சொத்துக்கள் சிவில் தொடர்பானவை. அவை கோர்ட் மூலம் மட்டுமே நிவாரணம் பெறக்கூடியவை.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் போது ஒரு சில நிபந்தனைகளை விதித்து எழுதுவார்கள். அந்த நிபந்தனைகள் நிறைவேறாத பட்சத்தில் செட்டில்மெண்ட் பத்திரத்தினை கோர்ட் மூலம் தான் ரத்து செய்ய முடியும்.

முக்கியமான இன்னொரு விஷயமும் உண்டு.

கூட்டுக் குடும்பச் சொத்தில் தனக்கு இருக்கும் பங்கினை மட்டும் செட்டில்மெண்ட் எழுதி வைப்பார்கள். அது குறித்து மிகக் கவனம் தேவை. பொதுவாக செட்டில்மெண்ட் எழுதி வைத்தால் அது செல்லாது.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் போது வாசகங்களை வெகு கவனமாக எழுத வேண்டும். எழுதிக் கொடுப்பவரின் முழு சம்மதம் மிக முக்கியமான ஒன்று.

ஆகவே லீகல் ஒப்பீனியன் பார்க்கும் போது செட்டில்மெண்ட் பத்திரங்களின் முழுத் தன்மையும் ஆராய வேண்டும். 

செட்டில்மெண்ட் பத்திரங்கள் எழுத அணுகலாம்.

வாழ்க வளமுடன்...!

* * *

மிக நல்ல வருமானம் தரக்கூடிய,  சொத்து உரிமைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலங்கள் விற்பனைக்கு உள்ளன. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து பார்க்கவும்.

Click Banner to see Properties for Sale

கல்வி : திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் - குறைந்த கட்டணத்தில் மத்திய அரசின் கல்வி

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K 

மேலே இருக்கும் வாட்சப் இணைப்பில் இணைந்திருங்கள். நல்ல கல்வி, குறைந்த  கட்டணம்,   மத்திய அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை ஆகிய தகவல்கள் அப்டேட் செய்யப்படும். 

* * * 

திண்டுக்கல்லில் இயங்கி வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் கல்வி பற்றிய விபரம் கீழே. மிகக் குறைந்த கட்டணம், நல்ல கல்வி, தேர்ந்தெடுக்க பல படிப்புகள்.

  • Ph.D.
  • M Phil Programmes (Two Semester)
    • M.Phil. Tamil
    • M.Phil. English
    • M.Phil. Rural Development Studies
    • M.Phil. Research & Development
    • M.Phil. Development Sociology
    • M.Phil. Gandhian studies and Peace Science
    • M.Phil. Economics
    • M.Phil. Development Administration
    • M.Phil. Women's Studies
    • M.Phil. Chemistry
    • M.Phil. Computer Science
    • M.Phil. Education
    • M.Phil. Mathemaics
    • M.Phil. Physics
    • M.Phil. Botany/Zoology/Micro Biology
    • M.Phil. Home Science
    • M.Phil. Geology
    • M.Phil. Futurology
  • Post Graduate Programmes (Four Semesters)
    • M.A. Tamil & Indian Literature
    • M.A. English & Communicative Studies
    • M.A. Hindi
    • M.A. Gandhian studies and Peace Science
    • M.A. Rural Development Studies
    • M.A. Economics
    • M.Com. Cooperative Management
    • M.Sc. Home Science Extension and Communication
    • M.Sc. Mathematics
    • M.Sc. Physics
    • M.Sc. Chemistry
    • M.Sc. Botany
    • M.Sc. Zoology
    • M.Sc. Food Science and Nutrition
    • M.Sc. Textiles and Fashion Design
    • M.Sc. Microbiology
    • M.Sc. Geo-informatics
    • M.Sc. Applied Geology and Geomatics
  • PG Diploma Programmes (Two Semesters)
    • Sanitary Inspector's course
    • Spatial Technologies
    • Applied Gerontology
    • Yoga Education
    • Epigraphy
    • Sustainable Social Development
  • 5 Year Integrated Programme (Ten Semesters)
    • M.A. Development Administration (5 Year Integrated)
    • M.A. Sociology (5 Year Integrated)
  • Under Graduate Programmes (Six Semesters)
    • B.Sc. Mathematics
    • B.Sc. Physics
    • B.Sc. Chemistry
    • B.Sc. Computer Science
    • B.Sc. Home Science
    • B.Sc. Micro Biology
    • B.Sc. Textiles and Fashion Design
    • B.Sc. Geology
    • BBA
    • B.Com. Cooperation
    • B.A. Economics
  • Diploma Programmes (Four Semesters)
    • Agriculture
    • Textile Technology
    • Videography
    • Yoga Education
  • Professional Courses (AICTE/ICAR UGC NCTE Approved)
    • B.Tech. Civil Engineering (8 Semester)
    • B.Tech. Civil Engineering (Lateral Entry)(6 Semester)
    • M.Tech. Renewable Energy
    • B.Sc. Agriculture (Hons.) (8 Semester)
    • MCA (6 Semester)
    • MBA
    • B.Ed. (Two years)
    • B.Sc., B.Ed.
    • M.Ed. (Two years)
  • Skill Based Programmes
    • B.Voc – Farm Equipments Operation and Maintenance
    • B.Voc – Footwear and Accessories Design
    • B.Voc – Food Processing
    • B.Voc – Dairy Production and Technology
    • B.Voc - Organic Agriculture and Enterprises Development
    • B.Voc - Renewable Engery
    • B.Voc - Multimedia Production Technology
    • B.Voc - Food Testing and Quality Evaluation
    • D.Voc – Refrigerator and Air conditioner(2 Semesters)
    • D.Voc – Software Development(2 Semesters)
    • Diploma in Two Wheeler Mechanism and Maintenance
    • Certificate Course in Two Wheeler Technician(2 Semesters)

    இங்கு ஹாஸ்டல் வசதியும் மிகக் குறைந்த கல்வி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வசதியும் உண்டு.

    பிஎஸ்ஸி கல்விக்கு கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். வருடத்திற்கு 12000க்கு மட்டும் கல்வி கட்டணம். மத்திய அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் மூலம் எளிதில் இந்தக் கல்வி கட்டணத்தைக் கட்டலாம். பெற்றோருக்கு எந்த வித பொளாதார சிரமம் தராமல் எளிதில் படிக்கலாம். 

    தனியார் கல்வி நிலையங்களில் படிக்க முடியாத பொருளாதார பிரச்சினை இருக்கும் மாணவர்கள் இங்கு படிக்கலாம்.

    பி.டெக் சிவில் இஞ்சினியரிங்க் இங்கு படிக்கலாம்.

    இந்த பல்கலைக் கழகத்தின் இணையதளம் கீழே இணைப்பில் இருக்கிறது.  

    ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். வரும் வருடம் படிப்புக்கு செய்தி வரும். அப்போது அவசியம் பதிவு செய்யுங்கள்.

    https://www.ruraluniv.ac.in/home

    https://www.portal.ruraluniv.ac.in

Monday, March 22, 2021

நிலம் (79) - மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் அவசியம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019ம் ஆண்டு ஒரு வழக்கின் காரணமாக, உயர் நீதிமன்ற உத்தரவின் படி மின் இணைப்பு, குடி நீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவுச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவு போட்டிருந்தது.

பெரும்பாலான கட்டிடம் கட்டுபவர்கள் அனுமதி பெற்ற கட்டிடத்தினை விட அதிகளவு பரப்பளவில் கட்டிடங்களை கட்டி விடுகிறார்கள் என்ற பிரச்சினை எழுந்த போதுதான் மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டது. 

ஆனால் பாருங்கள், நம் தமிழக மின்சாரத்துறை இருக்கிறது அல்லவா? அது நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம். மின்சாரத்துறை இயக்குனர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, மின் இணைப்பு கொடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் கோவை கன்ஸ்யூமர் கேஸ் வழக்கு போட்டு, அந்த சுற்றறிக்கைக்கு தடை விதித்து மீண்டும் 2019 சட்டத்தை உறுதிப்படுத்தி கோர்ட் தீர்ப்பு பெற்று இருக்கிறது. செய்தி கீழே.

இனிமேல் வீடு கட்டுவோர் மேஸ்திரி சொல்கிறார், இஞ்சினியர் சொல்கிறார் என வம்புகளில் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

செய்தி உதவி : 21.03.2021- தமிழ் திசை தினசரி


கல்வி : சென்னை ஐஐடி - ஐந்து வருடம் எம்.ஏ படிப்பு - பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் படிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் படிக்க நுழைவுத் தேர்வு எழுதி பாஸானால் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி படிக்கலாம். மத்திய அரசின் பணிகளுக்கு படித்து முடித்ததும் வேலை வாய்ப்பும் பெறலாம்.

தமிழக மாணவர்களுக்கு மறை பொருளாய் இருந்த அற்புதமான இந்த தகவல்களை இனி ஒவ்வொன்றாய் எனது பிளாக்கில் வெளியிட உள்ளேன்.

ஏழை மாணவர்களும், படிப்பின் மீது உச்சம் தொட விரும்பும் மாணவர்களும், கல்விக் கட்டணம் கட்ட இயலாமல் இருக்கும் புத்திசாலி மாணவர்களும் இந்த தகவல்களைப் பயன்படுத்திப் படிக்கவும். 

வெற்றி நமதே அது தமிழர்களுக்கே நிரந்தரமாய் இருக்க வேண்டும்.

 * * *

சென்னை ஐஐடியில் இருக்கும் தனிப்பட்ட பிரிவில் வழங்கக் கூடிய எம்.ஏ படிப்பினை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வென்று அனுமதி பெற்றுப் படிக்கலாம். கீழே விபரங்கள் உண்டு. படித்துப் பார்க்கவும். நண்பருக்குள் பகிரவும்.

வாழ்க வளமுடன்

தூத்துக்குடி ஸ்டீபன்

கோவை தங்கவேல் 

வாட்சப்பில் அப்டேட்டுகள் பெற கீழே இருக்கும் வாட்சப் குருப்பில் இணையவும்

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K

* * * 



சென்னை - ஐஐடியில் DEPARTMENT OF HUMANITIES AND SOCIAL SCIENCES

Founded in 1959 the Department of Humanities and Social Sciences is one of the oldest in IIT Madras.

The Department’s essentially inter-disciplinary nature is its distinguishing factor. This allows students to develop an appreciation for a very diverse set of fields, including Development Studies, Economics, English Studies, Environmental Studies, History, International Relations, Philosophy, Political Science, and Sociology. The Department offers both Master’s and Doctoral programmes, as well as electives for B.Tech and M.Tech students.

Coupled with its multi-disciplinary background, the Department boasts of a highly diverse and experienced faculty. It has an excellent student-teacher ratio, providing opportunities for academically intense learning.

Equipped with state of the art facilities in a serene campus, the department offers an enriching academic environment.

 * * *

The Humanities and Social Sciences Entrance Examination or HSEE is a national level entrance test conducted every year by Indian Institute of Technology Madras for admission to the master programme offered by the Department of Humanities and Social Sciences (HSS) of the institute. 

* * *

The Department’s unique five year integrated programme, launched in 2006, leads to Master of Arts (M.A.) degree in two major streams – Development Studies and English Studies. With this programme, IITM is poised to cross a milestone in fulfilling its role in higher education in liberal arts and social sciences.

The M.A. programme reflects the multi-disciplinary nature of the fundamental concepts in humanities and social sciences. During the first two years, the students are introduced to a variety of common subjects related to all the two major disciplines. Such a curriculum aims to produce masters in Humanities and Social Sciences to cater to the growing demands of academia, government, public and private sector enterprises, NGOs, and other organisations. The programme also provides an opportunity for our students and faculty to be in close and constant touch with those of the Engineering, Sciences and Management departments.

 * * *
 
Admission Process
 

The students for the integrated Masters program at IIT-M are selected through the Humanities and Social Sciences Entrance Examination (HSEE) conducted by IIT Madras every year in the month of May. The exam is highly competitive and only about 2 percent of the candidates taking the exam are finally selected for the course. The present intake of the MA program is 45 students per year.

  ***
 

 



Saturday, March 20, 2021

நிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு

காலம் எல்லாவற்றுக்குமான பதிலாக இருக்கும். நற் செயல்களுக்கும், தீச் செயல்களுக்கும் காலம் சொல்லும் பதில்தான் உண்மை.

நாமெல்லாம் இல்லாத காலத்தில் பிணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரலாறுதான் காலம் பற்றிப் பேசுகிறது. ஆனால் உண்மையில் பிரபஞ்சத்துக்கு காலம் என்பது கிடையாது. உண்மை பேசினால் பிடிப்பதில்லை. ஆகவே விட்டுவிடலாம்.

கடும் உழைப்பினால் பெறக்கூடிய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திட நிலம் மட்டுமே மிகச் சரியான ஒன்று. அதைத் தவிர தங்கம் மற்றும் வங்கியில் டெபாசிட்கள் என்று பிறவனவும் உண்டு. ஆனாலும் 100 சதவீதம் பாதுகாப்பானது நிலம் அல்லது பூமி மட்டுமே. அவ்வாறு பூமிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல்வேறு காரணிகளைக் கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய இழப்பு என்ன தெரியுமா? வாழ்க்கை. ஆம் வாழ்க்கையை இழக்க நேரிடலாம். அப்படி வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றித்தான் இப்பதிவு.

உங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. இதை பலருக்கும் தெரிய வைத்திடுங்கள். இப்பதிவினை ஷேர் செய்திடுங்கள். அது உங்களுக்கும் பயன் தரலாம்.

பொருளாதாரத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும், பின் புலம் இல்லாதவர்களுக்கும் வங்கிக் கடன் பெரும்பான்மையாக உதவுகிறது. புத்திசாலிகள் வங்கிகளைக் கொள்ளை அடிப்பார்கள். சாதாரணவர்கள் வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைவார்கள் இல்லையெனில் அழிக்கப்படுவார்கள். இது அவரவரின் வாழ்வியல் சூழலைப் பொறுத்தது.

இப்போது இரண்டு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம்.

ஒருவர் தான் கிரையம் பெற்ற சொத்தினை அரசு வங்கியிடம் அடமானம் வைத்து கடன் பெற்றார். நல்ல முறையில் தொழிலும் நடந்து கொண்டிருக்கிறது. கடனும் தொண்ணூறு சதவீதம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கடன் பெற்ற வங்கியின் மேலாளார் மாறுகிறார்.

கார், பங்களா, ஆள், அம்பு என படாடோபமாக வாழ்ந்து கொண்டிருந்த கடன் வாங்கியவர் வீட்டுக்கு சிபிஐ வருகிறது. கைது செய்து ரிமாண்ட் செய்து ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

ஏன்?

அவர் கடன் பெற வங்கியில் அடமானம் வைத்த சொத்து போலியானது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அது வேறொருவரின் சொத்து என்பதைக் கண்டுபிடிக்கிறது. நான்காண்டு காலம் வங்கி ஒன்றும் செய்யவில்லை. வங்கி லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் அடமானம் வைத்துக் கொண்டு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால் மோசடிச் சொத்துப் பத்திரம் என்று பின்னால் கண்டுபிடிக்கிறார்கள்.

விளைவு பொருளாதார மோசடிக் குற்றம் – அரசு வங்கியை ஏமாற்றியது தேசத்துரோகம் அல்லவா?

இதே போல மூன்றாம் நபர் சொத்துக் காப்புறுதிக் கடன் வாங்கியவர் ஒருவரும் பொருளாதார மோசடிக் குற்றப்புகாரில் சிக்கி, சிபியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இருவரின் தொழிலும் முடங்கியது. சொத்துக்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு விட்டது.

இனி என்ன செய்ய முடியும்? குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அல்லவா?

ஏன் இந்த நிலை வந்தது?

கடன் வாங்கியவர்களை ஏமாற்றிச் சொத்து எழுதி வைத்தவர்கள் மீது வழக்கு இல்லை.

ஆவணங்களை சரிவர பரிசீலனை செய்யாது கடன் வழங்கிய மேலாளர், லீகல் வழங்கிய வக்கீல் மீது வழக்கு இல்லை.

ஆனால் ஏமாற்றப்பட்டவர் மீது வழக்கு.

ஏமாற்றியவர்களும், தன் வேலையைச் சரி வரச் செய்யாதவர்களின் மீதும் இங்கு வழக்கு ஏதும் இருக்காது.

இதுதான் இங்கு இருக்கும் சட்டம்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பார்த்தீர்களா?

கடன் வாங்கியவர் கிரையம் கொடுத்தவர் மீது மோசடி வழக்குத் தொடுக்கலாம். ஆனால் தலைமீது தொங்கும் இந்தக் கத்தியெனும் வழக்குக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கடன் வாங்கியவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு விடும். அதுமட்டுமா, தீராத பழி வேறு.

ஆகவே நண்பர்களே, ஒரு சொத்தினை வாங்கும் முன்பு லீகல் ஒப்பீனியன் என்பதும், டைட்டில் டிரேஸ்ஸிங் என்பதும் வெகு முக்கியம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

குறிப்பு: சொத்துக்களின் லீகல் டிரேஸ்ஸிங் மற்றும் ஒப்பீனியன் ஆகியவைகளை எமது நிறுவனம் வழங்கும்.