குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 20, 2016

நிலம் (25) - பட்டா மாறுதல் எளிதாகுமா இனி?

நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம். பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984. ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது?

இந்தப் பிரச்சினைக்காக  சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

மீண்டும் மறுபடியும் விண்ணப்பம் கொடுக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தாலும் பத்திரப்பதிவின் போது கொடுக்கப்படும் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பத்தை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. 

பத்திரப்பதிவு முடிந்த உடன் எத்தனை நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இருந்தாலும் இதில் வேறொரு பிரச்சினை இருக்கிறது. மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பத்திரப்பதிவுகளுக்கு, எந்த வித விசாரணையும் இன்றி பட்டா மாறுதல் வழங்கப்பட்டு விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பதிவு செய்யப்பட்ட எத்தனையோ பத்திரங்கள் தகுந்த ஆவணங்கள் இன்றி பதிவாகின்றன. அதிலிருக்கும் பிரச்சினைகளை யார் கண்டுபிடிப்பது? பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் பட்டாவிலும் மாறுதல் நடந்து விட்டால் அதெல்லாம் ஆவணப்படுத்தவை ஆகிவிடுமே அதை எப்படித் தவிர்ப்பது?

இது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. தீர்வு தான் கண்ணில் தெரிய மாட்டேன் என்கிறது.

சரி இதோ அந்தத் தீர்ப்பு உங்களுக்காக.

Madras High Court
Consumer Rights Protection ... vs Tamil Nadu Govt. on 6 February, 2015

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 06.02.2015

Coram

THE HONOURABLE Mr.SANJAY KISHAN KAUL, The Chief Justice

and

THE HONOURABLE Dr.JUSTICE S.TAMILVANAN

Writ Petition (MD) No.8250 of 2008


through its Secretary O.Paramasivam,

and M.P.(MD)No.1 of 2018



Consumer Rights Protection Council,
Madurai Ditrict.    
No.6, Thamukkam Shopping Complex,
Tallakulam, Madurai-2,                                      ... Petitioner

  vs.

1.Tamil Nadu Govt., rep.by
2.Inspector General of Registration,
  The Secretary, Revenue Department,
  St.George Forts Building, Chennai.
  The Registration Department,
  120, Santhome High Road,
  Chennai-4.                                        ... Respondents

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying for issuance of a writ of mandamus, directing the respondent No.2 and and patta transfer at the time of registration fo sale deed to 1st respondent his subordinates to forward the application and the fee collected for survey Revenue Offices and respondent No.1 to transfer patta in the name of the Spl.Govt.Pleader. purchaser without obtaining another application and charges.

For Petitioner  : Mr.S.Thamizharasan
For Respondents  : Mr.B.Pugalendhi,


ORDER

(Order of the Court was made by The Hon'ble Chief Justice) The petitioner, claiming to be the Secretary of the Consumer Rights Protection Council, seeks to file the present writ petition, in public interest, on account of the grievance that any transaction for purchase of immovable property of any kind, which are registrable and whereafter patta is required to be issued, the 2nd respondent/Registration Office is collecting charges for patta transfer and even issuing receipts as also for sub- division. It is submitted that thus when the purchaser approaches the revenue authorities, a second set of charges are to be paid.

2.In the counter affidavit, it has been stated that patta transfer application in prescribed form/Registration-II Form No.52, tendered along with documents presented for registration, is forwarded by the Sub- Registrar to the Tahsildar in whose jurisdiction the property is situated and the job of collecting this fee now has been entrusted to the Registration Department as per G.O.Ms.No.916 CT & RE Department, dated 23.08.1984. It is thus submitted that there is no occasion to once again pay the fee to the Revenue Authorities.

3.The aforesaid stand of the respondents thus shows that the requirement is to pay only one set of fee but, the collecting agency for such fee is now the Registration Office. No second set of fee is required to be paid.

4.The petition is accordingly closed. No costs. Connected miscellaneous petition is also closed.


Index:yes/no     (S.K.K.,CJ)     (S.T.,J)
Internet:yes/no.        06.02.2015
gb

Monday, July 18, 2016

நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா?

மிகச் சமீபத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் எனது நண்பரொருவரின் பூமிக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர் மிக நீண்ட காலமாக கொல்கத்தாவில் வசித்து வருவதாலும், பெரும் நிறுவனத்தின் மேலாளராக இருந்த காரணத்தாலும் அவரால் வாங்கப்பட்ட பூமிகளை சரிவர மெயிண்டெய்ன் செய்யமுடியவில்லை.

அவரிடமிருந்த ஆவணங்களை எனக்கு அனுப்பி வைத்தார். ராமநாதபுரத்தில் அரை ஏக்கர் நிலம், சேலத்தில் வீட்டு மனை, மதுரையில் வீடு, கோவையில் ஒரு சிறிய மனையிடம், ஒரு கெஸ்ட் ஹவுஸ் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒவ்வொன்றினையும் படித்துப் பார்த்தேன். மூன்று சொத்துக்கள் அவரின் தந்தையார் பெயரில் இருந்தன. ஒரு சொத்து அவரின் தாயாரின் பெயரில் இருந்தது. ஒரு சொத்து அவர் கிரையம் பெற்றது. அவரிடம் மேற்கண்ட விஷயத்தைச் சொல்ல அவருக்கே தெரியாத சொத்துக்கள் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

மேற்கண்ட சொத்தின் பட்டாவை அவர் பெயருக்கு மாற்றி அதை சுத்தப்படுத்தி வேலியிட வேண்டுமென்றுச் சொன்னேன். அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

முதலில் அவர் கிரையம் பெற்ற சொத்தினை பட்டா மாறுதல் செய்வோமென்று ஆரம்பித்தேன். பட்டா விண்ணப்பத்தோடு கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தேன். இது கண்டிஷனல் பட்டா பூமி என்பதால் பட்டாவை மாறுதல் செய்ய முடியாது என்றுச் சொல்லி விட்டார். அதுவரையிலும் அது கண்டிஷனல் பட்டா பூமி என்று எனக்குத் தெரியவில்லை. பஞ்சமி பூமி இல்லை என்பது நன்கு தெரியும். 

அது என்ன கண்டிஷனல் பட்டா பூமி? அரசு தன் நிலத்தினைப் மக்களுக்கு இனாமாக வழங்கும்போது ஒரு சில கண்டிஷன்களுடன் அவர்களுக்கு பட்டாவை வழங்குகிறது. அதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் பட்டா வழங்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பட்டா பெற்றவர் எந்த வித வில்லங்கத்துக்கும் அந்தப் பூமியினை உட்படுத்தக்கூடாது. அப்படி உட்படுத்தினால் அந்தப் பட்டா ரத்தாகி பூமி அரசு வசம் சென்று விடும். இது ஒரு கண்டிஷன். பத்து வருடத்திற்கு பின்பு விற்பனை செய்யலாம் என்றாலும் அந்தப் பூமியை அவர் யாருக்கு விற்கலாம் என்றொரு கண்டிஷனும் இருக்கும். அது என்ன என்று தெரிய வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால் தான் அந்தப் பட்டா பூமியைக் கிரையம் பெற முடியும். அந்தக் கண்டிஷன்கள் வழங்கப்பட்ட அந்தப் பட்டாவில் இருக்கும். ஒரு சிலர் பல கிரையங்களை உருவாக்கி விடுவதால் இது போன்ற விஷயங்களை எளிதில் கண்டுபிடிப்பது சிரமம்.

ஆகவே நண்பர்களே சொத்தின் மூல ஆவணங்களைஆராயும் போது பத்திரங்களை நன்கு ஆராய வேண்டும். அதன் பிறகு குறைந்தது மூன்று முறையாவது வில்லங்கச்சான்றிதழ்கள் எடுத்துப் பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படும் ஆவணங்களை நகல் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். மேனுவலாக எடுக்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில் மனிதனின் தவறால் குறைபாடுகள் ஏற்பட்டு விடும். அதனால் பல அனர்த்தங்கள் வந்து விடும். 

ஆகவே கண்டிஷனல் பட்டா பூமியை அதன் கண்டிஷன் என்னவென்று தெரியாமல் வாங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்க.





தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் சரி. ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது தீவிரவாதம் என்றே அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் நடக்குமா என்றெல்லாம் விவாதங்கள் செய்கின்றார்கள். அதற்கு நிச்சயமாக சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். இனிமேல் மூன்றாவது உலகப்போர் என்பது நடத்தப்பட்டால் பூமி என்ற உலகமே இருக்காது. வெடித்து சிதறி விடும்.

அறிவியல் மனிதனுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்ததை விட அழிவுக்கான பாதையைத்தான் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனிதனை தன் நிலை இழக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவன் மிருகமாகிக் கொண்டே போகின்றான். ஒரு ட்ரக் 85 பேரைக் கொல்ல உதவுகிறது. துப்பாக்கியால பலரைக்க் கொல்லலாம். ஒரு அணுகுண்டு ஒரு ஊரையே சுடுகாடாக்கி விடுகிறது. ஒரு வைரஸ் கிருமி உலகையே கொன்றொழிக்கிறது. சகமனிதனைக்கூட அருகில் செல்ல விடுவதில்லை.

நாடெங்கும் ஆயுதத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. என்றைக்கு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றிலிருந்து அவை மனிதனின் உயிரைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன. 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களுக்கு அச்சாணியாய், முழுக் காரணமாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது வியாபாரம். அறிவியல் வியாபாரம். ஆமாம் அறிவியலின் உச்சமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தாங்கிக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் 5 போனா வைத்திருக்கிறாய்? நான் 6எஸ் அல்லவா வைத்திருக்கிறேன் என்று வெற்று ஈகோ. இந்த வெற்று ஈகோவை வளர்க்கும் சினிமாக்கள், மீடியாக்கள். 

இந்த வெற்று ஈகோவினால் ஆப்பிள் கம்பெனிக்கு லாபம். விளம்பரங்களால் மீடியாவிற்கு லாபம். ஆனால் அந்த ஆப்பிள் போனை வாங்குபவனுக்கு? மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன்?  எவரும் யோசிப்பதில்லை. என்ன தேவையோ அதற்குத்தான் பொருள் வேண்டும். காசைக் கரியாக்கும் ஈகோவினால் பொருள் இழப்புதான் ஏற்படும். இதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் உழைப்பை இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த உலகில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட முடியுமா? என்றால் ஆம் நிச்சயம் முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் அது நடக்காது.

ஒவ்வொரு நாடும் தன் ஆயுதத்தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புதுப்புது ஆயுதங்கள் தயாரிக்க மிகப் பெரிய அளவில் பழைய ஆயுதங்கள் மீந்து விடுகின்றன. அந்த ஆயுதங்களைக் காசாக்குகின்றார்கள். அவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. பழைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டுமெனில் சண்டைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆயுதங்களை விற்க முடியும். அந்தச் சண்டைகளை ஆயுத வியாபாரிகள் புத்திசாலித்தனமான விஷயங்களால் உருவாக்குகின்றார்கள். விஷயம் அவ்வளவுதான். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். நான் கோடிட்டுக் காட்டுகிறேன். முழுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கு பிரச்சினையின் ஆரம்பம் இருக்கிறதோ அதைச் சரிசெய்யாத வரைக்கும் இந்த தீவிரவாதம் நிற்கப்போவதில்லை. மக்கள் தங்கள் இன்னுயிரை இழப்பது தொடர்கதையாகத்தான் நடந்து கொண்டிருக்கும். யாரோ ஒருவரின் பேராசைக்கு உலக மக்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றார்கள். அலறுகின்றார்கள். அல்லல்படுகின்றார்கள். துயரத்தில் வீழ்கின்றார்கள். துன்பத்தில் வீழ்கின்றார்கள். 


Wednesday, July 13, 2016

நிலம் (23) - பெண்ணின் சொத்துக்கள் வாரிசுரிமை சில விளக்கங்கள்

அண்ணா பெண்களின் சொத்துக்களைப் பற்றியும் அதன் வாரிசுரிமைகளைப் பற்றியும் தங்களது பிளாக்கில் எழுத முடியுமா? - வனிதா, ஃப்ரான்ஸ்.

அன்பு வனிதாவிற்கு வணக்கங்கள். உங்கள் அம்மாவின் சொத்திலோ அல்லது பாட்டியின் சொத்திலோ ஏதாவது பிரச்சினைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரிந்தால் உங்களுக்கு உதவலாம். இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்வியானது பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதால் இந்தப் பதிவினை எழுதுகிறேன். இந்தப் பதிவு பொதுவான நடைமுறையில் ஒரு சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை முன் வைத்து எழுதப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

அனைவருக்குமான பொதுக் குறிப்பு: ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு என்பதையும், சொத்தின் தன்மை, ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆவணங்கள், வாரிசுகள், மதம் போன்றவற்றினையும் பொறுத்துதான் சட்டப்பிரிவுகளின் வழியாக தீர்வைப் பெறலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

ஒரு இந்துப் பெண் தன் கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்துக்கள் பெற்று அனுபவித்து வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெண் தன் அனுபோகத்தில் இருக்கும் சொத்தினைக் குறித்து எந்த வித உயிலும் எழுதவில்லை என்றால், இந்தப் பெண்ணுக்கு வாரிசுகள் இல்லை என்றால் மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் அந்தப் பெண்ணின் கணவர் வழி உறவினருக்குதான் சேரும். அந்தப் பெண்ணின் அக்காவிற்கோ அல்லது அம்மா, அப்பாவிற்கோ சேராது. 

ஒரு இந்துப் பெண்ணின் சுய சம்பாத்தியச் சொத்து, அந்தப் பெண் எந்த வித உயிலும் எழுதி வைக்காத போது அவளின் வாரிசுகளுக்குத்தான் சேரும்.

மேற்கண்ட இரண்டு விஷயங்களும் உதாரணம் தான். இது தவிர பல்வேறு சிக்கல்களுக்கு தகுந்த பல்வேறு தீர்ப்புரைகள் உள்ளன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, July 6, 2016

நிலம் (22) - கோவில் நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு தினத்தந்தியில் ஒரு செய்தி. அன்னூரைச் சேர்ந்தவர்கள் தமிழக இந்து அறநிலையத்துறைக்கு  பாத்தியமான நிலத்தைப் பட்டா பெற்று அதனை தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு விற்பனை செய்து விட்டார்கள் என்றும், அதை அறிந்தவுடன் தூத்துக்குடிக்காரர் காவல்துறையில் புகார் கொடுத்து, ஏமாற்றியவர்களை கைது செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வினைப் பற்றி இங்கு பதிந்தால் அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலம் அது. கோவிலின் பெயரில் பட்டா இருந்தது. ஆனால் அந்த நிலம் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்களால் குறிப்பிட்ட கோவிலில் பணிபுரியும் பூசாரிக்கு இனாமாக வழங்கப்பட்டிருந்தது என்றும் ஆகவே அந்தப் பூசாரிதான் அந்த நிலத்துக்கு உரிமையாளர் என்றும், தமிழக அரசு அந்த நிலத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொண்ட போது அந்தப் பூசாரிக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கியது என்றும் சொல்லிக் கொண்டு ஒரு ஆவணத்தை நண்பர் கொண்டு வந்து கொடுத்தார். அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்து பார்த்ததில் செட்டில்மெண்ட் தாசில்தாரால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும், கந்தாய ரசீது போன்றவற்றை பூசாரி தன் பெயரில் செலுத்தி வந்திருக்கிறார் என்பதையும், கோவிலின் பெயரில் உரிமையாளராக அந்தப் பூசாரி இருந்து வந்திருக்கிறார் என்பதையும் அறிய நேர்ந்தது. 

இருப்பினும் அதில் மற்றொரு மறைந்து போன தகவலையும் அறிய நேர்ந்தது. செட்டில்மெண்ட் தாசில்தாரால் கொடையாக அளிக்கப்பட்ட அந்த நிலம் அந்தப் பூசாரியின் தகப்பனாரால் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதையும் அறிய நேர்ந்தது. அனுபோகத்தில் இருந்து வந்த பூமியைத்தான், செட்டில்மெண்ட் தாசில்தார் கோவில் இனாமாக வழங்கி இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த பூமியானது அவர்களின் அனுபோகத்தில் எத்தனை காலம் என்பதை அறிய முடியவில்லை. அதற்கான ஆவணங்களைத் தேடினால் கிடைத்து விடும் என்பதையும் அறிந்தேன். அவ்வாறு அந்த ஆவணங்கள் கிடைத்து விட்டால் செட்டில்மெண்ட் தாசில்தாரின் உத்தரவினை  ரத்து செய்தும், இந்து அற நிலையத்துறையின் கீழ் பதிவாகி இருப்பதையும் நீதிமன்றம் மூலம் நீக்கி விடலாம் என்று முடிவு செய்தேன். 

எல்லாம் செய்து கொடுக்கலாம், ஆனால் அவர்கள் என்னை செலவு செய்து மீட்டெடுத்துத்தாருங்கள் என்றார்கள். என் வேலை என்னவோ அதைத்தான் என்னால் செய்ய முடியும்? என்றும் எனக்குரிய கட்டணத்தை அளித்தால் மீட்டெடுக்க உதவுகிறேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து கோடி விலை இருக்கும். அந்தப் பூசாரியின் வாரிசுகள் ஏழ்மையில் உழல்கிறார்கள். இருப்பினும் நான் என்ன செய்ய முடியும்? 

கோர்டு செலவுகள் மற்றும் இதர செலவுகளை எல்லாம் செய்து கொடுத்து அவர்களிடமிருந்து செலவு தொகையைத் திரும்பப் பெறுவது சாதாரண காரியமா? காரியம் ஆகும் வரை நன்றாக இருக்கும், காரியம் முடிந்த உடன் வேறு மாதிரியாகப் பேசும் உலகமல்லவா இது? அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் ரிஸ்க் எடுக்க முடியுமா? விதியின் வலிமையினைப் பார்த்தீர்களா? கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது ஆனால் என்ன பயன்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கோவிலுக்குப் பாத்தியமான சொத்துக்களை வாங்கினால் அது எந்தக் காலத்திலும் செல்லத்தக்கதல்ல. எப்படி கோவில் நிலங்களை அடையாளம் காண்பது என்று நினைக்கின்றீர்கள்? அதற்கு கிரையம் பெற உள்ள ஆவணங்களைக் கொண்டுதான் கண்டுபிடிக்க முடியும். இப்படி பல முறைகளில் ஒரு சொத்தின் தன்மையானது என்ன என்று கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து பல தடையின்மைகளை பற்றி அலசி ஆராய்ந்து பார்த்து நிலத்தின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடித்தல் அவசியம்.

அந்த தூத்துக்குடிகாரருக்கு கோவையில் இருக்கும் நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள அவ்வளவு எளிதில் முடியாது. ஒரே ஊர்க்காரராக இருந்தால் ஓரளவு நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆகவே வெளியூரில் சொத்துக்கள் வாங்க நினைப்போர் லீகல் கருத்துரு பெறுவதற்காக ஒரு தொகையினை தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உழைப்பு வீணாகிப் போகும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன.


Monday, July 4, 2016

மக்களை ஏமாற்றுகிறதா சிபிஎஸ்சி போர்டு?

யாராவது பெற்றோரைச் சந்திக்க நேர்ந்தால் குழந்தைகள் படிப்பு, என்ன போர்டு என்று கேட்கின்றார்கள். என் குழந்தைகள் சிபிஎஸ்சில் படிக்கின்றார்கள் என்ற பெருமை வேறு அவர்களுக்கு.

சிபிஎஸ்சி போர்டில் படித்தவர்கள் இந்தியா முழுமையிலும் நடத்தப்படும் தேர்வுகளில் முதலிடங்கள் பிடிக்கின்றார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகள், டிவிச் செய்திகள், டிவி விவாதங்கள் என்று தனியொரு அலப்பறை வேறு நடக்கிறது.

முன்பெல்லாம் இந்த சிபிஎஸ்சி எங்கிருந்தது என்று யாருக்கும் தெரியாது. 

ஏன் இப்போது சிபிஎஸ்சி, ஐசிஎஸ் என்ற போர்டுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன? யாராவது தனக்குள் கேள்வி கேட்கின்றார்களா என்றால் இல்லை. ஆட்டு மந்தைக் கூட்டம் செல்லும் போது கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் நன்கு புரியும். ஒவ்வொரு ஆடும் தன் முன்பு செல்லும் ஆட்டின் பின்புறத்தினை மட்டுமே பார்த்துக் கொண்டு செல்லும். அந்த ஆட்டுக் கூட்டத்துக்கும் இவ்வகைப் பெற்றோருக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை.

தமிழக அரசில் சமச்சீர்கல்வி வந்ததும், கல்விக் கட்டணம் என்ற முறை வந்ததும் விழிபிதுங்கிய தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்க தனி வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். அதுதான் சிபிஎஸ்சி போர்டு, ஐசிஎஸ் போர்டு கல்வி முறைகள். 

மத்திய சர்க்காரில் பணிபுரியும் பணியாளர்கள் இடமாறுதல் செல்லும் போது அவர்களின் குழந்தைகள் வேறு வேறு சிலபஸ்களைப் படிப்பதற்கு சிரமப்படுவார்கள் என்பதால் தனி சிலபஸ் தனி பள்ளி என்று மத்திய அரசு பணியாளர்களுக்காக கொண்டு வந்தது. அதற்குப் பெயர்தான் சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education). 


தற்போது இருக்கும் சமச்சீர்கல்வி வெகு சிறப்பானதுதான். முன்பு இருந்த நிலையினை விட தற்போது முப்பருவ முறை தேர்வுகள், சுய கற்றல் வழி முறைகள், செயல்பாடுகள் போன்றவை வெகு அருமையாக இருக்கின்றன. அதை இன்னும் மேம்படுத்தினாலே போதும். தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறையினையும்,  ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் பள்ளிகளின் தலைவராக எம்.எல்.ஏ, உறுப்பினர்களாக உள்ளாட்சி துறையினர், பெற்றோர்கள் போன்றவர்களை நியமித்து கண்காணிப்புக் கமிட்டி அமைத்து நிர்வகித்து வந்தாலே அரசுப்பள்ளிகள் வெகுவாக உயர்ந்து விடும். கண்காணிக்க ஆட்கள் இல்லாத நிலையில் தான் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சில தனி ஆவர்த்தனங்களைச் செய்து வருகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு ரகசிய உதவிகளையும் செய்து அதன் மூலம் லாபம் பெறுகின்றனர் என்றும் செய்திகள் வெளி வருகின்றன.

குழந்தை ஆங்கிலத்தில் பேச வேண்டும். அவ்வளவுதான் விஷயம். இதனை உடும்பாய் பிடித்துக் கொண்டார்கள் தனியார் பள்ளிகள். கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர்களிடமிருந்து காசைப் பறிக்க ஆரம்பித்தனர். ஆங்கிலம் பேச மட்டுமே பெற்றோர்கள் தன் உழைப்பில் பாதியை அழித்து விடுகின்றார்கள். இதுதானே உண்மை? இல்லையென்று உங்களால் சொல்ல முடியுமா?

எதற்கு இந்தப் பதிவு என்கின்றீர்களா? சிபிஎஸ்சி போர்டின் அக்மார்க் அயோக்கியத்தனத்தை கீழே படியுங்கள். விஷயம் புரியும்.

செய்தி உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் - தேதி 04.07.2016

Jul 04 2016 : The Times of India (Chennai)

Is CBSE jacking up marks to `beat' other edu boards?


Manash Gohain
New Delhi:


Is the Central Board of Secondary Education, the largest body for conducting school exams in India, inflating marks to safeguard its students from a “disadvantage“ on the assumption that other boards are also doing the same?

The `topper scam' in Bihar board and reports that up to 80% of students so far admitted into DU's Shri Ram College of Commerce are from Tamil Nadu board point to an unhealthy competition among various school boards to be `liberal' in marking answer sheets and grant extra marks in the name of “standardisation“.

Consider this: This year, CBSE gave as many as 16 extra marks in the Class 12 maths exam this year in the all-India set of papers and 15 marks in the Delhi set during the process of standardisation. In nine subjects, marks were `standardized' up by more than 10%.

As a result of the standardisation, a student with 77 marks in mathematics may have ended up getting 93 marks on the result sheet. Similarly , a student of business studies who would have otherwise got 80 marks, may have finally got as much as 92 marks in the subject.

Although CBSE doesn't bunch subjects according to streams, a candidate with physics, chemistry , mathematics and English core from Delhi region may have ended up with a cumulative of 42 `extra' marks, a spike of over 10 percentage points in best of four aggregate.

Similarly , a student from the All India pool with accountancy , business studies, economics, mathematics and English core combination could have a cumulative 49 `moderated' marks, again a nearly 10 percentage point gain overall.

While moderation of marks has always existed to even out different levels of difficulty and other factors in an exam of such huge scale, sources said the exercise was conducted judiciously in the past.“It would never lead to an increase of more than five marks,“ said a former CBSE chairman.

One of the reasons cited by CBSE sources for such huge jumps in marks was that students of other boards were being given both `moderation' and `grace' liberally, which according to former CBSE chiefs “is against the spirit of moderation“. Officially, CBSE denied that its standardisation process was in part a re sponse to the liberal marking by other boards.

However, the minutes of the board's result committee meeting belies this claim. It says, “...members were of the opinion that the statistics shown will lead to CBSE's students in disadvantageous position in higher education in comparison to the students of other boards (like ICSE, UP board etc) who had given both moderation and grace liberally to their students.“ TOI has a copy of the minutes.

Admitting to a growing competition among boards, former CBSE chairman Ashok Kumar Ganguly has called up the HRD ministry and the Council of Boards of School Education in India to intervene. “There is a very unhealthy competition going on between the state and national boards. This should be nipped in the bud. We have seen what is happening in one of the colleges, where 75% to 80% of students are from a single board.This calls for a rationalization of marks before things worsen,“ Ganguly said.

Also there seems to be inconsistencies in difficulty level between the question papers of the all India and Delhi regions.Replying to TOI's queries, CBSE contradicted itself.

To one query it said the exercise aimed to “level up the mean achievements in the setwise performance of the candidates attributable to the difference in the difficulty level of different set of question papers in the multiple sets scheme.“


விஷயம் புரிந்து விட்டதா உங்களுக்கு? புரியவில்லை என்றால் என்ன செய்வது? புரியாதவர்களுக்கு இழப்புதான் ஏற்படும். என்ன சொல்லி என்ன புண்ணியம்? எதுவும் மாறப்போவதில்லை. மக்கள் மாறவும் மாட்டார்கள்.




Thursday, June 30, 2016

நிலம்(21) - சொத்தின் தன்மையும் வாரிசுகளின் பாகமும்

சமீபத்தில் ஒரு ஜர்னலில் ஒரு வழக்கினைப் படித்தேன். வெகு சுவாரசியமான வழக்கு தான் அது. சொத்தில் பாகம் குறித்த ஒரு முக்கியமான அவசியமான அனைத்து வழக்குகளுக்கும் முன்னுதாரமான வழக்கு தான் இது.

இனி வழக்கு விபரத்தினைப் பார்ப்போம். அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.

ஒரு கணவன் தன் மனைவியின் பெயரில் சொத்தினை வாங்குகிறார். அந்தச் சொத்து அவர்களது அனுபோகத்தில் இருந்து வருகிறது. திடீரென கணவன் இறந்து விடுகிறார். மனைவியானவள் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் பெரியவர்கள் ஆனவுடன் தன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் சொத்தினை எழுதி வைக்கிறார். விஷயம் அவ்வளவுதான். இது ஒன்றும் தவறே இல்லை. அந்தப் பெண் தான் கிரையம் பெற்ற சொத்தினை யாருக்கு வேண்டுமானாலும் கிரையமோ தானமோ எழுதி வைக்க உரிமை கொண்டவர் ஆகிறார். அந்தப் பெண்ணின் இதர வாரிசுகளுக்குச் சொத்தில் உரிமை இல்லை. அவர்களால் அந்தச் சொத்தில் பாகம் கேட்க முடியாது.

இதுவரையிலும் நான் சொல்லி இருப்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தினை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அது அவரின் உரிமை.

ஆனால் மேற்குறிப்பிட்ட சொத்தில் அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் பாகம் பெற்றனர். எப்படி? 

கணவன் தனது மூதாதையர் சொத்தினை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தன் மனைவியின் பெயரில் சொத்துக்களைக் கிரையம் பெற்றிருக்கிறார் என்பதனை அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் கோர்ட்டில் தகுந்த ஆவணங்களுடன் நிரூபித்தார்கள். விஷயம் முடிந்தது.

இனி நீங்கள் சொத்து வாங்கும் போது கிரையம் பெற்ற சொத்துக்கள் வாங்க எப்படி பணம் வந்திருக்கும் என்றொரு கேள்வியை அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது வெகுமுக்கியமான விஷயம் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்.

உங்களுக்காக ஒரு குறிப்பு :

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 என்பது இந்துக்களின் சொத்தில் பாகம் பிரிவதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. 

இந்து வாரிசுரிமைச் சட்டம் முகம்மதியர், கிறிஸ்தவர், பார்சி அல்லாத இந்தியாவிலுள்ள மற்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் மற்றும் ஒரு நாத்திகவாதிக்கும் கூட பொருந்தும்.

Sunday, June 19, 2016

மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

என் பிரியத்துக்குரிய அன்பு மகளே!
எந்த வித கட்டளைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் கடந்து செல்லும் நாட்களின் ஊடே சில தருணங்கள் நெகிழ்வுகளை உண்டாக்கி விடும். மனிதர்களுக்கு அந்த தருணங்களே அனுபவங்களாக வாழ்க்கையின் அர்த்தங்களாக மனதோடு ஊடாடிக் கொண்டிருக்கும். இன்றைக்கு நீ விடிகாலையில் எழுந்த என்னிடம் கொடுத்த வாழ்த்து அட்டையைப் பிரித்த போது மீண்டும் உண்டானது.


(உனது வாழ்த்து அட்டை)


(வெள்ளிங்கிரி மலை யாத்திரையின் போது)


என் பாச மகளே! மருத்துவ மனையில் நர்ஸ் உன்னை சிறு குழந்தையாக என் கைகளில் கொடுத்தபோது நான் அடைந்த நெகிழ்வினை உனது பத்தாவது வயதில்  நான் மீண்டும் இன்று அடைந்திருக்கிறேன். அழகான அந்த வாழ்த்து அட்டையில் எனக்காக நீ எழுதி இருந்த அந்த வாசகங்கள் என்னை வெட்கம் கொள்ள வைத்தன. ஆமாம் நான் ஏதாவது வேலையில் இருக்கும் போது நீ என்னிடம் ஏதோ கேட்க வருவாய், நான் அப்புறம் பேசலாம் என்று மறுத்து விடுவேன். இது அடிக்கடி நடக்கும். அப்போது நான் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்று எனக்கு ஆயாசமும் அசூசையும் ஏற்பட்டு விட்டது மகளே. இனி அவ்வாறு நடக்க இயலாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னையும் உன் சகோதரனையும் நல்ல குழந்தைகளாக, சமூக பிரக்ஞை உடையவர்களாக, நல்ல திடமும், செயலூக்கமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, சக மனிதர்களிடையே அன்பு கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமென்ற நினைப்பின் காரணமாகவும்,  மனசாட்சிக்கு விரோதமாக எந்த விதக் காரியத்திலும் ஈடுபட்டு எவரின் சாபமும் பெற்று விடக்கூடாது என்ற எனது எண்ணத்தின் காரணமாகவும் தொழிலில் நான் சந்திக்கும் பிரச்சினைகளால் உண்டாகும் வலியினால் சில நேரங்களில் உனது வேண்டுகோளினை கேட்க முடியாமல் போய் விடுகின்றன. வேறொன்றும் காரணமில்லை மகளே!

தத்தி நடை போட்டு நடந்த நீ இன்றைக்கு தனியாக வெள்ளிங்கிரி மலைக்கு யாத்திரை செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாய். என்னைப் போலவே உனக்கு தண்ணீரும், பசுமையும் நிறைந்த இடங்கள் பிடித்தவை என்று எனக்குத் தெரியும். நானும், ரித்தியும் உன்னுடன் வெள்ளிங்கிரி மலையிலிருந்து வடியும் மூலிகை ஆற்றில் ஆனந்தமாகக் குளித்து, ஆற்றில் செல்லும் மீனைப் பிடிக்க முயன்று தோற்று மீண்டும் பிடித்து குழி செய்து அதில் மீனை நீந்த விட்டு விளையாடுவது எனக்கு இப்போது நினைவில் வந்து செல்கிறது.

உனக்கு ஒரு சில விஷயங்களைச் சொல்லி விட எனது மனது துடிக்கிறது. சொல்லி விடுகிறேன். நீ பெரிய பெண்ணாக வளர்ந்து வருகையில் இணையத்தில் எனது இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றால் படித்துப் பார்.

நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் கொடுத்துப் பெறுவதைதான் தான் அச்சாணியாக கொண்டு இயங்குகிறது. நண்பர்கள் என்று யாரும் இல்லை, உறவினர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் மனிதர்கள் என்பதை மறந்து விடாதே.

பணம் என்றொரு மாயத்தோற்றமும், பொறாமை என்றொரு மயக்கும் குணமும் மனிதர்களை விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவைகளில் சிக்கிக் கொண்டு இன்னும் விடுபட முடியாமல் அவர்கள் தன் சக மனிதனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆகவே உனக்குத் துன்பங்கள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் சக மனிதர்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இது அவசியமா? இது தேவையா? என்று உன்னைக் கேட்டுக் கொள்,  முடிவெடு, பிறகு செயல்படு. சக மனிதர்களால் உனக்கு பிரச்சினைகள் வராத வண்ணம் நீ செயல்பட்டாய் என்றால் என்றைக்கும் சந்தோஷமாக வாழலாம்.

மகளே இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகின்றேன். நீ இப்போது கல்வி என்ற பெயரில் படித்துக் கொண்டிருப்பதெல்லாம் பிறரால் உருவாக்கப்பட்ட அவர்களின் குப்பைகள். இந்தக் குப்பைகளை நீ உண்மை என்று நம்பி விடாதே. இது ஒரு பாதை என்றளவில் எடுத்துக் கொள்.

உனது வாழ்க்கைக்கு நீ பயிலும் கல்வி என்பது வழிகாட்டி மட்டுமே. அதை வைத்துக் கொண்டு உனக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள். நீ ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? முதலாளியாக இருக்க வேண்டுமா? என்பதை நீ வளர்ந்து வருகையில் முடிவெடுத்துக் கொள். வெற்றி என்பது இங்கு நிரந்தரமில்லை என்பதையும், தோல்வியும் நிரந்தரமில்லை என்பதையும் நினைவில் மறக்காமல் வைத்துக் கொள்.

வெற்றி என்பதும் தோல்வி என்பதும் குதிரைக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் புல் போன்றது மகளே. உனக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீ குதிரையாக இருக்க வேண்டாமென்பது எனது ஆசை. நீ அதை இயக்குபவராக இருக்க வேண்டும். புரிகிறதா?

உனது வாழ்த்துக்கு மிக்க நன்றி மகளே!

மிக்க அன்புடன் உனது அப்பா.

Saturday, June 18, 2016

நிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா?

அன்பு அண்ணா, கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா? அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும்? என்று விபரமாக எழுதுங்கள். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் - மதியழகன், பொள்ளாச்சி.

மதியழகன் நிலம் (19)ல் எழுதிய விபரங்களைப் படித்தீர்கள் என்றால் விளங்கி விடும். பரவாயில்லை மீண்டும் விபரம் தருகிறேன்.

கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பத்து வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது. எந்தெந்த ஊர் என்று தெரியவில்லை. தமிழகமெங்கும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அவைகள் எந்தெந்த மாவட்டத்தில், வட்டத்தில், கிராமத்தில் உள்ள புல எண்கள் என்று அறிவது மிகவும் சிரமம். நிறைய பொருட்செலவும், நேரமும் எடுக்கும். இருப்பினும் நிலம் வாங்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் சூட்சுமம்.

பஞ்சமி நிலங்களை வேற்று வகுப்பினர் வாங்கினால் அது தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அரசு எந்த வித இழப்பீட்டினையும் தராது. அரசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்த கோர்ட்டில் வழக்குப் போட்டாலும் ஒரே பதில் தான் அது  பஞ்சமி நிலம். தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த நிலத்தில் அனுபோக பாத்தியமோ எதுவுமோ கிடையாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் இதுதான் பதில்.

ஆகவே நிலம் வாங்கும் போது தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது சாலச் சிறந்தது.

Friday, June 17, 2016

நிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு வெகு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. பலரும் இதைக் கவனிப்பதில்லை. ஏனென்றால் இதைப் பற்றிய புரிதலும் விஷயமும் யாருக்கும் தெரிவதில்லை. 

சமீபத்தில் என்னுடைய நண்பர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். விஷயம் என்னவென்று கேட்டேன். கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டேன். பின்னர் விஷயத்தைக் கேட்டேன்.

தன் வாழ் நாள் சம்பாத்தியத்தில் அவர் சுமார் 4 ஏக்கர் நிலத்தினை கிரையம் பெற்றிருப்பதாகவும், கிரையம் பெற்று சுவாதீனத்தில் இருந்து வந்த சொத்தின் மீது தற்போது வழக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார். 

“என்ன காரணம்?” என்றேன். 

”என்னவோ பஞ்சமி நிலங்கள் என்கிறார்கள்” என்றார். 

“நான் கிரையம் பெற்ற போது லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் தான் வாங்கினேன் என்றார்”. 

”வக்கீல் பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் வேறு எந்த வகுப்பினரும் பயன்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்” என்றார். ”என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அவரிடம் கவலைப்பட வேண்டாம், உங்கள் பணத்தை முழுவதுமாகப் பெற்று விடலாம் எனவும், அதற்கு பல வழிகள் இருக்கின்றன எனவும் சொல்லி சமாதானப்படுத்தினேன். 

”பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன சார்? விளக்கம் தர முடியுமா?” என்றார்.

”கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்?  அது அவர் தவறல்ல, ஏதோ  மாட்டிக் கொண்டார் சரி செய்து கொடுத்து விடலாம்” என்று நினைத்துக் கொண்டேன்.

இனி பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

1981 ஆம் வருடம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்ட்ராக இருந்த டெரமென் ஹீர் என்பவர் தலித் தாழ்த்தப்பட்ட மக்களின் வெகு மோசமான வாழ்க்கைத் தரத்தினையும், நிலச் சுவான் தார்களால் அவர்கள் கொத்தடிமையாக வாழும் கொடுமையும், தலித் வகுப்பினரை முன்னேறச் செய்வதற்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். பெரும் நிலக்கிழார்களால் கொத்தடிமையாக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த தலித் மக்களின் வாழ்வாதாரத்தினையும், சமூகத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பதற்காகவும் 1892ம் வருடம் பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுமார் 12,00,000 ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்காக டிப்பரஸ்டு கிளாஸ் லேண்ட் ஆக்ட் 1892 (Depressed Class Land Act 1892) பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வந்தது. இந்த நிலத்தினைத்தான் பஞ்சமி நிலங்கள் என்று  சொல்கிறோம்.

இந்த பஞ்சமி நிலங்களை பத்து ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, லீசுக்கு விடவோ, மாற்றம் செய்யவோ கூடாது. பத்து ஆண்டுகள் கழித்து தலித் வகுப்பினருக்கு மட்டுமே மாற்றம் செய்து கொடுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேற்று வகுப்பினருக்கு விற்கவோ, லீசுக்கோ, குத்தகைக்கோ முடியாது. அவ்வாறு செய்தால் அந்த ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டு அரசு கையகப்படுத்தி விடும் என்று சில கண்டிஷன்கள் அந்தச் சட்டத்தில் இருந்தன. அவ்வாறு திரும்பப் பெறப்படும் நிலத்திற்கு அரசு எந்த வித இழப்பீடும் கொடுக்காது என்பது மேலும் ஒரு முக்கியமான விஷயம்.

இந்த நிலத்தினை வேறு எவரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆனால் என்ன நடக்கிறது? இது பற்றிய விபரங்கள் தெரியாதவர்களைப் பயன்படுத்திப் பத்திரங்களை உருவாக்கி கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்தே இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்னவென்றே தெரியாது. தெரியாத காரணத்தால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில விஷமிகள் போலிப் பத்திரங்களை உருவாக்கி விடுகின்றார்கள். அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதவாறு பல்வேறு ஆவணங்களை உருவாக்கி விடுகின்றனர். விளைவு பிரச்சினை வந்து விடுகின்றது.

ஆகவே நண்பர்களே சொத்துக்கள் வாங்கும் முன்பு வெகு கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.