குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 13, 2011

அவசிய உணவுக்குறிப்புகள் பகுதி - 4

நான் பிறந்த சமூகம் காரம், புளி இவற்றினை அதிக அளவு பயன்படுத்தும். குழம்பு என்றால் சிவப்புக் கலரில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன். நாக்கு பற்றி எரிய வேண்டும். அந்தளவு காரம் இருக்கும். கரூரில் இருக்கும் போது நானும் எனது நண்பர் விஜயகுமாரும் மாயனூர் ஆற்றுக்குச் செல்வோம்.மாயனூரில் ஆற்றில் மீன் பிடித்து, வலைக்குள்ளே போட்டு தண்ணீரில் முக்கி வைத்திருப்பார்கள். இருநூறு ரூபாய் கொண்டு செல்வோம். மூன்று கிலோ மீன் வாங்கி அங்கேயே சுத்தம் செய்து, ஆற்று நீரில் அலசும் போது, மனைவிக்கு போன் போட்டு விடுவேன்.

வீட்டிற்கு கொண்டு வந்து காரம், புளி சேர்த்து குழம்பும், வறுவலையும் ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து விடுவார் மனைவி. விஜயகுமார் முள் எல்லாம் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவார். படுரசனையான ஆள். ஆனால் எனக்கு கவுச்சி வாடையே பிடிக்காது. மீன் குழம்பில் கவுச்சி வாடை அடித்தால் அது நல்ல குழம்பாக இருக்காது. இப்பதிவு எழுதும் போது மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தவை. இப்போது என் உணவுகளோ முற்றிலும் மாறிவிட்டது.

அதிக காரம், புளி இவற்றால் தான் மூல வியாதி வரலாம். முற்றிலுமாய் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வந்தால் மூலம் நிச்சயம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூலம் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்பு மூன்று துண்டுகள் பப்பாளி சேர்த்து வாருங்கள். காலையில் மலம் எளிதாய் போகும். பப்பாளி ஆரம்பத்தில் சூட்டினைக் கிளப்பும். பப்பாளி சாப்பிடாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடலைப் பப்பாளியை ஏற்றுக்கொள்ளும்படி பக்குவப்படுத்த வேண்டும்.வாரம் ஒரு முறை கோவைக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினம் தோறும் கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டன், சிக்கன் போன்றவை வேண்டவே மாதமொருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கொரு தடவையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றிய பதிவொன்றினை எழுதவிருக்கிறேன்.


Sunday, June 12, 2011

கணிப்பொறியாளர்களுக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 3

இன்றைக்கு மூலம் மற்றும் வாய்ப்புண் இவற்றிற்கு என்ன மருந்தினையும் உணவினையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலில் வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம். உதடுகளைச் சுற்றி வருவது ஒரு வகை புண். அது வைரஸ்ஸினால் வரும். நோய்தொற்று உடையவர்களிடமிருந்தும், வைரஸ்ஸினாலும் வரும் அத்தொற்றினை நீக்க மருத்துவரைத் தொடர்பு கொள்க. இது உணவினால் உண்டாகும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் பற்றியது.

வாயைத் திறக்க முடியாது, நாக்குகள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். மலம் கழிக்கும் போது எரியும், கடும் நாற்றமெடுக்கும்.மலம் சீதளமாய் வெளியாகும். அடிக்கடி வாயு பிரிந்து அது கொடுமையான நாற்றம் அடிக்கும். இது போன்று இருந்தால் அது உணவினால் உண்டானது என்பதைக் கவனத்தில் கொள்க. கல் வைத்துப் பழுக்க வைத்த மாம்பழம், சில பப்பாளிப் பழங்கள், பாமாயில் எண்ணெய், சில வகை மசாலாக்கள், கெமிக்கல்ஸ் பயன்படுத்திய உணவுகளினால் (பெரும்பாலான ஹோட்டல் உணவுகள்) வரக்கூடிய இந்தப் புண் பெரும் அவஸ்தைகளையும், இப்புண்ணினைக் கவனிக்கா விட்டால் பெரும் பின் விளைவுகளையும் உருவாக்கி விடும்.

இந்தப் புண் வந்தால் அதற்கு ஏகப்பட்ட ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் மருந்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஒட்டுப் போட்ட தார்ச்சாலை போல ஆகி விடும் உடம்பு. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது என்று அலட்சியம் செய்தீர்கள் என்றால் உங்களால் அருமையாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கூட உங்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள் இந்தக் காலத்தில். நோயில்லாமல் வாழக் கற்றுக் கொண்டு, பிறருக்கு தொல்லைகள் ஏதும் தரக்கூடாது என்பதை நோக்கமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்படி புண் வந்தால் மாசாக்காய் என்றுச் சொல்லக் கூடிய மாசிக்காயை வாங்கி வந்து உடைத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விடுங்கள். ஒரு முழு மாசிக்காய் உங்களின் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் இவற்றை சரி செய்து விடும். இந்தக் காய் கடுமையான துவர்ப்புச் சுவை உடையது. மென்று தின்ன இயலாதவர்கள் காயை அம்மியில் வைத்து தேய்த்து பசை போல எடுத்து அப்படியே விழுங்கி விடுங்கள். தொடர்ந்து காரம், புளி இல்லாத உணவுகளாய் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாய் கோக், பெப்சி, ஹோட்டல் உணவுகள் வேண்டவே வேண்டாம். இந்தக் காய் எங்கு கிடைக்கும் என்றால் நாட்டு மருந்துக் கடை அல்லது மளிகைக் கடைகளில் கிடைக்கும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் போது, லீவுக்கு வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் போது, அம்மா ஒரு மாசாக்காயை வாங்கி வந்து வாயில் வைத்து மிட்டாய் போல சப்பிக் கொண்டே செல் என்பார்கள். கையில் மேலும் இரண்டு உருண்டைகள் வேறினைத் தருவார்கள்.  இரண்டு மாதத்திற்கு சாப்பிட்டுக் கொள்வேன். வாய்ப்புண்ணோ அல்லது வயிற்றுப் புண்ணோ என்னை அண்டவே அண்டாது.  ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டி வந்தால் தயிர் சாதத்தோடு முடித்துக் கொள்வேன். முழுச்சாப்பாடு சாப்பிட்டேன் என்றால், வீட்டுக்கு வந்தவுடன் மாசாக்காயில் சிறு துண்டினை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். 

தமிழகம் உணவுப் பழக்கத்தை மாற்றியதால், அரையடிக்கு ஒரு ஹாஸ்பிட்டல் எதிர்காலத்தில் வந்து விடும். எதைச் சாப்பிடணும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற அனுப அறிவு இன்றி கண்டதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்ட தமிழக மக்கள் பெரும்பாலானோர் நோயின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். இளைஞர்களுக்கு இருக்கும் ஆரம்ப கட்ட நோய் எதிர்ப்புச் சக்தியினால் விஷ உணவுகள் சாப்பிடும் போது, உடனடி பக்க விளைவுகள் ஏதும் வராது. ஆனால் உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு வரும்.

யாரெல்லாம் கூடிய சீக்கிரம் நோய் வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடலாம். அத்துடன் பெப்சி, கோக், சினாக்ஸ் வகைகளை வெளுத்து வாங்கலாம்.  பின்னர் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாய் அலையலாம். ஹோட்டலில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது என்றால் கூடிய வரைக்கும் எண்ணெய், உப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.

வாய்ப்புண்ணுக்கு ஏற்ற கீரை : மணத்தக்காளிக் கீரை என்றுச் சொல்லும் சுக்கிட்டிக் கீரை. இதனை பொறியல் செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புண் தீரும்.

விரைவில் மூலம் பற்றியும் அதற்குச் சாப்பிட வேண்டிய உணவினையும் பார்க்கலாம்.

Thursday, June 9, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 2


உடம்பில் சேரும் கொழுப்பு ரத்தத்தில் சென்று சேர்கிறது. தண்ணீர் பைப்பிற்குள் உப்பு நீர் தொடர்ந்து சென்றால் பைப்பைச் சுற்றியும் உப்பு படிந்து பைப்பின் சுற்றளவைச் சுருக்கி விடும். அது போல கொழுப்பு நிறைந்த ரத்தம், நரம்புகளில் உட்புறச்சுவரில் படிந்து ரத்தக்குழாயின் விட்டத்தைப் படிப்படியாக குறைத்து விடும்.ரத்தம் செல்லும் பாதையின் அளவு குறுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், ரத்தக்குழாய் விரிந்து கொடுக்கும் தன்மையானது. இந்தக் கொழுப்பு படிவதால் ரத்தக்குழாய் தடித்து விரைப்பாய் மாறி விடும். உங்கள் கையில் இருக்கும் ஏதாவதொரு நரம்பினை அழுத்தினால் துடிப்பினை நாம் அறியலாம். அந்தத் துடிப்பினை உணர விடமால் ரத்தக் குழாயினை கொழுப்பு அடைத்து விரைப்பாய் மாற்றி விடும். வேறு வழி இன்றி உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த இதயம் படுவேகமாக இயங்கும். இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயிலும் கொழுப்பு அடைத்துக் கொண்டால் ரத்தம் வெளியேற முடியாமல் இதயம் மூச்சு வாங்கும் போது நெஞ்சு வலி உண்டாகும். அது தான் ஹார்ட் அட்டாக்.

டாக்டர்கள் பாசையில் சொல்லாமல், அனைவ்ருக்கும் புரியும் படி எழுதி இருக்கிறேன்.இனி கொழுப்பு எப்படி உருவாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள் என் இனிய நண்பர்களே !

நாம் கொழுப்பினை மட்டும் தான் சாப்பிடுகிறோம். மட்டன், சிக்கன் மட்டுமல்ல வெள்ளை வெளேர் அரிசியிலும் கொழுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமையலிலும் நாம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதே இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு மூன்று ஸ்பூன் எண்ணெய் போதுமானது என்றாலும் அதற்கு மேல்தான் நாம் சாப்பிடுகிறோம். பால் சாப்பிடுகின்றோம் அல்லவா அதில் இருக்கும் கொழுப்பு மிக அதிகமானது. பால் ஜெரிக்க கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பிடிக்கும்.பால் வயிற்றுக்குள் சென்று, திரிந்து பின் தயிராகி அதன் பிறகுதான் சீரணமாகிறது. டீயுடன் வடை சாப்பிடும் போது நம் உடம்பிற்கு தேவைக்கும் மேலான எண்ணெயினை நாம் சாப்பிடுகிறோம். 

அதுமட்டுமல்ல, உருளைக்கிழங்கு, அரிசி வகைகளை சேர்த்துச் சாப்பிடும் போது, மாவு வகைகளான இவைகளிலிருந்து கிடைக்கும் கொழுப்பும் சேர்ந்து விடுகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாம் சாப்பிடும் உணவுப் பொருள் “கொழுப்பு” மட்டுமே என்று உங்களுக்குப் புரிய வரும்.

இவ்வாறு சாப்பிடுவதால் தான் உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு மாரடைப்புகள் உண்டாகின்றன என்றுச் சொல்கின்றார்கள்.

கோக் குடிக்கின்றீர்கள் அல்லவா அதில் இருக்கும் சர்க்கரை இருக்கிறதே கொடுமை.இந்தச் சர்க்கரை முற்றிலும் கெமிக்கல்கலால் தயாரிக்கப்படுகிறது.  ஃபாண்டசிக்காக அனைவரும் குளிர்பானங்களை வெளுத்து வாங்குகிறோம். கோக் மற்றும் இதர குளிர் பானங்கள் அனைத்துமே உடலுக்கு மிக அதிக கொடுமை செய்யும் வைரஸ் கிருமிகள். ஆனால் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் கூட குளிர்பானங்களை குடித்துத் தள்ளுகின்றார்கள். அதுமட்டுமின்றி பீட்சா, பர்கர் போன்ற உப்பும், கொழுப்பும் நிறைந்த உணவினை விழுங்கி தன் வாழ் நாளில் ஒரு சில நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ளும் போது, அந்த உணவிற்கு எதிராய் நம் உடம்பு பெரும் போராட்டத்தினை நிகழ்த்தி சரிசம நிலைக்கு வருமாம். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் உடம்பு போராடும். நம் உடம்பினை நாம் மிகப் பெரிய எதிரியாகக் கருதி தேவையற்ற உணவுகளை நாக்கிற்கு அடிமையாய் மாறி விழுங்கிக் கொண்டே இருக்கிறோம். மனிதன் தன் உடம்பினை மாபெரும் எதிரியாய் நினைத்து, உடம்பினைக் கொல்ல போராடிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்த்தீர்களா? என்ன ஒரு கொடுமையான செயல் இது????

சரி, இனி ரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன உணவினைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

கேரளா பக்கம் சமையலில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். இந்த விஷயத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்பினை தவிர வேறொன்றும் இருக்காது என்பதையும் தெரிந்து வைத்திருப்பின்றீர்கள். கொழுப்பு நிறைந்த எண்ணெய் கிடைக்கும் இடத்தில், அந்தக் கொழுப்பினைக் குறைக்க இயற்கையே “கொடம்புளி” என்ற புளியை கேரளாக்காரர்களுக்கு வழங்கி இருக்கிறது. இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று. கேரள மக்கள் சமையலில் சேர்க்கும் கொடம்புளி இருக்கிறதே அது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பினை உறிஞ்சி எடுத்து கொழுப்பினைச் சேர விடாது. 

கொடம்புளியினை ரசமாகவோ அல்லது குழம்பிலோ சேர்த்து சாப்பிட்டு வர, உடம்பில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ரத்தத்திலிருந்து கொழுப்பு எரிக்கப்பட்டு நீங்கி விடும். இந்தக் கொடம்புளியின் ஆங்கிலப் பெயர் பிரிண்டல் பெரி. இந்தக் கொடம்புளியினைத் தான் வெளி நாட்டுக்காரர்கள் வாங்கி, உடல் குறையும் மாத்திரைகளில் பயன்படுத்துகிறார்கள். கூக்கிளில் தேடிப்பாருங்கள். கொடம்புளியினைப் பற்றிய அருமை பெருமைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இரண்டே மாதங்களில் உடல் பருமன் குறையும் என்று விளம்பரப்படுத்துகின்றார்களே அந்த மாத்திரைகளில் இந்தக் கொடம்புளிதான் எக்ஸ்ட்ராக்ட் செய்து சேர்க்கப்பட்டிருக்கும்.

உடல் பருமனாய் இருப்பவர்கள். அதிக கொழுப்பு உணவினைச் சேர்த்துக் கொள்ளுபவர்கள் உணவினில் கொடம்புளியினை சேர்த்தால், ரத்தத்தில் கொழுப்புச் சேராது. இதய நோய் வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.உடல் உழைப்பு அதிகமில்லாதவர்கள் அனைவரும் இந்தக் கொடம்புளியினைச் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள். வாரம் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கொடம்புளி கோவை உக்கடம் புது மீன் மார்க்கெட்டில் இருக்கும் கருவாட்டுக் கடை ஒன்றில் கிடைக்கின்றது. இதன் விலை கிலோ 200 ரூபாய் என்றுச் சொன்னார் அந்தக் கடைக்காரர். அல்லது கொச்சின் பக்கமாய் ஏதும் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுங்கள். வாங்கி அனுப்பி வைப்பார்கள். கொடம்புளி ஆரஞ்சு சுளை போல இருக்கும். இந்த சுளையில் இரண்டு கீற்றுக்களை எடுத்து சுடு நீரில் போட்டு வைத்தால் கரையும். ஆனாலும் முழுமையாக கரைந்து விடாது. புளிப்பும், துவர்ப்பும் இருக்கும். ஆரம்பத்தில் தக்காளியை அதிகம் சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் பிறது அதன் சுவை நாக்கிற்கு பழகி விடும். உடம்பிற்கு துவர்ப்பு அதிகம் தேவை என்பதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

வேறு எந்த வழியிலும் வாங்க முடியாதவர்கள், இந்தக் கொடம்புளி தேவையென்றால் என்னைத் தொடர்பு கொள்ளவும். கடையிலிருந்து வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கிறேன். தொடர்பு விபரங்கள் தளத்திலேயே இருக்கின்றன.

விரைவில் வாய்ப்புண் ஏற்பட்டால் மாத்திரைகள் ஏதுமின்று சரிசெய்வது எப்படி என்பதையும், மூலம் வராமல் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்பதையும் பார்க்கலாம்.


Wednesday, June 8, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 1

கணிணியில் வேலை செய்வோருக்கு உடல் சூடு அதிகம் ஏற்பட்டு விடும். ஏசியில் இருந்தாலும் கூட. குளிர்பானங்கள், நிறைய தண்ணீர் குடித்தாலும் சிலருக்கு அதிக உடல் சூடு உண்டாகி விடும். 

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று நினைப்போருக்குத்தான் இந்தப் பதிவு.

வாரம் இரண்டு முறை நற்சீரகத்தைலத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடற் சூடு குறைய ஆரம்பிக்கும். எப்படி இந்த சீரக தைலத்தை தயாரிக்க வேண்டுமென்பதை சொல்கிறேன்.

200 மிலி நல்லெண்ணெயை எடுத்து அடுப்பில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் போது 50 கிராம் சீரகத்தை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து ஆர வைத்து, அதன் பிறகு வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தைலம் தயார்.

வாரம் ஒரு முறை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூல வியாதி வருவதை தடுக்கும் அற்புத உணவு.

உடல் உழைப்பு அதிகமில்லாத காரணத்தால் உடலில் கொழுப்பும் அதிகம் தேங்கி விடும். அவ்வாறு கொழுப்பு அதிகம் உடலில் தேங்க ஆரம்பித்தால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்ந்து ஹார்ட் அட்டாக் வந்து விடும். உடற்சூடு அதிகமானால் வயிறு கெட்டு, கழுத்து வலி வர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையெல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உடலில் சேரும் கொழுப்பு எப்படி இருதய நோயினை உண்டாக்கும் என்பதையும், கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையும் நாளைய பதிவில் பார்க்கலாம்.

Tuesday, June 7, 2011

Fortune Bricks Real Estate's Properties

40 Acres Land Photos 5169 Acres Organic Farm HouseMettupalayam Opp Blockthunder 23 Acres + 17 AcresFortunebricks110 Acre Ammapatti Coconut Farm Housethangaa-framed2

கோவையில் 160 ஏக்கர் விற்பனைக்கு தயார்

கோவையிலிருந்து அவினாசி செல்லும் சாலையில், 3 கிலோ மீட்டர் உள்பாதையோரம் சதுர வடிவில் இரண்டு பக்கமும் சாலை வசதியுடன் 160 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருக்கிறது. வில்லங்கம் ஏதுமில்லா சொத்து. கோவை பஸ் ஸ்டாண்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இந்த இடம் பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் எங்களை நேரில் அணுகவும்.

இண்டஸ்ட்ரியல் மற்றும் வீடுகட்ட அருமையான இடம். விலையும் மிகவும் குறைந்த விலைதான். மேலும் இடத்தினை பார்வையிடவும், முன் பதிவு செய்து கொள்ளவும்.

அழைக்க : 96005 77755 / 0422 4275976

Monday, June 6, 2011

தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்பேற்றால்

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். எல்கேஜியிலிருந்து மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, லெக்சரர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். மிகப் பெரும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள், பேராசிரியர்கள், பெரும் கோடீஸ்வரர்களை அந்தக் கால கட்டத்தில் சந்தித்து இருக்கிறேன். எந்தளவுக்கு நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைச் சந்தித்தேனோ அதை விட பலமடங்கு பொறாமையும், பொய்யும், சூதும், வாதும் நிறைந்த மனிதர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன்.அவர்களால் படாதபாடும் பட்டிருக்கிறேன்.

நான் ஜாவா மற்றும் சி பிளஸ், விபி புரோகிராம்களில் நல்ல தேர்ச்சி அடைந்திருந்த போது, கரூர் கல்லூரியில் இருக்கும் கணிப்பொறி துறையில் சிஸ்டம் அட்மின்னாக நிர்வாகத்தின் சார்பில் சேவை செய்து வந்தேன்.இந்தக் கல்லூரியின் ஹெச் ஓடி அந்தக்கால ஃபோர்ட்டான், பாஸ்கல் லாங்குவேஜ்களைப் படித்து விட்டு, விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்த பிறது அதைப் பற்றிய அப்டேட்டட் செய்யாமல் இருந்தார். கல்லூரியின் கணிப்பொறி துறைப் படிப்பில் ஜாவா புரோகிராம் புதிதாக வந்த போது, ஜாவா இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டியதாக இருந்தது.

இன்ஸ்டால் செய்து அதைப் பற்றிய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த ஹெச் ஓடியின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனக்குத் தெரியாது என்பதற்காக பிற லெக்சரரைப் படிக்க அனுமதிக்க மறுத்தார். அவரை மீறி பிற லெக்சர்களால் ஒன்றும் செயல்பட முடியவில்லை. 

அதற்கு என்னை பலிகடாவாக்க முயற்சித்து, நான் பெண்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பினார். கணிணி அறையின் ஆரம்பக் கதவில் ஒரு கண்ணாடி சதுரம் இருக்கும். அதில் காகிதத்தை அவரே ஒட்டி விட்டு அதை ஒரு சாட்சியாக்கினார்.

நிர்வாகத்தின் தலைவரும் நானும் பல விஷயங்களை தினம் தோறும் பகிர்ந்து கொள்வோம். அவரிடம் எதேச்சையாக பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அந்த ஹெச் ஓடி என்னைப் பற்றிய கதையை அவிழ்க்க, இன்னொரு நொடி இங்கிருந்ந்தால் நடப்பதே வேறு என்றுச் சொல்லி சத்தமிட, அரண்டு ஓடி இருக்கிறார் அந்தப் பெண்மணி.

இதைப் போன்ற எண்ணற்ற கதைகளை அவர் பரப்பியதற்கு காரணம், அவரால் கணிப்பொறித் துறையின் மூலமாய் காசு பார்க்க முடியவில்லை என்பதுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் அசெம்பிளிங்கிலிருந்து, நெட்வொர்க் இன்ஸ்டாலேஷன் வரை அடியேனின் கண்ட்ரோலில் இருந்தது. அந்தக் காலத்தில் பிராண்டட் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒன்றினை விலை கிட்டத்தட்ட 60,000 ரூபாய் இருந்தது. ஆனால் நான் அதே கான்ஃபிக்கில் நான் அசெம்பிள் செய்தது ரூபாய் 40,000 ஆயிரமாக இருந்தது.  பிரைவேட்டாக கொடுத்தால் மேல் வரும்படி கிடைத்திருக்கும். என்னால் அது வரவில்லை என்பதால் என் மீது வன்மம் கொண்டலைந்தார் அந்தப் பெண்மணி. 

தகுதியும், திறமையும் அற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் ஆணுக்குப் பெண்ணும் சளைத்தவரல்ல என்பதையும் அறிந்து கொண்டேன்.

எங்கு பணிபுரிந்தாலும் இவர்களைப் போன்றவர்களை நாம் சந்திக்கலாம். என்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடியாய் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஆணாக இருந்தால் “ தனியாக பட்டயக் கிளப்பி” விட வேண்டும். பெண்ணாக இருந்தால் கேரக்டர் அசாசினேஷன் செய்து விட வேண்டும். ஏனென்றால் தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இருப்போரை என்ன செய்தாலும் அது குற்றமே ஆகாது.

இப்படிச் சொல்லும் நான் அந்த ஹெச் ஓடியைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டேன். என் மீது படுபயங்கர கோபத்தில் திரிந்தார். அது அவரின் பிரச்சினை அல்லவா? அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்ய முடியாதவாறு பார்த்துக் கொண்டேன். 


Sunday, June 5, 2011

சொத்துக்கள் வாங்கினாலும் பிரச்சினைகள் வரும்


சமீபத்தில் 3/5/2011 தினமலரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  50 அடிக்கு மட்டுமே அனுமதி உடைய சாலையினை 60 அடி என்று தவறாகக் காட்டி, அதன்படி எட்டு மாடி அடுக்குக் குடியிருப்பினை பிரபல கட்டுமானக் கம்பனியொன்று கட்டவிருப்பதாகவும், அதற்கு உடந்தையாய் பலரும் இருக்கிறார்கள் என்றும் அந்த அறிவிப்பு சொன்னது.

டிடிசிபி அப்ரூவல் இருக்கிறது. விசாரித்தால் சரியாக இருக்கிறது. மற்ற விசயங்கள் அனைத்துமே மிகச் சரியாய் இருக்கிறது. ஆனால் 40 அடியை 60 அடி என்று காட்டி குடியிருப்பைக் கட்டி விற்ற பிறகு, இவ்விஷயம் வெளியில் தெரிந்து, அரசு நடவடிக்கை எடுத்தால் வீட்டினை வாங்கியவர்களின் கதி என்ன? இது போன்ற ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் சொத்து வாங்கும் போது வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. 

நன்கு படித்தவர்களால் கூட இவ்விஷயங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இருக்கின்ற அவசரகாலத்தில் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்று அனைவரும் சொல்லுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவதே பெரும் பிரச்சினையாய் இருக்கும் போல இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சொல்ல வேண்டியது கடமை சொல்லி விட்டோம். இதற்கு என்ன தான் வழி என்று கேட்டால் பிரச்சினையே இல்லாத சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதுதான் சரி. மேற்கண்ட பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சொத்துக்களை, எந்த வித சிரமமும் இன்றி வாங்க விரும்புவோருக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நல்ல சேவையை அளிக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்துக்களைக் கண்டுபிடிப்பது எப்படி, யாரிடம் கேட்பது, சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து பிரச்சினைகள் ஏதுமில்லாத சொத்துதானா என்பதை எப்படி தெரிந்து கொள்வது போன்ற பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வுகளைத் தருகிறது.

சொத்துக்களின் மீதான வில்லங்கங்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் அலசி ஆராய்ந்து தனது முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இவ்வசதி தேவைப்படுவோர் நிறுவனத்தின் இயக்குனரை அணுகலாம்.

மெயில் : info@fortunebricks.net or thangavelmanickam@gmail.com

தொலைபேசி எண் : + 91 96005 77755

Saturday, June 4, 2011

ஐடியில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய குறிப்பு

கம்ப்யூட்டரில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கும் உடல் சூடு அதிகமாகும். அச்சூடு அதிகரித்தால் உடலில் பலவித நோய்கள் உருவாக ஆரம்பிக்கும். உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடற் சூட்டைத் தணிக்க சில சிறிய வழிகளை தொடர்ந்தால் உடற்சூடு ஏற்படாது.

சாப்பாட்டில் தூள் உப்பின் உபயோகத்தை நிறுத்தி, கல் உப்பினைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவதாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும். மூன்றாவது பெப்சி, கோக், லெமன் என்று குளிர்பானங்களையும், பீட்சா, பர்கர் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாய் பனங்கற்கண்டு, பனைவெல்லம்(கெமிக்கல் சாராதது) பயன்படுத்துங்கள். பால், பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து விடுங்கள்.

இனி உடற் சூட்டைத் தணிக்க என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்கிறேன். வாரம் இரண்டு முறை தலையிலிருந்து கால் வரை அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆக வேண்டும். அப்படிக் குளிக்கவில்லை என்றால் உடற்சூடு குறையாமல் நோய்கள் வர ஆரம்பிக்கும். ஏசியில் அமர்ந்தால் சூடு குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். அதில் அமர்ந்தால் உடற்சூடு அதிகரிக்கும். 

உடற்சூட்டைத் தணிக்க சீரக எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கவும். நல்லெண்ணெயை நன்கு காயவைத்து அதில் சீரகத்தை போட்டு பொறித்து வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தால் உடற்சூடு குறைந்து உடல் காற்றுப் போல இருக்கும். 

அடிக்கடி பப்பாளி, கொய்யா, மாதுளை பழங்களைச் சாப்பிட்டு வரவும். வாரத்துக்கொருமுறை அவசியம் கொவ்வைக்காய் உணவில் சேர்க்கவும். அகத்திக்கீரை சிகரெட் பிடிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளவும். அகத்திக் கீரையில் நிகோடினைக் குறைக்கும் பொருள் இருக்கிறது.

Thursday, June 2, 2011

பாதுகாப்பான முதலீடு மூலம் பல மடங்கு வருமானம் பெற

இன்றைய காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாயை ஏதாவதொரு தொழிலில் முதலீடு செய்து, அதிலிருந்து வருடத்திற்கு வருமானம் என்றால் செலவுகள் போக 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஏனென்றால் தொழில்கள் அவ்வாறு நடந்து வருகின்றன. பாதுகாப்பான முதலீட்டின் மூலம் நல்ல வருமானம் பெற பலர் ஆவல் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த வகையில், 100 மடங்கு பாதுகாப்பான வகையில் முதலீடு செய்யவும், அந்த முதலீடு இருமடங்காக மாறும்படியான, நம்பிக்கையான, முதலீட்டுப் பாதுகாப்பான சர்வீஸ் ஒன்றினை வழங்குகிறது.

எப்படி என்பதை எங்களது கம்பெனி வாடிக்கையாளரின் அனுபவம் மூலமாக, உங்களின் பார்வைக்கு..

எங்களது நிறுவனத்தை சொத்து வாங்கித் தரும்படி அணுகினார் ஒருவர். எதற்காக சொத்து வாங்குகின்றீர்கள் என்று விசாரித்தோம். இன்வெஸ்ட்மெண்ட் பர்போஸ் என்றார். அந்த சமயத்தில் எங்களிடம் 12 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்திருந்தது. அவரிடம் இந்தச் சொத்தினை வாங்கும் படியும், வாங்கிய பிறகு சைட் போட்டு விற்றுத்தருகிறோம் என்ற எங்களது கோரிக்கையை வைத்தோம். உடனே அதற்குண்டான பிராஜக்டைப் போட்டுத்தரும்படி கேட்டார். கையோடு போட்டுக் கொடுத்தோம்.

மேற்கண்ட நிலத்தை அவர் பெயருக்கு வாங்கி ரிஜிஸ்டர் செய்து கொடுத்தோம். பின்பு அவரிடமிருந்து ஒரு எம்ஓவினைப் போட்டுக்கொண்டு, டிடிசிபி பிளான், அப்ரூவல் இவற்றினை அரசிடமிருந்து முறைப்படி வாங்கினோம். அப்ரூவல் வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருட காலத்திட்டக் கணக்கில், சைட்டுகளை விற்கத் தொடங்கினோம்.

எங்களிடம் ஏற்கனவே வாங்கியவர்களே அனைத்து சைட்டுகளையும் வாங்கிக் கொள்ள, குறிப்பிட்ட காலத்திற்குள், அதாவது நான்கைந்து மாதங்களுக்குள் அனைத்து மனைகளும் விற்றாகி விட அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஒவ்வொரு சைட் விற்பனையின் போதும் கையெழுத்துப் போட வந்த எங்களது வாடிக்கையாளர், தனக்கு கிடைத்த லாபத் தொகையில் எங்களுக்குண்டான பங்கினைக் கொடுத்து விட்டு, மீதித் தொகையுடன் மகிழ்ச்சியோடு சென்றார்.

கடைசி சைட் ரெஜிஸ்டரின் போது, உண்மையில் “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” எனக்கு அதிர்ஷடத்தை தந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லிச் சென்றார். அடுத்த சைட் போட பணத்தோடு காத்திருக்கிறார் எங்களின் வாடிக்கையாளர். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அவருக்கான நிலத்தை தேர்வு செய்வதில் இறங்கி இருக்கிறது.

சொத்து மார்க்கெட் மதிப்பின் படி முதலீட்டாளரின் பெயரில் வாங்கப்படுகிறது. சைட் போட்டு விற்பனை செய்ய அவர் எந்த வித விளம்பரச் செலவும் செய்ய வேண்டியதில்லை. அவரின் வேலை சொத்தினை வாங்கி, அவர் பெயரிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது மட்டும்தான். மற்றபடி வேலைகளை “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.

சைட் போட்டு, விற்பனை செய்வது வரை “ஃபார்ச்சூன் பிரிக்ஸே” கவனித்துக் கொள்ளும். இதை விட பாதுகாப்பான, நல்ல லாபம் தரும் முதலீடு என்பது இக்காலத்தில் சாத்தியமா என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

மேற்கண்ட சர்வீஸ் தேவைப்படுபவர்கள் எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். இதுவரை நாங்கள் செய்த அத்தனை மனை விபரங்களை உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

குறிப்பு : எங்களது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம், அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பெற்ற பல வருட அனுபவங்கள், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவை வழங்க ஏதுவாக இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு, மிகச் சிறந்த லாபம் கிடைக்க எங்களை அணுகலாம்.

தொடர்பு எண் : 
கோவை எம் தங்கவேல், எக்சிகியூட்டிவ் டைரக்டர், ஃபார்ச்சூன் பிரிக்ஸ்
+ 91 96005 77755 (காலை 10 மணியிலிருந்து இரவு 6 மணி வரைத் தொடர்பு கொள்ளலாம்)

எங்களது இணையதளத்தினை பார்க்க கீழே இருக்கும் படத்தினைச் சொடுக்கவும்.