குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புதுமைப்பெண். Show all posts
Showing posts with label புதுமைப்பெண். Show all posts

Wednesday, September 7, 2022

ஸ்டாலினிசம் (1) - புதுமைப்பெண் - தமிழர்களின் தந்தை


துரோகி எட்டப்பனின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, ஆட்சிக்கு ஏன் இவர் வரவில்லை என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கு நோக்கினும் ஊழல் மயம். தமிழக மக்கள் துன்பப்பட்டு, துயரப்பட்டு கட்டிய வரிப்பணத்தை ஸ்ட்ரா போட்டு, வித விதமான கமிஷன் வழியாக உறிஞ்சினார்கள் எட்டப்பன்களும் அவனுடைய கூட்டாளிகளும்.

கலைஞர் இருந்திருந்தால், ஊழல்வாதி ஜெ மறைவுக்கு பின்பு தமிழக அரசியல் தலைகீழாக மாறி இருக்கும் என்று வாய் இருக்கு, யூடியூப் இருக்கு, டிவிட்டர் இருக்கு, ஃபேஸ்புக் இருக்குவென பலரும் ஆலோசனைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர். 

ஆனால் எனக்கோ அவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கமாட்டார் எனத் தோன்றியது. 

அவர் அப்படித்தான் இருந்தார். கண்ணியம்.

பூணூல் பத்திரிக்கைகள், பத்திரிக்கை விபச்சாரகர்கள் தேர்தலின் முதன் நாளில் கூட பத்திரிக்கைகளில் இதுவரை எவரும் வெளியிடாத வகையில் நூதனமாக அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். 

அவ்வளவு வன்மம் அவர் மீது. இருப்பினும் அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.

அவர் திராவிட இனத்தின் வளர்ச்சிக்காக புதிய அத்தியாயத்தை உருவாக்கி விட்டால், சாதி, மத, வெறி பிடித்த மிருகங்களின் நயவஞ்சக எண்ணங்கள் தவிடு பொடியாகிடுமே என்ற கோப வெறியில் பல முனையிகளிலிருந்தும் தாக்குதல்களை  அவர் மீது தொடுத்ததை உலகமே கண்டது.

மனிதனாக வாழவே தகுதியில்லாத துரோகி எட்டப்பன், அவரை இழித்தும் பழித்தும் பேசினான். அழுதான், அரற்றினான், புரண்டான், ஊழலில் ஊறிய பெருச்சாளி, நாற்றம் பிடித்த நயவஞ்சகனான அவனால் இன்று தமிழர் குழந்தைகள் இன்று மருத்துவம் படிக்க முடியாமல் வழி இன்றி தடுமாறி நிற்கச் செய்த சுய நலப்பேயன், இனத்துரோகி எப்படியெல்லாமோ சதிகளைச் செய்து பார்த்தான். துரோகம் எப்போதும் அழியும், நம்பியவரையும் அழிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.  அவரின் கடமை.

எனக்கு அறத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் ஜெயிப்பார் என நம்பினேன். ஜெயித்தார்.

அவர் துரோகிகளால், துரோகத்தால் வளர்க்கப்பட்டவர். கலைஞருக்கு பிள்ளையாகப் பிறந்தினாலே அவர் பெற்றது வலிகள் மட்டுமே. 

ஆனால் அவர் அவராகவே இருந்தார். 

ஆட்சிக்கு வந்தார். 

தூற்றியவர்கள் துயருற்று விம்மினார்கள். துன்பத்தினால் உளறினார்கள். இட்டுக்கட்டி ஏசினார்கள். இன்றும் செய்கிறார்கள்.

பாப்பனிய ஜன கட்சி நடத்தும் ஒன்றிய அரசின் மூலமாக நரித்தனத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

தினமும் அவர் மீதும், தமிழக மக்கள் மீதும் எந்தெந்த வகையினில் எல்லாம் தாக்குதல்களை நிகழ்த்த முடியுமோ அவ்வகையிலிலெல்லாம் தாக்குகின்றார்கள். 

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றார்கள். 

தமிழர்களுக்கு நன்மை கிடைத்து விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருக்கிறது. ஏழைகள் இருக்கும் பகுதியாக, சாதி வெறி பிடித்தவர்களாக, மதவெறி பிடித்தவர்களாக மக்களை மாற்ற ஒரு தற்குறியை வைத்து முயன்று கொண்டிருக்கிறார்.

திராவிடத்தால் படித்தவர்கள், பலனடைந்த தமிழர்கள், சுயநலத்திற்காக, பேராசையினால் தமிழர் இன துரோகிகள் ஆனார்கள். இவர்களை வைத்து அரசியல் என்கிற போர்வையில் மதவெறி, சாதி வெறியை பாப்பனிய ஜன கட்சி மத அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.

போலிச் செய்திகளைப் பேசுகின்றார்கள். பொய்யை உண்மை என்கிறார்கள். இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தாலும் அவர் இன்னும் அவர்கள் மீது கண்ணியம் காட்டுகிறார். 

துரோகிகளாலும், துரோகத்தினாலும் வளர்ந்தவருக்கு இதெல்லாம் சாதாரணம்.

அவர், 06.09.2022ம் தேதியன்று ஒரு சிறப்பான நிகழ்வினை நிகழ்த்தினார்.  தமிழர்களின் தந்தையாக உயர்ந்தார்.  புதுமைப் பெண் திட்டம் - அவரின் கனவு. 

அக்கனவு நனவாகும், பெண்கள் 100 சதவீதம் கல்வி பெறுவார்கள். தமிழர்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயரும். ஏழைப் பெண் பிள்ளைகள் படித்தால் சமூகம் அவர்கள் வழியாக மேன்மை அடையும் என்ற உன்னத நோக்கினை அவர் உணர்ந்துள்ளார். 

கல்வி மட்டுமே தமிழர்கள் உயர வகை செய்யும் என்று அவர் நினைக்கிறார். பெண்களுக்கு இலவசப் பயணம், கல்விக்கு உதவி என அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடக் கடமை.

அவர் கடமையைச் செய்கிறார்

கண்ணியமாக நடந்து கொள்கிறார்.

கட்டுப்பாடுடன் கட்சியினையும் தமிழர்களையும் வளர்க்கிறார்.

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களுக்கானது, அது திராவிட நாட்டின் மேன்மைக்கானது.

அவரின் ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்கானது என்பதே ஸ்டாலினிசம்.