போற இடம் தெரியாமல், வாழ வழி தெரியாமல், தமிழ மக்களாலும், அரசியலிலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒருவர் கேபி ராமலிங்கம்.
பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்வதற்காக கட்சி என்ற பெயரில் பிற இனத்தவரை அடிமையாக்கி, அவ்வப்போது பதவி கொடுத்து வரும் பி.ஜே.பி கட்சியில் இணைந்து ஏதோ ஒரு பதவியில் இருக்கிறார்.
ஒவ்வொரு மனிதரின் கடைசி புகலிடம் சுடுகாடு. வேற வழியே இல்லை.
தினமணியில் ஒரு கட்டுரை. தலைப்பைப் படித்ததும் ஆர்வமாகப் பார்த்தால், கேபி ராமலிங்கம் அவர்கள் பிரதமர் மோடியைச் சொரிந்து விடும் கட்டுரையைக் கண்டேன்.
பரிதாபம். வேறு வழி இல்லை போலும்.
தாயையும், தமிழையும் பழிப்போர் அற்றுப் போவர் என்பதை மறந்து போனார் போலும். இவரின் எதிர்காலமும், வாரிசுகளையும் நினைக்கையில் பரிதாபம்.
பசி காதடைத்து இருக்குமோ?
இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கார் என்றார். இன்ஸ்டண்டாக ஒரு எம்.பி பதவி பார்சல் ஆனது.
அதைப் போல பிரதமர் மோடியை பெரியார் என்றால் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார் போல.
பெரியார் என்றால் ஒன்றும் கிடைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
கேபிராமலிங்கத்துக்கு ஒரு பழமொழி சொல்ல வேண்டும்.
நக்குகிற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்.
புரிந்தால் சரி.
இனி தினமணியில் வெளியான தமிழ் பரப்பும் பெரியாரின் அருமை பெருமைகளைப் படியுங்கள். சும்மா அள்ளும். பாவம் பிரதமர் மோடி அவர்கள். இவர்கள் சொரியும் சொரிக்கு எந்தப் பதவியைக் கொடுக்க வேண்டுமென குழம்பி நிற்கப் போகிறார்.
இதோ கேபி.ராமலிங்கத்தின் கட்டுரையில் ஒரு சொரி சொட்டு.
22 இந்திய மொழிகளில் தமிழும் இருப்பதை ஏட்டளவிலிருந்து நாட்டு மக்களிடம் கொண்டு சோ்த்திருப்பது மட்டுமல்லாமல், தமிழுக்கு உலக அரங்கில் ஏற்றம் தந்து புகழ்உச்சியில் மகுடம் சூட்டி மகிழ்பவா் நம் பிரதமா் மோடி!
தமிழுக்குப் பெருமைசோ்த்த அப்பெருமகனாரின் பிறந்த தினம் செப்டம்பா் 17. அவா் பல்லாண்டு வாழ்க என நாம் வாழ்த்தும்போது தமிழன்னையும் ‘தமிழ் வளா்க்கும் பெரியாா் மோடி’ வாழ்க என வாழ்த்துவாள்.
இத்தனை நாளாக தமிழ் உலகம் அறிந்திருந்திராத அரும் பெரும் உண்மையை, தமிழக இலக்கியவியாதிகள் கவனித்து, இனி நடக்கவிருக்கும் உலகத்திலே உயர்வான தமிழர்களின் புகழ் பரப்பும் ஒரே விருதான, ‘விஷ்ணுபுரம் விருது’ விழாவிலே நம் தமிழ் பெரியார் மோடியை அழைத்து வந்து விருது வழங்கும்படி செய்தல் வேண்டும்.
இதை ஒவ்வொரு தமிழரும் கடமையாகச் செய்தல் அவசியம். இல்லையென்றால் தமிழ் உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.
சொரிந்து விடுவதால் எம்.பி பதவி கிடைக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். சும்மா கிடைக்குமா பதவி?
கட்டுரையைக் கீழே இருக்கும் இணைப்பில் படியுங்கள்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.