குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 2, 2024

சற்குருவென அழைக்கவும் - ஜக்கி வாசுதேவ்

ஈஷா - சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பேட்டியின் போது, ”சர்ச்சுக்கு போனால் ஃபாதர், மசூதிக்குப் போனால் மவுலானா என்றும் அழைக்கிறீர்கள் அல்லவா அது போல என்ன சற்குரு என அழையுங்களேன்” என்று சொன்னார். அவர் வாதம் சரியானதுதான். பிற மதத்துக்காரர்களை அழைக்கும் போது, என்னையும் அழைத்தால் என்ன? 

ஒரு ஷார்ட்டில் விஜய்டிவி நீயா? நானா? கோபிநாத்திடம், கார்பொரேட் பணியிலிருந்து வெளியேறி சொந்த தொழில் செய்யும் ஒருவர், யாரோ ஒருவரின் கைவிரலின் பட்டமாக இருக்க விரும்பவில்லை, சுதந்திரமாக இருக்க விரும்பி வேலையை விட்டேன் என்றார். அதற்கு கோபிநாத் சுதந்திரமான பட்டம் எங்காவது சென்று சிக்கிக் கொள்ளுமே என்றார். கோபிநாத்தின் வாதமும் சரியானதுதான். 

பட்டத்தை உதாரணமாகச் சொன்னால் பட்டத்தின் இயல்பை வாதமாக வைக்கும் கோபிநாத்தின் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? 

இருவரும் பேசியதற்கு காரணம் - அகங்காரம்.  அகங்காரம் அதிகமானால் தான் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள் என்ற போலித் திமிரும் கூட வந்து விடும். 

இவர்களைப் போல எத்தனை எத்தனையோ ஆட்கள் பூமியில் வந்து பேசி, வாதமிட்டு சென்று விட்டார்கள். வாழும் காலத்தில் கூட தன் நிலை அறியாதவர்களாய் வாழ்ந்து சென்று விடுகிறார்கள். நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கும் ஆட்கள் இவர்கள்.

இருக்கட்டும். மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டவைகளுக்கு விளக்கம் கீழே வரும். 

அதற்கு முன்பு ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவத்தைப் பார்க்கலாம்.

கேஜிஎஃப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? 

கோலார் தங்க வயல். அந்தப் பக்கமாக, ஆண்டர்சன் பேட் என்ற கிராமத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்த கேசவனானந்தா சுவாமிகள் அங்கு சென்று சாந்தி ஆசிரமத்தினை துவக்கினார்.

ஆசிரமத்தின் வாயிலாக அன்னதானம் போன்ற பல தொண்டுகளைச் செய்து வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் கடலூர் பக்கமாக ஜீவசமாதி ஆகி விட்டார். இவரின் சீடர் பெயர் கோதண்டராம சிவயோகி.

கேசவனானந்தா சுவாமிகளின் மீது பெரும் பக்தி கொண்டவர். எங்கெங்கோ சென்று தன் குருநாதரின் சிலையொன்றினை வடித்து சாந்தி ஆசிரமத்திற்கு கொண்டு வந்து, பிரதிஸ்டை செய்யும்படி கேட்டிருக்கிறார்.

அப்போது இருந்த ஆசிரம நிர்வாகிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அச்சிலையை அங்கிருந்த ஒரு தண்ணீர் நிறைந்த பகுதியில் வைத்து விட்டு, இந்தச் சிலையை பிரதிஸ்டை செய்யவதற்கு, வரவேண்டிய ஆள் வருவான் என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

நிற்க.

அமைதி குடிகொண்டிருந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் நம் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்கு வந்து விடுவோம்.

எனது குருநாதர் ஜோதி சுவாமி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, கோலார் தங்க வயலில் இருந்து வந்த பக்தர்கள் மேற்கண்ட கோலார் தங்கவயல் கேசவானந்தா சுவாமிகள் சிலை பற்றிய சம்பவத்தை அவரிடம் விவரித்திருக்கின்றனர்.

காரணமின்றி காரியமில்லை அல்லவா?

”குருநாதரிடம் கேட்கிறேன், அவர் சொன்னால் நான் அங்கு வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, குருநாதரிடம் சென்று கேட்டிருக்கிறார். 

”நீதான் பிரதிஸ்டை செய்யனும், அதை எப்படி செய்யனும் எனச் சொல்கிறேன் அதன்படி செய்” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருநாதர்.

ஜோதி சுவாமி பக்தர்களுடன் கோலார் தங்கவயல் ஆண்டர்சன் பேட்டிலிருக்கும் சாந்தி ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

22.02.2016ம் ஆண்டு தண்ணீருக்குள் இருந்த சுவாமி கேசவனானந்தா சுவாமிகளின் திருமேனியை எடுத்து வைத்திருக்கிறார். நைவேத்தியம் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நைவேத்தியமாக படைத்த பால் தம்ளரில் குறைந்து இருப்பதை பக்தர்களும், சுவாமியும் கண்டிருக்கின்றனர்.


(கோலார் தங்கவயலில் இருக்கும் சாந்தி ஆசிரமத்தில் உள்ள சுவாமி கேசவனானந்தாவின் திருமேனி. கல்வெட்டில் நம் குருநாதரின் பெயர் பொறித்திருப்பதைப் பார்க்கவும்)

”ஆண்டவனே, ஒரு சில கற்கள் பாலை உறிஞ்சும் பார்த்திருக்கிறேன். ஆனால் சுவாமியின் வாயின் அருகில் பால் நிறைந்த தம்ளரை கொண்டு சென்ற போது பால் தானாகவே குறைந்தது” என்றார் என்னிடம்.  சொல்லி விட்டு சிரித்தார். எதற்குதான் அவ்வப்போது சிரிக்கிறாரோ தெரியவில்லை.

மறு நாள் உலக வழக்கப்படி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அந்த நிகழ்வில் ஜோதி சுவாமிக்கு ஒருவர் மாலையிட்டிருக்கிறார். அவர் அந்த மாலையை எடுத்து போட்டவருக்கே திரும்ப போட்டு விட, இப்படியெல்லாம் செய்யக்கூடாது அது மரியாதை செய்தவரை அவமானம் செய்தது போலாகும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் மாலை, மரியாதை, சகல ஸ்ரீ, சற்குரு பட்டமெல்லாம் போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு ஜோதி சுவாமி அவர்களிடம், ”என் குரு என்னிடம் சொன்னது, நீ எப்போதும் சீடனாகத்தான் இருக்க வேண்டும், உன் முன்னால் இருப்பவர்கள் தான் உனக்கு குரு, ஆகவே குருவிற்குதான் மாலை சென்று சேர வேண்டும். சீடனுக்கு அல்ல என்பதால் மாலையை குருவிற்குதான் கொடுத்தேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இப்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், கோபிநாத்  பற்றிய பத்திகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். கோபிநாத்துக்கு விஷயதானம் செய்கிறவர்கள் யார்?  என்று யோசித்துப் பாருங்கள். இத்துடன் இதை முடித்து விடலாம். 

கோசாலை..!

மாலைப்பொழுது. பொழுது மசங்கிய நேரம், சிட்டுக்குருவிகளின் சத்தம் இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருந்தது. மெல்லிய சூடில்லா காற்று வீசிக் கொண்டிருந்தது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”இதெல்லாம், ராமகிருஷ்ணர் பரம்பரை ஆண்டவனே” என்றார்.

”புரியவில்லை சாமி” என்றேன்.

”காளி கோவிலில் அர்ச்சகரான பகவான் ராமகிருஷ்ணர், பூஜை சாமான்களை கங்கையில் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு சென்ற பக்தர்கள், சுவாமி இதை நீங்கள் தானா செய்ய வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பகவான், பாரம்பரியத்தை விட்டு விடக்கூடாதல்லவா, பின்னால் வரக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்” என்று சொன்னாராம்.

”ஓ...! புரிந்தது சாமி” என்றேன்.

அம்புட்டுதான்.

வாழ்க வளமுடன்...!


Thursday, February 29, 2024

மாணவர்களை படிக்க விடாமல் செய்கிறதா மோடி அரசு?

பாஜக ஆளும் மாநிலங்களில் B.A., B.Sc.,B.Com., ஆகிய படிப்புகளை நான்கு ஆண்டுகளாக மாற்றி விட்டார்கள். ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளை நான்கு ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளாக மாற்றி விட்டார்கள். சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு பொதுத்தேர்வு. 

பி.காம் படிப்புக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களின் மாணாக்கர்கள் மூன்று ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் பாஜக மாநிலங்களில் படித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் படித்திருப்பார்கள். வெளி நாடுகளில் மேற்படிப்புக்குச் செல்லும் மாணாக்கர்களுக்கு பெரிய பிரச்சினைக்கு வித்திடும். இந்த சிறு தெளிவு கூட இல்லாமல் இருக்கிறது மோடி அரசின் கல்வித்துறை.

இது மட்டுமல்ல மோடி அரசு பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட கல்வி நிலையங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. பெயர் மாற்றத்தால் என்ன நடந்து விடப்போகிறதோ தெரியவில்லை. 

தேசிய தேர்வு முகமை என்ற ஒன்றிய அரசு நிறுவனம்,  ஐ.ஐ.டி(#IIT) மற்றும் என்.ஐ.டி(NIT) சேர்க்கைக்காக வருடம் தோறும் நடத்தும் நுழைவுத் தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஒருவருக்கும் ரூ.500 கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நுழைவுத் தேர்வுக்கு சுமார் 60 கோடி கட்டணத்தைக் கொள்ளை அடிக்கிறது தேசிய தேர்வு முகமை.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிறுவன கார்ப்பொரேட்டுகளுக்கு பயனளிக்கு விதமாக தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ.மெயின் தேர்வு ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் நடத்துகிறார்கள். 

ஏன் தெரியுமா? 

ஏப்ரல், மே மாதங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முடிந்த பிறகு ஜே.இ.இ மெயின் தேர்வு வைக்கலாம். ஆனால் நுழைவுத் தேர்வு ஜனவரியில் நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டிக்கான மாணவர் சேர்க்கை ஜூனில் தான் நடக்கிறது. 

அதற்குள் ஏன் அவசரப்படுத்துகிறது ஒன்றிய அரசு?

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு, நுழைவுத் தேர்வை நடத்தி, ரிசல்ட் வெளியாகும் போது, மதிப்பெண் குறைந்தால் மாணவர்களுக்கு பதற்றத்தையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது மோடி அரசு.

இதற்குப் பின்னால் பெரும் பிசினஸ் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால், ஜனவரி,பிப்ரவரியில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்கச் செய்ய உதவும் மார்க்கெட்டிங் உத்திக்காகவே ஜனவரியில் நடத்துகிறார்கள்.

அதுமட்டுமின்றி, ஜே.இ.இ.மெயின் தேர்வில் 2013 முதல் 2018 வரை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தலா 30 கேள்விகள் கேட்க்கப்பட்டது. இப்போது தலா 20 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் மற்றும் 10 நியூமெரிக்கல் கேள்விகள் எனவும், இதில் ஐந்து கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும் என்கிறார்கள். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருக்கும் போது, இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு மா நில மாணவர்கள் எப்படி சரியாக பதில் அளிக்க முடியும்? என்று யோசிக்க மாட்டார்களா? யோசிக்க மாட்டார்கள். 

தேசிய தேர்வு முகமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வெளியிடுவதை சதவீதத்திலிருந்து சதவிகித முறைக்கு மாற்றி மக்களை ஏமாற்றுகிறது.

The key difference between percentage and percentile is the percentage is a mathematical value presented out of 100 and percentile is the per cent of values below a specific value. The percentage is a means of comparing quantities. A percentile is used to display position or rank.

ஆனந்த விகடனில் வெளியான JEE தேர்வு என்ற பெயரில் நடக்கும் மோசடி பற்றி தா. நெடுஞ்செழியன் அவர்களின் கட்டுரையை வாசித்த போது அதிர்ச்சி உண்டானது. அக்கட்டுரை எப்படி மோடி அரசு இந்திய மாணவர்களைப் படிக்க விடாமல் நுழைவுத் தேர்வு நடத்தி விரட்டி அடிக்கிறது என்ற அப்பட்டமான உண்மையை உரைத்தது. இதோ அவரின் கட்டுரையில் ஒரு பாரா மக்களுக்காக...!


மோடி அரசு என்ன சாதிக்க துடிக்கிறது? ஏன் இப்படியான குழப்பமான நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க முயலுகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் நயவஞ்சக திட்டம் தான் என்ன? 

எதுவும் புரியவில்லை.

ஒரே நாடு, ஒரே கல்வி எப்படி மொழி வழி மாநிலங்களில் சரியாகும்? 

மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொண்டு, இத்தனை அக்கிரமங்களை ஏன் நிகழ்த்துகிறது. 

பெற்றோர்களுக்கு ஏன் இத்தனை மன உளைச்சலைத் தருகிறது மோடி அரசு? 

ஏன்?

இதோ கீழே கட்டுரையாளரின் பதில்....!

நன்றி : ஆனந்த விகடன், நன்றி கல்வியாளர் திரு. நெடுஞ்செழியன். இப்பதிவு ஆனந்த விகடனின் கட்டுரை எல்லோருக்கும் சென்று சேர வேண்டுமென்று சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.  முழுக்கட்டுரையை ஆனந்த விகடனில் படிக்கவும். 

வாழ்க வளமுடன்..!


கட்டுரை இணைப்பு :

https://www.vikatan.com/education/higher-education/karpathu-ulagalavu-educational-series-39-jee-exam-fraud?utm_source=magazine-page

Tuesday, February 27, 2024

பிரசாந்த் கிஷோர் மற்றும் புதிய தலைமுறை டிவி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. டிவி, யூடியூப்பர்கள், செய்திதாள்கள், பத்திரிக்கைகள், உதிரி புதிரி கட்சிகளின் மாநாடுகள், சாதி வீதி கட்சிகளின் பேட்டிகள், கட்சித் தாவல்கள், தொண்டர்கள் விலகல் சேர்க்கை என பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

இது எதுவும் தெரியாமல் இந்தியாவில் பல கோடிப் பேர் வாழ்க்கை நடத்தி, வாழ்ந்தும் செத்துப் போகிறார்கள். விதி அல்ல சதி.

இந்திய டெலிவிஷன்கள், யூடியூப்பர்களின் பேட்டியில் பிரசாந்த் கிஷோர் பிஜேபி வெற்றி பெறும் என்று மக்கள் மனதில் திடீரென்று தோன்றி பதிய வைக்கிறார்.

புதிய தலைமுறை டெலிவிஷனில் கருத்துக் கணிப்பு என்றுச் சொல்லி ஒரு விஷயத்தை மக்களின் மனதில் பதிய வைக்க முனைகிறார்கள்.


சமீபகாலமாக பல இடங்களில் பல உதிரி புதிரி கட்சிகள், நாடாளுமன்ற மழைக்காளான்களாய் மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என தொடர்ச்சியாய் செய்திகள். கொடிகள், விளம்பரங்கள் என பிசியாக விட்டார்கள். 

நாடாளுமன்ற தேர்தல் பேருந்துக்குள் சீட் பிடிக்க துண்டு.

ஏன்? பணமின்றி ஓரணுவும் அசைவதில்லை உலகிலே.

மக்களை மூளைச் சலவை செய்யத்துவங்கி உள்ளார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். 

அதுவல்ல இது. 

மேலே சொல்லப்பட்ட தகவல்களை உண்மையாக்க துல்லியமான திட்டங்கள் உருவாக்கி செயலாக்கப்படுகின்றன. உண்மை தேர்தலுக்கு முன்பு விரட்டி அடிக்கப்படும். வதந்திகள் அரசாளும்.

மக்கள் சிந்திக்க வேண்டும். 

எது? என்ன? ஏன்? யார்? எதற்காக? கேள்விகளை உங்களுக்குள் இருக்கும் தகவல்களை நோக்கி கேளுங்கள். அவற்றை அலசி ஆராய்ந்து பாருங்கள். அதுவே சொல்லும் விடையை.

ஒரு செய்தி, உருவாக்கப்படுகிறது.  பின்னர் அச்செய்தி உண்மையாக்கப்படுகிறது. 

யோசித்துப் பாருங்கள். 

எல்லாமும் புரியும். 

அரசியலும் புரியும்.

நாம் எங்கிருக்கிறோம் என்ற அப்பட்டமான உண்மையும் புரியும்.

வாழ்க வளமுடன்..!




Thursday, February 15, 2024

நிலம் (114) - கோவை மாஸ்டர் பிளான் ரிலீஸ்

கோவை உள்ளூர் திட்டக்குழுமம் புதிய மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளது. வெகு நீண்ட காலத்துக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது.

கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தை - LPA என்றும் அழைக்கலாம். அதாவது நகர எல்லைக்குள் இருக்கும் நிலங்களின் சர்வே நம்பர்களில் எந்தெந்த சர்வே நம்பர் வீடு கட்டலாம், கமர்சியல் நிலம் எது, கல்வி நிலங்கள் எவை, தார்ச்சாலைகள் செல்லும் சர்வே எண்கள், நிறுவனங்களுக்கு அனுமதி உள்ள சர்வே எண்கள், தண்ணீர் செல்லும் பாதை, சாலைகள் செல்லும் சர்வே எண்கள்  மற்றும் விவசாய நிலங்கள் எவையெவை என்ற விபரங்களை  நகர திட்ட அலுவலகம் வெளியிடுவார்கள். அதைத்தான் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் செய்திருக்கிறது. இதே போல பல கார்ப்பொரேஷன்களுக்கும் புதிய மாஸ்டர் பிளான் வெளியாகி உள்ளது.

பொதுமக்களிடம் நேரிடையாக பாதிப்பை உண்டாக்கும் இந்த மாஸ்டர் பிளான் என்னவென்று பலருக்கும் தெரியாது.

கோவையில் இரு மாஸ்டர் பிளான்கள் - 1992 பின்னர் 2012 என நினைவு - இந்த இரு மாஸ்டர் பிளான்களில் எதை மக்கள் பயன்படுத்துவது என பெரும் குழப்பம் நிலவியது. ஜெயலலிதா 2012 பிளானை நிறுத்தி விட்டார் என்றுச் செய்தி. அது உண்மையா எனத் தெரியாது. இதற்குப் பின்னால் பெரும் வேலைகள் உள்ளன. அதையெல்லாம் பொது வெளியில் எழுத முடியாது. 

ஆனால் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் 2012 பிளானைத்தான் செயல்படுத்தியதை நான் கண்டேன். ஏனென்றால் டிடிசிபி பிளாட் அப்ரூவல் பணிகளைச் செய்தவன் என்ற வகையில் தெரிய வந்தது. 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னால் இந்த மாஸ்டர் பிளான் வெளியிட்டிருப்பது மக்கள் மீதான அவர்களின் அக்கரையைக் காட்டுகிறது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த மாஸ்டர் பிளானை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். கீழே இருக்கும் முகவரியினை கிளிக் செய்து பார்க்கவும்.

www.coimbatorelpa.com

இது எத்தனை நாளைக்கு இருக்கும் எனத் தெரியாது. ஆகவே டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கோவை மாவட்டத்தின் வெகு முக்கியமான அரசு ஆவணங்கள் இவை. 

இதில் முக்கியமாக சாலைகள் செல்லும் சர்வே எண்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள சாலைகளின் சர்வே எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஹாக்கா கிராமங்கள் பற்றிய விபரமும் இருக்கின்றது.

பலருக்கும் பெரும் குழப்பமாய் இருப்பது வார்டுகள். 

ரெவின்யூ வார்டுகள் என்பது வேறு. ஓட்டுப் போட உள்ள வார்டுகள் வேறு.

அதே போல ரெவின்யூ கிராமங்கள் என்பது தனி, கிராமங்கள் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

கொரலேசன் சர்வே நம்பர்கள் வேறு உண்டு. அந்த நம்பர்களைத்தான் இந்த புதிய மாஸ்டர் பிளானில் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று வேறு பார்க்க வேண்டும். 

கிராம புல எண்களையும், அதற்குரிய டவுன் சர்வே எண்களையும் ஒப்பீடு செய்து கொள்வது முக்கியம்.

இனி நிலம் வாங்கும் முன்பு, தொடர்புடைய நிலத்தின் பயன்பாடு என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது பற்றிய ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் குறிப்பிட்ட காலத்துக்குள் தகுந்த ஆதாரங்களுடன் கணபதியில் இருக்கும் அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சாலை ஓரமாக நிலம் வாங்கி விடாதீர்கள். கவனம் தேவை. எனக்கு வரும் அழைப்புகள் எதிர்காலத்தில் விலை உயரும் என சாலை ஓரமாக நிலம் கேட்கிறார்கள். அதற்குப் பின்னால் பல மறைக்கப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆகவே கவனம்.

முன்பெல்லாம் டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நிலமெடுப்பின் போது விட்டு விடுவார்கள். புதிய நிலெமெடுப்பில் அதெல்லாம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. 

நம்மிடைய இருக்கும் பலரும் காது வழிச் செய்திகளையே ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். எதுவாக இருந்தாலும் ஆவணங்கள் இன்றி முன்னெடுக்காதீர்கள்.

இப்போதைய காலம் அவ்வளவு எளிதானதல்ல. ஏமாற்றும் பேர்வழிகள் பலர் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். 

கவனமாய் இருப்பது உங்கள் பொறுப்பு. 

வாழ்க வளமுடன்..!

காளப்பட்டி கிராமத்தில் வரக்கூடிய எதிர்கால சாலைகள் அமையவுள்ள சர்வே எண்கள் கீழே உள்ளன.

இது கெஜட்டில் வெளியான ஆர்டர் காப்பி. ரெபரென்சுக்காக வெளியிட்டுள்ளேன்.



Saturday, February 10, 2024

மித்ரே சிவா - உனக்குள் ஒரு ரகசியம் - ஓர் அலசல்

ஆனந்த விகடன் அடுத்த சுவாமி ஜியை, தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தொடரை ஆரம்பித்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை தற்போது பிரபலமாக இருக்கும் பல சுவாமி ஜீக்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார்கள். பிரபல்யம் அடைகிறார்கள். ஏதேனும் டீல் இருக்குமோ?

மித்ரே சிவா அவர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவருடன் நேரில் பேசி இருக்கிறேன். அவரின் மனைவி கொடுத்த ஃப்ரூட் சாலட் அற்புதம். 

திடீரென்று விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தேன் மித்ரே சிவா எழுதிய உனக்குள் ஒரு ரகசியம் படித்தேன். 

அவரின் கருத்துக்கள் சில.

திட்டம் என்பது நம் அறிவுக்குள் உதிக்கிறது

அறிவு நிலையானது. ஆனால் வாழ்க்கை நிலையானதல்ல

முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அப்படிச் செயல்படுகிறபோது நிறைய விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியத் தொடங்கும். மனத்தைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்.

கோயம்புத்தூருக்குக் காரில் செல்வது திட்டம். அந்தப் பயணத்தில் மட்டுமே நம் கவனம் இருக்க வேண்டும். பயணத்தின் இடையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாகனம் பழுதாகலாம், பயணம் தடைப்படலாம், பாதையில் பிரச்னை ஏற்படலாம். எது நிகழ்ந்தாலும் அதற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றியபடி பயணத்தைத் தொடர வேண்டும். மாறாக, பயணத்தை ஆரம்பிக்கும்போதே கோயம்புத்தூரில் வாழ்வதுபோல் கற்பனை செய்யக் கூடாது. அங்கு தங்குமிடம், சாப்பிடும் உணவு என்று கற்பனை செய்து நிகழ்காலத்திலேயே அதை வாழ ஆரம்பித்துவிட்டால் செயல்பாட்டில் கவனம் சிதறிவிடும். இதுதான் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு.

இந்தக் கணத்தில் நிதர்சனத்துக்குள் நீங்கள் ஆழமாகச் செல்லச் செல்ல, நீங்கள் நினைப்பதெல்லாம் சுலபமாக முடியும்.

நிற்க..!

அறிவு நிலையானது. வாழ்க்கை நிலையற்றது - 

அறிவு நிலையானதாம். அறிவு என்பதே ஒரு குப்பை என்பார் ஓஷோ. எவராலோ எந்தக் காலத்திலோ கொடுத்த விஷயம் தான் அறிவு. அறிவு எப்படி நிலையாக இருக்கும்? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா? இது என்னவென்று?

மனதைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்? - எப்போது தெரியுமா திட்டத்தினைச் செயல்படுத்தும் போது. 

மனதை ஆளத் தெரிந்தவனுக்கு திட்டம் எதற்கு, காசு பணம் எதற்கு?  

கோவைக்கு காரில் செல்வது ஒரு செயல். செயலைச் செய்பவர்களின் மன நிலையைப் பொறுத்து ஒவ்வொன்றும் மாறும். 

கோவைக்குப் பயணம் செல்பவர்கள் எதற்கு கோவையில் வாழணும்? - இதென்ன ஒப்பீடு?

மனதுக்குள் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன். 

கனவு காணாமல், அக்கனவுக்குள் வாழாமல் எதுவும் சாத்தியப்படாது என்று பல அறிஞர்கள் சொல்லி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிகச் சரியானது எது என்பதை அறிந்து கொள்ள முயலுங்கள். பிசினஸ் எது? ஆன்மீகம் எது? அறிவுரை எது? என்று ஆராய்ந்து பாருங்கள்.

விஜய் கட்சி அவல அரசியல் நகைச்சுவை

யுவராணியுடன் கபடி விளையாடி, மறைந்து போன ஸ்ரீ வித்யா முதுகைத் தடவி தமிழ் திரைப்படக் காவியங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த விஜய், அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு தமிழக வெற்றிக் கழகம்.

வெளியான படங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டன. மார்க்கெட்டிங்க் செலவு செய்து போலி ஹைப்பில் எத்தனை நாள் ஓட்ட முடியும்?  இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை. சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தினைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம்.

மோடியின் பரிவாரங்கள் - அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மேலும் கவர்னர் பதவிப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நீதி கோலமான்கள் வரிசைகளின் பயமுறுத்தல்.

ஜோசப் விஜய் என்று நூலிபானின் கூவல்.

இந்த ஆபத்தெல்லாம் வந்து விட்டால் என்ன செய்வது? 

தூத்துக்குடியில் கொஞ்சம் உதவினார் போலும். அங்கே எவனோ ஒரு குசும்புக்காரன் வருங்கால முதல்வரேன்னு கூவியிருப்பான் போல.

ஒரே ஒரு அறிக்கை. கட்சி துவங்கியாச்சு.

இப்படியெல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும். 

ஊடக விபச்சாரகர்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நாதாரி விஜய் முதலமைச்சராவாராம் என்று பேட்டி. யூ டியூப்புகளில் பொய்கள் மட்டுமில்லை பல்லுப் படாமல் பேசுவதும் பெருகி வழிகின்றன.

ஆனானப் பட்ட சிவாஜி அரசியல் கதையே கந்தலானது. 

காமராஜருக்கே இலையே இல்லை என்று அனுப்பி விட்டது தமிழ் நாடு. 

கமல்ஹாசனுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

சிரஞ்சீவி காரு தொழிலைப் பார்க்கப் போயிட்டாரு.

இப்போது இவரு கடை விரிக்க வந்துட்டாரு.

பெயரைப் பாரு... ! 

தமிழக வெற்றிக் கழகம் - அது எங்கே இருக்குன்னுவாது தெரியுமா இவருக்கு?

மக்களுக்கு நல்லது பண்ணுன்னு இவரை எல்லாம் எவன் அழைச்சான்னு தெரியலை. 

அவல அரசியல் நகைச்சுவை.


நிலம் (113) - கோவை கணபதியில் நிலம் ஆக்கிரமிப்பு

எல்லோருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வருடமாக பத்திரிக்கை வேலையில் இருந்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிக்கை வேலை அது. மாதத்தில் பதினைந்து நாட்களை விழுங்கி விடுகிறது. 

பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் பத்திரிக்கை தொழில். ஆகையால் அதிலிருந்து விடை பெற்றேன். இனி வழமை போல பதிவுகள் வரும்.

இதோ கோவையில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு. கணபதி சி.எம். நகரில் சதுரடி ரூ.10000 என்று ரியல் எஸ்டேட் வெப்பில் படித்தேன். இந்த ஆக்கிரமிப்பு பற்றி படித்ததும் அதிர்ந்தேன்.

இதே போலத்தான் கோவில்பாளையம் ஆதித்யா கல்லூரியின் பின்புறமிருந்த ஒரு என்.ஆர்.ஐயின் இடத்தை சாதுரியமாக அபகரித்தனர். ஒரு வருடம் அலைந்து பட்டா மாற்றிக் கொடுத்தேன். பெரும் அலைச்சல் வேலை அது.

இனி அந்த ஆக்கிரமிப்புச் செய்தி. நன்றி : நவ் இந்தியர் டைம்ஸ்



இந்தச் செய்தியில் ஆடிட்டர் ராஜாராமுக்கே இந்தக் கதி என்றால் பிறருக்குச் சொல்லவும் வேண்டுமோ? குற்றவாளிகள் வழக்கை ரத்துச் செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடுத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களுக்கு தைரியம் கொடுத்திருப்பது என்ன தெரியுமா? சட்டம். சட்டத்தை அமலாக்கும் நபர்கள். இதற்குப் பின்னாலே பெரும் போராட்டம் இருந்திருக்கும். பெரும் வலி இருந்திருக்கும். பெரும் பணம் செலவாயிருக்கும். 

திருடர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடமிருந்தும் பொதுமக்கள் தப்பிப்பது பெரும் வேதனை தரும் வேலை. எங்கும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு. பணம் கொடுத்தால் பிணம் கூட உயிருடன் இருக்கிறது என சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆகவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும். 

உடனே அரசு சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான். ஆட்சியாளர்களுக்கு இதைப் போன்ற செய்திகள் கவனத்தில் கிடைப்பதே இல்லை. அப்படிக் கவனிக்கவும் முடியாது. ஏனெனில் அரசியல் என்பது அத்தனைச் சுலபமல்ல.

வாழ்க வளமுடன்


Tuesday, November 21, 2023

ஆன்மீகம் என்றால் என்ன?

தெளிவான அறிவு பெற இருபது வருடங்கள் ஆகி விட்டன. அதற்குள் எத்தனை தவறான புரிதல்கள். அதனால் உண்டான இழப்புகள். இழந்தால் தான் பெற முடியும்.

வாழ்வின் மத்திய வயதில், மனிதர்களின் தேடல்கள் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம். இதை வைத்து தான் பல பிசினஸ் சாமியார்கள் கோடிகளாய் குவிக்கின்றார்கள். 

வேறு வழி பற்றி யாருக்கும் தெரியாது. 

யோகா நோய் தீர்க்கும் என்பார்கள். முயற்சித்துப் பார்ப்போம்.

மனம் நிம்மதி அடைந்தால் நோய் தீரும் என்பார்கள். டைனமோ தியானம் செய்வோம்.

நடந்தால் போதும் ஆரோக்கியமென்பார்கள் வியர்க்க வியர்க்க நடப்போம்.

பேலியோ டயட் என்பார்கள். 

காய்கறி மருத்துவம் என்பார்கள். 

காயகல்ப பயிற்சி என்பார்கள்.

சித்தா மருத்துவமென்பார்கள். 

ஆயுர்வேதம் மட்டுமே என்பார்கள். 

இல்லை இல்லை, இது அக்குபஞ்சர் மூலமே சரியாகும் என்பார்கள். 

அடடே, இது ஹோமியோ பதிக்கு மட்டுமே சரியாகும் என்பார்கள். 

இப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்த தேடல்கள் ஒருபுறம்.

அடுத்து குடும்ப பிரச்சினை.

மன நிம்மதி, திருமணம், பிள்ளைகள் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, கள்ளக்காதல்கள், குடிப் பிரச்சினை, மாமனார் பிரச்சினை, சொத்து விற்க முடியவில்லை, வீடு கட்ட முடியவில்லை, கடனாகி விட்டது என பல பிரச்சினைகள்.

ஜோதிடம் வந்து விடும்.

ஒன்றாமிடத்து அதிபதி நான்காமிடத்தினைப் பார்ப்பதால் வரும் கிரகக் கோளாறு. பரிகாரம் செய்தால் போதும். உடனடியாக கோவில் பயணம். அது இல்லைங்க இது கர்ம வினை, அனுபவித்துதான் ஆக வேண்டும். என்ன கொஞ்சம் எளிதில் கடக்கலாம். அந்தக் கோவிலுக்குச் சென்று வாருங்கள் சரியாகி விடும்.

எல்லாம் பார்த்தாச்சு. சரியாச்சா? இன்னும் இல்லைங்க.

கடவுளே என்னைக் கைவிட்டு விட்டாயே என்று புலம்பல்.

கடவுள் எப்போ கையைப் பிடிச்சாரு கையை விட. 

ஆனாலும் புலம்பல்.

ஆக்சுவலா யாரும் எந்தப் பிரச்சினையையும் சரி செய்வதில்லை. 

அவரவர் தான் சரி செய்து கொள்கிறார்கள். சமாதானமாகிறார்கள். அடங்கிப் போகிறார்கள். விதியேன்னு வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

இதுதான் எதார்த்தம். 

இதற்குள் எத்தனை ஜோசியம், கோவில்கள், செலவுகள், இழப்புகள்.

இந்த அறிவு வரும் போது வயது போய் இருக்கும்.

மறுபடியும் மனசு இதான் விதி என்று முனங்கலோடு புலம்பும்.

ஹோமம் செய்கிறவர்களுக்கு லாபம் - பிரச்சினை தீர வேண்டுபவனுக்கு மனப்பிராந்தி. 

இந்த பிராந்தி தெளிவற்ற மனதில் எப்போதுமே ஒட்டிக் கொள்ளும். 

சாராயம் பிராந்தி அயிட்டங்கள் உடம்பு நோகுதுன்னா விட்டு விடலாம். 

ஆனால் மனப்பிராந்தி செத்தா தான் போகும். அப்படி ஒரு போதைப் பிராந்தி அது.

அது பாட்டுக்கு சிந்திக்கும். ஒன்னோடு ஒன்னு முடிச்சு போடும். அழும். கதறும். சிரிக்கும். இப்படி பாடாய் படுத்தும்.

இந்தப் பிராந்தியை எப்படி விடுவது? 

தியானம்? யோகா? 

மண்ணாங்கட்டி. 

ஒரு எழவும் நடக்காது. 

அதுக்கு வழி இருக்கா? இருக்கு. 

ஒவ்வொருவருக்கும் ஒரு வழி உண்டு. 

நீங்களே கண்டுபிடிங்க.

மனப்பிராந்தி போய்டுச்சுன்னா, ஆன்மீகமே இல்லை. 

செத்தசவமாய் இருன்னா, சவத்து மேல தியானம் பண்ணும் பயித்தியக்காரத்தனம் ஆன்மீகம் என்றால் நம்பிக் கொள்வதில் பிராந்திக்கு எப்போதும் பிரச்சினை இல்லை. 

அதாங்க மனப்பிராந்திக்கு.





Thanks to Artist Mr.Himansu Srivatsava and Photo Providers


Thursday, September 28, 2023

நிலம் (112) - கோவை விளாங்குறிச்சியில் அதிமுக எம் எல் ஏ ஜெயராமன் மற்றும் பிஜேபி பாலாஜி ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்ட 45.82 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

அனைவருக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. 

ஆனால் இன்று இந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏனெனில் உங்கள் உழைப்பினை திருட ஒரு கூட்டம் தயார் நிலையில் எப்போதும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். அதனால் இந்த பதிவினை எழுதியுள்ளேன். நிலம் பற்றி நூற்றிப் பதினோறு தலைப்புகளில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தாலே ஓரளவு புரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவினை முழுமையான தகவல்களுடன் எழுதியுள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தேவை எனில் அழைக்கவும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை தி இந்துவில் படித்தேன். இது நடக்கும் என முன்பே தெரியும்.

கோவை விளாங்குறிச்சியில் சீலிங்க் பூமி உள்ளது எனக்கு தெரியம். தவல்கள் என்னிடம் உள்ளது. இந்த பூமி அரசுக்குச் சொந்தமானது.

முறைகேடாக இந்த பூமியில் லேயவுட் போடப்பட்டு, அப்ரூவல் கொடுக்கப்பட்டு, பலரும் வாங்கி வீடுகள் கட்டினார்கள். பல நண்பர்களிடம் சொன்ன போது எவரும் கேட்பதாக இல்லை. பின்னர் எப்படி மனை அப்ரூவல்  கிடைக்கும் என்றெல்லாம் சட்டம் பேசினார்கள். 

தற்போது அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயராமன் அவர்களால் லேயவுட் போடப்பட்டு இந்த சீலிங்க் நிலங்கள் விற்கப்பட்டன. இந்த இடத்தில் தற்போது கோவை மாவட்ட பிஜேபி கட்சி தலைவராக இருக்கும் பாலாஜி அவர்களுக்கு இடமுள்ளது என செய்திகள் சொல்கின்றன.

சுமார் 45.82 ஏக்கர் நிலங்கள், இதன் மதிப்பு ரூ.229 கோடி மதிப்புள்ள நிலங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோயம்புத்தூர் நிர்வாகம் மீட்டெடுத்து உள்ளது. 

இனி வழக்குகள், மேல்முறையீடுகள் என்றெல்லாம் நடந்தாலும், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பது உண்மை.

செய்தி கீழே. படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மேல்முறையீட்டு வழக்கு எண் : WP.29221/2018

தீர்ப்பு வழங்கிய தேதி : 07.09.2023, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி

விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள சர்வே எண்கள் : 444, 446, 447/1, 407/1, 407/2, 408,410, 369, 370 மற்றும் 375.

இதன் வார்டு எண் : 26, பிளாக் எண் 1, இதன் டவுன் சர்வே எண்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த வரைபடம் கீழே தருகிறேன். இதைப் போன்ற கிராம வரைபடங்கள், அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.ஆர் - கோவை மாவட்டம் முழுவதுமானதுக்கும், ஹவுசிங்க போர்டு நிலங்கள், சீலிங்க் பூமி விபரங்கள் அனைத்தும் உள்ளது. (லீகல் கட்டணம் தனி, இதர கட்டணங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் தரப்படும்)



விளாங்குறிச்சி கிராம வரைபடத்தில் ஒரு பகுதி.

2016ம் ஆண்டு டிடிசிபி கோவை - 375 சர்வே எண் உள்ள இடத்திற்கு மனை அனுமதி வழங்கி இருக்கிறது. 



மேற்கண்ட உத்தரவுகள் ரெரா இணையத்தளத்திலும் கிடைக்கின்றன. கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ரெராவில் அப்ரூவல் கொடுக்கப்பட்டு விட்டால், கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் எனப் பலரும் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். 



படித்து விட்டீர்களா? டிடிசிபி அனுமதி வழங்கும் போதே எனக்கும் நிலப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பது  போலத்தான் அனுமதி தருவார்கள். அதே போல ரெரா விதிகளும் அதைத் தான் சொல்கின்றன. 

சரி, இனி தீர்ப்பினைப் படிக்கவும்.









இனி என்ன ஆகும்? மேல்முறையீடு செய்யப்படும். 

அரசுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம் என்றுச் சொல்வார்கள். ரூ229 கோடி மதிப்பு நிலங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். 

இந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் இடம் வாங்கியவர்களின் நிலையும், இந்தக் கட்டிடத்திற்கு கடன் அளித்த வங்கியின் பணமும் போயே போச்சு.

அதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சினைகள் இனி வரவுள்ளன. 

ஆகவே நண்பர்களே, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெறுங்கள் இடம் வாங்குவதற்கு முன்பே. தொடர்புக்கு அழைக்கவும் : 960057755

Monday, July 24, 2023

சுவாமி ஆத்மானந்தர் - அஞ்சலி


1997ம் வருடம் கரூர் சுப்ரமணியம் அவர்கள் சுவாமி ஆத்மானந்தர் அவர்களிடம் என்னைச் சேர்ப்பித்தார். அன்றிலிருந்து 2001 வரை கரூர் ராமகிருஷ்ணர் ஆஸ்ரமத்தில் இருந்தேன். கணிணி ஆசிரியராகவும், இரண்டு கல்லூரிகளுக்கு கணிணி அசெம்பிளிங், சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேசன், நெட்வொர்க்கிங் வேலைகளை நானொருவனாகவே செய்து வந்தேன். சம்பளம் ஏதுமின்றி.

கல்லூரிகளுக்கு தேவையான கம்யூட்டர்கள் பாகங்களை சென்னை சென்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் வாங்கி வந்து அசெம்பிள் செய்து, ஆபரேட்டிங்க் சிஸ்டம், இன்னபிற சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து, அவைகளை நெட்வொர்க்கிங்கில் இணைப்பது, பிரிண்டர்கள் போன்றவைகள் வாங்க சுவாமியுடன் சென்னைக்குச் செல்வது என எப்போதும் வேலையாக இருப்பேன். மாலை வேலைகளில் சுமார் இரண்டு மணி நேரமாவது சுவாமிகளுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கை. தினமணிக்கு பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அடியேன் தான் டைப் செய்து கொடுப்பேன். தினமணி ஆசிரியர் வைத்திய நாதனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.

அவர் பெரிய படிப்பாளி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்த புத்தகம் தாயுமானசுவாமிகள் பாடல்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு தாயுமான சுவாமிகள் பாடலைப் பற்றி விவரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு ஒன்றும் புரியாது. கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது அடியேன் தாயுமான சுவாமிகள் எழுதிய பராபரக் கண்ணிக்கு விளக்க உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரு வரிகளுக்கான அர்த்தத்தை எழுதுவதற்குள் பெரும்பாடாக இருக்கிறது.

பரநாட்டத்தைப் பற்றியே பெரிதும் பேசுவார். ஆஸ்ரமத்தில் இருந்த போது பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றினை எனக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது அது ஏதோ ஒரு கதை என்பது போலவே இருந்தது. இப்போது என்னால் தொடர்ந்து நான்கு பக்கங்கள் படிக்கமுடியவில்லை. மனது ஒன்றி விடுகிறது. தொடர்ந்து படிக்க இயலவில்லை. கண்ணீர் பெருகி விடுகிறது. பகவானின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாபுருடர்களின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் காலத்தினால் மட்டுமே கிடைக்கும். 

எனக்குத் தெரிந்து சுவாமி ஆத்மானந்தர் அவர்கள், சுமார் 3000 பிள்ளைகளுக்கு மேல் இலவசமாக உடையும், உணவும் கொடுத்து படிக்க வைத்திருக்கிறார். பெண் பிள்ளைகள் அனேகம். தாயைப் போல அவர்களைக் கவனித்துக் கொண்டார்.

எத்தனையோ பேர்கள் அவரிடம் பொருளுதவி பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் அவரிடமிருந்து ஏமாற்றி பெரும் பொருளைத்திருடி இருக்கிறார்கள். நான் அங்கிருந்த காலத்தில் அத்தனைக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் இது எதுவும அவரைப் பாதிப்பதே இல்லை. 

கரூர் ஆஸ்ரமத்தையும், சாரதா நிகேதன் கல்லூரியையும் திருப்பராய்த்துறை தபோவனம் அவரிடமிருந்து பிடிங்கிக் கொண்டது. அது அதர்மம் தான் என்னளவில். 

கரூர் சாரதா நிகேதன் கல்லூரியின் முன்பு இருக்கும் விவேகானந்தர் சிலை அமைக்கும் போது நான் அங்கிருந்தேன். அந்த மண்டபத்தில் இருக்கும் ஷாண்ட்லியர் ஒரு லட்ச ரூபாய். நான் தான் சென்னைக்குச் சென்று வாங்கி வந்தேன். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலையை உருவாக்கியவரே இந்தச் சிலையினையும் உருவாக்கினார். சுவாமிக்கு நிரம்பவும் பிடித்த இடம் அது. காலம் அவரை அங்கு இருக்கவிடவில்லை. 

காரைக்குடி அமராவதிபுதூரில் சாரதா சேவாஸ்ரமத்தின் அருகில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். கல்லூரி கட்டடம் வேலை செய்து கொண்டிருந்த போது, இஞ்சினியருக்கு பணம் கொடுக்கச் செல்லும் போது நானும் சுவாமியுடன் செல்வதுண்டு, அவருடன் அவரது அறையிலேயே தங்கிக் கொள்வேன். கல்லூரி கட்டி முடித்தவுடன் 50 கம்யூட்டர்கள் உருவாக்கி லேப் செட்டப் செய்து கொடுத்தேன்.  

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அவரை விட்டுச் சென்ற பிறகு சேலத்தில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். அங்கு சுவாமி நித்தியானந்தருடன் பிரச்சினை ஏற்பட்டு, கல்லூரி இன்னும் பெரிதாக வளரவில்லை.  தஞ்சாவூர் பால்சாமி மடம், கோவை குங்குமப்பாளையம் பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்னால் இருந்த ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆகியவை என்ன ஆனதோ தெரியவில்லை. தஞ்சாவூர் பால்சாமி மடத்தின் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து, அங்கிருந்து தான் அரிசி வரும். 

கோவை பள்ளப்பாளையம் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு நானும் அவருடன் வருவதுண்டு. அவர் பிறந்த ஊர். பல ஊர்க்கதைகளை காரில் வரும் போது என்னுடன் பகிர்ந்து கொள்வார். காண்டசா கிளாசிக் கார் - பதிவெண் 1011 என்று நினைவு, அக்காரில் அவருடன் அதிக நேரம் பயணம் செய்திருக்கிறேன். 

அவருக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. ராம நாதபுரத்தில் சுவாமி விவேகாந்தர் மன்னருடன் சந்தித்ததன் காரணமாக, அங்கு ராமகிருஷ்ணர் மடத்தை உருவாக்கி, அதனை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் சுவாமி விவேகானந்தரின் மீது பக்தி கொண்டிருந்தார். 




ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தை கட்டி பேலூர் மத்திடம் ஒப்படைத்த போது பேசியது மேலே இருக்கும் வீடியோ

ஆன்றோர்களின் வார்த்தைகள் வீண் போவதில்லை என்பதற்கு இந்த மடம் ஒரு உதாரணம். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு எத்தனையோ ஆண்டுகாலம் சென்ற பிறகு வடிவம் பெற்றிருக்கிறது சுவாமி ஆத்மானந்தர் அவர்களால். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மடத்தின் இணைய தளத்தில் சுவாமிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.  இந்த வீடியோ மட்டும் இருக்கிறது.

சமீபத்தில் வீட்டுக்கு வருகை தந்தார். என் படுக்கையில் தான் படுப்பேன் எனச் சொல்லி படுத்து உறங்கினார். என் பையன் கார் ஓட்டனும் எனக்கு என்று கேட்டுக் கொண்டார். அவரை அருகில் வைத்து கார் ஓட்டி வந்தான் ரித்திக் நந்தா. அவரின் நினைவாக மகனின் பெயருடன் நந்தா இணைந்தது. அவருக்குப் பிடித்த நிவேதிதை பெயர் தான் என் மகளுக்கு வைத்திருக்கிறேன்.

அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்த போது என்னைப் பற்றிப் பேசும் போது, என் மகள் நிவேதிதா பெயரைச் சொல்லி, அவளின் அப்பா என்று சொல்வாராம். அவரின் சீடர் கோவைப்புதூர் ரங்கநாதன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.  

சுவாமிகளின் சீடர் மருத்துவர் ஜெகன்நாதன் அவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார். இரண்டொரு மாதங்களாக சுவாமிகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டார். நான் அவரைக் கடைசியாகச் சந்தித்த போது கூட என் கையை இருகப் பற்றிக் கொண்டு, முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சாப்பிடுமாறு வேண்டினேன். கேட்கவே இல்லை. பர உலகை நாடிச் சென்று விட்டார்.

அவரால் வாழ்ந்தவர் கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் பயன் பெற்றவர் அனேகம். அவர் கடைசி வரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைகளுக்கு ஒப்பவே வாழ்ந்து வந்தார். 

https://www.amritapuri.org/5747/04karur.aum

மாதா அமிர்ந்தானந்த மயி அவர்கள் சாரதா கல்லூரிக்கு வருகை தந்த போது

ஒரு மாலை நேரம். கரூர் ஆஸ்ரமத்தில் இருந்த அவரது அறைக்குள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம் தனிமையில். படுக்கை அறைக்குள் சென்று காக்கி நிறத்தில் கிழிந்து போன அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். 

முருகானந்தம் என்ற அவரை சுவாமி ஆத்மானந்தர் ஆக மாற்றிய அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிரவு தூங்காமல் படித்து முடித்தேன். காலையில் அவரிடம் சென்று காலில் விழுந்து நமஸ்கரித்தேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “வாழ்க்கையில் வெற்றி” - அப்துற் றஹீம் எழுதியது.

என்னைப் பொறுத்தவர் சுவாமி விவேகானந்தர் தான் சுவாமி ஆத்மானந்தர் உருவெடுத்து நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

* * *

சுவாமி ஆத்மானந்தர் தீட்சை வழங்கி, அவரது நேரடி சீடர்கள் அறுவர். இவர்களில் சொரூபானந்தர், பசுபதீஸ்வரானந்தர், பக்திரூபானந்தர் மற்றும் ஹரிசேசவானந்தர் ஆகியோர் காலமாகி விட்டனர். 

சுவாமி ஞானேஸ்வரானந்தர், சுவாமி யோகேஸ்வரானந்தர் மற்றும் மாதா சிவ ஞானப்பிரியம்பா பெண் துறவி ஆகியோரின் சீரிய மேற்பார்வையில் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என நம்புகிறேன்.  இந்த நிறுவனங்கள் லாப நோக்கமின்றி மக்களுக்கு தொடர் பணியைச் செய்யும் எனவும் நம்புகிறேன்.



Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!



துணைவேந்தர்களா? அரசியல்வாதிகளா? யார் நீங்கள்?

இன்றைய 12.06.2023 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஆளுநர் ரவிவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தனித்தனியாக துணை வேந்தர்களுடனான மீட்டிங்கை நடத்தியதாகவும், பங்கு பெற்ற துணை வேந்தர்கள் யார் சொல்வதைக் கேட்பது என்று புரியாமல் திணறுவதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.  தலைப்பு என்ன தெரியுமா? யார் உங்கள் பாஸ்? 


உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆளுநரின் பணி என்ன என்பது பற்றித் தெளிவாக விளக்கி உள்ளது. துணை வேந்தர்கள் அச்செய்தியைப் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆளுநர் என்பவர் ஐந்தாண்டு காலத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவார். 

ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக்கூடாது என்ற பிஜேபியின் கொள்கையை செயல்படுத்தி வருபவர் என்றும் அனைவருக்கும் தெரியும். முடிந்தால் கலவரத்தையே உருவாக்கும் அளவுக்கு அவர் செல்வார் என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். இதுவெல்லாம் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் கல்வியாளர்களுக்குத் தெரியாத ஒன்றா?

தேசியக் கல்வித் திட்டமானது ஒரே தேசம், ஒரே கல்வி என்ற நிலையை நோக்கி நகர்த்தும் அயோக்கியத்தனம் என்பது இவர்களுக்குத் தெரியாதா? மொழி வழி மாநிலங்களின் கூட்டாட்சியான இந்தியாவில் எப்படி ஒரே கல்வி சாத்தியமாகும் என்று கல்வியாளர்களான துணை வேந்தர்களுக்குப் புரியாத ஒன்றா?

இந்தியா என்பது யூனியன் ஆஃப் இந்தியா என்று கூட தெரியாத அளவிற்கா துணை வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே?

எது சரி? எது தவறு என்று புரியாத நிலையில் இருப்பவர்கள் ஏன் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்? வெளியே சென்று விடுங்கள்.

புனிதமான கல்விப் பணியில் இருக்கும் ஆசிரியர்களான இவர்கள் தங்கள் அறிவு கொண்டு தமிழ் நாட்டுக்கு எது நன்மை என ஆட்சியாளர்கள் சொல்வதை கேட்காமல், கை கால்களை ஆட்டும் பொம்மை என்கிற நிலையில் இருக்கும் ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

ஆளுநர் ரவியா உங்களுக்கு சம்பளம் தருகிறார்? அவருக்கும் சேர்த்து தமிழர்கள் தான் தண்டம் அழுகிறார்கள். சோறு போடும் தமிழர்களுக்கு துரோகம் ஒன்றே தொழிலாய் வைத்திருக்கும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மண்ணுளிப் பாம்பாய் கிடப்பது ஏனோ? வெட்கமாக இல்லையா உங்களுக்கெல்லாம்? 

ஒரு கவளம் சோற்றினை எடுத்து உண்ணும் போது உங்களுக்குத் தெரியாதா இது சுப்பனும் குப்பனும் நமக்கு உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம் என்று? 

தமிழ்நாட்டு மக்கள் ரவியையா தேர்ந்தெடுத்தார்கள் ஆட்சி செய்ய? கொஞ்சமேனும் அறிவு இருப்பவர்கள் ஆளுநர் ரவியின் பேச்சினைக் கேட்பார்களா? எங்கள் அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதைத் தான் செய்வோம் என்று சொல்லாமல், வாய் மூடி மவுனமாக இருந்தால் நீங்கள் துணை வேந்தர் அல்ல அரசியல்வாதிகள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமெனில், பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரவியின் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். துணை வேந்தர்களாக தமிழ் நாட்டு மக்கள் வேறு நபர்களை நியமித்துக் கொள்வார்கள்.

ஆளுநர் ரவி நாளை சென்று விடுவார். ஆனால் நீங்கள் தமிழ் நாட்டில் தான் வாழணும் என்பதை மறந்து போனீர்களா? தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்த பிரதமர் மோடியும், பிஜேபி அரசும் நிரந்தரமானவர்கள் அல்ல. காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலை, நாளை பிஜேபிக்கும் ஏற்படும். 

ஆகவே கல்வியாளர்களான நீங்கள் அரசியல்வாதிகளா? இல்லையா? என்பதினை மக்கள் மன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள். தமிழ் நாடு அரசு பெரும்பான்மை தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, வாளாயிருப்பதாயிருந்தால் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் மக்கள் உங்களை வெளியேற்றும் சூழல் உண்டாகும் என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, May 28, 2023

நிலம் (110) - அடுக்குமாடி குடியிருப்பு டிரான்ஸ்ஃப்ர் கட்டணம் வசூலிக்க கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்த மேல்முறையீட்டு மனு WP 27155/2016 மீது விசாரணை செய்து ஒரு அக்மார்க் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் துவக்கப்படும் சொசைட்டிகள் தன் இஸ்டத்துக்கு விதிகளை வகுத்துக் கொண்டு, வீட்டின் உரிமையாளர்களிடமிருந்து, வாடகைக்கு இருப்பவர்களிடமிருந்தும் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எனக்கும் அனுபவம் உண்டு. கொரானா காலத்தில் வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என்று அனுமதி மறுத்தார்கள். நான்கு மாதம் பூட்டிக் கிடந்த வீட்டுக்கு தண்ணீர் கட்டணம் என லம்பாக கட்டணம் கேட்டார்கள். ஒவ்வொரு சொசைட்டியில் இருக்கும் ஆட்கள் ஹிட்லர் போல நடந்துகொண்டிருக்கிறார்கள்.

அடியேன் தான் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சொசைட்டி ஆளை டீல் செய்தேன். அதன் பிறகு என் வழிக்கே வராமல் வேறு ஆட்களை வைத்து சகல அயோக்கியத்தனத்தையும் செய்தான். அதற்கும் ஒரு ஏற்பாடு செய்த பின்னால் தான் அடங்கினார்கள்.

இனி அந்த தீர்ப்பைப் பார்க்கலாம்.

கீழ்ப்பாக்கத்தில், 'அங்கூர் கிராண்ட்' அடுக்குமாடி குடியிருப்பில் 60 வீடுகள் உள்ளன. குடியிருப்புகளின் பராமரிப்புக்காக, சதுர அடிக்கு 25 ரூபாய் என, உரிமையாளர்களிடம் இருந்து தொகுப்பு நிதியை, குடியிருப்பு சங்கம் வசூலித்தது. பின் தொகுப்பு நிதியை, சதுர அடிக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த குடியிருப்பில் இருந்து ஒரு வீட்டை, ரோஷினி என்பவர் வாங்கினார். டிரான்ஸ்பர் கட்டணமாக 1.47 லட்சம் ரூபாயை சங்கத்துக்கு செலுத்தினார். ஆசிஷ் தவே என்பவர், மற்றொரு வீட்டை வாங்கினார். டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்தும்படி சங்கம் கேட்க, அவர் செலுத்தவில்லை. இதையடுத்து, டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பித் தர சங்கத்துக்கு உத்தரவிடவும், டிரான்ஸ்பர் கட்டணம் கோர வழிவகுத்த துணை விதியை எதிர்த்தும், மாவட்ட பதிவாளரிடம் ரோஷினி முறையிட்டார். சங்க விதி செல்லாது என்றும், டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பி வழங்கவும் மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 'அங்கூர் கிராண்ட்' அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒவ்வொரு வீட்டின் மறு விற்பனைக்கும், டிரான்ஸ்பர் கட்டணத்தை குடியிருப்பு சங்கம் வசூலிக்கும் என்றால், பலமுறை கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு டிரான்ஸ்பர் கட்டணம் வசூலிப்பது, அனுமதிக்கத்தக்கது அல்ல. எந்த சட்ட விதிகளும் இல்லாத நிலையில், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், டிரான்ஸ்பர் கட்டணத்தை வசூலிக்க முடியாது. வீட்டை விற்கும்போது, பராமரிப்பு கட்டணம் என்ற போர்வையில், டிரான்ஸ்பர் கட்டணத்தை சங்கம் விதிக்க முடியாது. குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், லாபம் ஈட்டும் சங்கம் அல்ல. உரிமையாளர்கள், வீடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து, விகிதாச்சார அடிப்படையில் பராமரிப்பு தொகை வசூலிக்கலாம். இருவருக்கு இடையே நடக்கும் வீடு விற்பனைக்கும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீட்டின் உரிமையாளர், தன் சொத்தை யாருக்கும் விற்க உரிமை உள்ளது. அதில் சங்கம் தலையிட முடியாது. வீடு பராமரிப்புக்கான கட்டணத்தை மட்டுமே சங்கம் கோரலாம். சதுர அடி அடிப்படையில் டிரான்ஸ்பர் கட்டணம் விதிப்பதற்கு, சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு வசூலிப்பது, சட்டவிரோதமானது. எனவே, நான்கு வாரங்களில் டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். மாவட்ட பதிவாளரின் உத்தரவு, சட்டத்துக்கு உட்பட்டது தான். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவு இட்டார்.

அதாவது அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர் சங்கத்துக்கு டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்த வேண்டுமாம். இது சங்க விதியாம். 

ஏற்கனவே சம்பாதித்த காசுக்கு அரசுக்கு வரி கட்டணும். அடுத்து அரசுக்கு விற்பனைப் பதிவுக்கட்டணம் கட்ட வேண்டும். இது போதாது என்ற சொசைட்டி என்ற பெயரில் கொள்ளை அடிக்க இப்படி ஒரு வசூல் நடந்து கொண்டிருக்கிறது பல அடுக்குமாடி குடியிருப்புகளில்.

இனி எந்தச் சங்கத்துக்கும் எவரும் டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தீர்ப்பு கீழே இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கீழ்தரமான பத்திரிக்கை தினமணி - ஆதாரம் இதோ

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சோஷியல் மீடியாக்களில் திமுக பற்றிய போலிச் செய்திகள், மீம்ஸ்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என பச்சைப் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில ஈனத்தனமாக அரசியல் செய்யும், இன்ஸ்டண்ட் அரசியல்வியாதிகள் பொறுப்பிற்கு வந்தால், தனது புத்தி எதுவோ அதே போலத்தான் அவர்களும் நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் உப்பைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியரும், அவர் குடும்பத்தாரும், கொஞ்சம் கூட வெட்கமின்றி செய்திகளை போலியாகப் புகுத்தி தற்போது வெளியிட்டு வருவதைப் பாருங்கள். ஏற்கனவே தினமணியின் கதி அதோகதியாகக் கிடக்கிறது.

சமீபத்தில் ஏர்போர்ட் சென்றிருந்த போது, அங்கு தினமலர் பத்திரிக்கை படிக்க கிடைக்கிறது. இதர பத்திரிக்கைகளைக் காணவில்லை. ஒவ்வொரு ஏர்போர்ட்டுக்கும் தமிழ் பத்திரிக்கைகள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற கணக்குத் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதோ தினமணி செய்தியின் அயோக்கியத்தனத்தைப் பாரீர். 

மஞ்சள் வண்ணம் இட்டிருக்கும் பகுதியினையும், தலைப்பையும் படித்துப் பாருங்கள். தலைப்புக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது எனப்பாருங்கள். எவ்வளவு கீழ்தரமான செய்தியை வெளியிடுகிறது என்று பாருங்கள்.



திமுக மீது இவ்வளவு வன்மம் கொண்டு, தமிழர்கள் ஆட்சியில் இருக்கவே கூடாது என்பதறகாக தினமலரும், தினமணியும் இப்படியான கேவலமான செய்திகளை வெளியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தினமலரையும், தினமணி பத்திரிக்கையும் படிப்பதைத் தவிருங்கள். 

Thursday, May 18, 2023

நிலம் (109) - முதல் நிலை வாரிசுகள் தமிழ்நாடு அரசின் அப்டேட்

கோவை கொதிக்கிறது. ஒரு நல்ல ஜூஸ் கடை இல்லை. சொல்லி வைத்தாற்போல ஈக்கள். காசைக் கொடுத்து விஷம் குடிப்பது போல் ஆகிறது. இள நீரோ சூட்டில் வெந்து போய் கிடக்கிறது. இனிமேல் தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. ஆகவே கவனமாய் இருங்கள். 

2022ம் ஆண்டு தமிழ் நாடு அரசு முதல் நிலை வாரிசுகள் என்ற பட்டியலில் மாற்றங்கள் செய்திருக்கிறது. அதன் நகல்கள் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். உபயோகமாய் இருக்கும்.

















Sunday, April 23, 2023

நிலம் (108 ) - முதல் நிலை இரண்டாம் நிலை வாரிசுகள் யார்?

துல்லியமான லீகல் ஒப்பீனியன் மற்றும் சர்வேக்கு அழைக்கவும். 

அனைவரும் சுகம்தானே...! 

எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கொரானாவுக்கு பின்னால் மக்களின் மன நிலை முற்றிலுமாக மாறி விட்டது. பணத்துக்காக யாரை வேண்டுமானாலும் கழுத்தை அறுக்க வேண்டிய சூழல் இருந்தாலும் அறுக்கிறார்கள். மனசாட்சி, அறம் எல்லாம் காணாமல் போய் விட்டது.

பணம் கொடுத்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்ய பலர் துணிந்து விட்டனர். அவரவருக்கு அவரவர் சுகம் முக்கியம் என்று மாறி விட்டார்கள். இனி வரும் காலங்கள் நல்ல எண்ணமும், செயலும் கொண்டவர்களுக்கு மிகப் பெரிய சவலாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். 

கவனமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். காலம் எல்லாவற்றுக்கும் வித்தியாசமான தொனியில் ஹிட்லருக்கு கொடுத்தது போல கொடுத்தே தீரும் என்பதை மறந்து விட வேண்டாம்.

* * *

இனி தலைப்புக்கு போகலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் சமீபத்தில் லீகல் அட்வைசிங் தேவைக்காக அணுகினார். எனது கட்டணத்தை வங்கியில் செலுத்தி விட்டு, என்னைப் பார்க்க வந்தார். ஒரு இடம், பெரிய விலை. வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியன் எல்லாம் ஓகே. அட்வான்ஸ் கொடுத்து விட்டார். கிரையத்துக்கு தேதியும் குறித்து விட்டார். ஆனால் அவருக்குள் ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்ததாம். 

ஏதோ ஒரு நினைப்பில் நெட்டில் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தாராம். நமது பிளாக் கண்ணில் பட, மறுநாள் காலையில் நேரில் வந்து விட்டார். 

இறந்து போன ஒருவரின் சொத்து தொடர்பான உயில் ஏதும் இல்லாத பட்சத்தில் வாரிசு சான்றிதழை வைத்து தற்போது பட்டா மாற்றப்படுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமை (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம் 2005 ஆகிய சட்டங்களின் படி இறந்து போன இந்து ஒருவரின் முதல் நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிகள் யார் என தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போதைய தாசில்தார்கள், ஆர்.ஐக்கள், வி.ஏ.ஓக்கள் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், சொத்துரிமையை முதல் நிலை வாரிசுகள் உயிருடன் உள்ள போதே, இரண்டாம் நிலை வாரிசுகளையும் சொத்துக்களின் பட்டாவில் சேர்த்து விடுகிறார்கள். இது தவறு. பெரும்பாலானாருக்கு இதைப் பற்றித் தெரியாது.

என்னை சந்திக்க வந்தவரின் ஆவணங்கள் வெகு தெளிவாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பட்டா கொடுக்கப்பட்டு, பல்வேறு முறைகேடான ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன். அவருக்கு நான் சொன்னது புரியவே இல்லை. பின்னர் சட்ட விதிகளைப் பற்றி விவரித்து, சட்டப்புத்தகத்தைக் காட்டியபின்பு தான் புரிந்து கொண்டார். அந்தளவுக்கு தமிழ் நாட்டில் பல்வேறு ஆவணக் குளறுபடிகள் நடக்கின்றன.

கிரையத்தை ரத்துச் செய்யப் போவதாகச் சொன்னார். நான் அதைத் தடுத்து, அதை எப்படிச் சரி செய்து கிரையம் பெறுவது என்ற வழியைச் சொல்லிக் கொடுத்தேன். அதன்படி சரி செய்து, ஒவ்வொரு ஆவணத்தையும் என்னிடம் சரி பார்த்து கிரையம் பெற்றார். சொத்தினை விற்றவர்கள் இவருக்கு நல் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கின்றனர் என்பது கூடுதல் விசேசம்.

சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது, வெகு கவனமாக சொத்தின் தன்மையை ஆராய வேண்டும்.

இந்து ஒருவர் இறந்து போனால், அவரின் சொத்தானது - அவர் ஏதும் ஆவணங்கள் எழுதி வைக்காத போது - அவரின் முதல் நிலை வாரிசுகளுக்கு மட்டுமே சேரும். முதல் நிலை வாரிசுகளில் எவரும் உயிருடன் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்குச் சேரும் என்பதை மறந்து விட வேண்டும்.

ஆனால் இறந்து போன இந்துவின் சொத்து அவருக்கு எப்படி வந்தது என்பது பற்றிய தெளிவான விபரம் வேண்டும்.

முதல் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

மகன், மகள், மனைவி, தாய் - மற்றும் உறவுகளில் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

இறந்து போன இந்து ஒருவருக்கு மேலே கண்ட மற்றும் இன்னும் சில வாரிசுகள் எவரும் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பாகம் வரும்.

இரண்டாம் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

தந்தை, தந்தை வழி சகோதரர், தந்த வழி சகோதரி மற்றும் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

உங்களுக்காக ஒரு குறிப்பு : இந்த சட்டம் 39/2005 ஆல் இணைக்கப்பட்டது. 9.9.2005 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

மனம் போல வாழ்க....!