குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, April 12, 2020

காதலின் இன்னொரு வடிவம் தாம்பத்தியம்

மகள் சிறுவயதாக இருக்கும் போது சூடத்தை விழுங்கி விட்டாள். வாயில் நுரை தள்ளி, இனி தாங்காது என்று ஒரு மருத்துவர் சொல்ல, ரேஸ்கோர்ஸில் மசானிக் மருத்துவமனையில் தான் ”இது சின்ன விஷயம். தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். 

இடைப்பட்ட  நேரத்தில் கண்ணில் காணும் கோவில்களின் வாசலில் நின்று, “பகவானே, என் பிள்ளையைக் காப்பாற்று, காப்பாற்று, என் உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு, பிள்ளையைக் காப்பாற்று, காப்பாற்று” என்று அலறித் துடித்துக் கொண்டு, கண்களில் நெஞ்சின் வலி தாங்க முடியாமல் வலியும் கண்ணீரைத் துடைக்க கூட மனமின்றி அலைந்து கொண்டிருந்தேன். கடவுளுக்கு வாய் இருந்தால், நான் பட்டத் துயரங்களை அழுது கொண்டே சொல்லி இருப்பார்.

தகப்பன் ஒருவன் மனைவி, மக்களை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவர்களின் நல வாழ்வுக்காக வெயிலிலும், மழையிலும் அலைந்து கொண்டு சம்பாதித்து கொண்டு வந்து வீடு சேர்ப்பான். அசதியில் சாப்பிடக்கூட மாட்டான். மக்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிம்மதியாக உறங்குவான்.

அவனின் உடம்பில் தெம்பு இருக்கும் மட்டும் மனைவிக்காகவும், மக்களுக்காகவும் ஓடிக் கொண்டே இருப்பான். ஓடிக் கொண்டே இருப்பான். இதோ தன் பிள்ளைகளையும், மனைவியையும் காப்பாற்ற ஒரு பிள்ளையை தலையில், வைத்துக் கொண்டு, மனைவியைக் கையில் பிடித்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கிறானே அவனை ஒரு நிமிடம் மனதுக்குள் கொண்டு வந்து பாருங்கள்.

கண்கள் தானாகவே கண்ணீரை நிரப்பும். இந்த உலகம் எங்கும் தகப்பன்களாலே நிறைந்து கிடக்கிறது. அந்த தகப்பன்சாமிகளை எவரும் கண்டு கொள்வதே இல்லை. 

வீட்டுக்கு திரும்பி வருவோமா? காலம் வருமா? மனைவியைப் பார்ப்போமா? பிள்ளைகளைத் தொட்டு தழுவி முத்தம் கொடுப்போமா? பெற்ற அன்னையைப் பார்க்க முடியுமா? அப்பாவின் முகம் காண முடியுமா? இல்லை கொரானா கொன்று போடுமா எனத் தெரியாமல் கோடானு கோடி தகப்பன்கள் வெளி நாடுகளில் சிக்கிக் கொண்டு, நான்கு சுவற்றுக்குள் மனம் குமைந்து கிடக்கின்றார்களே, அவர்களை விடவா இங்கு இறைவன் உயர்ந்தவன்? அந்தத் தகப்பன்கள் தனக்காகவா மாடாய் உழைக்கிறார்கள்? அந்த தகப்பன்களின் காதல் மனைவிகள் தங்களின் இன்பத்தை மறந்து, வருவார், வருவார், அவர் என்னைப் பார்க்க வருவார் என காத்துக் கொண்டிருக்கின்றார்களே. அவர்களை விடவா இறைவன் பெரியவன்?

வாழும் சாமிகள் அல்லவா அந்த தாய்களும்,தகப்பன்களும்....!

காதல் அன்பு வடிவெடுத்து எல்லா துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டு, தன் மனைவியும்,மக்களும் நலமாக இருக்க வேண்டுமென்பதற்காக மாற்றமெடுக்கிறது.

இதோ ஒரு சம்பவம். உங்களுக்கு கண்ணில் கண்ணீர் வரவைக்கும் ஒரு கணவனின் செயல். இவர்கள் அஜித், ஷாலினி போல அழகானவர்கள் இல்லை. ஆனால் இவர்களின் தாம்பத்தியத்தின் அன்பு, பிறருக்கு முன்னுதாரனமாக இருக்கிறது. வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார்கள்.

விவாகரத்துத் தேடி கோர்ட்டில் நிற்கும் தகப்பன்களும், தாய்களும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்களேன். கொடுப்பதில், சகித்துக் கொள்வதில் அன்பின் பெயரால் செய்யலாமே. இனிமேல் மனிதராகவா பிறப்பெடுத்து வரப்போகிறோம். அப்படியே என்ன குறை இருப்பினும் ஏற்றுக் கொள்ளலாமே. 

இனி அந்தச் சம்பவம்:



வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியிருப்பதால் விளிம்புநிலை மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், வயது 65. இவரின் மனைவி மஞ்சுளா (வயது 60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் - புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லை.

ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்க்குமளவுக்கு சக்தியில்லை. அதனால் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், துணிந்து அந்த முடிவை எடுத்தார்.

தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்… எவ்வளவு நேரமாகும், அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா.. நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா.. வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது… போலீஸ் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

2 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள். சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததும், எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று அறிவழகனிடம் மருத்துவர்கள் கேட்க, ``எம்பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல” என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியபோது, ``ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இல்லை. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை அந்த முதியவர் 130 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அழைத்து வந்ததாகக் கூறினார். அதனால் உடனே அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளித்தோம். குறிப்பிட்ட தூரம் வரைதான் எங்களால் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்க முடியும். ஆனால், அவர்களின் ஏழ்மை நிலைமையைக் கருத்தில்கொண்டு ஆம்புலன்ஸை இலவசமாகவே அனுப்பி வைத்தோம்” என்றது.

நன்றி : விகடன் செய்தி

இனி என்ன ஆகும் பொருளாதாரம்? மிகத்துல்லியமான விளக்கம்

கொரானா மனிதர்களுக்கு இறைவனால் விடப்பட்ட எச்சரிக்கை என்ற பதிவினைப் படித்திருப்பீர்கள். அது ஆன்மீகவாதிகளுக்கு. ஆன்மீகத்தைத் தாண்டி பசி என்ற ஒன்று இருக்கிறது. ஆன்மீகம் வாழ்க்கையின் மீதான நம்பிக்கைக்கு ஆதாரம். 

நம்பிக்கையே வாழ்க்கை என்பார்கள். ஆனால் எதார்த்தம் என்பது வேறு. இது பொருளால் உருவாக்கப்பட்ட உலகமாக, கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகிய மனிதக் கூட்டம் மாற்றியது தான் இத்தனைப் பிரச்சினைக்கும் காரணம். சரி இருக்கட்டும்.

இனி என்ன ஆகும் இந்திய பொருளாதாரம். ஆதாரம் இல்லையெனில் மனிதர்களாகிய நம் நிலமை. இனிமேல் பொருளாதாரம் என்னவாகும்? எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெளிவு இருக்கலாம். அது அவரவர் அறிவுச் செறிவினைப் பொருத்தது. 

சரி, இனி இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான வங்கிகள் இனி என்ன செய்யும்?

இதோ ஒரு அக்மார்க் விளக்கம். படித்துப் பாருங்கள்.


Some Points Mentioned by Deepak Parekh (HDFC) in his Webinar

1) This is Human Economic Financial (HEF) crisis. Completely  different from the one we had in 2008. Will take at least 9 months to recover fully from it.

2) Banks to be on tighter leash. Your Bank Sanction letter don’t matter now, only the amount in your account does. Banks are going to revise your sanctions and make drastic reductions,if they see a credit risk.

3) The billion dollar startup valuations will be challenged, burning cash will be frowned upon. It will be tough time for start-ups to raise cash.

4) It’s time to plan for the Future, Look for opportunities and learn from these drawbacks.
Eg given of HDFC where a team looks after the present planning. Another dedicated for future disruption and plans.

5) Make time for yourself. Learn new things. Spend time with the young and old. You will be surprised to learn so much from them.

6) Leverage is double edged sword. It can lift you or bring you down.

7) Restarting Manufacturing is going be difficult . As the Labour force will be forced to choose between Fear of Life or Livelihood.

To manage this the Labour has to be incentivised to return, Management has guarantee them security of life, food and stay if required. They should be your first priority.

Management has to become more prudent by Cutting Costs, downsizing, No increments /bonus. Getting cash flow back should be first priority.

8) Consumer credit has to increase and Per capita income also. India is very low in it.

9)  Public And Private partnership can work. Example of YES Bank given

Even though Yes Bank was a competitor we didn’t allow it fail and its repercussions would have been more damaging.

It was not right of PSU banks to take over the problems of a Private banks. Along with a few private banks, We decided to come together with SBI and help Yes bank.

Yes bank had foreign banks/Funds showing interest. But the Govt said it’s an Indian problem, let Indian banks solve it.

We should have stepped up did the the same for PMC Bank and IL&FS. Things would have different then

10) RBI should come forward and purchase Corporate debt papers. This is a common practice by the central banks across the world.

11) NBFC should be regulated more. If required new licenses should be stopped. Banks have an exposure of 12 Lakh crore to these companies.

12) Force Majeure - We having been hearing this term a lot these days. It was brought up in a Govt gazette couple of weeks back regarding payment to it’s vendors. Now a lot of companies including many Large companies are taking advantage of this and trying to skip on  their lease’s, payment to vendors  etc. This should be used only when they are absolutely not in a situation to pay, not because you can. As this can have a ripple effect on the economy.

13) Equity Markets have been hit badly and will return.

Only 2% equity investors in India, compared to 40-60% in some countries. MF penetration also very low at 12% compared to 62% global. If MF participation is doubled, will make huge difference in markets. First time investors should be encouraged to invest in equity through MF as it’s less risky.

Large companies within 24-48 Hrs  get QIP from foreign funds. They should be encouraged to raise more money from the public.

14) McKinsey report states that between 2018-22 a billion people in the world  will be of middle class category out of that 650 million will be in Asia and out of that 318 million will be from India.

India will become huge in consumption numbers.

Financial savings has decreased due to increased consumer spending.

Top 3 things on my Mind

Financial sector should be strong or else economy will  collapse - NBFC Should be regulated.

The Poor should be supported more and steps to be taken for them too brought out of poverty. In any crisis the they are the first affected and last to recover. They are the backbone of the nation.

Simply the rules for investment and remove complicated tax rules.

Expect govt to come with stimulus scheme on Monday. We have given some recommendations.

Thanks to Mr.Deepak.

Saturday, April 11, 2020

நிலம் (63) - 70 கோடி முதலீடு 220 கோடி வருமானம்


அன்பு நண்பர்களே,
யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாத, கண்ணாமூச்சி ஆடும் விதியுடன் போராடிக் கொண்டிருக்கும் அவலமான நிலையில், மனிதனே நோய் பரப்பும் கொடிந்துயரத்தில் ஆழ்ந்து, வேதனையில் உழன்று கொண்டிருக்கிறோம்.

நம் மனதை வேறு விஷயங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. கொரானாவின் பாதிப்பு இந்தியாவில் குறைவதற்கு சுமார் ஆறு மாதம் ஆகலாம். ஒடிசாவில் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை அறிந்த போது, தமிழகத்திலும் அந்த நிலை வரலாம் என நினைக்கிறேன். பிள்ளைகளையும், உறவினர்களையும், நண்பர்களையும், சுற்றாரையும், உற்றாரையும் பாதுகாக்க வேண்டிய தருணம் இதுதான். அதை நாம் ஒரு தவமாகச் செய்வோம்.

இனி எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். இயற்கை அதற்கும் வழி வைத்திருக்கும். என்னுடன் இணைந்திருங்கள். எனது பிளாக்கைத் தொடர்ந்து படித்து வாருங்கள். வழிகள் பிறக்கும், நம்பிக்கை துளிர்க்கும். வாழ்க்கை வசந்தமாகும். எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் முன்னேறலாம்.  

இனி மிகக் குறைந்த முதலீட்டில் பெரும் லாபம் அடைந்த எங்களின் வாடிக்கையாளரைப் பற்றிப் படியுங்கள்.

இது உங்களின் மனதுக்கு ஊக்கம் தரும். இன்பம் தரும்.

இந்த முதலீட்டாளர் சரியானவரைத் தேர்ந்தெடுத்தார், அதனால் வெற்றி பெற்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் பங்கெடுத்து வேலை செய்த ஒரு அற்புதமான முதலீட்டினையும், அதனால் கிடைக்கப்பெற்ற லாபம் பற்றிப் பார்ப்போமா?

ஒரு பெரிய கார்ப்பொரேட் நிறுவனம், நண்பர் மூலமாக, நகரத்தில் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, இந்த இடத்தில் எங்களுக்கு 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மூலம் மட்டுமே செய்வோம் எனவும் கேட்டிருந்தார்கள்.

அதற்கான திட்டமிடலை வெகு தெளிவாக உருவாக்கினோம். அதற்கான காலத்தை இரண்டு வருடமாக நிர்ணயித்தோம். இதில் முக்கியப் பிரச்சினை கைடு லைன் மதிப்பும், மார்க்கெட் மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பணியைச் செய்ய இயலாது.

நிலத்தின் உரிமையாளர்கள் மார்க்கெட் மதிப்புக்கு வங்கி மூலம் பணம் பெற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென்பதுதான் பெரும் பிரச்சினையாக இருந்தது.

லீகல், வாரிசுகள், நிலத்தின் மீதான் லோன் போன்றவைகள், சர்வேக்கள், ஆவணங்களை எடுத்தல், பத்திரம் பதிவு என இன்னும் பலப்பல வேலைகள் இருந்தன. அடியேன் ரசீதுக்கள், அக்ரிமெண்டுகள், லீகல், சர்வே, ஆவணங்கள் கலெக்ட்ச் செய்வது, டிராஃப்ட், பத்திரம் பதிவு, பட்டா மாறுதல் ஆகிய வேலைகளுக்கு பொறுப்பேற்றேன்.

இதர வேலைகளை அதாவது நில  உரிமையாளர்களுடன் பேசுவது, விலை நிர்ணயம் ஆகியவைகளை இன்னொரு நண்பர் பார்த்துக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக வேலைகள் நடந்தன. ஒரே நேரத்தில் பத்து கிரையங்கள் செய்தேன். பத்து நபர்களுக்கான பணம், வரி பிடித்தம், வங்கி வரைவோலை, பத்திரப்பதிவுக்கான டிமாண்ட் டிராப்டுகள், பத்திரங்கள் என எல்லாவற்றையும் நானும், இன்னொருவரும் சேர்ந்து செய்தோம்.

ஆயிற்று இரண்டு வருடம். 50 ஏக்கர் கிரையம் செய்து முழுமையாக பட்டா மாறுதல் செய்து, நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். நாங்கள் வாங்கியது ஏக்கர் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய். இப்போது அந்த நிறுவனம், அந்த நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து, அனுமதி பெற்று, தற்போது ஒரு செண்ட் 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை விலை வைத்து விற்று வருகின்றார்கள். லாபம் கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய். இன்னும் எகிறும் காலம் ஏற ஏற. குறைந்த முதலீடு, ஆனால் வெகு நிச்சயமான வருமானம். எவராலும் வரக்கூடிய வருமானத்தைக் குறைக்க முடியாது. அது ஏறிக் கொண்டேதான் போகும்.

இதுதான் பிசினஸ். இது தான் நல்ல முதலீடு. இது தான் தொழில்.

ஒரு கம்பெனியை உருவாக்கி, முதல் போட்டு, பொருள் தயாரித்து விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கும். எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இதுவும் நல்ல தொழில் தான்.

இவ்வளவு லாபமா? அதுவும் குறைந்த காலத்துக்குள்? என்று இதைப் படிக்கும் போது பலருக்கும் நாமே இதைச் செய்தால் என்ன என்று உடனடியாகத் தோன்றும். அதைத்தான் ஒரு நண்பரின் நண்பர் செய்தார்.

வெளி நாட்டில் பெரிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்த நண்பரின் நண்பருக்கு கோவையில் நான்கைந்து இடங்களைக் கண்டறிந்து அதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி, முதலீடு, செலவு, லாபம் பற்றிய விபரங்களைத் தெளிவாக அனுப்பி வைத்திருந்தோம். நண்பரும் அவரின் நண்பரிடம் காட்டி, ஒப்புதல் பெற்றார். அதன் பிறகு இருவரிடம் இருந்தும் எந்தப் பதிலும் இல்லை. சரி என்று விட்டேன்.

அந்த நண்பர் இந்த பிராஜெக்டைப் படித்து விட்டு, தனக்குள் ஒரு கணக்கு போட்டு, புனேவில் சுமார் 200 கோடியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். தொழில் தெரிந்தவர்களிடம், அதில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்தவர்களிடம் பேசி இருக்க வேண்டும். அதை அவர் செய்யாமல் ஏதோ ஒரு கார்ப்பொரெட் கம்பெனியின் உதவியுடன் 200 கோடி இன்வெஸ்ட்மெண்ட் செய்தார். இப்போது 800 கோடி கடனில் சிக்கி தவிக்கிறார்.

வங்கியில் லோன் பெற்றும், 200 கோடி முதலீடும் போட்டு நான்கைந்து அபார்ட்மெண்ட் டவர்களைக் கட்டி, அதில் ஒரு வீடு கூட விற்க முடியாமல் ஆள் இப்போது மீளாக்கடனில் சிக்கினார். அந்த நிறுவனம் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு, அவர்களுக்கான கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு விலகி விட்டனர். அவர் போட்டது தப்புக்கணக்கு.

எவர் வேண்டுமானாலும் திட்டம் போடலாம். ஆனால் அந்தத் திட்டமிடல், நிதர்சனத்துடன் இணைந்திருக்க வேண்டும். சூழல், அமைப்பு, பொருளாதார தரவுகளுடன் ஒத்துப் போக வேண்டும் .

இன்றைக்கு ஒரு ஃபைனான்சியல் அட்வைசரின் பேச்சை கிட்டத்தட்ட 3500 பேர் கேட்டோம். அவர் இன்றைய நிலையில் ஷேர் மார்க்கெட்டில் உள்ள நிலையை எடுத்துச் சொன்னார். ஷேர் மார்க்கெட்டில் அது சரியாக இருக்கும். தினசரி டிரேடிங்க் லாபம் தரலாம். ஆனால் அது கத்தி மீது நடக்கும் செயல். என்றைக்கு வேண்டுமானாலும் வெட்டும்.

குறுகிய கால மூலதனம் மூலம் வருமானம் பெற பல வழிகள் இருந்தாலும், அது மழைக்கு உண்டாகும் ஈசல் போல. நிரந்தரமானது அல்ல. முதலீடு பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம். அதன் வருமானம் பல மடங்காய் இருந்தால் அதுவே நல்ல முதலீடு ஆகும். அந்த வகையில் ரியல் எஸ்டேட் முதலீடு, அதுவும் அவசியமானவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், நல்ல லாபம் தருவதாகும் இருக்கும்.

ரியல் எஸ்டேட் தொழில் திட்டமிடல் என்பது வெகு முக்கியம். முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவைகள் ஏராளம் உண்டு. ஒரு இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து, விற்பனை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான செயல்திட்டங்கள் வேண்டும். அதை நடத்திக் காட்டும் வல்லமை கொண்டிருக்க வேண்டும். நிதானமும், தெளிவான அறிவும், திட்டமிடலும் இந்தத் தொழிலுக்கு முக்கியமானவை.

இந்தியாவில் பெரும் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் தோற்றுப் போன சம்பவங்களை நாமெல்லாம் படித்து இருக்கிறோம். எழுத்து வடிவான செயல் திட்டமும், நடைமுறையும் வேறாக இருக்கும் பட்சத்தில் தோல்விதான் மிஞ்சும். நிறுவனங்கள் அதைத்தான் செய்தன. தோற்றுப் போனார்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொண்டிருப்பதால், வெற்றி அடைவது பற்றி தெளிவான திட்டமிடலை செய்யும் பல வருட அனுபவத்தினை பெற்றிருக்கிறேன்.

மிக மிக துல்லியமான திட்டமிடல், காலம், செலவுகள் பற்றிய அனுபவ அறிவின் காரணமாக குறைந்த முதலீடு, அதன் உறுதி செய்யப்பட்ட வருமானம், முதலீட்டாளர்களுக்கு இலவச வீட்டு மனையுடன், முதலீடும் திரும்ப கிடைத்தல் ஆகிய அற்புதமான முதலீட்டு திட்டங்களை உருவாக்கி இருக்கிறேன்.

நமது நிறுவனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பினை பிளாக்கில் வெளியிட உள்ளேன். இணைந்திருங்கள்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்து, நூறு சதவீத உத்திரவாத லாபம் பெறக்கூடிய அற்புதமான நிலங்கள் உள்ளன. வெகு துல்லியமான வகையில் செயல்திட்டங்களும், வருமானத்தின் விபரங்களும் தரப்படும். லாபத்தில் பங்கு அல்லது அதற்கான கட்டணம் என்ற இரு வகையில் செயல் திட்டங்கள் இருக்கின்றன. விரும்புவர்கள் என்னுடன் உரையாடலாம்.

அதுமட்டுமின்றி விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், காஃபி எஸ்டேட்டுகள், ஏலக்காய் தோட்டங்கள், தென்னைத் தோட்டங்கள் உள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். என்ன தேவை, என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று சொன்னால் அதற்கேற்ற பரிந்துரைகளைச் செய்வேன்.

ஒரு சிலர் நிலம் வேண்டுமென்பார்கள். என்ன திட்டம், என்ன பட்ஜெட் என்றுச் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு என்னால் ஒன்றும் பரிந்துரைக்க முடியாது

இந்த முதலீட்டில் ஏற்ற இறக்கம் இல்லை. லாபம் மட்டுமே. ஆனால் நீங்கள் சரியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது வீட்டில் இருப்பீர்கள். நேரமிருந்தால் எனது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். பேசலாம்.

பூமியில் போட்ட காசு என்றைக்கும் தங்கம் தான்.

கொஞ்சம் பணம் போதும், நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம். விரைவில் பேசுவோம் அதுபற்றி…!


Friday, April 10, 2020

தென்னைமரமும், நானும்


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளே. சுவாரசியங்களும், ஆச்சரியங்களும், கோபங்களும், தாபங்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. காரணம் என்னவென்று பார்த்தால் அத்தனையும் மனிதர்களின் அறிவிலித்தனத்தால் என்பது தெரியவரும். மனிதர்களால் தான் பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே சிக்கலுக்குள் உள்ளாகிறது.

கொரானா தொற்று பரவி பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் அடங்கி இருப்பதாகத் தெரியவில்லை. அவரவருக்கு ஒவ்வொரு காரணங்கள். விளைவு நோய் பரவல். தானும் கெட்டு, பிறரையும் கெட வைப்பது தான் வாழ்க்கை என நினைக்கும் மக்கள் இருக்கையில் எத்தனை சொன்னாலும் கேட்கப்போவதில்லை.

வெளியில் செல்லாதீர்கள், கொரானா ஒட்டிக் கொள்கிறது என்று அரசாங்கம் என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஹாஸ்பிட்டலில் வசதி இல்லை, மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை, செவிலியர்களும் இல்லை. மிகப் பெரிய அவலத்தினை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதற்காக மாநில அரசுகள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது போதாது என்று மத்திய அரசு கைதட்டு, விளக்குப் பிடி என பிரச்சினையை மேலும் மேலும் பூதாகரமாக்குகின்றார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரக்கூடிய வரியை எல்லாம் வைத்துக் கொண்டு மத்திய அரசு போடும் ஆட்டம் சொல்லும்படி இல்லை,

கொரானா பரவிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாய் கிடக்கிறது. கோடீஸ்வரர்களெல்லாம் பிச்சைக்காரனாகின்றார்கள். பிச்சைக்காரர்கள் எல்லாம் பசியால் சாகப் போகின்றார்கள். மிடில் கிளாஸ் மக்களோ மன அழுத்தத்தின்  பிடியில் சிக்கி தினமும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நோயின் பயங்கரம் வேறு. மத்திய அரசின் கையாலாகாத தனம் வேறு. இவற்றுக்கிடையில் சிக்கி இந்தியர்கள் சின்னாபின்னப்படுகிறார்கள்.

இது போதாது என்று மதப்பிரச்சாரம் வேறு. அவனால் தான் பரவியது. இவனால் தான் பரவியது என்ற குற்றச்சாட்டு வேறு.

வெளிநாட்டில் இருந்து தான் கொரானா இந்தியாவிற்குள் இறக்குமதி ஆனது அல்லவா? வானூர்திகளில் வந்த டிப்ளோமேட்ஸ்களின் வாரிசுகள், பணக்காரர்களின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் வந்து சேரும் வரை அமைதியாக இருந்து விட்டு, பின்னர் இண்டர்நேஷனல் பிளைட்டுகளுக்கு தடை போடுகின்றார்கள். இந்தியர்கள் கொரானாவால் பாதிக்கப்பட  முழுக்காரணமே ஆளும் மத்திய பாஜக அரசு என்கிறார்கள் பலரும். ஒவ்வொரு இண்டர்னேஷனல் பிளைட்கள் இறங்கும் இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி இருந்தால் இத்தனை கஷ்டம் மக்களுக்கு வந்திருக்குமா? இந்த உத்தரவு போடுவது மத்திய அரசு அல்லவா? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இல்லையென்று சொல்லவோ மறுக்கவோ காரணங்கள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் கையைத் தட்டு, விளக்குப் பிடி என வேண்டுகோள் விடுத்து, மக்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு என்கிறார்கள் பல அரசியல் பார்வையாளர்கள்.

பண மதிப்பிழப்பில் ஆரம்பித்து இது வரையிலும் மத்திய அரசு செய்து வரும் செயல்கள் எதுவும் இந்திய மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

பாகிஸ்தானை விட்டு விட்டு, இப்போது முஸ்லிம் மக்களிடம் சென்றிருக்கின்றார்கள் பாஜகவினர் என இன, மொழி பேதம் பார்க்காத நடு நிலையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் மத்திய அரசோ, இன்னும் எத்தனை நாள் ஊரடங்கு என்று சொல்வதற்கு, டிவிக்களில் போட்டியில் வென்றவரை அறிவிக்கும் கவுண்டவுன் போல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ என பீதியில் கிடக்க, பிரதமரோ பத்திரிக்கையுடன் பேசுவதை தவிர்த்து வருகிறார். அவர் தன் மீதான இந்தியர்களின் அவ நம்பிக்கையை, நேரிடையாக மக்களுடன் பேசுவதைத் தவிர்த்து, பத்திரிக்கைகள் வாயிலாகப் பேச வேண்டும். இல்லையெனில், அவர் மீதான, வெறுப்பி பிம்பம் வளர்ந்து கொண்டே தான் போகும் என்கிறார்கள் அரசின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.

இந்தக் கொடுமை இன்னும் நான்காண்டுகள் தொடரும் என்பது இந்தியர்களின் மாபெரும் அவலம் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். இது தேவையற்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் என பாஜகவினர் சிந்திக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்.

தர்மம் கொன்றாருக்கு தர்மமே கூற்றாகும். அதற்கான விலையை மக்களும் கொடுத்தே ஆக வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்காமல், மதம், மொழி, இனம், ஜாதி, சொந்தக்காரர்கள் என வகைப்படுத்தி தேர்ந்தெடுத்தார்கள் அல்லவா? போதாதற்கு ஓட்டுக்குக் காசு வேறு. கடமையில் இருந்து தவறியவர்கள் மக்கள். ஆகவே எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அனுபவிக்கிறோம் என்பதைத் தவிர, கொரானா பரவுவதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

இன்னும் மக்கள் மாறவில்லை என்பதை நொடிக்கொரு தரம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். திருந்தாத ஜென்மங்கள் என்றைக்கும் திருந்தப் போவதில்லை.

மதமோ, மொழியோ, கட்சியோ, இனமோ எதுவும் மக்களுக்கு நன்மை செய்வதில்லை என்பதை இனிமேலாவது எனது பிளாக்கைப் படித்து வரும் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

அவ்வாறானவர்களிடமிருந்து உடனடியாக விலகி விடுங்கள். அவர்கள் கூட இருந்தே தானும் செத்து, தனக்காகப் பிறரையும் சாகடிப்பார்கள்.

இனி தென்னை மரத்துக்கு வந்து விடுவோம்.


தென்னை என்பது உண்மையில் கடவுள் தன்மை வாய்ந்தது. இறைத்தன்மை என்பது அன்பு என்று அர்த்தம் கொள்க. சமீபத்தில் மிகவும் ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அதற்கு நானே சாட்சி. ஆக இருந்த காரணத்தால் இப்பதிவு.

வீட்டினைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொண்டிருந்தோம். வீட்டின் பின்னால் இரண்டு தென்னை மரங்களும், வீட்டின் முன்னால் இரண்டு தென்னை மரங்களும் வாசலில் பெரிய வேப்பமரமும் உள்ளது. வேப்பமரத்தில் மயில்கள், கிளிகள், சிட்டுக்குருவிகள், காக்கைகள், இன்னும் பெயர் தெரியாத பல வித பறவைகள் இருக்கும். 

தென்னைமரத்தில் மயில்கள் தங்கி இருக்கும். சுவருக்கு இடைஞ்சலாக இருப்பது போல ஒரு தென்னை மரம் இருந்ததால், வெட்டி விடலாமா என, அந்த மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அப்படி ஆகவில்லை. சுவர் கட்டி முடித்து விட்டோம்.

பிரச்சினை என்னவென்றால் அந்த தென்னை மரம் சுத்தமாக காய்க்கவில்லை. ஒரு குரும்பை கூட விடவில்லை. தென்னம்பாளைகள் வருகின்றன. ஆனால் காய்கள் இல்லாமல் பூக்களாக கொட்டின. மனைவி இதைக் கவனித்து என்னிடம் சொன்னாள். எனக்கோ ஆச்சரியம். என்ன காரணம் என பார்த்தால் ஒன்றுமில்லை. மரம் நன்றாகத்தான் இருக்கிறது. இது என்னடா சோதனை என நினைத்துக் கொண்டிருந்த போது, மனைவி சுவர் கட்டும் போது பேசிக் கொண்டிருந்த விஷயத்தை நினைவுபடுத்தினார்.

ஒருவேளை அது காரணமாக இருக்குமோ என எனக்குள் ஒரு சிந்தனையோட்டம். தென்னை மரத்திடம் பேசினேன். உன்னை வெட்டுவதாக இல்லை. கோபித்துக் கொள்ளாதே என நான்கைந்து நாட்களாக அதனுடன் பேசினேன். மனைவியும் அதனிடம் சென்று தடவிக் கொடுத்து, உன்னை எந்தக் காலத்திலும் வெட்ட மாட்டோம் என சொல்லி வருவாள்.

ஆச்சரியம், அடுத்து வெடித்த தென்னம்பாளையில் காய்கள் கொத்துக் கொத்தாய் பிடித்தன. மரம் கொள்ளாமல் காய்த்து தள்ளுகிறது இப்போது. இளநீரோ முன்பிருந்ததை விட சுவையாக இருக்கிறது.

அன்றிலிருந்து மரம், செடி கொடிகளைப் பார்க்கும் போது அதுவும் ஒரு உயிர் எனத் தோன்றுகிறது.

இதைத்தான் வள்ளலார் பெருமான், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுச் சொன்னாரோ?

அவருக்கு பயிரும் உயிர் தான் என்று தெரிந்ததோ?

அன்பு நண்பர்களே, அன்பு கொள்ளுங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மீது. அதன் ஒவ்வொரு படைப்பின் மீதும். நம் அன்பு பெருக பெருக, பிரபஞ்சம் நம் மீது அன்பு கொள்ளும். அன்புக்கு இடைஞ்சலாக இருப்பது பற்று.

திருமூலர், எழுதிய திருமந்திரத்தில் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்.

ஆசை அறுமின்கள்,
ஆசை அறுமின்கள்,
ஆசை அறுமின்கள்,
ஈசனோ டாயினும்
ஆசை அறுமின்கள்.

பற்றாயிருப்பது அன்பு காட்டுவதை தடுக்கும் பெரும் தடை. பற்று அறுப்பது மட்டுமே பிற உயிர்கள் மீது அன்பு கொள்ள வைக்கும்.

பற்றே எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஆரம்ப விதை. தான், தனது என்ற பற்றை அறுப்போம்.

அன்பை விதைப்போம்…  

Tuesday, April 7, 2020

கொரானாவைக் கொல்லுமா சித்தரத்தை?

அந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் சித்தரத்தை வேர் ஒரு துண்டை வாங்கி வாயில் அடக்கிக் கொள்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது அம்மா, எனக்கு மாசிக்காய் என்ற ஒரு உருண்டையான வஸ்துக்கள் நான்கைந்து வாங்கித் தருவார்கள். பஸ்ஸில் ஏற்றி விடும் போது வாய்க்குள் ஒரு வஸ்துவை அடக்கிக் கொள்வேன்.

ஹாஸ்டல் சென்று சேரும் போது முற்றிலுமாக எச்சிலில் ஊறி, வயிற்றுக்குள் சென்று சேரும். வயிற்றுப் புண், வாய்ப்புண் எல்லாம் போயே போய் விடும்.

தாத்தா சித்தரத்தை வேர் வாங்கித் தருவார். வாய்க்குள் வைத்திருந்து துப்பி விடுவேன்.

கொரானா நுரையீரலைத் தாக்கி, மூச்சு விட சிரமப்படுத்தி மரணிக்க வைத்து விடுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதோ சித்தரத்தையின் மகத்துவம் என்னவென்று நெட்டில் வந்துள்ளதை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள். சித்தரத்தைப் பொடி எனக்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.



சித்தரத்தை (Alpinia officinarum) வேர் கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்துமா, சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு அரு மருந்து. இது கொரானாவை சரி செய்யுமா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் சளிக்கும், நுரையீரலுக்கும் அது நல்லது செய்கிறது. 

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில், ஒன்றுதான் சித்தரத்தை.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு. ( நன்றி - உயிர் ஆன்லைன் இணையதளம்)

இதுபற்றிய மேலதிக விபரங்களை ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் வியாபார நோக்கமின்றி ஆராய்ந்து சொன்னால் மக்களுக்கு நன்மை பயக்கும்.

புற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி?

வெற்றியடைய சூட்சுமம் என்னவென்ற ரகசியத்தின் ஒரு துளியை எழுதி இருந்தேன். வெற்றி என்பது வாழ்க்கையின் முறையில் உள்ளது. அது பொருளாக இல்லை, உறவுகளாக இல்லை. வெற்றி மனத்தின் தன்மையில் இருக்கிறது.

புற்றீசலாய் மனதுக்குள்ளிருந்து வந்து கொண்டே இருக்கும் எண்ணங்களை வேடிக்கை பார்க்க வேண்டுமென எழுதி இருந்தேன். 

இது பற்றிய எனது ஓஷோ சொல்லியதை இங்கு பதிவிடுகிறேன். படித்துப் புரிந்து கொள்ளுங்கள். நன்றி ஓஷோ...


எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவது எப்படி?

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

--ஓஷோ--


குறிப்பொன்று நினைவுக்காக:

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவினைப் படிக்கும் போது பாரதியாரையும், ஓஷோவையும் ஒப்பிட்டு எழுதி இருந்தார்கள். பாரதியார் ஜாதி மதம் இல்லையென்று பாடியவர் என்கிறார். பாரதியாரின் கவிதை புத்தகத்தை படித்த போது அவர் எந்தளவுக்கு ஜாதிப் பிடிப்பில் சிக்கி இருந்து வெளி வந்தார் என்று அறிய நேர்ந்தது.

யாரோ ஒரு மஹானுபாவன் ஓஷோவை மிகக்கடுமையாக தாக்கி எழுதி இருந்தார். தனக்கென கூட்டம் கூட்டினார் என்றும், கடைசி வரை பணக்காரராகவே வாழ்ந்தான் என்றும் சாடி இருந்தார். பாரதி ஏழையாகவே இருந்தார், ஏழையாகவே வாழ்ந்தார் என்று பச்சாதாபம் காட்டி எழுதி அவருக்காக அந்த பிரகஸ்பதி புலம்பி இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் தேவை என இயற்கை மனிதர்களை வெளிப்படுத்தும். அந்த வகையில் உலகையே பீடித்திருக்கும் மன நோயான மதத்தையும், அதன் கட்டமைப்பையும், அதன் ஆச்சார அனுஷ்டாங்களையும் தோலுறித்து தொங்கவிட்டவர் ஓஷோ. தாலியம் என்ற விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட இந்த மாபெரும் மனித மிருகங்கள் உலாவும் கூட்டத்திடம் உண்மை மட்டுமே பேசியவர். இந்த கொலைக்கு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காரணமாய் இருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்ற கவிதைக்காக போற்றப்பட்ட பாரதியை விட, ஓஷோ எவருடன் ஒப்பிடவே முடியாத மனிதர். பாரதி ஓஷோவின் ஒரு கருத்துக்குச் சமமானவர்.

ஒப்பீடுகள் பற்றிப் பேசுபவர்களின் அறிவு என்னவென்று காட்டி விடுகிறது.




Sunday, April 5, 2020

வெற்றியடைய சூட்சும ரகசியம்


வெற்றி என்பதன் விளக்கம் ’பணக்காரனாக இருப்பது’ என்று நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பணக்காரர்களின் நிலை இன்றைக்கு என்னவென்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்னும் மூன்று மாதங்கள் கொரானாவால் வீட்டில் முடங்கினால் ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரனாகி விடுவான். கீழ்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஏற்கனவே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெற்றி என்பது மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறோமா என்பதைத் தான் என்னைப் பொறுத்தவரை வெற்றி எனக் கருதுவேன். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல்கள் விதவிதமானவை. சூழலுக்கு ஏற்ற பழக்க வழக்கங்கள், உணவுகள், மொழிகள், உடைகள் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழலியல்வாதிகள்.

அமெரிக்கனைப் போல, இங்கிலாந்துக்காரனைப் போல, ஜப்பானியனைப் போலவெல்லாம் தமிழ்நாட்டில் வாழ முடியாது. பூமியின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப உருவான சூழ்நிலை, உருவாக்கி இருக்கும் சமூகக் கட்டமைப்புகளில் நம் வாழ்க்கையும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதினை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.

இங்கோ, பசிக்காக படிப்பு, வேலை என ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையின் போக்கு படு கேவலமானதாக இருக்கிறது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்தால் காசு கிடைக்கும். அந்தப் பணத்தினால் சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் வாழ்க்கை? இன்பம்? குழந்தையாக இருக்கும் போதே, படி படி படி. படித்து முடித்ததும் பணி, பணி, பணி. பணி கிடைத்ததும் வேலை, வேலை, வேலை. கிடைக்கும் பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஜக்கி, ரவிசங்கர், நித்தி ஆகிய அட்டைகளிடம் கொண்டு போய் கொட்டி விட்டு, தேடிக்கொண்டிருப்போம் மன நிம்மதியை, வாழ்க்கையை. எல்லாம் கை விட்டுப் போயிருக்கும். வயதும் போயிருக்கும். நல்ல சாப்பாட்டினைக் கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உயிர் போய் விடும் என்பார்கள் மருத்துவர்கள்.

காசு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு மனிதனும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதல்ல. மனம் எனும் அரக்கனிடமிருந்து விலகி, உண்மையை உணர்ந்து கொள்வது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியம்.

இருக்கும் சூழலில் வெற்றியாக வாழ்க்கையை எளிதாக வாழ ஒரு சூத்திரம் ஒன்று உள்ளது.

அடியேனுக்கு சிறிய வயதில் இருந்து சாமியார்கள், வயதானவர்களுடன் தான் நட்பு. என் வயது நட்புக்காரர்கள் எனக்கு இல்லை. என்னை விட அனுபவசாலிகளுடன் பேசுவதையும், நட்புக் கொள்வதையும் விரும்புவன். அந்த வகையில் எல்லா மதங்களிலும், யோக, ஆன்மீக தொடர்பான விஷயங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.

தியானம், யோகம், யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் எனக்கான தேடலை, நான் தேடிய வழியைக் காட்டக்கூட இல்லை. முதலில் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணை மூடினால் அதுபாட்டுக்கு எங்கெங்கோ அலைகிறது.

சுழித்தோடும் ஆற்றை நினைக்கிறது. பெருகி வழிந்தோடும் அருவியைப் பார்க்கிறது. அமெரிக்காவின் நயாகராவிற்குச் செல்கிறது. உருளைக் கிழங்கு மசாலாவுக்குச் செல்கிறது. ஆலப்புழா செல்கிறது. நயன்தாராவை நினைக்கிறது. ரூடோஸ் நாய்க்குட்டி சாப்பிட்டாச்சா என நினைக்கிறது. நிமிட நேரத்தில் லட்சக்கணக்கான மைல்கள் செல்கின்றது. எண்ணங்கள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே இருக்கின்றன. எப்படிக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சூட்சுமத்தில் மனதை நிலைக்க வைத்து தியானிப்பது?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் மனது அலைந்து கொண்டிருந்தது வானத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலையும் மேகங்கள் போல.

மனதை அடக்க வேண்டும். இல்லையெனில் மனது எனும் குப்பைத் தொட்டிக்குள் அடங்கிப் போகனும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை தான் நம் ஒவ்வொருவருக்கும். எனக்கும் அப்படித்தா இருந்தது.

தேடிக் கொண்டிருந்தேன் எளிய வழியை. அது கிடைத்தே விட்டது.

ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

2008ல் இருந்து பிளாக் எழுதுகிறேன். அன்றையிலிருந்து இப்போது வரையிலும் எழுதியிருக்கும் எழுத்துக்கள் சொல்லும் நானெப்படி மாறி இருக்கிறேன் என்று. அவ்வப்போது படித்துப் பார்ப்பேன். வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் அவைகள் நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதை எனப் புரிந்து கொள்வேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இந்த வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறவே இல்லை என்பதுதான்.

நான் கண்டடைந்த ‘அந்த எளிய’ வழியின் ஒரு பயிற்சியை நான் பழகத் துவங்கினேன். அது நான் தேடிய பாதைக்குத் தள்ளிக் கொண்டு சென்றது.

ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.

வெள்ளையும் பழுப்பும் நிறைந்திருக்கும் அமைதியான வீட்டு அறை ஒன்றில் அமைதியான, ஆனந்தமருளும் மவுனத்தின் பிடியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவதை தவமாகச் செய்வார்கள்.

அதுதான் ஆரம்பத்துவக்கம்.

மவுனம், அமைதி, புன் சிரிப்பு முதலில் இதை பழகிக் கொள்ளுங்கள்.

என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.

தொடர்ந்து படியுங்கள்.

ஜப்பானின் புகழ் பெற்ற ஜென் தத்துவங்களைப் படித்திருப்பீர்கள். ஜென் என்பதைப் பற்றிய புரிதல்கள் பலப்பல. ஜென் தத்துவங்களின் ஒரே நிலை தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது சூனியத்தில் தன்னைக் கரைப்பது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவுடனும் தன்னையும் இணைத்துக் கொள்வது. அவ்வாறு இணைத்துக் கொண்டவர்கள் தொட்டால் நோய் நீங்கும். பழுதானவற்றை நீக்கிப் பழையபடி உருவாக்குவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஒவ்வொரு அணுவும் இயங்கும். அவ்வாறானவர்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கிறோம்.

சரி, எங்கெங்கோ சென்று விட்டேன்.

ஒரு சிறிய பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். எல்லாமும் தெளிவாகி விடும்.

முன்பே பலரும் சொல்லி இருப்பதுதான் இது.

படிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதாக நினையுங்கள். சாப்பிடும் போது சாப்பிடுவதாக நினையுங்கள். எந்த வேலை செய்தாலும் வேலை செய்கிறேன் என நினையுங்கள்.

மனதினை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு மனதை வெளியில் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே வேடிக்கைப் பாருங்கள். புரிகிறதா? நீங்கள் செய்வதை நீங்கள் வேடிக்கைப் பாருங்கள்.

ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும். போகப்போக பழகி விடும். பின்னர் இரண்டு மனதும் ஒன்றாகும் போது நடக்கும் மாயா ஜாலத்தை அப்போது உணர்வீர்கள்.

அந்த மனதும் இல்லாது போக வேண்டுமெனில் அதற்கும் ஒரு பயிற்சி இருக்கு. அது இப்போது வேண்டாம். ஏனென்றால் நாமெல்லாம் லெளகீக வாழ்க்கையில் இருக்கிறோம். அது நமக்குச் சரிப்பட்டு வராது.

இதை வெற்றியின் முதல்படி என அடித்துச் சொல்கிறேன்.

நிதானம், நேர்மை, ஒழுக்கம், அமைதி, பேரமைதியுள்ளம் ஆகியவை உங்களுக்கு வெற்றிக் கனியை பறித்து தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

உங்களுக்கும் தானே…..

நம்பிக்கையே வாழ்க்கை….!


Saturday, April 4, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)


மறுநாள் நீதிபதி சங்கர் கோர்ட்டுக்கு வந்து அமர்ந்தார். ஏகப்பட்ட வக்கீல்கள் முகக் கவசத்துடன் அக்மார்க் குரங்கு போலவே உட்கார்ந்திருந்தார்கள். என்னே ஒரு காட்சி? மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும். எல்லோரும் குரங்குகள் போலவே இருக்கின்றார்கள். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வக்கீல் அமித் இருக்கானா என்று பார்த்தார். ஆளைக் காணவில்லை. எங்கே போனானா அந்தக் கருமாந்திரம் புடிச்சவன், என்னை மாற்றப்போகிறானாமே, பார்ப்போம் இவன் என்ன கிழிக்கிறான்னு என மனதுக்குள் கருவிக் கொண்டார். ஒரு நீதிபதியையே மிரட்டுகிறானே அவன். அவனுக்கு ஒரு கொரானா பார்சல் செய்து விட வேண்டியதுதான்.

ஏதாவது எக்குத்தப்பாக இனி பேசினான் என்றால், கோர்ட்டை அவமதித்தான் எனச் சொல்லி கொரானா வார்டில் சுத்தம் செய்யப் போட்டு விடுகிறேன். அப்போதான் அவன் அடங்குவான் என மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

அன்றைக்குப் பார்த்து அமித்துக்கு காலையில் தும்மல் வந்து விட்டது. விடாமல் தும்மலாக போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோர்ட்டுக்கு வந்து, ஏற்கனவே நீதிபதியையே மிரட்டி இருப்பதால், அந்த ஆளு கொரானா டெஸ்ட் செய்த அறிக்கை வந்த பிறகு, கோர்ட்டுக்கு வா எனச் சொல்லி விட்டால், எந்த ஊரு ஆஸ்பத்திரியோ, எந்த வார்டோ? அதுவும் இது தமிழ்நாடு. இவனுக கையில் மாட்டினால் வச்சு செஞ்சுருவான்களே என்ற பயத்தில் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்.

இங்கே கோர்ட்டில் ஒரு புதிய வக்கீல் எட்டப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

மனுவைப் படித்த நீதிபதி சங்கருக்கு தலையே சுற்றியது. என்ன எழவு மனுடா இது? என்று கோபத்தில் கொந்தளித்து வக்கீல் எட்டப்பனைப் பார்த்தார். வக்கீல் எட்டப்பன் கோர்ட்டில் நிற்கவில்லை. குனிந்தபடியே கை இரண்டையும் கூப்பியபடி வைத்துக் கொண்டு, டைனோசார் தலையை நீட்டுவது போல நீட்டியபடி நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

”எட்டப்பன், நிமிர்ந்து நில்லுங்கள்” என்றார்.

”என்னால் முடியாது கனம் நீதிபதி அவர்களே, என் உடல் வாகுவே அதுதான். அது மட்டும் காரணம் அல்ல. நான் பிறரின் காலை வாரி விடுவதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தவன். ஆகவே குனிந்து கொண்டிருந்தால் தான் காலை வாரி விட முடியும். நான் பிறந்ததில் இருந்தே இப்படி இருப்பதால், என் உடல் வளைந்து போய் விட்டது. ஆகவே என்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது ஆனர் அவர்களே…”

“ஓ… உங்கள் வழக்கமே அதுதானா? கொரானா வழக்கில் உங்களையும் இணைத்துக் கொள்ள மனுக் கொடுத்திருக்கின்றீர்களே? வழக்குப் போடச் சொன்னவர்கள் பெயர் தவறாக இருக்கிறதே, புரியும்படிச் சொல்கின்றீர்களா?”

கோர்ட்டில் டைப் செய்யும் பெண்மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“கனம் நீதிபதி அவர்களே, எனது கிளையண்டுகள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் பெயர் கள்ளக்காதலர் சங்கம். முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது” என்றார் எட்டப்பன் வக்கீல்.

எல்லோரும் எட்டப்பனைப் பார்த்தனர். டிவி கேமராக்கள் அனைத்தும் எட்டப்பனை ஜூம் செய்தன. டிவி பார்த்துக் கொண்டிருந்த மக்களில் 90 சதவீதம் பேர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர்.

(** இங்கு ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தீர்களா வாசகர்களே. நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் சங்கத்தின் ரகசிய உறுப்பினர்கள். அவர்களின் வக்கீல் எட்டப்பனோ நிமிர்ந்து நிற்க முடியாதவர். கோவை தங்கவேல் தர்மம் தர்மம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார் அல்லவா? அவர் இந்த நாவலின் இந்த டிவிஸ்டை உற்று நோக்க வேண்டும். தர்மம் இல்லாத வக்கீல் கூனிப்போய் இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே அடியேனும் தர்மத்தைதான் இங்கு போதிக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இராமாயணத்தில் ஒரு கூனி, இந்த நாவலில் ஒரு எட்டப்பன். சரியா மிஸ்டர் கோவை தங்கவேல் அவர்களே. **)

சரி இனி வழக்குக்கு வந்து விடுவோம்.

நீதிபதி சங்கருக்கு ஏண்டா, இந்த வழக்கை விசாரணை செய்ய எடுத்தோம் எனத் தோன்றியது. ஆனாலும் கட்டழகு டைப்பிஸ்ட் கவிதாவைப் பார்த்தார். கவிதாவின் கண்கள் சங்கரைப் பார்க்க, சங்கரின் கண்ணுக்குள் மின்னல் அடித்தது. விசாரியுங்கள் என்று கண்ணாலே அம்பு விட, அந்த அம்பு நீதிபதி சங்கரின்  விழிகளுக்குப் பாய்ந்து நின்றது.

“கனம் நீதிபதி அவர்களே, இந்தக் கொரானா மனித உரிமைகளை மீறுகின்றது. மனிதர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமை தாம் விரும்புவதைச் செய்வது. எனது கிளையண்டுகள், அவரவர் கள்ளக்காதலிகளையும், காதலர்களையும் சந்திக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளி வர இயலாமல், தங்கள் கள்ளகாதலை வளர்க்க முடியாமல், எங்கே தங்கள் காதலின் புனிதச்செடி பட்டுப்போகுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கொரானாஒ எல்லோரையும் வீட்டுக்குள் இருக்க வைத்து விட்டது. இதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகி உள்ளது தெரியுமா உங்களுக்கு?”

நீதிபதி சங்கருக்கு கூன் வக்கீல் எட்டப்பனின் வாதம் சுவாரசியமாக இருந்ததால் அவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார். டைப்பிஸ்ட் கவிதாவை ஒரு கண்ணால் லுக் விட்டு விட்டு, எட்டப்பனை நோக்கினார்.

எதேச்சையாக டிவியைப் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு இந்த வழக்கின் லைவ் கன்னில் பட, டிவியில் அர்னாப் கோஸ்வாமி இந்தியாவே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று லைவ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கேமரா நீதிபதி சங்கரைக் காட்டியது. அவரைப் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவுக்கு பிடித்து விட்டது. நீதிபதி செல்வம் விரும்பிய பூஜா ஹெக்டேவுக்கே நீதிபதியைப் பிடித்துப் போன விஷயம் தெரியாமல், கோர்ட்டில் கூனன் வக்கீல் எட்டப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

(வாசகர்களே, உங்களின் பார்வை பூஜாவின் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்)

இடைவேளைக்குப் பிறகு தொடரும்....