குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நீர் நிலை நிலங்கள். Show all posts
Showing posts with label நீர் நிலை நிலங்கள். Show all posts

Tuesday, July 28, 2020

நிலம் (70) - அதிர வைக்கும் நீர் நிலை நிலமோசடிகள்

தமிழர்களின் சினிமாக் கனவுக் கன்னி, எனது நெருங்கிய தோழி, சென்னையில் ஓர் இடத்தில் சொகுசு பங்களா வாங்கி உள்ளார். அவர் அந்த பங்களாவை விற்பனை செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் கோஸ்டல் ஏரியா அருகில் உள்ள நிலம் என்று தெரிய வந்தது. அதற்கு என்.ஓ.சி இதுவரை பெறப்படவில்லை. இது பற்றிய வழக்கு கோர்ட்டில் உள்ளது. கோர்ட் என்ன சொல்லும் என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதே போலத்தான் தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் மனை வரன்முறைத் திட்டம். சட்டத்தினை மீறினால் அபராதம் கட்டு. கட்டினால் சரி செய்யப்படும். எவராவது ஒருவர் வழக்குத் தொடுத்தால், அத்தனை பணமும் ஹோகயா? கோவை கணபதியில் அப்படி ஒரு நிகழ்வு நடந்து அப்பணம் இன்னும் தூங்கிக் கிடக்கிறது.

தன் கடுமையான உழைப்பினால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட அந்தச் சொத்தை, தன் தேவைக்கு விற்பனை செய்ய முடியாமல் சிக்கி விட்டார். என்னைப் போல ஒரு லீகல் கன்சல்டண்ட் இடம் ஒரு ஒப்பீனியன் பெற்று இருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது அல்லவா? பணம் சிக்கி விட்டது.

அடுத்து கொச்சினைச் சேர்ந்த மாபெரும் கட்டுமான நிறுவனத்தின் அபார்ட்மெண்டை சுப்ரீம் கோர்ட் இடிக்கச் சொன்னது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

2000ஆம் ஆண்டு வாக்கில் கொச்சினைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கோஸ்டல் ரெகுலேசன் சட்ட விதிகளைப் பின்பற்றாமல், உள்ளூர் ஆட்களின் உதவியால் 375 அபார்ட்மெண்ட்களை கட்டி விற்பனை செய்து முடித்து விட்டது. 2007ம் ஆண்டு வாக்கில் கோஸ்டல் ரெகுலேசன் சட்ட விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடம் எனச் சொல்லி வழக்குப் போடப்பட்டு, அது சுப்ரீம் கோர்ட் வரை சென்று அனைத்து வீடுகளையும் இடித்தே ஆக வேண்டுமென உத்தரவிடப்பட்டு இடிக்கப்பட்டது. பல சினிமா பிரபலங்களும், பல கோடீஸ்வரர்களும் அபார்ட்மெண்ட் வாங்கி இருந்தனர். இவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர். இருப்பினும் பிளாட்டுகள் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டன.


செய்தி ஆதாரம்:


இதே போல, சென்னையில் ஒரு ஏரியை தூர்த்து, வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். யானை ராஜேந்திரன் போல ஒரு வக்கீல் அதை தூசு தட்டி எடுத்தால் பல மக்கள் வீடுகளை இழப்பது உறுதி. அது எந்த இடம் என்று எனக்குத் தெரியும். என்னை அணுகும் நபர்களுக்கு விபரம் சொல்லலாம். பொது வெளியில் எழுதினால், தேனிக் கூட்டைக் கலைத்த மாதிரி ஆகி விடும்.




கோஸ்டல் ரெகுலேசன் படி, கேரளாவில் ஆழப்புழா அருகில் இருக்கும் இடத்தின் மேப் மேலே இருக்கிறது. பார்த்து வையுங்கள். இது பற்றி அனுபவம் இருப்பவர்களுக்கு ஆலப்புழா வீடுகள், ஹோட்டல்கள் பற்றிய வில்லங்கங்கள் தெரியும்.

விரைவில் ஆலப்புலாவில் வில்லங்க விவகாரங்கள் அற்ற பண்ணை சொகுசு வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்படும். அங்கு இடம் வாங்க நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்து சச்சின் டெண்டுல்கர், நயன் தாரா, ரம்யா கிருஷ்ணன் வகையறாக்கள் இதே போன்ற ஒரு கோஸ்டல் ஏரியா நிலத்தினை வாங்கி ஏமாந்து போய் இருக்கிறார்கள் என்ற செய்தியை விகடன் இணையதளத்தில் படித்தேன்.

பாடுபட்டு சேர்த்த சொத்தினை இப்படியா இழப்பது?

இதோ அந்தச் செய்தியின் இணைப்பு கீழே. படித்து விட்டு நீங்களும் அதிர்ந்து போங்கள். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனமாய் இருப்பது தவறில்லை. அதற்காக கொஞ்சம் செலவு செய்தால் அதுவும் தவறில்லை அல்லவா?

நிம்மதி முக்கியம்... !

ஹைதராபாத் அதிர வைக்கும் நீர் நிலை நில மோசடி பற்றிய விகடன் செய்தி இணைப்பு கீழே..