குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கோவை எம் தங்கவேல். Show all posts
Showing posts with label கோவை எம் தங்கவேல். Show all posts

Thursday, January 5, 2012

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”.  நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, January 4, 2012

சிறுநீரக கல் சரி செய்வது எப்படி?

மனிதனின் மனம் நல்ல விஷயத்தைக் கிரகிப்பதை விட தீய விஷயத்தை உடனடியாக கிரகித்துக் கொள்ளும். உண்மையைப் புரிய வைப்பதை விட தீமையை எளிதில் புரிந்து கொள்ளும்.   நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே மனதில் எளிதில் பதிந்து விடும்.

எவ்வளவோ கடவுள் இருக்கின்றன. எவ்வளவோ நீதி போதனைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? மனிதர்களிடம் இருக்கும் எல்லா தீய குணங்களும் தினம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

கடவுளின் பிரதேசம் என்றழைக்கக் கூடிய கேரளா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது பாருங்கள். இவ்வளவிற்கு இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகமிருக்கின்றார்கள் இங்கே. படித்தவர்கள் தான் அதிகம் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். அணுகுண்டைத் தயாரித்தவர் கூட பெரிய படிப்பாளிதானேன்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எய்ட்ஸுக்கு மருந்து டெஸ்ட் நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது ஒரு நல்ல செய்தி தான் என்றாலும், இந்த எயிட்ஸ் பயத்தில் பல பெண்கள் பாதிப்படையாமல் இருந்தார்கள். இனி மருந்து வந்து விட்டால் பெண்களின் பாடு என்னாகுமோ தெரியவில்லை. அதுவும் தமிழ் நாட்டில் குடிகாரர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் தமிழ் மருத்துவத்தில் எயிட்ஸுக்கு மருந்திருக்கிறது என்கிறார்கள் பலர். ஏன் யாரும் அதைத் தயாரிக்க முயலவில்லை என்பது புரியவில்லை.

பின்குறிப்பு :

சிறு நீரகக் கல் வந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிய பதிவு ஒன்றினைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

இணைப்பு மற்றும் நன்றி  : http://kathirkamamblogspotcom.blogspot.com/2010/12/10.html

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்

Tuesday, January 3, 2012

தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குனர்

கோர்ட்டுகள் குடும்பங்களின் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான ஒன்று. நீதிபதிகள் எவரும் கடவுள் அல்ல. மிக உயர்ந்த மனம் கொண்டவர்களும் அல்ல. வக்கீலாக பிராக்டீஸ் செய்து, அதன் பிறகு நீதிபதிகளாய் வருபவர்கள் தான்.

கணவன், மனைவிக்கு டைவோர்ஸ் கொடுப்பதில் நீதிமன்றங்கள் ஈடுபடுவது நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் சட்டம் தன் மூக்கை நுழைப்பது ஆகும். சட்டப்படி என்பது வாழ்க்கைக்கு ஒத்து வரவே வராது. தமிழ்ச் சமூகம் என்பது உயர்ந்த நம்பிக்கை சார்ந்த, சமூகச் சார்புடைய, கற்பியல் சார்ந்தது. அதில் சட்டத்துறையின் தலையீடு என்பது கேலிக்குறியதாகும். முன்பு ஒரு முறை அம்மாவின் அரசு பலியிடுதலை சட்டவிரோதம் என்றது. நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் அரசு தலையிட்டு, பின்னர் முக்கறுபட்டது நமெக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். இது போன்றதுதான் குடும்ப உறவுகளுக்குள் சட்டம் நுழைவது.

கணவன், மனைவி உறவென்பது சாதாரணமானது அல்ல. அது ஒரு டிவைன். இருவருக்கும் இருக்கும் பிணைப்பு என்பது கடவுள் தன்மை உடையது. அதையெல்லாம் சட்டத்தின் வரையறைகளுக்குள் கொண்டு வரவே முடியாது. என் நண்பருக்கு டிவோர்ஸ் ஆகி விட்டது. மனைவி தனியாக வாழ்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். மூவரும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். மனைவிக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்ததில் மனைவியின் உறவினர்களுக்கு பெரும் பங்கு உண்டு. 

தனிமையில் வாழ்கிறார் நண்பரின் மனைவி. இவர் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகின்றார் என்பது எனக்குப் புரியவே இல்லை. முடிவில் என்ன ஆகும் தெரியுமா? எவரும் இவரைக் கண்டு கொள்ளப் போவது இல்லை. தனிமையில் கிடந்து உழலுவார். தன் வாழ்க்கையை பலியிடுவார். இவரின் குழந்தைகள் கூட இவரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். குழந்தைச் செல்வங்களை கூட வைத்து, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்குவதில் இருக்கும் சந்தோஷத்தை விட மனிதனுக்கு வேறென்ன சந்தோஷம் பெரிதாய் இருக்க முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம். அதை இப்பெண்மணி இழந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல தன் கணவனையும் இழக்க வைத்திருக்கிறார்.

நானும் நண்பரும் வாரா வாரம் கோவை ரேஸ் கோர்ஸ் சென்று வருவோம். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வேறு வழியாக வந்தது. வழியில் நண்பரின் குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளியின் ஹாஸ்டல் இருந்தது.

”என் குழந்தைகள் மூவரும் ஜெயிலில் கிடக்கிறார்கள்” என்றார் குரல் கம்ம. டைவோர்ஸ் வழங்கிய கோர்ட் இந்தத் தகப்பனின் சோகத்துக்கு என்ன பதில் சொல்லும். தானே குழந்தையை வளர்க்கிறேன் என்றுச் சொன்ன தாய் மூன்று பேரையும் ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளி விட்டார். கோர்ட் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் தான் விடும். இது எத்தகைய ஒரு கொடூரம் என்பதைப் பாருங்கள். தகப்பன் நினைத்தால் கூட உடனே தன் குழந்தைகளைப் பார்த்து விட முடியாது. தாய், தந்தையின் அரவணைப்பில் வாழ வேண்டிய குழந்தைகள் தனியாய் வாழ்கின்றாஅர்கள்.  கோர்ட் ஒரு குடும்பத்தினை கெடுத்து, குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறதைப் பார்த்தீர்களா?

கோர்ட்டுகள் உறவுகளுக்குள் நுழைந்து கொடுக்கும் தீர்ப்புகளின் விளைவினைப் பார்த்தீர்களா? அவரின் மூடை மாற்றுவதற்காக பேச்சை மாற்றினேன். அப்போது அவர் சொன்னது.

இவரின் நண்பர் ஒரு இயக்குனர். எங்கெங்கோ சென்று யாரோ ஒருவரைப் பிடித்து ஒன்றரைக் கோடி பணத்தை வாங்கி விட்டார். வாங்கியது சென்னையில் ஒரு வீடு, சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி விட்டார். படமெடுக்கிறேன் பேர்வழி என்று ஒப்புக்கு ஒரு படத்தினை எடுத்து, கொஞ்சம் வியாபாரமும் செய்து விட்டார். பணம் கொடுத்தவர் பெரிய பணக்காரர். அவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்படித்தான் பல இயக்குனர்கள் இருக்கின்றார்கள். இப்போது இந்த இயக்குனர் வேறு ஏமாளி தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார். எனக்கும் கூட சில அனுபவங்கள் உண்டு.

என்னிடம் ஒருவர் படமியக்க உதவி செய்யும் படி வந்தார். அவரை தமிழகத்தின் மிகப் பிரபலமான கோடீஸ்வர நண்பரிடம் அனுப்பி வைத்தேன். இயக்குனர் சென்று நண்பரைச் சந்தித்து விட்டு வந்து, “சார், என் வாழ்க்கையில் இவ்ளோ பணத்தினைக் கண்ணால் கூட கண்டது இல்லை சார் !” என்றார். என்ன இது இந்த ஆள் இப்படிப் பேசுகின்றாரே என்று நினைத்தேன்.

போனில் வந்த கோடீஸ்வர நண்பர் ”தங்கம், எப்படி நீங்க எல்லோரையும் நம்புகின்றீர்கள்?” என்றார். அதன் பிறகு இந்த இயக்குனரைப் பற்றி சில விஷயங்கள் சொன்னார். அவரின் கணிப்பு மிகச் சரியானது என்பதை அறிந்து கொண்டேன்.

இது நடந்து கொஞ்ச காலம் ஆனது. வேறொரு இயக்குனர் ஒருவர் என்னிடம் வாய்ப்பு பெற்றுத் தரும்படி வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவியில் இருக்கும் நண்பரிடம் அனுப்பி, ”நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார், இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்றுச் சொன்னேன். நண்பர் சரியான ஆராய்ச்சிப் பேர்வழி. இந்த இயக்குனரை உள்ளும் புறமும் சோதித்து விட்டு, “பத்துப் பைசாவிற்கு தேரமாட்டான் இவன்” என்றுச் சொன்னார்.

பிரபல அரசியல்வாதி  நண்பர் தன் மகனை ஹீரோவாக்க நினைத்து நல்ல ஸ்கிரிப்ட் தேடிக் கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் என்னிடம் சொன்ன போது, நல்ல ஸ்கிரிப்ட் ஒன்றினை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிய ஒரு புதிய இயக்குனரை அவரிடம் அனுப்பி வைத்தேன். “ஆள் சரியில்லைப்பா” என்றார் அரசியல்வாதி.

தகுதியற்றவர்களை சிபாரிசு செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் வேறுமாதிரியாய் இருந்தது. அத்துடன் சிபாரிசுகளை முற்றிலுமாய் நிறுத்தி விட்டேன்.

சினிமாவில் ஈகோ பிரச்சினை அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு இயக்குனர் புதியவர். அவரிடம் வேலை பார்க்கும் கேமரா மேன், “சார் எனக்கு பத்து வருடம் அனுபவம் சார், நீங்கள் புதிதாய் சினிமாவிற்கு வந்தவர். இந்தக் காட்சிக்கு இங்கே தான் கேமரா வைக்க வேண்டும்” என்று பலர் இருக்கச் சொன்னார். கேமரா அசிஸ்டெண்ட் இயக்குனர் சொல்வதைக் கேட்கவே மாட்டான்.இவரால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. வேறு வழி இன்றி சமாதானம் ஆனார் இயக்குனர்.

அது மட்டுமல்ல “சினிமாவில் நம்பிக்கைத் துரோகம்” என்பது மிக அதிகம். முன்னால் ஒன்று பேசுவர், பின்னால் ஒன்று பேசுவர். இதுதான் சினிமா. கூட இருந்தே குழி பறிப்பதில் சினிமாவில் தான் மிக அதிகம். நல்ல நண்பராக இருப்போர் திடீரென்று மிகப் பெரும் எதிரியாய் மாறி விடுவதும் சினிமாவில் தான் சாத்தியம் என்றார் எனது சினிமா நண்பர் ஒருவர்.

ஒரு பிரபல இயக்குனரை தயாரிப்பாளர் எப்படித் திட்டினார் தெரியுமா? “ஏண்டா தேவடியாப்பயலே, என் காசுடா ! உன் இஸ்டத்திற்கு செலவு செய்வீயாடா நீ?” என்று பலர் முன்னிலையில் திட்டினார். அந்த இயக்குனர் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். இயக்குனர் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு இப்போது தேவையில்லாத பழக்கங்களெல்லாம் கூட ஒட்டிக் கொண்டன. தயாரிப்பாளர் தலையில் துண்டினை போட்டுக் கொண்டு ஓட்டு வீட்டில் வாழ்கிறார். சினிமாவில் ஜெயித்தவர்கள் இல்லவே இல்லை. அது எவரானாலும் சரி !

ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


Monday, December 26, 2011

ரிலையன்ஸின் திமிரும் கண்டுகொள்ளாத மத்திய தொலைத்தொடர்பு துறையும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தாரின் இணையத் தொடர்பை பயன்படுத்தி வரும் பலருக்கும் யூடியூப் மற்றும் சில ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை பயன்படுத்த முடியாது. காரணம் இவர்களின் தயாரிப்பில் வெளியான “டான் டூ” என்ற திரைப்படம் வெளியான பிறகு ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை தடை செய்தால் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியாது என்பதால் இச்செயலைச் செய்திருக்கின்றார்கள். 

வெப்சைட்டை தடை செய்ய இந்திய அரசு மட்டுமே உத்தரவிட முடியும் என்கிற போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயல் “வாடிக்கையாளருக்கான் துரோகம்” ஆகும். 

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவரை ஏதும் செய்யவில்லை. இந்திய அரசின் வேலையை ரிலையன்ஸ் செய்து கொண்டிருக்கிறது. பேசாமல் காங்கிரஸ் அரசுக்கு ரிலையன்ஸ் அரசு என்று பெயர் சூட்டி விடலாம். நேற்று, கஸ்டமர் கேரில் கேட்ட போது, கம்ப்ளைண்ட் கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

இது பற்றிய செய்திகளை கீழே இருக்கும் இணைப்பில் பாருங்கள்.


இது பற்றி சிலரின் கருத்துக்களை கீழே பார்க்கலாம்


இந்தியா கார்ப்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் கை விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ரிலையன்ஸின் போக்கு.

- அன்புடன் 
கோவை எம் தங்கவேல்

குழந்தைகளை தடம் மாறச் செய்யும் சினிமா



( இது நாட்டுச் சுரைக்காய் )


( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)



வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல்.  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும். 

உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”. 

பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.

ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.

ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து. 

சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.

மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.


இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

என்ன இருக்கு?

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.


யாருக்கு நல்லது?

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.


என்ன பலன்கள்? 

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, December 24, 2011

சசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன?





தினமலரில் தினமும் சசிகலா பற்றிய கட்டம் கட்டிய செய்திகள். தினமணியில் அதிகமாய் ஒன்றையும் காணவில்லை. ஜூனியர் விகடனில் சசிகலா பிரச்சினை, நக்கீரனில் இன்னும் பிளாக்குகளில் எல்லாம் சசிகலா போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார். சசிகலா கும்பல் களையெடுக்கப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாய் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.டீக்கடைகள், கட்சிகள், பத்திரிக்கைகள் என்று மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் பரபரப்பான செய்தி “சசிகலா பெயர்ச்சி”.

இத்தனை பரபரப்பாய் பேசப்படும் செய்தியில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டால், யாருக்குமே தெரியாது. உண்மைப் பிரச்சினை தான் என்ன?

ஜெயலலிதா அவர்களுக்கும், சசிகலா அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை ஏதோ இவர்கள் தினமலர், தினமணி, ஜூனியர் விகடன், நக்கீரன் பத்திரிக்கை முதலாளிகளை அழைத்து வந்து விலாவரியாகச் சொன்னது போல எழுதுகின்றார்கள்.

இருவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மையை, எதுவும் தெரியாத இவர்களை கலந்து கட்டி எழுதுவது தான் “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்கிறார்கள். 

என்ன பிரச்சினை என்பதை இருவரும் யாரிடமும் சொல்லப் போவதுமில்லை, அது பிரச்சினையாய் உருவெடுத்து தமிழ் நாட்டை அழிக்கப்போவதும் இல்லை. எதுவுமே நடக்கப் போவதில்லை. ஆனால் ஏதேதோ நடக்கப் போவதாக எழுதுகின்றார்கள். நடந்து கொண்டிருப்பதாய் எழுதுகின்றார்கள். 

ஏன் இப்படி என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பத்திரிக்கைகளுக்கு முதலாளியாய் இருப்பவர்கள் ஹேஸ்யங்களை உண்மைகளாய் உருவகப்படுத்துகின்றார்கள். அதன்மூலம் தன் இருப்பை பிறருக்கு கவனப்படுத்துகின்றார்கள். அந்த இருப்பின் மூலம் தன் அதிகாரத்தை பிறரிடம் திணிக்க முற்படுகின்றார்கள். மீடியாக்கள் இதைத்தான் செய்கின்றன. இதற்குப் பெயர் பிழைப்புவாதம். மற்றொரு பெயர் “ பத்திரிக்கை தீவிரவாதம்”. 

இத்தகைய முதலாளிகள் தான் உண்மையான ”தீவிரவாதிகள்”. மக்களிடம் பீதியைக் கிளப்புவது, உண்மையற்ற செய்திகளை உண்மை என்பது போல எழுதுவது, மக்களிடம் குழப்பத்தை உருவாக்குவது, நடக்காத ஒன்றை நடந்தது போல எழுதுவது போன்ற இழிசெயல்களை பத்திரிக்கைச் சுதந்திரம் என்கிற பெயரில் எழுதுகின்றார்கள். இவ்வகை தீவிரவாதிகளிடமிருந்து மக்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 

தினசரிகளைப் படிப்போரும், இதழ்களை படிக்கும் போதும் சுயசிந்தனை கொஞ்சம் தேவை.

ஜெயலலிதா, சசிகலா பிரண்டாக இருந்தபோதும், இருவரிடமும் பிரச்சினை என்கிறபோதும் யாருக்கும் பணமோ வேறு ஏதோ வரப்போவதில்லை. இந்தச் செய்தியால் தமிழக மக்களுக்கு எள்ளளவு பிரயோசனமும் இல்லை.

உழைக்க வேண்டும். அதனால் வாழ வேண்டும். இதை விடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? தீமைதான் பரிசாய் கிடைக்கும். 

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்


Friday, December 23, 2011

பெரும்பான்மையான திரைப்படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன?











எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?

கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.

இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.

இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது. 

மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன. 

இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)

திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.

தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்.

Thursday, December 22, 2011

போலிகள் நடமாடும் புனைவுலகம்

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் எழுதும் எவையும் உண்மை என்று நினைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பத்தி வெளியாகி இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தால் பரவாயில்லை.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சிகள் புகுந்தால், கிடைக்கும் பலன்களைப் பற்றி பிரஸ்தாபிக்க ஒன்றுமில்லை. அது நம்பிக்கையின் பால் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கோட்டையின் கதவுகளைத் திறக்கும் அளவுக்கு பலமான ஆராய்ச்சியாக இருந்தாலும் கூட.

சாகித்ய அகாதமி பெற்ற “காவல் கோட்டம்”  பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எதிர்க்கப்பட்டது என்கிறது ஒரு செய்தி. ஜெயமோகன் அந்த நாவலை ஆதரித்தார் என்கிறது மேலும் ஒரு செய்தி. இது பற்றிய விமர்சனங்கள் இனி இணைய பக்கங்களில் அள்ளிக் கொட்டப்படும். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது வரையில் தார்மீக ரீதியிலான, தர்க்க ரீதியிலான, மனிதாபிமான வகையிலான, நீதி சார்பான, சுயச்சார்பற்ற எழுத்துக்கள் எவையேனும் எழுத்துலக பிரம்மாக்கள் நாங்கள் என்றுச் சொல்லக்கூடிய அல்லது நடிக்கக் கூடியவர்களால் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஒரு நிமிடம் மனச் சுத்தியுடன் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இல்லை.

ஏன் இல்லை என்று கேட்டால் “கொன்று போடுவார்கள்” என்பார்கள். கொல்வதற்காக சித்தாங்களும், வேதாந்தங்களும், உண்மைகளையும் மறைப்பேன் என்கிற புனைவுலகத்தாருக்கு என்ன பெயர் வைக்கலாம்?

புனைவுலகில் நடமாடும் போலிகள் முற்றிலும் சுயச்சார்பு உடையவர்களாய், சுய சிந்தனையை வருமானம் பெறக்கூடிய வகையில் மாற்றி, மக்களை தாங்கள் எழுதுவது “உண்மை” என்று நம்பும்படிச் செய்வதில் வல்லவர்கள். எழுத்து ஒரு தவம் என்பார்கள். ஆனால் இன்றைய பத்திரிக்கைகளைப் படித்துப் பாருங்கள். அது எங்காவாது, எவராலாவது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட கருத்துக்களின் வாந்திகள் என்பது புரியவரும்.

ஒரு சமூகம் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள, அதன் மக்களால் அதன் மொழியால் உருவாக்கப்படும் படைப்புகள், சேகரிப்புகள், ஒழுங்குகள், நடைமுறைகள், விழாக்கள் போன்றவை உதவும். இவ்வகைப் புதுப்பித்தலில் புனைவுலகத்தாரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் பெரும். இன்றைய தமிழ் உலக மக்கள் முகவரி அற்று, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எல்லாமே இன்பமயம் என்கிறதாய் மாறி நிற்க புனைவுலகப் போலிகள் தான் மிகவும் முக்கிய காரணிகளாய் நிற்கின்றார்கள்.

சூதும், வாதும், பொய்யும், புரட்டும், களவும், திருட்டும் கொண்டலையும் போலிகளிடமிருந்து தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள பெரும் தன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி நடக்கும், எங்கு நடக்கும், யார் முன்னெடுத்துச் செல்வார் என்பதெல்லாம் காலம் தான் சொல்ல வேண்டும்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, December 20, 2011

விடைகள் தவறாகவே வரும் கணக்குகள்



அரசியல் இன்றி இவ்வுலகம் அணு அளவு கூட இயங்காது. ஆனால் அரசியலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் அரசியல் கணக்குகள் எதுவும் மிகச் சரியான விளைவுகளை அல்லது விடைகளைத் தருவதே இல்லை. இவ்வகைக் கணக்குளின் விடைகள் முற்றிலும் தவறானதாகவே முடிந்து போய் விடும்.

நேருவின் காஷ்மீர் கணக்கு, இந்திரா காந்தியின் ப்ளூ ஸ்டார் கணக்கு, ராஜீவ் காந்தியின் அமைதிப்படைக் கணக்கு, சஞ்சய் காந்தியின் அரசியல் கணக்கு, 2ஜியில் திமுகவின் கணக்கு, சினிமாவில் சன் குழுமத்தாரின் கணக்கு என்று நமக்குத் தெரிந்த பல கணக்குகளின் விடைகள் அனைத்தும் கணக்குப் போட்டவர்களுக்கு எதிராய் திரும்பியது வரலாறு.

அரசியல் என்பது ஆற்று வெள்ளம் மாதிரி. பதவிகள் என்பது அதில் மிதக்கும் துரும்பு மாதிரி. ஆனால் பதவி என்ற அந்தஸ்து வரும் போது கூடவே மூளை நோயும் வந்து விடும். யோசிக்க மறக்க வைக்கும் நோயை பதவி கூடவே கொண்டு வந்து விடும்.

2ஜியில் எளிதாய் தப்பி இருக்கலாம். அதாவது எந்த ஒரு ஊழலையும் சத்தமே இல்லாமல், யாருக்கும் தெரியாமல் செய்யலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு யோசிக்கவே முடியாது. வழக்குகளில் இருந்து  வெகு எளிதாய் வெளியேறலாம் அது கொலைக் குற்றமாய் இருந்தாலும் கூட. அதற்குத் தேவை ஒன்றே ஒன்று தான் புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனம் பதவியில் இருப்போரிடத்தில் இருக்கவே இருக்காது. அல்லக்கைகளிடம் கூட காண முடியாது. 

மக்கள் போடும் கணக்கு எப்படித் தவறாகிறது என்பதை இப்போது பார்த்து விட்டு இப்பதிவை முடிக்கலாம்.

தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவன் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவனாய் இருக்க வேண்டியது முதல் படி. அடுத்து அவன் மனிதாபிமானம் மிக்கவனாய் இருத்தல் வேண்டும். அடுத்து எதையும் பகுத்தறிவு செய்து பார்ப்பவனாய் இருத்தல் வேண்டும். மக்களின் நன்மையை உத்தேசிப்பவனாய் இருத்தல் வேண்டும். ஆனால் இன்றைய எந்த ஒரு அரசியல்வாதியும் அப்படி இருக்கின்றார்களா? என்று ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும் அரசியல். 

நல்லது செய்வார் என்றெண்ணி யாருக்கு ஓட்டுப் போடுகின்றார்களோ அவர்களின் தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதால் மக்களின் நல்லது கணக்கு முடிவில் தவறான விடை தருகிறது. அதன் காரணமாய் அடுத்தவர் தேர்வாகின்றார்கள். போடக்கூடிய கணக்கில் தவறு இருக்கும் போது விடை என்ன சரியாகவா வந்து விடும் ?

அரசியல் என்பது மாயக்கயிறு. அதில் தலைவர்களெல்லோரும் ஊசலாடும் பொம்மைகள். மக்கள் பொம்மைகளின் ஆட்டங்களை வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள். தங்கள் உரிமை பரிபோவதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் மயங்கிக் கிடக்கும் மடமைகள்.

அரசியல் பற்றிப் பேசி வீணாய் பொழுதினைப் போக்க வேண்டாம் என்பதற்குத்தான் இப்பதிவு. இனி இன்னும் பலப் பல செய்திகளை உங்களுடன் பகிர்வேன். அதுவரை தொடர்ந்திருங்கள். 

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Thursday, December 8, 2011

மையலும் காதலும்

உதயணனன் - வாசவதத்தை கதை தெரியுமா உங்களுக்கு?  ஐங்குறு காப்பியத்தில் ஒன்றான பெரும்கதையின் கதாமகன் தான் உதயணன். இசைக்கு மயங்காதோர் யாதுமில்லை இவ்வுலகிலே என்பதற்கு உதாரணமாய் தன் ”கோடபதி” என்னும் யாழ் இசையால் வெறி கொண்ட யானையைக் கூட மயக்கும் திறமை கொண்டவன் இந்த உதயணன். இந்த உதயணனுக்கு மனைவிகள் ஏராளம். ஆனால் அவனின் முதல் மனைவியும், காதலியுமானவள் “வாசவதத்தை” என்பாள். பொதுமையை அவன் மணமுடிக்க காரணமே அவள் வாசவதத்தையைப் போன்று இருந்தாள் என்பதற்காகத்தான் என்று  நா.பார்த்தசாரதி “வெற்றி முழக்கம்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். காதல் என்பது வேறு. மையல் என்பது வேறு. மையலைக் காதலாய் கருதுவதால் கொலைகள் நடக்கின்றன. விவாகரத்துக்கள் நடக்கின்றன.

சினிமாக்களில் இன்றைய காதலை “பார்த்தவுடனே உள்ளுக்குள் பொங்கி வரணும்” என்ற முறையில் வரையறுக்கின்றார்கள். பார்த்தவுடனே பொங்கி வருவது காதல் அன்று அதன் பெயர் மையல்.  மையலைத் தான் இன்றைய உலகம் “காதல்” என்கிறது. மையல் கொண்டால் அதன் முடிவு எரிச்சல் தரும். ஒரே மனது ஒன்பதாய் மாறுவதும் மையலின் முடிவில்தான்.

மையல் வந்ததும் பற்றி எரிய வைப்பதும், மையல் தீர்ந்ததும் இல்லாதவைகளை எல்லாம் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதும் மனதுதான். அனிச்சை செயலாய் காற்றுக்கு ஒதுங்கும் துணியை இழுத்து விடும் பெண்ணின் கையும், மையலும் ஒன்றே !

மையல் கொண்ட காதல் எப்படி இருக்கும் என்பதற்கு உங்களுக்கு ஒரு நீண்ட கவிதையை படிக்க அளிக்கிறேன். இக்கவிஞனின் கவியோட்டத்தின் ஊடே நீங்கள் நுகரப் போகும் அந்தத் தன்மைதான் “மையல்”.
இதோ அந்தக் கவிதை வரிகளின் இணைப்பு -> சலனம் - ஜேவியர் தாசையன்

காதல் என்பது என்ன தெரியுமா? 

பிரதிபலன், குற்றம், குறை பாராமல் அப்படியே ஏற்றல். எங்கே உங்கள் மனதினை ஒரு முறைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம். உங்களிடம் இருப்பது என்னவென்று?


- இனிய வணக்கங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, November 29, 2011

பள்ளியறையின் மிச்சமே வாழ்க்கையின் தத்துவம்

அறுவடைக் காலமது. வயலில் வடகாட்டிலிருந்து வந்த வேலையாட்கள் கதிரறுத்து, நெல் தூற்றி மூட்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜோசப் வாத்தியாரிடம் டியூசனுக்குச் சென்ற நானும், என் தங்கையும் ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். அன்றைக்கு எட்டு மணி வரையிலும் வராது கண்டு, வீட்டிற்கு நெல்மூட்டை கொண்டு வந்த வேலையாட்களுடன், உறவினர்கள் சேர்ந்து தேட ஆரம்பித்து விட்டனர்.

நாங்கள் இருவரும் நாட்டியக் குதிரை ஸ்பெஷல் கேள்விப்பட்டிருப்பீர்களே, குதிரைக்கார வி எஸ் எம் ராவுத்தர் வீட்டில் “பாசமலர்” திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நடந்த களேபரம் எதுவும் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்த வீடியோ பிளேயரில் படம் போட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் டிவி என்பது பெரிய அதிசயம்.

இந்திராகாந்தி இறந்த போதும், எம் ஜி ஆர் இறந்த போதும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் டிவியில் நேரடி ஒளிபரப்பினைப் பார்த்தோம். கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம் ஜி ஆருக்கு கூட்டம் அதிகம் என்றுப் பேசிக் கொண்டது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து மாமாவிடம் பூவரசன் கம்பால் நான்கு அடிகள் வாங்கிக் கொண்டோம். வேலைக்கு வந்தவர்கள் மாமாவின் கோபத்தைச் சரி செய்தார்கள்.தங்கைக்குத்தான் தடித்துப் போய் விட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மாமா ஆபீசில் லோன் போட்டு பெரிய டயனோரா டிவி ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார். கருப்பு கலரில் இரண்டு பக்கமும் திறக்கும்படியான பிளாக் அண்ட் வொயிட் டிவி அது. படத்தினைக் கீழே பார்த்துக் கொள்ளுங்கள்.



எனக்கு சிலோனின் ரூபவாகினிதான் பிடிக்கும். ஊர் கடற்கரையோரம் இருந்ததால், சிலோன் ரேடியோவும், எப்போவாவது ரூபவாஹினி டிவியும் கிடைக்கும். அவ்வப்போது தமிழ் நாடகங்கள் கூட போடுவார்கள். படம் பிரிண்ட் செய்தாற்போல இருக்கும்.

டிவி ஆபரேட்டராய் மாறிய பின்பு வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் படம் பார்க்க கூட்டம் கூடும். மளிகைக் கடை செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். கடையை யாராவது பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, கிரிக்கெட் நாட்களில் வீட்டுக்கு வந்து டிவி போடச் செய்து என்னை எரிச்சல் படுத்துவார். ஆனாலும் அவர் கொண்டு வந்து தரும் மேரி பிஸ்கட், பட்டாணி, பேரீச்சைக்கு ஆசைப்பட்டு நானும் கிரிக்கெட் பார்ப்பதுண்டு. செட்டியார் மாமாவின் நண்பர் வேறு என்பதால் மறுக்கவெல்லாம் முடியாது. இந்த அன்பினால் அவரின் கல்லாப்பெட்டிக்கு காவலனாய் கோடை விடுமுறையில் அவரிடம் வேலைக்குச் சென்றதுண்டு. மாதம் 50 ரூபாய் கொடுத்தார். அத்துடன் தினமும் இலவச இணைப்பாய் ரொட்டிகளும், பேரீச்சையும் ஒரு பள்ளிக்கூடப் பையும் கொடுத்தார்.

இப்படியான நாட்களில் எங்கள் வீட்டுக்கு இடது பக்கமாய் மரக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டின் பெண்மணி அடிக்கடி டிவி பார்க்க வருவார். எம் ஜி ஆர் பாடல் என்றால் அவருக்கு உயிர். விபரம் தெரியாத வயதில் அவர் சொல்லியது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. “வீட்டுக்காரனுடன் படுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எம் ஜி ஆரைத்தான் நினைச்சுக்குவேன்” என்றார் அந்தப் பெண்.


சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு நீல பத்ம நாபன் அவர்களின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படிக்க நேர்ந்த போது, நாவலின் பிரதான கதாபாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்க்கையை எழுத்தின் மூலம் உணர்ந்தேன்.


கதை ஒன்றும் முக்கியமில்லை. கதாபாத்திரப் படைப்பின் மூலம் உலக வாழ்வியலை அலசுதல் என்பதுதான் முக்கியமானது. இந்த நாவலின் ஹீரோவான அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள். அனந்தன் நாயரின் வீழ்ச்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரு நாள் வாழ்க்கையோடு அவரின் கதை நினைவுகளின் சொச்சமாய் எழுத்தாய் வரும் போது வெளிப்படும் நிதர்சன உண்மைகள் பலவும், சிந்தித்துப் பார்க்கையில் மனிதன் தனக்குள்ளே போட்டுக் கொண்ட அவிழ்க்க முடியா முடிச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் அவனே காரணமாய் இருப்பதினை நீல பத்ம நாபன் வெகு அழகாய் வெளிப்படுத்தி இருப்பார். மனிதனின் வீழ்ச்சிக்கும், உயர்வுக்கு அவனே காரணம் என்பதை இந்தப் பள்ளிகொண்டபுரம் நாவல் வெளிப்படுத்தி இருக்கிறது. 

இளம் வயது வாலிபன் ஒருவன் வரப்போகும் முதுமை காலத்தினை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், பொருள் சார்ந்த ஆடம்பர வாழ்க்கையின் மிச்சத்தை அவனால் நிச்சயம் உணர முடியும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் முதுமை வந்தே தீரும் என்கிற போது, இன்றைக்கே வாழ் என்கிற உணர்ச்சி ததும்பும் இன்பம் தரும் வாழ்க்கை என்பது போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ஆணுக்கு வாழ்க்கை என்பது திருமணப் பந்தத்தின் மிச்சமாய் கண் முன்னே நடமாடும் வாரிசுகளை வைத்துத் தான் தொடரும். உடலிச்சை மீதான ஆர்வம் பின்னர் மயங்கிக் கிடக்கும் பாச வலைக்குள் வாரிசுகளிடம் சிக்கிய பின்புதான் முழுமையடைகிறது. 

பள்ளிகொண்டபுரம் நாவலைப் படித்த போது மேலே நான் சொன்ன பெண்மணியின் கூற்றும், நம் வாழ்க்கையின் தத்துவமே பள்ளியறையின் மிச்சமாய் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.  நேரமிருந்தால் ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்தான் “பள்ளிகொண்டபுரம்”.

இந்த நாவல் பற்றி திரு ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தியினை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். 


- கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 28, 2011

அக்கினிப் பிஞ்சுகள் வளர்கின்றன

பெரியாரின் வாசகம் ஒன்றினை எனக்கு முன்பு சென்று கொண்டிருந்த ஒரு கால் டாக்ஸியில் படித்தேன். “தானாக உருவாக முடியாத மனிதன், தனக்காக வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது”. திராவிட நாடான தமிழகத்தில் பெரியாரின் சிந்தனைகளை இக்கால இளைஞர்கள் படித்து அறிய யாரோ ஒரு இயக்கத்தார் கோர்ட்டில் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. கால் டாக்ஸியில் ஒரு மாபெரும் தமிழகப் புரட்சியாளனின் சிந்தனையைப் படிக்கும் அவலம் என்னைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு கிட்டாமல் போக வேண்டுமென்று பெரியார் மறுத்த அந்த கடவுளிடம் விண்ணபிக்கிறேன்.

இவ்வாறான அரசியல் வித்தைகள் நிரம்பிய இந்தியாவில், சமீப காலத்தில் செய்திச் சானல்கள்  அமைச்சர் ஒருவருக்கு சீக்கிய சகோதரன் ஒருவர் கன்னத்தில்  விட்ட அறையினை அடிக்கடி ஒளிபரப்பின. விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அந்த இளைஞன் ஜெயிலில் கிடக்கிறார். இந்த இளைஞரை அடிக்க அமைச்சரின் கட்சிக் கூட்டத்தார் முண்டியடித்ததையும் சானல்கள் காட்டின. தனி மனிதன் செய்தால் குற்றம், அதே கட்சிக் காரன் செய்தால் போராட்டம் என்கிறது இந்திய அரசியலைப்புச் சட்டம். இப்படி ஒரு நகைப்புக்கிடமான சட்டங்கள் இந்தியாவை ஆள்வது கண்டு எரிச்சல் தான் ஏற்படுகிறது.

இந்திய அரசியல்வாதிகள் எவரும் மக்களின் மீது அபிமானம் கொண்டவர்களாய் இல்லை. எவருக்கும் இங்கே அக்கறை இல்லை. அதன் பிரதிபலன் தான் அரசியல்வாதிகள் மீதான அடி உதைகள். இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு மாபெரும் ஆபத்தினை மக்கள் உருவாக்கப் போகின்றார்கள் என்பதை ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற மக்கள் சொல்லாமல் சொல்கின்றார்கள். காவல்துறையினர் இன்றி எந்த ஒரு அரசியல்வாதியும் தெருவில் நடமாட முடியாத நிலையில் தங்களின் பொதுவாழ்க்கையினைச் சகதிக்குள் திணித்துக் கொள்கிறார்கள். 

ஒரு எம் எல் ஏ (இவர் லண்டனில் “வணக்கம் லண்டன்” என்ற நிகழ்ச்சியை நடத்தியதை சானல் ஒன்று வெளியிட்டது ) தொகுதிப் பக்கமே வரவில்லை என்று எஸ் எம் எஸ் தட்டி அது அவரின் கவனத்திற்கு வந்து, அடித்துப் பிடித்துக் கொண்டு தொகுதிக்குள் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. மக்களுக்கு சேவை என்றால் அது மக்களின் பணத்தினைக் கொள்ளை அடிப்பது என்ற புதுவகையான சித்தாந்தத்தை அரசியல்வாதிகள் உருவாக்கியதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தாக வேண்டிய தருணத்தில் நிற்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் பஞ்சுப் பொதிகளை போன்றவர்கள். அடி விழாமல் தப்பித்துக் கொள்ள தற்போதைக்கு வேண்டுமானால் முயலலாம். ஆனால் இளைஞர் கூட்டத்தில் ஒரே ஒருவன் பொங்கி எழுந்தான் என்றால் அவன் சின்னஞ் சிறு அக்கினிப் பிஞ்சாய் மாறி நிற்பான். அதுமட்டுமல்ல அவனைக் கொண்டே பல அக்கினிகள் உருவாகும். பஞ்சுப் பொதிகள் மீது அக்கினிப் பிஞ்சுகள் பட்டால் என்ன ஆகும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

கடைசியில் போகின்ற வழிக்கு கூட கோடி கோடியாய் கொட்டி வைத்து இருக்கும் தங்க கட்டிகள் கூட வராது. அக்கினிப் பிஞ்சுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சுப் பொதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


* * * * *

Thursday, November 24, 2011

சாகித்ய அகாதமி பரிசு நூல் - கார்மேகம்


படிப்பதென்பது அலாதியான இன்பம் தரும் தனிப்பட்ட ஒரு உலகம். அவ்வுலகில் நீண்ட நாளாக வாசம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. தற்போதைய பவர் கட் கிட்டத்தட்ட 5 மணி நேரம். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று மின்சாரம் போய் வருகிறது. மின்சார ஊழியர்கள் எந்த வேலையைச் செய்கிறார்களோ இல்லையோ, பவர் கட் செய்வதை மிக மிகவும் சரியாய் செய்கின்றார்கள். வாங்கும் காசுக்கு ஏற்ற வேலை.

தேர்தல் காலங்களில் மட்டும் காணாமல் போகும் ‘பவர் கட்’ தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வருவது எப்படி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அரசியல் மர்மம். அது எதற்கு நமக்கு. இந்த பவர் கட்டையும் ஏதாவது பிரயோசனமாய் மாற்ற வேண்டுமே என்ற கவலைக்கு தீர்வாய் வந்தது வீட்டுக்கு அருகில் இதுகாறும் மறைந்து இருந்த ஒரு அரசு நூலகம். உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டேன். 925 ராசியான நம்பரா என்று நியூமராலஜி நண்பரிடம் விசாரிக்க வேண்டும்.

இந்த சாகித்ய அகாதமி என்கிறார்களே, அது ஏதோ அவார்டு கொடுக்கின்றதாமே என்றெல்லாம் “இலக்கியவாதிகள்” எழுதி இருப்பதைப் படித்த தினத்திலிருந்து எனக்குள் ஒரு ஆசை கிளர்ந்திருந்தது. அவ்வப்போது தோன்றி மறையும் அந்த ஆசை நூலகத்தில் உறுப்பினர் ஆனவுடன் பூதமாய் எழுந்தது பிற நூல்களைப் பார்க்கும் ஆசையைத் தடுத்தது. சாகித்ய அகாதமியின் செலக்‌ஷனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.

கையில் சிக்கியது “சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜி.விவேகானந்தன் என்ற கேரளாக்காரரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கார்மேகம்”.

நான்கு மணி நேர பவர் கட்டினை சாகித்ய அகாதமியின் தேர்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள செலவழித்தேன். மொழிபெயர்ப்புச் சரியில்லை என்றால் நாவலின் லட்சணம் வீட்டிற்கு ஒன்பது வாசல் வைத்தது போலாகி விடும் என்பதை இந்த நூலின் மூலமாய் தெரிந்து கொண்டேன். அந்தளவுக்கு தட்டையான மொழி பெயர்ப்பு. மூலம் நன்றாக இருந்திருக்கலாம். அதை இந்த ஜென்மத்தில் படிக்க முடியாது. ஒரு மொழியை தெரிந்து வைத்துக் கொண்டே தமிழர்களின் நூல்களைப் படிக்க முடியவில்லை. மலையாளம் வேறு கற்றுக் கொண்டால் என்ன ஆவது?

இனி கதை : பிரபாகரனுக்கு தன் மனைவியின் மூலம் குழந்தை பிறக்கவில்லை என்ற கவலை. அதைப் புரிந்து கொண்ட மனைவி மாலதி, தன் உதவியால் படிக்கும் தன் தங்கை சாந்தாவை தன் கணவனுக்கு கட்டி வைக்கின்றார். இதற்கு சாந்தாவின் அம்மாவும் உடந்தை. ஒரு வழியாக பிரபாகரனுடன் சாந்தாவிற்கு முதலிரவும் நடக்கிறது. அதன்பிறகு உண்டான ஈகோவினால் மாலதி தன் அம்மா வீட்டுக்குச் செல்ல, சாந்தாவை கவனிக்க மறக்கிறார் பிரபாகர். காரணம் வயது வித்தியாசம். கோபம் கொண்ட சாந்தா அம்மா வீட்டுக்கு வந்து விட, மாலதி மீண்டும் கணவனுடன் வந்து தங்க, மாலதி கர்ப்பவதியாகின்றாள். சாந்தாவின் அம்மா, அதாவது மாலதியின் அம்மா சாந்தா இனி என்ன செய்வது என்று கேட்க, என் மீது பாசமிருக்கா என்றெல்லாம் ஆலாபனை செய்து தன் கணவனைக் கட்டிக் கொள்ள வைத்த தங்கையை, அதை அவளே முடிவு செய்யட்டும் என்கிறாள் மாலதி. வெறுத்துப் போன சாந்தா இரண்டு மாதங்களாய் தாய் வீட்டில் இருந்தும் கவனிக்காத பிரபாகரன், தங்கையைக் கண்டுகொள்ளாத மாலதி இவர்களுக்கிடையே மனத்துன்பம் அடையும் சாந்தா, தற்கொலை செய்து கொள்கிறாள். இது தான் கதை.

மாலதி தன் தங்கையை தனக்காக தியாகம் செய்யச் சொல்கிறாள். இந்தக் கதையின் மூலம் நாம் முக்கியமான படிப்பினை அறிந்து கொள்ள வேண்டும். பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்களே அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். தியாகம் யாருக்காசச் செய்கிறமோ அவர்களுக்கு அதைப் பெற தகுதியும் வேண்டும், யாருக்காக தியாகம் செய்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தியாகம் என்ற பெயரால் ஏமாற்றப்பட நேரிடும். உலகில் “ஏமாளிகள்” அதிகம். ஏனென்றால் அவர்களைத் தியாகிகள் என்கிறார்கள். தியாகிகளின் இன்றைய நிலை பென்சன் என்பதுதான் முடிவு.

சாகித்ய அகாதமி விருதுக்கு இக்கதை தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் தான் இன்னும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எனக்குப் புரியாத இக்கதை தேர்வாளர்களுக்குப் புரிந்திருக்குமோ? தெரியவில்லை. உலகில் தெரிந்து கொள்ள முடியவே முடியாத விஷயங்கள் தானே அதிகம். சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இன்னும் பல நூல்களைப் படித்துப் பார்த்து எழுத முயற்சிக்கிறேன். தற்போதைக்கு சாகித்ய அகாதமி ஏதோ எரிச்சல் தான் இருக்கிறது. தகுதி உடையவர்களை சமூகம் அங்கீகரிக்க வேறு விதிகள் வைத்திருக்கும் போல.

- கோவை எம் தங்கவேல்
24/11/2011 - 11 .26 ஏஎம்.

* * * * *

பணம் என்றால் என்ன?



பணம் என்கிற பொருள் மனிதர்களின் வாழ்க்கையை நிர்மாணிக்கும் ஒரு சக்தி. பெரும்பகுதி மக்கள் பணத்தேடலில் தான் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு அரசு ஊழியரை எடுத்துக் கொள்ளுங்கள். 58 வயது வரையிலும் உழைத்துக் கொண்டிருப்பார். ரிட்டயர்ட்மெண்ட் ஆனதும் கிடைக்கும் பென்ஷனில் நிம்மதியாய் வாழ்கிறோம் என்று நினைக்கும் தருவாயில் அவர் அடையும் மனக்குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசு அலுவலில் இருந்து ரிட்டயர்ட் ஆன பல நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது “ மிக மோசமான வாழ்க்கை” என்ற வாக்கியத்தை அவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.

அரசு வேலை, நிரந்தர வருமானம், நிம்மதியான வாழ்க்கை என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தோம் என்பார்கள் அவர்கள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் ஏகப்பட்ட நிராசைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் போன்றோர்களுக்கு சொல்வெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அடைந்திருக்கும் மனக்குழப்பத்திற்குக் காரணம் சமூகத்தின் பிரதிபலிப்பு. மனித சமூகம் மனிதர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் வந்த பிரச்சினை இது. இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அதெல்லாம் மனதைச் சுடும் உண்மைகள். நேரமிருக்கும் போது எழுதுகிறேன்.

கோவை ஆவாரம்பாளையம் சென்றிருந்தேன். போன வேலை முடிந்து பேக்கரி ஒன்றில் “லெமன் டீ” ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்கோடா கார் ஒன்று அருகில் வந்து நின்றது. நண்பரின் நண்பர் அவர். சாதாரண ரிஸ்ட் வாட்ச், வெகு சாதாரண பேண்ட், சர்ட்டில் இருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட, “தங்கம், என்னுடன் வருகின்றீர்களா, ஒரு இடத்திற்குச் சென்று வரலாம், நீங்கள் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

கோவையின் மிகப் பிரதான இடத்தில் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான்கு மாடி குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்றார். வேலை செய்து கொண்டிருந்தோர் இவரைப் பார்த்ததும் ஒரு வித அட்டென்ஷன் நிலைக்கு வர, இவர்தான் ஓனர் என்று முடிவு கட்டினேன். கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் இன்வெஸ்ட்மெண்ட். ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. வெகு சாதாரணமாய் இருப்போரிடம் இப்படி ஒரு திறமை. குடியிருப்பினை பார்வையிட்டு விட்டு, மீண்டும் அந்த ‘லெமன் டீ’ கடைக்கு வந்து சேர்ந்தோம். மார்க்கெட்டிங் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.

25 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு பெருக்கி இருக்கிறது. எப்படி என்ற காரணத்தை அவர் சொல்லக் கேட்டேன். அவர் எதுவும் புதிதாய்ச் சொல்லி விடவில்லை. அவர் சொன்னது எல்லாம் பல புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பதுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் 50 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. எவராவது சொந்தக்காரர் வந்தால் 1000 ரூபாய் கொடுக்க அவரால் முடியாது. ஏனென்றால் அத்தனை காசு இருந்தும், அந்தக் காசு அவருக்கு உபயோகப்படவில்லை. அதை வைத்து, அவரால் தொடர்ந்து சம்பாதிக்க முடியவில்லை.  உண்மைக் காரணம் அவருக்கு புத்திசாலித்தனம் இல்லை.

புத்திசாலித்தனம் என்றால் என்ன என்பதற்கு ஒரு கதை.

நிலத்துடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் என் நண்பரொருவர் 20 அறைகள் கொண்ட காம்பளக்ஸைக் கட்டினார். அதை பெரிய நிறுவனம் ஒன்று வாடகைக்கு எடுத்தது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் வாடகை. இரண்டு தேதிக்குள் வங்கியில் சேர்ந்து விடும். இவ்வளவு வாடகை கொடுக்கும் அந்த நிறுவனத்திற்கு, இந்த வாடகைச் செலவால் மாதம் ஐந்து லட்ச ரூபாய் செலவு மிச்சமாகி லாபமாகி விட்டது. எப்படி என்கின்றீர்களா? அந்த நிறுவனம் வெளி நாட்டில் இருந்து வரும் கிளையண்டுகளுக்கு தங்குமிடம், உணவு என்ற வகையில் தினம் தோறும் 25,000 ரூபாய் செலவு செய்து வந்தது. இப்போது யார் வந்தாலும் தங்குமிடம் ஸ்டார் ஹோட்டலுக்கும் நிகராய் இருக்கிறது. மாத வாடகை ஒன்றரை லட்சத்துடன், அரை லட்சத்தில் உணவுச் செலவும் ஆகிவிடுகிறது. இருவருக்கு லாபம். எவர் கொடுப்பார் ஒரு கோடிக்கு ஒன்றரை லட்சம் வருமானம்? அதுவும் வெள்ளையில். ஒரு கோடி போட்டு, அதன் மூலம் வருமானம் பெற்ற நண்பரும் புத்திசாலி, ஒன்றரை லட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த கம்பெனியும் புத்திசாலி. தினம் 5000 ரூபாய் செலவுக்கு நண்பருக்கு பணம் வந்து விடுகிறது. நண்பர் இப்போது அடுத்த புராஜெக்ட்டிற்கு நிலம் வேண்டுமென என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

எவர் வேண்டுமானாலும் பணம் வைத்திருக்கலாம். அப்பணம் மேலும் பணத்தினைச் சம்பாதித்துத் தர வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்? அது மண்ணுக்குச் சமானம் அல்லவா?

பணம் என்பது என்னவென்றால் அது மீண்டும் மீண்டும் பல்கிப் பெருகி வழிய வேண்டும். அப்படிப் பெருகவில்லை என்றால் அப்பணமிருந்தும் இல்லை என்பதே உண்மை.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, November 16, 2011

ஏமாற்றும் மருத்துவமனைகள்



எனது நண்பரின் நண்பரொருவருக்கு கண்ணில் பிரச்சினை இருப்பது போலத் தோன்றியிருக்கிறது. இந்தியாவில் பிரபலமான ஐ ஹேர் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்கிறார். கண்ணில் புரை ஏற்பட்டிருக்கிறது. 25 ஆயிரம் ரூபாய் செலவாகும், உடனே அட்மிட் ஆகுங்கள் இல்லையென்றால் கண் பார்வை போய் விடும் என்றுச் சொல்லி இருக்கிறார். இவருக்கோ பணப்பிரச்சினை வேறு, கண் பார்வை போய்விடுமே என்ற கவலையில் ஆளே ஒரு மாதிரியாகி விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் மன வேதனையோடு எவரிடமும் சொல்லாமல் திரிந்திருக்கிறார்.

இப்படியான ஒரு நாளில், சரி குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வருவோம் என்று நினைத்து, கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி விட்டு வந்திருக்கிறார். காலையில் கண்ணில் இருந்த உறுத்தல் குறைந்தது போல இருந்திருக்கிறது. அடுத்த யோசனையாக வேறு கண் மருத்துவமனைக்குச் சென்று செக்கிங்க் செய்து விட்டு வருவோம் என்று நினைத்துச் சென்றவருக்கு, அம்மருத்துவமனையின் பதில் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கண் புரை இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் ஐ கேர் மருத்துவமனையில் இருந்து “எப்போது வருகின்றீர்கள்” என்று டாக்டரே போனில் அழைத்திருக்கிறார். இவரும் ஏதோ சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

அத்துடன் விடாமல் மேலும் ஒரு மருத்துவமனைக்குச் சென்று செக்கிங் செய்தால், அங்கும் இவருக்கு கண் புரை நோய் இல்லை என்றேச் சொல்லி இருக்கிறார்கள்.

25 ஆயிரம் ரூபாயை பிடுங்க முயற்சித்திருக்கும் இம்மருத்துவமனை அடிக்கடி டிவியில் விளம்பரங்களையும், பெரிய பெரிய இடங்களில் மருத்துவமனையும் கட்டி வருகிறது.

இந்திய சுகாதாரத்துறை இம்மாதிரியான மருத்துவமனைகளின் திருட்டுத்தனத்தை கட்டுப்படுத்த ஏதுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒன்றும் கோடிக்கணக்கில் செலவழிக்கும் நடவடிக்கை இல்லை. சரியான திட்டமிடல் செய்தால் இந்தியாவெங்கும் நடக்கும் ஆஃபரேஷன்களைக் கூட கண்காணிக்கலாம். டெக்னாலஜி அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்திய அரசு இப்படியான மோசடி மருத்துவமனைகள் நடத்துவோரைக் கண்டறிந்து உடனடியாக ஹாஸ்பிட்டலை மூட வேண்டும். 

கிட்னி திருட்டில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனைகள் பலவும் தற்போதும் கிட்னி திருடி கல்லாக்கட்டி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தினசரிகளில் வெளியான கிட்னி திருடிய ஹாஸ்பிட்டல்களின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை. இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன் செயல்பாட்டினை துரிதப்படுத்தவில்லை எனில் நாளடைவில் மோசடி மருத்துவமனைகள் புற்றீசலாய் பெருகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

உயிரோசையில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரையினை நீங்கள் அனைவரும் படித்தே ஆக வேண்டும். இதோ அதன் இணைப்பு.


அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, November 15, 2011

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.

  
குறிப்பு : முடிந்த வரையில் எனது பிளாக்கில் எனது அனுபவங்களையும், நண்பர்களின் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். படிக்கும் ந்ண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். பின்னூட்டத்தை நிறுத்தி விட்டேன். என்னை மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். அல்லது போனில் அழைக்கவும்.

விரைவில் ஹாஸ்பிட்டல்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள உங்களை அறிவுறுத்தும் ஒரு பதிவினை எழுத இருக்கிறேன். இது உங்களுக்கு நிச்சயம் உதவிகரமாய் இருக்கும் என நம்புகிறேன்.

இதைத் தொடர்ந்து லே அவுட்களில் சொத்துக்கள் வாங்குவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் எழுத உள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

-அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 14, 2011

வெள்ளை மரணம் - பரோட்டா

 
 
 
 
 
நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது, பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர உண்டாகியது.

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்  உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.

மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R) இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது. இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம் என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.
 
இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.

ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !
 
- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *


Saturday, November 12, 2011

சிவன்-எமன்-உணவு

 (ராமேஸ்வரம் ஆயிரம் கால் மண்டபம்)
 
சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது.  காவிரி புரண்டோடும் இயற்கை கொஞ்சும் அழகிய பூமியான தஞ்சாவூரில் இருக்கும் எனது நெருங்கிய நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பரின் அம்மா, வெகு ஆச்சாரமானவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லியது கீழே.

மனிதர்களின் ஆயுள் முடிந்த பிறகு எமன் வந்து பாசக்கயிற்றை வீசி மேலே அழைத்துச் செல்வானாம். அப்போது ஒவ்வொருவரும் எமனைத் திட்டியும், வைதும், பழி போட்டும், இன்னபிறவும் செய்து கடிந்து கொள்வார்களாம். உனது காலம் முடிந்து விட்டது, வா போகலாம் என்றழைத்தாலே வசைமாரி பொழிவார்களாம். எமனுக்கோ ஒரே அவஸ்தை. நானும் ஒரு கடவுள் தானே. தர்மத்தின் தலைவன் அல்லவா நான். என்னை மட்டும் மக்கள் இப்படி வைகின்றார்களே என்ற ஆதங்கத்தில், சிவபெருமானிடம் மக்கள் ஏன் என்னை மட்டும் திட்டுகின்றார்கள், இதற்கொரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதன்பிறகு சிறிது நேரம் யோசித்த சிவபெருமான், எமனிடம் இனிமேல் மக்கள் உன்னைத் திட்டமாட்டார்கள் என்றுச் சொல்கிறார். எப்படி என்று உங்களுக்குப் புரிகிறதா?

இன்றைய காலத்தில் ஆக்சிடெண்டில் இறந்து போய் விட்டார், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார், காய்ச்சலில் போய் விட்டார், புற்று நோயில் போய் விட்டார், கிட்னிப் பிராப்ளத்தில் போய் விட்டார் என்றுச் சொல்கிறார்கள். எவரும் எமன் கொண்டு போய் விட்டான் என்றுச் சொல்ல மாட்டார்கள். இங்குதான் பகவானின் சூத்திரம் இருக்கிறது என்றார் நண்பரின் அம்மா.

எமனின் வேண்டுகோளினை ஏற்று மனிதர்களுக்கு நோயை உண்டாக்கினார் சிவபெருமான். அன்றிலிருந்து எவரும் எமனைத் திட்டுவதில்லை என்றார். நோய் ஏன் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். உணவு, காற்று இவற்றிலிருந்து தான் நோய் வருகிறது. ஆக மனிதனுக்கு நோயை அவன் உண்ணும் உணவின் மூலமாக உண்டாக வைத்தார் சிவபெருமான் என்று முடித்தார் அம்மா.

நண்பர் சாப்பிடலாம் வாங்க என்று அழைக்க, சாப்பிடச் சென்றேன்.

வடை, பாயசம், சாம்பார், ரசம், தயிர், உருளைக் கிழங்கு பொறியல், வாழைக்காய் வறுவல், மரவள்ளிக் கிழங்கு பொறியல், கீரை என்ற மெனுவைப் பார்த்தேன். அம்மாவைப் பார்த்தேன். சிவபெருமானும் எமனும் மனதுக்குள் நிழலாடினார்கள்.

- கோவை எம் தங்கவேல்.

Monday, November 7, 2011

கொழுப்பைக் குறைக்கும் மாங்காய் இஞ்சி


எனக்குப் பிடித்த ஊறுகாய் மா இஞ்சி. உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன். மாங்காய் இஞ்சி பற்றிய முக்கியக் குறிப்புகள் தேடிக் கொண்டிருந்த போது குமுதம் ஹெல்த்தில் இக்கட்டுரை கிடைத்தது. மாங்காய் இஞ்சியின் மகத்துவம் பற்றித் தெரியாதவர்களுக்கு உபயோகப்படுமே என்பதால் இங்கு பதிவிடுகிறேன். இப்பதிவு படிப்பவர்களுக்கு உபயோகமாய் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி : குமுதம் ஹெல்த்

இனி மாங்காய் இஞ்சி பற்றிய கட்டுரை

இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.

மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

பயன்பெறும் பாகம்:
இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவரவியலில் ரைசோம்  என்று அழைக்கிறார்கள்.

பெயர் வந்த விதம்:
மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.

அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்:
நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.

மாங்காய் வாசனையின் காரணம்:
மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் - ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள் மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!
மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.

வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும்  தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு. வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து  சாதத்துடன்   சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.

குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து  சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.

மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்

1. மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
2. துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
3. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
4. மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
5. மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
6. மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
7. மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
8. மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.
9. மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
10. மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா. 

* * *

Saturday, October 29, 2011

மறக்க முடியாத தீபாவளி

ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், தீபாவளி நாள் அன்று நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர்களுடன் தீபாவளி வாழ்த்த்துக்களை பகிர்ந்து கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது என்னிடம் படித்த ஆறாம் வகுப்பு பையன் ஒருவன் என்னைப் பார்த்துக் கையை ஆட்டினான்.

வண்டியை நிறுத்தி, அவனை அருகில் வரும்படி அழைத்தேன். 

“வீட்டுக்கு வாரீங்களா சார் !” என்றான்.

”வீடு எங்கேப்பா இருக்கு ?” என்று கேட்டு அவனை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றேன்.

குளிர்ச்சி தரும் தென்னை ஓலைகள் வேய்ந்த, அழகாய் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீடு. வீட்டின் முகப்பில் கோலமிட்டு இருந்தது. மாணவனின் அப்பாவும், அம்மாவும் வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வர மாணவன் வண்டியில் இருந்து குதித்து அவர்கள் அருகில் ஓடி என்னை “அப்பா, எங்க இவருதான் கம்யூட்டர் சாரு” என்றான்.

இருவருக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அருகில் வந்து “வாங்க வாங்க” என்றழைத்தவர்கள் வீட்டிற்குள் அழைக்க தயக்கத்தோடு நின்றனர்.

”சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றேன். வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.

வழு வழுவென்று மெழுகிய தரைகள். அதன் மீது பாய் போடப்பட்டு அமர்ந்து கொண்டேன்.

இடதுபுறமாய் சமையலறை. மண்சட்டிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாவரைக்கும் கல்லில் அரைத்த மெதுவடை, சுழியம் இரண்டும் கொண்டு வந்து தந்தார்கள். வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்பா என்ன ஒரு சுவையாக இருந்தன தெரியுமா? என்னைப் பற்றி விசாரித்தார்கள்.மாணவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டே அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

“மதியம் என்ன சமைக்கப் போகின்றீர்கள்?” என்றேன்.

“சாம்பார், பாயசம் சார்” என்றான் மாணவன்.

”எனக்கும் கொஞ்சம் சேர்ந்து சமைத்து விடுங்களேன், இருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறேன்” என்றேன்.

நிகழ்காலத்தில் படித்த போது பாத்திரத்திப் பொறுத்தது உணவின் சுவையும் தரமும் படித்த போது என் மாணவன் வீட்டில் சாப்பிட்ட சாம்பாரின் சுவை நினைவுக்கு வந்தது. இதுவரை எத்தனையோ ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். வித விதமாய் சமைத்துப் போடும் மனைவியின் கைப்பக்குவம் கூட மாணவன் வீட்டில் வைத்திருந்த சாம்பாருக்கு நிகராக இல்லை.

அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்வார்கள். நான் ஆசிரியராக இருந்த காலம் முழுவதும் தீபாவளி தினங்களில் மாணவனின் வீட்டுச் சாப்பாடே எனக்கு அமிர்தமாய் இருந்தது. அம்மாணவன் இப்போது என்ன செய்கின்றானோ தெரியவில்லை. அவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

* * *