குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label உதயசந்திரா. Show all posts
Showing posts with label உதயசந்திரா. Show all posts

Saturday, January 9, 2021

ஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழரும் தமிழ் இனமும் எவ்வாறெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வந்தன என்பதை பல்வேறு புத்தகங்கள் மூலம் கடந்த காலத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன்.

இணையதளங்களில் அவ்வகையான பல்வேறு புத்தகங்கள் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதியவை படிக்க கிடைக்கின்றன.

நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள். இரத்தம் கொதிக்கும்.

சுய நலப் பேய்களால், நய வஞ்சகர்களால் தமிழினமும், தமிழர் பண்பாடும் அதிகாரத்துக்காகவும், சொகுசாக வாழவும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அது இன்றும் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கின்றன. இனி இழக்க ஒன்றுமில்லை என்கிற போது நாம் எல்லாவற்றையும் இழந்திருப்போம். அதற்குள் விழித்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

பொங்கலுக்கு 2500 ரூபாய் வாங்க வரிசையில் நிற்கும் அவலமான வாழ்வியல் சூழலில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு காரணமானவற்றை ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதிலிருந்து வெளி வர முயற்சியுங்கள்.

நம் பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டையும் தடை செய்தார்கள். போராடிய மாணவர்களை முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம் போலீஸை வைத்து அடித்து துவைத்து எறிந்த காட்சிகளும், கடலுக்குள் அவர்களை உயிரோடு சமாதி வைக்க துணிந்த காட்சிகளையும், காவல்துறையினர் ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்திய வீடியோக்களும் இன்னமும் இணையதளங்களில் காணக்கிடைக்கின்றன. 

ஒவ்வொன்றையும் என்றைக்கும் மறந்து விடாதீர்கள். மறக்கவே மறக்காதீர்கள். இனி வரக்கூடிய நாட்களில் எவரெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்பதை உள்ளத்தில் அணையா எரிமலை போல வளர்த்து வாருங்கள். இவற்றை உலகிற்கும், உங்கள் நட்புக்களுக்கும் கொண்டு செல்லுங்கள். அதுதான் நம்மைத் தொடர்ந்து வாழ இருக்கும் சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவி.

இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்தக் கதை நிஜக்கதை. சாட்சிகள் உண்டு.

ஒரு நடிகை நகைக்கடை திறக்க வந்தால், அங்கு கூடும் கூட்டத்தின் அளவு எண்ணிலடங்காதவை. ஏன் நடிகை வந்தால் இத்தனை கூட்டம் கூடுகிறது? காரணம் அவள் நடிகை. கூட்டம் கூடி என்ன செய்யும்? அவள் சிரிப்பதையும், கை ஆட்டுவதையும், அவளின் அங்கங்கள் அசைவதையும் பார்த்து ரசிக்க. 

கூட்டம் அவளை ரசித்த பிறகு, அவள் கடை திறப்பு விழாவுக்கு வந்து கையை ஆட்டி விட்டு போகும் போது கை நிறைய காசைக் கறந்து கொண்டு போய் விடுவாள். கூடிய கூட்டமோ வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் ஈ என இளித்துக் கொண்டு கிளம்பும்.

ஒரு நிமிடம் யோசித்தீர்களா? இதனால் யாருக்கு என்ன பயன் என்று. இன்றைக்கு ஒவ்வொரு நடிகைகளும் இன்ஸ்டாவில் தீயாய் சூட்டைக் கிளப்பும் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார்கள். ஏனென்று என்றாவது ஒரு நாள் யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இத்தனை கோடி ரசிகர்கள் அவளைப் பின் தொடர்கிறார்கள் என்றால் இன்ஸ்டா மற்றும் ஒரு சில நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அவளுக்கு வாரி வழங்குகின்றன என்பது எவருக்கேனும் தெரியுமா? 

கஷ்டப்பட்டு ஜிபிக்கு ரீசார்ஜ் செய்து, நடிகை போடும் ஆபாச படத்தினைப் பார்த்து விட்டு கவட்டிக்குள் நாய் காலால் சொரிவதைப் போல சொரிந்து கொள்வதைத் தவிர வேறு என்ன பலன் கிடைக்கும்?

யோசித்திருக்க மாட்டீர்கள் என்பதை நன்கு அறிவேன். 

ஏனென்றால் நடிகனுக்கு நாட்டை ஆளக் கொடுத்த பரம்பரை நாம். நடிகைக்காக கோவில் கட்டிய பரம்பரை நாம். 

உலகிற்கு பொது மறை கொடுத்த திருவள்ளுவர் பிறந்த நாட்டில் வாழும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் ஊன் குழியைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் அவலத்தில் வாழ்கிறோம்.

வயதான நடிகன், நடிகையை திரையில் தடவுவதைப் பார்த்து, அவன் அவளின் கவட்டியை விரித்துக் காட்ட, அதனை விழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருக்கும் படு ஈனமான வாழ்க்கையில் வாழ்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் சொத்துக்கள், உறவுகள், படிப்பு ஆகியவை இருக்கின்றனவோ என்னவோ, ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் சினிமா ஹீரோவுக்கு ரசிகனும், ரசிகையும் இருக்கிறார்கள். அவரவர் வீட்டிலும் ஒரு நடிகன் போட்டோவோ அல்லது நடிகையின் போட்டோவோ இருக்கும்.

நானும், என் பிள்ளைகளின் உங்களின் தீவிர ரசிகர்கள் என்றுச் சொல்வதில் புளகாங்கிதம் அடையும் உள்ளங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம்.

ஒரு நடிகை வருகிறாள் என்றால் பசி, தூக்கம், துன்பம், வெயில் எதுவும் பார்க்காமல் அவளைப் பார்க்க மணிக்கணக்கில் விழித்திரை மூடாமல் காத்துக் கொண்டிருக்கும் பரம்பரையில் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாவற்றையும் நடிகனுக்கும், நடிகைக்கும் கொடுத்துக் கொடுத்தே எல்லாவற்றையும் இழந்து கல்வி படிக்க சீட்டுக்கும், மருத்துவத்துக்கும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நடிகை படத்தில் நடிக்கிறாள் என்றால் அவளின் திரைப்படத்திற்கு பின்பான வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க மாட்டீர்கள். 

இதோ உதயசந்திரா என்ற நடிகையின் வாழ்க்கையும், அவரின் சொத்துக்கள் பற்றிய ஒரு சில விபரங்கள் கீழே.

ஆர்.ஆர்.ஹாலிடேஸ் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இதன் கீழ் யூடிஎஸ் ஹோட்டல் நிறுவனத்தில் கோவளத்தில் ஒரு ஹோட்டல், சங்குமுகம் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல், ஆலப்புழாவில் ஒரு ஹோட்டல், வாகாமன் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல், ஹவ்தியார் என்ற இடத்தில் ஒரு ஒரு அழகு நிலையம். இது மட்டுமா இரண்டு எலக்ட்ரோட் தயார் செய்யும் நிறுவனங்கள், இரண்டு உணவு ஹோட்டல்கள் இது போல இன்னும் பல சொத்துக்கள். இத்தனைச் சொத்துக்களையும் நடிகையும், நடிகையின் அன்புக் கணவரும், இவர்களின் பிள்ளைகளும் நிர்வகிக்கின்றார்கள். மொத்தமாய் ஒரு ஆயிரம் கோடிக்கும் மேல் வரும் சொத்து மதிப்பு.

அவர்கள் நன்றாக வாழணும், வாழ வேண்டும். கடின உழைப்பைக் கொட்டி சம்பாதித்த துட்டு. ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஒய்யாரமாய் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு, ரசிகனின் கனவுக் கன்னியாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் நன்றாக வாழட்டும். அவர்களை வாழ்த்துகிறோம். 

கனவுக் கன்னிகளை உருவாக்கும் ரசிகனின் நிலை என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கனவு ஹீரோக்களை சிலாகித்து அவர்கள் பின்னே திரியும் ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழல் என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

கனவுக் கன்னியும், ஹீரோவும் ஒவ்வொரு ரசிகனால் எவ்வளவு துட்டுகளை சம்பாதிக்கின்றார்கள் என்று பாருங்கள்.

உலகமே கொரானாவினால் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆறு மாத காலம் நடிக்க 50 கோடியைச் சம்பளமாக வாங்கும் நடிகன் சினிமா தியேட்டரில் முழு கொள்ளளவு ரசிகர்களை அமர வைக்க வேண்டுமென்று மாபெரும் போராளி, மக்களுக்காகவே வாழும் உத்தமர் எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் சென்ற அடுத்த நொடி, அரசே ஆணை பிறப்பிக்கிறது.

அப்படி என்ன அந்த நடிகன் அரசுக்கும், மக்களுக்கும் செய்திருக்கிறான் என்று தெரியவில்லை. 

ரசிகன் என்று வீட்டில் எவராது சொன்னால் வாயில் சுடு தண்ணீரை கொட்டுங்கள். தீவிர ரசிகர்கள் என்றால் அவர்கள் நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு என்று தெரிய வையுங்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில். அதை நாம் தான் வாழ வேண்டும். நடிகனோ கனவுக் கன்னியோ வாழ வைப்பதில்லை.

ஏமாளி ரசிகனால் கோடிகளுக்கு அதிபதி ஆகின்றார்கள். அதை உணர்ந்து கொள்ளுங்கள். நடிகன் வந்தால் நாய்க்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுக்காதீர்கள். அவனைப் பார்க்க செல்கிறேன் என்று எவராவது கிளம்பினால் சூட்டுக் கோலால் சுட்டு வையுங்கள். அடுத்த வேளை பசிக்கும். அப்பசிக்கு நீங்களும் நானும் உழைக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் எரியும் தீக்கு இரையாவோம்.

எது நிதர்சனம்? எது உண்மை? எது அவசியம்? எது தேவை? எது தேவையில்லாதது? எது நம்மை அழிக்கிறது? எது நம்மை வாழ வைக்கிறது? என்று உணருங்கள்.

சரி, இனி சாட்சிக்கு வருகிறேன்.

யார் அந்த உதய சந்திரா? என்று கேட்பீர்களே? இதோ அவரின் புகைப்படம். இவரின் கட்டுரை இணைப்பு கீழே இருக்கிறது. ஏதோ பொறாமையால் எழுதி இருக்கிறேன் என்று நினைப்பீர்கள். அவ்வாறு நினைக்காவிட்டால் அது அதிசயம். அப்படி நினைத்தால் அது உங்கள் பிரச்சினை. எனக்கு நான் வாழும் சமூகம் தெளிவாக வாழ வேண்டுமென்ற ஆவல் உண்டு. அதற்குதான் இந்தப் பதிவு.

நன்றி விகடன்.


நடிகை ராதாவின் உண்மை  பெயர் உதயசந்திரா

இவரின் ஹோட்டல் இணையதளம் : https://udshotels.com/


நேரம் இருப்பின் ஹோட்டல் இணைப்பினை சொடுக்கிப் பாருங்கள். விருப்பமிருந்தால் ஹோட்டலில் தங்கி இளைப்பாறலாம். அடியேன் ஆலப்புழாவில் ராதாவின் ஹோட்டல் அருகில் இருக்கும் புராதன ரிசார்ட்டில் ஒரு நாள் வாசம் செய்திருக்கிறேன். ஆலப்புழா இயற்கையின்  சொர்க்கம்.