குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 14, 2016

நிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடாது

1900 ஆண்டுகளுக்கு முன்னாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நிலச் சுவான்தாரர்களின் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு யாரோ ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருந்தார். பிறர் எல்லாம் விவசாயக்கூலிகளாக மட்டுமே இருக்க முடிந்தது. 

நிலச்சுவான்தாரர்கள் வைத்ததே சட்டம். ஊரே அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தது. அவர்களை எதிர்த்தவர்கள் ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். இது பற்றிய பல்வேறு புனைவுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். காந்தியின் சீடராக இருந்தவர் ஆச்சாரியார் வினோபா பாவே. அவர்கள் காந்தீயமார்க்கத்தை முன்னிறுத்தி சமுதாயத்தில் நிலவும் ஏழை பணக்கார தாழ்வுகளை சரி செய்திட தன் இயல்புகொண்ட காந்திய இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு பூமி தான யக்ஞ இயக்கத்தை துவங்கினார்.

பெரிய நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களை நன்கொடையாகப் பெற்று ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டுமென்ற நோக்கில் பூமி தான இயக்கத்தை ஆச்சாரியார் வினோபா பாவே அவர் 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்து நடத்தினார். தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அதன் காரணமாக தமிழகத்தில் இருந்த பல்வேறு நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் பல ஏக்கர் நிலங்களை பூமி தான இயக்கத்துக்கு நன்கொடையாக கொடுத்தனர். 

அவ்வாறு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அளந்து அறுதியிடப்பட்டு தாசில்தாரால் பூமி தான இயக்கத்தின் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக நன்கொடையாகப் பெறப்பட்டவை சுமார் 28126 ஏக்கர். தானம் கொடுக்கப்பட்டவை சுமார் 20,290 ஏக்கர். மீதமுள்ளவை சுமார் 7800 ஏக்கர் நிலங்கள் (ஆதாரம் அரசாணை எண்.144/2016). மீதமுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் பொசிசன் எடுக்க இயலாமல் இருக்கின்றன. 

இந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது. பூமி தான இயக்கம் பெயரில் பட்டா வழங்கப்பட்ட பூமிகளை அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது. தொடர்ந்து வாரிசுகள் மட்டுமே அனுபவித்து வரலாம். இந்த வகை நிலங்களை வேறு எவரும் வாங்கவும் கூடாது விற்கவும் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழக மெங்கும் பூமி தான இயக்க பூமிகள் இருக்கின்றன. சில நடைமுறைச் சிக்கல்களினால் நில வருவாய் துறையினரால் சரி வர பூமி தான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பூமிகளின் நிலங்களின் விவரங்களை கையாள முடியவில்லை என்பதால் இன்றைக்கு அரசு தனியாக கமிஷனரேட் லேண்ட் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பூமிதான இயக்க பூமியினைப் பராமரித்து வருகின்றது. ஆகவே பூமிகள் வாங்குவோர் பழைய ஆவணங்களை பெற்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மேலதிக விபரம் தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.