குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 10, 2016

கிளைகளை வெட்டாதீர்கள் வேர்களை வெட்டுங்கள்


முல்லா நஸ்ருதீன் இந்தியா வந்திருந்த போது அவருக்கு மிகுந்த பசி எடுத்திருந்தது. இமயமலையின் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்த இடத்தில் ஒருவன் அழகான கூடையில் நீண்ட சிவப்பான பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த முல்லாவுக்கு அந்த அழகிய சிவப்பு வண்ண பழங்களைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. பசியும் மிகுந்த காரணத்தினால், அந்தப் பழக்கூடைக்காரனிடம் சென்று விலையைக் கேட்டார்.

“ஒரு கூடைப் பழம் இரண்டே பைசா” என்றான் அவன்.

அந்தக் கூடையை விலைக்கு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார் முல்லா.

அது செம காரம்.

அவரின் கண்களிலிருந்து கண்ணீராய்க் கொட்டியது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் சொன்னான். “என்ன செய்து கொண்டிருக்கின்றீர்? அது மருத்துவ குணம் கொண்ட பழம். சில நோய்களுக்கு ஒன்றோ அல்லத் இரண்டோ சாப்பிட வேண்டும். நீங்கள் என்னடாவென்றால் எல்லாப் பழங்களையும் சாப்பிடுகின்றீர்களே? செத்து விடப்போகின்றீர்கள். அல்லது உங்களக்கு பைத்தியம் பிடித்து விடும்”

முல்லா சொன்னார்,” எது வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் நான் இரண்டு பைசா கொடுத்து வாங்கி இருக்கிறேன், ஆகவே முழுமையாகச் சாப்பிட்டே ஆக வேண்டும்”

* * *

கிளைகளை வெட்டாதீர்கள், வேர்களை வெட்டுங்கள் என்றுச் சொன்னவர் யோக்கா. நாம் இன்னும் கிளைகளை மட்டுமே வெட்டிக் கொண்டிருக்கிறோம். வேர் எது? கிளை எது என்பது பற்றிய புரிதலில்லாதவர்களுக்கு எதை வெட்டுவது என்பது புரிவதில்லை.

* * *
ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.