குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 1, 2012

தமிழ் சினிமாவில் புத்திசாலிகளின் பிசினஸ்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புரட்சிகள் நடக்கும். திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வரின் வாரிசுகள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி சர்ச்சைகளையும், வெற்றிகளையும் குவித்தனர். கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் இறங்கி வெற்றிகளைக் குவித்தன(உண்மையா என்று தெரியவில்லை). ஆனால் பெரும்பாலான கார்ப்பொரேட் நிறுவனங்களின் சினிமாக்கள் தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை. சன் க்ரூப்பின் முதல் படம் மட்டுமே பெருத்த லாபத்தைக் கொடுத்தது என்று சினிமா இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள்.

கார்பொரேட் நிறுவனங்களின் சட்டங்கள், திட்டங்கள், செயலாக்கங்கள் எதுவும் அதுவும் தமிழ் சினிமா உலகத்தில் பெரிய வெற்றியைத் தந்திட முடியாது. ஹாலிவுட் சினிமாவின் உருவாக்கம் போல தமிழ் சினிமாவில் பெரும் நிறுவனங்கள் சாதிக்க வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

கிட்டத்தட்ட 31 சாட்டிலைட் சானல்கள், ஏழு பத்திரிக்கைகள், 48 எஃப் எம் சானல்கள், ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் சன் குழுமத்தினால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இதை விட பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தற்போது ஏதும் இல்லை. சமீபத்தில் தான் சினிமாவின் பெரிய சாதனையாளர் ஒருவர் “கார்ப்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நின்று விட்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பேசினார்.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்கள்தான் அதிகம் இழந்திருக்கின்றார்கள். ஆனால் டெக்னீசியன்களும், நடிகர்களும் பெரும்பான்மையானவர்கள் எவரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைத்தான் சந்தித்திருக்கின்றார்கள் என்றுச் சொல்வார்கள். ஆனால் சிலர் சினிமாவை தன் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமான பிசினஸ்ஸாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சன் குழுமத்தின் மூலம் நில மோசடியில் கைதான சக்சேனா அவர்கள் தற்போது படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்திருக்கின்றார். அவரின் பேனரில் தினத்தந்தியில் “சாருலதா” படத்தின் பெயர் பளிச்சிடுகிறது. ஏற்கனவே இருக்கும் சினிமா அனுபவத்தில் வெகு எளிதாக இந்த பிசினஸ்ஸை அவரால் வெற்றிகரமாக நடத்தி விட முடியும். ஏரியாவிற்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைத்தால் போதுமே. அதைத்தான் இவரைப் போன்றவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வேந்தர் டிவி சார்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டு, நல்ல லாபத்தோடு விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழகத்தின் பெரிய பஸ் கம்பெனி ஒன்று சினிமா வியாபாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களாம்.

புத்திசாலிகளின் பிசினஸ் இப்படித்தான் இருக்கும்.

கதை கேட்க வேண்டியதில்லை, இயக்குனருடன் சண்டை பிடிக்க வேண்டியதில்லை இப்படி பலப்பல தயாரிப்புப் பிரச்சினைகள் இல்லாமல் சினிமாவில் பிசினஸ் செய்து லாபம் ஈட்டுவது என்பது புத்திசாலிகளின் பிசினஸ்தானே.

- கோவை எம் தங்கவேல்


2 comments:

Anonymous said...

நீங்கள் சொல்வது சரிதான்...

வேந்தர் மூவிஸ் ராட்டினம் படத்தை வாங்கி அவர்களது சேனலில் கூட அந்த அளவுக்கு விளம்பரப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக அலசி உள்ளீர்கள்...
நன்றி...



பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.