குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, February 13, 2012

பூச்சுமை

கரிசல் பூமி ஏழைகளை கொன்று போடும் கந்தகம் தகிக்கும் பூமி. மழையற்ற பூமியின் மண்ணுக்குள் ஏழ்மையோடு போராடி போராடி தோற்றவர்களின் எத்தனையோ கதைகள் புதைந்து போய் கிடக்கின்றன. உழைப்பின் பயனை அனுபவத்தறியா மக்கள் வாழும் மரணத்தின் சுவடுகள் புகையாய் கவிழ்ந்த பூமி கரிசல் பூமி.

சம்சாரிகளுக்கு ஒரு கஷ்டமென்றால் ஏழைபாழைகளுக்கு வேறு கஷ்டம், இப்படியே வாழ்க்கை வண்டியை அதனதன் துன்பத்தோடு ஓட்டிச் சென்று முடியாத வாழ்க்கைப் பாதையில் வழியில் ஏதோ ஒரு திருடனால் கழட்டி விடப்படும் ஜனங்கள் நிரம்பிய அப்பூமியின் சில நிகழ்வுகளை மேலாண்மைப் பொன்னுச்சாமியின் பூச்சுமை புத்தகம் எழுத்துக்களில் காட்சியாய் வடித்திருந்தது.

புத்தகத்தைப் படிக்கப் படிக்க மனதில் பாரொமொன்று படிந்து விலக நேரம் பிடித்தது. பூச்சுமையில் அனைத்தும் சிறு கதைகள். என்னைப் பாதித்த ஒரு சிறுகதை “மைதானம்”.

பேச்சி என்கிற ஒன்பது வயதுச் சிறுமி தன் தாயின் துயரத்தில் பங்கெடுக்க தன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த தன் மைதானத்தை விட்டு தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் செல்கிறாள். அங்கு தன் வயதின் காரணமாய் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க அதைக் கண்டு மேஸ்திரி திட்டுகிறான். கோபத்தில் அவரை எதிர்த்துப் பேசுகிறாள். மறு நாள் அவளை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மறுக்க அச்சிறுமிக்கு பயமேற்பட்டு விட, ஏஜெண்ட் ஏதேதோ பேசி சமாளித்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறான். பல பேர் முன்னிலையில் அவமானப்பட்ட அச்சிறுமியின் கண்களில் நீர்ப் பூக்கிறது. அதை மறைக்க அவள் சன்னலோரம் முகத்தை திருப்புகிறாள். அங்கு அவள் விளையாண்ட மைதானம் அவளை விட்டு தூரப் போய்க் கொண்டிருக்கிறது. அவள் தனக்குள் நினைக்கிறாள் “ விளையாடுவது தவறா?” என்று.

மனதைக் கனக்கச் செய்த சிறுகதை. அதன் தாக்கம் தீர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

வார்த்தைகளில் காட்சியைப் பிடிப்பது என்பது “ மேலாண்மை பொன்னுச்சாமி” அவர்களுக்கு கை வந்த கலை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு படம். மனித வாழ்க்கையின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இன்றைக்கு செய்தி தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பவர் கட் ஆன நேரத்தில் பக்கத்து வீட்டுப் பசங்களால் ஒரு பெண்மணி கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்று. பவர் கட் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறதோ தெரியவில்லை. தங்கம் விற்கும் விலைக்கு பவர் கட் பல பேரின் வாழ்க்கையை கட் செய்து விடாமல் இருக்க வேண்டும். அரசு விரந்து ஆவண செய்தால் நலம்.

- ஃப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பூச்சுமை...


அழகிய தலைப்பு..
இந்த புத்தகத்தை படிக்க மிகவும் ஆர்வமாகிவிட்டேன்...

விமர்சனத்திற்கு நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மின்தடையைப்பயன்படுத்தி குற்றங்களா...

என்ன கொடுமை...

அந்த அயோக்கியனுக்கு மிகுந்த தண்டனை வழங்க வேண்டும்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.