குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 27, 2012

செப்பிடு வித்தைக்காரனின் கும்கி



( எனது நண்பர் இயக்குனர் கதிரின் ரீமிக்ஸ்- சொய் சொய் பாடல்) 

என் மகளின் பத்து நாள் போராட்டம், நேற்று வெற்றியடைந்தது. வழக்கம் போல அரசாங்கம் (அடியேன்)தோல்வியுற்றது. யானைப் படம் போச்சு, போச்சுன்னுச் சொல்லிச் சொல்லி நச்சரிப்பு தாங்காமல் அழைத்துச் சென்றேன்.

கும்கி படத்தில் யானையை போஸ்டரிலும், விளம்பரத்திலும் இடம்பெற வைத்து, தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்களைக் கவர்ந்தார் ஞானவேல்ராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வெறும் இரண்டு கோடி ரூபாயில் வாங்கப்பட்ட அட்டக்கத்தி பதினாறு கோடியைத் தந்தது என்றால் அவரின் சுக்ரதிசையை என்னவென்றுச் சொல்வது? அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று ஒரு குடும்பமே “சுக்ரதிசையில்” சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று கோடிகளைக் குவிக்கின்றார்கள். அது அவர்கள் முன்பிறப்பில் செய்த பலன். அனுபவிக்கின்றார்கள். சுக்ரதிசை வந்தால் ரோட்டில் போகிறவன் கூட வீட்டுக்கு வந்து காசைக் கொடுத்து விட்டுப் போவான் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும்.

’நானும் செத்துருவேன்’ என்றுச் சொல்லும் அல்லியினால், பொம்மன் இழப்பது அவனுக்கு நடையாய் நடந்து சம்பாதித்துப் போட்ட யானை, மாமா, எடுபிடி உண்டியல் ஆகியோரை. எப்போதுமே பெண்களுக்கு இழப்பு அதிகமில்லை. பெரும்பாலும் ஆண்கள் தான் இழக்கின்றார்கள். பெண்களின் சில சொற்கள் ஒருவனை வாழவைக்கும், சிலரை அழித்து விடும்.ஹஸ்தினாபுரத்திலே பாஞ்சாலி தண்ணீர் என்று நினைத்து ஏமாந்து நின்ற துரியோதனனைப் பார்த்து சிரித்த சிரிப்பு, துரியோதனால் பலபேரின் முன்னிலையில் பாஞ்சாலியின் துகிலுரிய வைத்தது. அன்று அவள் அவிழ்த்து விட்ட கூந்தல் துரியோதனா வகையறாவையே அழித்தது. பெண்கள் எப்போதும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒன்றே ஒன்றுதான். பெண்கள் ஆயுதம் போன்றவர்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் குறுக்கே திரும்பி குத்திக் குதறி விடும். ஜாக்கிரதை நண்பர்களே !

என் மனையாள் படம் பார்த்து விட்டு திரும்பும் போது, ”ஏங்க, ஓங் பேக் என்ற படத்தில் சிறுவன் ஒருவன் யானையுடன் விளையாடுவதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்திருப்பார் போல, உடனே ஒரு ‘ நாட்’ கிடைத்து படத்தை எடுத்து விட்டார்” என்று கூறினாள். அப்படியும் இருக்கலாம். எப்போதுமே நம்மவர்களுக்கு சுயச் சிந்தனை வருவது குறைந்து வருகிறது. கூக்கிள் சிண்ட்ரோமினால் மூளை இறப்பு நோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு கூடுதல் தகவல். ஆகவே நெட்டில் உலவும் நண்பர்கள் ஜாக்கிரதை.இதற்கென்று தனி வைத்தியம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கும்கி ஒன்றுமே இல்லாத வெறுமையான, முழுமையற்ற, விட்டேத்தியான கதை. காட்டுவாசிகளின் வீடுகள் அனைத்தும் செட்டிங்குகள். பச்சைப் பசேலைக் காட்டினால் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற பிரபு சாலமனின் நினைப்பு பலித்தே விட்டது. கோவில் யானை, காட்டு யானையை விரட்டி அடிப்பதுதான் கதை. அதாவது சொங்கி ஒருவன் வீரனை வெல்வது. கதைக்களமும், காட்சிப்படுத்தியதும் வித்தியாசமானது என்பதால் படம் போரடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி எரிச்சல் தரும் கிளைமேக்ஸ். முழுமையைத் தராத படமாக்கம். 

அதென்னவோ தெரியவில்லை, பிறரை அடிப்பதும், கேவலப்படுத்துவதும் தான் நகைச்சுவை என்பதாய் அனைத்து சினிமாப்படங்களும் வருகின்றன. கவுண்டர் மேனியா போய் அரை நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. இன்றைக்கும் இயக்குனர்கள் இப்படிப்பட்ட லூசுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவது எரிச்சலோ எரிச்சல்.

ஹீரோ யானைமீது வருகிறார். காதல் வந்தால் பைத்தியம் போல குதிக்கிறார். தலையை ஆட்டுகிறார். கையை விரித்து விரித்து காதலை வானத்தைப் பார்த்துச் சொல்கிறார். காதல் வேதனையில் முள்ளில் கையை வைத்து அழுத்தி ரத்தம் வர வைக்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, சினிமா காதலர்கள் கையை மட்டும் அறுத்துக் கொள்கிறார்கள்). 

அல்லிக்கு பின்புறம் அழகாவே இல்லை. சப்பைக் குண்டி ஹீரோயின். மூக்கு புடைத்து, உதடு புடைத்து இருக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறார். எத்தனையோ படங்களில் பார்த்திருக்கும் ஹீரோயின் போலவே தண்ணீரில் மூழ்குகிறார். பாடுகிறார். சிரிக்கிறார். சிணுங்குகிறார்.கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்கள் இப்படியே நடிப்பார்களோ தெரியவில்லை. ஹீரோயின் சுந்தரபாண்டியனில் கொஞ்சம் முற்றிப் போய் இருக்கிறார். காதல் வருவதும், அதைச் சொல்வதும், பின்னர் அதை மறுப்பதும் எரிச்சலைத் தரும் படமாக்கம். பொம்மனின் மாமாவாக வரும் தம்பி ராமையா மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டு படம் நகர உதவி செய்கிறார்.

சிவாஜியின் பையனுக்கு முதல் படம் சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் படத்தில் ஒட்டாமல் தனியே நிற்கின்றன. படத்தின் களத்திற்கும் பாட்டுக்கும் இசைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சிந்து பைரவி படத்தில் சிவகுமார் கர் நாடக சங்கீத மேடையில் வெஸ்டர்ன் மியூசிக் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போது புரியும் நானென்ன சொல்ல வருகிறேன் என்று.

ஒன்றுமே இல்லாத கதை. எல்லாம் இருக்கிறது என்பதாய் காட்டும் செப்பிடு வித்தையைத்தான் பிரபு சாலமன் கும்கியில் செய்திருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும் தமிழர்களின் ரசனை மாற. 

Monday, December 24, 2012

மூன்று வகை உணவுகள் எது?


முதல் வகை உணவு :- ஆயுளை வளர்ப்பது, மனவலிமை அளிப்பது, உடலுக்கு தின்மை தருவது, நோய் அளிக்காதது, சுகம் தருவது, ரசமாய் இருப்பது, குழம்பாய் இருப்பது, நெய் கலந்தது, மனதுக்கு இதம் தருவது

இரண்டாம் வகை உணவு :- கசப்பு, புளிப்பு, உப்பு, உலர்ந்தது, சூடு, காரம் கொண்டவை. பசி வராமல் தடுப்பது, குடலுக்கு புண் அளிப்பது.

மூன்றாம் வகை உணவு :- வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றியது, கெட்ட வாடை, மிச்சம் மீதியைச் சாப்பிடுவது.

சாத்வீக குணத்துடையவனுக்கு உரியது முதல் வகை உணவு. ராஷச குணத்துக்குடையவன் உரியது இரண்டாவது. மூன்றாவது முட்டாளுக்கு (தாமச) உரியது என்கிறான் கண்ணன்.

கண்ணன் கீதையிலே சொல்கின்றான் இப்படி என்று எழுதுகிறார் கண்ணதாசன். ( நன்றி : கண்ணதாசன்)

பகவத் கீதையின் பதினேழாவது அத்தியாயத்தில் 8,9,10 ஸ்லோகங்களில் மேற்கண்ட உணவுகள் பற்றிக் “கண்ணன்” அருளியிருக்கின்றான். 

அன்பு நண்பர்களே, நல்ல உணவை கண்டுபிடித்து உடலுக்கு நன்மை தரும் உணவை மட்டும் உண்டு, தன்னையே நம்பி வந்திருக்கும் மனைவிக்கும், உங்களுக்கு குழந்தையாய் அவதரித்து இருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து உதவுங்கள்.

பேக்கிங் உணவுகள், ஹோட்டல் உணவுகளை அறவே தவிருங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கோவையின் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. ஹாஸ்பிட்டல்களில் டாக்டரைப் பார்க்க மூன்று மணி நேரம் காத்திருக்கும் அளவுக்கு கூட்டம் வழிகின்றன. மருத்துவர்கள் அருவியாய்க் கொட்டும் பண மழையில் நனைகின்றார்கள். உங்கள் உடம்புகளுக்குள் நோய்க் கிருமிகள் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்கின்றன. எனது பிரியத்துக்கு உரிய சக ஆன்மாக்களை தங்களின் உடம்புகளில் தாங்கி வந்திருக்கும் அழிவற்ற ஆன்மாக்களை உடைய உள்ளங்களே, கொஞ்சம் யோசியுங்கள்.

ஹோட்டல்கள் உங்களுக்கு சுவையுடன் நோயையும் சேர்த்து தருகின்றன. காசைக் கொடுத்து வம்பினை விலைக்கு வாங்காதீர்கள். 

Tuesday, December 18, 2012

ரசம்



தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவு என்றால் முதலிடம் பிடிப்பது ரசம். தமிழர் உணவு முறை மருந்து சார் உணவாக, உடலுக்கு எந்த வித தீங்கும் தராத இருந்து வந்தது. இதுகாறும் பல கிராமங்களில், பண்டைய வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் குடும்பங்களில் உணவுகள் என்றும் மாறாமல் ஒரே வகையானதாக சமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன கலாசாரத்தின் பின்விளைவுகள் ஏற்படுத்திய பல தாக்கங்கள் தமிழர் உணவுகளுக்கும் நுழைந்து விட்ட காரணத்தால் தமிழர்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்தச் சர்க்கரை நோய் உடம்பிலிருந்து முழுவதுமாய் விரட்டி அடிக்க கை வைத்திய முறை இருக்கிறது. உடனடி நிவாரணம் மட்டுமே இக்கால மனிதர்கள் விரும்புகின்றார்கள். ஜலதோஷம், சளி, இருமல், நாட்பட்ட காச நோய்க்கு வீட்டிலேயே செய்யும் அருமையான பல வைத்திய முறைகள் இருக்கின்றன. அதுமட்டுமா என் அம்மா குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஒரே ஒரு முறை மருந்து கொடுப்பார். உடனடியாக கரு உண்டாகி விடும். இதெல்லாம் கை வைத்திய முறையில் செய்வது. குழந்தை உண்டாக இப்போதெல்லாம் எத்தனையோ லட்சங்களைச் செலவழிக்கின்றார்கள். 

படித்து முடித்து வேலை செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது, உடம்பையும் மனதையும் பாதுகாத்திட எந்த  கல்வியும் தமிழரிடையே இல்லை. அக்காலத்தில் குருகுலவாசத்தில் இறை வணக்கம், தியானம், யோகா, உடலுழைப்புச் சார்ந்த வாழ்வியல் கல்வி முறைகளை பிரதிபலன் பாராது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பணம் சார்ந்த வாழ்வியல் நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தில் ஆசிரியர்களும் மாறி விட்டார்கள். கல்வி முறையும் மனிதனை எந்திர மயமாக்கி விட்டது. ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்கள் தேய்வடைந்து ஒரு நாள் தொழிற்சாலையை விட்டு குப்பைக்கு அனுப்பப்படுவதைப் போல இன்றைய மக்கள் பணியிடங்களில் இருந்து குப்பையைப் போல வெளித்தள்ளப்படுகின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. இது தான் பணத்தின் மீதான மாயை எனப்படுவது.

இப்படிப்பட்டவர்களிடமிருக்கும் மிச்ச சொச்ச பணத்தையும் கார்பொரேட் சாமியார்கள் பயிற்சிகள் கொடுக்கிறேன் பேர்வழி என்று உறிஞ்சிக் கொள்கின்றார்கள். சில முதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலையில் பணிசெய்யும் எந்திரங்களாக மாற்றி அவர்கள் மூலம் பெறும் பணத்தின் வசதியின் காரணமாய் தனிமைப்படுத்தப் பட்டு முடிவில் எந்திரமாகவே மாறிப் போன பிள்ளைகளின் ஆதரவு இன்றி இது போன்ற சாமியார்களின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கும் சொத்துக்களையும் அவர்களின் பெயரில் எழுதி வைத்துச் சென்று விடுகின்றார்கள்.

சில தனியார் சாமியார்களின் ட்ரஸ்டுகள் எப்படிக் கோடிகளைக் குவிக்கின்றார்கள் தெரியுமா? தொண்டு என்றுச் சொல்லி சில பல அடிமுட்டாள்களை சிஷ்யர்களாக்கி சம்பளமே கொடுக்காமல் சோறு மட்டும் போட்டு தங்கள் நிறுவன வேலைகளை செய்து கொள்வதால் அப்படிச் சேரும் பணமே பெரும் கோடிகளைக் குவித்து விடுகின்றன. நானும் ஒரு காலத்தில் இப்படியான ஒரு சூழலில் நான்காண்டுகள் எனது காலத்தைச் செலவழித்திருக்கிறேன். 

சரி அது அவர்களின் பாடு !

ரசத்திற்கு வந்து விடுகிறேன். கடுகு, சீரகம், மிளகு, புளி, பெருங்காயம், பூண்டு, உப்பு ஆகிய ஏழு பொருட்களின் மிகச் சிறப்பான கூட்டுக் கலவையே ரசம்.  இந்த ரசத்தின் வேலை ஜீரணத்திற்கு உதவுவது. இப்போதைய அவசர உலகத்தில் எவரும் உணவை மென்று தின்பதே இல்லை. உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் உணவை பற்களால் நன்கு மெல்லும் போது குழம்பாய் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவின் சத்தை எளிதில் பிரித்து சேர வேண்டிய இடங்களுக்குள் வயிறு செலுத்தி விடுகிறது. ஆனால் இப்போதைய மக்கள் பற்கள் செய்யும் வேலையை வயிற்றினைச் செய்ய வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு இந்த ரசம் பெரும் உதவிகரமாய் இருக்கிறது. மென்று தின்னாமல் கடித்து விழுங்குகின்றார்கள். அதன் காரணமாய் வயிறு படாதபாடு படுகின்றது. 

எந்த நாட்டிலும் உணவே மருந்தாய் உட்கொள்வது கிடையவே கிடையாது. ஆனால் பாரம்பரியமும், பழைமையும் மிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையே உணவே மருந்து என்று காயத்தை நன்கு பாதுகாத்து வந்தது. கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண் நகரத்திற்குச் சென்றால் தன்னையே ஒரு மாதிரியாக மாற்றிக் கொண்டு அவ்வாழ்க்கையை கிராமத்திற்குள் வந்து காட்டி பெருமையடைவது எப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியாய் இருக்குமோ அந்தளவுக்கு தமிழர்களின் உணவும் இப்போது மாறிப் போய் விட்டது. அது காலத்தின் கொடுமை அல்ல. மனிதர்களின் மடைமை என்றுதான் சொல்ல வேண்டும்.

Thursday, December 13, 2012

தாரா என்ற அழகி


தனக்குத் துன்பம் ஏன் வருகிறது? என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இறைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.

ஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் ? பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

தன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.

ரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.

குறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட கொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.

மேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.

சமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Wednesday, November 28, 2012

தர்மம் பேசுகிறது - ஒன்று



அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.

இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.

தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.

மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?

இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )

Monday, November 26, 2012

இயல்பாய் இருங்களேன்

மனித சமூகம் ஈகோவினால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை எந்த வித முன் யோசனையின்றி தற்போதைய மனித குலம் முடிவெடுக்கிறது. பிறகு அவஸ்தைப் படுகின்றார்கள்.

சாலைகளில் பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். புதுச் சட்டை போட்டாலோ, ஹேர் ஸ்டைல், செல்போன், கார், பைக் வாங்கினால் என்னவோ உலகே அவர்களையே உற்று உற்றுப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்து கொண்டுச் செல்வார்கள். அவரவருக்கு அவரவர் வேலை. நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களாவது இவர்களைப் பார்ப்பதாவது? இதாவது பரவாயில்லை.

ஒரு கோடி கொடுத்து கார் வாங்குபவன் எதற்கு வாங்குகிறான் என்று நினைக்கின்றீர்கள்? அவனைச் சுற்றி இருப்போர் அவனைப் பார்த்து பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் அந்தக் காரை வாங்குகிறான். பிறர் தன்னை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பான்மையான மனிதர்கள் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த் ஈகோவினால் தான் பிராண்டட் கம்பெனிக்காரர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் என்ன டிவி இருக்கிறது? எங்கள் வீட்டில் எல் ஈ டி டிவி இருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்வார்கள். அந்த எல் ஈ டி கொஞ்ச நாள் கழித்து குப்பையாகி வேறு ஒரு டிவி மார்க்கெட்டில் வந்து விடும். டிவி கம்பெனிக்காரர்கள் புதிய புதிய பொருட்களாய் விற்று சம்பாதிப்பார்கள். வாங்குபவர்களுக்கு காசும் போய்  எல்லாம் போய் விடும்.

நேற்றைய நீயா நானாவில் எதிர்கால சந்ததிகளுடன் பாக்கெட் மணி பற்றிப் பேசினார்கள். அதில் பேசிய எந்த ஒரு இளைஞனும், இளைஞியும் படிப்பைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நண்பர்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரிதாய் வேறு எதையும் சொல்லவில்லை.

எப்படிப்பட்ட இளைஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்த போது வேதனையாக இருக்கிறது.

நோக்கியா ஹெட் போன் வாங்கினால் அதைக் காதில் மாட்டிக் கொண்டு அலப்பறை செய்வது என்று பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயல்பு மாறி விடுகின்றார்கள்.

இயல்பாய் இருந்தால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்?

பெரும்பான்மையான மக்கள் தனக்கென வாழாமல் பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காக வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கை முடிவில் வெற்று வாழ்க்கையைத்தான் தரும்.

பத்தாயிரம் ரூபாய் ஷூ போட்டால் தான் சமூகம் உங்களை மதிக்கும் என்று எவராவது நம்பினால் அதை விடக் கேனத்தனமானது எதுவும் இல்லை.

கீழே இருக்கும் இரண்டு படங்களில் உலகம் இன்றும் யாரை நினைவில் வைத்து வணங்கி வருகிறது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நிதர்சனம் புரியும். பகவான் ரமணரிடம் ஒரு கோவணம் தான் இருக்கிறது. ஆனால் பாகவதரிடம்?

( ரமண மகரிஷி )


(தியாகராஜ பாகவதர்)


Wednesday, November 7, 2012

பாலத்தின் மீது வீடு கட்டாதே


“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன். ஸ்திரீயானவள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்” - ஆதியாகமம் 3-12-13 பைபிள்




பாவம் செய்தோரே பரலோகப்பிதாவின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் பலனாய் துன்ப உலகில் துயருரும் அனைவரையும் அவர் விடுவிப்பார். 

விடுதிகளின் அறைகளூடே தங்கிச் செல்லும் யாத்ரீகர்கள் போலே பிரசங்கங்களின் முடிவில் காசு மழை கொட்டும். கொட்டும். கொட்டும்.

பாவங்களை மன்னிப்பாரா பரிசுத்த ஆவியானவர்? சிலுவை பதில் சொல்கிறது. ஏனப்பா இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?

ஆதாம் - விவேகம், ஏவாள் - உணர்ச்சி. 

முதுகுத்தண்டை திருப்பி போட்டுப் பார்! 

மரத்தின் இலைகள் முதுகுத்தண்டின் பாதி வரை தொங்குகின்றது. கனியைப் பார். அதைப் புசிக்க விடாமல் செய்தது யார்? 

உணர்ச்சியின் பிடியிலே சிக்கிய ஏவாளா?

முள்ளம் தண்டினூடே ஓடும் ஆற்றல் அணுவை விட உச்சமானது. அக்கனியைப் புசித்தார்கள் புத்தரும் ஏசு நாதரும்.

ஏதன் தோட்டத்தின் வாயிலை அடைத்தது யார்? பாம்பு ! 

நெளியும் பாம்பின் பிடியிலே மனிதர்கள். பாம்பு தன் உடம்பால் சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா உலகின் மாயையின் காலடியிலே கனியைப் பற்றிய புரிதல் இன்றி ஆப்பிளை வெட்டி வெட்டி முழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கனி தொங்கிக் கொண்டே இருக்கிறது. தோட்டம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

அவன் காத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் எவரும் அவரிடம் எதுவும் கேட்பதும் இல்லை. அவரைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

பாலத்தின் மீது வீடு கட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். பாலம் என்பது கடக்கத்தானே ஒழிய தங்கி விடும் இடம் அல்ல.

- கோவை எம் தங்கவேல்

Thursday, October 11, 2012

காய்கறிகளில் விஷத்தன்மையை நீக்குவது எப்படி?

கறிவேப்பிலை, மிளகாய், பசலைக்கீரை, கத்தரி, வெண்டை, புடலை போன்றவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்திருக்கின்றன. இம்மருந்துகளை நீக்கி விட்டு உணவாகச் சமைத்தால் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வரக்கூடிய எழுதவே முடியாத பல்வேறு வகை நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சாதாரண தண்ணீரில் கழுவி விட்டு காய்கறிகளைச் சமைப்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுக்கு ஒப்பாகும்.

பூச்சுக் கொல்லி விஷத்தன்மையை எப்படி நீக்குவது?

மஞ்சள் தண்ணீர் அல்லது வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை நன்கு அமிழ்த்தி ஊற விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளின் மீது படிந்திருக்கும் 95 சதவீத மருந்து நீக்கப்படும் என்று கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

பணக்காரர்களின் அரிசியான பாசுமதியில் மிக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து இருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.

சுகாதாரத் துறையின் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே வாழ்க்கை என்பதாய் வாழ்வதால், இது போன்ற மக்களைக் கொல்லும் நஞ்சுகளில் இருந்து தப்பிப்பது என்பது முடியாத ஒன்று.

கேஎஃப்சி சிக்கனில் புழு இருந்தது என்று திருவனந்தபுரத்தின் செய்தி. உலகெங்கும் கடை விரித்திருக்கும் கேஎஃப்சி இது போல அமெரிக்காவில் புழு சிக்கனை விற்றிருந்தால் இந்த நேரம் கடை என்னவாகி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடையை சோதனை செய்யக்கூட கடைச் சிப்பந்திகள் அனுமதிக்கவில்லையாம்.

நேற்று திரு.குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றினை வாசித்தேன். சேமிக்கும் வழக்கமுடைய நம் இந்திய மக்களை திரு மன்மோகன் சிங் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்கிறார், இதைத்தான் புது பொருளாதார வளர்ச்சி என்கிறார் என்று குருமூர்த்தி சொல்கிறார். காலம் காலமாய் ஒரே வழக்கமுடைய மக்களை திசை திருப்பி அமெரிக்கர்களைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து மக்களை கடன்காரர்களாக்கி, குடும்பங்களை தனிமைப்படுத்தி, சமூக கட்டமைப்பையே உடைத்துப் போடும் அளவுக்கு திரு மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனை இருக்கிறது என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான மிகப் பெரிய வங்கிகளைப் போல இந்தியாவிலும் உருவாக்கி விட வேண்டுமென்ற திரு.ப.சிதம்பரத்தின் கொள்கையை இப்பொருளாதார சித்தாந்தம் ஊக்குவிக்கின்றது என்றும், இதை நோக்கித்தான் திரு.ப.சி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார் என்கிறார் அவர்.

கோவையில் பெரிய பணக்காரர்கள் எல்லோரும் பல சிலிண்டர் கனெக்‌ஷன்களை வைத்துக் கொண்டு, தங்கள் கார்களுக்கு மானியச் சிலிண்டர்களை பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் போல அமைச்சர்களும் பயனடைகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே. இதைக் காரணமாய் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சிலிண்டர்களைக் குறைப்பது பெரிய திருடர்களை ஒழிக்க வீடுகளே இல்லாமல் ஆக்குவது போன்றது. இது  என்னவிதமான பொருளாதார வளர்ச்சியோ தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் போலி அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை களைவது வெகு எளிதானது. அதைச் செய்து போலிகளைக் களைந்து விடாமல் இப்படி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மக்கள் விரோத சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5. இப்படி ஒரு மின்சார சப்ளையை உலகத்தில் வேறு எங்கும் மக்கள் அனுபவித்தே இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. அல்லது ஒழுங்கு படுத்தக்கூட இல்லை. இப்படியே சென்றால் தமிழர்கள் பீகாரிகள் போல அகதிகளாய் மாறி விடும் சூழ் நிலை வந்தே தீரும். அதற்குள் ஆட்சியாளர்கள் மின்வெட்டினை ஒழுங்குபடுத்தி விட வேண்டும். ஆனால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

ஓட்டுப்போடும் போது வாங்கிய காசுக்கு பலனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்? தமிழகம் அனுபவிக்கின்றது.




Saturday, September 29, 2012

கோவிலும் மனித உடலும்


தமிழர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியை, குமரிக் கண்டத்தினை கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். இப்படி இருந்த தமிழர் வாழ்விடம் இப்போது இருக்கும் அவலத்தையும் பாரீர். இருக்க இடம் இல்லாமல் தவிப்பதைப் பாரீர். பரிசோதனைக் கூடங்களில் கொல்லப்படும் எலி போல தமிழர்கள் கொல்லப்படுவதைப் பாரீர். ஏன் என்று கேட்க நாதியற்றுப் போனதைப் பாரீர். உலகின் மூத்த குடியான தமிழர்கள் தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் கையேந்தி நிற்கும் அவலத்தைப் பாரீர். 


ஆனால் உங்களுக்கு ஒரு உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். காலத்தின் சூழலில் மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் அசைக்கவே முடியாத உலக கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது ஒரு ரகசியம். அதையெல்லாம் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது தெரிந்து கொள்ளுங்கள். அது சுனாமியைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

நம் தமிழர்களின் அறிவிற்கு எந்த மனிதனாலும் ஈடே கொடுக்க முடியாது. ஒவ்வொரு தமிழனின் வாழ்வியல் கோட்பாட்டிலும் அசைக்க முடியாத பங்கீட்டாய் இருப்பவை கோவில்கள். “கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?” பதிவில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலையும் கீழே வரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கோவிலின் அமைப்பும் மனித உடலின் பாகங்களும்

முன்கோபுரம் - பாதங்கள்
முன்மண்டலம் - முழங்கால்
நிருத்தமண்டபம் - தொடை
பலிபீடம் - தொப்புள்
மகாமண்டபம் - மார்பு
அர்த்தமண்டபம் - கழுத்து
கர்ப்பகிரகம் - சிரம்
தட்சிணாமூர்த்தி - வலது செவி
சண்டிகேஸ்வரர் - இடது செவி
ஸ்தபனமண்டபம் - மூக்கு
ஸ்தபனமண்டலவாசல் - வாய்
லிங்கம் - புருவத்தின் மத்திய பகுதி
விமானம் -தலையின் உச்சி
சரீரப்ப்ரஸ்தாரம் ஷேத்திரம் (தலம், கோவில் இருப்பிடம்)

அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்கிற ஐந்து பிரகாரங்களையும் ஐந்து வித கோஷங்கள் என்று குறிப்பிடுவார்கள்.  இதனைப் பின்பற்றித்தான் சாமியை வழிபடல் வேண்டும். 

கோவில்களுக்குச் சென்று வழிபடுவது எப்படி  என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

மன ஒருமை செய்து, வேற்று சிந்தனை களைந்து, இறையுடன் ஒன்றி கோவிலுக்குள் நுழைய வேண்டும். பலிபீடத்தின் அருகில் வீழ்ந்து தீய எண்ணங்களை பலிகொடுத்து, சுத்தமான உணர்வுடன் எழுந்து கொடிமரத்தின் அருகில் சென்று விழுந்து வணங்க வேண்டும்.

ஆண்கள் - தலை, இரண்டு கைகள், இரண்டு காதுகள், இரு முழங்கால்கள், மார்பு போன்றவை மண்ணில் பட வணங்க வேண்டும்.

பெண்கள் - இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், தலை பூமியில் படும்படி வணங்க வேண்டும்.

சன்னதி கிழக்கு என்றால் பலிபீடத்தின் அக்னி மூலைக்கு எதிரில் தலைவைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதி என்றால் பலிபீடத்தின் நிருதி மூலையியில் தலைவைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்தின் வாயு மூலையில் தலைவைத்து வணங்க வேண்டும்.

கொடிமரத்தைத் தாண்டி மண்டபத்தில் நுழைந்த பிறகு வேறு எந்தச் சன்னிதியிலும் வணங்கக்கூடாது. எவருக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது. நந்தியை வணங்கி, அவரிடம் சிவ பெருமானை வணங்க உத்தரவு கேட்ட பிறகுத்தான் சிவனை வழிபட செல்ல வேண்டும்.

இதன் பின்னர் கருவறை வாசலில் இருக்கும் துவாரபாலகரை தரிசித்து விட்டு அதன் பின்னர் கருவறை சென்று சிவனை வழிபடல் வேண்டும். அதன்பிறகு பிற சன்னிதிகளை வணங்கலாம்.
-
நேற்று நண்பர் ஒருவர், உலகில் மாபெரும் கலவரங்கள் நடக்கப்போவதாகச் சொன்னார். இப்போதுள்ள காலத்தின் வெளிப்பாடு மிகக் கொடூரமாய் இருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் அக்கிரமங்களே அல்ல. அது ஒன்றுமே இல்லாதவை. ஆனால் அரசியல்வாதிகளை முன்னிருத்திக் கொண்டு சில சுய நலவாதிகள் செய்யும் அக்கிரமங்கள் அளவுகடந்து செல்கின்றன. அரசியல்வாதி 0.000001 பர்செண்டேஜ் தின்கிறான். ஆனால் இவனை துணையாக்கும் சுய நலவாதிகள் தின்பது 9.99999 பர்செண்டேஜ். இச்சுய நலவாதிகளுக்கெதிரான மக்கள் கலவரங்கள் நடக்கப் போகின்றது என்பதைக் குறிகள் சுட்டிக் காட்டுகின்றன. விதிப் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். மீண்டும் ஒரு உலகப் போர் நிகழப்போகின்றது. அதிலே கவுரவர்கள் என்கிற சுய நலவாதிகள் அழிக்கப்படப்போகின்றார்கள். இப்போது ஊழல்வாதிகளாய் வெளிப்படுவது அரசியலாதிகள் அல்ல. கார்பொரேட் கம்பெனிகள் என்ற சுயநலவாதிகள். இவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் உலகெங்கிலும் ஆரம்பமாகி விட்டது. அது பரவும் ! சுய நலசக்திகளை, மக்கள் விரோத சக்திகளை அழிக்கும். அந்தப் போரில் மக்களும் தங்கள் இன்னுயிரை இழப்பர். இழப்பினும் உலகம் சுத்தமடையும்.

* * * * * * *

கட்டுரை ஆக்க உதவியும் நன்றியும் : கழுகூர் வரலாற்றுத் தழும்புகள் - கவிஞர் கழுகூர் பழனியப்பன்

Monday, September 24, 2012

கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?


கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது, அபிஷேகம் செய்வது, கோவில் பணிகள் செய்வது, தளம் போடுவது, விளக்குகள் வாங்கிக் கொடுப்பது, பூக்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற இறைப்பணிகளைச்  செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவாரா? 

அவ்வாறு திருப்பணி செய்பவர்கள் எல்லாம் கோடிகளில் அல்லவா மிதக்க வேண்டும்? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?. நோய் நொடி இல்லாமல் அல்லவா வாழ வேண்டும். ஆனால் அப்படி யாருக்கு கடவுள் ஆசி வழங்குவதில்லையே? 

அதுமட்டுமா? கடவுளுக்கு நாள்தோறும் பூஜை,புனஸ்காரங்களைச் செய்து வரும் பூஜாரிகளும், ஐயர்களும் கோடீஸ்வரராய் அல்லவா மாறி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஐந்து, பத்து தட்டுகளில் விழுகிறதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?  இவர்களுக்கு நோய் நொடி வந்தால் மருத்துவரிடம் அல்லவா செல்கின்றார்கள்? கடவுளுக்கு நாள்தோறும் தொண்டு செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால் அவ்வப்போது கோவில்களுக்குச் சென்று வருபவர்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏன் கடவுள் வேண்டி நிற்போருக்கு உடனுக்குடன் எதுவும் செய்வதில்லை? கல் மனதாய் இருக்கின்றானே ஏன்? இந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்றுவானா? இது போல இன்னும் என்னென்னவோ கேள்விகள் இருக்கின்றன. இக் கேள்விகளுக்குப் பதில் தான் என்ன?

மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்பவர்களில் சில நாடுகளில் இருப்போர் மாயா உலகின் உச்சபட்ட இன்ப வாழ்வினை வாழ்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் கோவில்களுக்கோ, சர்ச்சுகளுக்கோ செல்வதில்லை. அழகான வீடு, கார், மனைவி, வற்றவே வற்றாத பொருளாதாரம், ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடவுளை தினம் தோறும் வணங்குபவனை விட, கடவுளைப் பற்றி சிந்தித்தே பாராதவர்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றார்களே எப்படி?

நமக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சில அனுபவங்களைப் பாடல்களாய் பாடி வைத்திருக்கின்றார்கள். அப்பாடலில் இரண்டு பாடலை முதலில் படியுங்கள்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா? 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே - சிவவாக்கியர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே – அகத்தியர்

மேலே இருக்கும் இரண்டு பாடல்களை ஊன்றி கவனித்துப் படித்துப் பாருங்கள். கடவுளின் தந்திரம் புரியும். 

நியூமராலஜி உண்மையா?


நேற்று மாலை நண்பர்களுடன் சந்திப்பு. எனது நண்பரொருவரால் எனக்கு அறிமுகமான நண்பரோடு எந்த வித தயக்கமோ, முதன் முதலில் பேசுகிறோம் என்கிற எண்ணமோ இன்றி வெகு சகஜமாகப் பேசினேன். அடிக்கடி பேசிக் கொள்வோம்.  

இப்படியான நாட்கள் கழிந்து கொண்டிருந்த போது நேற்றைக்கு திரு கண்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். எந்தக் காரணத்தை வைத்து நாம் நண்பர்கள் ஆனோம் என்று கண்ணன் அவர்களிடம் கேட்ட போது நிமித்த பிரசன்னத்தில் நாங்கள் போன ஜன்மத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்களாக இருந்தோம் என்றார். அதனால் தான் அந்த முன் ஜென்ம தொடர்பின் காரணமாய் நாங்கள் முன்பே பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.முன் பின் பழக்கமில்லை. நேருக்கு நேராய் பார்த்தது இல்லை. முகம் எப்படி இருக்கும் தெரியாது. இப்படியான பல இல்லைகளுக்கும் தாண்டிய ஒரு அன்பு, நெருக்கம், வியப்புத்தான். அதற்கொரு காரணம் இருக்கிறது. 

திரு கண்ணன் அவர்களிடம் பேசினால் எனக்கு பயம் வந்து விடும். காலையில் யாரிடம் பேசினீர்கள், யாரைச் சந்தித்தீர்கள் என்றெலாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். சினிமாக்காரர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவரிடம் பேசினாலே எனக்கு திக் திக் என்றிருக்கும். என்னைப் போல ஆட்களுக்கு, ரொம்ப டேஞ்சரான “ஜோதிட திலகம்” அவர். இருப்பினும் நேற்று நடந்தைதையும், ஒரு மணிக்கு முன் நடந்ததையும் சொல்ல ஒரு “தில்” வேண்டுமல்லவா? அலட்டிக் கொள்ளாமல் எதிரில் உட்கார்ந்திருப்பவரை அலற அடிக்கும் ரகளையானவர். எதிர்கால, கடந்தகால, நிகழ்காலத்தினைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு மாற்றத்தின் அறிகுறி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கைப் பாதையின் போக்கு நேராகலாம் அல்லது சரி செய்யப்படலாம். 

ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று.

ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார். அவரின் பையன் பனிரெண்டாவது வகுப்பு எக்ஸாம் எழுதப் போகின்றான். கண்ணன் ”அவன் அடுத்த வருடம் வெளி நாட்டுக்குச் செல்வான்” என்கிறார். அட, இன்னும் எக்ஸாமே எழுதவில்லை, அவன் எப்படி வெளி நாடு செல்வான் என்று கேள்வியைக் கேட்டு விட்டு அவர் சென்று விட்டார். பையன் எக்ஸாம் எழுதி முடித்து சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் படிக்க அப்ளை செய்திருக்கிறான். தமிழ் நாட்டிலும் மேற்படிப்பிற்கு அப்ளை செய்திருக்கிறான். இரண்டுக்கும் அனுமதி கிடைத்து விட்டது. ஜாதகம் பார்க்க வந்தவர் போனில் “சார்” என்று அலறி இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் பற்றிச் சொல்லியவர், வாழ்க்கை நொடிக்கு நொடி மாற்றத்துக்கு உரியது என்றார். உண்மைதானே ?

நியூமராலஜி உண்மையா என்று விஷயத்திற்கு வருவோம். மெட்ரிக் அளவுகள் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த மெட்ரிக் அளவுகள் உலகையும் மனித வாழ்வினையும் சூட்சுமாய் சூழ்ந்திருக்கும் கிரகங்களை எந்த விதத்திலும் பாதிக்கவே பாதிக்காது. பெயரில் ஒரு எழுத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ வெற்றி கிட்டும் என்றால் அப்படி மாற்றிக் காட்டுபவர் முதலில் கோடீஸ்வரனாக மாறி இருப்பார். அப்படி அவர் மாறாத பட்சத்தில் நியூமராலஜியை எப்படி உண்மை என்று ஏற்றுக் கொள்ள இயலும். கையெழுத்தே போடத்தெரியாத ஒருவனுக்கு நியூமராலஜியால் பயன் இல்லை என்கிறபோது நியூமராலஜி ஒரு வெற்று தத்துவம்.

மெய்யறிவியலில் ஒரு ரகசியம்: 

மனித மனத்தை ஊடுறுவ முடியுமா என்ற கேள்விக்கு என்ன பதில்? 
குருடன் முத்தை துளைத்தான்
விரலில்லாதவன் அதை நூலில் கோர்த்தான்
கழுத்தில்லாதவன் அதை அணிந்தான்
நாவில்லாதவன் அதைப் புகழ்ந்தான்
- தைத்தீரிய ஆரண்யம்

தன் எதிரே அமர்ந்திருக்கும் ஒருவனிம் மனதுக்குள் அவன் நினைக்கும் எண்ணத்தில் ஊடுறுவி அறிந்து கொள்ளும் திறமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இயற்கை மனிதனுக்கு எண்ண ரகசியங்களை மறைத்து வைக்கும் திறமையை அருளினாலும் அதையும் உடைத்து விடும் வழியையும் மனிதனுக்கு தந்து இருக்கிறது.

* * *

Saturday, September 22, 2012

சாட்டை என்கிற சினிமாவும் ஹீரோயிசத்தின் கொடூரமும்



நேற்றைக்கு முதல் நாள் தேனியிலிருந்து ஒரு அழைப்பு. பேசியவர் ஒரு ஆசிரியர். ”பத்துக் கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்றார். தொடர்ந்து புதிதாக பள்ளிக்கூடம் கட்டப்போவதாகவும், ஐந்து வருடத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ”ஐந்து வருடத்தில் வட்டியுடன் பத்து கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கா பள்ளிகள் சம்பாதித்துக் கொடுக்கின்றன?” என்று கேட்டேன். ”நாமக்கல் பகுதிகளில் டொனேஷனைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் சார், நான் அதை விட மிகச் சிறந்த பள்ளியை உருவாக்குவேன்” என்றார்.

ஊட்டியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியில் டொனேஷன் அதாவது கேப்பிடேஷன் ஃபீஸ் 5,00,000 லட்சம் வசூலிக்கின்றார்கள். யூனிஃபார்முக்கு 50,000  ரூபாய் கட்டணம். இப்படி அவர் சொன்ன விபரங்களைக் கேட்டதும் மயக்கம் தான் ஏற்பட்டது.

”அரசு இலவசமாய் கல்வி வழங்கினால் என்ன செய்வீர்கள்?” என்றேன். ”எந்த அரசாலும் சரி, எவராலும் சரி அப்படி செய்யவே முடியாது என்றார். கல்வி பிசினஸ் செய்யும் பணமுதலைகளும், ஒத்து ஊதும் திருடர்கள் கூட்டத்தாரும் ஒன்று சேர்ந்து பல தனியார் அமைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அரசையே தூக்கி எறிந்து விடுவார்கள். பணத்திற்கு முன்பு அரசு சலாம் போடுமே தவிர வேறொன்றினையும் செய்யாது சார்” என்றார் அவர். 

”பூடானில் ஆசிரியப் பணியில் இருந்த போது, சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் மக்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி வழி விட்டு ஒதுங்கி நிற்பார்கள். இந்தப் பாழாய் போன மனித உரிமைகள் கமிஷனால் தான் ஒவ்வொரு மாணவனும் இன்றைக்கு சீரழிந்து போய் விடுகிறான்கள். ஒடித்து வளர்க்காத முருங்கை பலன் தராது சார். பூடானில் அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள். அங்கு தனியார் அமைப்புகள் கிடையாது” என்றார் அவர்.

ஒரு வழியாக தனியார் கல்வி என்கிற மாஃபியாக்கூட்டத்தின் செயல்பாடுகளை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒருவன் வாழ பலர் உழைத்துக் கொடுக்கின்றார்கள். இது பற்றிய ஒரு கட்டுரை வருகின்ற மாதம் “பரபரப்புச் செய்தி” பத்திரிக்கையில் வெளிவரும். படித்துப் பாருங்கள்.

ஒரு குடும்பத்தின் தலைவன் சரியில்லை என்றால் குடும்பம் என்ன ஆகும்? சீரழிந்து போகும். தலைமை ஆசிரியரிடம் தொலை நோக்குப் பார்வையும், கண்டிப்பும் இல்லையென்றால் அப்பள்ளி என்ன ஆகும்? அப்படித்தான் இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த கிரேடு, டிகிரேடு சிஸ்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் நிச்சயம் ஓரளவிற்கு முன்னேறும். பள்ளிகள் இருக்கும் ஊரின் மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் மூலம் இந்த டிகிரேடு சிஸ்டம் செயல்படுத்தப்பட்டாலே போதும். அதுமட்டுமல்லாமல் அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் நன்மையைத் தரும். அதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன என்றால், தனியார் கல்வி மாஃபியாக்களிடமிருந்து வரும் பெட்டி டொனேஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமா? பிற ஆசிரியர்களும் இருக்க வேண்டாமா? சாட்டை ஒரே ஒரு ஆசிரியர் ஒழுங்காக இருந்தாலே போதும் என்று ஹீரோயிசம் பேசுகிறது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்தி விட்டு வேறு பள்ளிக்குச் செல்கிறார் தயாளன் என்கிற சமுத்திரக் கனி. மாயாஜால வினோதக் கதை போல தமிழ் சினிமாக்களில் ஒரே ஒரு பாடலில் ஏழை ஹீரோ பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை காட்டுவார்களே அதே போலத்தான் சாட்டைப் படமும்.

யாரோ ஒரு இயக்குனர் ஏதோ ஒரு பேட்டியில் தம்பி ராமையா என்கிற நடிகரின் நடிப்பைப் பார்த்த போது எம்.ஆர்.ராதாவை பார்த்தது போல இருந்தது என்றார். எம்.ஆர்.ராதா எங்கே இந்த ராமையா எங்கே? இப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் இன்றைக்கு தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மூளை வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாக்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே நடிக்கும் கலைஞர்கள், இயக்கும் இயக்குனர்கள் என்று ஒரு கூட்டம் சினிமாவைக் கேவலபடுத்தி வருகின்றார்கள். இதற்கு உதாரணம் மாண்புமிகு இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இதயம் டிக்கென்றிருக்கும்.

சாட்டை என்கிற பெயரில் அக்மார்க் ஹீரோயிசப்படம். ஆசிரியர்கள் ஹீரோக்கள் அல்ல ! அவர்கள் ஞானிகள். எதையும் எதற்காகவும் எதிர்பாக்காத தியாகிகள். இக்கால ஆசிரியர்களில் எத்தனை எத்தனையோ இளம் ஆசிரியர்கள் முழுத் தியாகத்துடன் தங்கள் குழந்தைகளை நேசித்து அவர்கள் படிப்பதையும், எழுதுவதையும் நேசிக்கின்றார்கள். நேற்று என் பையன் கூடப்படிக்கும் சகமாணவன் என் மனைவியிடம் ”உங்கள் பையனுக்குச் சுத்திப் போடுங்கள், ரொம்ப அழகாக எழுதுகிறான் என்று டீச்சர் கண் வைத்து விட்டதாகவும், அதை டீச்சரே சொல்லச் சொன்னதாகவும்” சொல்லி இருக்கிறான். ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நூற்றில் பத்து சதவீதம் பேர் சுய நலவாதிகளாய் இருப்பார்கள். அவர்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. பயிரில் களைகள் இல்லையென்றால் பயிரைப் பற்றி விவசாயி சிந்திக்க மாட்டான். களைகளும் வேண்டும், அதை களையெடுக்கும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினாலே நிர்வகிக்கப்பட்டாலே போதும். இது போன்ற பிரச்சினைகள் ஓவர்.

பள்ளிப்பருவ காதல்கள் சுவாரசியமானவை. அக்காதல்கள் எதுவும் முழுமை பெறுவதில்லை. அதை ஒழுங்காக காட்டிய விதத்தில் சாட்டை நன்மை செய்திருக்கிறது. அதைக்கூட காசாக்கி அதை வைத்து தமிழ் சினிமாக்கள் ஹீரோக்களை உருவாக்கி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற கவட்டிக் கிளர்ச்சிப் படங்களில் நடித்துதான் தானுமொரு ஹீரோ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். முன்னனி ஹீரோவான ஒருவர் கபடி விளையாண்டும்,  பாத்ரூமில் காதலியின் மாமியாருக்கு சோப்பு போட்டும்தாம் ஹீரோவாக உயர்ந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் மலையாள மொழிகளில் செக்ஸ் படம் எடுத்துச் சம்பாதித்தவர்தான். பல பிரபலங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெண்கள்தான். இவர்கள் இல்லையென்றால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் ஆகி விடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தனி மனித துதி என்பது அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் தூக்கலாய் இருக்கும். எந்த ஒரு தனி மனிதனாலும் எதையும் பிடுங்கி விட முடியாது. மஹாத்மா காந்தி மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவனும் திரும்பிக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். காந்தியின் கொள்கைகளால் உயிரை இழந்தோரும், சிறையில் கிடந்து செத்தோரும் லட்சோப லட்ச மக்கள். அவர்கள் பற்றி யாருக்கு என்ன தெரியும்? இது போன்ற தனி மனித துதிகளும், போற்றுதல்களும் முற்றிலும் தவறானவை. அது ஒரு ஆகப் பெரிய கொடூரம் என்கிறேன்.

சாட்டைப் படத்தினை அனைவரும் பார்க்கலாம். ஏனென்றால் இப்படம் ஏதோ சொல்ல வருகிறது. பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எங்கே ஹீரோ, ஹீரோயின் காதலைச் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஏதும் ஆக வில்லை. சமுத்திரக்கனி சொல்லும் கடைசி வாக்கியத்திற்காக சாட்டையைப் பார்க்கலாம். ஹீரோயிசம் என்கிற விஷத்தினுள்ளே ஒரு மெசேஜ்.


Thursday, September 13, 2012

முழுமுதற் இறைவன் யார்? ஒரு விளக்கம்



குரு வாழ்க ! குருவே துணை !!

மெய்யன்பர்களே !
பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியாதிருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே, சிவன் கோவல்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தைத் தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக் காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

சிவலிங்கம் மூன்று கூறுகளுடையன. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமணி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடு பொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன்மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகாவிஷ்ணுவின் நவசக்திகளாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் ‘ஸ்திதி’ கர்த்தரான விஷ்ணுபாகத்தை உணர்த்துவதாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயரனார்க்கே’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே ‘மாதாயமாலவனை மாயவனை’ என்றும் அருளிச் செய்திருக்கின்றார்கள்.

அதனால் தான்  நமது அப்பனாகிய மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமா மகேஸ்வரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன் என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ள பாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்பரும் த்ரெளபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும்.
பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்கும் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புகதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். 

இம்மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும். ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மகாவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங்களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒருங்கே கிடைக்ககூடியதாகவும் இருக்கின்றதென்பதை வேதாகமங்கள் வலியுறுத்துகின்றன.

புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள் சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல சொல்லி வரும்,

மூலதோ பிரஹ்மரூபாய, 
மத்தியதோ விஷ்ணுரூபிணி,
அக்ரஹ்த சிவரூபாய,
விருக்‌ஷராஜாயதே நம.

என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேற்பாகம் போல அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியான எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக் கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும். 

அதனாலாயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும், மதுரை மீனாக்‌ஷிசுந்தரேசுவரர் அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண்கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜா துரந்தர்களாக இருக்க, அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெறுவதற்கு விஷேசத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராம நாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் ஹனுமார் தனியாக காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம்.
கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். 

கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீவிநாயகப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கப் பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

- தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 இல் பக்கம் 89,90,91 ( திருப்புறம்பயத் தல வரலாறு பகுதி)

சிந்திக்கவும், சிலிர்க்கவும் ஒரு குறிப்பு :

நமது தமிழர் பாரம்பரியத்தின் கல்வி ஐந்திரம் என்பதாகும். எண்ணியம்(சாங்கியம்), ஓகம், உலகாய்தம் ஆகிய இம்மூன்று கோட்பாடுகளும் வேதங்களை விட உயர்வானதாக மதிக்கப்பட்டனவாம். அரசர்கள் கல்வியில் இம்மூன்றும் முதன்மை பெற்றிருந்தனவாம். கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐந்திரம் கல்வியின் பிறப்பிடமாய் தமிழகம் திகழ்ந்தது. வட நாட்டிலிருந்தெல்லாம் இக்கல்வியைக் கற்றிட வந்தனராம். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராம். ஐந்திரக்கல்வி அறிவு வேட்கையைத் தூண்டி, மக்களை நன்னெறிபடுத்தியதாம். உலகிலேயே இரண்டே இரண்டு ஐந்திர நூல்கள் மாத்திரமே உண்டாம். அவை தொல்காப்பியமும், திருக்குறளுமேயாம். ( க. நெடுஞ்செழியன் - தமிழரின் அடையாளங்கள் நூலில் இருந்து)

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, September 11, 2012

முழுமையான கடவுள் எது?

இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருப்பதை பலரும் கிண்டல் அடித்திருப்பார்கள். அதற்கான பதிலை ஒரு புத்தகத்தில் படித்தேன். எனக்கு அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்ததால் விரைவில் அப்பதிவு வெளியிடப்படும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, September 10, 2012

இயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்


குரு வாழ்க ! குருவே துணை !!





எனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா?” என்றார்.

நானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம். 

காருக்குள் அமர்ந்து கொண்டார். 

”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன். 

அவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.
பத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார். 

ஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.

சில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “சில்லென்று” இருந்தது.

வெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல். 



எங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம். 

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.  நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Sunday, September 9, 2012

பில்லி, சூனியம் வைப்பது எப்படி?


குரு வாழ்க ! குருவே துணை !!

சாப்பாட்டுக் கொண்டிருந்த போது உணவில் உப்பு, காரம், புளி குறைந்திருந்தது. உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று நினைத்துக் கொண்டேன். உப்பெல்லாம் கம்மியா இருக்கேன்னு கேட்டேன். போதும் போதும் என்று குரல் வந்தது அம்மணியிடமிருந்து. என்னடா இது? எப்பவும் மறந்துட்டேங்கன்னு சொல்ற ஆளு போதும் போதும்னு சொல்லுதுன்னு நினைச்சுக்கிட்டே சாப்பிட்டேன். 

முகமூடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் ட்ரையிலர் காட்டினார்கள். அட அம்மணியின் தங்கை மாதிரியே இருக்காளே ஹீரோயின் என்று நினைத்தேன். அத்துடன் சும்மா இருந்தால் பரவாயில்லை. அதை அம்மணியிடம் வேறு சொல்லி விட்டேன். சாப்பாட்டில் காரம், புளி, உப்பு எல்லாம் காணாமல் போய் விட்டது. 

இப்படித்தான் எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்டேன். அது என்னவோ தெரியவில்லை மனைவிகளின் தங்கை மட்டும் அழகா இருக்காங்க. அதை வெளிப்படையா(!???) சொன்னா மனைவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. மூன்று நாளா உப்பில்லாம சாப்பிட்டதில் மூன்று கிலோ வெயிட் குறைந்து போய் விட்டது. இனி உப்பு போட்டு உணவு எப்போ கிடைக்குமோ தெரியவில்லை. 

அத்துடன் விட்டேனா? அடுத்து பில்லி வேறு வைத்த கதை இருக்கிறது. அதைக் கேளுங்கள் !

”தங்கையை பார்த்து விட்டு வருவோம்” என்றாள் அம்மணி. ”சும்மா போனா  நல்லாயிருக்காது, ஏதாவது வாங்கிக்கிட்டு போவோம்னு” சொன்னேன். நாங்கள் இருந்தது உழவர் சந்தை ஆகையால் இரண்டு கிலோ தக்காளியும், ஒரு கிலோ கேரட்டும் வாங்கிக் கொண்டு போனோம். போய்ப் பார்த்துட்டு சும்மா வந்திருந்தால் பில்லியிடம் இருந்து தப்பித்திருப்பேன். 

”என்ன மாமா தக்காளி, கேரட்டுன்னு” அம்மணியின் தங்கை கேட்க, தப்பா நினைத்துக் கொள்ளப் போகிறாளே என்று நினைத்துக் கொண்டு, ”உடம்பு சரியில்லை என்று சொன்னாயா? அதனால் கலர் கிலர் குறைஞ்சிருக்கும்னு தக்காளியும், கேரட்டும் வாங்கிக் கொண்டு வந்தேன்னு” சொன்னேன். 

வீட்டுக்குத் திரும்பி வரும்போது, “எவ்வளவு அக்கறை உங்களுக்கு?” என்றாள்.

“என்ன என்ன சொன்னாய்?”

“என் தங்கச்சிக்கு கலர் குறைஞ்சிருச்சுன்னு எவ்வளவு கவலை உங்களுக்கு?” என்றாள்.

பில்லியை நானே எப்படி வைத்துக் கொண்டேன் என்று பார்த்தீர்களா?

இப்படித்தான் பில்லி, சூனியம் வைப்பது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். 

வாழ்க வளமுடன் ! மனைவியின் தங்கைகள் ஏதும் இன்றி !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

குறிப்பு : வாயைக் கட்டவில்லை என்றால் இப்படித்தான் ஆகும் என்பது பதிவின் மெசேஜ்.

Saturday, September 8, 2012

புளி

குரு வாழ்க ! குருவே துணை !!

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் “ஆறாம் திணை” தொடரில் ஒரு பகுதி இங்கே. புளியில் சமைத்த உணவின் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறார். புற்று நோய் வரக்கூடிய காரணிகளை ஆராய்ந்திருக்கிறார். படித்து மனதில் ஓரத்தில் குறிப்பிட்டு வையுங்கள். உபயோகமாய் இருக்கும்.

சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும் விகடன் நிறுவனத்தாருக்கும், மருத்துவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் சமுதாயத் தொண்டு மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வளங்களையும் அருளட்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன் (ஆனந்த விகடன்)



குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம்.

சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.

புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.

ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.

'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.

நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?

Thursday, September 6, 2012

ஆன்மீகம் அறிவியல் மிஷ்கினின் முகமூடி பின்னும் உன்னால் முடியும் கோபிநாத்தும்




குரு வாழ்க ! குருவே துணை !!

மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின் முன்மாதிரிகள் அல்லது முன் வடிவங்களை நாம்  கிழக்கிந்திய ஆன்மீக நூல்கள் வாயிலாக கண்டு கொள்ளலாம். புஷ்பக விமானம் முதற்கொண்டு, ஏவுகணைகள் வரை அத்தனையும் தொன்மையான இந்திய ஆன்மீகப் பாதையில் புரண்டு கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போஸான் துகள் கூட அப்படியே. 

மனிதனும் பிரபஞ்சமும் - சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய நூலைப் படித்துக் கொண்டிருந்த போது, நூலின் பத்தாவது பக்கத்தில் ஒரு அடிக்குறிப்பு எழுதி இருந்ததைக் கண்டு வியப்பேற்பட்டது. பிரபஞ்சத்தில் இருப்பது இரண்டே இரண்டு பொருட்கள்தான். ஒன்று ஜடப்பொருட்கள் மற்றொன்று உயிராற்றல். கபிலர் இப்படித்தான் வரையறுத்து உள்ளார் என்கிறார் சுவாமி. மேலும் போஸான் பற்றிய முன்குறிப்பாய், 2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நூலில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பின்வருமாறு எழுதி இருக்கிறார்.

“அணுவை மட்டுமின்றி அதனுள்ளிருக்கிற புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கூடப் பிளக்க முடியும், துகள் துகளாக்க முடியும் என்று கண்டு பிடித்திருக்கிறது நவீன விஞ்ஞானம். இறுதியில் இன்னும் பிளக்க முடியாத, உடைக்க முடியாத ஒரு துகள் எஞ்சியிருக்கிறதா என்பது புதிராக இருந்து வருகிறது. அப்படி ஒரு துகள் கிடைத்தால், பிரபஞ்சக் கட்டிடத்திற்கு அதுவே செங்கல்”

போஸானைப் பற்றிய  மறைக் குறிப்பினை சுவாமிகள் எழுதி இருப்பதை நாம் அறியலாம். இது போன்ற எண்ணற்ற அடிக்குறிப்புகள் பலவும் பல ஆன்மீக புத்தகங்களில் மறைபொருளாய் கிடக்கின்றன. இந்திய ஆன்மீகத்தைப் பற்றிய அறிவு பரவலாக்கப்பட்டால் மேலும் மேலும் இயற்கையில் ஒளிந்திருக்கும் எத்தனையோ விஷயங்களை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.  போஸானின் தத்துவம் சிதம்பர நடராஜர் சிலையில் இருக்கிறது என்று தற்போது பேசிக் கொள்வது நமக்குத் தெரியும்.

உங்களுக்கு ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அக்னி, நெருப்பு, தீ, ஜோதி, ஜ்வாலை என்றெல்லாம் அழைக்கக்கூடிய நெருப்பு எப்படி உருவானது என்று சிந்தித்துப் பாருங்கள். அது ஏதோ ஒரு கல்லில் அல்லவா மறைந்து கிடந்தது. சாதாரண கல்லில் உலகை வாழ வைக்கும் அல்லது அழிய வைக்கும் ஊழித் தீயை உண்டாக்கும் கருப்பொருள் இருக்கிறது என்றால் பிறபொருட்களில் மறைந்து கிடப்பவை எத்தனையோ? அறிவியல் புலனின்ப அறிவுக்குள் அத்தனை காரணத்தையும் கண்டுபிடிக்க முனைந்து கொண்டே இருக்கிறது. அது நான்கு குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்வது போலத்தான் இருக்கும் என்கிறார் சுவாமி தம் நூலில். 

வழிகாட்டுதல்களுக்கு ஆன்மீக நூல்கள் அறிவியலுக்கு துணை செய்கின்றன. ஆனால் சிலர் வழிகாட்டுகிறேன் என்று வேறு எங்கோ சமூகத்தின் பாதையை திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று இயக்குனர் நண்பரொருவரின் வற்புறுத்தல் காரணமாய் முகமூடி திரைப்படத்திற்குச் செல்ல நேரிட்டது. தியேட்டர் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது ”அட்டகத்தி அளவுக்கு படம் கலெக்‌ஷன் சரியில்லை சார்” என்றார். ஆனால் தியேட்டரினுள் ஒரே ஒரு வரிசை மட்டுமே பாக்கி இருந்தது. தியேட்டர் ஃபுல். மேனேஜர் சரடு விட்டிருப்பாரோ என்று நினைத்தேன். முகமூடி திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இப்படத்தோடு போட்டி போடக்கூடிய வேறு ஏதும் திரைப்படம் இல்லாத காரணத்தால் நிச்சயம் முகமூடி நல்ல கலெக்சனை கொடுத்திருக்கும். வெளியீட்டில் கூட நேரம் காலம் பார்க்கணும். பெரிய படங்களோடு போட்டி போட்டால் இரண்டாவது நாளே படம் பொட்டிக்குள் போய் இருக்கும். யுடிவியின் சாமர்த்தியம் சரியானது தான்.

மூன்று மணி நேர தன் நினைவு மறப்பு என்பதற்காக, பொழுதினை போக்குவதற்காக படம் பார்க்கச் செல்லும் போது செல்போனை ஏன் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்றே தெரியவில்லை. எப்போதும் பேச்சுத்தானா? எதிலும் முழு ஈடுபாடு எவருக்கும் இருப்பதில்லை. பாட்டு வரும்போது சீட்டினை விட்டு எழுந்து செல்வது, வேறு எவராவது சினிமா ஹீரோ பெயரைச் சொல்லும் போது கழுதை தொண்டைக்குள் புகுந்தாற்போல வறட்டுக் கத்து கத்துவது, சீட்டி அடிப்பது, எழுந்து ஆடுவது போன்ற கோணங்கித் தனங்களைச் செய்யும் சக மனிதர்கள், இந்தச் சேட்டைகள் பிறருக்கு எரிச்சலைத் தரும் என்று ஏன் நினைக்க மறுக்கின்றார்கள் என்பது புரியவில்லை. அமைதியாய் உட்கார்ந்து சில்லிட்ட காற்றையும், இயக்குனரின் கலைப்படைப்பையும் ரசித்து விட்டு வந்தால் என்ன? மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மிருகத்தன்மைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சினிமா தியேட்டர்கள் ஒவ்வொன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. அது போகட்டும் !

பிரபல எழுத்தாளர் தஸ்தாவேயெஸ்கியின் ஏதோ ஒரு நாவலின் கதாபாத்திரத்தை தன் பெயராக வைத்திருக்கும் மிஷ்கினின் திரைப்படத்தில் மஞ்சள் சேலை குத்துப் பாட்டு கேட்கவும், பார்க்கவும் வெகு ரசனையாக இருக்கும். அப்படி ஒரு பாட்டு முகமூடி திரைப்படத்தில் இருக்கும் என்று நம்பினேன். மனிதர் ஏமாற்றி விட்டார். ஆனால் கொலை, போலீஸ் கதைக்களத்திலிருந்து மனிதர் இன்னும் திரும்பவில்லை. அஞ்சாதே, யுத்தம் செய் இரண்டு படங்களும் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்டதாய் இருந்தது. இளம்பெண்களை கற்பழிப்பது, வயதானவர்கள் இளம் பெண்களைக் கற்பழிப்பது போன்ற சித்திரங்கள் மிஷ்கினின் ட்ரேட்மார்க். சித்திரம் பேசுதடியில் ரவுடி தளம், நந்தலாலா - இவரின் படைப்பு அல்ல என்பதால் எழுதத் தேவையில்லை. நல்ல வேளை முகமூடியிலும் நரேன் முதிய மாமிகளை வன்புணர்ச்சி செய்யாமல் கொலையோடு விட்டு விட்டார். ஆகவே மிஷ்கினின் முகமூடி ரசனை எனக்குப் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இந்த முகமூடி ஓகே ரகம். இதற்கு மேல் ஏதும் செய்யமுடியாது. பாடல்கள் எல்லாம் அவரின் முந்தைய படங்களின் காப்பி போலவே இருக்கிறது. பிற்பகுதியை காமெடியாக்கி ஜிவ்வாவை கலாய்த்து விட்டார். ஜிவ்வா ரசிகர்கள் ஒருவரும் தியேட்டரில் விசில் கூட அடிக்கவில்லை.

தன் தாத்தாவிடம் உரையாடுவார் ஜிவ்வா.

”நான் ப்ரூஸ் லீ போல ஆவனும்” - ஜிவ்வா

“ஆகி என்ன செய்வாய்?” - தாத்தா

“ நல்லா ஃபைட் பண்ணுவேன்” - ஜிவ்வா

“ஃபைட் பண்ணி???” - தாத்தா

முழிப்பார் ஜிவ்வா.

ப்ரூஸ் லீ தனக்கென தனிப்பாதையை வகுத்து அதில் அவர் வெற்றி பெற்றார். அவரைப் போல மற்றொருவர் ஆக முடியாது. நீ யாராக வேண்டுமென்பதை நீயே தேடி கண்டுபிடி என்றுச் சொல்வார் ஜிவ்வாவின் தாத்தா.

இதைக் கண்டுபிடிக்க நம் கல்வி முறை உதவுவது இல்லை. மெட்டீரியல்ஸ் வாழ்க்கையை நோக்கிய பணத்தை சாரி பயணத்தைதான் இன்றைய கல்வி முறை சொல்லித் தருகிறது. அது மட்டுமல்லாமல் மீடியாக்களில் இதே கூத்துதான்.

உன்னால் முடியும் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கோபிநாத் பல தொழிலதிபர்களை வரவழைத்து அவர்களின் வெற்றிக் கதைகளையும், பிரச்சினைகளையும் கேட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர உதவி செய்கிறார் என்று எனது பல நண்பர்கள் பேசினார்கள். நல்ல நிகழ்ச்சி என்றும் சொன்னார்கள். எனக்கு அந்த நிகழ்ச்சி சுத்தமாய் பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் துடிப்பான இளைஞர்களைக் கேட்டுப்பாருங்கள்? ஒவ்வொருவனும் நான் அம்பானி போல வரணும் என்பார்கள். கோல்கேட் ஊழலில் நிலக்கரியை சட்ட விரோதமாய் வேறொரு தெர்மல் பவர் பிளாண்டுக்கு மாற்றிய வகையில் மட்டும் ரூபாய் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள் அம்பானி குழுமத்தார் என்கின்றன பல பத்திரிக்கைகள். அதுமட்டுமா பாலியஸ்டர் பிசினஸ்ஸில் இவர்கள் செய்திருக்கும் கோல்மால்களை வெளி நாட்டுக்காரர் புத்தகமாய் எழுதி வெளியிட, அதை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. இவரைப் போல ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த குற்றவியல் பின்னணி கொண்ட குழுமத்தின் செயல்பாடுகளைக் கேட்டால் திரும்பவும் அதே போல சொல்வார்களா? மனச்சாட்சியும், இந்தியாவின் மீதும், சமூகத்தின் மீதும் பிடிப்பு உள்ள எவரும் திரும்பவும் அதே பதிலை நிச்சயம் சொல்லமாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன். அவனது சூழலும் தனித்தன்மை வாய்ந்தது. வழிகாட்டுதல் என்பது மட்டுமே சரியாக இருக்குமே ஒழிய அவரைப் போல ஆவது, இவரைப்போல ஆவது என்று சமூகத்தினை தவறான வழிப்பாதையில் அழைத்துச் செல்லும் உன்னால் முடியும் நிகழ்ச்சி முற்றிலும் தவறானது. பிரபலங்களின் வெற்றிக் கதைகள் நமக்குத் தேவையில்லை. அவர்கள் வெற்றி பெற்றது அவர்களின் தனித்தன்மையினாலும், அவர்களின் சூழலினாலும் மட்டுமே. அதே சூழலும், அதே தனித்தன்மையும் எல்லோருக்கும் இருக்கவே இருக்காது. கோபிநாத்திற்கு மட்டுமே உதவியாக இருக்கும் இந்த வித நிகழ்ச்சிகள் வளரக்கூடிய எந்த ஒரு சமூகத்திற்கும் எந்த வித பிரதிபலனையும் தராது என்று நிச்சயம் என்னால் அடித்துக் கூற முடியும்.இதோ அதற்கான காரணம் கீழே இருக்கிறது.

ஒரு பெரிய பணக்காரனின் பையன் பிசினஸ் செய்ய வேண்டுமெனில் எளிதில் செய்வான், அதில் வெற்றியும் அடைவான். பிரபல அரசியல்வாதியின் பையன் நினைத்தால் அவனால் என்ன பிசினஸ் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதில் வெற்றியும் பெற முடியும். ஆனால் சாமானியன் ஒருவனால் முடியுமா? உன்னால் முடியும் கோபி நாத் இதற்கொரு பதிலைத் தருவாரா? பணமும், அதிகாரமும் இருப்பவர்களால் மட்டுமே பல பெரும் தொழில்கள் தொடங்க முடியும். சாமானியமானவன் காளான் வளர்க்க முடியும், சோப்புக்கட்டி விற்க முடியும். அந்தக் காலம் அல்ல இந்தக் காலம். இப்போது இருக்கும் காலம் சுய நலமும், ஈகோவும் நிரம்பிய மனிதக் கூட்டங்களால் நிரம்பியது. இதில் சாமானியனுக்கு எந்த வித வாழ்வியல் உரிமைகளும் எளிதில் கிடைப்பதில்லை. இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஏதாவதொரு அரசு சார்ந்த அமைப்புகளின் வாசல்களில் சென்று நில்லுங்கள். அப்போது உங்களுக்குத் தெரியும் நிதர்சனம் என்னவென்று.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Thursday, August 30, 2012

பாலையைக் கடப்பானேன்?


உலகில் தோன்றிய எத்தனை எத்தனையோ நாகரீகங்களில் தமிழ் நாகரீகத்தில் மட்டுமே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐவகை பூமிகள் வரையறுக்கப்பட்டன. தமிழர் நாகரீகத்தில் மட்டுமே மனித வாழ்வியல் கோட்பாடு அகம், புறம் என்று வகுக்கப்பட்டன. குமரிக் கண்டம்தான் மனித குலம் வாழ மிகச் சிறந்த பூமியாக, அற வாழ்வில் பிடிப்புடைய மனிதர்களால் நிரம்பிய புண்ணியத்தலமாய் சிறந்திருக்கும் பூமி. இப்பூமியில் உதித்தவர்களால் மனித குலம் தழைத்தோங்க, சீரும் சிறப்புடன் வாழ பல் வகை அறிவு சார் நூல்கள் உதித்தன. முதன் முதலாக யூஸ் அன் த்ரோ கான்செப்ட்டை வாழை இலையில் உணவு படைத்து உருவாக்கிய பூமி நம் குமரிக்கண்டம். 

இப்படியான புண்ணிய பூமியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கால மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு காரணம் இங்கிருக்கும் தமிழர்களே. குமரிக் கண்டத்தின் பூமி தீய எண்ணமுடையவர்களை தன்னிடமிருந்து நீக்கிட துணிந்து பல செயல்களை நிகழ்த்துகின்றது. அதில் ஒரு செயல்தான் மழைவளம் குன்றி மண் வளம், மக்கட் வளமும் சீரற்று இருக்கின்றன. 

தமிழர்கள் மோகத்திலும் குடியிலும் கூத்திலும் மூளை செயலிழந்து போய் தன் உடலையும், மனத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். அலோபதி மருந்தைப் போல உடனடிப் பலன் கிடைக்கும் என்பதாய் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் காசு பிடுங்கும் கூட்டத்தின் மாயைப் பிடியில் சிக்கி, எங்கெங்கோ சென்று வருகின்றனர். எத்தனை எத்தனை ஆன்மீக வழிகளில் சென்று முயன்றாலும், செய்வினைப்பலன் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மாயையில் சிக்கி மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தங்களின் பூமிக்கு தீங்கு செய்யின் அதன் பலனையும் அனுபவித்தாக வேண்டும். அதைத்தான் தமிழர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மோகம், குடி, கூத்தாட்ட மாயையை விலக்கி உண்மையை அறிந்திட நல்லோர் இடம் சேர வேண்டும். இளைஞன் ஒருவன் தான் எப்போதுமே இளமையாகவே இருப்பேன் என்று நினைத்துக் கொள்வது மாயை. பெண்ணொருத்தி தான் மட்டுமே அழகு என்று நினைப்பது மாயை. இது போன்ற எண்ணற்ற மாயை என்கிற வலையில் சிக்கி எது உண்மை, எது மாயை என்பதை அறியக்கூடிய அறிவுத்திறனும் மழுங்கிப் போய் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று வாழ்கிறார்கள் இன்றைய தமிழர்கள். 

மாயையின் காரணமாய் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரும் செயலின் பலனையும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அனுபவித்து ஆகவேண்டியது இயற்கையினைப் படைத்த “அவன்” கட்டளை. மீறவும் முடியாது, ஓடி ஒளிந்தாலும் தப்பிக்கவும் முடியாது.

செய்த வினைக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும், உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டுமென்கிறார்கள். நிகழ்காலத்தில் இருப்போர்கள் “பாவம் செய்தவர்களும், தவறு செய்பவர்களும் தான் நன்றாக வசதி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்” என்பார்கள்.  அது உண்மையே இல்லை. பாவம் செய்கிறவன் தன் வாழ் நாளுக்குள்ளே அத்தனை துன்பங்களையும் அடைந்து நொந்து நூலாய் போவான். இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கண்ணதாசனை”த் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்? கோவில் கோவிலாய் சுற்றினாலும், பூஜைகளும் புனஸ்காரங்களும் செய்தாலும், அன்னதானம் செய்தாலும், அற வழியில் நின்றாலும் செய்த பாவத்தின் பலன் வேறொருவனைச் சேரவே சேராது. உப்பை அள்ளி அள்ளி முழுங்கியவனுக்குத்தான் தாகம் எடுக்கும்.

”கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைத் தியானிப்பானானால், அவன் கடந்த கால தீய வினைகள் விளைவுகளைச் சீக்கிரம் கழித்து விடுகிறான். விரைவில் அவன் அறவாளன் ஆகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசம் அடைவதில்லையென்று நிச்சயமாக அறிக !- கீதை அத்தியாயம் IX, பாடல்கள் 30-31 (உதவி : ஒரு யோகியின் கதை )”

கீதையிலே பகவான் சொல்கின்றான் செய்த வினைப்பலனை நீ எளிதில் கழிக்கலாம். அவனைத் தியானித்தால் மட்டும் வினைப் பயனை நீக்கி விட முடியாது என்கிறான். வினைப்பலனை சீக்கிரம் கடக்கலாம் என்றுதான் சொல்கிறான். ஆக, பாவத்திற்கு பரிகாரம் இல்லை என்று முடிவு செய்யலாம். 
எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொள்ள ஒன்று,

பாலைவனத்தில், கொழுத்தும் வெயிலில், தகிக்கும் நெருப்புக் காற்றில் நடந்து செல்வது வினைப்பயன் என்கிற போது, பகவானை தியானிப்பதால் சற்று நேரம் வெயில் மங்க கூடும், அல்லது பாலைவனத்தில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பாலையைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த பிற உதாரணங்கள்

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் தன் கர்மாவைக் கழித்த பிறகு தான் மோட்ச நிலை கிடைத்தது அனைவருக்கும். கடவுளே கிருஷ்ணனாய் பிறந்தாலும் அவனும் கர்ம வினைப் பலனை அனுபவித்த பிறகுதான் மோட்சம் பெற முடிந்தது. எவரும் வினைப் பலனை அனுபவிக்காமல் தட்டிக் கழிக்க முடியவில்லை.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் ராமனும் விதிப்பயனை அனுபவித்தார்.

கண்ணதாசன் சொல்வார் “ விதியை மதியால் வெல்வதும் விதியே”.


வினையை விதைப்பானேன், பாலையைக் கடப்பானேன் !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, August 27, 2012

லிட்டில் மைண்ட் பிக் மைண்ட் ( little mind big mind )


குரு வாழ்க ! குருவே துணை !!

ஒவ்வொரு பதிமூன்று செகண்ட்ஸ் வித்தியாசத்தில் மனிதனின் பிறப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கால தேவனின் கணக்கு இது. ரெட்டையர்களின் ஜாதகத்தை பெரும்பாலானவர்கள் ஒரே ஜாதகம் என்றுதான் கணிப்பார்கள். ஆனால் அது சரியான கணிப்பாக இருக்க இயலாது. கட்டங்கள் மாறி விடும். இரண்டு நொடிகள் அல்லது இரண்டு நிமிடங்கள் வித்தியாசம் கூட கணிப்பின் கட்டங்களை மாற்றிப் போடும். ஜாதகக் கணிப்பின் உச்சகட்டம் - இன்று நடந்தது என்ன என்பதைச் சொல்வது பற்றி தான். பஸ்ஸில் வரும் போது என் நினைவில் நிழலாடிய, சிந்தித்ததை சரியாகச் சொன்னார் திரு கண்ணன் என்றார் எனது நண்பர்.  இவ்வுலக வாழ்க்கையில் மனிதர்களால் ஆறறிவு பெற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாத, புலனின்ப பிடிப்பு கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு முடிச்சுக்கள் இருக்கின்றன. இதோ அதில் ஒன்று.

ஆதிசங்கரர் தன் தாய்க்கு கோவையில் இருக்கும் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்து தன் தாய்க்கு முக்தி அளித்தார். இந்தியாவெங்கும் இந்து சமய  நெறியை ஒழுங்கு படுத்தி, அமைப்பியலாக்கிய மாபெரும் ஆன்மீக சக்தி உடையவர் ஏன் பேரூர் படித்துறைக்கு வந்தார்? வேறு எங்கும் கோவில்களே இல்லையா?ஏன் இங்கு வந்த அக்காரியத்தைச் செய்தார்? இதற்கு என்ன காரணம்? இன்னும் இன்னும் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன நமக்குத் தெரியாமலே அல்ல புரியாமலே. 

கண்பார்வையின் தூரம் எவ்வளவு என்று கேட்டால் சிலர் நூறடி, சிலர் ஒரு மைல் என்றுச் சொல்வார்கள். இது அஞ்ஞானம். கோடானு கோடி ஒளிப்பயணத்தின் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை நம் கண்கள் காண்கின்றன என்றுச் சொன்னால் அது மெய்ஞானம். உண்மையை அறிதல் என்பதுதான் மெய்ஞானம்.

அஞ்ஞானத்தினை குறுகிய அல்லது சிறிய அறிதல் என்றும், மெய்ஞானத்தை பரந்த, உண்மையை அறிதல் எனலாம். அதை லிட்டில் மைண்ட் பிக் மைண்ட் என்கிறார்கள் திபெத்தியன் புத்திஸ்ட்.

லிட்டில் மைண்ட், பிக் மைண்ட் என்பதன் விளக்கம் கீழே இருக்கிறது. யாரெல்லாம் லிட்டில் மைண்ட், யாரெல்லாம் பிக் மைண்ட் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இப்பாராவை படித்த பின்பு மெய்யறிவு என்கிற மெய்ஞானம் பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

Tibetan Buddhist teachers have a simple yet powerful teaching to open us to who we really are. It may be seen as the teaching of Little Mind-Big Mind; or in Tibetan, Sem Chungchung-Sem Chenpo . Little mind is everyday-mind for most of us - ranging from simple planning, coping, anxiety about minor or major things, escalating to self-preoccupation, self-contraction and narrowness.

Little-mind living results in spending a good portion of our time disconnected from who we really are, not acknowledging our inherent Buddha-nature. And at the end of a day of doing all that needs to be done, marked by moments of anxiety, impatience, anger and aggression, we feel exhausted or empty. As one teacher put it, "Our day job has changed from practising our enlightened qualities to covering them up."

Big mind, on the other hand, acknowledges and appreciates its own capacity for enlightenment. It is characterised by having confidence in our inherent joy, wisdom and compassion. Small mind deserves small attention; big mind deserves big attention. However, most of us end up doing just the reverse! If we do not trust in our own natural greatness, we can't easily recognise it in others.

Interestingly, psychologist Richard Alpert, better known as Ram Dass, laid out what he sees as the difference between the western psychological tradition and the Hindu/Buddhist model of mind.
If we experience our lives as if confined to a prison cell made up of the concepts of society, culture, family and personal experience that condition us, we may find it hard to see a way out. Perhaps some have orderly, comfortable cells, while some have messed up, cluttered cells. We name these states of relative order or disorder, being 'mentally well' or 'mentally ill'.

Most of western psychology, he says, acts like a kind of caretaker that comes in and tidies up the place, giving it better order and cleanliness; we remain, however, locked inside the cell. This, while it works in some sense, he considers the psychology of the ego, or what Buddhism calls the little-mind approach. Hindu or Buddhist psychology, through not only inter-ventions, but by including methods of mindfulness and meditation, shows the way to the door that leads us out of the cell - into the world of expansive potentiality, into what Buddhism calls Big Mind.

A story is told of one of Tibet's great female yogis, Machig Lobdron, who perplexingly used to cry one minute and laugh the next.

When someone asked her why she acted that way, she replied, "I laugh with delight because enlightenment always lies right below the surface of life, right in front of our nose. This is truly a joyous and wondrous discovery. I cry because beings are anxious, in pain, and depressed, when our enlightened qualities are so nearby, yet so covered up."

Living out of big mind does not require us not to give up everyday concerns - that would be too unrealistic - but to place them firmly in perspective. And this cannot happen without some slowing down and reflection. Then, we will need to make time and space for attention to big mind; and see how little mind will slip into second place - MARGUERITE THEOPHIL


- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் மர்கரெட் தியோபில்