குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 24, 2011

காதல் மறுப்போரைத் தூக்கில் போடுங்கள்

இந்தப் பதிவு காதல் நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்ட அன்புள்ளங்கள் ஸ்ரீதேவிக்கும், கார்த்திகேயனுக்கும் சமர்ப்பணம்.

காதலிப்பது மரணிக்கவா? 

இல்லையில்லை. மரணத்திற்கே மரணத்தை தருவதற்காக காதலர்களே ! 

காதலர்களே காதலிக்கின்றீரா கலீல் ஜிப்ரானைப் படியுங்கள். காதல் என்றால் என்னவென்று தெரியும். 

அன்புக் காதலர்களே, இதோ கலீல் ஜிப்ரானின் அலைகளின் காதலைப் பற்றிய ஒரு கவிதையை உங்களுக்கு தருகிறேன். இப்பூவுலகில் மனிதர்கள் கடல் அலையைப் போல வந்து வந்துச் செல்கிறார்கள். வருவதும் போவதும் நிற்பதே இல்லை. காதலும் அதுபோலே !

அலையின் காதல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; 
நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். 
நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; 
சட்டென பிரிகிறேன்; 
பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து 
வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, 
அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன்.
அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்;
என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் 
காதலின் விதிகளை ஓதுகிறேன். 
அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது 
நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். 
அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை 
அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். 
அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி 
பல முறை நான் நடனமாடியிருக்கிறேன்.
அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து 
அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை 
என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். 
நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை 
சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன்.
அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன்.
அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை
மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை 
எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து 
வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். 
அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். 
என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க
நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். 
ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். 
நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது.
என்றாலும் நான் காதலியாயிற்றே? 
காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

* * *

கவிதை கிடைத்த தளம் : http://tamil2000.blogspot.com/ ( நன்றி சாம்பசிவம் )

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.