குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 18, 2011

சொத்து சம்பந்தமான வழக்குகள் - உயில் பிரச்சினை

சமீபத்தில் எங்களிடம் வந்த கிளையண்ட்டுக்கு ஒரு பிரச்சினை. தனது தங்கை என் மீது சொத்தில் பங்கு இருப்பதாக வழக்குப் போட்டிருக்கிறார் என்றார். வழக்கு விபரங்கள் அனைத்தும் கொண்டு வரும்படி பணித்தோம்.

இவரோடு பிறந்தது மூவர். இருவர் பெண்கள். ஒருவர் ஆண். இவரின் அப்பா இறக்கும் முன்பே இவருக்கும், இவரின் சகோதரருக்கும் உயில் எழுதி வைத்திருக்கிறார். அப்போது இவரின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் வேறு இருப்பதையும், அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய தாய் மாமன் சீரை சகோதரர்கள் இருவரும் இணைந்து செய்ய வேண்டியது என்றும், பெண்கள் இருவருக்கும் சொத்தில் பங்கு இல்லை என்றும் உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் அந்த உயிலை ரெஜிஸ்டர் செய்து, அதன்படி பாகப்பிரிவினை செய்து கொண்டனர். கிளையண்ட்டின் அண்ணன் தன் பாகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்து விட்டார். கிளையண்ட் தற்போது விற்க முனையும் போது இளைய சகோதரி சொத்தில் பங்கு இருக்கின்றது என்று கேஸ் போட்டு விட்டார்.

கிளையண்ட்டிடம் 100% சேலஞ்ச் செய்து சொத்தினை விற்குமாறு சொன்னோம். அதன்பிறகு சந்தோஷத்துடன் சென்றார்.

அதே போல பட்டாவினால் மிகப் பெரிய சொத்து ஒன்று இதுகாறும் விற்பனை செய்ய இயலாமல் போனது. அதுமட்டுமல்ல சென்னையின் பிரதான இடம் கிட்டத்தட்ட ஒரு கிராமமே ஒருவருக்குச் சொந்தமானது. ஆனால் அந்தக் கிராமத்தின் இன்றைய நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத மதிப்பு உள்ளது. எங்கே என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.