குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 3, 2011

பவர் செல்லுமா செல்லாதா?

சொத்து வாங்கும் போது பத்திரம் என்பதைத் தாண்டி பவர் பத்திரம் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றிய ஒரு பதிவுதான் இது. இப்போது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

கே என்பவர் தனது 10 ஏக்கர் சொத்தினை ஜே என்பவருக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த ஜே என்பவர் பத்து ஏக்கரில் ஒரு ஏக்கரை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மீதமுள்ள 9 ஏக்கரில் அரசாங்கம் 5 ஏக்கரை சாலைக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு எடுத்துக்கொண்ட விபரங்களை பவர் வைத்திருக்கும் ஜே என்பவரிடம் தான் தெரிவிக்கிறது. அதற்குண்டான பலன்களையும் ஜே என்பவர் தான் பெற்றுக் கொள்கிறார். இதற்கிடையில் ‘ஜே' என்பவர் 4 ஏக்கரை விற்கும் பொருட்டு, வேறொருவரிடம் பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அக்ரீமெண்ட் போட்டு விடுகிறார். இதற்கிடையில் பவர் எழுதிக் கொடுத்த ‘கே' என்பவர் இறந்து விடுகிறார்.

எங்களது கம்பெனி சென்னை ஏஜெண்ட் மேற்படி விபரத்தைச் சொல்லி, மேற்படி எழுதப்பட்ட பவர் இப்போதைக்குச் செல்லுமா இல்லை காலாவதியாகி விட்டதா என்று கேட்டார்.

எங்களிடம் வரும் முன்பே அவர் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் தான் பவர் செல்லுபடியாகும். அவர் இறந்து விட்ட படியால் பவர் செல்லாது என்றும், இனி அந்தச் சொத்து பவர் எழுதிக் கொடுத்தவரின் வாரிசுகளுக்குச் சென்று விடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். சொத்தினைக் கிரயம் வாங்க வேண்டுமென்றால் வாரிசுகளிடம் என் ஓ சி வாங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மேற்படிப் பிரச்சினைக்கு மேலே சொல்லப்பட்டிருப்பதுதான் சொல்யூசனா என்றால் கிடையவே கிடையாது. மிக முக்கியமான ஒரு பாயிண்டை விட்டு விட்டார்கள். அது என்ன?

இது போன்ற சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வு கொடுக்கிறது. இவ்வசதியைப் பெற எங்கள் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் காப்பிகளுடன், கட்டணத்தையும் செலுத்தினால் லீகல் ஒப்பீனியன் கொடுக்கப்படும். சொத்து இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் லீகல் ஒப்பினியன் பெற்றுத்தரும்.

சரி மேலே இருக்கும் பிரச்சினையில் மறந்து போன பாயிண்ட் என்னவென்றால், சொத்து விற்கும் பொருட்டு அக்ரீமெண்ட் போடும் போது, பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்திருந்தால் அந்த அக்ரீமெண்ட் செல்லுபடியாகும் என்பதுதான் அது. ஆக இந்தச் சொத்தினை வாங்க அக்ரீமெண்ட் போட்டவருக்கு மேற்படிச் சொத்தினை வாங்க முழு உரிமையும் உண்டு.

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.