குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 22, 2009

சாதிக்க விரும்புகின்றீர்களா ?

கோபப்படாதவர்கள் புத்திசாலிகள் !

மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் ெபாருத்தப்பட்ட அறையில் இருக்க விரும்புவான். ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான். உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படித்தான். மகிழ்ச்சியான நிமிடங்கைள மிகவும் விரும்பும் மனிதன், கோபமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவதே இல்லை. கோப உணர்ச்சியும் இப்படித்தான். ஆம்! எல்லாருடைய உண்மையான கோபமும் ‘ஒரு நிமிடம்’ தான்.

எதிராளியின் பிரதிபலிப்புத்தான் அந்தக் கோபத்தின் காலகட்டத்தை நீட்டிக்கச் செய்கிறது. ‘என்னடி! நெனச்சிக்கிட்டிருக்கே உன்மனசுல? பெரிய மகராணின்னு நினைப்பா?’ என்று ஒரு கணவர் ஆரம்பிக்கிறார் என்றால், பொங்குகிற பாலில் தண்ணீர் தெளித்து அதை அடக்குகிற கதையாய், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. தயவு செஞ்சு கோபப்படாதீங்க’ என்று சூட்டைக் குறைக்கிற வார்த்தைகளைத் தெளித்தால், கணவன் அடங்கிய பாலாகிவிடுவான்.

எல்லா கணவன் மனைவிக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரே நேரத்தில் இருவரும் கோபப்படேவ கூடாது. அந்த நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘எவ்வளவு வேண்டுமானாலும் கத்து. நான் ஒன்றும் பேசப்போவதில்லை. நீ அடங்குவேல்ல! அப்ப வச்சுருக்கேன் உனக்கு’ என்று அந்த நிமிடம் ஒரு கணவன் அடங்குவானேயானால் அவன் புத்திசாலி.

இருவரும் ஒரே காலகட்டத்தில் கோபப்படும் போதுதான் வார்த்தைகள் தடிக்கன்றன. கைகள் நீளுகின்றன. ஏன் இன்னும்கூட விபரிதமாகெவல்லாம் ஏதேதோ நிகழ்ந்துவிடுகின்றன.

ஆத்திரக் கணத்தில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை. அவற்றை உண்மையான அகராதி கொண்டு மொழி பெயர்க்கக் கூடாது. அடங்கியபின் வரும் வார்த்தைகளே அர்த்தமுள்ளவை.


கோபம் எனும் மதுவைப் பெருமூளையில் ஏற்றிக்கொண்டவர்கள் பிதற்றத்தான் செய்வார்கள். ஒருவர் சூடேறுவதும் சூடு இறங்குவதும் ஒரு நிமிடத்தில்தான்.

‘கோபம் வரும்போது மனைத திசை திருப்பி ஒன்று, இரண்டு, மூன்று என்று முடிந்தவரை எண்ணுங்கள். உங்களுக்கே நம் கோபம் அடங்கிவிட்டது என்று தோன்றும்வைர எண்ணுங்கள்’ என்று உளவியல் நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இப்படி எண்ணிப் பார்த்தால் 60க்கு மேல் உங்களால் எண்ண முடியாது. ஆமாம், உங்கள் கோப உணர்ச்சிெயல்லாம் ஒரு நிமிடம்தான்.

கோப உணர்ச்சியில் மனம் திளைளப்பதே இல்லை. அதிலிருந்து மனம் வெளிவரவே விரும்புகிறது. ஆனால் எதிராளியின் சில சொற்களும், செயல்களும் அந்தக் கோபத்தைப் புதுப்பிக்கின்றன. நம்மீது பாய்ந்து வருகிறவரின் கோபத்தைச் ‘சாரி’ என்கிற ஒரு வார்த்தை பாதியாக்குகிறது. பதிலாகச் சொல்லப்படும் எரிச்சலூட்டுகிற சில வார்த்தைகளோ அவரது கோபத்தைப் பன்மடங்காக்குகிறது.

கோப உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு எந்த நியாயமும் புரிவதில்ைல. கோப உணர்ச்சியிலிருந்து வெளிளிக்கொணர்ந்த பிறகு எடுத்துச் சொன்னால்தான் தலைலக்குள் ஏறுகிறது.

உங்களுக்குக் கோபம் வந்தாலும் சரி, பிறர் கோபத்திற்கு ஆளானாலும் சரி அந்த ஒரு நிமிடத்தை சரிவரப் பயன்படுத்திக்கொண்டால் நீங்கள் நிச்சயம் நினைத்ததைச் சாதிப்பீர்கள்.!.

நன்றி : லேனா தமிழ்வாணன்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.