குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, September 16, 2008

கேட்கும்போதே கிளுகிளுப்பைத் தரும் பாடல்

என் சிறு வயதில் வேலைக்காரர் ஜெயராஜ் என்னை மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து கொண்டிருந்த கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று கடைசி நாள். சுற்றி வரக் கயிறு கட்டி இருந்தனர். ஜெயராஜ் துண்டை விரித்து அமரச் சொன்னார்.

ஒரு பெண்ணும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவரும் இந்தப் பாட்டை ஒலிபெருக்கியில் போட்டு விட்டு ஆடினர். ஆட்டம் பட்டையக் கிளப்பியது. அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பார்க்கவும் படு ஜோராக இருந்தது. பாம்புபோல நெளிந்து வளைந்து ஆடி பார்ப்போரின் மனதினை சிதற வைத்த ஆட்டம் அது. அந்த வயதிலேயே பார்க்கும் போது கிளுகிளுப்பாய் இருந்ததன் விளைவு இதோ இன்று... கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு எழுதுகிறேன்.

இந்தப் பதிவை எழுதும் போது மணி 10.56 இரவு நேரம். அருகில் உள்ள வீட்டார்கள் அனைவரும் உறங்கி இருப்பார்கள். தப்பித் தவறி யாராவது இந்தப் பாட்டைக் கேட்டால், தங்கம் வீட்டில் மஜாவா இருக்கான் பாருன்னு அப்படி இப்படின்னு பேசிக்கிட்டே அவங்க அவங்க வீட்டில ஏதாவது நடக்கும்ல.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

பாட்டைக் கேட்க கேட்க கிளுகிளுப்பாய் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணத்தில்.... இதோ சிலுக்கு ஸ்மிதாவும், கமலும்...

அடி தூள்...............