குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 18, 2008

வாஞ்சி நாதன் !

எண்ணங்களில் எரிமலை
ரத்த நாளங்களில் புயல்
சுண்டி விட்ட நரம்பாகிறது உடல்
சூரியனின் தகிப்பாகிறது மனசு
அணுகுண்டின் நெருப்பாகிறது கண்கள்
கொதிக்கும் இரும்புலையின்
வசமாகிறது உணர்ச்சிகள்
உன்னை நினைக்கையில்

நரம்புகள் முறுக்கேற
ரத்தம் கொதி கொதிக்க
உடம்பு எரிய எரிய
உணர்ச்சிகள் வெடித்து சிதறுகிறது
உன் தியாகத்தை நினைக்கையில்

மேகம் தனக்காக மழை பெய்வதில்லை.
காற்று தனக்காக வீசுவதில்லை
நீதான்... நீதான்... நீதான்
மேகம்...
நீதான் காற்று...
நீதான் இந்தியாவின் ரத்தம்
நீதான் இந்தியாவின் மூச்சு
நீதான் இறைவன்.....

மணியாச்சி ரயில் நிலையத்தில்
பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை
சுட்ட தமிழன் , இந்தியன்
வாஞ்சி நாதனுக்கு ஒரு சல்யூட்