குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 22, 2008

மாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகளின் கவனத்திற்கு

இன்றைய உலகில் ஊடகத்தின் வாயிலாகத்தான் மனிதன் உலக நடப்புகளை அறிய நேரிடுகிறது. ஊடகமானது வாழ்வின் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஒலி, ஒளி ஊடகங்கள் இன்று பெண்ணை சித்தரிக்கும் விதம் மாதர் சங்கங்களும், பெண்ணுரிமை பேசுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், இவர்கள் ஊடகங்களுக்கு எதிரான போக்கை கடை பிடிப்பதில்லை. ஆனால் மாதர் சங்கங்களும், வாதிகளும் வாய் கிழிய பேசுவார்கள். அவரவர்களுக்கு பிழைப்பும், புகழும் அதன் மூலம் வெளி வட்டாரத்தொடர்புகளும் வேண்டும்(சிலரைத் தவிர).

செய்திதாள்களில் பெண் எப்படி சித்தரிக்கப்படுகிறாள் ? வார, மாத இதழ்களில் பெண்களின் உருவங்கள் எங்கெங்கு பயன்படுத்தபடுகின்றன ? தொலைக்காட்சிகளில் பெண்கள் நிலைமை என்ன ? திரைப்படங்களில் பெண்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றனர் ? என்று இவர்களுக்கு தெரியும். அதனால் என்ன பலன் ?

இவர்களின் போராட்டங்கள், அறை கூவல்கள் ஏன் நமநமத்து போகின்றன ? ஊடகங்கள் பெண்களை வியாபார பொருளாக்கி விற்பனை செய்கின்றன அதன்மூலம் பத்திரிக்கையும் விற்கபடுகின்றன. இவர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண்களை விற்பனை செய்வதில் இரு ஊடகங்களுக்கும் இடம் உண்டு. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என்று பெண்களின் பேட்டி என்று வரும் போட்டோக்களை பாருங்கள். டிவிகளும், சினிமாக்களும் பெண்களைத்தான் விற்பனை பொருளாக காட்சிக்கு வைத்து, மற்றவர் பயன்படுத்தி கொள்ள வழி வகுக்கின்றன. இணையங்களில் பாருங்கள்,பெண்கள் எப்படி எல்லாம் கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தபடுகின்றனர் என்று.

இந்த ஊடகங்களுக்கு எதிரான போராட்டங்களை மாதர் சங்கங்களும் , பெண்ணுரிமைவாதிகளும் செய்கின்றனவா ? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

கற்பை பற்றி பேசினார் என்று வாய் கிழிய கூப்பாடு போட்ட இவர்கள், ரஜினியின் சிவாஜியில் ஸ்ரேயாவை உரித்து காட்டினார்களே அப்போது ஏன் பேசவில்லை. ஸ்ரேயாவிற்கு எதிராகவும், அவர்களின் பெற்றோர்க்கு எதிராகவும் ஏன் போராட்டங்களில் ஈடுபடவில்லை (பிரபலமானவர்களை எதிர்த்தால் தான் அடுத்து வரும் இயக்குனர்கள் பெண்களை ஓரளவாவது ஒழுங்காக படமெடுப்பார்கள்). ஆனால் மேடையில் பேசுவார்கள். பிளாக்கில் டிக்கெட் வாங்கி வாயில் ஜொள்ளு வழிய படம் பார்ப்பார்கள். இவர்கள் எல்லாம் தலைவிகள், பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்வார்கள்.

ஷகீலாவின் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டருக்கு இவர்கள் கண்டனமாவது தெரிவிக்கலாம் அல்லவா? அல்லது அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் அல்லவா ?

கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கவும், அதை படிக்கும் தன் குடும்ப உறுப்பினர்களை தடுக்கட்டும். கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகள் மேல் இவர்கள் வழக்கு தொடரட்டும். இதெல்லாம் செய்ய மாட்டார்கள். பேசுவார்கள் வாய் கிழிய.

இவர்கள் செய்ய வேண்டியது முதலில் இவர்கள் இனத்துக்கு எதிரானவர்கள் மேல் போராட்டங்களையும், புறக்கணிப்புகளையும் நடத்த வேண்டும். கவர்ச்சியாக நடிக்கும் பெண்களுக்கு எதிராக வழக்குகள், போராட்டங்களை தொடரவேண்டும். சரக்கு இல்லை என்றால் கடை இல்லை. கடை இல்லை என்றால் விற்பனை இல்லை. விற்பனை இல்லை என்றால் வாங்குவார் இல்லை.

பிறகு பெண்களுக்கு எதிரான வலிமையான ஒலி-ஒளி ஊடகங்களை இவர்கள் எதிர்த்து, ஊடகங்களை சரி செய்யட்டும். தானாகவே பெண்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். அதை விடுத்து வெற்று சவடால்களும், அறைகூவல்களும் தேவையா ?

யோசிப்பார்களா இவர்கள் ? இல்லை என்னை ஏசுவார்களா ? ஊதவேண்டியதை ஊதிவிட்டேன். என் கடமை அல்லவா இது...